Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் வட மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமானதும், நியாயமானதுமாக நடத்தப்பட வேண்டுமாயின் வடக்கில் உள்ள இராணுவத்தினர் முகாம்களுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவத்தினரின் பிரச்சனம் தற்போதுள்ளதைப் போல தேர்தல் காலத்திலும் இருந்தால் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் நடத்தப்பட்டதாக சர்வதேச சமூகத்திற்கு கூற முடியாது போகும் என வாசுதேவ நாணயக்கார 'ராவய'' சிங்களப் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து குறித்து அந்தப் பத்திரிகை, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவிடம் கேட்டபோது இதற்குப் பதிலளித்த அவர், வடக்கின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில்…

  2. 18 ஆம் நூற்றாண்டின் பிரபலமான போரியல் ஆய்வாளரும், படைத்தளபதியுமான Carl von Clausewitz (கர்ல்-வொன் குளோசவிட்ஸ்) கூறிய போரியல் தத்துவத்துக்கும், ஶ்ரீலங்காவின் அதிகாரப் படையாட்சிகள் நடத்தி முடித்த போர் கூறும் செய்திக்கும் இடையே நிறையவே வேறுபாடுகள் உள்ளன. முள்ளிவாய்க்கால் பேரழிவில் நான்காம் ஆண்டு நிறைவின் பின்னணியில் குளோசவிட்ஸ் கூறிய 'போர் என்பது வெவ்வேறான வழிமுறைகளில் நடக்கும் தொடர்ச்சியான அரசியல் ஊடுதொடர்பு' என்ற கருத்து பொய்த்துப்போய், அதுவொரு இனப்படுகொலையாக மட்டமே மிகக் குரூரமாகப் பதிவாகியுள்ளது. ஒருவேளை ஜோன் கீகன் என்ற பிரித்தானியப் படைத்துறை வரலாற்றாளர் தனது History of Warfare என்ற நூலில் கூறுவதுபோல, போரை நடாத்தும் சமூகத்தைப் பொறுத்து அதன் வடிவமும் வீச்செல்லையும் இல…

    • 1 reply
    • 865 views
  3. வடக்குத் தேர்தலில் தயா மாஸ்டரையும், தமிழினியையும் களமிறக்குவது ஜனநாயக விரோதம்! – ரவி ரட்ணாயக்கா 'வடமாகாண சபைத் தேர்தலில் தயா மாஸ்டரையும், தமிழினியையும் அரசு களமிறக்குவதானது நாட்டின் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்' இவ்வாறு ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார் கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஐ.தே.கவின் தொழிற்சங்கப் பணிமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அரசு தனது குறைகளை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டி வருகின்றது. ஆனால், இந்த நாட்டின் நாசகாரச் செயல்களுக்கு நாம் காரணமல்ல. தற்போது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய…

    • 1 reply
    • 411 views
  4. தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது! Written by tharsan // May 17, 2013 // முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது. விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவின் பென்சிலவேனியாவில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். கடந்த புதன்கிழமை (15-05-2013) அன்று தொடங்கியுள்ள இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து தமிழர் மற்றும் தமிழரல்லாத வள அறிஞர்கள் பல…

  5. கிளிநொச்சியில் சுமார் 6ஆயிரத்து 170 பெண்கள் கணவனை இழந்த நிலையில் வாழ்கின்றனர்: கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் By General 2013-05-17 11:18:13 கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 170 இற்கும் அதிகமான பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இக் குடும்பங்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்குச் சகல துறையினரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உ…

    • 3 replies
    • 418 views
  6. விடுதலைப் புலிகளின் சிறந்த புலம்பெயர் தரப்பினருடனே தாம் நோர்வேயில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தாம் சிறந்த புலம்பெயர் பிரதிநிதிகளிடம் ஏற்படுத்தி கொண்ட இணக்கப்பாடுகளை புலம் பெயர் புலிகள் சீர்குலைத்து விட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார். அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுக்ள இந்த நாட்டில் எந்தளவுக்கான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் அறிவோம். இதனால் நாங்கள் நேரடியாக புலிகளுடன் தொடர்பில்லாத, பிரிவினைவாததுடன் தொடர்பில்லாத புலம்பெயர் குழுவொன்றுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த நாங்கள தீரமானித்தோம். அந்த குழுவுடன் இணைந்து செயற்பட முடியுமாக இருந்தால், கிடைக்கும் நிதியுதவிகளை நேரடியாக மக்களுக…

    • 2 replies
    • 530 views
  7. புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை முடக்கும் வகையில் அரசாங்கத்தின் புதிய சட்டம் அமைந்துள்ளது என கிறீன் கட்சி தெரிவித்துள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டுக்கு வெளியே தங்க வைப்பதற்கு புதிய சட்டமொன்று அவுஸ்திரேலிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் ஜூலியா கில்லார்டின் கூட்டணி கட்சி இந்த சட்டத் திருத்தத்திற்கு ஆதரவளித்துள்ளது. எனினும், இந்த சட்டத்தினால் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகள் முடக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இந்த புதிய சட்டம் படகுப் பயணிகளின் வருகைத் தடுப்பதற்கான எந்தவிதமான ஏற்பாடுகளையும் செய்யப் போவதில்லை என கிறீன் கட்சி செனட்டர் Sarah Hanson-Young தெரிவித்து…

    • 3 replies
    • 576 views
  8. மனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படும் தாயொருவரால் அவரது மூன்று பெண் பிள்ளைகளும் கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது குழந்தைகளை கிணற்றில் வீசிய மேற்படி தாய், பின்னர் தானும் கிணற்றில் குதித்துள்ள போதும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாண்டிக்குளம் பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகுரல் கேட்பதை அடுத்து அயலவர்கள் இன்று காலை ஓடிச்சென்று அவ்வீட்டின் கிணற்றை பார்த்தபோது தாயொருவர் மூன்று பிள்ளைகளை கிணற்றில் போட்டுவிட்டு தானும் கிணற்றில் வீழ்ந்து கிடந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அயலவர்கள் உடனடியாக தாயாரை மீட்டெடுத்துள்ளனர். எனினும் வி. லதுர…

  9. இறுதிப்போர் தொடர்பினில் சுயாதீன விசாரணை! அமெரிக்க கோரிக்கையினை நிராகரித்தது இலங்கை!! இறுதி யுத்தகாலப்போர் தொடர்பில் சுயாதீன விசாரணை நடாத்துமாறு அமெரிக்கா விடு;த்துள்ள கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிங்கள ஊடகமொன்று இந்தத்தகவலை வெளியிட்டுள்ளது. வன்னி போர் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்வரும் 19ம் திகதி வன்னிப் போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.இந்த மோதலின் போது 6000 படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.12 ஆயிரம் படைவீரர்கள் ஊனமுற்றுள்ளனர். இவ்வாறான ஓர் நிலையில் போர் வெற்றியை திசை திருப்பும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. குறிப்பாக படையினரைக் காட்டிக் கொடுக்கும் வகையில்…

  10. இலங்கை சரித்திரத்தில் அதிக மனுக்களை வலிகாமம் வடக்கு காணி மீட்பு வழக்கு Published on May 16, 2013-6:25 pm · No Comments அரசாங்கம் காணி சுவீகரிப்பினைத் தொடருமாயின் அதற்கு எதிராக தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வலிகாகம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவத் தேவைக்காக காணி சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி நேற்று 1474 பேர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 25.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு, கொழும்பு நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஒப்பானது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ”இலங்கை சரித்திரத்திலேய…

  11. தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது ! [Friday, 2013-05-17 21:20:04] முள்ளிவாய்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது. விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவின் பென்சிலவேனியாவில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அங்குராப்பணம் செய்துவைத்தார். கடந்த புதன்கிழமை (15-05-2013) அன்று தொடங்கியுள்ள இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து தமிழர் மற்றும் தமிழரல்லாத வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்து…

  12. யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு! [Friday, 2013-05-17 22:09:10] யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வு காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் முன்பாக கையில் தீபங்கள் ஏந்தி உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றதுடன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்…

  13. 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் - இலங்கையிடம் இந்தியா கோரிக்கை! [Friday, 2013-05-17 22:13:12] இலங்கையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னதாக நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ள இந்திய 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தே இலங்கை அரசாங்கத்திடம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியபோதே மேற்கண்டவாறு வலியுத்தியுள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டு தடுத்…

  14. விமல் வீரவன்ச முதலில் ஆங்கிலம் கற்க வேண்டும் – பொதுபலசேனா பதிலடி [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:52 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] நோர்வே தூதரகத்தின் அறிக்கைகளை வாசிப்பதற்கு முன்னர் சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச ஆங்கில மொழியைக் கற்க வேண்டும் என்று, பொதுபலசேனா பதிலடி கொடுத்துள்ளது. பொது பல சேனாவுக்கு நோர்வே நிதியுதவி வழங்குவதாக விமல் வீரவன்ச கூறிய குற்றச்சாட்டுக் குறித்து பதிலளித்த பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்து ஞானசார தேரர் இவ்வாறு கூறியுள்ளார். “நோர்வே தூதரக அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை விமல் வீரவன்சவும் அவரது ஆலோசகர்களும் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. இவர்களின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து நேரத்தை வீணடிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை…

    • 1 reply
    • 472 views
  15. விமல் வீரவன்சவிற்கு எதிராக ஆளும் கட்சியினர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்! [Friday, 2013-05-17 08:42:47] அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடாத்த ஆளும் கட்சியின் நகரசபைத் தலைவர் ஒருவர் தீர்மானித்துள்ளார். கடுவல நகரசபையின் தலைவரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் இந்தப் போராட்டத்தை நடாத்த உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது விமல் வீரவன்ச, தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்தார் என நகரசபையின் தலைவர் புத்ததாச தெரிவித்துள்ளார். அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு எதிராக சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்ட…

  16. இலங்கையில் கொலை, கொள்ளை ஆகிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவினர் சிலர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று இத்தாலியில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கு பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தி, அவர்களுக்கு இடையூறு செய்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் இதற்குத் தீர்வுகாணப்படவில்லையெனக் கூறப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தமக்கு மிக நெருக்கமானவர் எனக் கூறி, அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து பல்வேறு அடாவடித்தனங்களைச் செய்துவருவதாக முறையிடப்பட்டுள்ளது.தெரியவருகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ரா…

    • 0 replies
    • 842 views
  17. பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைக்கு வருமாறு சிவசக்தி ஆனந்தனுக்கு அழைப்பு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நான்காம் மாடி விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். வவுனியாவில் உள்ள சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை நேரடியாகச் சென்ற பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் இந்த அழைப்புக் கடிதத்தைக் கையளித்துள்ளனர். இது தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தவை வருமாறு: எனது வவுனியா அலுவலகத்துக்கு வந்த பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் எனது கையில் கடிதமொன்றை ஒப்படைத்தனர். அந்தக் கடிதத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி 10 மணிக்கு கொழும்…

  18. பூகோள அரசியலை எமக்கு சார்பாக மாற்றுவதற்கான மூலோபாயத்தை கண்டறிய வேண்டும்! - ருத்திரகுமாரன் உரை!! எமது மக்களின் தன்னாட்சி உரிமையினையும் தேசத்தினையும் எதிர்கால சந்ததியினரையும் அவர்களின் கண்ணியம்மிகு வாழ்வினையும் பாதுகாப்பதற்காக இராசதந்திரம் எனும் ஆயுதத்தினை எமது கைகளில் ஏந்தக் கூடிய வழிமுறைகளினைக் கண்டறிந்து செயற்படுத்துவதற்காகவே இன்று இங்கு நாம் கூடியிருக்கின்றோம் என தொடக்கநாள் அங்குராப்பண நிகழ்வுரையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார். ருத்திரகுமாரன் அவர்கள் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது: 'எங்களது புலமைகளினையும் பெருமைகளினையும் நாங்கள் கொண்டிருக்கும் ஞானத்தினையும் பறைசாற்றுவதற்காக இங்குநாம் வரவில்லை. ஓர் உன்னதமான கடமையி…

  19. அதிவிவேக பூரண குருவும் சீடர்களும் என்ற குட்டிக் கதைத் தொகுப்பை எங்களில் பலரும் ஒரு தடவையாவது வாசித்திருக்கலாம், அல்லது கேட்டு அறிந்தும் இருக்கலாம். அதிலிருந்து சில குட்டிக் கதைகள் தமிழ்ச் சினிமாக்களில் காமடிக் காட்சிகளாக இடம் பிடித்ததும் உண்டு. இந்தக் குட்டிக் கதைகளின் தொகுப்பில் மாடு கன்று போட்டதை சோகத்துடன் தன்னிடம் தெரிவித்த சீடனிடம், இதையெல்லாம் சோகமாகச் சொல்லக் கூடாது என்று குரு கண்டித்து அனுப்பினார். பின்னொரு நாளில், குருவினுடைய வீடு தீப்பிடித்து எரிந்ததை அந்த முட்டாள் சீடன் சுவாரசியமாக மகிழ்ச்சியுடன் குருவுக்குக் கூறியதால் குரு நொந்து போனதாக ஒரு கதை வருகின்றது. தற்போது, பிரான்சில் நாடுகடந்த அரசும், நடுவமும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவாக நடாத்தும் கரப் …

    • 0 replies
    • 674 views
  20. தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தாம் தயாரில்லை என்றும், முன்னைய அரசுகள் செய்த தவறைத் தாம் மீண்டும் செய்யப் போவதில்லை என்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அடித்துக் கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை இராணுவத்தினரின் பிரசன்னம் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படைகளின் பிரசன்னம் ஒரு அற்பமான விடயம், ஆனால் அது தவிர்க்க முடியாதது. இருந்தபோதிலும் பல்வேறு தரப்புகளும், ஒரு பகுதி ஊடகங்களும், பாதுகாப்பு விவகாரங்களுடன் அரசியல் விளையாட்டு நடத்துகின்றன. முன்னைய அரசுகள் பாதுகாப்பு நடவ…

  21. இராஜதந்திர விலக்குரிமை இருந்தாலும், நோர்வே தூதுவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும் என்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரால்ட்ஸ்டட், முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோனாஸ் கார் ஸ்ரோர் உள்ளிட்ட 11 நோர்வே அதிகாரிகளுக்கு எதிராக, 98 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி கலாநிதி குமார் ரூபசிங்க சமர்ப்பித்துள்ள வழக்கின் மீதான விசாரணையின் போதே, கொழும்பு மாவட்ட நீதிபதி அமலி ரணவீர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சிறிலங்காவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்களுக்கு 2008இல் குமார் ரூபசிங்கவின் நிறுவனத்துடன் நோர்வே மற்றும் பிரித்தானிய தூதரகங்களின் சார்பில் உடன்பாடு செய்து கொள்…

  22. தமிழினி ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார் 12 மே 2013 அரசசார்பு ஊடகம் விடுதலைப்புலிகளின் அரசியல் துறையின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போது வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழினி விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழினி நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார். இதற்கு தேவையான நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் …

  23. ஒரே தடவையில் தலா மூன்று குழந்தைகளை இரு தாய்மார்கள் பிரசவித்த சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை, கொழும்பு சொய்சா மகளிர் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. இவர்களில் ஒரு தாயார் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இவ்விரு தாய்மாரும் மினுவன்கொட மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/67476-2013-05-17-06-51-13.html

  24. -தீபா அதிகாரி வியட்நாமுக்கு வர்த்தகர் ஒருவரினால் ஏற்றுமதி செய்யப்படவிருந்த உயிருடான சிங்கி இறால்களை பண்டாரநாயக்க விமான நிலையத்திலுள்ள உயிர் பல்லினத்தன்மைப் பிரிவின் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். உயிருடனான 669 சிங்கி இறால்கள் 8 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் நீர்கொழும்பிலுள்ள சிங்கி இறால் ஏற்றுமதிக் கம்பனியின் உரிமையாளராவார். பெரிய சிங்கி இறால்களை அனுமதி பெற்று ஏற்றுமதி செய்ய முடியுமெனினும், 6 சென்ரிமீற்றரிலும் கூடுதல் நீளமான சிங்கி இறால்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/67484-2013-05-17-08-31-57.html

  25. 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இலங்கையின் வடக்கில் முள்ளிவாய்க்கால்வரை கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை நினைவுகூர்ந்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் வழங்கப்படும் என்று இலங்கை அரசின் புலனாய்வுத்துறையினர் வன்னியில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக் களுக்கு எந்தத் தடையும் கிடையாது என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆகுதியான உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளிலும் முள்ளிவாய்க்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.