Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு, திராய்மடு சுவிஸ் கிராமம் எப்.வலய காட்டுப்பகுதியிலிருந்து சட்ட விரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெட்டிய பனைமரத்தின் நடுப்பகுதியில் பாதுகாப்பான கறுப்பு பொலித்தீன் மற்றும் முல்லு கம்பிகளினால் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜேர்மன் தாயரிப்பிலான புதிய இரண்டு கை குண்டுகளும், ரீ 56 ரக 60 தோட்டாவும், 2 மெகசினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரீசோதகரும், புலானய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.எம்.றஹீம் தெரிவித்தார். சுவிஸ் கிராமம் எப்.வலய காட்டுப்பகுதியில் விறகு வெட்டும் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸ் புலானய்வு பிரிவுக்கு வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸ் புலானய்வு பிரிவு பொ…

  2. யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் டாக்டர் ஜெர்கன் மொர்ஹார்டிற்கு யாழ் கட்டளைத் தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜேர்மன் தூதுவர் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி, புனர்வாழ்வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் யுத்தத்தின் பின்னர் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் படையினர் பாரியளவு பங்களிப்பு வழங்க…

  3. உலகின் அத்தனை உயிரினங்களையும் தாக்கவல்ல நோய்க் கிருமிகள் பல்வேறு வகைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எனத் தொற்றிக் கொள்கின்றன. சில கிருமிகள் காற்று மூலமாகவும், சில தண்ணீர் மூலமாகவும், உணவு மூலமாகவும் தொற்றுகின்றன. வேறு சில கிருமிகள் நேரடித் தொடர்புகளினால் பரம்புகின்றன. இந்தக் கிருமிகள் பரவிவிடாமல் எவ்வளவுதான் முன் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இவற்றை முற்றாக இல்லாமல் ஆக்குவது இன்றுவரை முடியாத காரியமாகவே உள்ளது. ஒரு காலத்தில் கொள்ளை நோய் என்ற 'கொலரா' என்ற வயிற்றுப்போக்கு நோய் ஏராளமானவர்களைக் காவு கொண்டதன் பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அம்மை நோய்க்கான காரணங்களும் கண்டறியப்பட்டு, மனிதப் பேரழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் புதிது புதித…

  4. காத்தான்குடியில் பதற்றம்! (படங்கள்) மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடியின் ஒரு பகுதி காத்தான்குடி நகர சபையால் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவித்து இன்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி ஜாமிஉல்ழாபிரீன் மையவாடியில் பதற்றம் ஏற்பட்டது. பதற்றத்தை தடுக்க வந்த பொலிசாருக்கு பொது மக்கள் கல் எறிந்ததால் நிலைமை மோசமைந்ததோடு மட்டுமன்றி மட்டக்களப்பில் இருந்து பொலிசாரும், இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு விரைந்து நிலமைகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தற்போது குறித்த இடத்தில் பொலிசாரும், கலகம் தடுக்கும் படையினரும், போக்குவரத்து பொலிசாரும், …

  5. சிங்களம் தமிழர்களை எவ்வாறான வழிகளில் அழிக்க, சீரழிக்க முடியுமோ அவ்வாறான வழிகளையெல்லாம் தேர்ந்தெடுத்து தமிழ் இனத்தை வெளிப்படையாகவே அழித்துவருகிறது. இனவாத மகிந்த அரசு. தமிழர் தாயகப் பகுதியில், பாலியல் தொழில், போதைப்பொருள் பாவனை, சமூக சீர்கேடு என அனைத்து வழிகளையும் தேர்ந்தெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்திவருகிறது. இன்று இசை நிகழ்ச்சி என்ற போர்வையில் இளையோரை குறிவைத்து இவ்வாறான சீர்கேடுகளை மேற்கொண்டுவருகிறது நேற்று முந்தினம் வலிகாமம் வடக்கு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் சிங்களத் தினப் போட்டியை நடாத்தியுள்ளது. தென்பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிங்களவர்களினால் யாழ்குடாநாடு முற்றுமுழுதாக சிங்கள மயமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் தாயகப் பகுதியிலிரு…

  6. வட மாகாணசபைத் தேர்தலில் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு இதுவரையில் அரசாங்கம் கோரவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வட மாகாணசபைத் தேர்தலின் போது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றியத்திடம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக கோரப்படவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டுமென அரசாங்கம் கோரினால் அது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. h…

    • 1 reply
    • 268 views
  7. ரிசானா நபீக்கை மன்னித்து விடுவிக்கும் படி சவூதி மன்னருக்குக் கடிதம் எழுதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கருணை உள்ளத்தைப் பாராட்டும் அதேவேளை பல வருடங்களாக இலங்கைச் சிறையில் வாடும் தமிழ் இளஞர்களை மன்னித்து விடுதலை செய்ய அவரின் கருணை உள்ளம் மறுப்பது ஏன் எனவும் கேட்க விரும்புகிறேன்.என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் கூறினார். பாராளமன்றத்தில் செய்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லப் பிரேரணை மீதான விவாதத்தில் உரயாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான ஜ .தே.க. வின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதர…

  8. வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைந்து சிவில் நிர்வாகம் அமைந்தால் அது மக்களின் வாழ்க்கை நிலை மேம்பாட்டிற்கு உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆயுத தொடர்பாளர் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவத்தினர் இருப்பது ஒரு வகையில் பாதுகாப்புக்கு உறுதுணை என்றாலும் மக்கள் அச்சப்படுவர் என கேபி இந்தியாவின் 'தி ஹிந்து' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். வடக்கில் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசியல்வாதிகள் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழகத்தில் எழுந்துள்ள மாணவர் போராட்டம் 1970 காலத்தை தனக்கு ஞாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ள கேபி, அந்த காலத்தில் புலிகள் மாணவர்களை தங்க…

  9. யுத்தத்தால் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை அவர்கள் இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். எனவே பிரிவினைவாதத்தை மீண்டும் தோற்றுவிக்காத வகையில் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொண்டு தமிழ் மக்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதுவே இன்றைய தேவையாக உள்ளது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னும் பல்வேறு துன்பத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அதனை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைகளுக்காக அவ்வப்போது 13ஆம் திருத்தச்சட்டத்தையும் அதிகார பரவலாக்கல் பற்றியும் பேசி மக்களை ஏமாற்…

  10. தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமரானால் இலங்கை பிரச்சினை முழுமையாக தீரும் என அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை விளக்கப்பொதுக் கூட்டம் பேருந்து திடலில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாஞ்சில் சம்பத் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ''இலங்கை பிரச்சினைகளை தீர்க்க தமிழக முதல்வர் தொடர்ந்து முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது உள்ளிட்ட துணிச்சலான நடவடிக்கைகளால் உலக முழுவதும் வலுவான அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவிற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வரும…

  11. மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் பெண்ணொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். 45 வயது பெண்ணொருவர் வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது அவ்வழியினால் வந்த வான் ஒன்றில் வந்தவர்கள் குறித்த பெண்ணை வீட்டுக்கு கொண்டு போய் விடுவதாக கூறி வேனில் ஏற்றிச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளனர். அப்பெண் மயக்கமடைந்த நிலையில் அங்கேயே அப் பெண்ணை விட்டு விட்டு குறித்த நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அவ்வழியினால் மாடு மேய்த்துக் கொண்டு வந்த பெண்ணொருவர் மயக்கமான நிலையில் பெண்ணொருவர் கிடப்பதை கண்டு முச்சக்கர வண்டியொன்றில் …

  12. பிரிட்டிஷ் மகாராணியாரின் உதாரணத்தைப் பின்பற்றுக! இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள். [Wednesday, 2013-05-08 19:48:40] இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என பிரிட்டிஷ் மகாராணியார் முடிவுசெய்துள்ளார். காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொண்ட அவர் இலங்கை மாநாட்டைப் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியதாகும். பிரிட்டிஷ் மகாராணியாரின் இந்த அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியா அம்மாநாட்டில் கலந்துகொள்ளக் கூ…

    • 41 replies
    • 2.7k views
  13. விடுமுறையைக் கழிப்பதற்காக சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த தமிழ்ச் சகோதரங்கள் விபத்தில் சிக்கிப் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சகோதரி மற்றும் உறவினரான ஒரு பெண் ஆகிய இருவர் இவ் விபத்தில் பலியாகினர். இன்று அவ் விபத்தில் காயமடைந்த சிறுவனும் சிகிச்சை பலனின்றி மரணமானான். கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) உயிரிழந்ததுடன், ஜவீனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழ…

    • 28 replies
    • 1.7k views
  14. பிரபாகரனின் பாடசாலை நண்பர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார் 12 மே 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாடசாலை நண்பர் ஒருவர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். குணசுந்தரம் ஜயசுந்தரம் என்பவரே இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஜயசுந்திரம் ஓர் அயர்லாந்து பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் வைத்து ஜயசுந்தரத்தை கைது செய்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் பிரதம நிதி சேகரிப்பாளராக குணரட்னம் கடமையாற்றியுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந…

  15. 54 நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் - சிங்கள ஊடகம்! [sunday, 2013-05-12 08:08:40] 54 நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது, எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த அரச தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் 15, 16ம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. பிரிட்டனின் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் பிரதமர் டேவிட் கமரூனின் இலங்கை விஜயத்தை தடை செய்ய தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் கடும் முயற்சி எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.http://seithy.com/breifNews.php?news…

  16. 1980 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கீட்டின் படியே வடக்கில் தேர்தல் நடாத்தப்படும் - பஸில் ராஜபக்ஷ [sunday, 2013-05-12 09:30:12] 1977 ஆம் ஆண்டுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமையவே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடுத்த கோரிக்கை அமைச்சரவை கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு சனத் தொகைக் கணக்கீட்டின் படியே வடக்குத் தேர்தல் நடக்கும் என்று அமைச்சர் பஸில் அங்கு கூறினார். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது வடக்குத் தேர்தல் விவகாரம் சம்பந்தமாக சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க, "தற்போதுள்ள வாக்காளர் பதிவுக்கமைய வடக்குத் தேர்தல் நடத்தப்படுமானால் அத…

  17. அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக இனி போராட்டம் - ரணில் அறிவிப்பு May 11, 2013 03:08 pm அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கும் 21ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்திற்கும் ஆதரவு வழங்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றியடையச் செய்ய அனைத்து சக்திகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் அனைத்து தவறான நடவடிக்கைகளையும் எதிர்த்து போராட்டம் செய்ய தாம் தயார் எனவும் அதன் மூலம் 2014ம் ஆண்டில் ஆட்சி மாற்றத்தை செய்யும் அரசாங்கத்தை அமைப்பதே ஐத…

  18. முப்பது வருட கால யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் எமது நாடு கண்டுவரும் அபிவிருத்தியைக் கண்டு அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆச்சரியப்படுகின்றன என்று ஆளும் கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். பல சிரமங்களுக்கு மத்தியில் இலங்கை - இந்திய உறவினை மேம்படுத்துவதற்கு பாரிய பங்களிப்பினைச் செய்து தற்போது பதவிக்காலம் நிறைவடைந்து செல்கின்ற அசோக் கே. காந்தாவின் சேவைகளுக்காக அவருக்குப் பாராட்டுக்களையும் நன்றியினையும் இந்த சபையில் தெரிவிக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கமநல அபிவிருத்திச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், ஏற்றுமதி - இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின…

    • 3 replies
    • 639 views
  19. முன்னாள் புலிப் போராளிகள் பாராளுமன்றம் விஜயம் வடக்கு- தெற்கிற்கு இடையிலான நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகள் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றதத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர். (படம் : ஜே.சுஜீவகுமார்) http://www.virakesari.lk/article/local.php?vid=4251

  20. ஏறக்குறைய ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சொந்த நாட்டு மக்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்த உள்நாட்டு யுத்தத்தில் கிடைத்த வெற்றியை மாபெரும் தேசிய வெற்றி விழாவாக கொண்டாடும் ஒரே நாடு உலகத்தில் இலங்கை மட்டும்தான். அண்டை நாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக யுத்தம் செய்து பெற்ற வெற்றியை போன்று உள்நாட்டு யுத்த வெற்றியை கொண்டாடுபவர்கள், இந்த யுத்த வெற்றியின் பின்னால் மறைந்து நிற்கும் மனதை கொல்லும் சோகத்தை அங்கீகரிக்க மறுக்கின்றார்கள். அதனால் யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், உயிரிழந்த தமது அந்த உறவுகளை நினைவு கூறுவதற்கும் உரிமைகளை இழந்து நிற்கிறார்கள். இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து யுத்தம் நடத்திவிட்டு, இவ்வாரம் கொழும்பில் நடைபெறும் வெற்றி விழாவிலும் கலந…

  21. -பிரசாத் ருக்மால் வீட்டில் தனித்து வாழ்ந்து வந்த 9 வயது மற்றும் 6 வயதுள்ள இரு சகோதரர்களை பொலிஸாரும் சிறுவர் பராமரிப்பு பணியகமும் மீட்டெடுத்த சம்பவமொன்று பதுளை, வினீதகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சிறுவர்களின் தாய் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிற்றூழியராக பணியாற்றி வருகின்றார். தந்தை தொடர்பில் தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 9 வயதான சிறுவன், விடியற்காலை 5 மணிக்கு எழுந்து 6 வயதான தனது சகோதரருக்காக உணவு சமைத்து பரிமாறிவிட்டு தானும் உண்டு, பின்னர், சுமார் ஒன்றரை மைல் தொலைவில் அமைந்துள்ள பாடசாலைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்பைப் பற்றவைப்பதற்குக்கூட உயரமற்ற மேற்படி சிறுவன், சிறு கதிரையொன்றை வைத்து, அதன் மீதேறி அடுப்பைப் பற்றவைத்தே உணவு சமைத்து வந்…

  22. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுக்கும் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீமுக்குமிடையில் பலத்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக அரச சார்பு இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அசாத் சாலி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருந்த சில கருத்துகள் குறித்து கோதபாய ராஜபக்ஷ, ஹக்கீமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கமளித்த போதே இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னரே புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவைரை அமைச்சர் ஹக்கீமின் வீட்டுக்கு அனுப்பி ஆசாத் சாலி கைது தொடர்பில் அவருக்கு விளக்கமளிக்குமாறு கோதபாய உத்தரவிட்டிருந்தார் என்றும் அந்த இணையம் மேலும் தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=82435&…

  23. பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாதென இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இலங்கையில் நடத்தினால் அதில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார். ஊடகவியலாளரொருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=4510

  24. கச்சத்தீவை கோரும் உரிமை தமிழக அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பது தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 1974ம் ஆண்டு இலங்கைக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கை ஒன்றின் மூலம் கச்சாத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. கச்சத்தீவை மீட்டெடுப்பது தொடர்பில் அண்மையில் தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.…

  25. -சுமித்தி தங்கராசா யாழ். மானிப்பாய் சுதுமலை பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவமொன்றில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மேற்படி மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள கோவிலில் பாட்டுக் கச்சேரியொன்று நடைபெற்றுள்ளது. இதன் போது கச்சேரிக்கு மதுபோதையில் சென்ற இளைஞர்கள் சிலரே மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இத்தகராற்றின் போது, படுகாயம் அடைந்த 5 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.