ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
கிளிநொச்சி தொண்டமான்நகர் உதிரவேங்கை ஞானவைரவர் ஆலய காணிப் பறிப்பிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை கிளிநொச்சி தொண்டமான்நகர் உதிரவேங்கை ஞானவைரவர் ஆலயத்தினரின் பயன்பாட்டில் இருந்து வந்த காணி தென்னிலங்கை வர்த்தகர் ஒருவருக்கு வர்த்தக நடவடிக்கைகாக ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வழங்கப்பட்டு அவரினால் குறித்த காணியில் அபிவிருத்திப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (06) கிளிநொச்சி நீதிமன்றம் குறித்த காணியில் மேந்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவு இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மேற்படி காணி தொடர்பில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் சட்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்.மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கங்களின் ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுக்கு 7 கிளைச் சங்கங்களையும் சேர்ந்த 800 இற்கும் மேற்பட்ட சிகை ஒப்பனையாளர்கள் காலை 9 மணிக்கு நிகழ்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். . ஒன்றியத்தை அங்குரார்ப் பணம் செய்வதற்குப் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏனைய விருந்தினர்களாக அழைக்கப்பட்ட யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஆணையாளர் பிரணவநாதன் உள்ளிட்டோர் நண்பகல் 12 மணிக்குப் பின்னரே நிகழ்வுக்கு வருகை தந்தனர். . சிகை ஒப்பனையாளர்கள் அனைவருக்கும் நேற்றைய தினம் விடுமுறையாகக் கருதி கட்டாயம் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அறி…
-
- 0 replies
- 243 views
-
-
இனவாதிகள் என்பதனை ஒப்புக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. இனவாத, மதக் கடும்போக்குடைய அமைப்பு என்பதனை ஏற்றுக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், நாட்டில் இனவாதம், மதக் கடும்போக்குவாதம் உருவாக தாம் காரணமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனவாதத்தை தாம் ஆரம்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இனவாத, மதவாத விவகாரங்கள் தலைதூக்கும் போது அதற்கு உணர்வு பூர்வமாக பதிலளிக்க நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டிருந்தால் தங்களை அழைத்து விசாரணை நடத்துமாறு மிகவும் தாழ்மையுடன் பாதுகாப்பு தரப்பினரிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார். அசாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்…
-
- 0 replies
- 483 views
-
-
இலங்கைத் தீவில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற, சர்வதேச மனித உரிமை சட்ட மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்;ட மீறல்கள் தொடர்பாக, சர்வதேச சுயாதீனமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என, டென்மார்க் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரு கட்சிகளும், அரச ஆதரவு கட்சியொன்றும், எதிர்க்கட்சியும் கூட்டிணைந்து வலியுறுத்தியுள்ளன. அடுத்து, இலங்கைத் தீவின் மனித உரிமை நிலவரங்களை ஐ.நா மனித உரிமையாளர் தொடர்ந்தும் கண்காணிப்பதற்கு ஏற்றவகையில், டென்மார்க் அரசு பணியாற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அத்துடன், போரின் முடிவில் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துவத…
-
- 0 replies
- 376 views
-
-
சில விடயங்களில் சிறிலங்கா முன்னேற்றத்தை எட்டியுள்ள போதிலும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் ருவிட்டர் செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “உட்கட்டமைப்பு, மீள்குடியமர்வு, கண்ணிவெடிகளை அகற்றல் போன்ற விடயங்களில் சிறிலங்கா அடைந்துள்ள முன்னேற்றத்தை அமெரிக்காவும் அனைத்துலக சமூகமும் மதிக்கின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது சாதகமானது. ஆனால், தெரிவு செய்யப்பட்ட பரிந்துரைகளை மட்டும் தான் சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. எல்லாத் தரப்பினதும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்…
-
- 5 replies
- 1.2k views
-
-
Sri Lanka news Jaffna players in Sri Lanka squads for tri-series Andrew Fidel Fernando May 7, 2013 Comments: 5 | Login via | Text size: A | A File photo - The teams include two players from Jaffna © ESPNcricinfo Ltd Enlarge Related Links Players/Officials: Ravindra Pushpakumara Series/Tournaments: ICC Champions Trophy Teams: Sri Lanka Three young cricketers from Sri Lanka's war-affected regions have been named in the squads scheduled to participate in a one-day tri-series, which aims to prepare Sri Lanka's national side for the Champions Trophy. Fast bowler S Silojen and wicketkeeper Rishan Tudor, both 19, have been named in the Sri Lanka and Sri Lanka…
-
- 3 replies
- 622 views
-
-
வடக்கு தேர்தல் சூடுபிடிக்கையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வம்பிற்கு இழுத்து கடும் விமர்சனம் செய்யும் கே.பி [Wednesday, 2013-05-08 10:05:53] வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பிரநிதிகளுக்கிடையில் பல்வேறு போட்டி நிலைப்பாடுகள் உள்ள நிலையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார். இவர் வந்த வேகத்திலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வம்பிற்கு இழுத்து கடும் விமர்சனம் செய்துள்ளதோடு தனது துரோகத் தனங்களை தொடர்ந்து அரங்கேற்றுவதற்கான அடித்தளங்களை யாழ்ப்பாணத்தில் அமைத்து வருகின்றார். ஊடகங்களின் குரல்வளையை அமைச்சர் டக்ளஸ் தான் நெருக்குவேன் என்று தெரிவித்த கருத்திற்கு கடும் கண்டம் வெளியிட்ட கே.பி, தேர்தலில் போட்டியிடுவது தொடர்…
-
- 1 reply
- 460 views
-
-
வெள்ளவத்தை விகாரை லேனை அண்மித்து காலி வீதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவரில் இருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு (05.04.13) வௌ்ளவத்தை காலி வீதியில் மஞ்சள் கோட்டினால் வீதியினை கடக்க முயன்ற மூவரை கார் மோதியமையினால் இவர்கள் படுகாயமடைந்திருந்தனர். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 29 வயதுடைய பாலசூரியன் வாரணி என்ற பெண் உயிரிழந்தார். 16 வயதுடைய ஜீவன் ஜனனி, 13 வயதுடைய ஜவன் ஜனன் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் யுவதியின் நிலை கவலைக்கிடமாகி அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 10மணியளவில் இந்த விபத்து இடம் பெ…
-
- 9 replies
- 722 views
-
-
ரக்பி போட்டி நடுவரை தாக்கிய மகிந்தவின் இளைய மகன்! [Tuesday, 2013-05-07 10:42:06] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளையமகன் ரோஹித்த ராஜபக்ச நேற்று இடம்பெற்ற ரக்பி போட்டி ஒன்றின்போது போட்டி நடுவரை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு ஹெவலொக் மைதானத்தில் இலங்கை ரக்பி கால்பந்தாட்ட ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த 7 அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று இடம்பெற்றது. போட்டியில் பொலிஸ் அணி, கடற்படை அணியை தோற்கடித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் இளைய மகன் ரோஹித்த கடற்படையை சேர்ந்தவர் அல்ல என்ற போதும் அவரே நேற்றைய போட்டியின் போது கடற்படை ரக்பி அணிக்கு தலைமை தாங்கினார். வழமையாக அவரது சகோதரரான யோசித்த ராஜபக்சவே கடற்படை ரக்பி அணிக்கு தலைமை தாங…
-
- 2 replies
- 747 views
-
-
என்னால் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கவும் முடியும், ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். நகரில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் பத்திரிகையாளர்களைத் தனியே அழைத்து அவர் இவ்வாறு தெரிவித்தார். வடகடல் நிறுவனத்தின் புதிய இயந்திரங்களின் பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. அதன் பின்னர் பத்திரிகையாளர்களைத் தனியே அழைத்துப் பேசினார் அமைச்சர். வடமாகாண தேர்தல் மற்றும் வலி.வடக்கு மீள்குயமர்வு என்பன குறித்துத் தனது வழமையான கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ், தனது பேச்சை ஒலிப்பதிவு செய்வதை நிறுத்துமாறு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த பின்னர் மிரட்டல் பாணியில் கருத்துத் தெரிவி…
-
- 6 replies
- 738 views
-
-
ஒட்டுக்குழுத் தலைவர், சிறீலங்காவின் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிற்கு எதிராக போரால் பாதீக்கப்பட்ட மக்கள் இயக்கம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அவருக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை இன்று கிளிநொச்சியில் மக்கள் மத்தில் வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாக போரால் பாதீக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,, தேவானந்தவுக்கு எதிராகவும்,அவர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு எதிராகவும் மக்களை விளிர்ப்பூட்டும் வகையில் இன்று கிளிநொச்சியில் எனது தலைமையில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு வருகின்றோம்.ஏனைய இடங்களில் எமது ஆதரவாலர்கள் வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,,,, * மணல் வி…
-
- 71 replies
- 4.4k views
-
-
தமிழீழ விடுதலையை வென்றெடுக்கவும், காவிரியில் இருந்து கச்சத் தீவு வரையிலான பல்வேறு சிக்கல்களில் தமிழரின் உரிமையை மீட்டெடுப்பதற்காகவும் மக்கள் சக்தியை திரட்டவே நாம் தமிழர் கட்சி உருவாகியுள்ளது என்று செந்தமிழன் சீமான் பேசினார். சென்னையை அடுத்த தாம்பரம் நகரில், காஞ்சி மத்திய மாவட்டத்தின் சார்பாக, நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று என்ற முழக்கத்துடன் சண்முகம் சாலையில் திங்கள் இரவு மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய சீமான், சாதியாயும், மதமாயும் பிரிந்து கிடந்த காரணத்தால்தான் நம் உரிமைகளை இழந்தோம். அந்த நிலையில் இருந்து விடுபட்டு நாம் தமிழராய் ஒன்றிணைந்து தமிழினம் தனது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 'தமிழினத்…
-
- 0 replies
- 445 views
-
-
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் அறிக்கை நேற்றுத்தான் வந்தது. அதற்குள் அந்த அமைப்பின் தலைவர், செயலாளர், மற்றும் பல உறுப்பினர்களை இன்று தன்மானச் சிங்கம், தமிழினத்தின் காவலன் டக்கிளஸ் நாயகத்தின் வேட்டை நாய்க்கும்பல் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறது. இந்த லட்சணத்தில் அவர் தமிழ் மக்களின் தன்னிகரற்ற கவலன் என்று ஒரு மூட்டையைத் தூக்கிக் கொண்டு உள்நுளைந்திருக்கிறார் ஒருவர். செய்தியைப் பாருங்கள், உந்துருளிகளில் வந்திறங்கிய சுமார் 12 பேர்கொண்ட துணை ராணுவக் குழு உறுப்பினர்கள் புதிதாக அமைக்கப்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு எனும் அமைப்பின் தலைவரான 48 வயது திரு. வி. சகாதேவன் மற்றும் காசாளர் திரு. புவிலன் புஷ்பராஜா ஆகியோரை நேற்று திங்கட்கிழமை பிறபகல…
-
- 2 replies
- 564 views
-
-
அசாத் சாலி தொடர்பில் ரணில் நாடாளுமன்றில் கேள்வி [Tuesday, 07/05/2013 10:31 AM] கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.அசாத் சாலிக்கு எதிராக சாதாரண சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காது ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. வடக்கில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஏன் அமுல்படுத்த வேண்டும். அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு அரசாங்கம் இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றது. அசாத் சாலி பயங்கரவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்படவில்லை. முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள…
-
- 2 replies
- 876 views
-
-
அல் கைதா மற்றும் தலிபான் உட்பட பயங்கரவாத அமைப்புக்கள் நாட்டில் தலைதூக்கிவிடக்கூடாது என்பதற்காகவே அசாத் சாலி கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். யார் கோரினாலும் விசாரணை நிறைவடையும் வரை அசாத் சாலியை விடுதலை செய்ய முடியாது என்று தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று இலங்கைக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உள்நாட்டவர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியமையினாலேயே புலிகள் பாரிய பயங்கரவாத அமைப்பாக விஸ்வருபமெடுத்தனர். இவ்வாறான பயங்கரவாத சூழலை மீண்டும் நாட்டில் ஏற்படுத்த இடமளிக்க முடியாது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையல் யாரேனும் செயல்பட்டாலோ, வெளிநாடுகள…
-
- 2 replies
- 324 views
-
-
அசாத் சாலி சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை, 07 மே 2013 16:14 எஸ்.எஸ்.செல்வநாயகம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அஸாத் சாலியின் சார்பில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினாலேயே இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன், குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் காமினி மத்துரட்ட, உப-பொலிஸ் இன்ஸ்பெக்டர் லசந்த ரத்னாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 364 views
-
-
வடபகுதி மக்களிடையே அரசாங்கம் புரிந்துணர்வை ஏற்படுத்துவது அவசியம்: இந்தியா வடபகுதி மக்களிடையே அரசாங்கம் புரிந்துணர்வை ஏற்படுத்துவது அவசியம்: இந்தியா செவ்வாய்க்கிழமை, 07 மே 2013 11:51 0 COMMENTS -சுமித்தி தங்கராசா வடபகுதி மக்களிடையே புரிந்துணர்வை கட்டி எழுப்புவதற்கு அரசு முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்' என இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்தா நேற்று தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய தூதுவர் பதவியின் பிரியாவிடை நிகழ்வொன்று யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் வே. மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பிரியாவிடை விருந்துபசார நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழ…
-
- 0 replies
- 637 views
-
-
அமைச்சர் டிலானிற்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு செவ்வாய்க்கிழமை, 07 மே 2013 19:43 ஐக்கிய தேசிய கட்சியினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேராவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 104 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 136 வாக்குகள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாகவும் 32 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன. பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு எதிராகவே ஐக்கிய தேசிய கட்சியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/66378-2013-05-07-14-14-…
-
- 0 replies
- 296 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர் புஸ்பராஜா புவிலன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான துண்டுபிரசுரங்களை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இவர்கள் இன்று காலை முதல் விநியோகித்துள்ளனர். பின்னர் அதை தொடர்ந்து நகரப்பகுதிக்கு செல்ல பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த வேளை அவர்கள் மீது இன்று திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் தலா மூவராக சென்றவர்களே தாக்குதல்களை நடத்தியதாக சகாதேவன் தெரிவித்தார். தாக்குதல் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பதாக வாகன தொடரணியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதியால் சென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்…
-
- 11 replies
- 1.2k views
-
-
அசாத் சாலியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசே பொறுப்பேற்க வேண்டும் - ஐ.தே.க எச்சரிக்கை! [Tuesday, 2013-05-07 16:16:13] பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி ம…
-
- 0 replies
- 239 views
-
-
தேசியக்கூட்டமைப்பு 19 மே 2009 இற்கு முன்னதாக எவ்வாறான கொள்கைகளின் அடிப்படையினில் செயற்பட்டதோ இனியும் அவ்வாறு செயற்படுவோமென கூறட்டும் நாங்கள் எமது கட்சியை கலைத்து விட்டு கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இன்று மாலை வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியினில் நடைபெற்ற கட்சியின் மேதினக்கூட்டத்தினில் கலந்து கொண்டு பேசுகையினில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது கூட்டமைப்புக்குள் நிலவி வரும் முரண்பாடுகளின் மத்தியினில் ஒவ்வொரு தரப்பும் தம்மோடு பேச்சு நடத்த அழைப்பு விடுத்துவருகின்றனர் . எம்மை பொறுத்த வரையினில் கட்சியோ பதவியோ முக்கியமில்லை. தேவையானால் கட்சியினை கலைத்துவிடவும் தயார்.…
-
- 11 replies
- 885 views
-
-
அசாத் சாலிக்கு நீதி கோரி சர்வதேச சமூகத்திடம் முறையீடு! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை!! சிறிலங்காவின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயருமான அசாத் சாலிக்கு நீதி கோரி சர்வதேசத்திடம் முறையிடவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அசாத் சாலியை உடனடியாக விடுவிக்குமாறு அரசாங்கத்தைக் கோரும் சிறிலங்காவின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அசாத் சாலியின் கைது தொடர்பில் கருத்துத் தெரிவி…
-
- 1 reply
- 264 views
-
-
வடமாகாணத் தேர்தலை செப்ரெம்பர் ஏழாம் திகதி நடத்த அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தலையும் அன்றைய தினமே நடத்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது என்று "உதயன்' பத்திரிகைக்கு நம்பகரமாக அறியவந்தது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் வடக்கில் மாகாண சபையை உத்தியோகபூர்வமாக நிறுவுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்று அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றிரவு "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் வடக்கு மாகாண சபையை நிறுவுவதற்கான ஆணையை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு விரைவில் வழங்குவார். அதைத் தொடர்ந்து பணிகள் விரைவுபட…
-
- 1 reply
- 727 views
-
-
சட்டத்தின் ஓட்டையைக் காட்டி இந்தியாவை மடக்கியது சிறிலங்கா [ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 05:43 GMT ] [ கார்வண்ணன் ] திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பாக பத்தாண்டுகளுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு குறித்து மீள் பேச்சு நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கு தகவல் அனுப்பியுள்ளது. எண்ணெய்க் குதங்களை பயன்படுத்தும் உரிமையில் சிறிலங்காவையும் பங்காளராக சேர்க்கும் வகையில் உடன்பாட்டில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று சிறிலங்கா வலியுறுத்தியுள்ளது. சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை நிர்வகிக்கும் சிலோன் பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கை, இந்தியன் ஓயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான …
-
- 0 replies
- 363 views
-
-
மாலைதீவில் இராணுவ முகாம் அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. மாலைதீவில் அமெரிக்கா இராணுவ முகாம் அமைக்கப் போவதாக இந்திய மற்றும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், மாலைதீவில் இராணுவ முகாமொன்றை அமைக்கும் எதவும் கிடையாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. மாலைதீவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்காசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். மாலைதீவில் நிரந்தரமாக அமெரிக்கத் துருப்பினரை நிலைநிறுத்தும் எந்தத் திட்டமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 100க்கும் மேற்பட்ட நாடுகளுடன் அமெரிக்கா இராணுவ கூட்டுப் பயிற்சி…
-
- 3 replies
- 323 views
-