ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
அஸாத் ஸாலியின் உடல்நிலை மோசம்;! - விடுதலை செய்யப்படும் வரை எதனையும் உட்கொள்ளப் போவதில்லை என சபதம்!! 'உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை. என்னை விடுதலை செய்யும் வரை உணவையோ, மருந்தையோ உட்கொள்ளப் போவதில்லை' என கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஸாத் ஸாலி தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தான் கைதுசெய்யப்பட்டது சட்டவிரோதமானது என்றும், தன் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது என்றும் குற்றம் சுமத்தும் அஸாத் ஸாலியின் உடல் …
-
- 3 replies
- 685 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 11:43 GMT ] [ புதினப் பணிமனை ] நாம் எல்லோரும் தவறு புரிந்தவர்கள், குறைபாடுகளை உடையவர்கள், கைகளில் கறை படிந்தவர்கள் தான். எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் எமது தவறுகளுக்காக உயரிய விலை செலுத்தியவர்கள் பொதுமக்களும் சிறுவர்களும் பெண்களும் முதியவர்களும் இளையோருமே. ‘புதினப்பலகை’க்காக ம.செல்வின். 13வது சட்டத் திருத்தத்தினால் தமிழர்களுக்கு பயன் ஏதுமில்லை. எனவே அதனையும் அது சார்ந்த தேர்தல்களினையும் முற்றாக நிராகரிக்கவேண்டும். மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று மாகாணத்தின் நிர்வாக ஆட்சியதிகாரத்தினை தமிழர்களின் கைகளுக்குள் கொண்டுவரவேண்டும். தமிழர் உரிமைக்காக குரல்கொடுக்கும் கட்சிகள் நேரடியாக தேர்தலில் பங்குபற்றாமல் ஒருபொது வே…
-
- 0 replies
- 508 views
-
-
அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் மாணவர்கள் இணைந்து "தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பு' என்கிற புதிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அமைப்பின் ஒருங் கிணைப்பாளர்களான இளங்கோ, நெப்போலியன், சிவக் குமார் ஆகியோர் ""ஈழச்சிக்கலில் நடைமுறை சாத்தியங் களையொட்டி என்ன மாதிரி முன்னெடுப்புகளை நகர்த்த வேண்டுமென்பதற்காகவே இந்த அமைப்புத் துவங்கப் பட்டிருக்கிறது''’ ’என்றனர். ஈழம் தொடர்பான முதல் கருத்தரங்கத்தை இந்த அமைப்பினர் சென்னையில் நடத்தினர். "ஈழச் சிக்கலும் ஒப்பந்தங்களும்' என்ற தலைப்பில் பேசிய முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, ""ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக ஈழத்தமிழர்களிடமும் இந்திய அரசிடமும் பல்வேறு உடன்பட…
-
- 3 replies
- 762 views
-
-
அசாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார். வவுனியாவில் இன்று ஞாயிற்றுகிழமை (05) முற்பகல் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாண புனரமைப்புக்கூட்டத்தில் வவுனியா, மன்னார், முல்;லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வன்னி கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். றோயல் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிபாவா பாறுக் ,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றும் போது கைது செய்யப்பட்டுள்ள ஆசாத்சாலி பற்றி அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது : இன்று எனது மனச்சாட்…
-
- 0 replies
- 475 views
-
-
14 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார் - அன்டனோவ் 24' ரக உள்ளூர் பயணிகள் விமானத்தின் சிதைவடைந்த பகுதிகளுடன் மனித எலும்புக்கூடுகள், ஆடைகள், செருப்புகள், இதயத்துடிப்புமானி மற்றும் தங்கப் பல் ஒன்றின் ஒரு பகுதி போன்றன மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான புத்திக சிறிவர்தன தெரிவித்தார். இதேவேளை, மேற்படி விமானத்தின் கறுப்புப் பெட்டி இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நம்பப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். சுழியோடிகள், கடலுக்கு அடியில் சுமார் 30 அடி ஆழத்தில் இருந்து மேற்படி …
-
- 0 replies
- 619 views
-
-
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிப்பதனால் தமிழர்களே அதிகளவு பாதிக்கப்படுவர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. பொருளாதாரத் தடை விதிப்பதனால் இலங்கை வாழ் தமிழர்களே அதிகளவு பாதிக்கப்படுவர் என்பதனை அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கம்யூனிஸ்;ட் கட்சியின் செயலாளர் ராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஜெயந்;புரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.உணர்வு பூர்வமான அழுத்தங்களை பிரயோகிக்காமல், தமிழர் பிரச்சினைக்கு காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இலங்கையுடன் நட்புறவை பேணினால் மட்டுமே பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடுகளின் மூலம் தீர்வுத…
-
- 0 replies
- 479 views
-
-
மக்கள் மின்சாரக் கட்டணங்களை செலுத்தக் கூடாது என ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து மக்களும் மின்சாரக் கட்டணங்களை செலுத்துவதனை புறக்கணிக்க வேண்டுமென ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் தினியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார்.இலங்கை மக்கள் மிகவும் அமைதியாக இருந்து பழகிவிட்டதாகவும், அநீதிகளுக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மக்களைப் போன்று மிகவும் அமைதியானவர்கள் உலகில் வேறு எங்கும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் வரையில் மக்கள் கட்டணங்கi செலுத்துவதனை தவிர்க்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் மே தினமன்று அறிவிக்கப்பட்ட கட்டணச் சலுகை…
-
- 0 replies
- 398 views
-
-
ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது. அது மட்டுமல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் வெண்புறா போன்ற தொண்டர் நிறுவனங்களைத் தடை செய்தது. அன்றைய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிரெஜ் தொடக்கம் இன்றைய மேற்குலக இராஜதந்திர கருத்துருவாக்கிகளின் மையமான அனைத்துலக நெருக்கடிக்க…
-
- 0 replies
- 730 views
-
-
தெற்காசியாவில் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட சர்வாதிகார ஆட்சியே பெரும்பாலும் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அரசியலமைப்பு ஆலோசகர் ரொஹான் சமரசிங்க தெரிவித்தார். 'கருத்துக்களைத் தெரிவிக்கும் சுதந்திரம் மற்றும் சட்ட ஆதிக்கம்' என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை பத்திரிகை நிறுவனம் மாநாடொன்றை நடத்தியது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அரசியலமைப்பு ஆலோசகர் ரொஹான் எதிரிசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20712:2013-05-05-11-02-12&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 0 replies
- 499 views
-
-
வட மாகாணத்தில் வலி. வடக்கு, வலி. கிழக்கு உட்பட பல பகுதிகளிலும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், அவற்றை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. இதன் முதற்கட்டமாக சட்ட நடவடிக்கை எடுக்கவும், காணி சுவீகரிப்பு விவகாரத்தை சர்வதேசமயப்படுத்தவும், மக்களின் பங்களிப்புடன் குடாநாட்டில் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும் 5000 வரையிலான வழக்குகளைத் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூ…
-
- 0 replies
- 452 views
-
-
முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபட ஆர்வம் 05 மே 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இவ்வாறு அரசியலில் ஈடுபட முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபை, உள்ளுராட்சி மன்றம், பிரதேச சபை போன்ற தேர்தல்களில் குறித்த புலி உறுப்பினர்கள் களமிறக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், புலம்பெயர் தமிழ் மக்கள் மீளவ…
-
- 1 reply
- 338 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த காலப் போர் முடிவுக்கு வந்து எதிர்வரும் 19ம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஆண்டுதோறும் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அரசாங்கம் காலிமுகத் திடலில் பாரிய இராணுவ அணிவகுப்பையும் கொண்டாட்டங்களையும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டிலும் அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. போரில் பெற்ற வெற்றியை நினைவுபடுத்தி விழாக்களைக் கொண்டாடுவதில் தான் அரசாங்கத்தின் கவனம் இருக்கிறதேயன்றி அந்த வெற்றியை நிரந்தரமான அமைதியாக நிலைநாட்டிக் கொள்வதில் கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. அதாவது நிலையான அமைதிக்கு அவசியமான பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் அக்கறை காண்பிக்கவில…
-
- 1 reply
- 404 views
-
-
கல்முனை, நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்துடன் இணைந்து நற்பிட்டிமுனை கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் நாடத்தப்பட்டு வந்த மாணவர்களுக்கான நூலகம் நேற்று இரவு விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர் மக்களால் மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டுவந்ததை அடுத்து கல்முனை பொலிஸில் முறையிட்டதாகவும், இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கல்முனை பொலிஸ் அத்தியட்சகர் கபார் அவர்கள் உறுதியளித்துள்ளதுடன், அம்பாறையில் இருந்து கைவிரல் நிபுணர்களை வரவழைத்தும் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளார். இவ் நூலகம் நற்பிட்டிமுனை தமிழ் முஸ்லிம் கிராம எல்லையில் அமைந்துள்ளதுடன், இவ் நூலகத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட புத்தகங்களும் எரிக்கப்பட்டுள்ளத…
-
- 3 replies
- 592 views
-
-
வடமராட்சி கிழக்குக் கட்டைக்காட்டுப் பிரதேசத்தில் அடாத்தாக அட்டைப் பிடித்தொழிலில் ஈடுபடும் தென்பகுதிச் சிங்களவர்களுக்கு எதிராக கட்டைக்காடு கடல் தொழிலாளர்கள் இன்று கண்டனப் பேரணி ஒன்றினை நடாத்தத் தீர்மானித்திருந்தனர். எனினும் இராணுவத்தினரதும் ஈபிடிபியினரதும் அச்சுறுத்தலால் இப் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கட்டைக்காடு மீனவர் கூட்டுறவு சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராசா, சி.சிறீதரன் ஆகியோரும் பங்குபற்ற இருந்தமை குறிப்பிடட் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இக்கூட்டத்திற்கு வருகை தந்தால் நீங்கள் காணாமல் போவீர்கள்" என அப்பகுதிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியும் ஈபிடிபி அமைப்பாளர் ரங்க…
-
- 0 replies
- 488 views
-
-
நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமானது என்று இலங்கை அரசினால் நியாயப்படுத்தப்பட்டு, தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலய நிலங்களில் இலங்கை இராணுவம் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்கிறது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை விரட்டி விட்டு அவர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இலங்கை படையினர் விவசாயம் செய்து வருகின்றனர். அனைத்துப் பயிர்களும் நன்கு செழித்து வளரத்தக்க வளம்மிக்க, இந்த நிலங்களை நம்பி வாழ்ந்த வலி. வடக்கு மக்களை நடுத்தெருவுக்கு அனுப்பிவிட்டு, இலங்கை இராணுவத்தினர் அங்கு விவசாயம் செய்து அந்த உற்பத்திகளை தமிழ் மக்களிடமே விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் விவசா…
-
- 0 replies
- 387 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் - TNA 05 மே 2013 புலம்பெயர் தமிழர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் தேர்தல் ஆணையாளருக்கும், கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணசபைத் தேர்தலில் புலம்பெயர் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர். செப்டம்பர் மாதம் வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். சுதந்திரமானதும், நியாயமானதுமான முறையில்…
-
- 0 replies
- 663 views
-
-
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உரிமையாளர்கள் யார் என்று தெரியாத வீட்டு மனைகளே அரசால் சுவீகரிக்கப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் அதிகாரி மொகமட் ஜெப்ரீ தெரிவித்தார். அப்படியான வீட்டு மனைகளின் முன் அவை சுவீகரிக்கப்படுகின்றன என்ற அறிவிப்பு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் எழுதி ஒட்டப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார். இந்த காணிகளின் உரிமையாளர்கள் இருப்பின் அவர்கள் அந்தந்தப் பகுதி பிரதேச செயலர் அல்லது அரச அதிபருடன் தொடர்பு கொண்டு சுவீகரிப்புக்கு எதிரான புகார் செய்தால், புகார்கள் தொடர்பாக பொலிஸார் கவனம் செலுத்துவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிலங்கள் இலங்கை நில சட்டம் 1964 பிரிவு 2 ஷரத்து 28ன் படி பொது உபயோகத்துக்காக சட்டரீதியாக எடு…
-
- 0 replies
- 301 views
-
-
புலம்பெயர்ந்து வெளி நாடொன்றில் தங்கியுள்ள ஒருவரின் பெயரில் உள்ள காணி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கென அபகரிப்பு! [sunday, 2013-05-05 08:21:07] காணி சுவீகரிப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு தனியார் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பான மும்மொழிகளில் வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் நேற்று வியாழக்கிழமை காணியின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. சாவகச்சேரி கோயிற்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் கச்சாய் வீதியில் உள்ள 140 பேர்ச் காணியே சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணியின் நான்கு பக்க எல் லைகள் பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வெளி நாடொன்றில் தங்கியுள்ள ஒருவரின் பெயரில் உள்ள காணியே இவ்வாறு சுவீகரிக்கப்ப…
-
- 0 replies
- 316 views
-
-
உறுதிகள் பெயர் மாற்றாமையால் வழக்குகள் தொடுப்பதில் வலி.வடக்கு மக்கள் சிக்கல்; 05 மே 2013 வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு மக்கள் தயாராக உள்ள போதும், அவர்களின் உறுதிகள், ஆவணங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாமையினால் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வலி.வடக்கில் இராணுவத் தலைமையகம் அமைப்பதற்காக 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படுவதற்கான அறிவித்தல்கள் கடந்த 22 ஆம் திகதி ஒட்டப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து வலி. வடக்கு மக்களினால் வழக்குத் தாக்கல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளது. இதற்காக வலி.வடக்கு மக்களின் காணி உறுதிகள், தேசிய அட…
-
- 0 replies
- 303 views
-
-
சர்வதேச கண்காணிப்பில் வடக்கு மாகாண தேர்தல்; தேர்தல் ஆணையாளரிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல் சர்வதேச கண்காணிப்புக்கு மத்தியிலேயே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரிடம் நேற்று நேரில் கோரிக்கை விடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அது நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியது. வடக்குத் தேர்தலை முன்னிட்டு இவ்வாறானதொரு ஏற்பாடு செய்து கொடுக்கப் படாவிட்டால் அங்கு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டியது. அதேவேளை, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்குத் தேர்தலில் …
-
- 0 replies
- 401 views
-
-
யாழ்.பல்கலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பேராசிரியரின் துறைத் தலைவர் பதவி பறிப்பு Written by tharsan // May 4, 2013 // யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவிகளுடன் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொள்ளும் விதமான செயற்பாடுகளை மேற்கொண்ட பேராசிரியர் தலைவர் பதவியிலிருந்து பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளார். மாணவிகளை அச்சுறுத்தி பல வருடங்களாக பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதாக மாணவர்கள் இவர் மீது குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின், பொருளியல் துறையின் முன்னாள் த…
-
- 0 replies
- 644 views
-
-
இலங்கை காவல்துறையினரால் நேற்று முன்தினம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ்- முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி கொழும்பு மருத்துவமனையில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் மூன்றாவது நாளாக உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அசாத் சாலியின் உடல்நிலை மோசமடைந்துவருவதாக அவரை சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார். இதற்கிடையே, அசாத் சாலியின் விடுதலையை வலியுறுத்தி மனோ கணேசன், விக்ரமபாகு கருணாரட்ன, சுமந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும்படி கோரும் அமைப்பொன்றை உருவாக்…
-
- 1 reply
- 558 views
-
-
இலங்கையில் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகியிருப்பதோடு பல அழுத்தங்களை சந்தித்து வரும் நிலையில் தாயகத் தமிழர்களின் குரலாக புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் உற்சாகமளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரினதும் பங்கெடுப்புடன் உருவாகி வரும் தமிழீழ சுதந்திர சாசனம் குறித்து கருத்துரைக்கும் போதே இக்கூற்றினை அவர் தெரிவித்துள்ளார். விடுதலையினை நோக்கிய செயற்பாட்டை மிகத்திறமையாக புலம்பெயர் உறவுகள் முழுமூச்சாக செய்து கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சிறிலங்கா அரசு அச்சப்…
-
- 1 reply
- 460 views
-
-
கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு சில நாட்கள் முன்னதாக, மிகவும் எதிர்பார்ப்புக்குரிய வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் பற்றிய சிறப்பு அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்தார். வரும் செப்ரெம்பரில் தேர்தல் நடைபெறும் என்று திட்டவட்டமாக அறிவித்த அவர், தனது சோதிடர்கள் அதற்கான நல்ல நேரத்தை தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு சில நாட்கள் முன்னதாக, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரான தயா மாஸ்டரை யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்தார். பெரும் ஆரவாரத்துடன் நடத்தப்பட்ட இந்தக் கூட்டம், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்…
-
- 0 replies
- 560 views
-
-
இலங்கையில், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் பங்கேற்பார் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த மாநாட்டில் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=81922&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 447 views
-