Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு அளித்து வரும் நிதியுதவில் 20 சதவீதத்தை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பிறகும் மனித உரிமை மீறல் அதிகரித்து வருவதாலும், மறுசீரமைப்பு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேம்படுத்தப்படாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் வடகிழக்கு பகுதியில் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டபோதிலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களில் ராணுவத்தின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும…

    • 7 replies
    • 460 views
  2. யாழில் பொதுபலசேனா அலுவலகம் திறப்பு! செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16, 2013 பொதுபல சேனா அமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று விரைவில் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பு தற்போது செய்து வருகிறது. இது தொடர்பில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் சிங்கள இணையம் ஒன்றுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். சிங்களவர்களும் தமிழர்களும் ஐக்கியமாக ஒற்றுமையுடன் வாழ்வதற்கான திட்டமொன்றினை நாம் முன்னெடுத்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் யாழ்ப்பாணத்தில் எமது அமைப்பின் அலுவலகம் ஒன்றினைத் திறக்கவுள்ளோம். இது தொடர்பான எமது “சமூக ஐக்கியக் கூட்டம்“ எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் வடமாகாணத்துக்கான எமது பிரதிநிதிகளும் கலந்து கொ…

    • 3 replies
    • 807 views
  3. இலங்கைக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்குகிறது அமெரிக்கா?! — 15/04/2013 at 1:10 pm இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை 20 சதவீதத்தில் குறைக்க வேண்டுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி யோசனை முன்வத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மனித உரிமை நிலைமைகளை முன்னேற்றுவதை வலியுறுத்தியே இந்த யோசனையை அவர் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாம் வடக்கிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கும் வழமையான வாழ்வுக்கு திரும்பவும் மீள் கட்டுமானதத்தில் உதவவும் பெரிதும் முயற்சி செய்தோம். ஆனால் நாம் ஆதரவளிக்க முயன்ற பல திட்டங்களில் அரசாங்கம் குறிப்பாக இராணுவம் தலையீடு செய்தது. எனவே எம்மால் அந்த திட்டங்களை தொடர முடியவில்லை” என ஒரு சிரேஸ்ட இராஜாங்க திணைக்கள அதிகாரி குறிப்பிட்டார். “இலங்க…

  4. மாகாணசபை தேர்தல்: நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க கூட்டமைப்பு ஆலோசனை! வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பொது முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனை நிறுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது. வட மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படுமென்று அரசு உறுதியளித்துள்ளது. திட்டமிட்டபடி தேர்தல் இடம்பெறுமென்று அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும போன்றோர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வ…

  5. சித்திரவதை என்பது சிறிலங்காவில் அமைப்புரீதியாக உள்ளது - ஹாங்காங் நீதிமன்றம்! ஏப் 15, 2013 தமிழர்களின் உலகளாவிய எதிர்ப்புப் போராட்டத்திற்குஒரு உந்து விசையாக ஹாங்காங் மேல்நீதிமன்றம் ஒன்று இரு தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் சிறிலங்காவில் சித்திரவதை அமைப்புரீதியாகக் கையாளப் படுகிறது என்று உறுதி செய்துள்ளது. அவர்கள் இருவரும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அந்த இருவரின் பெயர்களை பாதுகாப்பு காரணம் கருதி நீதிமன்றம் வெளியிட மறுத்துள்ளது. முள்ளிவாய்க்காலுக்கான விசாரணை இன்னமும் நடத்தப் படுவதில் தடைகள் இருந்தாலும் சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் குற…

    • 5 replies
    • 595 views
  6. தமிழர்களுக்கு, இலங்கை அரசாங்கம் அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர் என்று, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பாராளுமன்ற குழுவில் அங்கம் வகித்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் தெரிவித்துள்ளார். இந்திய எம்.பி.,க்கள் குழு, அண்மையில் இலங்கைக்கு வந்து இந்தியா சென்றிருந்தது. இந்தக் குழுவில், சந்தீப் தீட்சித் (காங்.,), பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் சிங் தாக்கூர் (பா.ஜ.,), தனஞ்ஜெய் சிங் (பகுஜன் சமாஜ்) மற்றும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய் ஆகிய, ஐந்து பேர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், இலங்கை பயணம் முடித்து, …

    • 6 replies
    • 653 views
  7. சிறைக் காவலாளிகளுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படும் : அமைச்சர் கஜதீர சிறைச்சாலை காவலாளிகளுக்கு அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த வருடம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சிறைச்சாலை காவலாளிகளுக்கு T56 வகையான துப்பாக்கிகளே தற்போது வழங்கப்பட்டுள்ளன. எனினும் எதிர்காலத்தில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை தடுக்கும் நோக்கில் அதி நவீன வகையான ஆயுதங்கள் வழங்கப்படும். இதேவேளை, கண்ணீர்ப்புகை உள்ளிட்ட சிறைச்சாலைகளுக்கு தேவையான தற்காப்பு ஆயுதங்களுக்கான கேள்வி அறிவித்தல் விடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்…

  8. 13 வருடங்களின் பின்னர் பிரிட்டிஷ் எயார்வேஸ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணத்தினால் கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கைக்கான விமான சேவையினை பிரிட்டிஷ் எயார்வேஸ் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: பிரதீப் பத்திரன) http://tamil.dailymirror.lk/--main/63954-13--.html

    • 6 replies
    • 604 views
  9. நேற்று இரவு 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கிளிநொச்சியின் பிரபல வர்த்தக நிலையங்களில் ஒன்றான குமரகுரு பல்பொருள் வர்த்தக நிலையம் தீ பிடித்து முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று 15-04-2013 இரவு பதினொரு மணியளவில் வர்த்தக நிலையத்திற்குள் இருந்து புகை வருவதாக காவலாளி உரிமையாளரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து உரிமையாளரினால் உடனடியாக வர்த்தக நிலையம் திறக்கப்பட்ட போதும் தீ வர்த்தக நிலையத்தினை ஆக்கிரமித்தமையினால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் பொலீஸ் மற்றும் இராணுவத்திற்கு அறிவித்தார். சம்பவ இடத்திற்கு கொக்காவிலிருந்து விரைந்து சென்ற இராணுவ தீ அணைப்பு படையினர் கடுமையாக போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போய்…

    • 1 reply
    • 507 views
  10. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனுக்கு சேலத்தில் சிலை எழுப்புவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது குறித்து கட்சியின் பொதுச் செயலர் வை.காவேரி, ஒருங்கிணைப்புச் செயலர் எம்.பி.காமராஜ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணத்திடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனு விவரம்: இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையில் அப்பாவித் தமிழ் சிறுவன் பாலச்சந்திரன் ராணுவ வீரர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தையும் இன உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் நினைவைப் போற்றும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாலச்…

    • 0 replies
    • 453 views
  11. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது 16 ஏப்ரல் 2013 இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.2012ம் ஆண்டில் இலங்கை மனித உரிமை நிலைமைகள் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.கடந்த ஆண்டில் பல பாதகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக கருத்து சுதந்திர முடக்கம், நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு எதிராக செயற்படல், ஊடக சுதந்திர முடக்கம் போன்றன தொடர்பில் திருப்தி அடைய முடியா என தெரிவித்துள்ளது.சட்டவிரோத ஆட்கடத்தல்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் 2012ம் ஆண்டிலும் நீடித்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளது. …

  12. ஆயிரம் போர்க்களங்களில் எம் தலைவனின் படையினர் சாதித்ததை எம் தலைவனின் இரண்டாவது மகனின் இரண்டு கண்கள் சாதித்துவிட்டன...:வைகோ தோழர் வைகோ அவர்களின் உரையில் திராவிடர் விடுதலைக்கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களைப்பற்றிய செய்தி: "மாணவச்செல்வங்களே தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒருவரை உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமையில் நான் சொல்கிறேன். அவருடைய தோட்டத்தில் அவருடைய நிலத்தில் அவர் அமைத்த பாசறையில்தான் நம் நெஞ்சால் பூஜிக்கின்ற பிரபாகரன் தன் படைத்தரிப்பை கொண்டுவந்து பயிற்சிக்கொடுத்தார். பொன்னம்மான் பயிற்சி பெற்றார். புலேந்திரன், குமரப்பா பயிற்சிபெற்றார்கள். கிட்டு வந்துவிட்டுப்போனார். எல்லோரும் பயிற்சிபெற்றது அந்த புலியூரிலே அந்த மண்ணில் அவருடைய இடத்தில் நிலத்தி…

  13. தவறாகச் செயற்படும் சிறிலங்காவுக்கு அறிவுரை தேவை - அவுஸ்ரேலிய பேராசிரியர் சிறிலங்கா தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தநிலையை மாற்றி இராஜதந்திரிகள் தெளிவான சமிக்ஞையை அந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் அவுஸ்ரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி ஜேக் லிஞ்ச். சிட்னி பல்கலைக்கழக அமைதி மற்றும் முரண்பாடுகளுக்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளரான கலாநிதி ஜேக் லிஞ்ச், கொழும்பு கொமன்வெல்த் உச்சிமாநாடு மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இந்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாடு கைவிடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொ…

    • 2 replies
    • 546 views
  14. போரில் ஊனமுற்ற சிறார்களுக்கு உதவிகள் இல்லை இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் 19 ஆயிரத்து 420 சிறுவர்கள் அவயவங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேற்கொண்டுள்ள கணிப்பீடுகளில் தெரியவந்திருப்பதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவித்திருக்கின்றார்.இவர்கள் கை கால்களை இழந்தும், கண்களை இழந்தும் வேறு பல அவயவங்களை இழந்துமிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் இச்சிறுவர்களுக்கு இதுவரையான காலப்பகுதியில் போதிய அளவில் வாழ்வாதார நலச் சேவைகள் வழங்கப்படவில்லை. அவர்கள் அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்பதற்குக் கூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்கிறார் நடனேந்திரன். இது குறித்து பிபிசி தமிழோசைக்குக் …

    • 0 replies
    • 359 views
  15. -சுமித்தி தங்கராசா சிவில் உடையில் ஆலயத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரியொருவர் மேலாடையை கழற்றாமல் கோவிலுக்குள் நுழைந்தது மட்டுமன்றி தான் பாதுகாப்பு அதிகாரியென்றும் மேலாடையை கழற்றமாட்டேன் என்றும் அடம்பிடித்துள்ளார். நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற பூஜையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி மேலாடையை கழற்றாமல் கலந்துக்கொண்டுள்ளார். குறித்த கோவிலுக்கு பூஜைக்கு செல்கின்ற ஆண்கள் மேலாடையை கழற்றிவிட்டே ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். எனினும், குறித்த அதிகாரி அவ்வாறு செய்யவில்லை. அவரின் நடவடிக்கை தொடர்பில் ஆலயத்தில் இருந்த ஏனைய பக்தர்கள் அவருக்கு எடுத்துரைத்த போதிலும் குறித்த அதிகாரி அவர்களின் பேச்சை கணக்கில் எடுக்கவில்லை, குறித்த அதிகாரியின் நடவடிக்கை தொடர்பில் அங்கிருந்த …

  16. ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகர் துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 தமிழீழ அகதிகளை எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு திருப்பு அனுப்பக் கூடாது என்று சென்னையில் உள்ள ஐ.நா.அகதிகள் ஆணையர் அலுவலக அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சி மனு அளித்தது. இலங்கையில் தங்களின் உயிருக்கும் வாழ்விற்கும் அச்சுறுத்தல் உள்ள நிலையிலேயே அங்கு வாழ்ந்த வந்த தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு புகலிடம் தேடி வந்துள்ளனர். அப்படி தங்களுடைய எதிர்காலத்திற்காக ஆஸ்ட்ரேலியா நோக்கிச் சென்ற தமிழீழ அகதிகள் 46 பேர், அவர்கள் பயணித்த படகு நடுக்கடலில் பழுதான நிலையில் சிங்கப்பூர் வணிக கப்பலால் காப்பாற்றப்பட்டு, துபாயில் உள்ள ஐ.நா. அகதிகள் அலுவலகத்தி்ல் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 19 பேரை அமெர…

  17. சவூதியில் ஆயிரக் கணக்கான இலங்கையர் வெட்டவெளியில் நிர்க்கதி! by Editor on 15th-April-2013 தொழில்வாய்ப்புக்களைப் பெற்று சவூதி அரேபியா சென்றுள்ள சுமார் 1200இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில்வாய்ப்புக்களை இழந்த நிலையில், தங்குவதற்கு இடமின்றி, உண்ண உணவின்றி, மலசல கூட வசதியின்றி வெட்டவெளியில் கைவிடப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது ஜித்தா பிரதேசத்தின் வெட்ட வெளியில் தங்கியுள்ளனர். சவூதி அரேபியாவிலுள்ள பாலம் ஒன்றின் கீழ் தங்கியிருந்த தாம், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் பொலிஸார் தம்மை அங்கிருந்து கலைத்ததாகக் கூறினர். இவ்வாறு வெட்டவெளியில் தங்கியுள்ள இவர்களுக்கு கடந்த சில நாட்களாக உணவைப் பெற்றுக்கொள்வதிலும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பாலத்திற்கு கீழ் இருந்த பொல…

  18. யாழில் கடற்படையினர் தனித்திருக்கும் பெண்களை இலக்கு வைத்து பாலியல் துஸ்பிரயோகம் 15. 04. 2013, திங்கட்கிழமை, தமிழீழ நேரம் 7:27 யாழ். மண்டைதீவு பகுதியில் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் படைமுகாமில் வைத்து மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.எனினும் ரோந்து சென்ற படையினரை தாக்கியதாக பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள 29 வயதுடைய ஜெ.காண்டீபன் எனும் குறித்த பொதுமகன் தற்போது படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது: கடந்த சனிக்கிழமை இரவு குறித்த பொதுமகனது வீட்டிற்குள்ளே அடாத்தாக புகுந்த கடற்படை சிப்பாய் ஒருவர் வீட்டில் தனித்திருந்த பெண்களை பாலியல் ரீதியாக துனபுறுத்தியுள்…

  19. வடக்கின் இராணுவப் பிரசன்னம் குறித்த கூட்டமைப்பின் குற்றச்சாட்டு நியாயமானது! - அமைச்சர் வாசுதேவ கருத்து!! 'வடபகுதியில் இராணுவப் பிரசன்னம் அதிகம் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டில் நியாயமுள்ளது. ஆனால் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதாகக் கூறுவதில் உண்மையில்லை' என சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் அரசாங்கம் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டும் எனவும், இல்லாவிட்டால் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கின் இனக்குழுமத்தில் சிறிலங்கா அரசாங்கம் ம…

  20. மிரிஹான தடுப்பு முகாமிலிருந்து 10 வெளிநாட்டுப் பிரஜைகள் தப்பியோட்டம் வெளிநாட்டுப் பிரஜைகள் பத்துப்பேர் மிரிஹான தடுப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசா கலாவதியாகி தங்கியிருத்தல், சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்தல் மற்றும் வேறு குற்றச் செயல்களில் ஈடுபடல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளில் பத்துப் பேரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். எனினும் அவர்களை குடிவரவுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடுவதில்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு அங்குள்ள சில பாதுகாப்பு துறையினர் வெளிநாட்டவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை வெளியேற அனுமதிப்பதாக …

  21. இந்திய குழுவினர் தொடர்பில் அறிக்கை தருமாறு மஹிந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16, 2013 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அண்மைய சிறிலங்கா விஜயம் தொடர்பில் தனக்கு அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்தையர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுள்ளார் எனச் செய்திகள் வந்துள்ளன. இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நாட்டிலிருந்து வெளியேறியவுடன் தனது அதிகாரிகளை அழைத்து இவர்களின் சிறிலங்கா விஜயம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஒன்பது பேர் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்த நிலையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தது. அங்கு …

  22. ஊழல் மோசடிகளிலும் முன்னிலையினில்! பொலிஸ் அதிகாரிகளுக்கெதிரான விசாரணைகள் ஆரம்பமாம்! இலங்கையினில் சட்டமொழுங்கை பேண வேண்டிய பொலிஸார் நிதி மோசடிகளினில் ஈடுபட்டு கையும் மெய்யுமாக அகப்பட்டுக்கொண்டுள்ள போதும் அவர்கள் நீதியின் முன்னதாக நிறுத்தப்படாதேயுள்ளனர்.இந்நிலையினில் நிதி மோசடிகளில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக விசாரணை செய்யப்படாத குற்றச் சாட்டுக்கள் தொடர்பிலேயே விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸ் உயர் அதிகாரிக…

  23. ஊடகங்களுக்கு பாதுகாப்பில்லாத இலங்கை ஜனநாயக நாடா? இந்தியா அதன் நட்பு நாடா? April 15, 2013 11:51 am நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் தமிழ் நாளிதழ் அலுவலகம் துப்பாக்கியுடன் வந்த வன்முறை கும்பலால் தாக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஒரு ஜனநாயக நாடு என்றும், அதனை இந்தியாவின் நட்பு நாடு என்றும் கூறும், இந்திய மத்திய காங்கிரஸ் அரசு. இதற்கென்ன பதில் வைத்திருக்கிறது?. பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் தாக்குதலுக்கும், கடத்தலுக்கும் உள்ளாக்கப்படும் ஒரு நாடு எப்படி ஜனநாயக நாடாக இருக்க முடியும். இலங்கை தீவில் தமிழர்களுக்கென்று ஒரு தனி அரசு அமையாமல் அவர்களின் வாழ்வில் …

  24. புலிகளை தோற்கடித்த காரணத்திற்காக சர்வதேச சமூகம் அரசாங்கம் மீது கோபம் கொள்ளவில்லை – சரத்பொன்சேகா 14 ஏப்ரல் 2013 "ராஜபக்க்ஷ அரியல் ரீதியாக நேருக்கு நேர் சந்தித்து பேச அஞ்சுகிறார்" தமிழீழ விடதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்திற்ககாக சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உள்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் சில முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் ஊடகங்கள், அரசியல்வாதிகள் ம…

    • 2 replies
    • 797 views
  25. உதயன் மீதான தாக்குதலுக்கு சர்வதேச ஊடகமான இன்னர் சிட்டி பிரஸ் கண்டனம்! [Monday, 2013-04-15 08:21:46] உதயன் பத்தரிகை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச ஊடகமான இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் கண்டனம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எந்த கண்டனத்தையும் வெளியிடாமை குறித்தும் வருத்தம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மூன்றாம் திகதி உதயன் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்னர் சிட்டிபிரஸ் ஐக்கிய நாடுகளின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பி இருந்தது. எனினும் இதற்கு தம்மிடம் பதில்கள் எவையும் இல்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உதயன் பத்திரிகை அலுவலகம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.