Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்நாட்டின் தலைநகரமாக விளங்கும் சென்னையில் அமைந்துள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றமையானது சென்னையில் ஒரு மானத் தமிழன் இல்லையா என்ற ஆதங்கத்தை உலகத் தமிழர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பல கோடி மக்களை கட்டிப்போட்டிருக்கும் கிரிக்கெட் மூலம் இலகுவாக பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வாய்பிருந்தும் இதுவரை எந்த முயற்சிகளும் தமிழ்நாட்டு தமிழர்களால் முன்னெடுக்கப்படவில்லை. சிங்கள வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்ற மாணவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சிங்கள வீரர்கள் மட்டுமல்ல போட்டி நடுவர்கள் அதிகாரிகள் என எவரும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங…

  2. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படுவதில்லை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானிகளுக்கு அதிகமான வேலைப்பளு கொடுக்கப்படுவதுடன், போதுமான கொடுப்பனவு செலுத்தப்படுவதில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிறுவனத்துக்கு 275 தொடக்கம், 300 வரையான விமானிகள் தேவைப்படுகின்றனர். எனினும் தற்போது அதில் 200 பேர் மாத்திரமே கடமை புரிகின்றனர். அவர்கள் மத்தியில் மிகவும் அதிக வேலைகள் பகிரப்படுகின்றன. எனினும் அவர்களுக்கான வேதனமும் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் எதிர்நோக்குகின்ற அதிக நிதி நெருக்கடியே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. நன்றி http://tamil24news.com/news/?p=59348

  3. விஷமிகளின் பிரச்சாரம் காரணம் என்கின்றனர்:- கடந்த முதலாம் திகதி முதல் நுவரெலியாவின் வசந்தகாலம் ஆரம்பமாகியுள்ள போதிலும், தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மந்த நிலை காணப்படுவதாக நுவரெலியா மாநகர சபை தெரிவித்துள்ளது. வசந்தகாலம் இந்த மாதம் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது. விஷமிகள் தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுப்பிய குறுஞ் செய்திகள், அவர்களில் வருகை குறைந்துள்ளமைக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மாநகர சபை உறுப்பினர் எம்.ஜே.எல். பளீல் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நுவரெலியாவில் உள்ள அனைத்து வாடகை வீடுகளும் பதிவுசெய்யப்பட்டிருந்தன. எனினும் இம்முறை அவை வெறுமையாக இருப்பதால், நகர சபை பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை…

  4. உதயன் மீதான தாக்குதல் – சிறிலங்கா அரசாங்கத்துக்குள் குழப்பம் [ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 00:57 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்த சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் குறித்து சிறிலங்கா அதிபர் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கும்ப…

    • 3 replies
    • 958 views
  5. கிழக்கு மாகாண சபையின் செயற்பாட்டில் நம்பிக்கை இழந்து விட்டுள்ளோம் என கிழக்கு மாகாண அரசியலில் நிலவுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இதனால் அரசியலில் திடீர் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் கிழக்கு மாகாண அரசியலில் நிலவுகின்றது என அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிமனை பிரிவில் உள்ள ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஜம்பது லட்சம் ரூபா நிதியில் அமையப்பெறவுள்ள புதிய இருமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “நாட்டின்…

  6. இலங்கைச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளன. வெகு விரைவில் அதி நவீன ரக ஆயுதங்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இவ்வாறு நவீன ரக ஆயுதங்களை வழங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. கண்ணீர் புகைக் குண்டு போன்ற பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி கலகங்களை தடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெலிக்கடையில் இடம்பெற்ற கலகத்தின் போது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ரி56 ரக ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தனர்.இதனால் பாரியளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எத…

  7. -ஏ.எச்.அப்துல் ஹுசைன் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்வரும் 18ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அந்த விஜயத்தின் போது தொப்பிகலையில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபியை அவர் திறந்து வைப்பார். தொப்பிகலைப் பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து மீட்டெடுக்கப்பட்டதன் நினைவாக அங்கு நினைவுத்தூபியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத்தூபியையே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ திறந்துவைக்கவுள்ளதாக தொப்பிகலை பிரிகேட் படையினர் கூறினர். தமிழ் சிங்கள புத்தாண்டின்; பின்னர் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://tamil.dailymirr…

  8. தமிழகத்தில் தொடர்ந்து பல மாதங்களாக சிறீலங்கா அரசுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் மாணவர் போராட்டங்களுக்கு பின்னணியில் அமெரிக்காவின் உளவுப்பிரிவான சீ.ஐ.ஏ உள்ளதாக தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுடன் முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் இரகசிய பேச்சு ஒன்றை நடத்தியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20265:2013-04-15-08-45-39&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  9. [Audio சிறப்புச்செவ்வி] ஈழத்தில் ஊடகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச ஊடக சக்திகளே முன்வரவேண்டும் - த.தே .கூ நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அரச வன்முறைகளையும் அரச ஆதரவு சக்திகளின் செயற்பாட்டையும் உண்மையாக மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு எந்தக் கட்சியின் சார்பு நிலையிலும் இயங்காத தனித்தன்மையோடு இயங்கும் ஒரு பத்திரிக்கை ஊடகமே உதயன் நாளிதழ், சர்வதேச ஊடகவியலாளர்கள் அனைவரும் சேர்ந்து ஈழத்தின் தமிழ் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முனைய வேண்டும் என நேற்று எமக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் சரவணபவன் தெரிவித்துள்ளார் . http://www.periyarthalam.com

  10. தமிழகத்தில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சீ.ஐ.ஏ தமிழகத்தில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவு செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர குற்றம் சுமத்தியுள்ளார். தமிழகத்துடன் அமெரிக்காவிற்கு பிரத்தியேக உறவுகள் காணப்படுகின்றன. அண்மையில் முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், ஜெயலலிதாவை சந்தித்து பேசியிருந்தார். தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் சாதாரண மக்களினால் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கையில் பிளவினை ஏற்படுத்தும் நோக்கில் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் சூழ்ச்சித் திட்டமாக இதனைக் கருத வேண்…

  11. இந்தியா மீது விசாரணை: கோத்தாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கத் தயாராகிறது புதுடில்லி! இலங்கையின் மீதான இந்தியத் தலையீடுகள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கும் கருத்து, இந்திய இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவருகின்றது. கொழும்பிலிருந்து வெளியாகும் அரச ஆதரவு ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கியிருந்த சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கையில் இந்தியத் தலையீடு குறித்து ஆரம்பத்தில் இருந்து விசாரணைகளை நடத்துவது தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், 'கோத்தபாயவின் இந்தக் கருத்து பாரதூரமானது. இந்தியா இதனை ஆழ…

    • 13 replies
    • 1.4k views
  12. இந்தியக்குழுவினரிடம் குறை கூறவேண்டாம்; மக்களை இடைமறித்த யோகேஸ்வரி! — 11/04/2013 at 4:13 pm | no comments யாழ்., அரியாலையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் தரமற்றவையாக உள்ளதாகவும் கூரைகளினூடாக மழை நீர் ஒழுகுவதால் வீட்டுக்குள் குடை பிடித்துக்கொண்டே வாழ வேண்டிய நிர்க்கதியான நிலை காணப்படுவதாகவும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அரியாலை மக்கள் தெரிவித்துள்ளனர்.அரியாலைக்கு விஜயம் செய்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் குறை நிறைகள் குறித்துக் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளதாவது, “ நீங்கள் கட்டித்தந்த வீடுகளின் அத்திவாரங்களிலும் சுவர்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்திவார வெடிப்புகளுக…

    • 2 replies
    • 542 views
  13. ராஜீவ் காந்தியை யார்தான் கொலை செய்தார்கள்? இன்று முகநூலில் பார்த்ததை, மின்னஞ்சலில் வந்ததைகீழே அளித்துள்ளேன். ராஜீவ் காந்தியின் கொலையில் உள்ள விலகாத மர்மங்களை இது அலசுகிறது. எனக்கு இன்னும் ஒரு கேள்வி கூட உள்ளது. பிரியங்கா, நளினி சந்திப்பின் நோக்கம் என்ன? விவாதிக்கப்பட்டது என்ன? ராஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் ****************************** **** இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்க…

    • 1 reply
    • 1.1k views
  14. யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் முன்பு பேராதனை பல்கலைகழக மாணவர்கள் மீது இனந்தெரியாத இளைஞர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான புதுமுக மாணவர்களுக்கும் பல்கலைகழக இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குமான சந்திப்பொன்று நல்லூர் கோவில் முன்பு நடைபெற்றுள்ளது. மாணவர்கள் தமக்கிடையில் கலந்துரையாடிக்கொண்டு இருந்த சமயம் அவ் இடத்திற்கு திடீரென வந்த இனந்தெரியாத இளைஞர் குழு அங்கிருந்த மாணவிகளை களைந்து செல்லுமாறு பேசியதுடன் மாணவர்களையும் அடித்து விரட்டியுள்ளனர். இதனால் ஒரு சில மாணவர்கள் காயமடைந்தனர். இச் சம்பவம் நடைபெற்ற ஒரு சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ் பல்கலைகழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மாணவர்களிடம் இச் சம்…

    • 1 reply
    • 796 views
  15. உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் - அமெரிக்கா 14 ஏப்ரல் 2013 உதயன் பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமேன அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. நம்பகமானதும், சுயாதீனமானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. ஊடக சுதந்திரத்தை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கத் தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நேற்றைய தினம் காலை உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90743/language/ta-IN/article.aspx

    • 12 replies
    • 849 views
  16. இந்தியா புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்டஈடு வழங்கியது – விக்கிலீக்ஸ் 10 ஏப்ரல் 2013 விசேட மொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள் இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அமைதி காக்கும் படையினரை அனுப்பி வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட…

    • 10 replies
    • 1.1k views
  17. வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சுக்களுக்கு குணதாஸ அறிவுரை! இலங்கையின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் புத்தியுடன் செயற்பட வேண்டுமென சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். குறிப்பாக அமைச்சின் பேச்சாளர்கள் எதிர்காலத்தை கவனத்திற் கொண்டு கருத்து வெளியிட வேண்டும் எனவும் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகப் பொருளாதார முறைமை காணப்படும் நிலையில் சர்வதேச நாடுகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாதெனவும் ஆர்.பிரேமதாச, ஜே.ஆர்.ஜயவர்தன போன்ற ஜனாதிபதிகள் இந்தியாவை பகைத்துக் கொண்டதனால் ஏற்பட்ட விளைவுகளை கவனத்திற்கொள்ள வேண்ட…

    • 0 replies
    • 441 views
  18. கிளிநொச்சியில் கோயில் நிலம் அபகரிக்கப்படுகிறது இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் பல முறைகேடான வகையில் அபகரிக்கப்படுவாகவும், அரசாங்கம் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடைய இடங்களில் வெளியாரைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து அரசியல் கட்சிகள் உட்பட பலதரப்பினரும் கோரியுள்ளனர். மாகாண சபை முதல்வர்களின் முடிவுகளின்றி காணிகள் வழங்கப்படக் கூடாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டிருப்பதாக கிழக்கு மாகாண சபைத் தலைவர் ஏ.மஜீத் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஆணைக்குழுவொன்ற…

    • 0 replies
    • 429 views
  19. கறுப்பு ஜூலை இந்த வருடத்திலும் உருவாக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் பௌத்த பிக்கு ஒருவர் அச்சம் வெளியிட்டுள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கல்கந்த தம்மாநந்த தேரர் இந்த அச்சத்தை வெளியிட்டுள்ளார். வருடந்தோறும் கறுப்பு ஜூலையை இலங்கை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் இந்த வருடம் அது முஸ்லிம்களுக்கு எதிரான கறுப்பு ஜூலையாக இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கல்கந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னர் இனங்களுக்கு இடையில் நல்லுறவை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தோல்விக்கண்டுள்ளன. இதனால் இலங்கையில் இன்று சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கும் என்று கல்கந்த தேரர…

    • 3 replies
    • 626 views
  20. நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பொதுநலவாய செயலகம் அதிருப்தி 14 ஏப்ரல் 2013 அண்மையில் திடீரென நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பொதுநலவாய நாடுகள் செயலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் திடீரென பெருமளவிலான நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான்களே இவ்வாறு அதிகளவில் இடமாற்றம் செய்யப்பட்டனர். 240 மாவட்ட நீதவான்களில் 80 நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இடமாற்றம் செய்யப்பட்ட நீதவான்களில் பெருமளவிலனாவர்கள் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவி…

  21. இலங்கைக்கும், இந்தியாவில் தமிழ்நாட்டுக்கும் இடையிலான உறவில் தமிழர் பிரச்சினை காரணமாக பாரிய, உக்கிர முறுகல் நிலவி வருகின்றது. தமிழ்நாட்டில் மிக மோசமான , கசப்பான அனுபவங்கள், துன்புறுத்தல்கள் போன்றவற்றை இலங்கையர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். கடந்த யுத்தத்தின் இறுதியில் இலங்கைத் தமிழர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டில்லியில் உள்ள மத்திய அரசுக்கு தமிழ்நாடு கோரி வருகின்றது. இவை குறித்த செய்திப் பெட்டகம் ஒன்று அல் - ஜசிரா தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=80468&category=TamilNews&language=tamil

  22. இலங்கையுடனான உறவு தொடர்பில் போட்டித்தன்மை எதுவும் இல்லை என்று இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர் சஹிட் அக்பாருடீன் தெரிவித்துள்ளார். 'பிஸினஸ் ஸ்டேன்டர்ட்' என்ற சஞ்சிகைக்கு அளித்த பேட்டியின் போதே போதே, பேச்சாளர் சஹிட் அக்பாருடீன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதன்போது, சீனா - இலங்கையுடன் நெருங்கிய உறவினை கட்டியெழுப்பியுள்ள நிலையில் அது இந்தியாவுக்கு சவாலாக அமையாதா என்று பேட்டி கண்ட ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் நீண்ட கால ராஜதந்திர உறவுகள் நிலவுகின்ற நிலையில், அது எந்தவிதத்திலும் பாதிப்படையாது என்று இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர் சஹ…

  23. வட மாகாணத்தில் எதிர்வரும் யூன் மாதத்திற்கு முன்னர் 18 ஆயிரம் தென்பகுதி சிங்கள குடும்பங்களை குடியமர்த்தவும், அவர்களுக்கு பிரத்தியேகமாக நிரந்தர வீடுகளையும் காணிகளையும் வழங்கவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பான விசேட கலந்துரையால் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. ஜப்பான நாட்டின் இலங்கைக்கான விசேட தூதுவரின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட உயர்மட்ட அதிகாரிகளின் கலந்துரையாடலிலேயே இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கலந்துரையாடலில் இவ்வாறு குடியேற்றப்படவுள்ளவர்களுக்கான பிரத்தியேகமான வீட்டுத்திட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. குடியேற்றப்படவுள்ள தென்பகுதிப் பெரும்பான்மையினரின் குடும்பங்களின் வி…

  24. சீனாவின் புதிய அதிபரை சந்திக்க மகிந்த ராஜபக்ச சீனாவிற்கு விஜயம். [sunday, 2013-04-14 09:02:21] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இம்மாத இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் புதிய அதிபராக ஜி ஜின்பிங் அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருடன் பேச்சுக்களை நடத்தவே சிறிலங்கா அதிபர் பெய்ஜிங் செல்லவுள்ளார். பொறுப்புக்கூறல் விவகாரம் மற்றும், பொருளாதார வீழ்ச்சி என்பனவற்றால், சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவிடம் இருந்து மேலதிக உதவிகளைக் கோர சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட…

  25. யாழ்ப்பாணத்தில் உதயன் பணியகத்தினுள் துப்பாக்கிச்சூடு – அச்சு இயந்திரங்கள் தீயிட்டு அழிப்பு [ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 01:38 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழின் தலைமைப் பணிமனைக்குள் இன்று அதிகாலை நுழைந்த இனந்தெரியாத ஆயுதபாணிகள், துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், அச்சுக்கூடத்தையும் தீயிட்டு எரித்துள்ளனர். யாழ்.நகரில், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உதயன் தலைமைப் பணியகத்தில், நாளிதழ் விநியோகப் பணி மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே, இன்று அதிகாலை 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளையும், பணியாளர்களையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி விட்டு, அச்சுக் கூடப் பகுதிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.