Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாத்தளை வைத்தியசாலை பிரதேசத்தில் தோண்டியெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1989ம் ஆண்டு காலப் பகுதியில் கொல்லப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் உடையது என ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினரும் தற்போது இலங்கையின் வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இவர்கள் அப்போதிருந்த அரசாங்கத்தின் அரசியல் நோக்கங்களுக்காக கொல்லப்பட்டவர்கள் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்த வைத்தியசாலை பிரதேசத்தில் இருந்து இதுவரை 154 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் எவையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. எனினும் இவ்வாறான கொலைகள் அரசாங்கங்களின் வேறுப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் குறி…

  2. இன, மத, அரசியல், குல பேதங்களை மறந்து நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப் புடன் செயற்படவேண்டும். பிறந்திருக்கும் புத்தாண்டில் அனைவருக்கும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் செளபாக்கியம் உதயமாகட்டும் என பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சமாதானம், மகிழ்ச்சி மற்றும் செளபாக்கியத்தினை நாட்டில் ஏற்படுத்தும் வகையில் உதயமாகியுள்ள இலங்கையின் மாபெரும் கலாசாரப் பண்டிகை யான சிங்கள, தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். சூரிய பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசியினை வந்தடை வதுடன் உதயமாகும் புத்தாண்டினை இலங்கையர்களின் வாழ்வில் புதியதொரு …

  3. சீனாவிடமிருந்து ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கையொன்றை செய்வதன் மூலம் இந்த சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.சிறீலங்காவுக்கான சீனத் தூதுவருடன் ஏற்கனவே இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சலுகைத் திட்டத்தை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஏற்கனவே சீனா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் நீண்ட கால அடிப்படையில் பாரிய நன்மைகள் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது. http://www.sankathi24.com/news/28869/64//d,fullart.aspx

  4. பிரித்தானிய தமிழர் பேரவை தளராத நம்பிக்கையுடன் செயற்படுவதற்கு ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களை ஒன்று திரட்டி, புலத்தில் முழுமையாக மக்கள் பங்களிக்கும் பங்குபற்றல் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டமாக இதனை முன்னெடுக்க வேண்டுமென்ற மூலோபாயத்துடன் செயட்பட்டுவருகின்றது. இதனடிப்படையில் தமிழ் மக்கள் செறிவாயுள்ள பிரதேசங்களை அடையாளங்கண்டு அந்தந்த பிரதேசங்களில் உள்ளூர் தமிழர் பேரவைகளை அவ்விடத்து மக்களே தெரிவு செய்யும் வண்ணம் தனது கட்டமைப்பை ஆழமாக விஸ்தரித்தது இந்த வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முன்னர் இவ்வாறான உள்ளூர் தமிழர் பேரவைகளை புதுப்பிக்கவும் விஸ்தரிக்கவும் விடுதலை மூச்சை வீச்சாக மக்களிடையே கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழர்கள் பக்கம…

  5. இலங்கை பொருளாதார செயல்பாடு திருப்தி அளிக்கிறது: இந்திய குழு இலங்கையில் பொருளாதார செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.இதுகுறித்து இலங்கை பொருளாதார வளர்ச்சி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:செüகதா ராய், பிரகாஷ் ஜவடேகர், அனுராக் தாகுர், சந்தீப் தீக்ஷித், தனஞ்செய சிங் மற்றும் மது கெüட் யாஸ்கி உள்ளிட்ட காங்கிரஸ், பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ், இந்திய மக்கள் காங்கிஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இக்குழுவினர், இலங்கை பொருளாதார வளர்ச்சி அமைச்சர் பசில் ராஜபட்சவை வியாழக்கிழமை சந்த…

    • 2 replies
    • 573 views
  6. தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மிரட்டல் விடுத்த அஸ்வர் தமிழ்ப் பத்திரிகைகள் தனது பேச்சை முழுமையாகப் பிரசுரிக்காவிட்டால், நான் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்புவேன் என தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மிரட்டல் விடுக்கின்றார் ஆளும்கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர். அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பேச்சுக்கு ஒரு தடவை அல்ல, ஆயிரம் தடவைகள் இடையூறு செய்வேன் என்றும் கூறினார். நேற்று நாடாளுமன்றத்தில் நான்கு சட்டவரைவுகள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் உரையாற்றிய அஸ்வர் சட்ட வரைவுகள் தொடர்பாக எதை யும் பேசவில்லை. நேற்றுமுன்தினம் இந்தச் சபையில் நானும் பிரதி அமைச்சர் காதரும் அடிக்கடி இடையூறு செய்ததாகத் தமி…

  7. உலகிலேயே மது அருந்துவோர் அதிகமாகவுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தில்! By General 2013-04-12 10:30:28 உலகிலேயே மது அருந்துவோர் அதிகமாகவுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது. எனவே நாட்டில் மதுவுக்கு 'முற்றுப்புள்ளி' என எப்படிக்கூறமுடியும் என தேசிய சங்க சமேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். பண்டிக்கைக்கு அன்று ஊருக்கு செல்லும்போது 'ஒரு கை வெற்றிலையுடனேயே செல்வார்கள். இன்று இரண்டு போத்தல் சாராயத்துடன் செல்லும் கலாசார சீரழிவு உருவாகியுள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார். இது மதுவுக்கு 'முற்றுப்புள்ளி' என்பது இல்லை, இது மதுவுக்கு (கமா) என்றே கூறவேண்டும். அதாவாது, தொடர்கதையாகிவிட்டது என்று ரஜவத்தே வப்ப தேரர் குறிப்ப…

    • 3 replies
    • 937 views
  8. யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகத்தின் அச்சுஇயந்திர பிரிவு தாக்கப்பட்டமை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் உள் விவகாரமே தாக்குதலுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது உதயன் அலுவலகத்துக்குள் உள்ளவர்களாலேயே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹிலுகல்ல தெரிவித்துள்ளார். தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே அரசு காரணம் கண்டுபிடித்துள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இயந்திரப்பகுதி பொலிஸ் பிரிவினரால் பாதுகாப்பிடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணைகளையே பொலிஸார் மே…

    • 17 replies
    • 922 views
  9. மனித புதைக்குழியில் அரசியல் லாபம் தேடும் ஐதேக, ஜேவிபி மாத்தளை மனித புதைக்குழி விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். மனித புதைக்குழி விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியுமே பொறுப்பு கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் மாத்தளை மனித புதைக்குழி தொடர்பில் இரு தரப்பினரும் வேறு திசை கருத்துகளை முன்வைத்து வருவதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

    • 0 replies
    • 198 views
  10. சிறிலங்கா ஒன்றும் அமெரிக்காவின் கொலனி அல்ல – கோத்தா ஆவேசம் [ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 01:19 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா ஒன்றும் அமெரிக்காவின் கொலனியோ, அமெரிக்கத் தூதுவர் சிசன், அதிபர் ஒபாமாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளுனரோ அல்ல என்று ஆவேசமாக கூறியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில், சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் நிகழ்த்திய உரை குறித்து சண்டே ரைம்ஸ் ஆங்கில வாரஇதழ் எழுப்பிய கேள்விக்கே அவர், இவ்வாறு கோபமாகப் பதிலளித்துள்ளார். “சிறிலங்காவில் இன்னொரு போர் வரும் என்று வெளிநாட்டு இராஜதந்திரி எதிர்வு கூறுவது சரியானதா? ஒரு தூதுவரின் கடமை இருநாடுகளுக்கு இடையிலான…

  11. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமசந்திரனும் நாலாம் மாடி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் 4 ஆம் மாடிக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு தமக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அவர் இன்று யாழ்ப்பாணத்தினில் வைத்துதெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இணையத்தளம் ஒன்றில் வெளியான தனது செய்தி தொடர்பாகவே கோப்பாய் பொலிஸாரின் ஊடாக இந்த ஆணை பிறப்பிக்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நான்காம் மாடிக்கு வருகை தருமாறு ஆணை பிறப்பிக்கப்பட்ட போதும் ஆந்த ஆணை தாமதமாகவே தமக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார். இந்த ஆணை நேற்றுமுன்தினம் இரவு 9.…

  12. [படங்கள்] சுதந்திரத் தமிழ் ஈழம் பொதுவாக்கெடுப்பு – வைகோ உரை நூல், குறுந்தட்டு வெளியீட்டு விழா மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சுதந்திரத் தமிழ் ஈழம் பொதுவாக்கெடுப்பு பற்றி ஆற்றிய உரையின் நூலாக்கம் மற்றும் காணொளி குருந்தட்டு வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையேற்க பழ நெடுமாறன் அவர்கள் நூலினை வெளியிட மே 17 இயக்கத் தோழர் திருமுருகன் பெற்றுக்கொண்டார். 72 photos /http://www.periyarthalam.com/2013/04/13/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE…

  13. -சுமித்தி தங்கராசா ஊடகங்களின் மீது தாக்குதல் மேற்கொள்பவர்கள் ஒருவரை கூட கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க முடியாத ஜனாதிபதி நிச்சயமாக தனது பதவியை திறப்பதுதான் நாட்டு மக்களுக்கு செய்யும் பேருதவி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இன்று தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இன்று உதயன் பத்திரிகை மீண்டும் ஒரு முறை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. தானியங்கி துப்பாக்கியுடன் வந்தவர்கள் 3 மேற்பட்டவர்களினால் எச்சரிக்கை வேட்டுகளை தீர்த்து, அங்கு வேலை செய்யக்கூடிய ஊழியர்களை விரட்டி, மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றார்கள். இது வெறுமனவே யாழ்ப்பாணத்தி…

    • 4 replies
    • 890 views
  14. அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் தமிழ் அகதிகளால் கடந்த திங்கட்கிழமை (08 – 04 – 2013) ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் 7வது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது. ”விடுதலை செய் அல்லது கருணைக்கொலை செய்” என்ற கோரிக்கையுடன் தொடரும் இப்போராட்டத்தில் 25 தமிழர்கள் உட்பட 27 அகதிகள் தமது ”முடிவற்ற சிறைவாழ்க்கை”யால் விரக்தியடைந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்கள். மழைத்தூறலும் பனியும் குளிரும் என நெருக்கடியான மெல்பேண் காலநிலையில், தடுப்புமுகாமின் முற்றத்தில் படுத்திருந்தவாறு தமது உண்ணாவிரத போராட்டத்தை நீரை மட்டும் அருந்தி தொடர்ந்துவருகின்றார்கள். இதுவரை ஐந்துபேர் இயலாதநிலையில் மயக்கமடைந்த பின்னர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லபட்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட …

  15. வட, தென் கொரியாவில் நிலவிவரும் யுத்தப் பீதி குறித்து இலங்கை பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை என தென்கொரியா அறிவித்துள்ளது. தென் கொரியாவில் கடமையாற்றி வரும் இலங்கைப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து அச்சமடைய வேண்டியதில்லை என தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் சுமார் 23 ஆயிரம் வெளிநாட்டுப் பிரஜைகள் பணியாற்றி வருவதாகவும், இதில் 25 ஆயிராயிரம் பேர் இலங்கையர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் வெளிநாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது. வடகொரியா அசாதாரண இராணுவ முன்நகர்வுகளை மேற்கொள்வதாக தென்படவில்லை இருப்பினும் வடகொரியா உடனடியாக யுத்த முன்நகர்வுகளை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் எதுவும் கிடையாது என தெரிவித…

    • 1 reply
    • 696 views
  16. மலரும் தமிழ் சிங்கள புத்தாண்டிலாவது இலங்கை அரச தரப்பினர் தமது காடைத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் தமிழருக்குத் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேவேளை, தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் எனவும், இறைவன் ஒருபோதும் தமிழரைக் கைவிடமாட்டார் எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் சம்பந்தன் எம்.பி. நேற்று தெரிவித்தவை வருமாறு: இலங்கை அரசிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில் நியாயமான கோரிக்கைகளையே நாம் முன்வைத்துள்ளோம். இந்நாட்டில் நாம் சுதந்திரமாக தமிழ்ப் பிரஜைகளாக வாழ விரும்புகின்றோம். வன்முறைகளை நாம் ஒ…

  17. யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 154 பேர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்.மாவட்ட சிரோஸ்ர காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்தார். கோஸ்ரி மோலில் ஈடுபட்ட குற்றவாளிகளே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இன்று காலை யாழ்.காவல்துறை அலுவலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். யாழ்.மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் காவல்துறையினரின் நடவடிக்கைகளையும் மீறி நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டு…

  18. இந்தியா தொழிலாளர்களையும் வெளியேற்றப் போகிறது இலங்கை? கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்புத் துறைமுகத்தில், கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் 2000 இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றுவதாக சிறிலங்கா தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இவர்களுக்குப் பதிலாக இலங்கை பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும…

  19. கொழும்பு நகரில் சிங்களவர்களை விட தமிழர்கள் அதிகமாக வாழ்வதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும். கொழும்பு நகரில் 204,520 சிங்களவர்களும், 176,198 தமிழர்களும் வாழ்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் புள்ளிவிபர திணைக்களம் 2011ம் வருடம் நடத்திய ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி இதுதான் அதிகாரப்பூர்வ உண்மை. இதைவிட ஜாதிக ஹெல உறுமய வேறு ஒரு புள்ளிவிபர திணைக்களைத்தை நடத்துகின்றதா என கேட்க விரும்புகின்றேன். சிங்கள மக்கள் மத்தியில் தேவையற்ற இனத்துவேச சிந்தனையை விதைப்பதற்காக இத்தகைய உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிப்பதை அமைச்சர் சம்பிக்க ரணவக்க உடன் நிறுத்தவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். கொழும்பு மாநகரத்தில் வாழும் தமிழ…

    • 6 replies
    • 877 views
  20. படையினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில் இன்று அரங்கேறுகிறது அழகு ராணிப் போட்டி - வெற்றிபெறுபவர்களுக்கு ஸ்கூட்டி பப் மோட்டார் சைக்கிள் [Thursday, 2013-04-11 08:13:53] கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு படையினரின் ஏற்பாட்டில் அழகுராணி போட்டியொன்று இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இது குறித்து மாவட்டத்திலுள்ள சமுக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட களியாட்ட நிகழ்வுகளுக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகம் தற்போது பெருமெடுப்பில் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இங்கு பல களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. இதில் மிக முக்கியமான நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சிவ…

    • 8 replies
    • 1k views
  21. கூட்டமைப்பின் அரசியல் விளையாட்டை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும்! - கோத்தபாய செவ்வி!! இலங்கை விவகாரம் தொடர்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிசேல் ஜே சிசன் தெரிவித்த கருத்துக்கள் பிரிவினைவாதத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது என சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிசேல் ஜே சிசன் அண்மையில் நிகழ்த்திய உரை குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச இச்செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'போர் முடிவுக்கு வந்த பின்னரான இலங்கையில் நிலைமைகளை அமெரிக்கத் த…

    • 2 replies
    • 632 views
  22. யாழ்ப்பாணம்: 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் பலரது கதி என்ன? என்று தெரியாமல் இருந்து வருகிறது. இலங்கை அரசும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை எனக் கூறி வருகிறது. ஆனால் பொதுமக்கள் மற்றும் போராளிகள் முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளும் தலைவர்களும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்திருக்கின்றனர். இதனால் இவர்கள் சரணடைந்ததை நேரில் பார்த்த பல நூறு சாட்சிகள் இருக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட இந்த சாட்சிகள் வீடு திரும்பிய நிலையில் இந்த உண்மைகளை தற்போது வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் போராளிகள் முன்னிலையில் சரணடைந்த விடுத…

  23. நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகப் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 31 வயதான பிரதீப் மூர்த்தி என்ற இலங்கையருக்கு 20 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 375000 ஸ்ரெலிங் பவுண்ட் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நன்கொடைகளை நிதிகளை கையாடல் செய்ததாகவும், அதற்கு போலிக் கணக்கு விபரங்களை காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இலங்கையர் சூதாட்டப் பழக்கமுடையவர் எனவும், இந்தப் பணத்தை சூதாட்டத்தில் ஈடுபடுத்தியிருக்கலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90686/…

  24. கொழும்பு நகரில் கெசினோக்களை நிர்மாணிக்கும் அரசின் திட்டம் கைவிடப்படவேண்டும். கெசினோ அவசியமானால் அதனை கச்சத்தீவில் நிர்மாணிக்கலாம் என தேசிய சங்க சம்மேளனம் அரசிற்கு ஆலோசனை கூறியுள்ளது. எத்தனோல் கலந்த மது அருந்துவதால் கண் பார்வை இல்லாமல் போய் கை கால்கள் பலவீனமுறும் அபாயம் உள்ளதாகவும் அச் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கெசினோக்களை கட்டுப்படுத்துவதாக கூறியே அதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவந்ததென அச்சம்மேளனத்தின் பொதுச் செயலாலர் தொம்பகமுவே சாரானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஆனால் அச் சட்டமூலம் கெசினோக்களை அதிகரிப்பதாகவே உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=3940

  25. பிரிவினைவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சீசன் கருத்து வெளியிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பினர் தங்களை நிலைநிறுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் கைபொம்மைகளாகவே செயற்பட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நோர்வேயுடனான சமாதான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.