ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
முஸ்லீம் இளைஞர்களை கண்காணிக்கும் புலனாய்வுப் பிரிவினர் ! கொழும்பு அரசாங்கத்தின் உதவியுடன் சிங்கள பௌத்த அமைப்புக்கள் முஸ்ஸிங்களின் உணவு தொடக்கம் அவர்களின் வழிபாடுவரைக்குமான அனைத்து நடவடிக்கையிலும் கட்டுப்பாடுகளையும், தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றனர். கொழும்பு அரசாங்கத்திற்கு எதிராக முஸ்ஸிம் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தக் கூடும் என்ற அச்சத்தில் மத ரீதியாகவும், முஸ்ஸிங்களின் கலாச்சார ரீதியாகவும் நெருக்கடிகளை ஏற்படுத்திவருகின்றனர். முஸ்ஸிம் அடிப்படைவாதம் ஏற்பட்டு தனிநாடு கோரும் நடவடிக்கையில் முஸ்ஸிங்களின் நடவடிக்யை இடம்பெறும் என்ற அச்சத்தில் கொழும்பு அரசாங்கம் உள்ளது. சிறீலங்காவிலுள்ள முஸ்ஸிம் இளைஞர்கள் ஆயுதக்கிளர்ச்சிக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவகின்ற…
-
- 1 reply
- 669 views
-
-
உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு புளொட் கண்டனம் உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு புளொட் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து புளொட் செய்திப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை வருமாறு, கிளிநொச்சி கரடிபோக்குச் சந்தியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் இன்று அதிகாலை (03.04.2013) இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமையையும், பத்திரிகை விநியோகப் பணிகளுக்காக சென்றிருந்த இரு பணியாளர்கள் மற்றும் உதயன் பத்திரிகை கிளை முகாமையாளர் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-யினராகிய (புளொட்) நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். உதயன் பத்திரிகையின் செய்திகளையும் கருத்துக்களையும் சகித்துக்கொள்ள முடியாத சக்தியொன்றே உதயனின் பணியை முடக்கும் நோக்குடனும்…
-
- 0 replies
- 507 views
-
-
இராணுவ மேஜர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு!- மேர்வின் சில்வாவின் மகன் விடுதலை Written by tharsan // April 3, 2013 // Comments Off கொழும்பு ஹில்டன் றெஸிடென்ஸ்ஸில் இராணுவ மேஜர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டுக்களில் இருந்து அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் திகதி இராணுவ மேஜர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மாலக சில்வா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோட்டே நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து க்கொள்ளப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தாக்குதலுக்குள்ளான இராணுவ மேஜர், தனது வ…
-
- 0 replies
- 369 views
-
-
சீன குழு யாழிற்கு விஜயம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன பிரதிப் பாதுகாப்புச் செயலர் செகுயு கியுக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். இன்று காலை பலாலியில் இருந்து உலங்கு வானூர்தி மூலம் 11.00 மணியளவில் துரையப்பா விளையாட்டு அரங்கில் வந்திறங்கிய குழுவினரை 512 வது படைப்பிரிவின் பிரிகேடியர் அஜித் பல்லேவல வரவேற்றார். வந்தடைந்த குழுவினர் யாழ் கோட்டைக்குச் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவருத்தி நடவடிக்கைகளை பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் அவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளனர். சீன இராஜத…
-
- 1 reply
- 551 views
-
-
அனுமதியின்றி வெளியில் சென்றவர்கள் பதவி விலகிச் சென்றவர்களாக கருதப்படுவர் April 3, 2013 04:59 pm கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று கடமைக்கு வந்து அனுமதி இன்றி வெளியில் சென்ற ஊழியர்கள் அனைவரும் பதவியில் இருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.adaderana.lk/tamil/news.php?nid=37242
-
- 0 replies
- 419 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை சிறிலங்கா ஏமாற்றியது அம்பலம் [ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 01:14 GMT ] [ தா.அருணாசலம் ] ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைகளைப் பயன்படுத்தி சீனாவில் தயாரிக்கப்பட்ட மிதிவண்டிகளை, மறு ஏற்றுமதி செய்த சிறிலங்கா உள்ளிட்ட நான்கு நாடுகளின் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிக வரியை விதிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சிறிலங்கா, துனிசியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நான்கு நாடுகளும், சீனாவில் தயாரிக்கப்பட்ட மிதிவண்டிகளை தமது நாட்டுச் சொந்தத் தயாரிப்பு என்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்தே, இந்த நான்கு நாடுகளுக்கும் சீனாவுக்கு விதிக்கப்படுவது போன்று 48.5 வீத …
-
- 1 reply
- 507 views
-
-
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா விடுதலை கொழும்பு ஹில்டன் றெஸிடென்ஸ்ஸில் இராணுவ மேஜர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டுக்களில் இருந்து அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி இராணுவ மேஜர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மாலக சில்வா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோட்டே நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து க்கொள்ளப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தாக்குதலுக்குள்ளான இராணுவ மேஜர், தனது வாக்குமூலத்தை மீளப்பெற்றிருந்ததுடன், தன்னை தாக்கியவர்களை அடையாளம் காட்ட முடியாதென…
-
- 0 replies
- 363 views
-
-
-
- 0 replies
- 573 views
-
-
வாகன சாரதி அனுமதிப்பத்திரமின்றி மது போதையில் வாகனத்தை செலுத்திய தேரருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் மேலதிக நீதவான் எதிரிமான என்பவரே இவ்வாறு நேற்று புதன்கிழமை தண்டனை விதித்துள்ளதுடன் 7500 ரூபா தண்டமும் விதித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் 30 ஆம் திகதி குறித்த தேரர் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய போது பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். குறித்;த தேரர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஏற்றுக்கொண்டாலும் அவருடைய தராதத்தை பார்க்கவில்லை என்றும் காவியுடையை கவனத்தில் கொண்டே ஆறு மாதகால சிறை தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்ததாக…
-
- 2 replies
- 505 views
-
-
கொழும்பு: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதைக் கண்டித்து தென்னிந்தியாவில் இருந்து வரும் சரக்குக் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். கொழும்பு துறைமுக வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதிஆகியோரைக் கண்டித்து விளம்பர தட்டிகளை துறைமுக ஊழியர்கள் வைத்துள்ளனர். மேலும் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் தென் இந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்காமல் புறக்கணிக்கப்போவதாகவும், துறைமுக தொழிலாளர் சங்க நிர்வாகி மகேஷ் சமரவிக்ரமா மிரட்டல் விடுத்து இருக்கின்றனர். ஆனால், தொழிலாளர்களின் இந்த மிரட்டல் அறிவிப்பு குறித்து கொழும்பு துறைமுக நிர்வாகத்திடம் இருந…
-
- 5 replies
- 730 views
-
-
அனுராதபுரம் மல்வத்துஓய டிக்சன் ஒழுங்கையில் நடத்தப்பட்டு வரும், இஸ்லாமிய மத பாடசாலையை மூட நடவடிக்கை எடுக்காது போனால், அதனை பலவந்தமாக அகற்றப் போவதாக பொதுபல சேனா அமைப்பு பிரசாரப்படுத்தியுள்ளதாக பொலிஸ் புலனாய்பு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அனுராதபுரம் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மஹேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பு அனுராதபுரத்திற்கு வந்து, குறித்த இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளை அகற்றினால், நகரத்தில் உள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்கள் இடையில் பதற்றமான நிலைமை ஏற்படும் எனவும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் குறித்த முஸ்லிம் அறநெறி பாடசாலை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி …
-
- 3 replies
- 591 views
-
-
புனிதவெள்ளி மற்றும் ஈஸ்டர் தினங்களை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் "கிறிஸ்துவின் பாடுகள் மரணம்" என்ற மேடைநாடகம் அரங்கேற்றப்பட்டது. சம்பிரதாயமாக அரங்கேற்றப்பட்ட இந்த மேடை நாடகத்தில் நடித்தவர் அங்கிருக்கும் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும், மீண்டும் தங்கள் உயிரை இழந்தாவது விடுதலையைப் பெறுவோம் என்பது குறித்தும் தத்ரூபமாக நடித்துள்ளார். உண்மையில் இதனை நாடகமாக மற்றும் பார்க்க முடியாது. ஆக்கிரமிக்கப்பட்ட மண்ணில் ராணுவத்தின் பிடியில் இருக்கும் போதும் கூட விடுதலை உணர்வு இன்னமும் நம் மக்களிடம் சிறிதும் குறையவில்லை என்பதையும் எதிர் காலங்களில் மீண்டும் போராட தயாராகவே உள்ளனர் என்பதையுமே இது உணர்த்துவதாக உள்ளது. மேடை நாடகத…
-
- 0 replies
- 652 views
-
-
குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசையே விசாரணை நடத்தக் கோருவது முரணானது! - அக்சன் பெய்ம் கருத்து!! பிரான்ஸ் தொண்டு நிறுவனமான அக்சன் பெய்ம் நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேரை சுட்டுப் படுகொலை செய்தவர்களை கண்டறிந்து, நீதியின் முன் நிறுத்த வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் அக்சன் பெய்ம் நிறுவனத்தின் மனிதாபிமான சட்ட ஆலோசகர் Pauline Chetcuti ரொய்ட்டஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'இப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியது முக்கியமானது. இலங்கையில் உண்மையான அமைதி, இனங்களுக்கு இடையில் நல்…
-
- 0 replies
- 424 views
-
-
/> தமிழீழ சுதந்திர சாசனத்தின் இணையம் :http://tamileelamfreedomcharter.org/ தரவிறக்கம் செய்யக்கூடியதான அறிமுகக் கையேடு :http://fr.calameo.com/read/000341502cda4a20894a7 கேள்விக் கொத்து Tamil : http://fr.calameo.com/read/000341502f4d19f614135 கேள்விக் கொத்து English : http://fr.calameo.com/read/0003415027e9bf8386a4b நன்றி தமிழீழ சுதந்திர சாசன பரப்புரைக் குழு ஊடக அமைச்சு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் http://tamil24news.com/news/?p=55915
-
- 0 replies
- 495 views
-
-
இந்தியா உடையாது ஒன்றாக இருப்பதே இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இருக்கின்ற பாதுகாப்பு அதைவிடுத்து இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என சாபமிட வேண்டாமெனஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் இந்தியாவை நோக்கி சாபம் போடுகிறார். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் தமிழகத்தை திட்டி தீர்க்கிறார்கள். போதாக்குறைக்கு கிரிக்கட் வீரர் குமார் சங்கக்காரவும் சின்ன ஒரு தமிழ்நாடு என்பது மிகப்பெரிய இந்தியா இல்லை என்று கிண்டல் செய்கிறார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் முட்டாள் தனமான சிங்கள பௌத்த தீவிரவாதம் மூலம் எட்டு…
-
- 5 replies
- 856 views
-
-
உங்கள் குழந்தைகளுக்கு தங்க மாலையா? சைனற் குப்பிகளா வேண்டும்? யாழில் விமல் ஜெனிவாவில் இருப்பவர்கள் தமிழ் பிள்ளைகளில் கழுத்துக்களில் மீண்டும் சைனற் குப்பிகளை அணிவிக்கவே விரும்புகின்றனர் என வீடமைப்பு மற்றும் பொறியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தின் புனர்நிர்மானப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகைறும் போதே அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். விமல் வீரவன்ஸ மேலும் கருத்து தெரிவிக்கையில், உங்கள் குழந்தைகளின் கழுத்துக்களில் தங்க மாலை அணிவதையா அல்லது சைனற் குப்பிகளை அணிவதையா விரும்புகின்றீர்கள் என தமிழ் மக்களிடம் நான் கேட்க விரும்புகின்றேன். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் மீண்டும் யுத்ததை விரும்புகிறன…
-
- 8 replies
- 874 views
-
-
-யொஹான் பெரேரா, தர்ஷன சஞ்ஜீவ புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள தனது ஜனநாயக கட்சி, தீச்சுடர் சின்னத்தின் கீழ் மட்டும் தான் தேர்தல்களில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார். தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைமைத்துவத்துடன் விரக்திகொண்ட பல முன்னணி அங்கத்தவர்கள் தனது கட்சியில் சேர்வது தொடர்பாக தன்னுடன் பேசி வருவதாக பொன்சேகா கூறினார். எதிர்க்கட்சியிலுள்ள முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தன்னுடன் சேர விரும்புவதாகவும் அவர் கூறினார். தனது கட்சியின் கொள்கைகளை மீறுபவர்கள் குறுகிய காலத்திலேயே அரசியலிலிருந்து நீங்கிவிடுவர் எனவும் இராணுவத்தில் தான் எவ்வாறு கட்டுப்பாட்டை பேணினாரோ அவ்வாறே கட்சிய…
-
- 3 replies
- 410 views
-
-
கிராமத்தில் திரியும் கோயில் மாடு மாதிரி சிங்களத்திற்கு ஆதரவாக திரிந்து கொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமியை தமிழகத்திலிருந்து அடித்து துரத்துவது தமிழர்களின் கடமை. அவரை நாடு கடத்த வேண்டும் என்று தமிழின உணர்வாளர்கள் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் பிரமுகரும் சுவாமியின் முன்னாள் நெருங்கிய நண்பருமான திருச்சி வேலுச்சாமி கூறியுள்ளார். நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி கேள்வி: ஐ.பி.எல்.போட்டிகளில் சிங்கள வீரர்களை அனுமதிக்க கூடாது என்கிற ஜெயலலிதா அரசை 356-வது பிரிவை பயன்படுத்தி கலைக்க வேண்டும் என்கிறாரே சுப்பிரமணிய சாமி? பதில்: சிங்களவர்களுக்கு வால் பிடிக்கும் வேலையை கச்சிதமாக செய்பவர் சுப்பிரமணிய சாமி. புலிகள்… புலிகள்… என்று சொல்லி 91-ல…
-
- 1 reply
- 829 views
-
-
-எம்.சஹாப்தீன் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு பி;ன்புலமாக இருந்து செயற்படுகின்ற உண்மையான சூத்திரதாரிகளை அடையாளங் காண்பதற்கு சுயாதீன ஆணைக்குழு ஒன்றினை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துக்கையில், "முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் திடீரென்று பூதாகாரமாக தோற்றம் பெற்று தற்போது திடீரென்று மறைந்து போகக் கூடியதொரு நிலை தென்படுகின்றது. இதனை ஒரு தீர்வாக எம்மால் பார்க்க முடியாது. இது …
-
- 0 replies
- 495 views
-
-
இதோ இந்தக் காணொளியில் முஸ்லீம்களின் கடை உடைக்கப்படும்போது சிங்கள போலீஸ்காரன் செய்வதை பார்க்க இந்த சிங்கள காணொளி உதவும். http://www.alaikal.com/news/?p=125726
-
- 4 replies
- 804 views
-
-
இந்தியன் பீரிமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராவண சக்தி அமைப்பினர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் நிசாந்த ரணதுங்கவுடன் பேச்சு நடத்த ஐந்து தேரர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 200 கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.பி.எல் தொடரில் பங்குபற்றவுள்ள வீரர்களுக்கு எதிராக சுலோகங்கள் எழுப்பப்பட்டன. "நிசாந்த ரணதுங்க ஆக்ரோசமாக இருந்தார். ஆனால் அவரை விட அதிக ஆக்ரோஷமாக இருப்போம். எங்களிடம் அதற்கு சிறந்த மருந்து உள்ளது. ஐ.பி.எல் தொடரில் விளையாடிவிட்டு நாடு திரும்பும் வீரர்கள் மீது முட்டை வீசுவோம்" என தே…
-
- 0 replies
- 650 views
-
-
திருச்சியில் சிங்கள அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய மாணவர்கள் ; பதற்றம் நிலவுகிறது.[படங்கள் ] ஈழவிடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் உள்ள நிகின் லங்கா அலுவலகத்தை இழுத்துப் பூட்டியதால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. திருச்சியில் இலங்கை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஈழத்திற்கான மாணவர் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த போது இந்த அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஒரு தகவல் பரவியது. போலீஸார் எச்சரிக்கை கொடுத்ததால் உடனடியாக இந்த நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு தாக்குதலுக்கு தப்பின. இந்த நிலையில் இன்று, கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள நிகின் லங்கா ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு …
-
- 0 replies
- 734 views
-
-
தென்னிந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற திரைப்படங்களை இலங்கையில் தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பரிசீலனையில் இலங்கை அரசின் உயர் மட்டத் தரப்பு ஈடுபட்டிருப்பதாக கொழும்புத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழக திரையுலகத்தினர் இலங்கை அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தமிழகத் திரைப்படங்களை தடை செய்யுமாறு தென்னிலங்கையினைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இக் கோரிக்கையை அடுத்து இலங்கை அரசின் உயரமட்டத்தினர் இது தொடர்பில் பரிசீலித்துவருவதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது, குறித்த தகவலில் தெரி…
-
- 2 replies
- 861 views
-
-
க்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட முஸ்லிம் தலைவர் ஒருவரை கைது செய்யுமாறு சிங்கள பௌத்த மத அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த முஸ்லிம் தலைவர், சிங்கள மக்களுக்கு எதிராக போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளரை கைது செய்ய வேண்டுமென தேசிய சங்கப் பேரவையின் தலைவர் ரஜவத்தே வப்பா தேரர் கோரியுள்ளார். மாளிகாவத்தை பிரதேசத்தில் கடும்போக்குடைய முஸ்லிம் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டதாக முஸ்லிம் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்…
-
- 1 reply
- 314 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என அங்கு கடமையாற்றிய அக்சன் பாம் நிறுவனத்தின் மனிதாபிமான சட்ட ஆலோசகர் போலின் செற்கியூற்றி வலியுறுத்தி கூறியுள்ளார். இலங்கையில் அரச இராணுவமே பற்பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசையே சொந்தமாக விசாரணை நடத்தும்படி கோருவது நகைப்பிற்குரியது. மூதூர் நடைபெற்ற படுகொலைகள் குறித்து இலங்கையின் மூன்று நீதி விசாரணைகளை நெருக்கமாக அவதானித்தோம். ஆனால் அரசியல் தலையீடுகள் மற்றும் தவறுகளால் விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுபறியாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போரின் போது தமது 17 பணியாளர்கள் …
-
- 0 replies
- 350 views
-