Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தந்தைப்பெரியாரும் நடிகவேளும் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு இந்நிலை வந்திருக்காது: நடிகர் இராதாரவி தந்தைப்பெரியாரும் நடிகவேள் எம்.ஆர்.இராதாவும் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு இந்நிலை வந்திருக்காது. தமிழக தமிழர்கள் இப்பொழுதுதான் விழித்துள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால் தமிழக தமிழர்கள் இன்னும் உறங்கவில்லை விழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை.. தமிழீழ விடுதலை அடையாமல் உறங்கமாட்டோம்..வெற்றி நிச்சயம் என்று திரைப்பட நடிகர் இராதா ரவி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு எடுக்கக்கோரி தமிழக வாழ் ஈழத்தமிழர்கள் சென்னையில் இன்று (22.03.2013) ஒரு நாள் பட்டினிப்போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் இராதா ரவி இவ்வா…

  2. தமிழர்களை ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்த கொலைபாதக சிறிலங்கா அரசாங்கம்மீது சீற்றங்கொண்டு தமிழகம் கிளர்ந்தெழுந்திருக்கும் இந்நிலையில் இந்தியாவில் கோலகலமாக நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சிறிலங்காவைச் சேர்ந்த 12 கிரிக்கற் வீரர்கள் பங்குபற்ற உள்ளனர். இதில் சென்னை அணியில் சிறிலங்கா பந்துவீச்சாளர் நுவன் குலசேகர பங்கேற்கிறார். இந்தியப் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கா உருகிய தயாநிதிமாறனின் குடும்பத்துக்குச் சொந்தமான சன் ரைசஸ் அணி தனது அணிக்கு கப்டனாக குமார் சங்கக்காரவை நியமித்துள்ளது. இவர் தவிர சிறிலங்காவின் சகல துறை ஆட்டக்காரர் திஸ்ஸர பெரேராவும் இந்த அணிக்கா விளையாட இருக்கிறார். தமிழின ஒழிப்பில் ஈடுபட்டுள்ள, சிங்கள அரச டைகளுடன் நெருக்கமானவர்கள்தான் சிறிலங்கா கிரிக்கட் அ…

  3. இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் - பழ.நெடுமாறன் கருணாநிதி தலைமையிலான திமுக ஜெனீவா தீர்மானத்தை முன்னிறுத்தியே, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய இலங்கை தொடர்பான தீர்மானம் 'உருக்குலைந்து போன, உருப்படாத தீர்மானம்' என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். அந்தத் தீர்மானத்தால் ஆகப்போவது எதுவுமில்லை என்றும் அவர் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு தான் எழுதிய கடிதங்களில், இலங்கையில் 'இனப்படுகொலை' நடந்திருப்பதை மூடிமறைக்கக்கூடாது என்றும் அதனை ஒப்புக்கொண்டு இலங்கை அரசு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தான் சுட்டிக்காட்டியதாக கருணாநிதி …

    • 4 replies
    • 1.1k views
  4. இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகள் வரும் 31ஆம் தேதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும்தமிழீழ விடுதலைக்கான மாணவ கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: 'எங்கள் கோரி்க்கைகள் எதுவுமே சாத்தியம் இல்லாதவை அல்ல. நிறைவேற்ற முடியாதவையும் அல்ல. இன அழிப்பு, போர்க் குற்றம், சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை ஆகிவற்றை கொண்டுவரும் முயற…

    • 0 replies
    • 460 views
  5. மதுரையில் நடந்த மாணவர் போராட்டத்தின்போது ஒரு முச்சக்கர வண்டிச் சாரதி அனைவரையும் கவர்ந்திழுத்தார். மிகத்தீவிரமாக தமிழ் ஈழத்தை ஆதரித்தும், இலங்கையைக் கண்டித்தும் கோஷம் எழுப்பிய அவர் பேசிய பேச்சுதான் அட்டகாசமானது. அவரது பெயர் நாகராஜ். பெரியார் பேருந்து நிலையத்திற்கு சவாரி சென்றவர். சென்ற இடத்தில் நடந்த தமிழ் ஈழ ஆதரவு போராட்டத்தைப் பார்த்து அதில் இணைந்து கொண்டார். சுமார் 5 மணி நேரம் போராட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் திரண்டிருந்த மாணவர்களிடம் தனது ஆட்டோ மீது ஏறியபடி பேசுகையில், தம்பிகளா இத்தனை வருஷமா மனசுக்குள்ள வச்சிக்கிட்டு குமுறிகிட்டு இருந்தேன்பா..... நீங்கல்லாம் போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தாம்ப்பா நிம்மதியா இருக்கு. என் மகன் காலேஜுல படிக்குற…

  6. உலகின் ஆறாவது செல்வாக்குமிக்க தலைவராக ஜனாதிபதி மஹிந்த! - டைம் சஞ்சிகையின் வாக்கெடுப்பில் கணிப்பு. [Friday, 2013-03-22 10:55:17] உலகிலுள்ள மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேரை உலகின் அதிக பிரபலம் பெற்று விளங்கும் டைம் சஞ்சிகையின் வாசகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆறாவது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், புத்தமைவாளர்கள், மதத்தலைவர்கள், சான்றோர் மற்றும் நீங்கள் விரும்பும் வீரமிக்கவர் போன்றவர்கள் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களாக விளங்குகிறார்கள். அவர்களில் முன்னணியில் உள்ள நூறு பேரை தெரிவு செய்யும் பொறுப்பை டைம் சஞ்சிகை உலகெங்கிலும் பரந்திருக்கும் தனது இலட்சக் கணக்கான வாசகர்களிடம் …

  7. சிறிலங்காவைச் சேர்ந்த இளையோர் குறிப்பாக பெரும்பான்மை சிங்கள இளையோர்கள் மத்தியில் இராணுவக் கலாசாரத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறு பிரித்தானிய ஊடகமான The Economist எழுதியுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. நாட்டிலுள்ள பாடசாலைகள் தமது சுதந்திரமான செயற்பாட்டை இழந்துவருவதாக சிறிலங்கா ஆசிரியர் சங்கத்தின் தலைவரான ஜோசப் ஸ்ராலின் கவலை தெரிவித்துள்ளார். கடந்த மாதம் National Cadet Corpsல் இடம்பெற்ற நேர்காணல்களில் பங்குபற்றுமாறு 4000 தலைமை ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவர்களில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரிகள் 45 நாள் பயிற்சியைப் பூர்த்தி செய்யவுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி…

  8. இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளதால், சிறிலங்காவில் உள்ள இந்தியப் பணியாளர்களை அவதானமாக இருக்கும்படி இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய அரசாங்கப் பணியாளர்களின் தொடர்பு விபரங்களை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகம் கடந்த சிலநாட்களாக சேகரித்து வருகிறது. சிறிலங்காவில் உள்ள இந்தியப் பணியாளர்கள் மீது பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று தாம் கவலை கொண்டுள்ளதாக இந்திய இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீரமானத்தை இந்தியா ஆதரித்ததை அடுத்தே இந்த அச்சம் எழுந்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் திட்டங்களை நிறைவேற்றும் பணிக்காக கணிசமான இந்தியப் பணியாளர்கள் சிறிலங்காவில் தங்கியி…

  9. 21.03.2013 அன்று இரண்டாம் கட்டமாக பிரித்தனியா தமிழ் மாணவர்களால் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்களக வளாகத்தில் நடாத்தப்பட்ட இன அழிப்பு மற்றும் தமிழர்களின் தீர்வு சம்மந்தமான விழிப்புனர்வுப் போராட்டம். தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழீழம் நோக்கிய புரட்சிப் போருக்கு ஆரவாகவும் அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் உலகமெங்கும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் பிரித்தானியா தமிழ் மாணவர்களால் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புனர்வுப் போராட்டமானது தற்போது வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்களகத்திலும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. மேலும் இப்போராட்டமானது எமது இந்த இக்கட்டான காலகட்டத்தின் ஒரு முக்கியமானதும் எமக்கு பலம் சேர்க்…

  10. ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கை வீரர்களுக்கு ஆபத்து உள்ளதென கண்டால், சென்னையில் விளையாடும் போது இலங்கை வீரர்களை சேர்க்கவேண்டாம் என முகவர்களுக்கு அறிவுறுத்த உள்ளதாகவும் அந்தச்சபை அறிவித்துள்ளது. தமிழ் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைப்பற்றி இந்திய கிரிக்கெட் சபையிடம் இலங்கை கிரிக்கெட்சபை கேட்டறிந்துக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் பிரதான நிறைவேற்று அதிகாரி அஜித் ஜயசேகர தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில், விளையாட்டு,வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சுக்களுக்கு இலங்கை கிரிக்கெட் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.…

  11. -சுமித்தி தங்கராசா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையை தாம் நிராகரிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த பிரேரணை பக்கச்சார்பானதாக இருக்கின்றது. இதில் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதுவொரு கண்துடைப்பாகும். ஆகையினால் இந்த தீர்மானத்தை தாம் முழுமையாக நிராகரிப்பதுடன் மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் உரிமை மீறல்களை தொடர்பில் வெளியுலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க…

  12. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை இலங்கைக்கு கிடைத்த வெற்றியாகும் என்று ஜனத்தா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சாமி தெரிவித்துள்ளார். அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா தெளிவான முடிவை எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிபந்தனையின்றி ஆதரித்து இருக்கவேண்டும். இல்லையேல் நிபந்தனையின்றி இந்த தீர்மானத்தை எதிர்த்து இருக்கவேண்டும். அப்படி செய்து இருந்தால், உலக நாடுகள் இந்தியாவை பாராட்டப்பட்டிருக்கும். இலங்கையில் மனித உரிமை மீறப்பட…

  13. இலங்கையை கண்டித்து தீக்குளித்த தமிழர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த பிரமுகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், இலங்கையை கண்டித்து சென்னையை அடுத்த நெற்குன்றத்தில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் நேற்றிரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்த இயக்கத்தை சேர்ந்த வாலிபர் விக்ரம், திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டப்படி உடலில் தீவைத்…

  14. ஜெனிவாத் தீர்மானத்தின் பின் - பழிவாங்கும் படலம் 3 22 மார்ச் 2013 – வலி மேற்கில் முச்சக்கர வண்டிச் சாரதிகளை படையினர் வஞ்சித்தனர் யாழ்ப்பாணத்தில் கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை ஐக்கியநாடுகள் சபைக்கு எதிராக தம்மால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட முடியாது என படையினர் தடுத்துள்ளனர். 'ஆர்ப்பாட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முதலே அறிவித்தலை விடுத்திருந்தும் அதற்கு நீங்கள் சமூகம் அளிக்கவில்லை என முச்சக்கர வண்டிச் சாரதிகளை மிரட்டிய படைப்புலனாய்வாரள்கள் உங்கள் வீட்டிலேயே இருந்து சேவையை தொடருங்கள்' எனப் பணித்துள்ளனர் இதனால் வலிகாமம் மேற்கு சங்கானை, சுழிபுரம், தொல்புரம் மற்றும் பனிப்புலம் உள்ளிட்ட பகுதிகளில் சேவையை தொடரும் …

  15. சிறிலங்கா அரசுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையிலே சமர்ப்பிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையில் காணப்படும் வலுவற்ற வாசகங்களை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்திலே குதித்துள்ள தமிழ் நாட்டு மாணவர்களுடன் இணைந்து அவுஸ்திரேலியா இளையோர்கள் 21.03.2013 வியாழக்கிழமை பி.ப 6.00 மணிக்கு Prince Alfred Park, Parramatta எனும் இடத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளார்கள். சுதந்திரமான தமிழீழத்தை அமைப்பதற்காக அடிப்படை உரிமையும் நீதியும் வேண்டிப் போராடும் தமிழ் நாட்டு மாணவருடன் நாமும் தோளோடு தோள் சேர்ந்துள்ளோம். என்பதை எமது உண்ணாவிரதப் போராட்டம் உணர்த்துவதாக இருக்கின்றது. சிறிலங்காவில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் வெறும் மனித உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும…

  16. ஐ நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா மற்றுமொரு இராஜதந்திரத் தோல்வியைச் சந்தித்துள்ளதோடு அனைத்துலக அரங்கில் சிறிலங்கா தனிமைப்படுத்தப்பட்டு வருவாதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக ஐ.நா மனித உரிமைச் சபையில் தொடர்சியான இராஜதந்திரச் செயற்பாடுகளில் நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பங்காற்றி வந்திருந்த நிலையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவினஇ தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொழுதே ஊடக அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா தொடர்பில் ஓர் சுதந்திரமான அனைத்துலக விசாரணையே உலகத் தமிழர்களின் எதிர்பார்பாகவுள்ள நிலையில் இன்றைய தீர்மானம் அது நோக்கிய இராஜதந்திரச் செயல்வழிப்பாதையில் முக்கியமானதொரு விடயமென கருத்து வெளியி…

    • 1 reply
    • 441 views
  17. 'நவநீதம்பிள்ளை ஒரு பூனை' கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! [Thursday, 2013-03-21 17:56:29] இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று வியாழக்கிழமை காலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி காலி வீதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் வரை சென்று நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டோர் "அமெரிக்காவின் தீர்மானங்கள் எமக்குத் தேவையில்லை", "நவநீதம்பிள்ளை ஒரு பூனை", "இந்தியாவின் றோவும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.யும் இதற்கு பின்னணி", "நாம் யாருக்கும் அடிபணிய மாட்டோம்" போன்ற கோஷங்களை எழு…

  18. இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் இந்திய இராணுவ சீருடையை அணிந்திருந்தனர் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாலச்சந்திரன் உடல் என்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இலங்கை வீரர் என்று சொல்லப்படும் நபர், இந்திய இராணுவத்தினர் அணியும் சீருடையில் உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் 12 வயது மகனான பாலச்சந்திரன் மரணம் குறித்து இறுதிக் கட்டப் போரின்போது தலைமைத் தளபதியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இந்தியாவிலிருந்து வெளியாகும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகையில், "பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்படும் முன்பு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படத்தில் இராணு வீரர் ஒருவ…

  19. By M.D.Lucias இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் உள்ள அனைத்து விடயங்களும் தவறானவை என்று இலங்கையின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான சிறப்புத் தூதுவரான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் இருக்கின்ற அனைவரும் சமவுரிமைகளை அனுபவிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம் முற்றிலும் தவறானதாகும் என்றார். http://www.virakesari.lk/article/local.php?vid=3596

    • 1 reply
    • 558 views
  20. மத்தலவுக்கு முதல் விமானத்தில் ஜனாதிபதி மஹிந்த வந்திறங்கினார் திங்கட்கிழமை, 18 மார்ச் 2013 11:04 இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட முதலாவது உத்தியோகபூர்வ விமானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்று முன்னர் வந்திறங்கினார். கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்றின் மூலம் ஜனாதிபதி மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60921-2013-03-18-05-34-59.html

    • 7 replies
    • 765 views
  21. இலங்கையை இரண்டாகப் பிரித்து வேறு அரசு ஒன்றை உருவாக்குவதன் நோக்கமாக ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையுடன் அமெரிக்கா தனது உறவை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அதன் ஒரு அங்கமாகவே இலங்கை தொடர்பில் பிரேரணை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19720:2013-03-21-15-59-49&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

    • 5 replies
    • 974 views
  22. சர்வதேச அரசியல் அரங்கில் இலங்கை கடந்த மூன்றரை ஆண்டுகளில் தனக்கான ஆதரவை பெருமளவில் இழந்துள்ளதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்கத் தீர்மானத்தின்போது, இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்தன. ஆனால் அந்த ஆதரவு இப்போது 13 நாடுகளாகக் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் தனக்கு இருந்த சர்வதேச ஆதரவை இலங்கை பெருமளவு இழந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசு அது நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் சர்வதேச ஆதரவை தக்கவைத்திருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ம…

    • 2 replies
    • 1.1k views
  23. தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் அமைந்துள்ள அமேரிக்கத் தூதரகத்திற்கு முன் நடைபெற்ற புரட்சிப் போராட்டம்.‏ தமிழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழீழத்திற்கான புரட்சிப் போராட்டத்திற்க்கு ஆதரவாக இன்று மாலை பிருத்தானியத் தமிழ் மாணவர்களால் இன்னுமோர் புரட்சிப்போர் முன்னெடுக்கப்பட்டது. இப்பொராட்டம் மாலை நான்கு மணியளவில் Grosvenor Square பகுதியில் அமைந்துள்ள அமேரிக்கத் தூதரகத்திற்கு முன்னிலையில் நடபெற்றது. இதில் பெரும்பாலான தமிழ் மக்களும் கலந்து கொண்டதுடன் "நாங்கள் தமிழக மணவர்களை ஆதரிக்கின்றோம், அமேரிக்காவே இன அளிப்பை ஆதரிக்காதே, உலக நாடுகளே LLRC அறிக்கையை நிராகரி மற்றும் தமிழர்களுக்கு தமிழீழம்தான் ஒரே தீர்வு" போன்ற வசனங்களையும் தாங்கியவண…

  24. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக இன்று இந்தியா ஐ.நா. மனித உரிமை ஆணை யத்தில் வாக்களித்தது. இதனை அடுத்து இலங்கையின் வடகிழக்கு திரிகோணமலையில் உள்ள பழமை யான 99 இந்தியன் ஆயில் சேமிப்பு கிடங்கின் பாதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட் டிருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. லங்கா ஐ.ஓ.சி. என்றழைக்கப்படும் இந்த இந்தியன் ஆயில் சேமிப்பு கிடங்குகளில், பயன்படுத்தப்படாமல் உள்ள ஆயில் கிடங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள இலங்கை திட்டமிட்டுள்ளதாக செய்தித்துறை அமைச்சர் ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94872

  25. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு தற்போது வள்ளுவர் கோட்டத்தில் http://www.facebook.com/tamilnaduhungerstrike

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.