ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
முஸ்லிம் மக்களுக்கு எதிரான குரோத செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சில பௌத்த பிக்குகள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக மஹரகமவில் நடைபெற்ற போராட்டத்தை தடுத்து நிறுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நாடடின் பல பகுதிகளில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். மஹரகம பிரதேசத்தில் தனியார் ஆடை விற்பனை நிலையமொன்றிற்கு எதிராக பௌத்த பிக்குகள் மேற்கொண்ட குரோதப் போராட்டத்தை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கைச் சார்ந்தோர் நடவடிக்கை எடுக்கத் தவறியுள…
-
- 5 replies
- 433 views
-
-
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கல் மற்றும் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டமை ஆகிய விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. ஐ.நா உயர்ஸ்தானிகர், இலங்கையின் உள்நாட்டு விடயம் தொடர்பில் தேவையில்லாத விமர்சனத்தை செய்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் செனவிரத்ன புள்ளே எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் புறவயத்தன்மை காணப்படவில்லை. இது பக்கச்சார்பானது. துவறான விடயங்களைக் கொண்டுள்ளது. பயன்படுத்திய மொழிநடையும் பொருத்தமற்றதாக உள்ளது எனவும் இதை முழுதாக நிராகரிப்பதாகவும் செ…
-
- 2 replies
- 404 views
-
-
இலங்கை நீதிமன்றத்தின் கட்டளையை மீறி தப்பிச்சென்ற ஈரானியக் கப்பலுக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கடற்படையினரிடமும் வெளிவிவகார அமைச்சிடமும் கூறியுள்ளதாக 'மேச்சன்ற் சிப்பிங்' அமைப்பின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாம் டிசெம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கையில் கடல் எல்லைக்குள் ஈரானியக் கப்பலான ஏ.வி.அமினாவை நீதிமன்றக் கட்டளை பெற்று தடுத்துவைத்தோம். அக்கப்பல் முன்னர் ஒரு தடவையும் தப்பிச்செல்ல முயன்றுள்ளதென பணிப்பாளர் நாயகம் செனவிரத்ன டெய்லிமிரருக்கு கூறியுள்ளார். பெற்ற கடனை திருப்பிச்செலுத்ததால் ஜேர்மனி நாட்டு டி.வி.பீ வங்கி இக்கப்பலுக்கு எதிராக ஒரு நீதிமன்றக் கட்டளையைப் பெற்றதைத் தொடர்ந்தே இக்கப்பல் தடுத்துவைக்கப்பட்டது. இக்கப்பல் எவ்வாறு தப்பிச்…
-
- 1 reply
- 422 views
-
-
பிறக்குமிட சிறப்புச் சுட்டியில் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கை திங்கட்கிழமை, 21 ஜனவரி 2013 13:38 2013ஆம் ஆண்டுக்கான பிறக்குமிட சிறப்புச் சுட்டியில் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது. நான்கு வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் இரண்டு மடங்காகிவிடும் எனும் பேச்சுக்களுக்கு மத்தியில் இலங்கை அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பிரதம நீதியரசரை அவசரமாக பதவி விலக்கியமை, அதிகரித்துவரும் குற்றச்செயல்கள், மக்கள் மீதான பணவீக்கம், உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் வரவுள்ள கஷ்டங்கள் என்பவற்றின் பின்புலத்தில் இந்த கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கணிப்பை 'தி எக்கனமிஸ்ட்' என்ற சஞ்சினை நடத்தியுள்ளது. 2030ஆம் ஆண்டு வரையான பொருளாதார எதிர்வு கூறல்களின் …
-
- 1 reply
- 394 views
-
-
பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம்செய்யவுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கே இவர் இலங்கைக்கு விஜயம் செய்கிறார். மனித உரிமை மீறல்கள், பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப் பிரேரணை போன்ற விவகாரங்களினால் இலங்கையில் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டைக் கொழும்பில் நடத்துவதற்கு அந்த உறுப்பு நாடுகள் சிலவற்றிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்க தூக்கி எறியப்பட்டமை போன்ற விவகாரங்களால் இந்த மாநாடு தொடர்பில் இலங்கைக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டுள…
-
- 1 reply
- 378 views
-
-
-ஜவீந்திரா நாட்டில் எப்பாகத்திலும் மொழி சம்பந்தமாக பிரச்சினைகள் வருமிடத்து 1956 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாட்டினைப் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான அமைப்பின் கீழ் இயங்கும் மொழிச்சங்க உறுப்பினர்களுக்கான அனுபவப் பகிர்வு கடந்த 17ஆம் 18ஆம் திகதிகளில் திருகோணமலை - கந்தளாய் இளைஞர் மன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில கலந்துகொண்டு விளக்கமளிக்கும் போதும் மாற்றுக் கொள்கைக்கான அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி லயனல் குருகே தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மொழிச்சங்க உறுப்பினர்களின் அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றது. இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபை தவிசாளர், மற்றும் மாற…
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கை அரசாங்கம், தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றாதிருப்பதை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை தொடர்பான இந்திய அரசாங்கத்தின் தலையிடாக் கொள்ளை அமைந்துவிட்டதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், இந்தியா, இலங்கை பற்றி தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இலங்கை தொடர்பான தனது கொள்கையை புதிய நிலைமைக்கேற்ப இந்தியா மாற்றியமைத்துக்கொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் சுரேஷ் எம்.பி மேலும் கூறியுள்ளதாவது, புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது இந்தியா இரகசியமாகவும் வெளிப்படையாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது. யுத்தம் முடிந்த பின், தமிழ் சமுதாயத்தின…
-
- 0 replies
- 289 views
-
-
கிருஸ்ணகுமார் வட, கிழக்கின் தோற்றத்தினை மாற்றியமைப்பதற்காக அரசாங்கம் பல கோணங்களில் பல விதங்களில் செயற்பட்டுவருகின்றன. இவை எமக்கு ஆபத்திலேயே முடியும். இதனை தொடர அனுமதிக்கமுடியாது. இந்த நிலைமை தொடருமாகவிருந்தால் நாங்கள் சாத்வீக போராட்டத்தை ஆரம்பிப்பதைத்தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், அவ்வாறு ஒரு போராட்டம் நடைபெறும் போது இளைஞர் யுவதிகள் பாரியளவில் அந்தப்போராட்டத்தில் பங்குகொள்ளவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் பட்டிருப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான சி.மு.இராசமாணிக்கத்தின் 100வது ஜனனதின…
-
- 0 replies
- 225 views
-
-
சித்தியடையாதவர்களுக்கு பட்டப்படிப்புக்கு வாய்ப்பு By General 2013-01-21 10:23:46 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடையாதவர்களுக்கும் பட்டப்படிப்பொன்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற, தரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், இவ்வாண்டு முதல் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகியவற்றில் சித்தியடையாதவர்களுக்கான விசேட பட்டப்படிப்பொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் குறித்த பரீட்சை பெறுபேறுகளில் கோட்டைவிட்டவர்களும் பட்டப்படி…
-
- 1 reply
- 650 views
-
-
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தின் இழப்பு தொடர்ந்தும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது 20 ஜனவரி 2013 ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தின் இழப்பானது தொடர்ந்தும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரிச் சலுகை இழக்கப்பட்டதன் காரணமாக தொடர்ந்தும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதுடன், ஆயிரக் கணக்கானவர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்து வருகின்றனர். ஜீ.எஸ்.பி சலுகைத் தி;ட்டத்தின் நலன்கள் பங்களாதேஷிற்கு வழங்கப்பட்டுள்ளதனால் இலங்கைக்கான நலன்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த ஜனவரி 2ம் திகதி இந்தச் சலுகைத் திட்டத்தின் மூலம் நலன் பெற்று வந்த இரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த சலுகைத் திட்டத்தி…
-
- 6 replies
- 579 views
-
-
நீதிமன்றங்களின் சுயாதிபத்தியத்துக்காக குரல் கொடுத்த சட்டத்தரணிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை கண்டித்து இன்று உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றது. கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கியது தவறு என குரல் எழுப்பிய ஐந்து சட்டத்தரணிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Pics By: J.Sujeewakumar http://www.virakesari.lk/article/local.php?vid=2642
-
- 0 replies
- 434 views
-
-
தமிழர்களின் உரிமைப் போராட்டம் ஓய்ந்து விடவில்லை. மாறாக அது இரத்தம் சிந்தாத வழியில், வன்முறைப் பாதையைத் தவிர்த்து, இன்னொரு வியூகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்னும் தெளிவாகச் சொன்னால் எமது போராட்டம் முன்னரைக் காட்டிலும் இப்போது பரவலடையத் தொடங்கி விட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில், தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.மு.இராசமாணிக்கத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ் மக்களை மாத்திரமில்லாது முஸ்லிம் மக்களையும் நேசித்தவர் அமரர் இ…
-
- 0 replies
- 358 views
-
-
சிறிலங்காவில் கடந்த பல பத்தாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சிறு குடும்பக் கொள்கையால் சிங்களவர்களின் சனத்தொகை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக, சப்ரகமுவ மாகாண முதல்வர் மகிபால ஹேரத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்க தாதிமார் சேவைகள் சங்கத்தின் நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “1980இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுகுடும்பக் கொள்கை, இனிமேல் செல்லுபடியாகாது. 1981ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்புடன் 2011ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பை ஒப்பிடும் போது, முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி 76.4 வீதமாக இருக்கிறது. ஆனால், சிங்களவர்களின் சனத்தொகை வளர்ச்சி 38.4 வீதமாகவும், தமிழர்களின் சனத்தொகை வளர்ச்சி 35.5 வீதமாகவுமே உள்ளது. அதிக கு…
-
- 0 replies
- 334 views
-
-
லண்டனைத் தளமாகக் கொண்ட பிரபல போன்ஹாம்ஸ் தனியார் நிறுவனத்தினால் ஏலத்தில் விடப்படுகின்ற இலங்கையின் அனுராதபுர-காலத்தைச் சேர்ந்த சந்திரவட்டக்கல்லை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இலங்கை தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தின் தலைமை இயக்குநர் கலாநிதி செனரத் திசாநாயக்க பிபிசி தமிழோசையிடம் கூறினார். 30 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு அதிக விலையில் சந்திரவட்டக்கல் ஏலத்துக்கு வருகிறது கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள் பழமையான இந்த சந்திரவட்டக்கல் பிரிட்டன் பணத்தில் 50 ஆயிரம் பவுண்டுகள் வரை (இலங்கைப் பெறுமதியில் சுமார் ஒரு கோடி ரூபா) பெறுமதியானது என்ற…
-
- 4 replies
- 1.3k views
-
-
பிரபாகரனின் கனவை நனவாக்கவே அமெரிக்காவிலிருந்து திரிசூலக்குழு! -குணதாச அமரசேகர [Monday, 2013-01-21 09:33:47] புலிகளின் தலைவர் பிரபாகரனின் கனவை நனவாக்கும் நோக்குடனேயே அமெரிக்கா தனது மூவரடங்கிய 'திரிசூலக் குழுவை' இலங்கைக்கு அனுப்புகிறது. இதனை ஜெனிவா இராஜதந்திரச் சமருக்கு அமெரிக்கா விடுக்கும் அறை கூவலாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மூவரடங்கிய இராஜதந்திரக் குழுவின் இலங்கைப் பயணம் குறித்து கருத்து வெளியிடும் போதே குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: அமெரிக்கா தற்போது நாளாந்தம் இலங்கை மீது அழுத்தங்களைப் பி…
-
- 1 reply
- 470 views
-
-
நவனீதம் பிள்ளை வரக்கூடாது; சிங்கள கட்சிகள் போர்க்கொடி திங்கட்கிழமை, ஜனவரி 21, 2013 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரான நவநீதம்பிள்ளையை இலங்கை வருவதற்கு அனுமதிக்கக் கூடாது என சிறிலங்கா அரச தலைமையிடம் பல்வேறு தரப்புகள் வலியுறுத்தியுள்ளதாக அரச சார்பு சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றுடனும் புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணிவரும் நவநீதன் பிள்ளையை சிறிலங்காவுக்குள் அனுமதிப்பது ஆபத்தான விடயம் என குறித்த தரப்புகள் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த இணையம் தெரிவித்துள்ளது. மார்ச் மாத மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அவர் இலங்கை வரவுள்ளனமையானது சிறிலங்கா அ…
-
- 1 reply
- 575 views
-
-
தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீடு பொதுமக்களின் பார்வைக்கு படையினரால் விடுவிப்பு! [sunday, 2013-01-20 21:00:17] கிளிநொச்சி விசுவமடுப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வசித்து வந்த வீடு பொதுமக்களின் பார்வைக்கு படைத்தரப்பினரால் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பெருமளவான பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை பெருமளவு மக்கள் பார்வையிட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://seithy.com/breifNews.php?newsID=74267&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 952 views
-
-
இலங்கையில் தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் அழிக்க நடைபெறும் முயற்சிகளை தடுத்து நிறுத்தக்கோரி தி.முக. தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ் மொழி, கலாச்சாரம், மதம் போன்றவற்றை அழிக்க, இலங்கை அரசு திட்டமிட்ட முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் கிராமங்களின் பெயர்களை மாற்றி சிங்கள பெயர்களை சூட்டுதல், மாவட்ட, நகர, கிராம எல்லைகளை மாற்றியமைத்தல், இந்து கோவில்களை இடித்தல் போன்ற வேலைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக அதில் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் ஒடு…
-
- 16 replies
- 695 views
-
-
ஷிராணிக்கு ஆதரவு; அமைச்சர் ரஜீவ விஜயசிங்க நீக்கம்? திங்கட்கிழமை, ஜனவரி 21, 2013 சிறிலங்கா அரச தரப்பு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ரஜீவ விஜயசிங்கவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஷிராணி பண்டாரநாயக்காவை பிரதம நீதியரசர் பதவியிலிந்து நீக்குவதற்கான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோது அது தொடர்பான வாக்கெடுப்பில் ரஜீவ விஜயசிங்க கலந்து கொள்ளவில்லை. இந்த வாக்கெடுப்பிலிருந்து தன்னைத் தவிர்த்துக் கொள்வதற்காக சபையிலிருந்து எழுந்த சென்ற ரஜீவ விஜயசிங்க, பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் நேரத்தைக் கடத்தியுள்ளார். என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham…
-
- 3 replies
- 774 views
-
-
ஷிராணிக்காக குரல் கொடுத்த சட்டத்தரணிகள் ஐவருக்கு மரண அச்சுறுத்தல்! — 20/01/2013 at 12:07 pm | no comments நீதிமன்றங்களின் சுயாதிபத்தியத்துக்காக குரல் கொடுத்த சட்டத்தரணிகளுக்கு அரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை கண்டித்து இன்று முதல் நாடு முழுவதும் கையெழுத்து வேட்டையொன்று ஆரம்பிக்கப்படுமென சட்டத்தரணிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கியது தவறு என குரல் எழுப்பிய ஐந்து சட்டத்தரணிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். http://tamilleader.com/2013/01/20/%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%…
-
- 0 replies
- 405 views
-
-
கூட்டமைப்பை தெரிவுக்குழுவில் இணைக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி! [sunday, 2013-01-20 19:49:23] நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை இந்தியாவின் அழுத்தத்துடன் அங்கத்துவம் வகிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இதனால் எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாம் ஒரு தீர்க்கமான முடிவினை அரசியலில் எடுக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு.இராசமாணிக்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்க…
-
- 1 reply
- 506 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு திட்டமிட்டவாறு நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் மாநாடு திட்டமிட்டவாறு நவம்பர் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது. எந்த தடைகள் வரினும் திட்டமிட்டவாறு நவம்பர் மாதம் நடைபெறும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு தொடர்பில் கனடா மட்டுமே கேள்வி எழுப்பியுள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். ஏனைய உறுப்பு நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பை மாத்தரமே வெளியிட்டுள்ளன. எனினும் சர்வதேச நாடுகள் கூறுவது போல பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கும் வெளிநாட்டு முதலிட்டா…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜினாமாச் செய்த பின்னர் முதற் தடவையாக அந்தப் பகுதிக்கு சர்ச்சைக்குரிய அமைச்சர் மேர்வின் சில்வா இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்தார். தனது ஆதரவாளர்களுடன் களனிக்கு விஜயம் செய்த அமைச்சர் மேர்வின், கொஹோல்வில மற்றும் ஹுணுப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு கூட்டங்களிலும் கலந்துகொண்டார். களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவளையின் கொலையினை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியை அமைச்சர் மேர்வின் சில்வா இராஜினாமச் செய்தமை குறிப்பிடத்தக்கது.(படங்கள்:குஷான் பத்திராஜ) http://tamil.dailymirror.lk/--main/57316-2013-01-20-11-45-10.html
-
- 2 replies
- 585 views
-
-
28.01.2013 திங்கள் மாலை 5மணிக்கு தஞ்சை - திருச்சி சாலையில் உள்ள சானூரப்பட்டி என்னும் கிராமத்தில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் பெயரில் மாளிகையும், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன், பாவலரேறு பெருஞ்சித்தனார், எஸ்.டி.எஸ்.சோமசுந்தரம் ஆகியோர்களின் நினைவாக வணிகவளாகங்களும், இல்லமும் திறப்புவிழா நடைபெற உள்ளது. இன் நிகழ்வின் திரு.வை.கோ, திரு.பழ .நெடுமாறன், திரு.இரா .நல்லகண்ணு, புதியபார்வை ம.நடராசன், திரு .பெ.மணியரசன், புலவர் புலமைப்பித்தன் இன்னும் பலர் இன் நிகழ்வில் கலந்துகொள்வர். இதே நாள் சானூரப்பட்டி கிராமத்தில் தழல் ஈகி முத்துக்குமார் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இன் நிகழ்விலும் மேற்சொன்ன தலைவர்களுடன் தோழர் கி .வெங்கட்ர…
-
- 24 replies
- 2.1k views
-
-
பாதாள உலக குழுக்களை முற்றாக ஒழிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சு விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுபதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பாதாள உலக குழு தொடர்பாக மக்கள் தொடர்ந்தும் தகவல்களை வழங்கினால், நாட்டுக்கு கேடாக இருக்கும் பாதாள உலக குழுக்களை அடக்குவது சிரமமான காரியமாக இருக்காது எனவும் கோத்தபாய கூறியுள்ளார். எனினும் நாட்டில் பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்களை கைதுசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த இது குறித்து தினமும் காவற்துறை நிலையங்களுக்கு …
-
- 3 replies
- 665 views
-