ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143427 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான இன்று யாழ்ப்பாணத்தில் பெருமளவான இராணுத்தினரும் புலனாய்வுத்துறையினரும் பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக யாழ். பல்கலைக்கழக சூழலில் நேற்று மாலை தொடக்கம் பெருமளவான புலனாய்வாளர்களின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. அத்துடன் பல்கலைக்கழக ஆனந்த குமாரசாமி பெண்கள் விடுதிக்கு முன்னால் 20 மேற்பட்ட புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு வீதியால் செல்பவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். அவ் வீதியால் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தும் வகையில், அவரை வழிமறித்து புலனாய்வாளர்கள் விசாரணை ந…
-
- 1 reply
- 662 views
-
-
அன்பான ஈழத்தின் உடன்பிறப்புக்களே சகோதர சகோதரிகளே ஈழத் தமிழர் எங்கிருந்தாலும் ஒன்றாக ஒருங்கிணைந்து உலகளாவிய ரீதியில் அனுசரிக்கும் ஓர் தேசிய தினமாக மாவீரர் நாள் வளர்ந்து விட்டது. அன்றைய தினத்தை ஓர் புனித நாளாகக் கணி;த்து முதலில் ஆண்டவனை வழிபடுவோம். அவனின்றி அணுவும் அசையாது. எம்மை ஈழத்தமிழராக அந்த இடத்தில் இனாமான கொடைகள் - மொழி கலை கலாச்சாரம் - கொடுத்து இருத்தியவர் அவரே. கடந்த ஆறு தசாப்தங்களாக அனுபவித்த சகலத்தையும் முழுமையாக அறிந்தவரும் அவரே. ஆகையினால் எமது தாகத்தையும் சோகத்தையும் எமது இன்றைய முயற்சிகளையும் அவன் பாதத்திலே வைப்போம். இத்தினத்தின் நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்கள் மனித பெலவீனத்தினால் சில பொறுப்பற்ற அல்லது சுயநல நோக்கங்களுக்காக இவற்றை ஒழுங்…
-
- 0 replies
- 278 views
-
-
தேசிய பிரச்சினைக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தினால் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கிலுள்ள தமிழர்களின் சுதந்திரத்துக்காக தன் உயிரைத் தியாகம் செய்ய தயங்கமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார். வடக்கு மக்கள் பலவிதமான போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று தெரிவித் தார். …
-
- 0 replies
- 287 views
-
-
[size=2][size=4](எஸ்.கே.பிரசாத்) கார்த்திகை விளக்கீட்டுக்காக சுட்டி விளக்குகள் விற்பனை செய்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலிப்பகுதியில் சுட்டிவிளக்குகளை விற்றுக்கொண்டிருந்த வர்த்தகர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புலனாய்வாளர்கள் என தங்களை அடையாளப்படுத்தி கொண்ட சிலரே அந்த வர்த்தகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு திருநெல்வேலிப்பகுதியில் சுட்டிவிளக்குகள் 2 ரூபா 50 சதம் முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஒரு வியாபாரி மட்டும் …
-
- 0 replies
- 296 views
-
-
திருகோணமலை மாவட்டத்தல் தமிழ் கிராமங்கள் தோறும் மாவீரர் தின அனுஸ்டானங்களை முன்னெடுக்க வேண்டாமென கோரும் அறிவிப்புக்களை இன்று முழுவதும் கடற்படையினர் ஒலிபரப்பு செய்துவருகின்றனர். [size=3][size=4]வாகனங்கள் மூலமும் அதே போன்று ஆலயங்களது ஒலிபெருக்கிகள் மூலமும் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுவருவதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. [/size] [size=4]குறிப்பாக அறிவிப்புக்களை ஒலிபரப்ப மறுத்த ஆலயமொன்றினது மதகுருவொருவர் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரொருவரிடம் பொதுமக்கள் தரப்பிலிருந்து முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவித்தன.[/size] [size=4]ஏற்கனவே கடந்த 25ம் திகதி முதல் 28ம் திகதி வரை ப…
-
- 0 replies
- 285 views
-
-
மானுடத்தின் மூத்த இனம், நாகரீகத்திற்கும், தொன்மைக்கும் சான்றாக உலக வரலாற்றில் அங்கீகரிக்கப்பட்ட பெருமைக்குரிய இனமான தமிழினம், காலனி ஆதிக்கத்தினாலும், அயலவர் ஊடுறுவலினாலும் தனது தனித்தன்மையையும், தன்னாட்சியையும் இழந்து அடிமையுற்ற நிலையில், நம்மினம் வாழ்ந்த நிலப்பகுதிகள் அரசியல் ரீதியாக விடுதலைப் பெற்றும் அடிமை வாழ்வாகவே தொடர்ந்த நிலையில்தான், இலங்கையில் மேலாதிக்கம் பெற்ற சிங்கள பெளத்த இனவாத அரசின் கொடூரமான அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டு இரண்டாந்தரக் குடி நிலைக்கு வீழ்த்தப்பட்டது. நம் இனத்திற்கு நேர்ந்த அந்த இழிநிலையை மாற்ற, சிங்களர்களுக்கு இணையான அரசியல் விடுதலையைப் பெற ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட நிலையில்தான், நம் மண்ணைக…
-
- 0 replies
- 348 views
-
-
[size=3][size=4]எமது தேசத்து புதல்வர்களின் நினைவுகளை சுமந்த புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்நாள் சிறப்புஒலிபரப்புகளை தாயகம், தமிழகம்,மற்றும் அனைத்து நாடுகளிலிலும் கேட்கும் வண்ணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.[/size] [size=4]எமது சிறப்பு ஒலிபரப்புக்களை தாயக நேரம் காலை5.30 தொடக்கம் இரவு 22மணி வரை கேட்கலாம்.[/size] [size=4]தமிழீழம் நோக்கிய எமது சிற்றலை ஒலிபரப்புக்கள் 27.11.2012 அன்று மாலை 5மணி தொடக்கம் 8மணி வரை 15650Mhz என்ற அலைவரிசையில் கேட்க முடியும்.[/size] [size=4]அதே நேரம் எமது இணையத்தளம் ஊடாக 24மணி நேரமும் எமது ஒலிபரப்புக்கள் ஒலித்தவண்ணமுள்ளன. www.pulikalinkural.com[/size] [size=4]அனைத்து செல்லிடப்பேசிகள் ஊடாக கேட்க விரும்புவோர்: www.mobilevot.com[/size] [size=…
-
- 2 replies
- 2.1k views
-
-
தமிழீழத்தின் விடி வெள்ளியாக வந்துதித்த எமது தேசத்தின் தலைமகனுக்கு இன்று பிறந்த நாள், தமிழ் உலகின் முதல் மொழியாக இருந்தாலும், தமிழனையும், தமிழனின் வீரத்தையும் உலகுக்கு அறிமுகப்படுத்திய முதல்வனுக்கு இன்று பிறந்தநாள், அடுப்படிக்குள் அடைபட்டுக் கிடந்த மகளிர்க்கு அடங்காப்பற்றை அறிய வைத்த விடுதலையின் நாயகனுக்கு இன்று பிறந்த நாள், முப்படை கண்ட முதல் தமிழனுக்கு இன்று பிறந்த நாள், உலக நாட்டு இராணுவத்திற்கு பாடம் படிப்பித்த தமிழனத்தின் தளபதிக்கு இன்று பிறந்த நாள்
-
- 8 replies
- 805 views
-
-
பிரித்தானியாவில் நா.க.தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வு - பொதுமக்களுக்கும் அழைப்பு ! - நிகழ்வுபூர்வமான பாராளுமன்ற அமர்வு - முன்நிகழ்வாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் மகாநாடு - பொதுமக்களுக்கும் அழைப்பு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில், சுதந்திர தமிழீழம் எனும் மாவீரர்களது கனவினை வென்றெடுக்க, சனநாயக வடிவில் தோற்றம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில் இடம்பெறுகின்றது. எதிர்வரும் நவம்பர் 29-30 டிசம்பர் 1 மற்றும் 2ம் நாட்களில் இது இடம்பெறுகின்றது. நவ 29ம் நாள் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வில், பொதுமக்கள…
-
- 0 replies
- 298 views
-
-
[size=4]கனடா “வாழவைப்போம்” அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில், விசேடமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 58 குடும்பங்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.வேளமாலிகிதன் தலைமையில் “அறிவகம்” மண்டபத்தில் நடைபெற்ற இந்த வாழ்வாதார நிதியுதவி வழங்கும் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், முன்னாள் யாழ்.மாநகர ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவின் செயலாளர் எஸ்.பிருந்தாபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 58 குடும்பங்களுக்கும் தலா 3ஆயிரம் ரூபா வீதம் வாழ்வாதார நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்…
-
- 0 replies
- 344 views
-
-
[size=4]சிறிலங்கா அரசு நிகழ்த்திய வன்னிப்போரின் கொடூரத்தை மறைக்கும் போரிடச்சுற்றுலா[/size] [size=4][ திங்கட்கிழமை, 26 நவம்பர் 2012, 11:46 GMT ] [ நித்தியபாரதி ][/size] [size=4]நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றில் உள்ள இருட்டான அறை ஒன்றில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஒருவரது குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. குழந்தைகளைத் தூக்கி வைத்திருந்த தாய்மார் உள்ளடங்கலாக 50 வரையான பயணிகள் அந்தக் குழுவில் அடங்கியிருந்தனர். இதனைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த இளையோர்கள் தமது செல்லிடத் தொலைபேசிகளில் ஒளிப்படங்களை எடுத்தனர். முதியோர்கள் அங்கிருந்த சுவர்களில் சாய்ந்த வண்ணம் நின்றிருந்தனர். இவர்கள் தமது வழிகாட்டி கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் மிகக் கவனமாக செவி…
-
- 0 replies
- 257 views
-
-
[size=3][size=4]இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தமிழீழ தேசியத்தலைவர் மே.த.கு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை ஒட்டிய வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்படுகின்றது. தேசியத்தலைவர் அவர்களை வாழ்த்தியும் தலைவரைப்பற்றிய வீர வசனத்துடனும் இந்த சுவரொட்டிகள் காணப்படுகின்றது. இந்த சுவரொட்டிகளில் “எமக்கு தன்மானம் பெற்று தந்த தானைத்தலைவா நீ நீடுழி வாழ்க“, “தமிழரின் தங்கத்தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” போன்ற வாசகங்கள் காணப்படுகின்றது. தலைவர் இராணுவ சீருடையுடனும் கம்பீரமான தோற்றத்துடனும் மிடுக்காக சுவரொட்டிகளில் காட்சியளிக்கின்றார். [/size][/size] [size=3][size=4]நேற்று மாவீரர் வாரத்தினை கொண்டாடும் முகமாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் சிங்கள கைக்கூலிகளாலும…
-
- 0 replies
- 385 views
-
-
எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக சிறிலங்கா அரசு கடந்த 3 வருடங்களாக கூறி வருகின்ற போதும் நாம் தொடர்ந்து சர்வதேசத்திற்கான ஒரு தெளிவான பதிலை வழங்கி வருகின்றோம். இதன் அர்த்தம் எமது நீண்ட விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது அன்று. அன்பான எமது உறவுகளே, இலங்கை பேரினவாத அரசு எம்முடன் தனித்து நின்று யுத்தம் புரிந்து இருந்தால் நாம் முழு தமிழீழத்தையும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் சம பல நிலையில் இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இலங்கை பேரினவாத அரசு பல உலக நாடுகளின் துணை கொண்டு எமது விடுதலைப் போரை இவ்வாறான இன்றைய சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது. இருந்தும் எமது மக்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத…
-
- 2 replies
- 496 views
-
-
யாழ் பல்கலை வளாகத்தில் உள்ள பல இடங்களில் நேற்று மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. பல்கலை வளாகத்தில் கலைப்பீடம், விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ பீடங்களிலும்,மாணவர் ஒன்று கூடும் இடம், சிற்றுண்டிச்சாலை, அறிவித்தல் பலகைகள், என பல இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.அந்த சுவரொட்டிகளில் பின்வருமாறு வாசகங்கள் காணப்படுகின்றது. "போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியங்கள் மாறப்போவதில்லை", "எத்தனை தடைகள் வரினும் எமது மாவீரரின் இலட்சியத்தை மீட்டெடுப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்", "விழ விழ எழுவோம் புலிகளின் வீரத்திற்கு எல்லை உண்டா?" "அண்ணனின் வழியில் நின்று தமிழீழத்தை நாம் மீட்போம்" போன்…
-
- 0 replies
- 443 views
-
-
தமிழீழம்: தமிழ் ஈழப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்த தகவல்களை இலங்கைப் படையினருக்கு காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று தமிழீழ எல்லாளன் படை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்: எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு கடந்த 3 வருடங்களாக கூறி வருகின்ற போதும் நாம் தொடர்ந்து சர்வதேசத்திற்கான ஒரு தெளிவான பதிலை வழங்கி வருகின்றோம். இதன் அர்த்தம் எமது நீண்ட விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது அன்று. அன்பான எமது உறவுகளே, இலங்கை பேரினவாத அரசு எம்முடன் தனித்து நின்று யுத்தம் புரிந்திருந்த காலத்தில் நாம் முழு தமிழீழத்தையும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்…
-
- 2 replies
- 935 views
-
-
[size=2][size=4]'இந்திய அதிகாரிகள் என்னிடம் இருமுறை விசாரணைகளை நடத்தினர். முதல்முறை இந்திய புலனாய்வு நிறுவன (சீ.பீ.ஐ) அதிகாரிகளும் இரண்டாவது முறை சீ.பீ.ஐ.யை சேராத வேறு பலரும் (அவர்கள் றோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளாகவும் இருக்கலாம்) இருந்தனர். அவர்களுடனான சந்திப்பு கலந்துரையாடலாக மட்டுமே இருந்தது. நாம் பல்வேறு விடயங்கள் பற்றி பேசினோம். இதன்போது நான் எனது கருத்துக்களை வெளிப்படையாக கூறினேன். அவர்கள் எனது நேர்மையான அபிப்பிராயங்களால் ஆச்சரியமடைந்தனர். அவர்கள் அவற்றை மதித்தனர். எனது கருத்துக்களையும் தகவல்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்டது போலவே தெரிந்தது' என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரான குமரன் பத்மநாதன் (கே.பி) தெரிவித்தா…
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
நேற்று முந்தினம் யாழ் பல்கலைகழகத்தில் இடம் பெற்ற முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. சினிமா பாடல்களும் இடம்பெற்றது. இருந்தபோதும் மாணவர்கள் சினிமா பாடல்களுக்கு மெதுவாக ஆடியிருந்தார்கள். பின்னர் “இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள் “என்ற சாந்தன் பாடிய பாடலையும் “எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓயவில்லை விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை “ என்ற செல்லப்பா பாடிய பாடலையும் ஒலிக்க செய்த போது மாணவர்கள் அனைவரும் துள்ளி எழுந்து தமது உள்ளத்தில், உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர். உண்மையிலே யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்தபோதும், பல்கலைக்கழக மாணவர்கள் தமது உணர்வுகளை மறக்கவில்லை என்பதனை ஒருமுறை…
-
- 8 replies
- 993 views
-
-
காலச் சிறையெடுப்பின் கட்டணைக்குள் அடங்காது முப்பத்தாறு ஆண்டுகளாய் முடிவற்று ஓடிய - தமிழினத்தின் வரலாற்றுப் பெருநதியே! வீரத் திருநிதியே! உனக்கு எனது நன்றிகளும் வீரவணக்கங்களும்!
-
- 8 replies
- 4.1k views
-
-
[size=4]தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுக்கு முன்பதாக இந்த வருட தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவே கூட்டமைப்புடன் அமெரிக்கா ஆராயவுள்ளது. 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள அடுத்த அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை இலங்கை பற்றி ஓர் அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்த வருட முற்பகுதியில் அமெரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொள்ளும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்…
-
- 1 reply
- 784 views
-
-
[size=4]இன்று புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 58 ஆவது பிறந்ததினமாகும். இதனை முன்னிட்டும் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் நாளை முன்னிட்டும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் படையினரின் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதையடுத்து அங்கு படையினரின் பிரசன்னம் அதிகரித்துள்ளது. அத்துடன் வீதியில் பயணிப்போரும் சோதனையிடப்பட்டனர். யாழ். பல்கலைகக்கழத்திலும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்திக் கூறியும், மாவீரர்களை நினைவு கூர்ந்து நேற்று "தமிழீழ இளையோர் அமைப்பு' என்ற பெயரில்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.[/size] …
-
- 0 replies
- 746 views
-
-
இலங்கை இறுதிப் போர்: பிப்ரவரி 2009ல் மலேசியாவில் நடந்தது என்ன?: கேபி (பகுதி1) Published: Saturday, November 24, 2012, 14:39 [iST] கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் நார்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்திருக்காவிட்டால் பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்கள் என்று புலிகளின் சர்வதேச தொடர்பாளர் கேபி என்ற குமரன் பத்மநாபா விவரித்திருக்கிறார். இலங்கையில் வெளியாகும் டெய்லி மிர்ரர் நாளேட்டுக்காக அதன் செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எடுத்த கேபியின் பேட்டி: கேள்வி: பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்திருந்த எரிக் சொல்ஹெய்ம், போரின் இறுதியில் ஐநா உதவியுடனான யுத்த நிறுத்தத்துக்கு முயற்சியை மேற்கொண்டதாக கூறிய…
-
- 47 replies
- 2.8k views
-
-
[size=5]ஐ.நா நிபுணர்குழு அறிக்கைக்கு ஏற்பட்ட கதி உள்ளக அறிக்கைக்கும் ஏற்படுமா?[/size] முத்துக்குமார் வருமா? வராதா? என்ற சந்தேகத்துடன் இருந்த ஐ.நா உள்ளக அறிக்கை வெளிவந்துவிட்டது. அதில் 29 பக்கங்கள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டாலும் புலம்பெயர் நாடுகளில் அதுவும் கசிந்துள்ளது. வெள்ளைக்கொடி விவகாரத்தின் சூத்திரத்தாரி விஜய் நம்பியார் பற்றிய தகவல்கள் வேண்டுமென்று இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. போரில் இந்தியாவின் பங்கினை மறைப்பதற்கான முயற்சியாக இது இருக்கலாம். போர்க்காலத்தில் ஐ.நா தனது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிவிட்டது. குறிப்பாக செயலகத்தின் செயற்பாட்டு முகவர்கள், இலங்கையில் செயற்பட்ட ஐ.நா உறுப்பினர்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா மனித உரிமைக் கவுன்சில்…
-
- 1 reply
- 423 views
-
-
[size=4]மாகாணசபை முறைமையைக் கொண்டுவருவதற்காக இந்திய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும்போது பூனையைப் போன்று இருந்த விமல் வீரவன்ச, இன்று ஒரு வீரரைப்போல் மாகாணசபை வேண்டாம் என்று கூச்சலிடுவது நகைச்சுவையாக உள்ளது என்று ஆளுங்கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் உதித் அநுராத தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியைக் காட்டிக்கொடுத்துவிட்டு புதிய கட்சியொன்றை ஆரம்பித்துக்கொண்ட விமல் வீரவன்ச, ஜனாதிபதியின் ஆசிர்வாதத்தில் அமைச்சுப் பொறுப்பொன்றைப் பெற்றுக்கொண்டுவிட்டு இப்போது மாகாணசபை வேண்டாம் என்று கூறுவது வெட்கமற்ற தனத்தைக் காண்பிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்புள்ளை, கலோகஹஎல பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாகாணசபை …
-
- 2 replies
- 682 views
-
-
[size=4]நாடாளுமன்ற உணவகத்தில் சமைக்கப்படும் கறிகளில் ஆசனிக் அமிலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமைக்கப்பட்ட கறிகளில் மட்டுமின்றி காய்கறிகளிலும் ஆசனிக் அமிலம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உறுப்பினர்களுக்கான உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளில் கொஹில கிழங்கு கறி சிவப்பாக இருந்தமையால் அதில் ஆசனிக் அமிலம் கலந்திருக்கலாம் என செய்திகள் வெளியானதையடுத்து அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக சபாநாயகர் குழுவொன்றை நியமித்தார். அந்த குழுவே நாடாளுமன்ற உணவகத்திற்கு கொண்டுவரப்படும் மரக்கறிகளில் ஆசனிக் அமிலம் இருப்பதாகவும் கூடுதலான பசளைகள் பயன்படுத்தப்பட்ட மரக்கறிகளே பயன்படுத்தப்படுவதாகவும் கண்டறிந்துள்ளது. இந்த குழுவின்…
-
- 0 replies
- 421 views
-
-
அங்கவீனமடைந்த முன்னாள் போராளி புலிப் போராளிக்கும் பெண் போராளி ஒருவருக்கும் திருமணம் : 24 நவம்பர் 2012 அங்கவீனமடைந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவருக்கும், முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுந்திரலிங்கம் சுதர்ஷன் மற்றும் முல்லைத்தீவு முந்தையன்கட்டு பிரதேசத்தை சேர்ந்த சிற்றப்பலம் பிரியதர்ஷனி ஆகியோர் நேற்று இவ்வாறு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த திருமண வைபவத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர …
-
- 15 replies
- 972 views
-