ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
போர்க்குற்றம்சாட்டப்பட்ட சவீந்திர சில்வாவை பிரதி தூதுவராக ஏற்குமா தென்னாபிரிக்கா? சிறீலங்கா | ADMIN | NOVEMBER 6, 2012 AT 22:33 சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் தென்னாபிரிக்கா, போர்க்குற்றம்சாட்டப்படும் ஒருவரைத் பிரதித் தூதுவராக ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்கு வகித்தவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா. இந்தப் போரில் பொதுமக்களின் இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குத…
-
- 2 replies
- 514 views
-
-
எம்.வீ. சன் சீ கப்பலின் மாலுமியை பிணையில் விடுதலை செய்ய உள்ளதாக கனடிய நீதிமன்று அறிவித்துள்ளனர். வன்கூவரின் பிரிட்டிஷ் கொலம்பிய நீதிமன்றம் குறித்த கப்பல் மாலுமியை பிணையில் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. 2010ம் ஆண்டில் சன் சீ கப்பல் மூலம் குறித்த மாலுமி அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பலில் 492 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்திருந்தனர். லெஸ்லி ஜனா இமானுவல் என்வரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட ஆறு பேரில், ஜனா இமானுவல் மூன்றாவதாக பிணையில் விடுதலை செய்யப்படவுள்ளார். ஜனா இமானுவெல் 45000 டொலர்கள் பிணையில் விடுதலை செய்யப்படவுள்ளார். ஏன…
-
- 2 replies
- 459 views
-
-
[size=3]இலங்கையின் தலைமை நீதிபதிக்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணையை எதிர்க்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தது.[/size] [11/6/2012 ] [cmr news bulletin ] [size=2]இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக அரசாங்கம் சமர்ப்பித்த அரசியல் குற்ற பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள 14 குற்றச்சாட்டுக்களும் ஆதரமற்றவையென்பதால், அதனை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்ப்பதென எதிர்க்கட்சிகளான ஐக்கியதேசிய கட்சியும் ஜே.வி.பியும் தீர்மானித்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் செயலாள…
-
- 0 replies
- 431 views
-
-
[size=4]காணாமல் போதல் பற்றிய ஐ.நாவின் செயற்குழுவை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறு ஐ.நா. செயலாளர் நாயகத்திடமும் அது தொடர்பில் ஆவனம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் காணாமல் போனமை தொடர்பான இலங்கை விசாரணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடத்தல்களில் இருந்து சகலரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் இலங்கை கையொப்பமிட வேண்டுமெனவும் இலங்கையில் இடம்பெற்ற காணாமல் போன சம்பவங்களை ஆராய ஒரு சுதந்திரமான ஆணைக்குழுவை அமைக்குமாறு கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செய்துள்ளன அதனை பூரணமாக செயற்படுத்த வேண்டுமெனவும் இந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. காணாமல் போனமை தொடர்பான விசாரணைக்குழுவின் செயலாளர் எஸ்.மகேந்திரன் மற்றும் காணாமல்…
-
- 0 replies
- 580 views
-
-
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் செயற்பட்ட இந்தியா, அபாயப் பொறியிலிருந்து கொழும்பைக் காப்பாற்றி இறுதிநொடியில் அந்தர்பல்டி அடித்தது. அதேசமயம் இலங்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்ளும் நாடுகள் குறித்து அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடந்தபோது அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த இந்தியா இலங்கையில் 13 ஆவது அரசமைப்புத் திருத்த அமுலாக்கம், வடக்கு, கிழக்கின் இராணுவ முகாம்கள் அகற்றல் மற்றும் படைக்கு…
-
- 12 replies
- 1.5k views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் வன்னியி;ல் சுமார் ஏழு இளைஞர்கள் ஓரே சந்தர்ப்பத்தில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பை அண்டிய பகுதியொன்றில் அவர்கள் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஒன்று கூடியிருந்த இடமொன்றில் வைத்து படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடித்து செல்லப்பட்டதாக அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன. அச்சங்காரணமாக அவர்கள் பிடித்து செல்லப்பட்டமை தொடர்பாக குடும்பத்தவர்கள் புகார் எதனையும் தெரிவித்திருக்கவில்லை. எனினும் அவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்…
-
- 3 replies
- 532 views
-
-
அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்பு சனிக்கிழமை, 03 நவம்பர் 2012 10:27 0 COMMENTS தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி காணாமல் போனதாக பொலிஸில் முறையிடப்பட்ட சின்னத்துரை இந்திரேஸ்வரன் (53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு - தமிழ்மிரருக்கு தெரிவித்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நானுஓயா, பங்களாவத்தையில் 111ஆம் இலக்க மைல்கல்லுக்கு அருகில் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது. அச்சடலம் அடையாளம் காணப்படாமல் இருந்த நிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மனைவியினால் அடையாளம் காட்டப்பட்டது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க…
-
- 10 replies
- 1.4k views
-
-
ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள வெற்று உறுதிமொழிகளை ஐநாவின் உறுப்பு நாடுகள் நம்புவதை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் பேரவையில் காட்டியுள்ள பல விடயங்களுக்கும் உண்மையில் இலங்கையில் நிலவும் களநிலைமைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான நிபுணர் யொலாண்டா ஃபொஸ்டர் சுட்டிக்காட்டினார். திருகோணமலையில் நடந்த ஐந்து மாணவர்களின் படுகொலைகள், ஏசிஎஃப் நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டர்கள் மூதூரில் கொல்லப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நீதி கி…
-
- 3 replies
- 403 views
-
-
அனுமதியின்றி வெளிநாடு செல்லும் அமைச்சர்களது பதவி ரத்து செய்யப்படும்: மஹிந்த எச்சரிக்கை! [Tuesday, 2012-11-06 08:24:22] அனுமதியின்றி வெளிநாடு சென்றால் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் அல்லது வரவு செலவுத் திட்ட விவாதங்களில் பங்கேற்காத ஆளும் கட்சி உறுப்பினர்கள் பணியிலிருந்து நீங்கியவர்களாக கருதப்படுவர். அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களின் போதும், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும் சில அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து …
-
- 2 replies
- 366 views
-
-
[size=4][/size] [size=4]By Priyarasa 2012-11-06 11:36:53[/size] [size=4]ஆனைக்கோட்டை புளியங்கிணற்றடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்த சுவாமி வாகனங்கள் இரண்டு திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறையிடப்பட்டுள்ளது. இந்த வாகனகள் ஆலய வாகன சாலையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் இதனை ஆலயத்தினுள் நுழைந்த திருடர்கள் மிகவும் நூதனமான முறையில் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆலய வாகன சாலையில் வைக்கப்பட்டு இருந்த குதிரை வாகனம் மற்றும் இடப வாகனம் என்பனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. இதுதொடர்பில் மானிப்பாய் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.[/size] [size=4]http://www.virakesar...al.php?vid=1484[/size]
-
- 2 replies
- 945 views
-
-
சிறிலங்காவில் பொறுப்புக்கூறும் விவகாரங்களில் இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார். “காணாமற்போதல்கள் உள்ளிட்ட விவகாரங்கள், குறிப்பாக ஊடகவிலாளர்கள் கட்டாயமாக காணாமற்போதல்கள் கவலையளிக்கின்றன. பல பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளன. லசந்த விக்கிரமதுங்க கொலை ,பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் கொலைகள், திருகோணமலையில் மாணவர்கள் கொலை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு பொருத்தமான முறையில் தீர்வு காணப்படவில்லை. காணாமற்போனவர்கள் விவகாரங்களுக்கு திருப்தியான முறையில் பதிலளிக்கப்படவில்லை. இதற்கு விளக்கங்கள் தேவை. குற்றவாளி…
-
- 1 reply
- 250 views
-
-
[size=4]By V.Priyatharshan 2012-11-06 14:10:47[/size] [size=4]இலங்கைக்கும் தென் கொரியாவின் தலைநகர் சியோலுக்குமிடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற தென் கொரியாவின் தேசிய தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொழும்பிற்கும் தென் கொரியத் தலைநகர் சியோலுக்குமிடையிலான நேரடி விமான சேவையை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். கடந்த 28வருடங்களுக்கு முன் கொழும்பிற்கும் சியோலிற்கும் இடையிலான நேரடி விமான சேவை இடம்பெற்றது. எனினும் சில காரணங்களினால் 1984ஆம் ஆண்டுடன் இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டது. …
-
- 1 reply
- 570 views
-
-
தமிழ்நாடு, மதுரையிலுள்ள தமிழ் அகதிகள் நலன்புரி நிலையத்திலுள்ள இலங்கை அகதிகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தால் தரக்குறைவாக நடத்தப்படுவதாக 'த ஹிந்து' பத்திரிகை நேற்று குற்றஞ்சாட்டியது. [size=2][size=4]சாதாரண வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் இவர்களால் இன்னும் எட்டப்படாதுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற 1983ஆம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்து தமிழ் அகதிகளுக்கென தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 103 நலன்புரி நிலையங்களில் அணையூர் மற்றும் கூடல்நகர் நலன்புரி நிலையங்களும் அடங்குகின்றன. அணையூர் நலன்புரி நிலையத்தில் 31 தொகுதி வீடுகளுள்ளன. ஒருதொகுதி வீட்டில் 24 குடும்பங்கள் வசிக்கின்றன. 1983இல் கட்டப்பட்ட இவ்வீடுகள் உடைந்த கூரைகள் மற்றும் சுவர்களுடன் காட்சியளிக்கின்றன. கண்காணிப்பு ந…
-
- 2 replies
- 365 views
-
-
[size=3][size=4]இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் அதிகாரத்தை விஸ்தரிப்பதில் முனைப்புக் காட்டி வருவதாக லண்டனிலிருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.சுயாதீனமான விசாரணைகள் நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாகவும்.[/size][/size] [size=3][size=4]குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணை நடத்தல் ஆகியவற்றைவிடவும் அரசாங்கம் வேறும் விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றது.[/size][/size] [size=3][size=4]அண்மையில் நீதிமன்றத்தின் மீதான அழுத்தங்கள் ஏற்புடையதல்ல மாற்றுக் கொள்ளைகையுடையோரை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிய…
-
- 1 reply
- 399 views
-
-
ஆனந்த விகடன் கொழுத்திப் போட்ட நெருப்பில் தமிழீழ இலட்சியம் கரைந்து போகாது! [Tuesday, 2012-11-06 11:39:07] தமிழக வார சஞ்சிகையான ஆனந்த விகடன் கொழுத்திப் போட்ட நெருப்பு ஒன்று, தமிழீழ மக்களின் இதயங்களை ரணகளமாக்கி, கொதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இதற்காகத்தானா இதுநாள் வரையும் ஆனந்தவிகடன் இரை போட்டுக் காத்திருந்ததா, என்ற சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது. 'நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி' என்ற கட்டுரை ஈழத் தமிழ் மக்களைச் சுற்றி இன்னொரு வலை விரிக்கப்படுகின்றதா? என்ற கேள்வியையே எழுப்பியுள்ளது. வக்கிரங்களைத் தோண்டித் துருவுவதும், அதன்மூலம் வாசகர் மத்தியில் மனக்கிளர்ச்சியைத் தூண்டுவதும் தமிழகப் பத்திரிகை, சஞ்சிகைகளின் தாராளப் போக்காகவே உள்…
-
- 4 replies
- 675 views
-
-
[size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத் தளபதிகள் மூவர், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாக இரண்டாம் நிலைப் பதவிகளில் அமர்த்தப்படவுள்ளனர்.[/size] [size=4]வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்த இது தொடர்பான திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.[/size] [size=4]ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் தளபதியும், தற்போது இராணுவத் தலைமையகத்தில் பொது அதிகாரிகளுக்கான பணிப்பாளர் நா…
-
- 0 replies
- 343 views
-
-
இலங்கை அகதி படுகொலை By General 2012-11-06 11:15:28 தமிழ்நாடு - கரூர் அருகேயுள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கை அகதியான ஜெயபிரகாஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவரின் கொலையை தடுக்க முனைந்த அவரது இளைய சகோதரர் கலைச்செல்வன் என்பவரும் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயங்களுடன் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நிதி கொடுக்கல் வாங்கல் முறுகல் நிலை காரணமாக ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கொலை தொடர்பாக அகதி முகாமை சேர்ந்த நிலாகரன், சுதாகரன் ஆகியோரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/loc…
-
- 0 replies
- 1.5k views
-
-
22ஆண்டுகளாக பின்னர் சிறீலங்கா கடற்படையினர் பொன்னாலை மக்களிடம் அவர்களது காணிகளை கையளித்துள்ளனர். படையினர் நிலைகொண்ட காலத்தில் மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவற்றையும் அழித்துவிட்டே வெளியேறிச்சென்றனர். போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருந்த கடந்த 1990ம் ஆண்டு பொன்னாலை தொடக்கம் மாதகல் கீரிமலை வலி. வடக்கு காங்கேசன்துறை வரையான கடற்கரைப் பகுதிகளை சிறிலங்காப் படையினர் கைப்பற்றியிருந்தனர். இதனையடுத்து இப் பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டு சிறிலங்காக் கடற்படையினரால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்தது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் உயர் பாதுகாப்பு வலயங்கள் சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் பொன்னாலைஇ மாதகல் மேற்கு ஆகிய பிரிவுகளில் உள்ள பாது…
-
- 0 replies
- 418 views
-
-
தமிழர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் செயன்முறையானது மீண்டும் ஒருமுறை விடுதலை போராட்டத்திறகு வழிவகுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை 12வது இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில் சந்தித்த பொழுது தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய வதிவிட பிரதிநிதியின் மதிய போசன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் தமிழர்களால் கோரப்படுகின்ற வட கிழக்கு பிரதேசங்களிற்கான அதிகாரப் பகிர்வினை வழங்குவதில் தமது அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டார். 1983ம் ஆண்டு முதல் அதாவது கடந்த 26 ஆண்டுகளாக நாட்டின் மொத்த சனத்தொகையி…
-
- 6 replies
- 911 views
-
-
முல்லைத்தீவு, அம்பலவன் பொக்கனைப் பகுதியில் ஆண்கள் இல்லாத வீட்டில் இரவு நேரங்களில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து பெண்கள் மீது விரும்பத்தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது. அம்பலவன் பொக்கனை பகுதியில் உள்ள ஆலயடிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள படைமுகாமில் கடமையாற்றும் படைச்சிப்பாய் ஒருவர் இன்று அதிகாலை 3 மணியளவில் அருகில் உள்ள வீடு ஒன்றில் புகுந்துள்ளார். இதனால் வீட்டில் இருந்த பெண், அவரின் தாய் உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் புகுந்த இராணுவச்சிப்பாயை எட்டிப்பிடித்துள்ளார். இதன்போது,குறித்த படைச்சிப்பாய் தாயின் நெஞ்சில் எட்டி உதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி அருகில் இருந்த இராணுவமுகாமுக்குள் சென்றுள்ளார். இது தொடர்பாக இராணுவ முகாம் பொறுப்பதிக…
-
- 0 replies
- 441 views
-
-
எதிரியின் சகலவிதமான முற்றுகைகளையும் எதிர்கொண்டு வாழ்ந்த தமிழர்களை தாயகத்தில் முற்றிலுமாக அழித்தொழித்து காடுகளில் அலையவிட்டுள்ள சிங்களம் புலத்தில் உள்ள தமிழர்களை குறிவைத்து 2009 மே 18 முதற்கொண்டு இன்றுவரை காய்களை நகர்த்தி வருகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாங்கு சக்தியாக திகழ்ந்து வரும் புலம்பெயர் ஈழத்தமிழர்களிடையே பல்வேறு போட்டிக் குழுக்களை உருவாக்கி பலவீனப்படுத்த கட்டம் கட்டமாக பல்வேறு முயற்சிகளில் சிங்கள உளவுத்துறையும் துணைக்கு இந்திய உளவுத்துறையும் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாகவே இந்த ஊடக யுத்தத்தை பார்க்க வேண்டியுள்ளது. உலகத் தமிழர்களது ஆத்ம பலமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்புத் தொடர…
-
- 0 replies
- 631 views
-
-
[size=5]ஜெனிவாவில் சிறிலங்கா மீது அமெரிக்கா போர் தொடுப்பு! - இந்தியா, கனடா, ஜேர்மனும் கடும் குற்றச்சாட்டு!![/size] ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு பலத்த நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகள் தொடர்பில் அமெரிக்கா, இந்தியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கூட்டாக கடும் தாக்குதல் நடத்தியதால் இக்கூட்டத் தொடர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஒரு பலப்பரீட்சையாக அமைந்திருந்தது. குறிப்பாக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை விவகாரம், 13வது திருத்தச் சட்டமூல இரத்துச் செய்வது தொடர்பான விடயம், வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் நல்லிணக…
-
- 9 replies
- 3.2k views
-
-
புத்தர் சிலை அமைப்பதற்கு காணி அளவீடு செய்து வழங்குமாறு கோரிக்கை By Lambert 2012-11-05 10:57:56 மன்னார் திருக்கேதிஸ்வர ஆலய சூழலில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தனியார் காணியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலைக்கான ஏனைய கட்டுமானப்பணிகள் பலரது எதிர்ப்பினால் தடைப்பட்டது. இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து காணியை அளவீடு செய்து புத்தர் சிலை அமைப்பதற்கான வழிவகைகளை செய்யுமாறு கோறி மன்னார் பிரதேச செயலாளருக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய மதம் பௌத்த மதம் என்பதினால் அவற்றை அமைப்பதற்கு அதிகாரிகள் தடையாக இருக்கக்கூடாது எனவும், நடு நிலமையாக அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப…
-
- 0 replies
- 310 views
-
-
ஜி.ஏ.சந்திரசிறியும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் யாழ். மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயம் இன்னமும் இருக்கின்றது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இலங்கையின் எந்தப் பாகத்திலும் உயர் பாதுகாப்பு வலயம் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து வருகின்றநிலையில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் யாழ். மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயம் இன்னமும் இருக்கின்றது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே யாழ். மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயம் இருக்கிறது என்பதை இவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டம…
-
- 1 reply
- 606 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று மாலை இடம்பெற்ற பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தின் தொடக்கத்தில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க நிகழ்த்திய உரையில், புதிதாக எதுவும் இல்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சித்துள்ளன. இவர் தனது உரையில் சிறிலங்கா அரசு மனிதஉரிமைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு கொடுத்தது, போரால் இடம்பெயர்தோரை மீள்குடியேற்றியது. வடக்கில் மிதிவெடிகளை அகற்றியது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எடுத்துள்ள முயற்சிகள், பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகள் போன்றவற்றை மகிந்த சமரசிங்க தனது அரை மணிநேர உரையில…
-
- 1 reply
- 466 views
-