ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
[size=5]புலி எதிர்ப்பும் கூட்டமைப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் போர்க்கொடியும் - தயாளன்[/size] கூட்டமைப்பிற்குள் இடம்பெற்றுவரும் அதிகார அரசியலில் சுரேஷ் பிரேமசந்திரனை குற்றஞ்சாட்டும் இக்கட்டுரையை ஆழமான விவாதங்களின் பின்னரே வெளியிடுவதெனத் தீர்மானித்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் ஜனநாயகப்படுதலின் அவசியம் பற்றி கடந்த காலங்களில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம். இக்கட்டுரையின் ஊடாக கூட்டமைப்பை பலவீனப்படுத்துவது எமது நோக்கமல்ல. கூட்டமைப்பு தொடர்பான விவாதத்தின் ஒரு பகுதியாகவே இக்கட்டுரையைக் கருதுகிறோம். இது தொடர்பான மாற்றுக் கருத்துகளுக்கு நிச்சயம் பொங்குதமிழ் இடம்தரும் அன்னை திரேசாவின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வு இது. இவர் யுவதியாக இருந்தபோது இவரின் ந…
-
- 0 replies
- 843 views
-
-
யாழில் ஒரு வாரத்தில் 140 பேர் கைது யாழ். மாவட்டத்தில் கடந்த கிழமை பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 140 க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளதாக யாழ். மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார். நீதிமன்றங்களினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டு தலை மறைவாக இருந்த 42 பேர், மது போதையில் வாகனம் செலுத்திய 15 பேர், குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த 12 பேர், சட்டவிரோதமாக மிருகங்களை ஏற்றிச்சென்ற 6 பேர், இடையூறு உண்டாகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த 37 பேர், சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச்சென்ற 3 பேர், சட்டவிரோதமான முறையில் சாரய விற்பனையில் ஈடுபட்ட 14 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 749 views
-
-
[size=4]நாட்டின் பொலன்னறுவை பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் 15 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 15 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் ௭ன்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை கூறுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். [size=5]இரசாயன உர வகைகளின் பாவனை காரணமாகவே [/size]இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன ௭னினும் இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க ஜனாதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கிருமி நாசினி மற்றும் களை நாசினிதொடர்பில் மேலும் ஆய்வுகளை நடத்த ௭திர்பார்க்கின்றோம். ஆய்வில் அவை ஆபத்தானவை ௭ன்பது நிரூபிக்கப்பட்டால் அவற்றின் கொள்வனவை தடுப்போம…
-
- 0 replies
- 715 views
-
-
[size=4]ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வரும் 1ம் நாள் இடம்பெறவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்துக்காக, சிறிலங்கா சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன. ஸ்பெய்ன், கனடா, மெக்சிகோ, பிரித்தானியா, அமெரிக்கா, செக் குடியரசு, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளே சிறிலங்காவின் அறிக்கை தொடர்பாக ஏற்கனவே கேள்விகளை எழுப்பியுள்ளன. வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் தாமதிக்கப்படுவது, உயர் பாதுகாப்பு வலயங்கள், ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள், 2006இல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாமை, மூதூரில் 17 பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின்…
-
- 0 replies
- 681 views
-
-
இலங்கையின் நிலைமைகளை ஆராய்ந்து அந்த நாட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதில் ரஸ்யாவும் சீனாவும் தோல்விக்கண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட இந்தக் கண்காணிப்பகம், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் ஆராயப்படும் போதெல்லாம் ரஸ்யாவும் சீனாவும் இலங்கைக்கு ஆதரவளித்து வந்துள்ளன. குறிப்பாக போர்குற்றங்களை இரண்டுதரப்புகளும் மேற்கொண்டவேளைகளில் கூட அதனை தடுக்கும் நடவடிக்கைகளை இந்த இரண்டு நாடுகளும் மேற்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக இரண்டு நாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கின. இதன்காரணமாக போர்க்குற்றங்களை தடுக்கமுடியாத நிலை ஏற்பட்ட…
-
- 1 reply
- 826 views
-
-
யாழ்ப்பாணத்தினிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து கை துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் என பெருமளவினில் கடத்தி செல்ல தயாராக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் வன்னியிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள்; ஓமந்தை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த பஸ் மற்றும் அதன் சாரதி நடத்துனர்களும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் குறித்த பஸ்ஸில் பயணிதது கொண்ருந்த பெருமளவிலான படையினர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த பேருந்து பிற்பகல் ஒரு மணியளவில் யாழ்.நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. கிளி …
-
- 0 replies
- 428 views
-
-
இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு இடையிலான கடல் பாதுகாப்பு தொடர்பான மாநாடு காலியில் இடம்பெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் கப்பல் நடமாட்டங்கள், சுனாமி எச்சரிக்கை, கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், கூட்டு கடற்படைப் பயிற்சிகள் போன்றவை தொடர்பில் ஆராயப்படுகின்றன. இந்தநிலையில் கூட்டத்தின் இறுதியில்,கடலில் சட்டவிரோத அத்துமீறல்களை தடுக்க முத்தரப்பு பொறிமுறை ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கடல் பாதுகாப்பு பணிப்பாளர் கே.ஆர்.நூட்டியால், இலங்கையின் சார்பில் கடற்படை பணிப்பாளர் ஜயந்த பெரேரா, மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் லியாஸ் ஹுசைன் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். http://www.seithy.co...&language=…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழகத்திலுள்ள இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களை மீள இலங்கைக்கு அழைத்து வருவது பற்றியும், அவர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஏனைய வசதிகள் குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ௭ம்.பிக்கள் குழுவொன்று அடுத்த மாதம் தமிழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இத்தகவலை தெரிவித்தார்.இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியவர்கள் இங்கு தாம் சந்திக்கும் அவல நிலையை இந்தியாவிலுள்ள தமது உறவுகளுக்கும் தெரிவிப்பதால் இந்தியாவிலுள்ள இந்தியர்கள் இலங்கை திரும்பத் தயங்குகின்றனர். ௭னவே தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் இணைந்து இலங்கை திரும்புவோருக்கு இ…
-
- 0 replies
- 416 views
-
-
புலிகளின் தலைவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது என்கிறது அரசாங்க புலனாய்வுப் பிரிவு 20 அக்டோபர் 2012 சர்வதேச புலம்பெயர் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவர், பயங்கரவாத விசாரணை பிரிவினரால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என அரசாங்க புலனாய்வுப் பிரிவை கோடிட்டு கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளதுடன், 2000 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றுள்ளார் என கண்டுபிடித்துள்ள அரச புலனாய்வுத் துறை அவர்குறித்து பல கதைகளை தெரிவித்துள்ளது இங்கிலாந்தில் 12 வருடங்கள் வசித்து வந்த இவர்…
-
- 5 replies
- 1.4k views
-
-
அரசியல் தீர்வு பிரச்சினை உள்விவகாரம் அதில் நாம் தலையிட மாட்டோம் - சீனா October 19, 2012 10:08 am இலங்கையில் இனப்பிரச்சினையில் ஒரு அரசியல் தீர்வை எட்ட முயலுமாறு , இலங்கை அரசுக்கு சீனாவும் அழுத்தம் தரவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருக்கிறார்கள். சமீபத்தில் இலங்கைக்கான புதிய சீனத்தூதரை சந்தித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, வடக்கில் நடைபெற்று வரும் இராணுவ கட்டமைப்புத் திட்டங்கள் பல சீன உதவியுடன் நடைபெற்றுவருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுவதை, தூதருக்கு சுட்டிக்காட்டி, இலங்கையில் போர் முடிந்த வட மாகாணத்தில் இன்னும் சகஜ நிலை உருவாகவில்லை, மக்கள் காணிகள் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி பறிக்கப்பட்டிருக்கின்றன, அங்கு…
-
- 2 replies
- 690 views
-
-
[size=2][size=4]கொழும்பு, கறுவாத்தோட்டத்தில் அமையப்பெற்ற 120 வருடங்கள் பழமைவாய்ந்த குதிரைப் பந்தயத்திடல் பார்வையாளர்கூடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பு மாநகரசபை மேயர் எம்.ஜே.எம்.முஸம்மில் ஆகியோரினால் இக்கட்டடம் இன்று சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. குதிரைப் பந்தயத்தில் ஈடுபடுகின்ற வீரர்களின் ஓய்வறைகளாகவும், விசாரணை அறைகளாகவும் இருந்த பகுதிகள் தற்சமயம் மக்டொனல், லக்சல போன்ற பிரபல நிறுவனங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றமை சிறப்பானதாகும். இலங்கை புற்றரை பராமரிப்பு கழகத்தின் கீழிருந்த …
-
- 0 replies
- 577 views
-
-
[size=2][size=4]கிழக்கின் முதலாவது 5 நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டலொன்றை பாசிக்குடாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை திறந்து வைத்தார். பாசிக்குடா பகுதியில் 150 ஏக்கர் விசாலத்தில் அமையவுள்ள 14 ஹோட்டல்களின் முதற்கட்டமாக 48 அறைகளைக்கொண்ட முதலாவது 5 நட்சத்திர ஹோட்டல் இன்று திறந்த வைக்கப்பட்டது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த ஹோட்டல்கள் நிர்வகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தில் 854,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இவ்வருடத்தில் இந்த எண்ணிக்கை 950,000ஐ எட்டுமென நம்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.[/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...3----5----.html[/size][/size]
-
- 0 replies
- 659 views
-
-
சீனாவும் இலங்கையும் இணைந்து செயற்கை கோள் தயாரிப்பு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 18, 2012 AT 10:50 சீனாவும் இலங்கையும் இணைந்து தயாரித்துள்ள செயற்கை கோள் எதிர்வரும் 22ம் திகதி நவம்பரில் விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.இலங்கையின் சுப்ரீம் செட் என்ற தனியார் நிறுவனம் இந்த செயற்கை கோளை தயாரித்துள்ளது. இதனை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக, இந்த நிறுவனத்தின் தலைவர் எஸ்.மணிவானன் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=35737
-
- 7 replies
- 669 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த 12 பேரை இலங்கைக்கு நாடு கடத்த கனடா ஏற்பாடு! கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்ட 12 தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட உலகத் தமிழர் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான 12 பேர் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்தப் 12 பேரையும் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை மேற்கொண்டு வருகிறது. இவர்கள் அ…
-
- 11 replies
- 1.6k views
-
-
ராஜபக்ச சோல்கயிம் கும்பல்களின் விசுவாசமான நண்பர்கள் : கோசலன் நாற்பது வருட ஆயுதப் போராட்டம் மனிதப் பேரழிவோடு துடைத்தெறியப்பட்டு நான்கே வருடங்களுக்குள் மாற்று அரசியல் என்பதை உத்வேகத்தோடு எதிர்பார்க முடியாது என்பது உண்மை தான். மக்கள் பற்றும் சமூக உணர்வும் கொண்ட மனிதர்களின் அணிசேர்க்கையும் அரசியல் தலைமையும் கரு நிலையில் கூட இன்னும் தோற்றம் பெறவில்லை என்ற யதார்த்தத்தின் மறுபக்கத்தில் சந்தர்ப்பவாதிகளும் வியாபாரிகளும் நிர்வாணமாக மக்கள் முன் தம்மை இனம்காட்டிக்கொள்கிறார்கள். ஒரு புறத்தில் ‘ஜனநாயகம் படைக்கிறோம்’ என்று குறைந்தது இரண்டு தசாப்த்தங்களில் ஆங்காங்கு தோன்றிய புலி எதிர்ப்புக் கும்பல்கள். பிரபாகரன் சரணடைந்தாரா, சண்டை போட்டாரா, பொட்டம்மான் பிடிபட்டாரா, செத…
-
- 4 replies
- 849 views
-
-
காணாமல் போனோரைக் கண்டறியும் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு மணி நேர சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று எதிர் வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக இடம்பெறவுள்ளது. இதன்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்படவிருப்பதாகவும் மேற்படி குழு அறிவித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் ௭க்நெலிகொட கடத்தப்பட்டு வரும் 22ஆம் திகதியுடன் 1000 நாட்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு ௭க்நெலிகொட சார்பாகவும் ஏனைய காணாமல்போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் சார்பாகவுமே இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக காணாமற்போனோரைக் கண்டறியும் குழு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூற…
-
- 0 replies
- 524 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலே சுமார் 875 ஏக்கர் நிலப்பரப்பு இன்று வரை இராணுவத்தினரின் பிடியில் உள்ளதுடன், பல வர்த்தக நிலையக் கட்டடங்களும் படையினரின் பயன்பாட்டிலேயே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் கமநலச் சேவை நிலையத்தின் முன்பாகவுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை இயங்கிய காணியும், அதனைச் சூழவுள்ள பத்துக் குடும்பங்களின் காணிகளும், புதுக்குடியிருப்புச் சந்திப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக சுமார் பதினைந்து ஏக்கர் காணிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள், பொதுமக்களின் வாழ்விடங்கள் என்பவற்றை இலங்கை ராணுவத்தின் 682 ஆவது படைப்பிரிவு பயன்படுத்தி வருகின்றது. இதேவேளை புதுக்குடியிருப்பு கைவேலிப் …
-
- 0 replies
- 883 views
-
-
“ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் இலங்கை குறித்தான அமெரிக்காவின் கொள்கைகளில் எவ்வித மாற்றங்களும் நிகழாது” என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். “எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மிட்ரோம்னி வெற்றி பெற்று ஆட்சிமாற்றம் நிகழ்ந்தால் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுமா? குறிப்பாக, இலங்கை போன்ற நாடுகள் குறித்தான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் நெகிழ்வுத் தன்மை ஏற்படுமா என்றும் ஊடகமொன்று கேள்விகளை எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும்போதே, பாரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாது. கடந்த காலங்களை எடுத்துப்பார்…
-
- 0 replies
- 732 views
-
-
வடக்கு கிழக்கிலிருந்து படையினரை அகற்றிக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கிலிருந்து படையினரை அகற்றிக்கொள்ளுமாறு சிலர் கோரி வருகின்றனர். ஐக்கிய இலங்கை என்ற ரீதியில் நாடு முழுவதிலும் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு மூன்றாண்டு கடந்துள்ள நிலையிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பான அர்ப்பணிப்பில் குறைவில்லை. போர் நிறைவடைந்தாலும் படைவீரர்களுக்கான சலுகைகள் குறையவில்லை.சில தசாப்தங்களாக வரவு செலவுத்திட்டத்தின் பெரும்பகுதி தேசிய பாதுகாப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. வரவு செலவுத் திட்டத்தில் வருடாந்தம் 230 பில்லியன் ரூபா தேசிய பாதுகாப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அதில் 203 பி…
-
- 4 replies
- 439 views
-
-
“அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழருக்குதை(சுறவம்) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு” பாவேந்தர் பாரதிதாசன்: “தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல் பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில் புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்” “நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே” “அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு” தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே! சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பென்பதும், பிரபவ முதல் அட்சய வரையிலான…
-
- 5 replies
- 38.5k views
-
-
[size=3][size=4]இலங்கையில் இருந்து தமிழர்கள் தப்பிச் செல்வதற்கு போர்ச்சூழ்நிலை இன்னும் மாறாமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]தமிழர்கள் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கிறார்கள் என்பது அவுஸ்ரேலியா ' டீக்கின் பல்கலைக்கழகத்தில்" கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலிய பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பெரி உரையாற்றினார். ஏற்கனவே தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்களாக பிரிக்கப்பட்டிருந்த இலங்கையை பிரித்தானிய குடியிருப்பு ஆட்சி மத்திய நிர்வாக மாற்றியமைத்தது. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதும், சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள அரசியல் திட்டத்தை, மொழியை அடிப்படையாக கொண்டு…
-
- 2 replies
- 756 views
-
-
வட அயர்லாந்து போராளி ஒருவர் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த விதம் தொடர்பாக தனது கடுமையான ஆட்சேபனையை கொலம்பிய பேச்சுவார்த்தையின்போது வெளியிட்டார். இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை கபடதனமாக அளித்தது போல கொலம்பிய சுதந்திர விடுதலைப் போராட்ட அமைப்பை கொலம்பிய அரசு அளிக்க முற்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கொலம்பிய அரசு கொலம்பியாவில் நடைபெறும் யுத்தம் மற்றைய நாட்டு யுத்தங்களுடன் ஒப்பிடும்போது முற்றிலும் வேறுபட்டது என மழுப்பலாக பதிலளித்தார். இலங்கை தமிழரின் போராட்ட வரலாற்றில் மிகவும் பரீட்சயமானதும் தமிழர்களுடன் நெருங்கிய உறவை பேணிவரும் ஐ.ஆர்.ஏ அமைப்பின் முக்கிய தளபதியே தமிழருக்காக தமிழரின் மீது திணிக்கபட்ட யுத்தத்தினை கொலம்பிய பேச்சுவார்த்தையில் …
-
- 10 replies
- 1.2k views
-
-
யாழ் கோட்டைக்கு பின்புறம் அமைக்கப்படும் கடற்பூங்கா (படங்கள்) சிறீலங்கா | ADMIN | OCTOBER 19, 2012 AT 22:08 யாழ் கோட்டைக்கு பின்புறமக ஸ்ரீலங்கா இராணுவம் மீனவர்களின் வாழ்வாதரங்களை அளிக்க இராணுவ காவலரன்கள் அமைத்து கடற்பூங்கா ஒற்றை உருவாக்கி வருகிறார்கள். http://thaaitamil.com/?p=36009
-
- 0 replies
- 799 views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் தேசிய செயற்திட்டத்தை செயற்படுத்தினால் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பெறக்கூடிய ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. உயர்ஸ்தானிகரிடம் கேளுங்கள் என்ற வேலைத் திட்டத்தின் 12வது பகுதியில் தேசிய செயற்திட்டம் குறித்த பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்துள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரெங்கின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தேசிய செயற்திட்டம் ஒரு சிறந்த ஏற்பாடு எனவும் பொது மக்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் வலுப்படுத்தவும் அத…
-
- 0 replies
- 458 views
-
-
யாழில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரியான முறையில் சட்டத்தை அனுசரித்து, கடைப்பிடித்து நீதியாக நடந்து கொள்வதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் அந்த ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் பொதுமக்களுக்கு இடையூறுகள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் ஆர்ப்பாட்டங்களின் போது வீதியோரமாக நின்று ஜனநாயக முறைப்படி போராட்டத்தை நடத்துகின்றனர். உண்மையில் அவர்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்கள் சட்டத்த…
-
- 0 replies
- 464 views
-