Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகள் n;தாடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றனர் - இந்தியா 29 செப்டம்பர் 2012 தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும் புலிகள் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. 1991ம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, 1992ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும்…

  2. [size=2] [size=4]இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் புதல்வருமான விமுக்தி குமாரதுங்க அரசியலில் நுழையலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.[/size][/size] [size=2] [size=4]இதன் முதல்படியாகவே அவர் கடந்த 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தனது பாட்டனாரான எஸ்.டயிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 53 ஆவது சிரார்த்த தினத்தின் போது ஹொரகொல்லயில் அமைந்துள்ள அவரின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.[/size][/size] [size=2] [size=4]மிருக வைத்தியரான விமுக்தி இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். தற்போது விடுமுறையைக் கழிக்கும் பொருட்டு இங்கு வந்துள்ளார்.…

  3. [size=4]'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியினால்தான் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இல்லையென்றால், கிழக்கில் மீண்டும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பார். கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென சர்வதேச நாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. அவற்றையெல்லாம் தாண்டியே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நாம் வென்றெடுத்துள்ளோம்' என்று மு.காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான விவகாரங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் இன்று சனிக்கிழமை காலை கல்முனை பர்ஜீஸ் மண்டபத்தில் ஏற்பாடு …

  4. விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள்..! இந்திய உள்துறை அறிவிப்பு..! ஈழதேசம் செய்தி..! விடுதலைப் புலிகள் அமைப்பு எப்பொழுது வேண்டுமானாலும் இலங்கையில் எழுவார்கள் வருவார்கள், தனி ஈழம் கேட்பார்கள். ஏனெனில் தனி ஈழம் கோரிக்கையை விடுதலைபுலிகளின் ஆதரவளார்கள் அணையாமல் பாதுகாத்து வருகின்றனர். எனவே இந்தியாவிற்கு அவர்களால் ஆபத்து என்று கூறியுள்ளார் இந்திய உள்துறையின் இயக்குனர் ஆர்.கே.சுமன் அவர்கள். தமிழ் நாட்டின் கியூ பிரிவு தலைவர் சம்பத் குமார் அவர்களும் விடுதலைப் புலிகளால் இந்திய மண்ணில் தமிழ் நாட்டில் மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்றார். என்ன மாதிரியான ஆபத்து என்று திரு வைக்கோ அவர்கள் குறுக்கு விசாரணை செய்ததில் அதெல்லாம் உங்களுக்கு தெரிவிக்க முடியாது என்றார். கடந்…

  5. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டஙகளில் இன்று (28) மாலை வீசிய பலத்த சூறாவளி காரணமாக நூற்றுக் கணக்கான வீடுகளுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து எமக்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்களான போரதீவு மற்றும் படுவான்கரை ஆகிய பகுதிகளிலேயே அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மணியரசங்குளம் மற்றும் வட்டமடு ஆகிய பிரதேசங்களிலும் வீசிய சூறாவளி காரணமாகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.இன்று மாலை 4.55 தொடக்கம் 5.30 மணியான காலப் பகுதியிலேயே இந்தச் சூறாவளி வீசியது. போரதீவு படுவான்கரை பிரதேசங்களில் உள்ளடங்கும் ஐந்து கிராமங்களில் சுமார் 85 வீடுகள் முற்றாகச் சேதமடைந்தன என அங்கிரு…

  6. [size=3][size=4]தமிழரின் கலாசார சீரழிவும் விழிப்புணர்வும் இப்பரந்து பட்ட உலகில் கோடானகோடி மக்களில் பல இனங்கள் காணப்படுகின்றது. அதில் தமிழ் இனம் தனக்கென்று ஒரு தனியான பண்பாடு கலாச்சாரத்தை கொண்டு மிளிர்கின்றது. அதேவேளை ஒவ்வோரினமும் பல தேவைகள் போராட்டங்கள் என்பவற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் அவர்களின் வாழ்வியலும் வாழ்க்கை முறையும் மாறிக்கொண்டே போகிறது. வாழ்வியல் என்பது கலை,கலாசாரம்,பண்பாடு என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.வாழ்வியல் முறை என்பது வாழ்வியல் அம்சங்களை எவ்வாறு பின்பற்றி வாழ்தல் என்பதாகும். ஆனால் கலாசாரம் என்பது ஒவ்வொரு நாட்டவருக்கும் சமூகத்திற்கும் தனித்தனியே காணப்படுகின்றது. நான் எனது குடும்பம் என்பதை விடுத்து ஒவ்வொருவரும் எமது நாடு எமது கலாசாரம் என்பதை மனத…

  7. அடுப்பை பற்ற வைக்கும் போது தவறுதலாக ஆடையில் தீ பிடித்ததினால் எட்டு மாத கர்ப்பிணித்தாய் ஒருவர் இன்று (29) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.மன்னார் – வெள்ளாங்குளம் சேவா கிராமத்தில் வசிக்கும் இளம் குடும்பப் பெண்ணான நிசாந்தன் மயூறி (வயது 18) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்து குறித்த பெண்ணின் தாயாரிடமும் கணவனிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள் http://thaaitamil.com/?p…

  8. எஸ்.எஸ்.கபாடிய வழங்கிய தீர்ப்பால் ஸ்வீட் மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடும் காங்கிரஸ் பெருச்சாளிகள்..?! ஈழதேசம் செய்தி..! தான் ஓய்வு பெரும் முதல் நாள் பரபரப்பான தீர்ப்பு வழங்கி, காங்கிரஸ் கட்சியினரை பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்துள்ளார் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி எஸ்.எஸ்.கபாடியா என்று கருதலாம். அதாவது அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதற்கு வலு சேர்க்கும் வகையில், 2 G வழக்கில் சொல்லுவதைப் போல ஏல முறையையை பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சுரங்கம் மற்றும் இயற்கை வளங்களை மக்கள் பயன்பெறும் வகையில் அரசே எந்த வகையில் விற்பனை செய்யலாம் என்பதை முடிவு எடுத்துக் கொள்ளலாம், ஏல முறையில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம…

  9. தம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றியுள்ள சகல வீடுகளினதும் கடைகளினதும் உரிமையாளர்கள் அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டகடிதத்தில், குறிப்பிட்ட காணித்துண்டுகள் புனிதபூமி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 300/14 மற்றும் 1984.06.08 திகதி வர்த்தமானி அறிவித்தலின்படி அரசுடைமயாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.தம்புள்ளை புனிதபூமி அபிவிருத்தித் திட்டத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்காக நீங்கள் வசிக்கும் இடம் அல்லது வீடு புனிதபூமி அபிவிருத்தி திட்டத்துக்கு தேவைப்படுகிறது. அதற்குப் பதிலாக தம்புள்ளை கண்டலம் வீதி, கொள்வத்தை என்றஇடத்தில் காணித்துண்டு ஒன்றை அடுத்த இருவாரத்துக்குள் வழங்குவதற்கு நகர …

  10. உண்மையை கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் மெய்யான அர்ப்பணிப்பை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்கு முன்னதாக இருந்து அமெரிக்கா இலங்கையுடன் மிகவும் நெருங்கிய நட்புறவை பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை துரித கதியில் அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், வடக்கு மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும…

  11. ஆப்கானிஸ்தானில் மரணித்த தலிபான் போராளிகளின் உடல்கள் மீது சிறுநீரை கழித்து இழிவான செயலில் ஈடுபட்ட இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இறந்த உடல்களின் மீது சிறுநீர் கழிக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களின் இழிவான செயல்களின் காட்சிகள் அடங்கிய வீடியோ கடந்த ஆண்டு வெளியானது. அமெரிக்க வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்ஸாய் உள்ளிட்ட பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து, ஜோசப் வி.சாம்ப்ளின், எட்வார்ட் டபிள்யூ டெப்டோலா ஆகிய ராணுவ வீரர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. 2011 ஜூலை மாதம் 27-ஆம் தேதி ஹெல்மந்த் மாகாணத்தில் இந்த அநாகரீக சம்பவம் அரங்கேறியது. ஆனா…

  12. [size=4]மக்களின் மனங்களைநோகடிக்கும் விதமாக கருத்தமர்வுகளின்போது ஒருசில வளவாளர்கள் கருத்துத் தெரிவித்து வருவதாகப் பட்டதாரிகளில் பலர் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பயிலுனரப்பட்டதாரிகளுகென நடத்தப்படும் கருத்தமர்வுகளின்போதே மக்களின் மனங்களை நோகடிக்கும் விதமாக கருத்துத்தெரிவிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.[/size] [size=4]அரச துறைகளில் நியமனம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயிலுனர்களாக நாட்டிலுள்ள சுமார் 42ஆயிரம் பட்டதாரிகள் இந்த வருடம் தெரிவுசெய்யப்பட்டு மாவட்டசெயலகங்கள் பிரதேசசெயலகங்கள் மற்றும் திணைக்களங்களில் தற்போது இணைக்கப்பட்டுள்ளனர். பயிலுனர்களின் திறன்விருத்திக்காகப் பல்வேறு தலைப்புகளில் தொடர் கருத்தமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்…

  13. விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள சிறிலங்கா அமைச்சரவை மாற்றத்தின் போது மஹிந்தையரின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நீலப்படை அமைப்பைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.இதன்படி நாமல் ராஜபக்ஷவுக்கு நீதியமைச்சு பொறுப்பு வழங்கப்படவுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் கூறின. மனுஷ நாயக்கார, சனத் ஜயசூரிய, உதித் லொக்கு பண்டார, லக்ஷ்மன் வசந்த ஆகியோருக்கும் அமைச்சு பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன. இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினரான சரத் விஜயசேகரவுக்கு சிவில் பாதுகாப்பு அமைச்சு வழங்கப்படவுள்ளது. மேலும் தற்போதைய அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த் ஆகியோரின் தற்போதைய அமைச்சுகளிலும் மாற்றம் செய்யப்படவுள்ளன…

  14. ஜெனிவாவில் நவம்பர் மாதம் முதலாம் நாள் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ள நிலையில், அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் புதிய நகர்வு ஒன்றில் விடுதலைப் புலிகள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா நிபுணர்குழுவின் பரிந்துரைக்கு அமைய, அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி பிரித்தானியாவைத் தளமாக கொண்டியங்கும் உலகத்தமிழர் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை மற்றொரு விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பான அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை குழுவும், இதுதொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழ…

  15. ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரியில் இருந்து தப்பிக்க சிறிலங்காவை சீனா ஒரு தளமாகப் பயன்படுத்தி வந்துள்ளதை ஐரோப்பிய ஆணைக்குழு கண்டுபிடித்துள்ளது. சீனாவின் மிதிவண்டி உற்பத்தியாளர்கள், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரி, சுங்கத் தீர்வை ஆகியவற்றில் இருந்து தப்பிப்பதற்காக, சிறிலங்கா உள்ளிட்ட மூன்றாவது நாடுகளின் ஊடாக மிதிவண்டி ஏற்றுமதிகளை மேற்கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய நிறைவேற்றுச் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்கா மற்றும் இந்தோனேசியா, மலேசியா, துனிசியா ஆகிய நாடுகளையே சீனா தனது திருட்டுத்தனத்துக்குப் பயன்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகளின் வரி மற்றும், தீர்வையில் இருந்து தப்பிப்பதற்காக சீனா தனது மி…

  16. வேம்படி மகளிர் உயர் தரப் பாடசாலையின் அதிபராகத் திருமதி வேணுகாசண்முகரத்தினம் உயர்நீதி மன்ற உத்தரவின் பிரகாரம் நேற்றுப் பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் கடந்த மூன்று மாத காலமாக நீடித்து வந்த வேம்படி அதிபர் சர்ச்சை முடிவுக்கு வந்தது. ""என்னதான் நடந்தாலும் ராஜினி முத்துக்குமாரனே அதிபராக நீடிப்பார்'' என்று பல்வேறு தரப்புகளிடமும் ஊடகங்களிடமும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்த வாக்குறுதிகள் பொய்த்துப் போனது. அவரது முகத்தில் கரியைப் பூசும் வகையில் தன்னுடைய பொறுப்புகளை வேணுகா சண்முகரத்தினத்திடம் நேற்று கையளித்தார் வேம்படி மகளிர் கல்லூரியின் பிரதி அதிபராகக் கடமையாற்றி வந்த ராஜினி முத்துக்குமாரன். இந்தக் கையளிப்பு நிகழ்வு நேற்று வேம்படி மகளிர் கல்லூரியில் யாழ். வலயக் கல்வ…

  17. ஆவணப் படம் போர் சூறையாடிய வன்னி மக்கள் இரும்புகளை விற்று வருமானம் தேடும் அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இறுதிப்போர் நடந்த இடத்தில் மீள்குடியேறிய மக்கள் இரும்புகளை சேகரித்து விற்று தமது வருவாயைத் தேடி வாழும் அவல நிலையிலுள்ளனர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் இரும்பு சேகரித்து விற்று வாழுகின்றனர். வன்னியில் இறுதிப்போரில் கைவிடப்பட்ட வகனங்களின் இரும்புகளே இவ்வாறு சேகரிக்கப்பட்டு தென்னிலங்கை வியாபாரிகளிடம் விற்கப்படுகிறது. இறுதிப்போர் நடந்த இடமெங்கும் இரும்புகள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் அதிக வருமானம் ஈட்டுவதனால் பாடசாலை மாணவர்கள்கூட பாடசாலை செல்லாமல் இரும்பு சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். போரினால் இடம்பெயர்ந்து அனைத்து சொத்துக்களையும…

  18. அநாதைகள் போல விடப்பட்டுள்ளோம் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை முல்லைத்தீவு அரச அதிபர் கூறுவது பொய் சூரியபுரம் காட்டில் உள்ள மக்கள் குமுறல் அநாதைகள் போல காட்டுப் பகுதிக்குள் சுடலைக்குள் தள்ளிவிட்டு இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. அவ்வாறு இருக்கும் போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் கூறியிருப்பது வேதனைக் குரியது. அவர் கூறுவதில் உண்மை இல்லை. இவ்வாறு தமது உளக் குமுறலை வெளியிட்டுள் ளனர் சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்கள். மனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு கேப்பாபிலவுக் கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் சூ…

  19. [size=4][/size] [size=4]ஈழத் தமிழர் தேசத்தின் மீது சிங்களம் மூட்டிய தீ இன்று சிங்களத்தையே மீளச் சூழத் தொடங்கியுள்ளது. தமிழரைச் சிங்களம் சுட்ட தீ இன்று சிங்களத்தை மீளச் சுடுகிறது. சிங்கள அரசின் தலைவர் சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ச செல்லும் இடமெங்கும் அவரை இத் தீ கலைத்து கலைத்துத் துரத்துகிறது.[/size] [size=4]இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுநவாதன் ருத்ரமாரன் இராஜபச்சவின் ஐக்கிய நாடுகள் சபை விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக விடுத்த ஊடக அறிக்கையில் குறிப்பட்டுள்ளார்.[/size] [size=4]இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:[/size] [size=4]மகிந்த இராஜபக்ச தனது ஜக்கிய நாடுகள் சபைக்கான பயணத்தை இரத்துச் செய்ய வேண்டி…

  20. இந்தியாவின் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 500 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 120 வீடுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 46 கிராம அலுவலர் பிரிவைக்கொண்ட கரைத்துறைப்பற்றில் முதற்கட்டமாக வீடு வழங்குவகும் திட்டத்தில் கிச்சாபுரம் என்ற கிராமத்தில் உள்ள 82 முஸ்லிம் மக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் இத்தெரிவு தொடர்பாக மக்கள் அதிருப்பி வெளியிட்டுள்ளனர். புள்ளித் திட்டத்தின் அடிப்படையிலேயே இந…

  21. [size=4]இவ்வாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைவாக, 6.8 சதவீதம் என்ற அளவாக இருக்குமென இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது. இரண்டாவது தடவையாக பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பை இலங்கையின் மத்திய வங்கி குறைத்துள்ளது. ஆரம்பத்தில் 8 சதவீதமான பொருளாதார வளர்ச்சி இருக்குமென கூறிய வங்கி, பெப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இறுக்கமான நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அது 7.2 சதவீதமாக குறைவடையுமென கூறியது. வறட்சி காரணமாக, பொருளாதார வளர்ச்சி, 6.8 சதவீதம் என்ற அளவுக்குக் குறையுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்றால் தெரிவித்தார். உலக பொருளாதார தேக்கம், மற்றும் வறட்சி என்பன காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்…

  22. அவுஸ். T20 விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஹொட்டேலினுள் புகுந்து அவர்களுக்கு விலைமாதர்களை ஏற்பாடு செய்ய முயன்ற அப்துள் கரீம் என்பவரை கைது செய்து 1000 ரூபா அபராதம் விதித்துள்ளது கொழும்பு கருவாத்தோட்டம் பொலீஸ். http://www.news.com....v-1226483701920

  23. [size=4]புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் இங்குள்ள மக்களுக்கு மாதாந்தம் 10 டொலர் வழங்கினால் மாதந்தம் 1893 வீடுகள் கட்டலாம் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று யாழ் மாவட்டச் செயலத்தில் நடைபெற்ற இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார். புலம்பெயர் நாடுகளில் 80,000 ஆயிரம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மாதந்தம் 10 டொலரை இங்கு அனுப்பினால் இங்குள்ள மக்களிற்கு மாதந்தம் 1893 வீடுகள் கட்டிக்கொடுக்க முடியும். கடந்த காலத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது பணத்தினை அழிவுக்காக வழங்கினர். இனி அந்தப் பணத்தினை ஆக்கத்த…

    • 10 replies
    • 963 views
  24. [size=4]உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் மாகாண சபைகளின் அங்கீகாரம் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் திவிநெகும சட்டமூலத்தை கிழக்கு மாகாண சபையில் சமர்பிக்கும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்கும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.[/size] [size=4]திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள்,; மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று புதன்கிழமை மாலை உரையாற்றுகையில் சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.[/size] [size=4]13ஆவது திருத்த சட்டத்தின் கீழ் மாகாண சபைகளினால் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தி திட்டங்…

  25. [size=4]வடபகுதி தமிழ் மக்களை மீண்டும் பிரிவினைவாதத்துக்குள் தள்ளிவிடும் அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சாட்டும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, சர்வதேசத்தின் அழுத்தங்களிலிருந்து தப்பிக் கொள்வதற்கு அகதி முகாம்களை மூடியுள்ள அரசாங்கம் தமிழ் மக்களைக் காடுகளிலும் நடுத்தெருவிலும் கைவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.[/size] [size=4]இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முப்பது வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த நிலையில் அகதி முகாம்களில் வாழ்ந்த தமிழ் மக்களை அரசாங்கம் முறையாக மீள் குடியேற்றவில்லை.[/size] [s…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.