ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
[size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தில் பங்கேற்காத்தற்கு, எந்தவிதமான அழுத்தங்களும் காரணமல்ல என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நியுயோர்க்கில் நடைபெறும் ஐ. நா.பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் பங்கேற்காததற்கு எந்தவிதமான அழுத்தங்களோ அச்சங்களோ காரணமில்லை. இப்போதுள்ளதை விட பெரும் அழுத்தங்கள் இருந்த போதெல்லாம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அனைத்துலக மாநாடுகளில் பங்குபற்றியுள்ளார். அவருக்கு இதுஒன்றும் பெரிய விடயமல்ல. வேலைப்பளு காரணமாகவே அவர் இந்தமுறை நியுயோர்க் செல்லவ…
-
- 8 replies
- 607 views
-
-
[size=4]உஷ்.. அப்பப்பா, அக்டோபரில் கருணாநிதி தலைமையில் மீண்டும் டெசோ கூட்டம்![/size] [size=4]வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் டெசோ கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, [/size] [size=4]திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வருகிற அக்டோபர் 3ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் டெசோ கூட்டம் நடைபெறும். இதில் டெசோ உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்…
-
- 5 replies
- 879 views
-
-
மகிந்தவின் இந்தியப் பயணம் ஒட்டுமொத்த இந்திய நாட்டுக்கே அவமானம்!; அனலை நிதிஸ் ச. குமாரன்! ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு நாடுகள் சிறிலங்காவின் அரச தலைவர்கள் மீது தமது அதிருப்தியை வெளியிட்டுவரும் இவ்வேளையில், சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து இந்திய நாட்டுக்குள் வரவேற்றுள்ளது ஒட்டுமொத்த இந்திய நாட்டுக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நிகழ்காலத்தில் நடக்கும் அறியாமைகள் எதிர்காலங்களில் பல்வேறு எதிர்வினைகளை உண்டுபண்ணுவதுடன், ஒட்டுமொத்த சமூகத்துக்கே அபகீர்த்தியை ஏற்படுத்திவிடும். இதுவே வரலாறாகி பல நூறு ஆண்டுகள் நிலைத்துவிட வழிகோலப்படும்.நான்காம் கட்ட ஈழப் போர் உக்கிரம் அடைந்திருந்த…
-
- 1 reply
- 590 views
-
-
இலங்கையில் நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டிய தேவை அரசிற்கு இருக்கின்றது. அதில் சர்வதேசம் மிகவும் உறுதியாக இருக்கின்றது. நீதியை நியாயத்தை உருவாக்காமல் அரசு அதைத் தட்டிக்கழிக்க முடியாது. நாம் ஒரு தனித் தேசிய இனம். எமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. நாம் சரித்திர ரீதியாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றோம். எம்முடன் இஸ்லாமிய சகோதரர்களும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இன்றும் நாம் பெரும்பான்மையுடன்தான் இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 11 உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வைபவம் இன்று வெள்ளிக்கிழமை காலை தி…
-
- 0 replies
- 679 views
-
-
[size=4][/size] [size=4]ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரியில் இருந்து தப்பிக்க சிறிலங்காவை சீனா ஒரு தளமாகப் பயன்படுத்தி வந்துள்ளதை ஐரோப்பிய ஆணைக்குழு கண்டுபிடித்துள்ளது. சீனாவின் மிதிவண்டி உற்பத்தியாளர்கள், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரி, சுங்கத் தீர்வை ஆகியவற்றில் இருந்து தப்பிப்பதற்காக, சிறிலங்கா உள்ளிட்ட மூன்றாவது நாடுகளின் ஊடாக மிதிவண்டி ஏற்றுமதிகளை மேற்கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய நிறைவேற்றுச் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்கா மற்றும் இந்தோனேசியா, மலேசியா, துனிசியா ஆகிய நாடுகளையே சீனா தனது திருட்டுத்தனத்துக்குப் பயன்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, ஐரோப்பிய…
-
- 2 replies
- 657 views
-
-
அமெரிக்க பட இயக்குனர் 'நகோலா பேசலி நகோலா' கைது..?! வன்மையாக கண்டிக்கும் ஈழதேசம்..! கருத்துரிமைக்கு எதிரான கைது இது...! என்று கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..? ;இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்' என்ற படத்தை எடுத்து அதை யூடுயூப் பில் போட்டு அதைப் பார்த்த முஸ்லிம் மக்கள் உலகம் முழுதும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சென்னையில் பத்தாயிரக்கணக்கில் அமெரிக்க அலுவலகத்தை முற்றுகை இட்டனர் தமிழக முஸ்லிம் மக்கள். ஒரு மூன்று நாள் சென்னையின் அமெரிக்க தூதரகம் லீவு விட்டு விட்டார்கள் என்றால் அவர்களின் கோபத்தை...பெரிய அளவில் வெளிப்படுத்தி இருந்தார்கள். அப்படி அவர் என்ன தான் அந்தப் படத்தில் முகமது நபியை கேவலப்படுத்தி இருந்தார். முகமது நபி என்பவர் ஒர…
-
- 4 replies
- 822 views
-
-
[size=4][/size] [size=4]நேற்றையதினம் அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகங்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். "மக்கள் என்னை வெறுத்து நிராகரித்தால், நான் வீட்டுக்குச் செல்லத் தயாராகவே உள்ளேன் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.[/size] [size=4]அவர் தொடர்ந்து கூறுகையில்:[/size] [size=4]என்னை நிர்ப்பந்தித்து எவராலும் பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது. ஒரு அரசியல்வாதியாக எனக்கு 42 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. எந்தவொருவரையும் விளங்கிக் கொள்வதற்கான சிறப்பு சக்தி என்னிடம் உள்ளது.[/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பினால், எமது அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முடியு…
-
- 3 replies
- 487 views
-
-
திவி நெகும சட்டமூலத்துக்கு வடமாகாண ஆளுநர் ஒப்புதல்! - அதிகாரங்களைப் பறிக்க அரசாங்கம் குறுக்கு வழி!! மாகாணசபைகளிடம் உள்ள காணி அதிகாரங்களைப் பறிக்கும் திவி நெகும சட்டமூலத்துக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி மூலம் சிறிலங்கா அரசாங்கம் ஒப்புதல் பெற்றுள்ளது. வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு அதற்கான நிர்வாகசபை இதுவரை தெரிவு செய்யப்படாத ஒரு நிலையிலேயே, இந்தச் சட்டமூலத்துக்கு வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னர், மாகாணசபைகளின் ஒப்புதலைப் பெறவேண்டும் என சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் முன்னர் தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்த கையுடன் திவி நெகும சட்டமூ…
-
- 2 replies
- 887 views
-
-
ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டத்தரணிகளான கட்சியின் பாராளுமனற் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் ஒன்று நேற்றிரவு (27) ஜனாதிபதி மஹிந்தையர் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் ராஜபக்ஷவின் நிர்வாகத்துக்குப் பெரும் சவாலாக மாறியுள்ள பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பிலேயே ஆராயப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் ஊடாக அவர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து பிரதம நீதியரசர் பதவியிலிருந்து அவரை நீக்கி விடுவது குறித்து மஹிந்தையர் தனது ஆளுங்கட்சியின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களுடன் சட்டத்தரணி எம்.பிக்களுடனும் இந்தக் கூட்டத்தில் மந்திராலோசனை நடத்தியுள்ளார் எ…
-
- 2 replies
- 430 views
-
-
சிறிலங்காவின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் பெரும்பகுதியை கோத்தாபாய ராஜபக்சவின் கையில் உள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சே விழுங்கவுள்ளது. சிறிலங்காவின் 2013வது ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளுக்கான முன்மொழிவுக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் இதற்காக பத்திரங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்படி, அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்கா அரசின் செலவினங்களுக்கு 2520 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு 290 பில்லியன் (29,000 கோடி) ரூபாவுக்கு அதிகமான நிதியை ஒதுக்கீடு…
-
- 1 reply
- 505 views
-
-
நீண்ட கொடும் வறட்சியின் பின் அதிகாலை;கொட்டித்தீர்த்தது மழை குளிர்ந்தது குடாநாடு யாழ்.குடாநாட்டில் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் நேற்று அதிகாலை கொட்டித்தீர்த்த கனமழையால் இதுவரை காலமும் நிலவி வந்த கடும் வறட்சி நிலை சற்று குறைவடைந்தது. விவசாய நிலங்கள் குளிச்சியடைந்தன. நேற்று அதிகாலை 1.30 மணியளவில் கடும் காற்றுடன் கூடிய மழை குடாநாட்டின் பல பாகங்களிலும் கொட்டித் தீர்த்தது. சுமார் 5 மணிநேரம் தொடர்ந்து பெய்த இந்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இயற்கையின் மாறுபட்ட செயற்பாட்டால் இவ்வருடம் குடாநாட்டில் மழை இல்லாது கடும் வறட்சி நிலை தொடர்ந்து நிலவியது. சித்திரைச் சிறு மழையென கூறப்படும் அந்தப் பருவ காலத்து மழை கூட இந்த வருடம் குடாநாட்டுக்குக் கிடைக…
-
- 0 replies
- 563 views
-
-
கேப்பாபிலவு மக்களைச் சந்திக்க உதயன் செய்தியாளருக்குத் தடை நந்திக் கடல் அருகே சூரியபுரம் காட்டுப் பகுதியில் அநாதரவாக விடப்பட்டுள்ள கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்களின் நிலை குறித்து நேரடியாக அறிந்துகொள்ள நேற்று மாலை அங்கு சென்ற உதயன் செய்தியாளர் படைத் தரப்பினரால் திருப்பி அனுப்பப்பட்டார். மக்களை நேரில் சந்திப்பதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நேற்றுமாலை 5 மணியளவில் சூரியபுரத்துக்குச் சென்ற உதயன் செய்தியாளர் மக்களைப் பார்வையிடப் படையினர் அனுமதிக்கவில்லை. அந்தப் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு கடும் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. உதயன் செய்தியாளர் தான் சூரியபுரத்தில் தங்க வைக்கப்படவுள்ள மக்களைப் பார்வையிட உள்ளதாகவும் அவர்களைப் பற்றி அறிந்து கொள…
-
- 0 replies
- 498 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்றுஇ இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன்இ தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில். சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களு…
-
- 0 replies
- 427 views
-
-
[size=3][size=4]மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கத் தவறியுள்ளதாக சர்வதேச அனர்த்தக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாத காலம் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம் காத்திரமான முனைப்புக்கள் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.[/size] [size=4]மனித உரிமை பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள தேசிய செயற்திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக சர்வதேச அனர்த்தக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் குறித்து சர்வதேச அனர்த்தக்குழு மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு விளக்கியுள்ளது.[/size] [s…
-
- 0 replies
- 245 views
-
-
[size=4][/size] [size=4]இலங்கை நிலைமைகள் குறித்து குளோபல் தமிழ் போராம் அமைப்பு தென் ஆபிரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.குளோபல் தமிழ் போராம் அமைப்பின் சார்பில் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவெல் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், தென் ஆபிரிக்க அரசாங்கப் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர்.[/size] [size=4]சுவிட்சர்லாந்து அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறப்பிடப்படுகிறது. இலங்கைத் தமிழர்களின் நிலைமைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சுயாதீன விசாரணைகளின் மூலம் மட்டுமே குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென க்ளோபல் தமிழ் போராம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[/size] [size…
-
- 0 replies
- 205 views
-
-
இறுதி யுத்தம் நடந்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரிடம் இருந்து தம்மை தற்காத்துக்கொள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் குண்டு துளைக்காத நீர்மூழ்கி கப்பல், படகுகள் மற்றும் கவச வாகனங்களை பயன்படுத்தினர். அவ்விதம் தங்களால் உருவாக்கப்பெற்ற நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி புலிகள் இந்திய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்து வந்தனர். குறித்த கப்பல்கள் புலிகளினால் கைவிடப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பகுதியில் வைத்து சிங்கள படைகளினால் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. அவ்விதமான கப்பல்களை அண்மையில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மகிந்த பார்வையிட்டு புலிகளின் ஆயுத பயன்பாடும் அவர்கள் சொந்தமாக தயாரித்த இந்த கப்பல்களை வாகனங்களை கண்டு அதிர்ந்த…
-
- 0 replies
- 2.5k views
-
-
இலங்கையில் மனித உரிமை பிரச்சினைகளில் இன்னும் அந்த நாட்டின் அரசாங்கம் உரியவகையில் செயற்படவில்லை என்று நெருக்கடிகளுக்கான குழு குற்றம் சுமத்தியுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அதில் பங்கேற்றுள்ள உறுப்பு நாடுகளின் உறுப்பினர்களுக்கு நெருக்கடிகளுக்கான குழு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது. இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ளன. எனினும் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட நல்லிணக்க ஆiணைக்குழு அறிக்கை மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அதில் உள்ள விடயங்கள் அமுல்செய்யப்படவ…
-
- 0 replies
- 270 views
-
-
இந்த அரசு தற்போது வடமாகாணத்திலிருந்து பல தமிழ்க் கிராமங்களை அழித்துக் கொண்டிருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் குற்றம்சாட்டியுள்ளார். காணி சுவீகரிப்புக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், மருதநகர், கிருஸ்ணபுரம், இரணைத்தீவு ஆகிய கிராமங்கள் திட்டமிட்ட முறையில் வடக்கு மாகாண வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தற்போது கேப்பாபிலவு கிராமம் கூட வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டுக் கொண்டிருப்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இவ்வாறு தமிழ்க் கிராமங்கள் அகற்றப்படுகின்றதென்றால்…
-
- 0 replies
- 432 views
-
-
அன்பார்ந்த டென்மார்க் வாழ் தமிழீழ மக்களே, ‘தேசத்தின் குயில்-2012′ என்னும் பாடல் விருதுக்கான தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி தெரிவுகள் ஏற்கெனவே கடந்த 26.08.2012 அன்று நடைபெற்றிருந்த நிலையில், இந்த விருதுக்கான இறுதிப் போட்டி எதிர்வரும் 29.09.2012 டென்மார்க்கின் Lundgardsskolen Herningஎன்னும் இடத்தில் நடைபெறுமென நாம் முன்னர் அறிவித்திருந்தோம். அந்நிகழ்வு மிகவும் தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டு, எதிர்வரும் 03.11.2012 ‘இகாஸ்ற் வெஸ்ற்றெ ஸ்கோலெ’ என்ற இடத்தில் 14:30 மணியளவில் நடைபெறும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம். இதில் தங்களுக்கு ஏற்படும் நடைமுறைச் சிரமங்களைப் பொறுத்தருளுமாறு மிகவும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி. பிற்போடப்பட்ட நாள் : 03.11.2012. நிக…
-
- 0 replies
- 325 views
-
-
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து பெண்களை துபாய்க்கு அனுப்பி அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த விபச்சார வர்த்தக செயற்பாடு ஒன்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்திய குற்றப் புலனாய்வுத்துறையினர் இது தொடர்பில் பூனலூரில் சாந்தா என்ற பெண் முகவர் ஒருவரை கைதுசெய்துள்ளனர். கடந்த 5 வருடங்களில் மாத்திரம் தாம் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 120 பெண்களை துபாய்க்கு அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பல பெண்கள் ஒரு கடவுச்சீட்டை பயன்படுத்தி துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு என்றுக்கூறி அனுப்பப்பட்ட பெண்கள் துபாயில் விபச்சார தொழில்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் நாடு திரும்பியுள்ள போதும் சமூகத்துக்கு பயந்து பொலிஸில…
-
- 0 replies
- 342 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அந்தத் தடையாணை சட்டவிரோத தடுப்புச் சட்டம் தொடர்பான தீர்ப்பாயத்தில் பொது விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் கருத்தைக் கேட்டறிந்து, பின்னர் தடையாணை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். சட்டவிரோத தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தின் விசாரணை நாளை (28.09.2012) காலை 10.30 மணிக்கு, சென்னை-சாந்தோம் எம்.ஆர்.சி.நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது. அந்த விசாரணையில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாளை பங்கேற்க உள்ளார். தலைமை நிலையம் மறுமலர்ச்சி தி.மு.க. ‘தாயகம்’ சென்னை-8 http://thaaitamil.com/?p=33554
-
- 3 replies
- 720 views
-
-
FOR THE VIDEO CLICK ON THIS LINK :- http://www.abc.net.au/lateline/content/2012/s3595309.htm Sri Lanka still unsafe Print Email [size=3]Australian Broadcasting Corporation[/size] [size=3]Broadcast: 20/09/2012[/size] [size=3]Reporter: Kerry Brewster[/size] [size=3][size=3]A new documentary shows that Sri Lankan refugees are fleeing human rights abuses in their homeland and are not merely economic refugees, as claimed by the opposition.[/size][/size] Transcript [size=3]TONY JONES, PRESENTER: Many of the most recent asylum seekers arriving in Australia by boat are from Sri Lanka. Whilst the Federal Opposition claims th…
-
- 1 reply
- 617 views
-
-
[size=2][size=4] [/size][/size] [size=2][size=4](எஸ்.எம்.எம்.றம்ஸான், எஸ்.மாறன்) கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகர்கள் இருவரின் வீடுகளில் இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவினரால் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் கலைக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீட்டின் சாய்ந்தமருது இல்லத்திற்கும், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் சாய்ந்தமருது இல்லத்திற்குமே இவ்வாறு குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். இச்…
-
- 12 replies
- 997 views
-
-
இந்திய ஏவுகணைகள் சிறிலங்காவைக் குறிவைக்கவில்லை – இந்தியா அறிவிப்பு [ வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2012, 08:15 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவின் கேந்திர நிலைகளை இந்திய ஏவுகணைகள் குறிவைத்துள்ளதாக வெளியான தகவல்களை, நீண்டநாட்கள் கழித்து இந்தியா நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “இந்தியா நீண்டகால உள்நாட்டு ஏவுகணை அபிவிருத்தித் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம், தற்காப்பு நோக்கத்தைக் கொண்டதேயன்றி, எந்தவொரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்திய ஏவுகணைகள் சிறிலங்காவின் கேந்திர நிலைகளை குறிவைத்துள்ளதாக சில இணையங்களிலும், அச்சு ஊடகங்களிலும் செய்திகளை வெளியானதை அவதானிக்க முடிந்தது. இந்த செய்தி முற…
-
- 5 replies
- 852 views
-
-
இலங்கையுடன் இன்னமும் விரிவான உறவுகளைப் பேண சீன அசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியன்ஹாவோ இதனைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 55 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையும் சீனாவும் பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றும் அற்புதமான திறன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஒரே சீனா என்ற கோட்பாட்டை இலங்கை மதிப்பதாக சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்…
-
- 1 reply
- 679 views
-