ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
அமெரிக்க மண்ணில் மகிந்த இராஜபக்சவினைத் விடாது துரத்தும் கேணல் ரமேஸ் படுகொலை வழக்கு ! - மனுதாரரின் முறைப்பாட்டு மனுவினை தள்ளுபடி செய்ய நியூ யோர்க் மாவட்ட நீதிமன்றம் ! - மேன்முறையீட்டு மன்றுக்கு கொண்டு செல்கின்றோம் : வி.உருத்திரகுமாரன் - அமெரிக்க நீதித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தவல்ல மனுதாரரின் வாதங்கள் : நீதிபதி அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தினால் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச வழங்கப்படுகின்ற இராஜீகரீதியிலான சிறப்புரிமை தொடர்பிலான வழக்கு விசாரணையினை தள்ளுபடி செய்துள்ள நியூ யோர்க் மாவட்ட நீதிபதி றயோமி றீஸ் பூசுவர்ட் அவர்கள் அமெரிக்காவின் தற்போதய நீதித்துறையில் குறிப்பிடக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு வாதங்களை மனுதாரர் முன்வைத்த…
-
- 2 replies
- 624 views
-
-
[size=4]பிற மதத்தவரிடம் பகைமை, வெறுப்பை காட்டினால், அது, வன்முறையில் முடிந்து விடும்; இப்போக்கை கைவிட்டு, எல்லாரும் சகிப்புத் தன்மையுடன் இருப்பது, அமைதிக்கு வழி ஏற்படுத்தும், என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறினார். அவரது வருகையைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, கைதாகி பின், விடுதலை செய்யப்பட்டார்.மத்திய பிரதேச மாநிலம், சாஞ்சி நகரில், சாஞ்சி பல்கலைக் கழக அடிக்கல் நாட்டு விழாவில், நேற்று, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கலந்து கொண்டார்.[/size] [size=4]விழாவில் அவர் பேசியதாவது:[/size] [size=4]பல்கலைக் கழக அடிக்கல் நாட்டு விழாவில், கலந்து கொண்டு பேசும் இந்நாளில், சகிப்புத் தன்மையை வலியுறுத்துவது, பொருத்தமான செய்தியாக இருக்கும் என,…
-
- 3 replies
- 684 views
-
-
தமிழ் நாட்டில் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து பல் வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. பல கட்சிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் செய்கின்றனர். வைகோ அவர்களின் தலைமையில் ராஜபக்சேவிற்கு கறுப்புக் கோடி காட்ட பல ஆயிரம் பேர்கள் மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இன்னும் பல தமிழ் உணர்வாளர்கள் தனித் தனியே மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தங்கள் போராட்டத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர். ராஜபக்சேவிற்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தால் தமிழக தொடர் வண்டிகள் போக்குவரத்து தமிழகமெங்கும் முடங்கியது. சுமார் 50,000 பேர்கள் பங்குபெற்ற இப்போராட்டத்தை கட்டுப் படுத்த காவல் துறை தி…
-
- 17 replies
- 1.8k views
-
-
காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டம்: 30 ஆயிரம் பேர் பங்கேற்பு By Jwaferkhan 2012-09-21 15:30:49 அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் திரைப்படத்துக்கெதிராகவும் அமெரிக்க அரசாங்கத்துக்கெதிராகவும் சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பாரிய ஆர்ப்பாட்டமும் கண்டனப் பேரணியும் இன்று புனித ஜூம்ஆ தொழுகையைத்தொடர்ந்து காத்தான்குடியில் இடம்பெற்றது. நகரசபை பள்ளிவாயல் சம்மேளனம் உட்பட பல அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பாட்டத்தில் பராக் ஒபாமாவின் நூற்றுக்கணக்கான கொடும்பாவிகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டன. http://www.virakesari.lk/article/local.php?vid=756
-
- 4 replies
- 950 views
-
-
[size=2]தமிழகத்திற்கு வந்த சிங்களர்கள் - தமிழுணர்வாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ( படங்கள் )[/size] [size=2]19.09.2012 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழகத்தின் பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை எதிர்த்து யுத்தம் விரும்பா புத்தன் பூமியில் ரத்தம் குடித்த ராஜபக்சேவுக்கு வரவேற்பா, திரும்பிப்போ! திரும்பிப்போ! என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். [/size] [size=2] அதன் தொடர்ச்சியாக 21.09.20.12 சென்னை மத்திய தொடர் வண்டி நிலையத்தில் தமிழகத்தை சுற்றிப்பார்க்க வந்திறங்கிய சிங்களர்களை அனுமதியோம்! அனுமதி யோம்! தமிழர்களை கொன்றொழித்த சிங்களர்களை தமிழ் பூமியில் அனுமதியோம். திருப்பி அனுப்பு! திருப்பி அனுப்பு! தமிழக அரசே திருப்பி அனுப்பு என்ற…
-
- 0 replies
- 650 views
-
-
[size=4]தமிழ்நாடு சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர் தங்கவேல் விஜயராஜ் அவர்கள் தமிழின விடுதலைக்காகவும் தமிழீழ மக்களுக்கு நியாயம் வேண்டியும் தன்னைத்தானே தீமூட்டி ஈகச்சாவடைந்துள்ளார்.[/size] [size=4]தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுச் சுவட்டில் பல்லாயிரம் வீரர்கள் தம்முயிர்களை ஆகுதியாக்கியுள்ளனர். இவ்வாறு தமிழரின் விடுதலைக்காகப் புறப்பட்ட பல்லாயிரம் வீரர்களின் ஈகத்தின் வரிசையில் செயல் வீரன் தங்கவேல் விஜயராஜ் தன்னையும் இணைத்துக் கொண்டார்.[/size] [size=4]2009 மே 18 இன் தமிழின அழிப்பின் உச்சத்தில் வெற்றிக்களிப்பில் சிங்களம் இன்னமும் மிதந்து கொண்டிருக்கின்றது. இதேவேளை தமிழர் வரலாற்றில் உயிரும் சதையும் கலந்த மறக்க முடியாத மாபெரும் மானிட அழிவின் எச…
-
- 0 replies
- 536 views
-
-
[size=4]'எமது மக்களை பாதுகாப்பதற்கு எங்கள் தேசத்தை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் மக்களின் அழிவைத் தடுக்க முடியாது' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். முல்லைத்தீவில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு தொடந்து உரையாற்றிய அவர் கூறுகையில், 'மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக இன்று போராடுகின்றார்கள். அவர்களை முகாம்களுக்குச் சென்று அச்சுறுத்தி வெளியேறவிடாமல் இராணுவம் தடுக்க முற்பட்டுள்ளது. சொந்த மண்ணுக்குச் செல்லவேண்டும் என்பதற்காக நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் வந்திருக்கின்றனர். …
-
- 0 replies
- 494 views
-
-
நிலஆக்கிரமிப்புக்குஎதிராகவும் மீள்குடியேற்றத்தைவலியுறுத்தியும் த.தே.ம.முன்னணியினால் முல்லைத்தீவில்நடத்தப்பட்டஆர்பாட்டத்ததை குழப்புவதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் களத்தில் இறக்கப்பட்டு இருந்தனர். வெள்ளை ரீசேட்டுடன் இராணுவப் புலனாய்வாளர்கள் இந்தஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களைஅச்சுறுத்தனர். இவர்களின் செயற்பாட்டினைமக்கள் திரட்டு எதிர்த்துஅவர்களை வெளியேற்றினர். தமிழ் தேசியமக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் இராணுவப்புலனாய்வுப் பிரிவினருடன் கருத்துமோதலில் ஈடுபட்டதுடன் அவ்விடத்திலிருந்து அவர்களை வெளியேற்றுமாறு பொலிஸாருக்குஉத்தரவிட்டனர். இந்த இராணுவப் புலனாய்வுப் பிரினர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை தங்களது வீடியோக் கமராவினால் காட்சிகளை ஒளிப்பதிவு செய்து கொண…
-
- 0 replies
- 480 views
-
-
[size=4]'விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது தமிழ் மக்களின் வீழ்ச்சி என்று கருதிவிடக்கூடாது. ஒரு வரலாற்று அத்தியாயம் புதைக்கப்பட்ட முல்லைத்தீவில் நாங்கள் இன்று புதிய ஒரு அத்தியாத்தை தொடங்கியிருக்கின்றோம். நாங்கள் எழுப்பிய கோசங்கள் மூலம் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு இது விளங்கியிருக்கும்' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கோப்பாப்பிளவு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில், 'அழிவுகளையும் அடக்கு முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் தான் ராஜபக்ஷ அரசாங்கம் வடபகுதி மக்கள…
-
- 0 replies
- 408 views
-
-
நிலஆக்கிரமிப்புக்குஎதிராகவும் மீள்குடியேற்றத்தைவலியுறுத்தியும் த.தே.ம.முன்னணியினால் முல்லைத்தீவில் கண்டன ஆர்பாட்டம் ஒன்று இன்று 21 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நடைபெற்றுள்ளது THX http://newjaffna.com
-
- 1 reply
- 529 views
-
-
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சாஞ்சியில் இன்று நடைபெற்ற பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புக் கருதி மேடையில் அமைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தே உரையாற்றியுள்ளார். முன்னதாக போபாலில் இருந்து வீதி வழியாக மகிந்த ராஜபக்சவை சாஞ்சிக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், வீதிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆனால், பாதுகாப்புக் கருதி அவரது பயணத்திட்டம் மாற்றப்பட்டு, உலங்குவானூர்தி மூலம் போபாலில் இருந்து சாஞ்சிக்கு அழைத்து வரப்பட்டார். சாஞ்சியில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் …
-
- 4 replies
- 716 views
-
-
[size=4] [/size] [size=4]நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தோல்வியயைத் தழுவிக்கொண்ட அரசாங்கம் தான் தற்போது அங்கு ஆட்சியையும் அமைத்திருக்கின்றது. இத்தகைய செயற்பாடானது ஒரு ஜனநாயக மீறலாகவே அமைந்துள்ளது ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சபையில் தெரிவித்தது. பாராளுமன்றத்தின் நேற்று வியாழக்கிழமை அமர்வின்போது நடைபெற்ற 2012ஆம் ஆண்டின் அரசிறை நிலைமை தொடர்பாக அரையாண்டு அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ௭ம்.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட ஜனந…
-
- 6 replies
- 562 views
-
-
ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் நாளை முடிவடைகின்ற நீதிக்கான மிதிவண்டிப் பயணம் தாயக உணர்வுடன் எழுச்சிமிக்க ஆதரவுடன் ஜனீவாவை நோக்கி நகர்கிறது.ஏழாவது நாளாக நேற்று காலை Bern நகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மாலை Renens நகரத்திற்கு வந்தடைந்தது .திட்டமிட்டபடி திரு வைகுந்தன் அவர்கள் நாளை ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஐரோப்பாவில் வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனும் கோசத்துடன் நாளை ஜெனீவாவிற்கு படையெடுப்பார்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அந்தந்த நாட்ட தமிழ் ஒருங்கிணைப்புக்குழுவினர் அறிவித்துள்ளனர். பல நாட்களாக தாயக உணர்வுடன் தமிழ் மக்களின் விடிவிற்காக கால்கள் மரத்துப்போக தளராத வேகத்துடன் விர…
-
- 0 replies
- 443 views
-
-
இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த போர்க்குற்றவாளி ராஜபக்ஷ கிழக்கு மக்கள் இன மத பேதங்களைக் கடந்து தன்னுடனேயே இருப்பதாக படுபொய் உரைத்துள்ளார். கிழக்கில் மஹிந்தவுக்கு எதிராக 65 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளனர், நயவஞ்சகத்தாலும், பணம் மற்றும் பதவிகள் கொடுத்தும் முஸ்லிம் காங்கிரஸை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்திருக்கும் மஹிந்த அரசு மக்கள் தம்முடனேயே இருக்கின்றார்கள் எனக் கூறுவது அருவருக்கத்தக்க செயலாகும், ஆனாலும் இந்திய முட்டாள் அரசியல் தலைவர்கள் மஹிந்தரின் பச்சைப்பொய்களை ஏற்றுக்கொள்வார்கள். http://thaaitamil.com/?p=32847
-
- 2 replies
- 453 views
-
-
[size=4] [/size] [size=4]சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை ௭டுக்க வேண்டும் ௭னக்கோரி தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறவினர்கள் ஜனாதிபதியிடம் வழங்குவதற்கென மகஜர் ஒன்றை கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளார்கள். கிளிநொச்சி பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக கிளிநொச்சிக்கு ஜனாதிபதி வருகை தரவுள்ளதை முன்னிட்டு இந்த மகஜரைத் தாங்கள் கையளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மகஜரின் முழுவிபரம் வருமாறு அவசர கால மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மிக நீண்ட காலமாக சிறைச்சாலையில் வாடும் ௭மது உறவுகளை ௭ம்மோடு இணைத்து விடுங்கள், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் …
-
- 2 replies
- 531 views
-
-
அமெரிக்காவில் திரைப்படம் வெளியிட்டதற்கு சம்மாந்துறை நீதிமன்றத்தை தாக்கிய புத்திசாலி தனம் முகமது நபிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதாக கூறி அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சம்மாந்துறை மாவட்ட நீதிமன்றத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களே இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர். இந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைக்கப்பட்டதால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோன்று இரு மாதங்களுக்கு முன் மன்னாரிலும் முஸ்லீம்கள் நீதிமன்றத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.…
-
- 5 replies
- 1k views
-
-
[size=4]இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கேற்ப இலங்கையில் அதிகாரப்பரலாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சாஞ்சியில் அமையவுள்ள பௌத்த பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு மத்தியப் பிரதேச மாநில அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குமிடையில் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்த இணக்கம் காணப்பட்டது. இதன்போதே ஜனாதிபதியிடம், இந்தியப் பிரதமர் இவ்வாறு கூறினார்.…
-
- 4 replies
- 487 views
-
-
[size=4](எஸ்.கே.பிரசாத்)[/size] [size=2][size=4]முல்லைத்தீவில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோரின் வாகனங்கள் மீது இனந்தெரியாதோர் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய பொதுமக்களின் பஸ்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேட்பாபிளவு மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்னா…
-
- 0 replies
- 427 views
-
-
இனத் துரோகிகளின் பட்டியலில் ஹக்கீமும்;இடதுசாரிகள் கடும் தாக்கு சுகபோக அரசியலுக்காகத் தனது இனத்தைக் காட்டிக்கொடுத்தது மட்டுமல்லாது, இனத்தின் தனித்துவத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இனவாத கொடுங்கோல் மஹிந்த அரசின் காலடியில் அடகுவைத்துள்ளது என்று இடதுசாரிக் கட்சிகள் குமுறி சீறிப்பாய்ந்துள்ளன. அத்துடன், இலங்கை வரலாற்றில் இனத்துரோகிகளின் பட்டியலில் கருணா, பிள்ளையான் ஆகியோருக்கு அடுத்தபடியாக சலுகைகளுக்கு அடிபணிந்து தற்போது அமைச்சர் ஹக்கீமும் இணைந்துகொண்டுள்ளார் என்றும் இடதுசாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதேவேளை, புனித குர்ஆனில் போதிக்கப்பட்டுள்ள சிந்தனைகளைப் புறந்தள்ளிவிட்டு, மஹிந்த சிந்தனையில் போதிக்கப்பட்டுள்ள மோசடிகள…
-
- 0 replies
- 708 views
-
-
யாழ். போதனா மருத்துவமனையில் குருதித் தட்டுப்பாடு; தன்னிறைவு காண மக்களுக்கு அழைப்பு யாழ். போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் O+ , O- , மற்றும் A+ ஆகிய குருதிகள் தட்டுப்பாடாகவுள்ளதாகவும், குருதிகளின் இருப்பில் தன்னிறைவு காண்பதற்கு மக்கள் குருதி வழங்கி உதவுமாறும் யாழ். போதனா மருத்துவமனை இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி திருமதி தாரணி குருபரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் எமது ஒன்லைன் உதயனுக்குத் தெரிவிக்கையில், யாழ். போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் மாதாந்தம் ஆயிரம் பைந்து குருதி தேவைப்படுகின்றது. குறிப்பாக குருதி வகைகளுள் O+ , O- , மற்றும் A+ ஆகியவற்றின் தேவை அதிகரித்துக் காணப்படுகின்றன. குறித்த குருதி வகைகளில் தற்போத…
-
- 0 replies
- 327 views
-
-
இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இராணுவப் பிரசன்னம் குறையவில்லை ௭ன்று இந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினரின் ௭ண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதும், இதுவரை ௭ந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இலங்கையில் மொத்தமாக உள்ள 19 இராணுவ பிரிவுகளில், 16 பிரிவுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே நிலை கொள்ள செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் மூன்று படைப்பிரிவுகள் காணப்படுகின்றன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மூன்று பிரிவுகள் உள்ளன. அத்துடன் வவுனிய…
-
- 0 replies
- 364 views
-
-
[size=4]இலங்கையில் நம் சொந்தங்கள் கொன்று குவித்த ராஜபக்சவுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து தமிழனை அவமதிக்கிறது மன்மோகன் சிங் அரசு என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]எமது நாட்டின் மீனவர்கள் 554 பேரைக் கொன்று, அவர்களின் மனைவிமார்களின் தாலியை அறுத்த சிங்கள கடற்படையின் தலைவராக இருப்பவர் ராஜபக்ச எனவே அவரை இந்தியாவிற்கு அழைக்கக் கூடாது.[/size] [size=4]இலங்கை அதிபர் இந்தியா வருவதற்கு தமிழர்களாகிய நாம் தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வருகிறோம். ஆனால், இலங்கை எங்களது நட்பு நாடு என்று தொடர்ந்து கூறி வருகிறது. எம் இனத்தை அழித்த சிங்களவன் உனக்கு நண்பனென்றால், தமிழர்கள் உங்களுக்கு பகைவர்களா என அவர் கேள்வி எழுப்பியுள…
-
- 0 replies
- 404 views
-
-
ஐ.நாவிற்கான மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் இரத்தானது ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியா !! ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்தக் கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றவிருந்த சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக, நியூ யோர்கில் உள்ள ஐ.நா தலைமையகத்திற்கு முன்னால், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றிற்கு தயாராகி வரும் நிலையில், மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் இரத்தாகியுள்ள செய்தி வெளிவந்துள்ளது. இதேவேளை, பிரதமர் வி.உருத்திரகுமாரன…
-
- 5 replies
- 1.1k views
-
-
[size=4]மிக அண்மைக்காலம் வரை சிறிலங்காவிலுள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் அகதித் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் சிங்கள செயற்பாட்டாளர்கள் போன்றோரும் சிறிலங்காவை விட்டு புலம்பெயர்வது அதிகரித்து வருகின்றது. இவ்வாறு பிபிசியின் முன்னாள் செய்தியாளர் Frances Harrison* அண்மையில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும், அவரது மனைவி மற்றும் ஒன்பது வயதேயான பிள்ளையும் தமது கைப்பெட்டிகளுடன் ஒரு நாள் இரவு முழுவதையும் பாரிசிலுள்ள பூங்கா ஒன்றில் கழித்தனர் என்கின்ற இதயத்தை வெடிக்கச் …
-
- 0 replies
- 256 views
-
-
[size=2][/size] [size=2][size=4]கடும் எதிர்ப்பு மற்றும் பதற்றத்துக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் இந்திய மத்திய பிரதேச மாநிலம், போபால் நகர், சாஞ்சியை சென்றடைந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இதேவேளை, ஜனாதிபதிக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி போபால் நகருக்குள் உட்புக முயன்ற ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உட்பட அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சாஞ்சியில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொள்வதற்காக அப்பிரதேசத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றடைந்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதியைக்…
-
- 0 replies
- 282 views
-