Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர் தாயக பூர்வீக நிலத்தைக் கூறுபோட்டு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அபகரித்து, வரலாற்று ரீதியாக பெரும்பான்மையாக இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை தலை கீழாக மாற்றப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், சிங்கள இனவாதிகள் அதன் அடுத்த கட்டமாக தமிழர்களின் அரசியல் பலத்தை முழுமையாக சிதைப்பதற்கு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை பாவிக்க திட்டமிடுகின்றனர். சுதந்திரமும் இறைமையும் கொண்ட நிலப்பரப்பை வரலாற்று ரீதியாக தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கு பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபைகள் ஒரு அரசியல் தீர்வின் அடிப்படையாக கருதப்பட முடியாது. ஒரு வருடத்திற்கு முன்னதாகவே கிழக்கு மாகாண சபையினைக் கலைத்து விட்டு அதற்கு புதிய தேர்தலை நடத்துவதற்கு ஆழம…

  2. வட கிழக்கு இணைந்த தாயகம் தமிழர்களின் பூர்வீக தேசம் அதனை சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து மீட்க கடந்த 60 வருடங்களுக்கு மேலாக நாம் போராடுகின்றோம்.அந்த போராட்டத்தில் விடுதலையின் வித்தாகிய மாவீர்களின் தியாகங்கள் இன்றும் வீண்போகவில்லை. அதனை அடிப்படையாக கொண்டு தமிழ் தேசியம் வெல்ல இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையில் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் கல்குடா தொகுதி வேட்பாளர்களான கி.சேயோன், ப.சிவநேசன், கி.துரைராசசிங்கம் ஆகியோரை ஆதரித்து சந்திவெளியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாற…

  3. இலங்கையர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசும் கூட்டு மத்திய அரசாங்கத்தின ஒத்துழைப்பின்றி தமிழகத்தில் இலங்கையர்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது என வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரஜைகள் மீது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்திட்டமிட்ட வன்முறைகள், மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி அரங்கேற்றப்படமுடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையர்கள் மீது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்அடக்குமுறைகள் தொடர்பில் மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமைவருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தென் இந்தியாவிற்கு விஜயம் செய்யும் விளையாட்டு வீரர்கள், இராணுவப்படையினர், யாத்ரீகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலா…

  4. இலங்கை இராணுவத்தினருக்காக பயிற்சிகள் நிறுத்தப்பட மாட்டாது - இந்தியா 05 செப்டம்பர் 2012 இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சிகளை நிறுத்தப் போவதில்லை என இந்திய மத்திய அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. தமிழக அரசியல்வாதிகள் அழுத்தங்களை பிரயோகித்த போதிலும் இலங்கைப் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் நடவடிக்கையாக உடனடியாக நிறுத்தும் திட்டமில்லை என தெரிவித்துள்ளது. எனினும், இரு நாட்டு படைவீரர்களும் கூட்டாக இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட உள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெங்களுர், கன்னுர் மற்…

  5. தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. முன்னறிவித்தல்கள் ஏதுமின்றி இரகசியமாக, திடீரென நேற்று யாழ்ப்பாணம் வந்தார் சந்திரிகா குமாரதுங்க. கிழக்கு அரியாலை மற்றும் அச்சுவேலிப் பகுதிகளுக்குச் சென்ற அவர் போரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசினார். “தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு பற்றி நான் பல காலங்களாகப் பேசி வருகின்றேன். இன்றும் அதனைத்தான் கூறுகின்றேன். தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான அரசமைப்பு ஒன்றை வரைந்து நான் அதனை நாட்டுக்கு முன்வைத்தேன். அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதில் தமிழ் மக்களுக்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. தனிந…

  6. வெளி நாட்டு தமிழர்களின் நாடி பார்க்கும் "றோ" வெளி நாடுகளில் இந்தியாவிலிருந்து படையெடுக்கும் ஜோதிடர்களில் ஒரு பகுதியினர் றோ அமைப்பினரின் ஏஜன்டாக உள்ளனர்.அண்மையில் இந்தியாவுக்கு காசு அனுப்பும் போது ஜோதிடர் ஒருவர் உயரதிகாரிகளுக்கான கடவுச்சீட்டு(Diplomatic passport) வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.இவர் கனடாவின் மிசிஸாகா பகுதியிலுள்ள கடையொன்றில் பணம் அனுப்பும் போது இவ்விடயம் தெரிய வந்துள்ளது.இவர் பற்றி விசாரித்தபோது கிழமைக்கு $3000-5000 வரை இந்தியாவுக்கு பணம் அனுப்புவதாகவும் தெரிய வந்துள்ளது.இதைவிட முக்கிய விடயம்:-இந்து சமய முறைப்படி ஆலயம் போன்ற இடங்களில் தான் தகடுகளை வைத்து பூஜிக்க வேண்டும்.இதை வீடுகளில் வைப்பதால் குடும்பங்களில் பிரச்சனைகள் தலை தூக்கும் என்பது மரபு.இதைவிட…

  7. [size=2] [size=4]இலங்கைக்கு வரும் நவிப்பிள்ளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=2] [size=4]எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரான நவநீதம்பிள்ளை, தனது விஜயத்தின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=2] [size=4]எனினும் அவரது முன்னைய நிகழ்ச்சி நிரலில் படி அவர் கொழும்பில் தங்யிருந்தே அனைவரையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார்.[/size][/size] [size=2] [size=4]எனினும் தற்போது அவர் போர் நடைபெற்ற இரு மாகாணங்களுக்கும் செல்வதற்கான நிகழ்ச்சி நிரலை தனது பயணத்தில் …

  8. மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறுச்சிக்கட்டி மரைக்கார் நகர் கிராமத்தில் உள்ள மீள்குடியேறியுள்ள முஸ்ஸிம் மக்களின் தற்காலிக கொட்டில்களை கடற்படையினர் எறியூட்டியுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து சென்ற முஸ்ஸிம் மக்கள் மீண்டும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 43 குடும்பங்கள் உள்ள மரைக்கார் நகர் கிராமத்தில் கடற்படையினர் இருந்த நிலையில் அவர்களை வெளியேற்றிய நிலையில் குறித்த மக்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திங்கட்கிழமை (3-09-2012) இரவு 8 மணியளவில் கடற்படையினர் குறித்த மக்களுடன் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் அந்த மக்களின் தற்காலிக குடிசைகளுக்கு த…

  9. மறு அறிவித்தல் வரும் வரை தமிழ்நாட்டிற்குச் செல்லவேண்டாம்! 03 செப்டம்பர் 2012 இலங்கைக் குடி மக்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல் இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு செல்லும்; இலங்கையர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு, இலங்கை பிரஜைகள் தங்களது பாதுகாப்பை மனதில் கொண்டு, இனி மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாடுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியிருக்கிறது. தமிழ்நாட்டில் 184 இலங்கையர்கள் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களு…

  10. ஈழ விடுதலை அமைப்புகளின் சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்! - விகடனிடம் பழ.நெடுமாறன்.. [saturday, 2012-09-01 11:02:13] ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மை​யானவர். ஈழத்தில் இனஅழிவுப் போர் நடந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி... மத்தியில் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கவில்லை என்பது தமிழக மக்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாத அவர், 'விடுதலைப்புலிகள் நடத்திய சகோதரச் சண்டை காரணமாகத்தான் இந்த இனஅழிப்பு நடந்தது� என்று திரும்பத் திரும்பச் சொல்லித் திசை திருப்பப் பார்க்கிறார். இஞ்சி…

  11. எதிர்ப்புகள் இருந்தாலும் மகிந்த ராஜபக்சே இந்தியா செல்வார்: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2012, 11:28 [iST] கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது உறுதி என்று அவரது செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர உறுதியாகத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி அருகே பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து சாஞ்சியிலேயே கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார். இந்நிலையி…

  12. [size=3][size=4][/size][/size] [size=3][size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவை தனது தொகுதிக்கு அழைத்து புத்தவிகாரைக்கு அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ள இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவியும் பாரதிய ஜனதா கட்சி தலைவியுமான சுஷ்மா சுவராஜின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.[/size] [size=4]எதிர்வரும் 21ஆம் திகதி சிறிலங்கா அதிபர் ராஜபக்ச இந்திய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் அழைப்பின் பேரில் அவரது சொந்தத் தொகுதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் நடைபெறும் புத்த மத விழாவிற்கு பங்கேற்க வருகை தருகிறார். இது நாடு முழுவதும் உள்ள இந்துக்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங…

  13. [size=6]டெசோ: ஒரு பழைய தாத்தாவின் பல்லவிகள்! [/size] யோ. கர்ணன் பலத்த வாதப்பிரதிவாதங்களுடன் டெசோ மாநாடு முடிவடைந்துள்ளது. மாநாடு நடைபெறுவதாக அறிவித்ததிலிருந்து தமிழ் ஊடகப்பரப்புப் பெரிய போர்க்களமாகவே காட்சியளித்தது. குறிப்பாக இணைய உலகம். இணையத்தில் சாத்தியமாகயிருந்த சுதந்திரம், இதனை கட்டற்ற போர்க்களமாகவே மாற்றியிருந்தது. இந்தக் களங்களில் டெசோவின் செயல் திறன் அல்லது அர்த்தம் குறித்தெல்லாம் விவாதிக்கப்படவில்லை. கருணாநிதி குறித்தே அதிகமும் விமர்சிக்கப்பட்டது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு அவருக்கு என்ன அருகதையுள்ளது என்பதே பெரும்பான்மையானவர்களின் வாதமாகயிருந்தது. உண்மையில் இந்த மாநாடு குறித்த பிரமாண்டமான விளம்பரத்திற்கு மாநாட்டிற்கான எதிர்ப்புகள் பேருதவியாக…

  14. [size=5]இன்றைய தேவை, நிதானம். ஆத்திரமும், அவசரமும், அரசியலும் அல்ல![/size] [size=5]- [/size][size=4]ஆசிரியர் தலையங்கம் , தினமணி [/size] [size=4]இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் இந்திய சுங்கத் துறை கால்பந்து அணியுடன் நட்புரீதியில் விளையாடுவதற்கு அனுமதி தந்த ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்க அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.[/size] [size=4] இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் அநீதி இழைக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை. இலங்கை அரசின் மீதான நமது கோபம் நியாயமானது. ஆனால், இலங்கையைச் சேர்ந்த, கேள்விப்படாத ஒரு கால்பந்து அணி விளையாடக்கூடாது என்று சொல்வதும், அந்த அணியை அனுமதித்த அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்வதும…

  15. [size=2][/size] [size=2][size=4]இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இலங்கையினால் விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு தெரிவித்துள்ளது. 'இலங்கையர்கள் தமிழ் நாட்டிற்கு பயணம் செய்வது குறித்து இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையையை நாம் கவனத்திற்கொண்டுள்ளோம் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தமிழ் நாடு உட்பட இந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாந…

  16. இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக நடந்து கொண்டுள்ள மனித அவலம் 04 செப்டம்பர் 2012 இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக நடந்து கொண்டுள்ள மனித அவலம் ஒன்று இன்னும் ஊடகங்களில் பார்வையில் எட்டாமல் உள்ளதுடன் இது இருட்டடிப்புச செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் 9ம் திகதி; இந்தியாவில் தமிழ்நாட்டு கிழக்கு கடல் மகாவலிபுரத்திற்கும் காசிமேட்டுக்கும் அடையில் உள்ள ஒரு பகுதியில் உள்ள துறைமுகம் ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கி ஈழப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 53 பேருடன் புறப்பட்ட படகு ஒன்று எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்தோனேசியாவில் கரையொதுங்கியுள்ளது. அப்படகை தற்போது இந்தோனேசியன் கடற்படை சுற்றி வளைத்துள்ளதுடன் அவர்களை கரையிறக்கி சிறீலங்கா அரசிடம் கையளிக்க முயற்சி…

    • 2 replies
    • 621 views
  17. மத்திய பிரதேசத்தில் நடக்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்து வருவதாகக் கூறிய பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து வருவேன் என்பதா? சுஷ்மாவுக்கு வைகோ எச்சரிக்கை நெல்லை மாவட்டத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது, மதிமுக இனி வரும் காலங்களில் கவனமாக அடி எடுத்து வைப்பதுடன் ஒவ்வொரு முடிவும் வெற்றிகரமாக அமைந்திடும் வகையில் செயல்படும். பாஜவை சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் மத்திய பிரதேசத்தில் சாஞ்சியில் நடைபெற உள்ள புத்தர் 2060வது விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் செய்த தவறை பாஜகவும் செய்தால் அக்கட்சியின் மீதும…

  18. நீரின்றி விக்டோரியா நீர்த்தேக்கம் By Ranjan 2012-09-04 12:27:00 மலையகத்தின் நீரேந்துப் பகுதிகளுக்கு குறித்த காலத்தில் மழை கிடைக்காததால் மின் உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை சேமித்து வைத்து விநியோகிக்கும் பல நீர்த்தேக்கங்கள் நீரின்றிக் காணப்படுகின்றன. மகாவலி கங்கையில் அமைக்கப்பட்டுள்ள விக்டோரியா நீர்த்தேக்கமும் நீரின்றிக் காணப்படுகின்றது. நீரின்றிக் காணப்படும் தரையில் வளர்ந்துள்ள சிறு புற்களை உண்பதற்காக அதிகளவிலான கால்நடைகள் இங்கு சுற்றித் திரிகின்றன. இந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தினுள் அமிழ்ந்து போன பழைய கட்டிடங்களின் இடிபாடுகள், பாலங்கள் என்பவற்றைக் காண்பதற்காக அதிகளவிலான உல்லாசப் பிரயாணிகள் மற்றும் கண்டி …

    • 2 replies
    • 1.3k views
  19. வரும் நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து ஆராயப்படவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு சிறிலங்காவில் இருந்து அமைச்சர்களோ அல்லது மூத்த அதிகாரிகளோ செல்லமாட்டார்கள். ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையில் சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளே இந்தக் கூட்டத்தில் பங்கேற்பர் என்று சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். அதேவேளை, ஜெனிவாவில் வரும் நவம்பர் முதலாம் நாள் பூகோள கால மீளாய்வின் போது…

  20. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தமிழ் தமிழர் இயக்கத்தின் கொள்கைப்பரப்பு பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பொதுக்கூட்டத்தில் ஈழ கவிஞர் காசியானந்தன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ் ஈழம் என்பது தமிழர்களின் தாயகம். ஈழப் போர் தொடங்கியபோது சென்னை இலங்கை தூதரகம் முன்பு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணா விரதமிருந்தவர்களை ஆதரித்துப் பேசினார் மூதறிஞர் ராஜாஜி. அதன் பின் நடந்த இரண்டு ஈழப் போராட்டத்திலும் நாம் பதினைந்தாயிரம் ஏக்கர் பரப்பு நிலத்தை சிங்களவரிடம் இழந்தோம். ஆனால் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் ஆயுதமேந்திய காலங்களில் நாம் கையளவு நிலத்தைக் கூட பறிகொடுக்கவில்லை. முள்ளி வாய்க்கால் கொடுமையைப் பற்றி இந்திய அரசு சொல்லத் தயங்குகிறது. ஜந்தாயிரம் வீடுகள்…

    • 2 replies
    • 772 views
  21. [size=4] புத்தளம் நகரின் பல பகுதிகளில் பேரீச்சம்பழம் விளைச்சல் கண்டுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் நாட்டப்பட்ட பேரீச்சம் மரங்களில் முதன்முறையாக விளைச்சல் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க) [/size] [size=4]http://www.tamilmirr...4-06-19-24.html[/size]

  22. வெள்ளை மாளிகை நோக்கி ஒர் வேண்டுகோள் ! By naatham On 4 Aug, 2012 At 03:32 PM | எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா தொடர்பிலரான மீளாய்வுக் கூட்டத் தொடரினை மையப்படுத்திஅமெரிக்காவின் வெள்ளைமாளிகையினை நோக்கி மின்னொப்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஐ.நா மீளாய்வு விவாத்தில் இலங்கையின் மனித உரிமைகளின் முன்னேற்றங்களை பற்றி 2008ம் ஆண்டய அறிக்கையில் சபையால் கவனயீர்ப்புச் செய்யப்பட்டு இருப்பவற்றின் தொடராகவே இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் அந்தக் கவனயீர்ப்புக்குப் பிந்திய காலப்பகுதியில் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் பெரும் இனப்படுகொலையே நடந்தேறியுள்ள நிலையில் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விவ…

  23. தி.மு.க..தலைவர் மு.கருணாநிதியுடன் ஈழதேசம் சிறப்பு நேர்காணல்..! ஈழதேசம் : அய்யா வணக்கம்..! தமிழ் வாழ்க..! மு.க. : ம்ம்.. ம்ம்..! பரவாயில்லையே தமிழ் வாழ்க என்று கூறுகிறாய்..! யார் நீ..? தமிழனா, திராவிடனா..? ஈழதேசம் : போன ஆட்சியில் நீங்கள் முதல்வராக இருக்கும் பொழுது உலகத் தமிழர் மாநாடு நடத்தினீர்களே..? அப்பொழுது எல்லா அரசு கட்டிடத்திலேயும் எழுத சொல்லி உத்தரவு போட்டீர்களே..? அந்த பில்டிங்குகளை காணும் பொழுதெல்லாம் 'தமிழ் வாழ்க' என்று படிப்பேன் அய்யா..! மு.க. : நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லையே தம்பீ..? ஈழதேசம் : நான் பதில் சொன்னால் நீங்கள் பேட்டி, கீட்டி... எல்லாம் கிடையாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தான் அய்யா..! …

  24. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயமாகத் தோல்வியைத் தழுவும் என்று சிறிலங்கா அரசுக்கு புலனாய்வு அமைப்புகள் தகவல் வழங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணசபைக்கு வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளதாக அந்த புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பரப்புரைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் நிலையிலும் அதற்கடுத்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், ஐதேக ஆகியன இரண்டாம், மூன்றாம் இடங்களிலும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புகள்…

  25. சிறிலங்கா அரசுடன் சுமுகமான உறவைக் கொண்டிராத இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவுக்கு, இந்தியா மத்திய அரசு ஆறுமாத சேவை நீடிப்பை வழங்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. இந்தியாவின் இந்த அறிவிப்பு, அசோக் கே காந்தாவை அடுத்து பதவியேற்கும் புதிய தூதுவர் மூலம், உறவுகளை கட்டியெழுப்பத் திட்டமிட்டிருந்த சிறிலங்காவின் முகத்தில் இராஜதந்திர ரீதியாக கொடுக்கப்பட்ட அறை என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடையவிருந்தது. இதனால் சற்று நிம்மதியடைந்த சிறிலங்கா அரசு புதிதாக வரும் தூதுவர் மூலம் சுமுகமான உறவைக் கட்டியெழுப்பும் எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், சிறிலங்கா அரசுக்கு அதிர்ச்சியைக் கொட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.