ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
நாடு மஹிந்தவிடம்.. பொருளாதாரம் பஸிலிடம்.. பாராளுமன்றம் சமலிடம்… என இன்று நாடே மஹிந்த குடும்பத்தின் கையில் சிக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான லச்ஷ்மன் கிரியெல்ல கிண்டலடித்துப் பேசியுள்ளார். வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தாவது, நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக மஹிந்தையர் அரசு தெரிவிக்கிறது. ஆனால் ஒன்றுமே அவ்வாறு இடம்பெறவில்லை. அனைத்தும் வெறும் பேச்சளவிலேயே இடம்பெறுகின்றன. மஹிந்தையர் அரசில், ஒரு தொழிற்சாலையாவது நிர்மாணிக்கப்பட்டமையை நிரூபித்துக் காட்டினால் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யத் தயார் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 560 views
-
-
சிறிலங்காவின் வடக்கிலுள்ள நான்கு தீவுகளுக்கு உயிரியல் மின்சாரம் வழங்குவதென்ற போர்வையில் இந்த தீவுகளைக் கையகப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முற்பட்டு வருகின்ற இரகசியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரியல் மின்சாரம் என்ற போர்வையில் இங்கு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. இந்தக் காற்றாலைகளை அமைப்பதற்கென இங்கு கடற்படை முகாம்களும் அமைக்கப்படவுள்ளன. மின்சாரம் என்ற பெயரில் கடற்படை முகாம்களை அமைத்து இந்த தீவுகளைக் கையகப்படுத்துவதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது செல்வாக்கை மேலும் இறுக்குவதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்கிறது. இந்தத் தீவுகளை சிறிலங்கா அரசு கையகப்படுத்துமாயின் எதிர்காலத்தில் மேற்படித் தீவுகளில் தமிழ் மக்கள் வாழ முடியாத நெருக்கடி நிலை ஏற்படுமென்றும் சுட்…
-
- 0 replies
- 375 views
-
-
படுகொலைகளாலும், கடத்தல்களாலும் இதுவரை காலமும் நசுக்கப்பட்ட ஊடக சுதந்திரம் தற்போது சட்டத்தின் கோரப் பிடிகள் ஊடாக அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பத்திரிகை சுதந்திரம் ஒன்றும் விதிவிலக்கில்லை. அதுவும் தமிழ் தேசியத்தை இன்றும் தமது நினைவுகளில் வைத்திருக்கும் ஊடகங்கள் ஒவ்வொன்றும் நீதிக்கு முன்னால் தலைகுனிய வைக்கப்படுவதோடு தண்டிக்கவும் படுகின்றது. ஜனநாயகத்தினை தாங்கி நிற்கும் 4 தூண்களில் ஒன்றாக சொல்லப்படும் ஊடகத்திற்கே இந்த நிலை என்றால். அந்த நாட்டில் வாழுகின்ற சாதாரண மக்கள் இந்த சட்டத்தினால் நீதியான பார்வையில் பார்க்கப்படுவார்கள் என்று நம்புவது முட்டாள் தனமானது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகைள் என்று எடுத்துப்பார்த்தால் பத்திரிகை தர்மத்தில் நின்…
-
- 0 replies
- 308 views
-
-
செந்தூரனை மருத்துவமனைக்கு எடுத்த செல்ல நோயாளி அவசர ஊர்தி வந்துள்ளது. செந்தூரனின் நிலையை பார்த்தும் அலட்சியம் காட்டும் காவல் துறையை பாருங்கள். சக முகாம் வாசிகள் அவரை தூக்கிக் கொண்டு செல்வதையும் பாருங்கள். from facebook தற்போது செந்தூரனின் நிலை மிகவும் மோசம் அடைத்துள்ளது. கடுமையான வயிற்று வழியால் அவர் பாதிக்கப்பட்டு ஆசன வாயிலில் ரத்தமும் வெளியேறி வருகிறது. இன்று மாலை திடீரென்று செந்தூரன் மயக்கம் அடைந்தார் . அவரை உடனே முகாமில் உள்ள காவல் துறை ஆய்வாளர் அலுவலகத்தில் கொண்டு சேர்த்தனர் சக முகாம் வாசிகள். ஆனால் காவல் துறை அதிகாரிகள் வழமை போல அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது. இனிமேலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் விட்டால் அவர் உயிர் பிரிந்து விடும் அபாயம் உள்ளது
-
- 22 replies
- 1.7k views
-
-
[size=3] [size=4]ஆட்சிக்கவிழ்ப்பு சதிக் குற்றச்சாட்டை அடுத்து சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது, கட்டயமாக ஓய்வில் அனுப்பப்பட்ட படையைச் சேர்ந்த 10 மேஜர் ஜெனரல்களில் சமந்த சூரியபண்டார குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த வரும் நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார்.[/size] [size=4]இவர் நான்காவது கட்ட ஈழப்போரின் தொடக்கத்தில், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த 53வது டிவிசனின் தளபதியாக இருந்தவர். ஜெயசிக்குறு சமரின் போது இவர் பயணம் செய்த உலங்குவானூர்தி புலிகளின் தாக்குதலில் வீழ்ந்தபோது இவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். 2008 ஏப்ரலில் முகமாலையில் 53வது டிவிசனின் முன்னகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, இவர் அமெரிக்காவில்…
-
- 2 replies
- 754 views
-
-
[ சனிக்கிழமை, 01 செப்ரெம்பர் 2012, 00:07 GMT ] [ அ.எழிலரசன் ] [size=4]தமிழ்நாட்டில் பூந்தமல்லி சிறப்பு முகாமில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரன் என்ற ஈழத்தமிழ் இளைஞரை, தற்கொலை முயற்சி வழக்கில் தமிழ்நாடு காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர். பூந்தமல்லியில் சிறிலங்கா அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது கியூ பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்குகளை தள்ளுபடி செய்து, அவர்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றம் செய்யக் கோரி கடந்த மாதம் 6ம் நாள் தொடக்கம் செந்தூரன் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இவர்களுக்கு ஆதரவாக மதிமுக தலைமையகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. விடுதலைச…
-
- 5 replies
- 778 views
-
-
சென்ற மே 01ம் நாள் தொழிலாளர் ஊர்வலத்தில் யாழ்ப்பாணத்தை பரபரப்பு அடையச் செய்த ஒரு சம்பவம் நடைபெற்றது. ஊர்வலத்தை ஊடுருவிய இரு இளைஞர்கள் புலிக் கொடியை கையில் ஏந்தியபடி அங்கும் இங்குமாக ஓடினார்கள். புலிகள் மீண்டும் பலம் பெறுகிறார்கள,; மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இந்த விடுதலை வீரர்கள் மீண்டும் வந்து விட்டார்கள் என்ற பேச்சு ஒரு கணம் தோன்றி மறைந்தது. மறைந்ததற்குக் காரணம் இருக்கிறது. தேசியக் கொடியை ஏந்தியவர்கள் வேறு யாருமில்லை மக்களுக்கு தெரிந்தவர்கள் தான். நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாக் காலங்களிலும் உயரமான இடங்களில் புலிக் கொடியை இதே ஆட்கள் பறக்க விடுகிறார்கள். இதற்குப் பின்னணியில் சிங்கள இராணுவம் இருப்பதை மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர். புலிகள் வரவில்லை இராண…
-
- 0 replies
- 683 views
-
-
வவுனியாவில் இளம்பெண் ஒருவர் காணாமற் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவில் உள்ள, பாவற்குளம் மூன்றாம் படிவத்தில் வசித்து வந்த பத்மநாதன் வசந்தமாலா (வயது-32) என்ற இளம் பெண்ணே காணாமற்போயுள்ளார். தனது வீட்டிலிருந்து வவுனியா நகரிலுள்ள மக்கள் வங்கிக்கு கடந்த மாதம் 21ம் நாள் தனது சிறிய தாயாருடன் சென்ற இவர், வங்கிக்கு முன்னால் அவரைக் காத்திருக்கச் சொல்லி விட்டு சென்றார். அதன் பின்னர் அவர், திரும்பி வரவில்லை. இந்தநிலையில் காணாமற்போன பெண்ணின் கைத்தொலைபேசி இலக்கத்திலிருந்து, தன்னை விசாரணைக்காக கூட்டிச் செல்வதாக குறுஞ்செய்தி ஒன்று சிறிய தாயாரின் கைத்தொலைபேசிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அன்றிரவு 8.30 மணியளவில் கைத்தொலைபேசி மூலம் தொடர்பு…
-
- 0 replies
- 519 views
-
-
[size=4]சிறிலங்காவில் இனிமேல் எத்தகைய தவறுகளும் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும், அமைதியை உறுதிசெய்வதுமே அமெரிக்காவின் நோக்கம் என்று சென்னையில் உள்ள அமெரிக்காவின் துணைத்தூதுவர் ஜெனிபர் ஏ மக்இன்ரைர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்குப் பின்னர், அந்தப் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவில் அமைதியை உறுதி செய்வதும், மேற்கொண்டு எத்தகைய தவறுகளும் நடக்காமல் இருக்க உத்தரவாதமளிப்பதும் அமெரிக்காவின் முக்கிய நோக்கம். முக்கிய பிரச்சினைகளில் சிறிலங்கா முன்னோக்கி செல்லும் நிலையில், அனைத்துலக சமூகத…
-
- 2 replies
- 724 views
-
-
[size=3] [size=4]வடக்கு நோக்கி சுற்றுலாப்பயணிகள் படையெடுத்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.இரண்டாம் தவணை விடுமுறை தினத்தை கொண்டாட பெரும்பாலான சிங்கள மக்கள் இம்முறை வடக்கையே தெரிவு செய்திருந்தனர். குறிப்பாக வன்னி மற்றும் யாழ்ப்பாணமே அவர்களது தெரிவாக இருந்தது.முள்ளிவாய்க்காலில் உள்ள போர் காட்சியகம் மற்றும் பிரபாகரனது வதிவிடமென கூறிக்கொள்ளும் முகாம் என்பவை அவற்றினுள் முக்கியமானவை.[/size] [size=4]அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் நயினாதீவும் குறிப்பிடத்தக்கது. ஓரு நாளில் மட்டும் 80 ஆயிரம் பேர் நயினாதீவிற்கு பயணித்து சாதனை புரிந்துள்ளனர்.அதே போன்று பத்து மில்லியனிற்கு மேற்பட்டோர் வடக்கிற்கு பயணித்துள்ளதாகவும் கூறப்…
-
- 0 replies
- 653 views
-
-
[size=4]முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரளிவாளன் ஆகியோரின் உயிரை தூக்குக் கயிற்றில் இருந்து காக்கும் சட்டப் போராட்டத்தில் தமிழக முதல்வர் உறுதியாக நிற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேட்டுக்கொண்டார்.[/size] [size=4]முருகன், சாந்தன், பேரளிவாளன் ஆகிய மூவரின் உயிர் காக்க தன்னையே தீக்கீரையாக்கிக்கொண்ட உயிர்த் தியாகம் செய்த வீரத் தமிழச்சி செங்கொடியின் முதலாண்டு நினைவுப் பொதுக்கூட்டம் காஞ்சி நகரில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் சிறப்புரையாற்றினார்.[/size] http://youtu.be/iIgiW5aVeSs [s…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=5]As many as 400,000 people in the north-central region may be suffering from kidney disease, said doctors taking part in the release of the report. They added that in the past two decades, as many as 22,000 people may have died as a result.[/size] [size=4]நாலு இலட்சம் மக்களை வைத்து செய்த ஆய்வின் படி வடக்கு வடமத்திய மாகாணங்களில் அளவுக்கு அதிகமாக கிருமி நாசினிகளை பாவிப்பது சிறுநீரக வருத்தங்களையும் இறப்புக்களையும் தருவதாக ஐ.நா. கூறுகின்றது ![/size] [size=5]The report states that: “Exposure to a combination of factors that are toxic to the kidneys (rather than one single factor) seems to cause this kidney disease. Toxic factors identified up to now incl…
-
- 9 replies
- 1.8k views
-
-
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள இனவாத அரசு முப்படைகளை ஏவி உலகம் தடை செய்த குண்டுகளையும், நாசக்காரக் குண்டுகளையும் வீசி குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர்கள் உட்பட எங்கள் தமிழக்குல இரத்த உறவுகளை கோரமாக கொன்று அழித்த கொடியவன் ராஜபக்சேவை மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சியில் செப்டம்பர் 21 ஆம் தேதி புத்தமதம் தொடர்பான கல்வி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக அழைத்துள்ளதாகவும், ராஜபக்சே அதில் பங்கேற்கப் போவதாகவும், பாரதீய ஜனதா கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார். கவுதம புத்தர் தன் அரண்மனை சுகபோகத்தை உதறிவிட்டு, காடுகளில் சஞ்சரித்து மனிதகுலத்துக்கு கருணை, அன்பை, அறவழியை, சகிப்புத்தன்மையை போதித்ததோடு அதன்பட…
-
- 1 reply
- 526 views
-
-
புலிகள் மிகச் சுலபமாக ஆயுதங்களை கொள்வனவு செய்தனர்– சவேந்திர சில்வா 01 செப்டம்பர் 2012 யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகச் சுலபமாக ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் எளிதில் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சிறிய மற்றும் இலகு ரக ஆயுத பாவனை தொடர்பான ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் புலிகளின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 593 views
-
-
மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், அங்கு குற்றவாளிகள் தண்டனை இன்றி தமது நடவடிக்கைகளை தொடருவதற்கான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. தொடர்ச்சியாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை தவறியமை, அங்கு எதேச்சதிகார தடுத்து வைப்பு, சித்ரவதை, முறையற்று நடாத்துதல், காணாமல் போகச் செய்யப்படுதல், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது கொல்லப்படுதல் ஆகியவை குறித்து நடவடிக்கைகள் எதுவும் இல்லாத, ´´குற்றவாளிகள் தண்டிக்கப்படாத ஒரு நிலைமையை´´ ஏற்படுத்தியுள்ளது என்று சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இந்த மனித உரிமை மீற…
-
- 2 replies
- 485 views
-
-
ஜெயானந்தமூர்த்தி தொடர்பாக கனடா நக்கீரனின் கருத்துக்கு தாயகத்திலிருந்து தமிழ்மாறன் பதிலடி. கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முற்றாகப் புறக்கணிக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்டததின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் விடுத்த வேண்டுகோள் இன்றைய காலத்திற்கும் எமது கொள்கைக்கும் முற்றிலும் பொருத்தமானது என்பதை என்னைப்போன்ற பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதிலும் கிழக்கு மக்களில் பலர் இந்தத் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையோ அல்லது உண்மையான தீர்வையோ பெற்றுக் கொள்ள முடியாது என்பதையும் உணர்ந்துள்ளனர். நான் எமது கொள்கைக்காகவும் எமது தேசத்திற்காகவும் பதினேழு ஆண்டுகள் என்னை அன்பணித்ததுடன் இறுதிவரை நின்று இன்றும் அதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் கிழக்கு …
-
- 5 replies
- 981 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஆசனத்துக்கான போட்டியில் இருந்து ஒதுங்கியிருக்க சிறிலங்கா தீர்மானித்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு 18 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், வரும் நவம்பர் 12 தொடக்கம் 16 வரை நடைபெறவுள்ள ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தொடரில் இடம்பெறவுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பெரவையில் உள்ள 47 ஆசனங்களுக்கும் இரகசிய வாக்குகெடுப்பு மூலம் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆசனத்துக்காக சிறிலங்கா போட்டியிட்டது. கடுமையான பரப்புரைகளை மேற்கொண்ட போதிலும், சிறிலங்காவினால் அந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. இந்தநிலையில் இம…
-
- 1 reply
- 376 views
-
-
[size=3][size=4]தமிழீழ விடுதலைப் புலிகளை திமுக தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவில்லை. அதேபோல எங்களை விடுதலைப் புலிகளும் ஆதரிக்கவில்லை. திமுக கொடுத்த பணத்தைக் கூட வாங்காமல் எம்.ஜி.ஆரிடம் பணத்தை வாங்கியவர்கள் புலிகள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]கோவையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் அன்பழகன் பேசியதாவது:[/size][/size] [size=3][size=4]ஜெ.க்கு கேள்வி![/size][/size] [size=3][size=4]இலங்கையில் போர் நடைபெற்ற போது, பொதுமக்கள் பலபேர் இந்தப் போரில் கொல்லப்படுகிறார்கள் என்று செய்தி வந்தது. அப்போது மக்கள் அழிக்கப்படுகிறார்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கூக்குரல் எழுப்புகிறார்கள். அப்போது இன்றை…
-
- 9 replies
- 701 views
-
-
90 களின் ஆரம்பக் காலத்தில் பொஸ்னியா மற்றும் குரோஷியாவில் சேர்பியப் பயங்கரவாதிகளால் முஸ்லீம் மற்றும் குரோஷியப் பெண்கள் மேல் நடத்தப்பட்ட திட்டமிட்ட பாலியல் வண்புணர்வுகளை ஒத்த கட்டாயச் சிங்களக் கருவூட்டல்களை சிங்களப் பேரினவாதம் தமிழர் தாயகத்தில் முன்னால்ப் பெண்போராளிகள் மேல் நடைமுறை வழக்காக இன்று நடத்திவருவதாக மருத்துவ அறிக்கைகளும், சம்பவங்களின் தொகுப்புக்களும் உறுதிப்படுத்திவருகின்றன. இனவழிப்பிற்குத் துணைபோனவர்கள் இன்றுவரை அதை முற்றாக மறைக்கவோ அல்லது மறுக்கவோ பகீரதப் பிரயத்தனம் செய்துவருகையில் சிங்களம் தங்குதடையின்றி இனவழிப்பை முன்னெடுத்து வருகிறது. பல முன்னால்ப் பெண்போராளிகள் சித்திரவதைக் கூடங்களில் அடைபட்டுக் கிடந்த காலத்திலோ அல்லது “விடுதலை” செய்யப்பட்டு வாராவாரம் காவல…
-
- 18 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியர்களுக்கு, அந்த நாட்டின் வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்ட பயண எச்சரிக்கையை விலக்கிக் கொள்ளுமாறு, பிரித்தானிய அதிகாரிகளிடம் வலியுறுத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் லண்டனுக்கு அவசரபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை ஜி.எல்.பீரிஸ் சந்திப்பார் என்று நம்பப்படுகிறது. இருந்தபோதிலும், அந்தச் சந்திப்பு இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்று கூறியுள்ளார். பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்ட பயண எச்சரிக்கை அறிவிப்பை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்றும், அது சிறிலங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண…
-
- 3 replies
- 686 views
-
-
சென்னை: ஆளுங்கட்சியோடு இணைந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக பழ. நெடுமாறன் திமுகவை தாக்கிப் பேசுகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆளுங்கட்சியோடு இணைந்து பயன்பெற வேண்டும் என்பதே பழ.நெடுமாறனின் குறிக்கோளாக இருக்கிறது. அதற்காக திமுகவைத் தாக்கினால் அதிமுகவில் தக்க இடம் கிடைக்கும் என்று நெடுமாறன் கருதுகிறார். 1984ல் ஈழப் போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர். ஈடுபட்டதாகவும், அந்த முயற்சியை முறியடிக்கும் செயலில் நான் (கருணாநிதி) ஈடுபட்டதாகவும் நெடுமாறன் கூறியுள்ளார். ஈழப் போராளிகளிடையே சகோதரச் சண்டையைத் தொடங்கி வைத்தது கருணாநிதி தான் என்றும் அவர் கூறியுள்ளார். …
-
- 1 reply
- 1.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுப் பறிபோவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் ஆங்காங்கு உள்ள மினி காவலரண்கள் அகற்றப்பட்டு பெரியளவிலான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுசுட்டான் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அதனை அண்டிய காணிகள், கற்சிலைமடுவில் சிவன் ஆலய வளாகமும் அதனை அண்டிய மக்களின் காணிகளும், முத்துஐயன்கட்டு தட்டையர் மலைப்பகுதியில் தனியாரின் காணிகளும், புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் சங்க வளாகமும் அதனை அண்டிய காணிகளும், கேப்பாபுலவு மக்களின் இருப்பிடங்களும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுப் பெரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் தமது காணிகளை இழந்து வருகின…
-
- 0 replies
- 401 views
-
-
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் தற்போது மீண்டும் காடையளர்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக குறித்த பிரச்சினைகள் இல்லாத நிலையில் காணப்பட்டது.தற்போது மீண்டும் இந்த பிரச்சினை தலைதூக்கிஉள்ளதாக சமூக ஆர்வலர்களும்மக்களும் தெரிவித்துள்ளனர்.மாலை 7 மணிக்கு பின் குறித்த பகுதிக்கு வரும் காடையர் குழுவினர் அங்கு பேரூந்திற்காக காத்து நிற்கும் பெண்களுடன் ஆபாசமாக கதைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு சில இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் வந்து பெண்களை வாங்க உங்களை ஏற்றிக்கொண்டு போய் வீட்டில் விடுகின்றோம்என பலவந்தப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எனவே உரிய அதிகாரிகள் இவ்விடையத்தில் தலையிட்டு குறித்த பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வை …
-
- 0 replies
- 529 views
-
-
இறுதிப் போரில் இன அழிப்பில் தீவிரமாகப் பங்கெடுத்த சிறிலங்கா இராணுவத் தளபதிகளில் ஒருவரான போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார மாரடைப்பால் மரணமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார். இறக்கும்போது அவருக்கு வயது 50 ஆகும். சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் சமந்த சூரிய பண்டார, கொமாண்டோ றெஜிமென்ட்டைச் சேர்ந்தவர். இவர் நான்காவது கட்ட ஈழப்போரின் தொடக்கத்தில், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த 53வது டிவிசனின் தளபதியாக இருந்தவர். முகமாலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தவர். 2008…
-
- 1 reply
- 928 views
-
-
எதற்கெடுத்தாலும் இறந்தவர்களைச் சாட்சிக்கழைத்து அரசியல் செய்து பழகிப்போன கலைஞர் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களை தனது தவறுளை நியாயப்படுத்த சாட்சிக்கு அழைத்திருக்கிறார். ஆனால் நாகரிகம் கருதி அவர் சொன்ன விடயங்களைத் தெரியப்படுத்தமாட்டேன் என்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை இலங்கைத் தமிழர் பிரச்னையில், என் மீது சாற்றப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதற்கு, எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை, தமிழக மக்கள் அறிவர். முதுகில் பெரிய அறுவை சிகிச்சை வரை நடைபெற்று, அது உறுதி செய்யப்பட்டு விட்டது. கடந்த, 1986ம் ஆண்டு, ஜூன், 3ம் தேதி, என்னுடைய பிறந்த நாள் விழாவை ஒட்டி, உண்டியலில், 2.75 ல…
-
- 1 reply
- 589 views
-