ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
யுத்தத்தின் பின்னர் ஐந்து நாட்களுக்கு ஒருவர் ௭ன்ற ரீதியில் காணாமல் போகும் சம்பவங்கள் இலங்கையில் யுத்தத்தின் பின்னர் ஐந்து நாட்களுக்கு ஒருவர் ௭ன்ற ரீதியில் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்வதாக கிறவுண்ட் வியூவ்ஸ் ௭ன்னும் இணையத்தளம் இலங்கை ஆங்கில ஊடகங்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. 2012 ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் 57 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற போராட்டமொன்றில் கலந்து கொண்டோரி டம் இந்தத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்கள் இந்தப் போராட் டத்தில் கலந்து கொண்டனர். வவுனியாவைச் சேர்ந்த வசந்தமாலா ௭…
-
- 1 reply
- 414 views
-
-
அம்பாறை, பதியத்தாளை பிரதேசத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் அலுவலகங்கள் மூன்றிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத ஆயுதங்கள் தாங்கிய குழு ஒன்று நேற்று இரவு இவ் அலுவலகங்களுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு 11.30 மணிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பதியத்தாளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இச் சம்பவம் தொடர்பில் அத தெரண பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டது. இச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகமும் உறுதி செய்தது. http://thaaitamil.com/?p=30946
-
- 0 replies
- 343 views
-
-
எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலே இந்த மண்ணுக்கு என்று ஒரு தனித்த இடம் உண்டு. விடுதலைப் போரட்டத்தின் முதுகெலும்பாக இருந்தது கடற்புலிகள் அணி என்பது யாவரும் அறிந்த உண்மை. அந்த கடற்புலிகள் அணியின் வளர்ச்சியில் பெருமளவிற்கு பங்களிப்பு செய்தது இந்த வடமராட்சி கிழக்கு மண்ணும் மக்களுமே ஆகும். இந்த மண்ணும் கடலும் குருதியில் தோய்ந்த வரலாறுகளில் இப்பிரதேச மக்களுக்கு பெரும் பங்கு உண்டு. இவை எல்லாவற்றையும் விட எமது போராட்ட வளர்ச்சிக்கு பல வீரத் தளபதிகளையும் பொறுப்பாளர்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும் கலைஞர்களையும் பெற்றுக்கொடுத்த ஒரு வீரம் விளைந்த மண் இதுவாகும். இந்த வடமராட்சி கிழக்கு கடலிலே எத்தனையோ உறவுகள் எம் கண் முன்னே குருதியில் குளித்து வீர காவியமான வரலாறுகளும்…
-
- 0 replies
- 513 views
-
-
சூடானுடன் பாதுகாப்பு விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள சிறிலங்கா முடிவு செய்துள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சூடானுக்கு மேற்கொண்டிருந்த ஐந்து நாள் பயணத்தின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கடந்த 26ம் நாள் சூடானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நேற்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு சிறிலங்கா திரும்பியுள்ளார். கோத்தாபய ராஜபக்சவுடன் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சூடான் சென்றிருந்த…
-
- 6 replies
- 899 views
-
-
பிரிட்டன்: வீடற்றவர்கள் காலி வீட்டுக்குள் நுழைந்து வசிப்பது இன்று முதல் கிரிமினல் குற்றமாகிறது. 01 செப்டம்பர் 2012 காலியாக இருக்கும் ஒரு வீட்டில் வீடற்றவர்கள் நுழைந்துகொண்டு அங்கு இலவசமாக வசிக்கும் செயல் பிரிட்டனில் பெரும்பான்மையான இடங்களில் இன்று முதல் கிரிமினல் குற்றமாகிறது. இலவசமாக வசிப்பவர்கள் எதிராக சிவில் வழக்கு மட்டும்தான் தொடுக்க முடியும் என்ற நிலை இதுநாள் வரை இருந்துவந்தது. ஸ்குவாட்டர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இப்படியான ஆட்களுக்கு ஆறு மாதங்கள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டி இந்த சட்டத்தைக் கொண்டுவந்துள…
-
- 1 reply
- 549 views
-
-
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் நடைபெற்ற 16 ஆவது அணிசேரா நாடுகளின் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த தலைமையில் சென்ற குழுவில் அவரது மகன்களில் ஒருவரான யோசித ராஜபக்ஷ இடம்பெற்றமை தொடர்பில் தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன. அரசியல் ரீதியான எந்தப் பதவிகளையும் வகிக்காத தனது மகனை அவர் ஏன் அழைத்துச் சென்றார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மஹிந்தரின் மகன், கடற்படையைச் சேர்ந்தவர். அவர் ரகர் விளையாட்டுப் பிரிவை வழி நடத்துபவர். இவ்வாறான ஒருவர் எந்த நோக்கத்துக்கா அழைத்துச் செல்லப்பட்டார்? என்றும் தெஹ்ரான் ஹோட்டலில் இவர் தங்கியிருந்த காலத்துக்கான கொடுப்பனவுகள் கூட அரச நிதியிலிருந்தே வழங்கப்பட்டுள்ளது என்றும் தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. http://tha…
-
- 7 replies
- 864 views
-
-
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பிரதமராக்கு வதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேனவும் நிமல் சிறிபால டி சில்வாவும் தம்மையே பிரதமராக்க வேண்டும் என்ற பிடிவாத்துடன் இருக்கும் நிலையில், இவர்கள் இருவரையும் தவிர்த்து ஜீ. எல் பீரிஸையே பிரதமராக்கும் நிலைப்பாட்டை ஜனாதிபதி மஹிந்தையர் கொண்டுள்ளார் எனவும் அநுரகுமார தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கோ அல்லது நிமல் சிறிபால டி சில்வாவுக்கோ பிரதமர் பதவியை வழங்கினால் அதனைத் தமது குடும்பத்தினரால் (மஹிந்தையர் குடும்பம்) மீளப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையேற்பட்டு விடும் என்ற காரணத்தினாலே ஜீ. எல்…
-
- 1 reply
- 619 views
-
-
[size=4]அக்கரைப்பற்றிலுள்ள, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்டக் காரியாலயம் பொறுப்பாளர் ஏ.எல்.மர்ஜுன் மாற்றுக் கட்சியினாரால் தாக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்கானிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று மத்திய குழுவின் உப தலைவருமான இவர் கத்தி குத்துக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.[/size] http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/47873-2012-09-02-16-44-16.html
-
- 4 replies
- 745 views
-
-
இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும், நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சி அளி்க்க அனுமதி அளித்த பொறுப்பு அதிகாரியை தாற்காலிக பணிநீக்கம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களுக்கு சமமான உரிமைகளைப் பெறும் வரை அந்நாடு மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழ்நா…
-
- 5 replies
- 1.1k views
-
-
[size=5]விரைவில் ஏற்றுமதித் தடைசெய்யப்படவிருக்கும் இலங்கை உற்பத்திகள் பாரிய நெருக்கடியில் சிறீலங்கா?[/size] இலங்கையில் பசளைகள் மற்றும் பூச்சி நாசினிகளை அதிகம் பாவிப்பதால் இலங்கையில் அதிகமானவர்களுக்கு சிறு நீரக வியாதி வருவதாக ஐ நா வின் உணவுப்பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.இதே பொருட்கள் தான் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.பொதுவாக பொன்னாங்காணி,வல்லாரை போன்றவைகள் பூச்சித்தாக்கத்திலிருந்து கட்டுப்படுத்தவும் மற்றும் உற்பத்திகளை பெருக்கவும் பூச்சி நாசினிகளை பாவிக்கிறார்கள்.இதை விட வாழை மரத்தை இடையில் வெட்டி யூறியாவை திணித்து அதன் மூலம் 45 நாட்களில் வாழைக்குலை அறுவடை செய்யபடுகிறது.பின்பு பழுக்க வைப்பதற்காக போமலின் திரவம் ஊசி மூலம் பாச்சப்படு…
-
- 8 replies
- 1k views
-
-
சிறுபான்மைத் தேசிய இனங்கள் சூறையாடப்படும் இலங்கையில் அந்த நாட்டின் அரச பயங்கரவாதிகளில் ஒருவராக இணைந்துகொண்ட கே.பி என்ற முன்னை நாள் விடுதலைப் புலிகள் பிரதானியைச் சந்தித்து ‘ஆசிபெற’ புலம்பெயர் நாடுகளிலிருந்து பணம்படைத்த தமிழர் மேட்டுகுடி கும்பல் ஒன்று படையெடுக்கின்றது. தீவிர புலி ஆதரவாளர்களாகவும், புலி எதிர்ப்பாளர்களாகவும் தம்மை வெளிக்காட்டிக்கொண்ட இவர்களில் பிரண்ட் நகரசபை கவுன்சிலர் நகீரதன் என்ற முன்னை நாள் புலி ஆதரவாளர் இலங்கைக்குச் சென்று கே.பி மற்றும் இனக் கொலையாளி கோதாபய ஆகியோரைச் சந்தித்தமை குறித்து இனியொரு வெளிப்படித்தியிருந்தது. இது இந்த நபர்களின் தனி நபர்சார்ந்த வாழ்க்கைப் பிரச்சனை அல்ல. மக்கள் சார்ந்த அரசியல் பிரச்சனை. ஆக, இவைகள் இந்த நபர்கள் மீதான தனி நபர் குறி…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஏன் இந்தியா வருகிறார் மகிந்தா ராஜபக்சே என்று உங்களுக்கு தெரியுமா..? ஈழதேசம் செய்தி..! சோனியா அரசை மிரட்ட என்று அர்த்தம் அல்ல..! மகிந்தா ராஜபக்சே ஏன் இந்தியா வருகிறார். சமீபத்தில் இந்திய பாராளுமன்ற குழு இலங்கை சென்றது என்பது உங்களுக்கு தெரியும். யார் தலைமையில்..? பாரதிய ஜனதா கட்சியின், பாராளுமன்ற எதிர்க் கட்சியின் தலைவர் திருமதி.சுஸ்மா சுவராஜ் தலைமையில் சென்று பல பரிசுப் பொருட்களை கை நிறைய அல்ல... சுமக்க முடியாத அளவிற்கு பெரும் பெரும் மூட்டைகளாக அள்ளிக் கொண்டு வந்த அதே அம்மையார் தான் அப்பொழுது விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, மகிந்தா ராஜபக்சே மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் ஒரு பல்கலைக்கழகம் ஒன்றில், ஏதோ ஒரு கட்டிடத்தை திறப்பு விழா ஒன்றை நடத்தி விட்டு, இந்திய ஜ…
-
- 3 replies
- 1.3k views
-
-
[size=6]ஈழத் தமிழர் அரசியலின் அடுத்த கட்டம் - யதீந்திரா[/size] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நந்திக் கடலில் முற்றுப் பெற்றபோது, தமிழர் மத்தியில் துருத்திக் கொண்டு தெரிந்த ஒரு கேள்வி - அடுத்தது என்ன? ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? விடுதலைப்புலிகளின் அரசியல் முடிவுற்று மூன்று வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் எவராலும், ஒரு தெளிவான அர்த்தபுஸ்டியான பதிலை கொடுக்க முடியாதளவிற்கே நிலைமைகள் இருந்தன. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் - ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையாக வெளித்தெரிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அன்றைய சூழலில் சாதாரண மக்களைப் போன்றே அடுத்தது என்ன என்னும் கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருந்தது. ஒரு வகையில் திடீரென்று மின்சாரமிழந்த…
-
- 2 replies
- 681 views
-
-
[size=4]மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், அங்கு குற்றவாளிகள் தண்டனை இன்றி தமது நடவடிக்கைகளை தொடருவதற்கான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அம்னஸ்டி இண்டர்நாஷனல் குற்றஞ்சாட்டியுள்ளது.[/size] [size=4]தொடர்ச்சியாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை தவறியமை, அங்கு எதேச்சதிகார தடுத்து வைப்பு, சித்ரவதை, முறையற்று நடாத்துதல், காணாமல் போகச் செய்யப்படுதல், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது கொல்லப்படுதல் ஆகியவை குறித்து நடவடிக்கைகள் எதுவும் இல்லாத, ''குற்றவாளிகள் தண்டிக்கப்படாத ஒரு நிலைமையை'' ஏற்படுத்தியுள்ளது என்று அம்னஸ்டி இண்டர் நாஷனல் கூறியுள்ளது. விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போ…
-
- 1 reply
- 800 views
-
-
[size=4]தமிழர்களை அகதிகளாக்கி இந்தியாவின் அரசியலில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் குழப்பத்தை உருவாக்கி வருகிறது' என்று [size=5]இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் [/size]மச்குந்த் துபே கூறியுள்ளார். வங்கதேசம் சக்மா அகதிகளை அனுப்பியது போல் இலங்கை ஈழத் தமிழர்களை அனுப்பி வருவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். [size=5]இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். [/size] மாறிவரும் உலகில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் விரைவில் புத்தகம் ஒன்றை துபே வெளியிட இருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, 'ஜம்மு காஷ்மீரிலும் சர்வதேச எல்லைப் பகுதியிலும்…
-
- 1 reply
- 652 views
-
-
நிலக்கரி ஊழலை மறைத்து - நல்லா கிளப்புறாங்கையா.... பீதியை..! ( தீவிரவாத பயங்கரவாதம் தான்..! ) ஈழதேசம் செய்தி..! ஹைதராபாத், மகாராஷ்டிரா, பெங்களூரு மற்றும் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் நேற்று முதல் தீவிரவாத பயங்கரவாத பீதியை கிளப்பி உள்ளது இவ்வாறு இந்திய உள்துறை. கர்நாடகத்தில் கைதான தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், கல்பாக்கம் மற்றும் கைகா அணுமின் நிலையங்களை தகர்க்க அவர்கள் சதி திட்டம் தீட்டி இருந்தது அம்பலமாகி உள்ளது என்று. டி.வி.யில் பல பேர்களை காண்பித்தார்கள். வாய்க்கு வந்த பேரெல்லாம் கூறுகிறார்கள், முதலில் லக்சர் என்ற தீவிரவாத அமைப்பு என்றார்கள். பிறகு யாராவது கேள்விகளை கேட்டு விட்டால் என்ன செய்வது என்று யோசித்து, சிமி என்ற அமைப்பில் உள்ளவர்கள் என்று சொல்லி இருக்…
-
- 0 replies
- 677 views
-
-
பிரபாகரன் வீட்டு பங்கருக்குள் வீழ்ந்த சிங்களப் பெண் சாவு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வீட்டை பார்வையிடச் சென்ற சிங்களப் பெண்ணொருவர் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். ஜேபி சிறியலதா (வயது56) என்ற பெரும்பான்மையினப் பெண்ணே உயிரிழந்தவராவார். கடந்த 25 ஆம் திகதி முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வீட்டை குறித்த பெண் பார்வையிடச் சென்றுள்ளார். இதன் போது அவரது வீட்டைப் பார்வையிடும்போது அங்கிருந்த பங்கர் ஒன்றினுள் தவறி விழுந்துள்ளார். இதன் காரணமாகத் தலையில் கடுமையான க…
-
- 5 replies
- 1.4k views
-
-
[size=4]பரந்தன் பகுதியில் இராணுவத்தினரின் பதிவு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் பயப்பீதி ஏற்பட்டுள்ளது. இப் பகுதியில் உள்ள வீடுகளுக்குப் பதிவுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும் எனவும் மறுநாள் தாம் பதிவுகளை மேற்கொள்ளப்போவதாகவும் கூறிச்செல்கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சம் எழுவதுடன் சிலர் எதற்காகப் பதிவுகளை மேற்கொள்கிறீர்கள் எனவும் இராணுவத்தினரிடம் கேட்கின்றனர். இதற்குப் பதிலளிக்கும் இராணுவத்தினர் உங்களுக்கான வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்காகவும் மற்றும் உதவிகள் கொடுப்பதற்காகவுமே நாம் பதிவுகளை மேற்கொள்கின்றோம் எனக்கூறி குடும்பத்தவர்களைப் புகைப்படங்களும் எடுத்துச்…
-
- 0 replies
- 660 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள போதிலும், புதுடெல்லியில் அவரது சந்திப்புகள் இன்னமும் உறுதியாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில், பௌத்த கற்கைகள் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்கவே மகிந்த ராஜபக்ச இந்தியா செல்லவுள்ளார். இம்மாதம் 21ம் நாள், சிறிலங்கா அதிபரும் பூட்டான் பிரதமர் லியொன்போ ஜிக்மி தின்லேயும் இணைந்து இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 2600வது புத்த ஜெயந்தியை முன்னிட்டு இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு சென்று பி…
-
- 1 reply
- 718 views
-
-
பிரபாகரன் உயிரோடு இருந்ததுவரை அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை - டெசோ மாநாட்டால் என்னபயன் 02 செப்டம்பர் 2012 பிரபாகரன் உயிரோடு இருந்ததுவரை அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை இப்போ டெசோ மாநாட்டால் என்ன பயன்- விஜயகாந்த் ஈழத் தமிழர்கள் செல்ல விரும்பும் வெளிநாடுகளுக்கு அரசே செலவு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விருகம்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் நல உதவிகள் வழங்கி விஜயகாந்த் பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். ஈழத் தமிழர்களைத் திறந்தவெளி முகாமுக்கு அனுப்ப வேண்டும் என செந்தூரன் 27 நாள்களாகத் தொடர்ந்து உண…
-
- 1 reply
- 717 views
-
-
இலங்கை பற்றி பேசும் மருத்துவர் ராமதாஸ் போன்ற 'டுபாகூர் அரசியல்' கோமாளியை பார்த்தது உண்டா நீங்கள்...? ஈழதேசம் செய்தி..! இலங்கையில் தமிழ் பெண்கள் சீரழிப்பு - ராஜபக்சேவை இந்தியா எச்சரிக்க வேண்டும். இந்தியா வரும் ராஜபக்சேவை கடுமையான வார்த்தையால் எச்சரிக்க வேண்டும். ராஜபக்சேவை இந்தியா எச்சரிக்கை வேண்டும். என்று கூறிவிட்டு, இவ்வாறு கூறினார் முத்தாய்ப்பாக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு பத்து எம்.பி. தொகுதிகளை பா.ம,க., கைப்பற்றும். இவ்வாறு இன்று செப்பியுள்ளார் மருத்துவர் ராமதாசு. மேலும் கொப்பளிக்கையில், அவர் வாயில் இருந்து இவ்வாறு வார்த்தைகள் வெளிவந்தன. இம்மாதம் 10 - ம் தேதி முதல் 28 -ம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 21 - வது கூ…
-
- 0 replies
- 781 views
-
-
நெல்லியடியில் நடைபெற்ற நில ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி காட்டியவர்கள் தொடர்பில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவோ, கைது செய்யப்படவோ இல்லை. அது தொடர்பில் புலன்விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று யாழ். மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார். யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் கடந்த ஜூலை மாதம் நெல்லியடியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பொலிஸாரின் கண்காணிப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் சைக்கிள்களில் அங்கு தோன்றியவர்கள் புலிக்கொடியைக் காட்டியவாறு சென்று வயோதிபர் ஒ…
-
- 2 replies
- 683 views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ் மக்கள் முற்றாகப் புறக்கணித்து வடகிழக்கு இணைந்த தாயகக் கோரிக்கையை சர்வதேசத்திற்கு வலியுறுத்தி எமது உரிமையை வென்றெடுக்க முன்வரவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழின உணர்வாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அன்பான கிழக்கு மாகாண மக்களுக்கு, இக்கட்டான சூழ்நிலையில் நான் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சர்வதேச மட்டத்தில் எனது அனைத்து நடவடிக்கைகளும் எமது தாயகத்தை மையப்படுத்திய அரசியல் வேலைத்திட்டங்களாகவே உள்ளன. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவன் என்ற கோதாவில் கூட்டமைப்பு எந்த நோக்கத்திற்கா…
-
- 8 replies
- 831 views
-
-
தம்புள்ளவில் இந்து பக்தர்களுக்கு அச்சுறுத்தல் - 02 செப்டம்பர் 2012 'நான் மூவின மக்களின் ஜனாதிபதி' என்ற மகிந்தவின் வீரவசனங்கள் மீண்டும் காற்றில் தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இந்து பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வருடாந்த வழிபாட்டு நிகழ்வுகளில் ஈடுபட ஆயத்தங்களை செய்த போது, வழிபாடுகளை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தம்புள்ள காளி அம்மன் கோயிலில் சுமார் 50 இந்து குடும்பங்கள் இவ்வாறு வழிபாடு செய்ய ஆயத்தமாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்த் திருவிழா நிகழ்வுகளை நடாத்த ஆயத்தமாகிய போது அதனை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் இந்தத் தேர்த் திருவ…
-
- 0 replies
- 492 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் தொழில் வாய்ப்பு ஏதுமின்றி இருந்த பெரும் எண்ணிக்கையான இளைஞர், யுவதிகளுக்கு தொழில்திறனை விருத்தி செய்யும் நோக்குடன் பத்து வருடங்களுக்கு முன் கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரி உருவாக்கப்பட்டது. அங்கு ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில்சார் கற்கை நெறியைப் பெற்றிருந்தனர். . இந்த கல்லூரிக்குரிய ஆனைவிழுந்தானில் உள்ள 3 ஏக்கர் காணி மற்றும் ஊனமுற்றோர் புனர்வாழ்வுச் சங்கத்துக்குரிய காணிகளை ஏற்கனவே இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. அங்கு 652 ஆவது படைப் பிரிவு முகாமிட்டுள்ளது. அந்தக் காணிகளைத் தான் இராணுவம் கையகப்படுத்த முயற்சிக்கிறது. . அதற்கான கோரிக்கையையும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. பிரதேச காணிப் பயன்பாட்டுக் கலந்துரையாடல்களிலும் அதனை வலிய…
-
- 0 replies
- 614 views
-