ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
நாம் வெற்றியடைவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. மாங்கேணி மக்கள் தெளிவாக இருக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். மாங்கேணி பிரப்படிமடுப் பகுதியில் இடம் பெற்ற அரசியல் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்குத் தலைமைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். எம்மை மாற்றாந் தாய்ப் பிள்ளைகளாகவே அவர்கள் கருதுகின்றனர். அதனால் தான் வெருகலாற்றில் எம்மீது படையெடுத்து எம் போராளிகளைக் கொலை செய்தனர். நிச்சயமாக இத் தேர்தலில் தோற்கப் போகும் கூட்டமைப்பினர் ஒரேயொரு அறிக்கையினை மாத்திரம் பத்திரிகை வாயிலாக விட்டு எம் மக்களைக் கைவிட்டு ஓடி விடுவர். இதைத்தான் அவர்கள…
-
- 8 replies
- 1k views
-
-
அரபுலக வசந்தத்தின் அதிர்வுகள் கிழக்கு தேர்தலிலும் தெரிய வேண்டும்: ஹக்கீம் [size=1]வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012 22:09 [/size] [size=2] (ரி.லோஹித், ஸரீபா) "எகிப்து, டியூனிசியா, யேமன் ஆகிய நாடுகளில் ஆரம்பித்திருக்கும் அரபுலகின் வசந்தம் என்கிற எழுச்சி முஸ்லிம் உலகின் பார்வையை திருப்பி விட்டிருக்கிறது. அதன் தாக்கம் முஸ்லிம் உலகம் முழுவதும் அதிர தொடங்;கியுள்ளது. அந்த அதிர்வுகள் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தெரிய வேண்டும்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை பகல் ஏறாவூரில் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிழக்கு மாகாண சபை தேர்த…
-
- 3 replies
- 656 views
-
-
சிறிலங்கா அரசுக்கு தலைவலியாக இருக்கும், வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் இணையத்தளங்களை தடுக்கும், திட்டத்தை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாக லங்கா நியூஸ்வெப் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலரின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி வெளிநாடுகளில் இருந்து செயற்படும் இணையத்தளங்களின் முகவரியை ஒத்த போலியான யுஆர்எல் முகவரிகள் உருவாக்கப்படும். பார்வையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படும் இணையத்தளங்களில் நுழைய முற்படும்போது, இந்த போலியான இணையங்களுக்குள் அவை கொண்டு செல்லும். சீன அரசின் துணையுடன் இந்தத் திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது. இதற்கென சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு 12 சீன தொழில்நுட…
-
- 4 replies
- 664 views
-
-
[size=3] [size=4]இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு வெளிநாடுகளிலிந்து வரமாட்டாதென தெரிவித்துள்ள பிரித்தானிய பாராளுமன்றத் தூதுக் குழுவினர் தீர்வை உள்நாட்டினுள்ளேயே பேசி தீர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். [/size] [size=4]இன்றைய தினம் யாழ்ப்பாணதிற்கு சென்றிருந்த குழுவினர் முன்னதாக அரச அதிபரை சந்தித்து பேசினர். பலாலிக்கு விமானப்படை விமானம் முலம் சென்று சேர்ந்த அவர்கள் அங்கிருந்து விமானப்படை உலங்கு வானூர்தி முலம் யாழ். மத்தியகல்லூரி மைதானத்தை சென்றடைந்திருந்தனர். [/size] [size=4]வழமை போன்றே தாமதமாக வரவேற்க சென்று சேர்ந்த யாழ்.அரச அதிபருக்காக குழுவினர் காத்திருக்க வேண்டியிருந்தது.[/size] [size=4]அரியாலை பகுதிக்கு வியஜம் செய்த குழுவினர் அங்கு இந்திய வீடமைப்பு திட்ட…
-
- 2 replies
- 746 views
-
-
11வது நாளாக லண்டன் மாநகரில் சகோதரன் சிவந்தன் அவர்கள் ஈழத்தமிழர்களின் நீதிக்காக தனது உறுதி தளராத உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றார் .இவரது உண்ணாவிரதப் போராட்டமானது தனிப்பட்ட போராட்டம் இல்லை, அனைத்து தமிழ் மக்களினதும் போராட்டமே. ஆகவே இவ்வாறான போராட்டங்கள் தமிழ் இளையோர்களினது மனக்குமுறலையே சுட்டிக்காட்டுகின்றது .எமது தேசத்தில் சிங்கள இனவெறி அரசின் இனவழிப்புக்கு உள்ளாகி அத்தோடு உலகெங்கும் பரந்து அகதிகளாகி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய நாம் சிவந்தனின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதோடு , லண்டன் வாழ் தமிழர்கள் அனைவரையும் அப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம். சிவந்தனின் நீதிக்கான போராட்டத்திற்கு நியூசிலாந்தில் இருந…
-
- 5 replies
- 482 views
-
-
தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பிரதேச மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் கூட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகமும் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- விபத்தின்போது பெண் பாதசாரி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான வாகன சாரதியை விடுதலை செய்ய பொலிஸார் எடுத்த முடிவைக் கண்டித்து தம்புத்தேகம பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்தின் மீது கல் வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து விபத்…
-
- 1 reply
- 784 views
-
-
இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் இந்திய ரசிகர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியின் போது இலங்கை ரசிகர்கள், இந்திய ரசிகர்களை தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய அணி போட்டியில் வெற்றியீட்டியதனைத் தொடர்ந்து, இந்திய ரசிகர்கள் மீது இலங்கை ரசிகர்கள் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடுமையான காவல்துறைப் பாதுகாப்பிற்கு மத்தியிலும் இலங்கை ரசிகர்கள், இந்திய ரசிகர்களை தூற்றியதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை கிரிக்கட் ரசிகர்களின் நடவடிக்கைகள் குறித்து பல தரப்பினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articl…
-
- 1 reply
- 667 views
-
-
[size=4]சிறிலங்கா இராணுவம் நடத்தவுள்ள பாதுகாப்புக் கருத்தரங்கிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதில் பங்கேற்பதாக 29 நாடுகளே உறுதி செய்துள்ளன. ‘இறுதியான அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி‘ என்ற தொனிப்பொருளில் சிறிலங்கா இராணுவம் நடத்தவுள்ள பாதுகாப்புக் கருத்தரங்கு வரும் 8ம் நாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. வரும் 12ம் நாள் வரை நடைபெறவுள்ள இந்தக் கருதரங்கில் பங்கேற்கும்படி, சிறிலங்கா இராணுவம் 63 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பியிருந்தது. இந்த அழைப்பை ஏற்றுள்ளதாக இதுவரை 29 நாடுகளே உறுதி செய்துள்ளன. இந்தநாடுகளின் சார்பில் சேர்ந்த 49 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்பதாக உறுதி செய்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய…
-
- 1 reply
- 402 views
-
-
[size=3] [size=4]இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் அமெரிக்கா, ரஸ்யா உள்ளிட்ட நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.[/size] [size=4]சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கரவாத நிதிக் கொடுக்கல்வாங்கல்களை தடுக்கும் நோக்கில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.[/size] [size=4]அமெரிக்கா, ரஸ்யா, சவூதி அரேபியா, மொன்கோலியா ஆகிய நாடுகளுடன் இவ்வாறு இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.[/size] [size=4]இந்த உடன்படிக்கைகளின் மூலம் சட்ட விரோதமான நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கரவாத நிதி கொடுக்கல் வாங்கல்களை தடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.[/size] [size=4]சர்வதேச ரீதிய…
-
- 0 replies
- 553 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் தேர்தல் பிரசுரங்களை ஒட்டுக்குழு பிள்ளையான் கட்சியை சேர்ந்த சிலர் நேற்று பறித்துச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று நான் எனது ஆதரவாளர்கள் சகிதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தேன். பால்சேனை கிராமத்தில் நண்பகல் 12.00 மணியளவில் எனது கட்சி சார்பில் அந்த பிரதேசத்திலிருந்து போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரான பரசுராமன் சிவனேசன் சகிதம் பிரசாரத்தில் ஈடுபட்டேன். நானும் அவர…
-
- 0 replies
- 465 views
-
-
மேற்பிராந்திய விளையாட்டுத்துறையினரால் 22-07-2012 அன்று காலை 9.00 மணிக்கு றெஜியோ எமிலியா நகரத்தில் தேசிய மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுப் போட்டி நடாத்தப்பட்டது. தமிழீழ தேசியக் கொடியேற்றல், மாவீரர் கல்லறைக்கு ஈகைச்சுடரேற்றல், அகவணக்கத்தை தொடர்ந்து கழகங்களிற்கான உதைபந்தாட்டப் போட்டி , சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி, 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளும் ஆரம்பமாகின. உதைபந்தாட்டப் போடட்டியில் மேற்பிரிவில் முதலாம் இடத்தை ஈழநிலா விளையாட்டுக்கழகமும், இரண்டாவதாக வண்வே விளையாட்டுக்கழகமும், மூன்றாவதாக ஈழமுத்துக்கள் விளையாட்டுக்கழகமும் வெற்றியீட்டினர். சிறந்த பந்துக்காப்பாளராக தாயகம் விளையாட்டுக்கழக வீரரும், சிறந்த வீரராக ஈழநிலா கழகத்தை சேர்ந்த வீரரும் , சிற…
-
- 0 replies
- 737 views
-
-
டெசோ மாநாடு – கொளத்தூர் மணி அறிக்கை டெசோ மாநாடு – கொளத்தூர் மணி அறிக்கை Published By பெரியார்தளம் On Thursday, August 2nd 2012. Under ஈழம், செய்திகள் டெசோ நடத்தும் மாநாடு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. மத்தியில் ஆளும்கட்சியின் ஒரு அங்கமாக உள்ள தி.மு.க முன் முயற்சி எடுத்தும் இந்த மாநாடு குறித்து-ஈழத்தில் வாழும் தமிழர்களும் – புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் கவலையுடனும்,எதிர்பார்ப்புடனும் இந்த மாநாட்டு முடிவுகளுக்குக் காத்திருக்கிறார்கள்.தமிழ் ஈழ ஆதரவுஅமைப்பு நடத்தும் மாநாட்டில் தமிழ் ஈழம் குறித்து தீர்மானங்கள் எதுவும் வராது என்றுதி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட கருத்து – தமிழர்களுக்கு முதல்அதிர்ச்சியாகி விட்டது. தமிழ் ஈழம் குறித்த தீர…
-
- 0 replies
- 616 views
-
-
வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பது நமது பள்ளிவாயல்களை உடைப்பதற்கு வழங்கும் அங்கீகாரம் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளருமான யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார். ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே முபீன் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய முபீன், முஸ்லிம்கள் எவரும் வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்கமாட்டார்கள். முஸ்லிம்களுக்கெதிராக இந்த நாட்டில் இடம் பெற்றுவரும் அநியாயங்களை முஸ்லிம்கள் பார்த்து விட்டும் வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிப்பார்கள் என்றால் அது ந…
-
- 1 reply
- 651 views
-
-
அவுஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாகச் செல்பவர்கள் கட்டாயமாக மீண்டும் அவர்களின் நாட்டுக்கு திருப்பியனுப்பப்படுவர் என வெளிவிவகார பிரதியமைச்சர் நியூமல் பெரேரா தெரிவித்தார். இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டிய எத்தகைய அவசியமும் இல்லை எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாகப் போய்ச் சேர்ந்தவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர் திருப்பியனுப்பப்படப்போவது தெரிந்தும் ஆபத்தான பயணத்தை மேற் கொள்ளத் துணிய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற முதலாவது நபர் அண்மையில் திருப்பியனுப்பப்பட்டதுடன் அந்நாட்டு …
-
- 1 reply
- 542 views
-
-
[size=4]கோட்டாபயவை முட்டாளாக்க யாராலும் முடியாது: கொழும்பு மேயர் முஸம்மில[/size] பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை எவரும் முட்டாளாக்க முடியாது என கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் கூறியுள்ளார். கொம்பனித்தெரு பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடனா சந்திப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷம் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. ' கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிக்குமாறு பலர் என்னை வலியுறுத்தினர். ஆனால் அவரை யாரும் முட்டாளாக்க முடியாது என்பதை நான் அறிவேன். அப்படி செய்வதற்கு ஒர…
-
- 16 replies
- 1.3k views
-
-
[size=4][/size] [size=4]இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும், மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.[/size] [size=4]இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:[/size] [size=4]எதிர்வரும், 12ம் திகதி, இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு ஆய்வரங்கம், எனது தலைமையில் தி.நகரில் நடைபெறவுள்ளது. ஆய்வரங்கத்தில் கருத்துகள் பரிமாற்றம் நடைபெறும்.[/size] [size=4]மாலையில் நடைபெறவுள்ள பொது மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் நம்முடைய கோரிக்கைகள், வேண்ட…
-
- 1 reply
- 406 views
-
-
[size=4][/size] [size=4]சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாகவே நிதி உதவியை வழங்குவது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக இந்தியா வீடமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல உதவிகளை அறிவித்திருந்தது.[/size] [size=4]இந்த உதவி நிதியை சிறிலங்கா அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு இதனை நேரடியாகவே பார்த்து உறுதி செய்துள்ளது.[/size] [size=4]இந்தநிலையில் தமிழர்களுக்கு நேரடியாகவே நிதி உதவிகளை வழங்குவது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தமிழ…
-
- 1 reply
- 284 views
-
-
[size=4]திருகோணமலை- கும்புறுப்பிட்டி காட்டில் ஆயிரம் கிலோ எடையுள்ள ராட்சத குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் குண்டு சிறிலங்கா விமானப்படையின் கிபிர் போர் விமானத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் முகாம் மீது வீசப்பட்டது என்று கூறப்படுகிறது. கிழக்கில் 2006 ஓகஸ்ட் மாதத்துக்கும் 2007 ஜுன் மாதத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகையின் போதே இந்தக் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்றும் சிறிலங்கா இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது.[/size] [size=4]http://www.puthinapp...?20120802106714[/size]
-
- 0 replies
- 1k views
-
-
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட [size=4] நடராசா ஜெகநாதன் [/size]கனடிய அரசின் வெளிவிவகார அமைச்சின் அயராத உழைப்பினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கனடிய வெளிவிவகார அமைச்சிற்கு அவர் குடும்பத்தின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் நன்றிகள்! http://www.yarl.com/forum3/index.php?showtopic=105740 http://www.yarl.com/forum3/index.php?showtopic=105507
-
- 9 replies
- 1.8k views
-
-
[size=4]வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு மாகாணங்களில் தனித்தனியான பிரச்சினை இல்லை நாடு முழுவதும் ஒரே பிரச்சினைகள் தான் எனவே இவற்றைத் தீர்க்க வேண்டுமானால் இன மத பேதங்கடந்து மூவின மக்களும் ஒன்றினைவோம் ஆதனால் இந்த அராஜகம் நிறைந்த மகிந்த அரசினை வீட்டிற்கு அனுப்ய முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசேகர தெரிவித்தார்.[/size] [size=4]மக்களை வதைக்கின்ற ஆட்சிக்கு எதிராக அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளுடன் தெய்வேந்திர முனையில் இருந்து பருத்தித்துறை வரை ஆரம்பித்த மக்கள் விடுதலை முன்னணியின் பேரணி இன்று யாழ்.நகரை வந்தடைந்தது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசேகர இவ்வாறு தெரிவித்தார்.[/size] [size=4]…
-
- 0 replies
- 225 views
-
-
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பகுதியிலுள்ள தமிழர்களின் பூர்விகப் பகுதிகளில் ஒன்று கதிர்காமம்.ஓவ்வொரு ஆண்டு யூலை மாதத்திலும் கந்தனை வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வழிபடும் ஒரு புனிதத்தளமாக கதிர்காமத்தை தமிழர்கள் பூஜிக்கின்றனர். மத வேறுபாடுகளின்றி நான்கு மதங்களின் சின்னங்கள் பதிக்கப்பட்ட ஆலயங்கள் இருந்தாலும், பௌத்தத்தின் ஆதிக்கமே மிகவும் கூடுதலாக காணக் கூடியதாக உள்ளது. கந்தபெருமானை சுமந்து கொண்டு யானையின் முன்னால் பௌத்த சின்னம் மாத்திரமே உலாவருகிறது. அதுமாத்திரமல்ல, கதிர்காமத்தின் நுழைவாயின் முன்பகுதியில் சிங்கள மொழியில் தான் எழுதப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். சம அந்தஸ்த்து உள்ள நாடு சிறீலங்கா என பெரும்பான்மை ஆட்சியாளர்களினால் தெரிவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=4]அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று அடுத்த மாத முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]ரொபேட் ஓ பிளேக்குடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் இந்த உயர்மட்டக் குழுவில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் ஏற்பாட்டிலேயே இந்த அவசரப் பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]இலங்கைக்கு வருகை தரவுள்ள இக்குழுவினர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட்ட பலர…
-
- 4 replies
- 890 views
-
-
இலங்கையில் 1983 யூலை 23, தாயகத்தில் தமிழ் மக்கள் மாபெரும் இனப்படுகொலையில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்களையும் பெறுமதிமிக்க தமது உடமைகளையும் இழந்து துடித்த நாள். இந்நாளை நினைவுபடுத்தியும் மற்றும் தமிழர்கள் மீது சிங்கள அரசு தொடுக்கும் இனவழிப்பை உள்ளடக்கியும் யேர்மன் Göttingen நகரில் தமிழ் இளையோர்களால் கவனயீர்ப்பு நடைபெற்றது. இளையோர்கள், யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் வழங்கி யேர்மன் மக்களை விழிப்படைய வைத்தார்கள். நகரங்களின் மத்தியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு, ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்தும் அத்தோடு கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூர்ந்தனர். அதே வேளை, கடந்த 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி, தமி…
-
- 0 replies
- 299 views
-
-
சிறிலங்காவில் இருந்து சென்ற அகதிகள் படகு ஒன்று கொகோஸ் தீவுக்கு அருகே பாறைகளில் சிக்கிக் கொண்டதால், நான்கு அகதிகள் நீந்திக் கரையேறினர். நேற்றுக்காலை 8 மணியளவில் கொகோஸ் தீவில் இருந்து 300 மீற்றர் தொலைவில் கற்பாறைகளுக்கு நடுவே சிறிலங்கா அகதிகள் படகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதில் 69 தமிழ் அகதிகள் இருந்தனர். இதையடுத்து அந்தப் படகில் இருந்த நான்கு ஆண்கள் நீந்திச் சென்று கொகோஸ் தீவில் கரையேறினர். இவர்களைப் பார்த்த கொகோஸ் தீவு வாசி ஒருவர், அவர்களுக்கு அப்பிள் பழங்களையும். குடிநீரையும் கொடுத்து உதவியதுடன் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து பாறையில் சிக்கியிருந்த படகில் இருந்த 65 பேரும் மீட்கப்பட்டு கொகோஸ் தீவு கரைக்குக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அனைவரும்…
-
- 0 replies
- 706 views
-
-
[size=4][size=5]இலங்கையில் சீனா: கருணாநிதி கவலை[/size] இலங்கையில் சீனப்படைகளின் இருப்பு குறித்து வெளியாகும் தகவல்கள் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். [/size] [size=4]இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் சீனப்படைகளின் இருப்பு குறித்து வெளிவரும் தகவல்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தல் அளிக்கும் விஷயம் என்றும், ஆகஸ்ட் 12ம் தேதி நடக்கும் டெசோ மாநாட்டில் மற்ற விஷயங்களுடன், இந்த விஷயம் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும், இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.[/size] [size=4]http://tamil.yahoo.com/இலங்க-ய-ல்-ச-ன-132500797.html;_ylt=AsncAlRL4s7NTUEzXs8w_ruZBtx_;_y…
-
- 16 replies
- 1.1k views
-