ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
[size=4]கிழக்கு மாகாணசபையின் திருகோணமலை மாவட்டத்திற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரொருவர் உப்புவெளியில் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனிதக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடும் பிரதான சந்தேக நபர்களில் இவரும் ஒருவராக கருதப்படுவதாகவும் பொலிஸார் கூறினர். உப்புவெளி, சாம்பல்தீவு பகுதியில் பெண்ணொருவருடனும் இரு படகுகளுடனும் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார். [/size] [size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/45348-2012-07-25-04-40-31.html[/size]
-
- 3 replies
- 775 views
-
-
[size=5]கொழும்புடன் வளரும் குரோதம்: புதுடில்லியின் புதிய சவால்[/size] [size=4]வல்லரசாகும் இந்தியாவின் குறிக்கோளுக்கு அதன் அயல்நாட்டில் இருந்தே தற்போது புதிய சவால் ஏற்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா எடுக்கும் முயற்சிகள் குறித்து தனது மனக்கசப்பை திருப்தியற்ற நிலையை ஆத்திரத்தை இலங்கை மெல்லக்கசிய விடுகின்றது.[/size] [size=2][size=4]ஒரு மட்டத்தில், இரு தரப்பு உறவுகளைக்கூடத் தொடர வேண்டாம் என்று மறுக்கும் அளவுக்கு கொழும்பு மீது இந்தியா இலங்கை மீது அழுத்தங்களைக் குவிக்கிறது. ஜூன் மாதக் கடைசியில் கொழும்பு வந்து திரும்பிய இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இந்த விடயத்தை கொழும்பு அதிகாரத் தரப்புக்குத் தெ…
-
- 1 reply
- 862 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்ய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். சுவிட்சர்லாந்தின் பெடரல் காவல்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களே இவ்வாறுஇலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். 26 பேரிடம் குறித்த அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சட்டத்தரணிகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்தி விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. சுவிட்சர்லாந்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து 120சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பணம் பயன்படுத்தியும், சட்டவிரோத நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=5]அழிவில் இருந்து மீண்டு அபிவிருத்தி அடைய வேண்டுமாயின்...[/size] [size=4]இரண்டாம் உலகப் போரில் அணுக்குண்டு வீசப்பட்டு மிக மோசமாக அழிக்கப்பட்ட யப்பான் இன்று உலக நாடுகளுக்கே முன்மாதிரியாக விளங்கும் செய்திக்குள் இருக்கக்கூடிய உண்மைகள் குறித்து உலகம் முழுவதும் கவனம் செலுத்தி வருகின்றன.எந்தவிதமான எதிர்ப்புகள், பாதிப்புகள் இல்லாமல் ஏற்படுகின்ற முன்னேற்றம் என்பது ஆய்விற்குரிய விடயமன்று.[/size] [size=4]மாறாக அழிவு மேட்டிலிருந்து துளிர்த்தெழுவதென்பது மிகவும் ஆச்சரியமானது. அந்த துளிர்ப்பு விருட்சமாக மாறும் போது அது பிரமிப்பாகி விடுகின்றது.அத்தகைய பிரமிப்பு யப்பானின் அபிவிருத்தி தொடர்பில் ஏற்படாமல் இருக்க முடியாது.அதேநேரம் அழிவிலிருந்து ஏற்படுகின்ற எழுகை என்…
-
- 0 replies
- 544 views
-
-
[size=4]இனப்படுகொலை புரியும் சிறிலங்காவின் தேசிய விளையாட்டு அணியை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என்பது உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திரு. சிவந்தன் கோபி மேற்கொண்டுவரும் உண்ணா நிலைப் போராட்டம் இன்று நான்காவது நாளாகத் தொடர்ந்து வருகிறது.[/size] [size=4] லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியில், ஸ்ரற்போர்ட் தொடருந்து நிலையத்துக்கு (Stratford High Sreet DLR) அருகில் திரு. சிவந்தன் நடாத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு செலுத்துவதற்காக அவ்விடத்திற்கு பெருமளவு மக்கள் இரவு பகல் பாராமல் சென்று வருகிறார்கள். காலை வேளைகளில் பெரும்பாலும் பெண்களே வருகின்ற போதிலும், மாலையில் அதிகளவு மக்கள் திரண்டிருப்பதைக் அவதானிக்க முடிந்தது…
-
- 1 reply
- 338 views
-
-
இந்தியா அல்லது அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் முதுகில் ஏறி ஈழத் தமிழர்க்கு நீதியும் உரிமையும் பெற்று விட இயலுமெனக் கருதுவது ஈழ விடுதலைக்கே எதிரான துரோகத்தனமாகும்மொழிகள் [size=3] ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம், இந்தியாவின் சதித்தனமான திருத்தத்துடன் கூடிய ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது. சீனா,ரஷ்யா, கியூபா முதலான நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்துள்ளன. இத்தீர்மானம், இலங்கையின் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் என்றும், ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் என்றும் திரும்பத் திரும்ப தமிழக ஓட்டுக்கட்சிகளும் தமிழினப் பிழைப்புவாதிகளும…
-
- 1 reply
- 599 views
-
-
‘‘முஸ்லிம்களின் வாக்குகளினால் முதலமைச்சராக காத்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு இம்முறை முஸ்லிம்கள் வாக்களித்து தமது வாக்குப் பலத்தை விரயம் செய்யப் போவதில்லை. முஸ்லிம் வேட்பாளர்களையும் நம்பி களம் இறங்கியிருக்கும் பிள்ளையானுக்கு முஸ்லிம்கள் நிச்சயமாக வாக்களிக்கப் போவதில்லை. இது அவரது முதலமைச்சர் கனவுக்கு ஆப்பு!’’ இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் நசீர் அஹமட் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இம்முறை தேர்தலில் அரச தரப்புக்குச் செல்லும் கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் அனைத்தும் அவர்களது அபிலாசைகளுக்கும் தனித்துவத்திற்கும் விழும் மரண அடியாகவே இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் தமிழர்கள், தமது…
-
- 0 replies
- 403 views
-
-
கனகராயன்குளம் பகுதியில் உள்ள புகையிரதப் பாதை அருகில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாங்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தப் பொருட்கள் பொலிசாரால் பற்றைக்குள் இருந்து எடுக்கப்பட்டது. கிரனைட்லோஞ்சர்கள் இரண்டு மற்றும் அதற்குப் பயன்படுத்தும் குண்டுகளுமே மீட்கப்பட்டுள்ளன.இது சம்பந்தமாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ___ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39660
-
- 0 replies
- 334 views
-
-
பாதாள உலகக் கோஷ்டித் தலைவர்களைப் போன்று அமைச்சர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் ௭ம்.பி.யுமான விஜித ஹேரத், சட்டத்தை நிறைவேற்றும் நீதிபதிகளே இன்று நீதி கேட்டு வீதியில் இறங்கிப் போராடும் நிலைமை தோன்றியுள்ளதாகவும் தெரிவித்தார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விஜித ஹேரத் ௭ம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நிறைவேற்று அதிகாரம் இன்று நீதித்துறையிலும் தலையீடு செய்துள்ளது. மக்கள் இன்று நீதித் துறை மீதான நம்பிக்கையை இழந்து காணப்படுகின்றனர். பயங்கரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டோர், சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும்…
-
- 0 replies
- 407 views
-
-
[size=4]சிறிலங்கா கெப்பிட்டிக்கொலாவ பிரதேசத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 34 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிப்பாய் பெண் ஒருவரை கத்தியால் குத்தி படுகாயப்படுத்தி விட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்காக குறித்த சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.[/size] [size=4]http://www.pathivu.c...ticle_full.aspx[/size]
-
- 0 replies
- 357 views
-
-
ஶ்ரீலங்கா மிரர், ஶ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தளங்களின் ஊடகவியலாளர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெரும் குழம்பத்தில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. ”ஜனாதிபதியின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தினர், அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டனர்” என்ற குற்றச்சாட்டிலேயே இணையத்தள அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த ஊடகவியலாளர்களைக் கைதுசெய்து, அங்கிருந்த கணனிகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அள்ளிச் சென்றனர். இந்த வழக்கு விசாரணை (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நடைபெற்றபோது, குறித்த அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கணனிகளில் ஆபாசத் தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். எனினும், இதற்கு முன்னர் ந…
-
- 2 replies
- 912 views
-
-
நாட்டில் குற்றச்செயல் அலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்தில் எந்தவிதமான உண்மையுமில்லையென்றும் பொலிஸ் மாஅதிபரிடம் பெற்றுக் கொண்டுள்ள தரவுகளின்படி இதுவொரு சாதாரண நிலைமையென்றும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குற்றச்செயல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக ஊடக நிலைய அதிகாரிகள், செய்தி ஆசிரியர்கள், மற்றும் அமைச்சுக்களின் ஊடக அதிகாரிகளை தெளிவுபடுத்துவதற்காக அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதற்கு முன்னரும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பொலிஸ் மாஅதிபரிடம் பெற்றுக் கொண்ட தகவலின் அடிப்படையில் நோக்கும் போது நாட்டில் குற்றங்கள் க…
-
- 2 replies
- 681 views
-
-
[size=4]மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கொழும்பு 4 ஆம் மாடியில் இருந்து மன்னாருக்கு வருகை தந்துள்ள விசேட குற்றத்தடுப்பு பிரிவு (சி.ஐ.டி) பொலிஸார் மன்னார் ஊடகவியலாளர்கள் மூன்று பேரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிவரை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூன்று பேருக்கும் தனித்தனியே அவர்களுடைய தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்திய ஒருவர் தாம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் இருந்து கதைப்பதாகவும் கொழும்பு 4 ஆம் மாடியில் இருந்து வருகைதந்துள்ளதாகவும் ஊடகவியலாளர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிலையில் குறித்த ஊடகவ…
-
- 1 reply
- 537 views
-
-
ஈழத் தமிழினத்தின் நீதியை நிலைநாட்ட லண்டன் மாநகரில் மீண்டும் அறப்போர்புரியும் சகோதரன் சிவந்தனுக்கு ஆதரவு தெரிவித்து யேர்மனி இளையோர்கள் தமது எண்ணங்களை இங்கே பதிவு செய்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்இளையோர்களின் மற்றும் மாணவர்களின் பங்களிப்பு என்றும் முதன்மை வகித்தது யாவரும்அறிந்தது. வெற்றியின் பக்கம் சாயும் சாதாரண மனித குணத்திற்கு அப்பால் இன்றைய நிலையில் சில பின்னடைவை நாம் சந்தித்தாலும் அஞ்சாமல் எதற்கும் சவாலாகநிற்கும் எமது இளையோர்கள் என்றோ ஒருநாள் தமிழீழம் மலரும் என்பதை இன்றே தமதுசெயற்பாட்டின் ஊடாக உறுதியளிக்கின்றார்கள். தினமும் அறிக்கைகளில் மட்டும்போராட்டம் நடத்தும் எத்தனையோ அமைப்புகளை தாண்டி எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைய சொல்லுக்கு முன…
-
- 0 replies
- 584 views
-
-
[size=4]குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் புத்த பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ௭திராக நீண்டகாலமாக புத்த பிக்குமாரினால் ௭திர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன. திடீரென நேற்று இரவு 7.30 மணியளவில் பிக்குமாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் பள்ளிவாசலுக்கு முன்பாக பிரித் ஓதியுள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் வெல்லவ பொலிஸிற்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து பள்ளிவாசலை மூடும்படி கூறியதாக மேல் மாகாண சபை உறுப்ப…
-
- 7 replies
- 571 views
-
-
பாரிய கைத்தொழில் பேட்டைகளை உள்ளடக்கிய சிறப்பு வலயம் ஒன்றை பல பில்லியன் டொலர்கள் பெறுமதியில் உருவாக்குவதை நோக்காகக் கொண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் வாழ் மக்கள் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்முதலீட்டுத் திட்டத்துக்காக சிறிலங்கா அரசாங்கமானது தமது நிலங்களை சட்டரீதியற்ற வகையில் கையகப்படுத்தியுள்ளதாக இந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மே 17, 2012 திகதியிடப்பட்ட 1758/26 எனும் இலக்கத்தையுடைய வர்த்தமானி அறிவித்தலில், சம்பூர் பிரதேசத்திலுள்ள நிலங்கள் ‘பாரிய கைத்தொழிற் பேட்டைகளை உருவாக்குவதற்கான சிறப்பு வலயத்துக்காக’ ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2006ல் …
-
- 1 reply
- 472 views
-
-
மலையகத்தில் அண்மைக்காலமாக தொடர்கொலைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்த மர்மக்கொலைகளுக்கு சிங்கள அரசாங்கத்தின் பின்னணி உள்ளனவா என மக்கள் சந்தேகிக்கின்றன. முன்னரும் இது போன்றே கிறிஸ் பூதம் எனும் அரச பின்னணியைக் கொண்ட கொலைப்படை மலையகத்தில் உருவாகி நாடெங்கும் பரவி தமிழ் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களை தாக்கி அசுறுத்தியமை நினைவிருக்கலாம்.கடந்த ஒருவாரத்தில் மட்டும் மலையகத்தில் ஆறுபேர் கத்தியால் குத்தியும், அடித்தும் கொலைசெய்யப்பட்டுள்ளனர். மலையகத்தில் தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவினை பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள அரசங்கம் இவ்வறான கொலைகளைச் செய்து அச்சுறுத்தல்களை செய்யலாம். http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%A…
-
- 0 replies
- 540 views
-
-
யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான பாலசுப்பிரமணியம் சிவானந்தன் அவர்கள் தமது 80-வது வயதில் கனடாவில் காலமானார். யாழ். ஈழநாடு பத்திரிகையின் ஆரம்பத்துக்கும் வளர்ச்சிக்கும் பாரிய பணியாற்றியவர்களில் ஒருவரான சிவானந்தன் அவர்கள், நீண்ட காலமாக பத்திரிகையின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். 1981ம் ஆண்டு யாழ் நூலகம், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைக் காரியாலம், யாழ். ஏம்.பி. வே. யோகேஸ்வரனின் இல்லம் ஆகியவற்றுடன், ஈழநாடு நிறுவனமும் இலங்கை அரசாங்கத்தின் காடையர்களினால் தீக்கிரையாக்கப்பட்டவேளையில், அலுவலகப் பணியில் ஈடுபட்டிருந்த சிவானந்தன் அவர்களுக்கு, பலத்த தீக்காயங்கள் ஏற்ட்டபோதிலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கலாநிலையம் பதிப்…
-
- 0 replies
- 553 views
-
-
[size=4]தமிழகம், மண்டபம் அருகே மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கைப் படகில் கடத்தல்காரர்கள் ஊடுருவி இருக்கலாம் எனச் சந்தேகித்து, தமிழக உளவுப் பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.[/size] [size=4]இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் சண்டை முடிவடைந்த நிலையில், இலங்கையில் தேயிலை, புகையிலை, பீடி உள்ளிட்ட பொருள்களை அதிக விலை கொடுத்து இலங்கை மக்கள் வாங்க வேண்டிய நிலையுள்ளது.[/size] [size=4]இதனால், இலங்கை மற்றும் தமிழகத்தில் உள்ள கடத்தல்காரர்கள் இணைந்து இராமேசுவரம், மண்டபம், வாலிநோக்கம், தேவிபட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து, இலங்கைக்கு புகையிலை, பீடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கடத்திச் செல்கின்றனர்.[/size] …
-
- 1 reply
- 885 views
-
-
உடற்பயிற்சி செய்த, ராஜபக்சே மனைவி முன்பு நந்தி போல நின்றவர் கைது! கொழும்பு: ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு முன்பு ஒரு வாலிபர் திடீரென வந்து நின்று கொண்டு நகராமல் அடம் பிடித்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். காலே பேஸ் கிரீன் என்ற இடத்தில் ஷிராந்தி வழக்கமான காலை உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தார். அவருக்குப் பாதுகாப்பாக போலீஸாரும் நின்றிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் அந்தப் பகுதிக்கு வந்தார். ஷிராந்தி நடை பயிற்சிக்குப் போனபோது அவரது பாதையில் நின்று கொண்டு நகராமல் நின்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை விலகிச் செல்லுமாறு இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியபோது அதை அந்த நபர் கேட்கவில்லை. இதையடுத்து அவரை…
-
- 10 replies
- 8.8k views
-
-
புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்று அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தால் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை அகதி ஒருவர் இன்று 25ம் திகதி புதன்கிழமை நாடு கடத்தப்படுகிறார். இவரை நாடு கடத்தலில் இருந்து தடுப்பதற்கான முயற்சிகளை சட்டத்தரணிகள் மேற்கொண்ட போதும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதன்படி குறித்த இலங்கையர் அவுஸ்திரேலிய நேரப்படி இன்று மாலை 2.35 அளவில் பேங்கோக் நோக்கி அனுப்பி வைக்கப்படவுள்ளார். அதன் பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார். குறித்த நபரை இலங்கைக்கு நாடு கடத்தினால் அவருடைய உயிருக்கு ஆபத்து என அவர் சார்பான சட்டத்தரணி மனு தாக்கல் செய்தபோதும் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள போதுமான நேரம் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த இலங்கையர்…
-
- 0 replies
- 800 views
-
-
மன்னார் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை மற்றும் நீதிமன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்து இன்று 25ம் திகதி புதன்கிழமையும் அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் ரிசாத் பதியூதின் மன்னார் நீதவானை தமது தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தியதாகவும் அதன் பின்னர் ஆட்களை அனுப்பி நீதிமன்றின் மீது தாக்குதல் நடத்தத் தூண்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து சட்டத்தரணிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றிலும் ஈடுபட்டனர். சம்பவத்துடன் தொடர்புடைய அமைச்சர் ரிசாத் பதியூதினை கைது செய்யாமைக்கு கண்டனம் தெரிவித்து இன்றும் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற வளாக வீதியை மறித்து சட்டத்தரணிக…
-
- 0 replies
- 552 views
-
-
வவுனியாவில் ஹோட்டலொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். தொழிலதிபரான கேதாரலிங்கம் விசாகினி (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். http://thaaitamil.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2/
-
- 0 replies
- 780 views
-
-
[size=4]பாகிஸ்தான் அணு ஆலையை அமைக்க உதவுகின்றதா? இந்தியாவின் வயிற்றில் புளியை கரைக்கின்றன சிங்களமும் பாகிஸ்தானும்.[/size] [size=4]சம்பூரில் அணு ஆலை ஒன்றை சிங்களத்திற்கு பாகிஸ்தான் அமைத்துக்கொடுக்க எண்ணியுள்ளதாக இந்தியா நம்புகின்றது. கடந்த வாரம் டெல்லி சென்ற சிங்களத்திற்கான தூதுவர் அசோக் இதுபற்றி கூறியுள்ளாராம். [/size] [size=6]Pakistan's help to Sri Lanka for Nuclear plant alarms India[/size] [size=6][size=5]Pakistan is all set to begin consultations with Sri Lanka to help set up a nuclear power plant in Trincomallee's Sampur, it is believed.[/size][/size] [size=6][size=5]The development is being viewed with concern in New Delhi since the Indian emb…
-
- 9 replies
- 1.2k views
-
-
நல்லூர் கொடியேற்ற உற்சவத்தில் கலந்துகொண்ட அடியவர்களின் சுமார் ஐந்து லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருடர்களினால் திருடப்பட்டுள்ளது. கொடியேற்ற நேரம் ஏற்பட்ட சன நெரிசலைச் சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள் மிகவும் நுட்பமான முறையில் இந்தத் திருட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள். கொடியேற்றம் முடிந்து வெளியே வந்த பின்னரே தமது தங்க நகைகள் திருடு போயுள்ளதை உரியவர்கள் கண்டுள்ளார்கள். சுமார் ஏழு பவுண் நிறையுடைய தாலிக்கொடி ஒன்று மற்றும் முறையே ஒன்றரைப்பவுண்; இரண்டு பவுண் நிறையுடை தங்கச்சங்கிலிகளும் திருட்டுப் போயுள்ளன. இது சம்பந்தமாக ஆலயத்தில் உள்ள தற்காலிக பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/news/head_v…
-
- 1 reply
- 566 views
-