Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=6]படையினர் 2000 வீடுகள் கட்டிக்கொடுத்தனர் அரசியல்வாதிகள் தமிழருக்கு என்ன செய்துள்ளீர்கள்? யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி இப்படிக் கேட்கிறார்[/size] [size=2][size=4]யாழ்.மாவட்டத்தில் இராணுவம் அவசியமற்றது என்று கூறும் அரசியல்வாதிகள் வறிய மக்களுக்காக என்ன செய்துள்ளீர்கள் நாங்கள் இரண்டாயிரம் வீடுகள் வரையில் மக்களுக்கு நிர்மாணித்து வழங்கியுள்ளோம். இவ்வாறு யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கேள்வி யெழுப்பினார்.[/size][/size] [size=2][size=4]கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஜே/279 கிராம சேவகர் பிரிவில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பமொன்றுக்கு இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டது.[/size][/size] [size=2][…

    • 1 reply
    • 275 views
  2. [size=4]மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் மன்னார் நீதவானை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அச்சுறுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் ஒன்று திரண்டு அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இன்று காலை 11 மணியளவில் யாழ். நீதிமன்றின் முன்னால் ஒன்று கூடிய சட்டத்தரணிகள், அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியும், கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது நீதிமன்றப் பணியாளர்களும் கலந்து கொண்டனர். "வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்", "நீதிமன்றம் என்ன உனக்கு அமைச்சரவை வீடா?", "கிரிமினல் ரிஷாத்", "தூண்டாதே தூண்டாதே இனக் கலவரத்தைத் தூண்டாதே", "நீதித்துறையில் தலையிட நீ …

    • 13 replies
    • 1.1k views
  3. சப்ரகமுவ மாகாணத்தில் மலையகத் தமிழ் மக்கள் தமது நியாயமான ஜனநாயக பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதை தடுத்து நிறுத்த சில நபர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். சப்ரகமுவாவுடன் நின்று விடாமல், கிழக்கு மாகாணத்திலும் இவர்கள் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளார்கள். இதே நபர்கள்தான், வட மாகாணத்திலும், கொழும்பு மாவட்டத்திலும் கடந்த வருடம் நடைபெற்ற மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை, தேர்தல்களின்போதும், தமிழர் வாக்குகளை சிதறடிக்க முயற்சி செய்தார்கள் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலின்படி நடந்துகொள்ளும் இந்த நபர்களை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மிகத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை,…

  4. (ஜெ.டானியல்) இன்னும் ஒரு வருடத்தில் யாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவி வரும். அதற்கான முழு மூச்சுடன் இந்திய அரசு செயற்பட்டு வருகின்றது என இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்தார் யாழ்.பல்கலைக்கழக கல்வி சமூகத்தின் ஏற்பாட்டில் 'போருக்குப் பின்னரான அபிவிருத்தி' என்னும் கருப்பொருளில் சர்வதேச மாநாடு ரில்கா சிற்ரி ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'வடகிழக்கில் இன்று ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்களின் வாழ்வியல் முன்னேற்றமடைந்து வருவதை நாங்கள் உணர்கின்றோம். இலங்கையின் எதிர்கால ஒளிமயமான வாழ்வுக்காக இந்தியா எப்போது…

    • 7 replies
    • 1.1k views
  5. தமிழ் வாக்காளர்களுக்கு ஒரு எச்சரிக்கை! [size=3] [/size] [size=4]சப்ரகமுவ மாகாணத்தில் மலையகத்தமிழ் மக்கள் தமது நியாயமான ஜனநாயக பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதை தடுத்து நிறுத்த சில நபர்களை பேரினவாதம் பயன்படுத்துகிறது. சப்ரகமுவயுடன் நின்று விடாமல், கிழக்கு மாகாணத்திலும் இவர்கள் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளார்கள். இதே நபர்கள்தான், வட மாகாணத்திலும், கொழும்பு மாவட்டத்திலும் கடந்த வருடம் நடைபெற்ற மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை, தேர்தல்களின்போதும், தமிழர் வாக்குகளை சிதறடிக்க முயற்சி செய்தார்கள். பேரினவாதிகளின் நிகழ்ச்சிநிரலின்படி, நடந்துகொள்ளும் இந்த நபர்களை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்க…

    • 0 replies
    • 270 views
  6. கிளிநொச்சியின் பல பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான இளைஞர்களை பலவந்தமாக கூட்டிச்சென்று இராணுவ குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிலரை தாக்கியுமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பிரதேசங்களான அக்கராயன், வன்னேரிக்குளம், ஸ்கந்தபுரம் விசுவமடு போன்ற பகுதிகளில் சந்தேகத்திற்கிடமானவர்கள் என்று கூறி பிரத்தியேகமான இடங்களுக்கு அழைத்துச் சென்று படைப் புலனாய்வுப் பிரிவினர் இளைஞர்களை கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர். இயக்கத்தில் இருந்தாயா? எந்த பிரிவு? எவ்வளவு காலம்? போன்ற கேள்விகளை கேட்கும் புலனாய்வுப் பிரிவினர் இல்லை என பதில் கூறுபவர்கள் மீது கடும் தொனியில் விசாரிப்பதுடன் சிலர் மீது கடுமையாக தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்…

  7. [size=4][/size] [size=4]தற்போது மன்னாரில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வர வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி வேண்டுகோள் விடுத்தார்.[/size] [size=4]கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாராந்த ஜும்ஆ குத்பா பேருரையிலேயே அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி இந்த பகிரங்க வேண்கோளை விடுத்தார்.[/size] [size=4]மன்னார் பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்த்து இனங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்த கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மனிதாபிமான முறையில் இப்பிரச்சினை கையாளப்பட்ட வேண்டும் எனவும் அகில இல…

  8. [size=4]தமிழர் தாயகப் பிரதேசத்தில் புலிக்கொடிகளைப் பறக்க விடுவதன் மூலம் அரசாங்கம் அடைய நினைக்கும் இலக்கு என்ன என்பது தொடர்பில் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய அதேவேளை இந்த விவகாரம் தமிழ் மக்கள் மத்தியில்வரவேற்பைப் பெற்றுள்ளமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.[/size] [size=4]தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரியும் தமிழ் அரசியல்கைதி நிமலரூபன் சிறைச்சாலையில் அடித்துக் கொல்லப்பட்டமையைக் கண்டித்தும் நேற்றுப் புதன்கிழமைநெல்லியடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தமிழீழ தேசியக் கொடி காண்பிக்கப்பட்டுள்ளது.இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த படைப்புலனாய்வாளர்கள் தமது கைகளில் புலிக்கொடிகளை ஏந்திவந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தைச் சுற்றி வலம் வந்தனர…

  9. [size=4][/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே காந்தா இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்நகரில் சந்திக்கிறார். இதற்காக இந்தியத் தூதரக அதிகாரிகள் விடுத்த அழைப்பையடுத்து கிழக்கு மாகாணத்திலும், கொழும்பிலும் தங்கியுள்ள கூட்டமைப்பின் எம்.பி.க்கள் யாழ்ப்பாணம் விரைகின்றார்கள்.[/size] [size=4]யாழ்ப்பாணம் கைதடியில் இன்று காலை பனை அபிவிருத்திச் சபையின் ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழாவில் இந்தியத் தூதர் கலந்து கொள்ளவுள்ளார். இதைத் தொடர்ந்து இவர் இன்று மாலை 5.30 மணியளவில் யாழ்நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரையும் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்புக்காக அனைவரையும் ய…

  10. [size=4]விஞ்ஞானம், பொறியியல் மற்றும் கலைத்துறையில் அதிவிசேட திறமைகொண்ட இலங்கையர்களை தமது நாட்டிற்கு வேலைசெய்ய அழைப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையிலும் மாலைதீவிலும், விஞ்ஞானம், மானுடவியல், பொறியியல் மற்றும் கலைத்துறைகளில் திறமையான சில மேதாவிகள் உள்ளனர்.[/size] [size=4]இவர்கள் 'மேதாவி திறமையாளர் குடிவரவு பாதை' என்னும் விசேட ஏற்பாடு வழியாக பிரித்தானியாவில் வேலை செய்யும் சாத்தியத்தை ஆராய்ந்து பார்க்கும்படி நான் விதந்துரைக்கின்றேன் என இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர் கூறியதாக கொழும்பிலுள்ள பிரத்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.[/size] [size=4]இந்த விசேட ஏற்பாட்டிற்கு அமைய ஆகஸ்ட் 2011 இல் ஏப்ரல் 2013 வரையான காலப்பகுதிக்…

  11. [size=4]சிறிலங்காவானது தற்போது அமெரிக்காவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து இராஜதந்திர ரீதியான உறவுகளைப் பலப்படுத்தும் வகையில் வலுவான பொருளாதார உறவைக் கட்டியெழுப்பி வருவதாக உயர் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். "இந்த விடயத்தில் நாங்கள் அமெரிக்காவுடன் நேரடியான, நேர்மையான உறவைக் கொண்டுள்ளோம்" என அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். "அமெரிக்கா கூறுகின்ற எல்லாவற்றுக்கும் நாங்கள் உடன்படவில்லை அல்லது அமெரிக்கா கூறுகின்றவற்றை நாங்கள் மறுக்கவுமில்லை. எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் சிறந்த உறவைக் கட்டியெழுப்ப நாம் விரும்புகின்றோம்" என விக்கிரமசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவானது சிறிலங்காவின் மிகப் பெர…

    • 2 replies
    • 497 views
  12. என்னுடைய பெயர் செம்மலை நான் தமிழீழத்தில் வாழ்ந்து வருகிறேன் தலைவர் காட்டிய பாதையில் தமிழீழ தனி அரசு உருவாகும் என்ற நம்பிக்கையுடன் இன்றும் விடியலை நோக்கி பயணிக்கிறேன், அதன் அடிப்படையில் இங்கு நாள் தோறும் நடந்துகொண்டிருக்கும் கொடுமைகளை வார்த்தைகளில் எழுதிவிட முடியாது என்பது எனது நிலைப்பாடு. முள்ளிவாய்க்களில் நடந்து முடிந்த இன அழிப்பை விட இன்று தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பல்வேறுவகையான இனச் சுத்திகரிப்பை, சமூகச் சீர் கேடுகள் ஊடாக எமது இனம் சிதைந்து போவதை பார்க்கும் போது எத்தனை இலச்சம்பேர் எங்கு வாழ்ந்தும் என்ன பயன் என்ற வேதனை மட்டுமே மேலோங்கி நிற்கிறது. எங்கள் வேதனைகளைச் சொல்லி மண்டியிட்டு அழுவதற்கு இங்கு மாவீரர்களின் கல்லறைகளும் இல்லை, மாவீரர்கள் த…

    • 0 replies
    • 741 views
  13. [size=4]சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர் படை அதிகாரிகள் பலர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர் என்ற விபரம் சிறிலங்கா பாதுகாப்புத் தரப்புக்கு தற்போதே தெரியவந்துள்ளது. கொமடோர் குருபரன் என்ற சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரி கனடாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட விவகாரம் அனைத்துலக ஊடகங்களில் வெளியான பின்னரே, அதுபற்றி சிறிலங்கா கடற்படைக்கு தெரியவந்துள்ளது. கொமடோர் குருபரன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கடந்த சில ஆண்டுகளுக்குள் ஓய்வுபெற்ற சிறிலங்கா படை அதிகாரிகள் பற்றிய விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இறுதிப்போரில் பங்கேற்ற பின்னர் ஓய்வுபெற்ற படை அதிகாரிகளின் த…

    • 1 reply
    • 598 views
  14. தமிழக எதிர்ப்புகள் குறித்து கவலை இல்லை என்று சொல்கிறது இலங்கை..! இந்திய அரசைப் போலவே..?! ஈழதேசம் செய்தி..! [size=3] இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்கவெல கூறுகையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள உறவை யாராலும் அழிக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணமே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்ததையே கூறலாம் என்றார். எனவே, இரு நாட்டிற்கும் இடையில் வெளியில் தெரியும் விசயங்களை விட ( அமைதியான ) ரகசியமான நடவடிக்கைகளே உண்மையானவை. தமிழ் நாட்டின் எதிர்ப்புகள் குறித்து இலங்கை அரசாங்கம் அலட்டிக் கொள்ளாது. வருடத்திற்கு சுமார் ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு படையினர் இந்தியாவில் பயிற்சிகளைப் பெறுகின்றனர். இலங்…

    • 0 replies
    • 885 views
  15. [size=4][/size] [size=4]இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள உறவை யாராலும் அழிக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணமே புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு வருடத்திற்கு நீடித்தமையைக் கூறலாம் ௭ன்று இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.[/size] [size=4]௭னவே இரு நாட்டிற்கும் இடையில் வெளியில் தெரியும் விடயங்களை விட அமைதியான நடவடிக்கைகளே உண்மையானவை. தமிழ் நாட்டின் ௭திர்ப்புகள் குறித்து அரசாங்கம் அலட்டிக் கொள்ளாது. வருடத்திற்கு சுமார் ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு படையினர் இந்தியாவில் பயிற்சிகளைப் பெறுகின்றனர் ௭ன்றும் அவர் சுட்டிக்காட்டினார்.[/size] [size=4]அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும…

  16. [size=4]நேற்று காலை 11 மணி தொடக்கம் 12 மணிவரையில் நெல்லியடியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.[/size] [size=4]தமிழர்கள் நாம் சிங்கள தேசத்தின் எதிரிகள் அல்ல, மாறாக சிங்கள தேசத்தோடு சமவுரிமையுடன் வாழ விரும்புகின்றோம். கடந்த அறுபது வருடங்கள் பிரிந்து வாழ்வதற்காக நாம் சென்றிருக்கின்ற பாதை எங்களால் விரும்பி தெரிவுசெய்யப்பட்ட பாதை இல்லை, சிங்கள தேசம் தமிழ்தேசத்தின் அடிப்படைகளை திட்டமிட்டு அழித்தபோது எமது உரிமைகளுக்காக அந்த பாதைக்குள் தள்ளப்பட்டோம்.[/size] [size=4]இன்றும் கூட தடைகள் நீடிக்கின்றன, …

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மேசைக்கு கொண்டுவந்து அரசாங்கத்துடன் இணக்கப்பாடொன்றைக் காண வழி ஏற்படுத்தித் தருவதாக பசில் ராஜபக்‌ஷ, மகிந்த ராஜபக்‌ஷவிற்கு உறுதிவழங்கியுள்ளார். இதற்கமைய அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் தலையீட்டின் கீழ் பிரபல தமிழ் வர்த்தகர் சிலருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பிரதிநிதிகளுக்கும் இடையே சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த பேச்சுக்களுக்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும், இதுகுறித்து இந்திய இராஜதந்திரிகளுக்கு அறிவிப்பதற்கு அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ விரைவில் இந்தியா செல்லவுள்ளதாகவும் தெரியவருகிறது. எவ்வாறாயினும், இதுகுறித்து நாம் ஆராய்ந்த போது, இவ்வா…

    • 0 replies
    • 529 views
  18. கொழும்பை மையமாகக் கொண்ட கிராமப் பகுதி சிறுமிகளை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்து வந்த பாதள உலகக்குழு பிரதானி ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தப் பாதாள உலக பிரதானி தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுதது வைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்புக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட மூன்று சிறுமிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் 16 தொடக்கம் 21 வயதுடையவர்களாவர். ஏமாற்றி இவர்கள் அழைத்து வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஒரு தடவைக்கு 5,000 மற்றும் 10,000 ரூபாவுக்கு இச்சிறுமிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கொம்பனி வீதியில் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள…

    • 0 replies
    • 937 views
  19. சுவிசில் தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகச் சந்தேகப்படும் காவல்துறையினர் அவரது கணவரைக் கைது செய்துள்ளனர். கடந்த மாத இறுதிப் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இந்தப் பெண்ணின் உடலம் இந்த மாதம் 2ஆம் நாள் யெனிவாவில் (Geneva) உள்ள றோன் (Rhone) ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் பிரான்சின் பிரசாவுரிமை பெற்றவர் எனவும் யெனீவாவில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்தவர் என்றும் சுவிசிலுள்ள யேர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிப் பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றன. மனைவியை கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்திருப்பதாகவும் அதனை பிள்ளைகள் கதவின் துவாரம் வழியாகப் பார்த்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்திருப்பதாகவும்…

    • 0 replies
    • 797 views
  20. யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை பத்து மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று தம்மை அடையாளப்படுத்தி தமது கைத்தொலைபேசிக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக குறிப்பிட்ட யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.நிலமன் யாழ் போதனா வைத்தியசாலை விடயத்தில் தேவையில்லாமல் தலையிடுவதாக அச்சுறுத்தியதாக தெரிவித்தார். தமிழீழவிடுதலைப் புலிகளுடன் தொடர்பைப் பேணிவருவதாகவும் தம்மை அச்சுறுத்தியதாக யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். http://thaaitamil.com/%…

    • 0 replies
    • 375 views
  21. கிளிநொச்சியின் பல பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான இளைஞர்களை பலவந்தமாக கூட்டிச்சென்று இராணுவ குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிலரை தாக்கியுமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பிரதேசங்களான அக்கராயன், வன்னேரிக்குளம், ஸ்கந்தபுரம் விசுவமடு போன்ற பகுதிகளில் சந்தேகத்திற்கிடமானவர்கள் என்று கூறி பிரத்தியேகமான இடங்களுக்கு அழைத்துச் சென்று படைப் புலனாய்வுப் பிரிவினர் இளைஞர்களை கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர். இயக்கத்தில் இருந்தாயா? எந்த பிரிவு? எவ்வளவு காலம்? போன்ற கேள்விகளை கேட்கும் புலனாய்வுப் பிரிவினர் இல்லை என பதில் கூறுபவர்கள் மீது கடும் தொனியில் விசாரிப்பதுடன் சிலர் மீது கடுமையாக தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்…

    • 0 replies
    • 582 views
  22. நாற்பது வயது கடந்தும் திருமண வாழ்வில் விருப்பமின்றி தமிழ் ஈழ முன்னெடுப்புகளில் தீவிரமாக இயங்கிவரும் நாம் தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சீக்கிரமே கால் கட்டு! எதிர்வரும் அக்டோபர் முதல் தேதி சீமானுக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்பதை கும்பல் பெருமையுடன் தெரிவிக்கிறது. தமிழகத்தை சேர்ந்த பிரபலமான பெண்மணி ஒருவர்தான் சீமானை மணக்க இருக்கும் அதிர்ஷ்ட சாலி ( மணப்பெண் யார் என்பதையும், அவரது புகைப்படத்தையும் வெகுவிரைவில் ) விடுதலை புலிகளின் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் மதிவதனியை மணந்த தினம் அக்டோபர் ஒன்று. அதனால், அன்றைய தினத்தையே தனது திருமண நாளாக திட்டமிட்டிருக்கும் சீமான், வெகு விமர்சையாக திருமணத்தை நடத்த இருக்கிறார், இருபத்தி ஐயாயிரம் பேருக்கு கறி வி…

  23. [size=4]இந்தியக் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. நேற்று இந்தப் படகு திருகோணமலைக்கு வந்துள்ளதை உறுதி செய்துள்ள சிறிலங்கா கடற்படை, இந்தியக் கடற்படைப் படகின் வருகையின் நோக்கம் என்னவென்று தெரியப்படுத்தவில்லை.[/size] [size=4]செற்லட் என்ற இந்தப் படகின் கட்டளை அதிகாரியான லெப்.கொமாண்டர் நிதின் குப்தா, சிறிலங்காவின் கிழக்கு கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.[/size] [size=4]48.1 மீற்றர் நீளத்தையும், 288 தொன் எடையையும் கொண்ட இந்த அதிவேகத் தாக்குதல் படகு, நாளை வரை திருகோணமலையில் தரித்து நிற்கும். சென்னையைத் தளமாக கொண்டு செயற்படும் இந்த பீரங்கிப் படகில் 4 அதிகாரிகளும்…

  24. வவுனியா சிறையில் இடம்பெற்ற கலவரத்தின் பின் தாக்குதலுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி கணேசன் நிமலரூபனின் சடலம் தொடர்பில் அவருடைய பெற்றோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி, பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க முன்னிலையில் குறித்த மனு இன்று (18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த பிரதம நீதியரசர் மனு மீதான விசாரணையை 20ம் திகதிக்கு ஒத்திவைத்தார். பெரும்பாலும் நிமலரூபனின் சடலத்தை வவுனியாவுக்குக் கொண்டு செல்வதா அல்லது நீர்கொழும்பில் அடக்கம் செய்வதா என்ற முடிவ…

    • 6 replies
    • 851 views
  25. [size=4]படையினருக்கு பயற்சியளிப்பதில் இலங்கையின் பிரதான பங்காளியாக இந்தியாவே காணப்படுகின்றது என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், '1000, 1500 பேருக்கு பயிற்சியளிக்கும் இந்தியாவுக்கு 8 பேர் என்ற விடயம் பாரிய பிரச்சினையாகத் தோன்றாது. இதனையொரு பிரச்சினையாக கருதாத பட்சத்திலேயே இலங்கை விமானப்படையினர் 8 பேருக்கும் வேறு இடத்தில் பயிற்சியளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இது தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலைமையாகும். இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டைச் சேர்ந்த குறிப்பிட்ட சில குழவினரே குரலெழுப்பி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறான நடவடிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.