ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143390 topics in this forum
-
[size=3][size=4]இந்தியாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதிகளை வரையறை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் திருத்தங்களை செய்வதன் மூலம் இந்திய இறக்குமதிகளை குறைக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்திய இறக்குமதிகளை வரையறுப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களை மேலும் ஊக்கப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமென நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனைவழங்கியுள்ளார். 208 பொருட்கள் இறக்குமதி செய்வது தொடர்பிலான சட்டங்களில் திருத்தம் கொண்…
-
- 1 reply
- 865 views
-
-
புத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரும் தனிநபர் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நெடுஞ்சாலை ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் பொலிஸாரால் வழிமறிக்கப்பட்ட பிக்கு ஒருவர், பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுப்பதையும், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசுவதையும் இந்த வீடியோ காண்பிக்கின்றது. இனவாதம் பேசிய பிக்கு கிருளப்பனை நந்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். நள்ளிரவு வேளையில் பொலிஸாரால் வழிமறிக்கப்பட்ட போதே இவர் பொலிஸாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸாரையும் அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளையில் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான இனவாதத்தையும் அவர் பேசியிருப்பதாகத் தெரிவிக்கப்படு…
-
- 2 replies
- 1k views
-
-
[size=4]திருகோணமலை மூதூரில் தமிழ்,முஸ்ஸிம், கிருஸ்த்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியான பச்சநூர் மலையில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]பச்சநூர் மூன்றாம் கட்டை பகுதியில் இப்புதிய விகாரை அமைக்கப்பெற்றுள்ளது. இது திருகோணமலை நகரத்திற்கு 5 கிலோமீற்றர் தெற்கே உள்ளது.[/size] [size=4]குறித்த பகுதியில் 6 சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்துவந்ததாகவும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 110க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.[/size] [size=4]பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றுவதற்கான முன்னோடி நடவடிக்கைகளாக, 63 ஆரம்பத் தர சிங்கள மாணவர்கள் கல்வி கற்பதற்காக சகல வசதிகளுடன் கூடிய பௌத்த மத்திய கல்லூரித் தரப் பாடசாலை ஒன்று அம…
-
- 1 reply
- 723 views
-
-
[size=4]ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பிரித்தானிய விஜயம், இலங்கைக்கு பல நன்மைகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மகாராணியின் ஆட்சிகால வைரவிழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி அங்கு சென்றிருந்தமை தொடர்பாக ஊடக பிரதானிகளை தெளிவூட்டும் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இலங்கை அரச தலைவர் ஒருவர் பிரித்தானியாவுக்கு அண்மையில் மேற்கொண்ட மிக முக்கிய விஜயமாக தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த போது புலம் பெயர்ந்த தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். எனினும், அவர்களின் திட்டங்கள் எவ…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் எச்சங்கள் எதையும் விட்டு வைக்காது அழிப்பதற்காக இவை இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. போர் முடிவுற்று மூன்றாண்டுகள் கடந்த நிலையில் மேற்படி பகுதிகளில் இன்னமும் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. இந்த நிலையிலேயே அங்கு எஞ்சியிருக்கக் கூடிய மனித புதைகுழிகளிலும் காணப்படும் எலும்பு எச்சங்களையும் உக்கச்செய்து மண்ணோடு மண்ணாக்க திட்டமிட…
-
- 2 replies
- 2.3k views
-
-
முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா சிலையை அகற்ற இலங்கை அரசு தீவிரம் கொழும்பு: முன்னாள் இலங்கை பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் சிலையை அகற்ற இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது. இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா. பண்டாரநாயக்கா ஓர் கிறிஸ்தவராகப் பிறந்த போதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டிக் கொண்டார். இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோவை திருமணம் செய்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951ம் ஆண்டு வரை இருந்த அவர் பல்வேறு பதவிகளை வகித்தார்.1951ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங…
-
- 14 replies
- 839 views
-
-
article_image By Shamindra Ferdinando GTF spokesman, Suren Surendiran with South African President Zuma ‘President Rajapaksa is in a hell of a predicament also because as the Commander in Chief of the Military, he is alleged to have committed war crimes and crimes against humanity. With mounting evidence, he is trying to negotiate, perhaps barter justice with a political solution as he knows that the day he relinquishes his position as head of state, he is likely to be arrested just as Charles Taylor of Liberia or Milosevic of former Yugoslavia.’ While the LTTE was retreating rapidly on the Vanni east front, following a debilitating setback at Kilin…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமது கட்சியின் யாப்பில் நாட்டை பிரிக்கும் வகையிலான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் உள்ள தமது கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது அதில் தவறுகள் இடம்பெற்றுள்ளதென இரா.சம்பந்தன் ´தி ஹிந்து´ பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, தமிழர் விடுதலை கூட்டணி, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளின் யாப்பில் நாட்டை பிரிப்பது தொடர்பில் ஏற்பாடுகள் உள்ளதால் அந்த கட்சிகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரி சிங்கள தேசிய முன்னணியின் செயலாளர் ஜயந்த லியனகே உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சம்பந்தன் …
-
- 1 reply
- 656 views
-
-
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மூத்த மகனும், ஊவா மாகாண சபையின் முதலமைச்சருமான ஷசிந்திர ராஜபக்ஷவைத் தவிர,ஏனைய அனைத்து மாகாண சபை முதலமைச்சர்களையும் மாற்றுவதற்கு மகிந்தர் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்துவரும் மகிந்த , அதற்கு முன்னர் மாகாண சபைகளுக்கு மிகவும் விசுவாசமான முதலமைச்சர் சிலரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளார். இதன்படி தென் மாகாண முதலமைச்சராக சஜின் வாஸ் குணவர்தனவை நியமிக்க மகிந்த தற்போது இறுதித் தீர்மானம் எடுத்துள்ளார். அத்துடன் மேல் மாகாண சபை முதலமைச்சராக பதவியேற்றத் தான் தயார் என துறைமுக சேவைகள் பிரதியமைச்சர் ரொஹித்த அபேகுணவர்தன நாமல் ராஜபக்ஷவிற்கு கடந்தவாரம் அறிவி…
-
- 2 replies
- 1.3k views
-
-
மீள்குடியேற்ற அமைச்சராக நான் இருந்த போது கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த இரண்டு இலட்சம் தமிழ் மக்களையும், வன்னி இறுதி யுத்தத்தில் இருந்து இடம் பெயர்ந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் அவர்களது சொந்த மண்ணில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மீள்குடியேற்றினேன். இவ்வாறு மனித நேயத்துடன் தமிழ் மக்களுக்கு நான் இனம், மதம், மொழி கடந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில வங்குரோத்து நிலைக் கொண்ட ஆயுதக் குழுக்களில் இருந்து வந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகி இருக்கின்றவர்களும், அவருக்கு துணைபோகும் சிலரும் என்னை தமிழ் மக்களின் விரோதிகளாக காட்ட முயலுகின்றார்கள் என தெரிவித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்,…
-
- 2 replies
- 695 views
- 1 follower
-
-
[size=4]யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்குக் கிழக்கில் இயல்புநிலை உருவாகியுள்ளதாகவும்,[/size] [size=4]இராணுவத்தின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து வருவதாகவும் கூறி சர்வதேச சமூகத்தினை ஏமாற்றிவரும் சிறீலங்கா அரசானது மறுபுறத்தில் இராணுவத் தேவைக்காகவென தமிழர் தாயகத்திலுள்ள தனியார் மற்றும் அரச காணிகளை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இது பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. சிறீலங்கா அரசினது இந்த இராணுவ மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் அதாவது தமிழ்த் தேசத்தை இல்லாமல் செய்வதனூடாக தமிழர்களது மண்ணை முழுமையாக சிங்கள மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாகவே இந்த இராணுவ மயமாக்கும் வேலைத்திட்டமும் அமைந்துள்ளது. …
-
- 0 replies
- 428 views
-
-
[size=3][/size] [size=3][size=4]நாட்டின் முழு வருமானத்தில் 96 வீதமான பணம் கடனைச் செலுத்துவதற்கே அரசு பயன்படுத்திவருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் 30 வீத பணமே கடன் தவணைக்காக செலவிடப்பட்டது.[/size][/size] [size=3][size=4]நாட்டில் வங்குரோத்து நிலையை தற்போதைய அரசாங்கம் உருவாக்கியுள்ளது. அத்துடன் பணம் இருக்கும் இடங்களை தேடி அடித்து சாப்பிட ஆரம்பித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]அந்தவகையில் ஊழியர் சேமலாப நிதியை கொள்ளைய…
-
- 0 replies
- 501 views
-
-
மட்டக்களப்பில் ஆற்றிய உரையினை விலக்கிக் கொண்டு மன்னிப்புக் கோரும் வரை அரசு கூட்டமைப்புடன் எவ்விதமான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கக் கூடாது. அது மட்டுமன்றி சம்பந்தன் குழுவுடன் கூட்டணி அமைக்கும் எக்கட்சியாயினும் தேசத் துரோகிகளாகவே கருதப்படுவார்கள் என்று தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. புலி பயங்கரவாதிகளின் யுத்தத்தை விடுதலைப் போராட்டமாக வர்ணித்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. அரசியலமைப்பிற்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளதுடன் நாட்டின் சுயாதீன தன்மைக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். எனவே, சம்பந்தனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்று அம் முன்னணி குறிப்பிட்டுள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்த…
-
- 2 replies
- 599 views
- 1 follower
-
-
கொழும்பில் காணாமல் போன ஐந்து இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ரஜீவன் நாகநாதன் என்ற இளைஞர் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொழும்பில் காணாமல் போயிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு நீதவான் ரஸ்மி சங்கப்புலி உத்தரவிட்டுள்ளார். ரஜீவனின் தயாரான சரோஜா நாகநாதன் என்பவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மீள விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமது மகன் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டதாக நீதிமன்றில் குறித்த பெண் அழுது புலம்பினார். சமிந்த என தம்மை அடையாளப்படுத்திய நபர், மகனை மீள ஒப்படைக்க 500,000 ரூபாவினை கப்பமாக வழங்குமாறு கோரியிருந்தார் என சரோஜா நாகநாதன் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 610 views
-
-
சுயாதீன உலகப் போர்க்குற்ற விசாரணையையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்திக் கையெழுத்துத் திரட்டல். தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் சுயாதீன உலகப் போர்க்குற்ற விசாரணையையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்திக் கையெழுத்துத் திரட்டல். கையெழுத்துக்கள் கனடாவாழ் தமிழ் மக்களிடமும் பல்லின மக்களிடமும் சேகரிக்கக் கனடியத் தமிழர் தேசிய அவை ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் அனைத்து மக்களவைகளுடனும் மற்றய அமைப்புக்களூடனும் இணைந்து சர்வதேச அளவில் இக்கையெழுத்துத் திரட்டல் நடாத்தப்படவுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் அனைத்தும் தத்தம் நாட்டு அரசாங்கத்திற்கும்இ ஐக்கிய நாடுகள் சபைக்கும் கையளிக்கப்படுவதுடன் அனைத்து நாட்டுத் தூதுவராலயங்களு…
-
- 0 replies
- 377 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரட்டை வேடமிடுவதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் சம்பந்தன் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் உரையாற்றும் போது சம்பந்தன், சுயாட்சி குறித்து பேசுவதாகவும், பின்னர் ஐக்கிய இலங்கைக்குள்ளான தீர்வுத் திட்டம் பற்றி பேசுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள கெஹலிய, காலையில் ஒரு கருத்தும் மாலையில் ஒரு கருத்தும் வெளியிடும் சம்பந்தனுக்கு பதிலளிக்க அரசாங்கம் தயாராக இல்லை என தெரிவித்துள்ளார். எவ்வாறான தீர்வுத் திட்ட யோசனை முன்வைக்கப்பட்டாலும் அது நாடாளுமன்றத்தெரிவுக்குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டியது அவசியமானது என …
-
- 6 replies
- 1k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இலலங்கை அரசாங்கம்இணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ஆயுத போராட்டங்களின் போது பொதுமக்களை பாதுகாத்தல் தொடர்பில்ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் பான் கீ மூன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் காத்திரமான பரிந்துரைகளைஅமுல்படுத்த வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆலோசனை வரவேற்கப்படவேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக…
-
- 0 replies
- 556 views
- 1 follower
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கை குழுவின் செயற்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று ஜெனிவாவுக்கான தூதுவர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். 19வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைத் தோற்கடிக்க இலங்கை 70 இற்கும் அதிகமான அமைச்சர்கள், அதிகாரிகள், இராஜதந்திரிகளை களமிறக்கியிருந்தது. ஆனாலும் அந்தத் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தை அடுத்து ஜெனிவாவுக்கான தூதுவர் பதவியில் இருந்த தமரா குணநாயகத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு இடமாற்றம் செய்தது. அதை ஏற்க மறுத்த அவர், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு எதிரான கருத்துக்களை வெளியி…
-
- 0 replies
- 607 views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அவர் தங்கியிருந்த ஆடம்பர விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தமது பாதுகாப்புப் பிரிவினரால் கையும் மெய்யுமாகப் பிடிபட்டனர் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சதிப்பின்போதே லலித் வீரதுங்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார். இச்சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு: ஜனாதிபதியின் லண்டன் பயணத்தின்போது பிரித்தானியப் பாதுகாப்புத்துறை அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பை வழங்கியிருந்தது. குண்டு துளைக்காத நவீன வாகனங்கள், கூடுதலான பாதுகாப்பு அதிகாரிகள் என்று அவருக்கு உயரிய பாதுகாப்பை…
-
- 0 replies
- 810 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினர் ஒருவர் களிமண் ஏற்றச்சென்ற போது பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இடம்பெற்றுள்ளது. ஜீவானந்தம் என்னும் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். தடுப்புமுகாமிலிருந்து அண்மையில் விடுதலையாகி வந்த இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மீளக்குடியேறிய இவர் வறுமை காரணமாக மணல் ஏற்றும் வேலைக்குச் சென்றுள்ளார். களி மண்படைக்குக் கீழாகச் சென்று மணல் அகழும் பொழுது மேல் களிமண்படை அவருக்கு மேலாக சரிந்து விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்தார். இவர் தமீழக் காவல்துறையில் பிரதேசப் பொறுப்பதிகாரியாக…
-
- 0 replies
- 694 views
-
-
பௌத்தர்கள் மற்றவர்களது உடைமைகளைப் பறிப்பவர்கள் அல்லர். மாறாகத் தங்களது உடைமைகளை மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்ளும் கொள்கை கொண்டவர்களாவர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை கண்டியில் வைத்துத் தெரிவித்தார். கண்டி அஸ்கிரிய மகாவிகாரை மற்றும் அஸ்கிரிய பீடம் என்பவற்றை ஆரம்பித்து 700 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கண்டி அஸ்கிரிய பீடத்தில் இடம் பெற்ற தேசிய வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது- பௌத்த மக்களது இரண்டு கண்கள் போல் அஸ்கிரிய பீடமும் மல்வத்தை பீடமும் அமைந்துள்ளன. இவை இரண்டும் முழு பௌத்த உலகுக்கு மட்டுமல்லாமல் ஏனைய சமுதாயங்களுக்கும் ஒற்றுமையின் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. அஸ்கிர…
-
- 5 replies
- 966 views
- 1 follower
-
-
சம்பிக்க ரணவக்க ஆவேசம்! அமெரிக்கா தனது ஆணவத்தை இலங்கை விவகாரங்களில் காட்ட முற்பட்டால் அதனை வேடிக்கை பார்க்கப்போவதில்லை - சம்பிக்க ரணவக்க ஆவேசம்! இந்தியாவின் முட்டாள் தனத்திற்கும் அமெரிக்காவின் ஆணவத்திற்கும் இலங்கை ஒரு போதும் அடிபணியாது. வட மாகாண சபை தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கட்டளையிட வேண்டியதில்லை என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேற்குலக நாடுகளில் புலிகள் சுதந்திரமாக செயற்படுகின்றனர். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் சென்ற போது அங்கு புலிகள் செயற்பட்ட விதமும் அதற்கு ஏற்றாற் போல் அந்த நாடுகளின் பாதுகாப்பு ஒழுங்குகளின் குறைகளும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயங்களாகும் என்றும…
-
- 2 replies
- 803 views
-
-
மறுபுறத்தில் சட்டத்திற்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை என்கிறார் சந்திர குமார்:- சட்டத்திற்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஈ.பி. டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்ற சட்ட நடைமுறைக்கெதிரான மணல் அகழ்வை தடுத்தல் தொடர்பான கலந்துரையாடலில் தலைமையுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் 'எமது பிரதேசத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கியமான தீர்மானங்களை எட்டவேண…
-
- 0 replies
- 716 views
-
-
யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன சிறுவர் சிறுமியர் பற்றிய தகவல்கள் அவர்களது பெற்றோருக்கு வழங்கப்பட வேண்டுமென ஜெர்மன் கோரிக்கை விடுத்துள்ளது. சிறுவர் போராளிகள் இணைத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் வழிகாட்டல்களை இலங்கை அரசாங்கம் பின்பற்றியுள்ளதாக வெளியான தகவல்கள் மகிழ்ச்சியளிப்பதாக ஜெர்மனிய தூதுவர் ஜென்ஸ் பொலட்னர் தெரிவித்துள்ளார். எனினும், யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன சிறுவர் சிறுமியர் பற்றிய தகவல்களை அவர்களது பெற்றோருக்கு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை இருப்பதாக ஜெர்மனிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 0 replies
- 436 views
-
-
பத்தரமுல்ல பகுதியில் காவற்துறையினருக்கும், கொள்ளையர்கள் குழு ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் கொள்ளையர் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் அரச வங்கி ஒன்றில் கொள்ளையிட வந்த குழு ஒன்றுக்கும் காவற்துறைக்கும் இடையிலேயே இன்று அதிகாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. சம்பத்தின் ஒருவர் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சம்பத்தில் கொல்லப்பட்டவர் இராணுவ துருப்பினர் ஒருவர் என தெரியவந்துள்ளது. அவர் சுண்டிக்குளம் இராணுவ முகாமில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது விடுமுறையில் இருப்பவர் எனவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன எமது செய்திப்பிரிவுக்கு தெரிவ…
-
- 0 replies
- 650 views
-