ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
அடிமைப்பட மறுத்து அகதியென்ற இழிச்சொல்லுடனும் மறுக்கப்பட்டஉரிமைக்காய் பயங்கரவாதி என்ற பழிச்சொல்லுடனும் இன்று உலகம் முழுதும் விடியலுக்காய் காத்திருக்கும் என் தமிழ் சொந்தங்களே!! உலகம் உருண்டை என்பதை ஊர் ஊராய் அலைந்து நிரூபித்துக்கொண்டிருப்பவர்கள் நாங்கள் "சொந்தமண்' 'வீடு' 'வாசல்' எல்லாம் அங்கே விருந்தாளிகள் ஆக்கிரமிப்புக்குள் அலறித்துடித்துக்கொண்டிருக்கின்றது.விடுதலை கேட்ட ஓரே காரணத்தால் விரட்டியடிக்கப்பட்டோம்.சுதந்திரம் கேட்டபோது சுட்டுத்தள்ளப்பட்டோம்.உரிமைகள் கேட்டபோது உருட்டுக்கட்டைகளால் தாக்கப்பட்டு இருட்டு அறைகளில் அடைக்கப்பட்டோம்.இலங்கைத்தீவினில் இனியும் வாழமுடியாது என அகதியாகி காற்றிலும் நீரிலும் உயிரைக்கூட பணயம் வைத்து பயணித்து இன்று அகதிகளாக வாழ்ந்துகொண்டிருந்தா…
-
- 0 replies
- 1.1k views
-
-
எவர் எதனை கூறினாலும் கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் தானே என அந்த மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளமை விசேட அம்சமாகும். எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்…
-
- 4 replies
- 1.2k views
-
-
தம்மை விடுதலை செய்யவேண்டும் அல்லது தம்மீதான குற்றத்தை தாக்கல் செய்து நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளை இன்று சந்தித்த சுமந்திரன் அவர்கள் அரசியல் கைதிகள் நடத்தும் உண்ணாவிரதத்தை கைவிடும் படியும் அரசாங்கம் உங்களது கொரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்து உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவரும் படி அரசியல் கைதிகளை கேட்டுக்கொண்டதையடுத்து தற்போது உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளதாக சிறீலங்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எந்தவிதமான உண்மையான குற்றச்சாட்டுக்களும் இன்றி பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் தமிழகம்,இந…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றத்தையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்வதற்கு, நான்கு நீதிமன்றங்கள் நியமிக்கப்படவள்ளதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார். கொழும்பில் பிரதான நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளதுடன், அனுராதபுரம் வவுனியா போன்ற மாவட்டங்களிலும் இந்த நீதிமன்றங்கள் நியமிக்கப்படவுள்ளதாக…
-
- 0 replies
- 513 views
-
-
சிறிலங்கா விவகாரத்தில் தலையிடத் தவறியுள்ளதாக ஐ.நா பாதுகாப்புச்சபை மீது அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது. இன்று காலை வெளியிடப்பட்டுள்ள 2012ம் ஆண்டுக்கான உலக மனிதஉரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிரியாவில் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் விடயத்திலும் பாதுகாப்புச்சபை செயலற்ற நிலையில் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைத்துலக அமைதிக்காக ஐ.நா பாதுகாப்புச் சபை உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா பாதுகாப்பு சபையில் உள்ள சில நாடுகள் சிரியா, சிறிலங்கா போன்றவற்றை பாதுகாப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புசபையின் அறிக்கையில் கு…
-
- 1 reply
- 608 views
-
-
நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்த 2011ம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று வெளியிடவுள்ளது. இந்த அறிக்கையில் சிறிலங்கா குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ் செயற்படும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான செயலகம், ஆண்டுதோறும் நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெளியிடப்படும் அறிக்கைகளில், சிறிலங்கா குறித்து காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், 2011ம் ஆண்டுக்கான மனிதஉரிமைகள் அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனும…
-
- 0 replies
- 745 views
-
-
2002ல் பிரபாகரன் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுடன், அவரது ஆயுதப் போராட்டம் முடிவடைந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு அவர் செய்தது எல்லாம், அவரால் கட்டியெழுப்பப்பட்ட இயக்கத்தை அவரது காலத்திலேயே அழிப்பதற்கான ஏற்பாடுகள்தான் 'புதினப்பலகை'க்காக - யதீந்திரா. மே-18 என்பது தமிழ் அரசியல் சூழலில் புதியதொரு அத்தியாயத்தின் குறியீடாகும். ஏவ்வாறு செப்டம்பர்-11 என்பது உலக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறதோ அவ்வாறே மே-18என்பது தமிழர் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கின்றது. எனவே இந்த பின்புலத்தில் மே-18என்பது வெறுமனே ஒரு நினைவு நாளல்ல, அது ஒரு வராலாற்றுப் படிப்பினைக்கான அரசியல் சான்றாகும். மே-18ம் நாளுக்கும் செப்டம்பர்-11ம் நாளுக்…
-
- 6 replies
- 828 views
-
-
இந்த நாட்டில் மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கருணாவும் கேபியும் புணர்வாழ்வுக்கு உட்படுத்தபடவேண்டியவர்கள். அவர்களை தமிழ் மக்கள் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் தேர்தல்மூலம் ஜனநாயகம் பேச வேண்டும். வடக்கு கிழக்கு பிரதேசத்தை 1985க்கு கொண்டு போக வேண்டும் என்றால் சில நிலகண்ணிவெடியும் 02 குண்டும் கொழும்பில் வெடித்தால் நாடு மீண்டும் 1985 க்கு போய்விடும் இதற்கு 15 ஆயிரம் புலிகள் தேவை இல்லை ஒரு சில பையன்களால் இதை இலங்கையில் செய்ய முடியும். காணொளியை பார்க்க... http://youtu.be/Qpy40mDCgl4 http://akkinikkunchu...-news&Itemid=18
-
- 3 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் அடங்கிய குழுவில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரும் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இக் குழுவினர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனைச் சந்திக்க வொசிங்டன் சென்றிருந்தனர். எனினும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுடனான சந்திப்புக்கு அவர் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. கடந்தவாரம் அமெரிக்கா சென்றிருந்த சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவில், அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா,அன் நாட்டு ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் சேனுகா செனிவிரத்ன, ஜி.எல்.பீரிசின்…
-
- 1 reply
- 924 views
-
-
பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மூடிசூடி அறுபதாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்த, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் வெறுப்படைந்து போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு வரும் யூன் 4ம் நாள் மகிந்த ராஜபக்ச லண்டன் செல்லவுள்ளார். இதுபற்றிய தகவல்கள் வெளியானதும், அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் ராஜபக்சவுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர். அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததைக் கண்டித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கண்டனக் கடிதங்கள் பல அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஒக்ஸ்போட் யூனியனில் உர…
-
- 15 replies
- 1.8k views
-
-
யாழ் மாவட்ட இராணுவத்தளபதி ஹத்துருசிங்கவுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சிலர் இன்று பேச்சு வார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர். யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் தலையிலான நிர்வாகத்தினர் மத்தியிலேயே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் தர்சானந்த் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்ழகக அனைத்துப்பீட மாணவர்கள் காலவரையாற்ற வகுப்புப் புறக்கணிப்பை நடத்திவருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாணவர்தரப்பு முன் வைத்து குறித்த போராட்டம் நடைபெறுகிறது. யாழ் நகரில் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மகிந்த ஹத்துருசிங்கவுடன் நடந்த இந்த சந்திப்பில் யாழ் பல்க…
-
- 0 replies
- 914 views
-
-
இங்கிலாந்து மகாராணியார் எலிசபெத்தின் விருந்தினராக பிரித்தானியாவுக்கு வருகை தரவுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, பிரான்ஸ் தமிழர்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிரான பிரான்ஸ் தமிழர்களின் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்தவரும், தற்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் பிரதிநிதியாகவும் உள்ள மகிந்த சிவசுப்பிரமணியம் இந்த அழைப்பினை விடுத்துள்ளார். பிரான்ஸ் தமிழ் இளையோர்களின் ஒருங்கிணைப்பில், மகிந்த ராஜபக்சவின் பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, பிரான்சில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்பாக, எதிர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மகிந்தன் சி…
-
- 0 replies
- 808 views
-
-
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி அமெரிக்காவின் BOSTON பகுதியில் உள்ள அமைப்பு சர்வதேச மன்னிப்புசபை (Amnesty International) பிரதிநிதிகள் ஒன்றுகூடியுள்ளனர். சுட்டிவிளக்கொன்றினை ஏற்றி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் சாவடைந்தவர்களை நினைவேந்தி கொண்டனர். ஐ.நாவே சிறிலங்காவின் போர் குற்றங்களை விசாரணைசெய் - அமெரிக்க அதிபரே சிறிலங்காவில் நீதியை நிலைநாட்டு சிறிலங்கா ஒரு சிவப்பு தேசம் போன்ற வாசங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் கவனீயிர்ப்பு ஒன்றுகூடலாகவும் இது அமைந்திருந்தது. இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணை அமைச்சர் சுபா சுந்திரலிங்கம் கலந்து கொண்டு Amnesty International அமைப்பினரின் தோழமைக் கரங்களை இறுகப்பற்றி இந்நிகழ்வில் பங்கெடுத்துக் …
-
- 3 replies
- 924 views
-
-
மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள அருட் தந்தை வில்லியம் ஓல்டின் உருவச் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது என புளியந்தீவு மெதடிஸ்த்த திருச்சபையின் முகாமை குரு அருட் தந்தை எஸ்.எஸ்.டெரன்ஸ் தெரிவித்தார். குறித்த கை மற்றும் கையிலிருந்த விளக்கு ஆகியன இன்று புதன்கிழமை (23.5.2012)சேதப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். தகவல் ஒன்றையடுத்து குறித்த சிலை நிறுவப்பட்டுள்ள இடத்திற்கு சென்று பார்த்த போது மேற்படி உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டேன் என அவர் தெரிவித்தார். இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளேன் என அருட் தந்தை எஸ்.எஸ்.டெரன்ஸ் தெரிவித்தார். 1816ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்த ஐரோப்பிய நாட…
-
- 1 reply
- 961 views
-
-
பிரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவதுவருட நிறைவு விழாவே களங்கம் சூழப்போகிறது. அந்த விழாவுக்கு சிங்களதேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்தராஜபக்ச வருவதை அனுமதிக்கவேண்டாம். லட்சக்கணக்கான தமிழ்மக்களை கொன்று குவித்து தமிழர்பிரதேசங்களில் இன்றும் ராணுவ ஆட்சியை நடாத்திவரும் மகிந்தராஜபக்ச இந்த விழாவில் கலந்து கொள்வது உலக மானுட பண்புகளுக்கும் மனித உரிமைகளுக்கும் பெருத்த அவமானம் ஆகும். அத்துடன் பாரம்பரியம் மிக்க பிரித்தானியமுடியாட்சிக்கும் இது மிகப்பெரும் களங்கத்தையும் வரலாற்று அவமானத்தையும் தந்துவிடும். மனிதஉரிமைகளையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்து அதன்மீது ஏறிநின்று கொடும் ஆட்சி புரியும் மகிந்தராஜபக்சவை பிரித்தானியாவ…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா நிபந்தனைகளுடனேயே விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார். விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி சரத் பொன்சேக்காவிற்கு 07 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தலில் போட்டியிட முடியாததால் அவருக்கு வாக்களிக்கும் உரிமையும் கிடையாது. அத்துடன், பொன்சேக்கா சிறைவாசம் இருக்க வேண்டிய காலத்திற்கு மாத்திரமே அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவர் சிறைத் தண்டனையை அனுபவிக்கும் நபராகவே கருதப்படுவார் எனத் தெரிவித்த சட்டமா அதிபர், இராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் சரத் பொன்சேக்காவிற்கெதிராக வழக்கொன்று நிலுவையிலுள்ளது எனத் …
-
- 2 replies
- 727 views
-
-
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதைக் கூறியிருந்தாலும், தாம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று நண்பகல் வொசிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்டிடம், ஹிலாரி கிளின்ரன் – ஜி.எல்.பிரிஸ் சந்திப்பின் இறுதியான விபரங்கள் உள்ளதா என்று கேள்வி எழுப்பட்டது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வூட்ரோ வில்சன் நிலையத்தில் உரையாற்றியபோது அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா நிராகரிப்பதாகக் கூறியதை செய்தியாளர்கள் அவரிடம் சு…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக கொழும்பு நகரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ' நன்றி மறந்த பாம்பு விடுதலை! மக்களே கவனமாக இருங்கள்' என சிங்களத்தில் எழுப்பட்ட சுவரொட்டிகள் கொழும்பு நகரில் ஒட்டப்பட்டுள்ளன. எனினும் இந்த சுவரொட்டி யாரால் ஒட்டப்பட்டது என்ற தகவல் அதில் காணப்படவில்லை. http://www.globaltam...IN/article.aspx
-
- 5 replies
- 2.4k views
-
-
முல்லைத்தீவு வெட்டுவாகல் பகுதியில் தமிழ்மக்களின் எதிர்ப்பினையும் மீறி சிறிலங்கா படையினர் பாரிய புத்தர் விகாரை ஒன்றினை அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்கால் போரின் போது அங்கிருந்த வெளியேற்றப்பட்ட அப் பகுதி மக்கள் இன்னமும் மீள்குடியேற்றம்செய்யப்டாமல் உள்ள இந் நிலையில் சிறிலங்கா படையினர் இவ்வாறான ஒரு செயற்பாட்டினை முன்னெடுத்துவருகின்றது. வெட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு திடலில் இந்த புத்தர் விகாரை அமைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாக்கால் முல்லைத்தீவு வீதி மக்களின் பாவனைக்கா திறந்துவிட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அங்கு நிலைகொண்டுள்ள சிறீலங்காப்படையினர் இவ்வாறான பௌத்த வளிபாட்டு தலங்களை கட்டி தமது மதத்தினை பரப்பும் செயற்பாடுகளில் மும்முரமாக…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
சிறீலங்கா சோசலிச குடியரசின் அரசியல் யாப்பு ஏற்று அங்கீகரிக்கப்பட்ட 40வது ஆண்டு இன்று அனுஸ்டிக்கப்படுகின்றன நிலையில் யாழ். வல்வெட்டித்துறையில் இளைஞர் குழுவொன்று சிறீலங்கா சனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பினை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர் என வல்வெட்டித்துறையில் இருந்து செய்தியாளர் தெரிவிக்கின்றார். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளின் சிதை அமைந்துள்ள வல்வெட்டித்துறை ஊரி இந்து மயானத்திலேயே இந்த அரசியல் யாப்பின் பிரதிகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன. இன்று மதியம் குறித்த இடத்திற்கு வாகனமொன்றில் வந்திறங்கிய இளைஞர் குழுவொன்றே குறித்த அரசியல் யாப்பின் பிரதிகளைத் தீயிட்டுக் கொழுத்திவிட்டு அரசுக்கு எதிரான கோசங்களையும் எழுப்பியவ…
-
- 0 replies
- 653 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக, தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வரும், சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும், தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகளும், ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, இன்று (22.5.2012) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு, தாயகத்தில் சந்தித்தனர். யுத்த காலத்தில் ஏற்பட்ட ஈழத்தமிழர் படுகொலை குறித்தும், கடந்த மூன்று ஆண்டுகளாக, அங்கு ஏற்பட்டு உள்ள சூழ்நிலை, சிங்களர் குடியேற்றம், ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பு அற்ற அபாயம், சர்வதேச சமுதாயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமைகள் குறித்தும், மிக விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன என அதிர்வு இணையம் அறிகிறது. �தாய்த்தமிழகம்தான் ஈழத்தமிழர்களைப் பாதுகாத்துத் துன்பத்தில் இ…
-
- 0 replies
- 850 views
-
-
இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி இயங்கும் சரணடைந்த காணாமல் போன உறவினர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயத்தில் சிறீலங்கா அரசு தனது பொறுப்புக்கூறும் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேற்படி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 16.05.2009 இல் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் 18.05.2009 இல் முல்லைத்தீவு இராணுவத்தினரிடம் கிறிஸ்தவ பாதிரியார் பிரான்சிஸ் ஜோசப் தலைமையில் எங்கள் முன்னிலையில் பல நூற்றுக்கணக்கான போராளிகளுடன் சரணடைந்து இன்றுவரை எங்கு உள்ளார்கள் என்ற விபரம் இலங்கை அரசினால் …
-
- 0 replies
- 418 views
-
-
சிறைச்சாலைகளில் காலவரையறையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை வவுனியாவில் நடத்தவிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்படன் இணைந்து செயற்பாடும் ஐந்து கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புளொட், ரெலோ ஆகியன இதில் பங்குகொள்ளும் என வவுனியாவிலுள்ள தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைவிட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி என்பனவும் இந்தப் போராட்டத்தில் பங்…
-
- 1 reply
- 437 views
-
-
சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் தமிழின அழிப்பை நடத்தியவரில் ஒருவருமான சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டமை மகிழ்ச்சியான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுதலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி என்று குறிப்பிட்ட சம்பந்தன் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் அரசியல் காரணங்களுக்காக சோடிக்கப்பட கதைகள் என்றும் கூறினார். சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்டபோது சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார். அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்பட்டு இராணுவ நீதிமன்றில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தண்டன…
-
- 1 reply
- 812 views
-
-
எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு நாமே பல்வேறு செய்திகளையும் முரண்பட்ட தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிலை எமக்குப் பாதகமாகவே அமையும். உலகத்தின் கவனம் இன்று எமது மக்கள் மீது திரும்பியிருக்கும் நிலையில் எமக்கான தீர்வாக நாமனைவரும் ஒரேவிடயத்தை அனைத்துலகச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும். இதுவே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும் என தமிழர் இனவழிப்பு நினைவுநாளை முன்னி்ட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: அன்ப…
-
- 0 replies
- 1k views
-