Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொதுமக்களின் பணத்தை வீண்விரையம் செய்து நடத்தப்படும் ”தேசத்திற்கு மகுடம்” கண்காட்சியின் திரைமறைவில் அரசாங்கம் புதையல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சி நடத்தப்பட்ட ஒயாகடுவ பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பை தற்போது விசேட அதிரடிப்படையினர் தற்போது ஆக்கிரமத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலப் பரப்பில் அதிரடிப்படையினர் புதையல் தோண்டி வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சி நடத்தப்பட்ட நிலப்பரப்பில், விவசாயிகளுக்கு நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு களஞ்சியசாலையொன்றை அமைப்பதாகக் கூறி பாதுகாப்புத் தரப்பினர் தகரங்களைப் பயன்படுத்தி ஸ்தலமொன்று நிர்மாணித்தனர். இதனை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவே திறந்துவைத்திருந…

  2. டென்மார்க் திசைகள் இளையோர் அமைப்பினரால் பேஸ்புக் ஊடாக, டென்மார்க் வாழ் அனைத்து மக்களுக்கும், எமது தாயக தேசத்தில் என்ன நடந்தது, என்பதனைத் தெரியப்படுத்தும் நோக்கத்துடன், 'இலங்கைத் தீவில் நடாத்தப்படும் தமிழர் மீதான இனப்படுகொலையை நாம் கண்டிக்கின்றோம்' என்னும் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழர் வரலாற்றில், நினைத்தாலே நெஞ்சம் கதறியழும் கொடூரமான நாள் மே 18. பல்லாயிரக் கணக்கான நம் உறவுகளை 'முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில்' நாம் இழந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில 2009ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களிலும், சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல கொடூரமான குற்றங்களில் சிலவற்றையே சுட்டிக் காட்டி இக் கவனயீர்ப்புப் போராட்…

  3. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் யாழ்.மேதின விழாவில் சிறிலங்கா தேசிய கொடியை தூக்கி பிடித்த விடயம் இன்று கொழும்பில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பெரும் பூகம்பமாக வெடித்தது. சம்பந்தன் அதற்கு சொன்ன அதிர்ச்சி தரும் தகவல்களும், மாவை சேனாதிராசா, சிறிதரன், அரியநேந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் காரசாரமான விவாதங்களும் இன்னும் சில மணிநேரங்களில் தினக்கதிரில் விரிவாக வெளிவர உள்ளது. எதிர்பாருங்கள்…….. http://www.thinakkathir.com/?p=36138

  4. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்போம் இம்மாதம் 18ஆம் திகதியுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், அத்தினத்தன்று மறைந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு வவுனியா நகரின் பல்வேறு இடங்களிலும் தமிஈழ விடுதலைப் புலிகள் இயக்கதினால் உரிமைகோரப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்போம்’ தலைப்பிடப்பட்டுள்ள மேற்படி சுவரொட்டிகளில், ’18.05.2012 அன்று அனைத்து தமிழீழ மக்களும் உணர்வுபூர்வமாக பொது இடங்கள், கோயில்கள், வீடுகள் போன்றவற்றில் எங்கள் உறவுகளுக்காகவும் மாவீரர்களுக்காகவும் அஞ்சலி செலுத்துவோம்’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், ‘எம் தலைவர் சாகவில்லை. நாங்கள் மீண்டும் பொங்கி எழுவோம். புலிகளின் த…

  5. ஐ.நா.வின் தீர்மானத்தையும் தமிழ் கூட்டமைப்பின் ஜனநாயக ரீதியிலான கோரிக்கைகளையும் அரசாங்கம் ஏற்க மறுத்தால் எமது மக்களை அணிதிரட்டி சாத்வீக போராட்டத்தை ஆரம்பிக்கும் கட்டம் உருவாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று சபையில் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்றையதினம் புதன்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்.. 30 வருட ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியுள்ள நிலையிலும் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். ஐ.நா.பையின் அறிக்கையின் பிரகாரம் இன்னும் 6000 பேரே மீள்குடியேற்றப்பட விருப்பதாகக…

  6. ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்தும் இரகசியத்துடன் ஜீ.எல் உலக வலம் - சஜித் ஆரூடம் ஜெனீவா பிரேரணையில் இலங்கை தோல்வியடைந்தமைக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தற்போது ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தமரா குணநாயகம் கியூபாவுக்கு தூதுவராக மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்ய வேண்டியது அதுவல்ல எனவும் தோல்விக்கான பொறுப்பை வெளிவிவகார அமைச்சு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். …

  7. தேசிய சேமிப்பு வங்கி ‘த பினான்ஸ்’ நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்ததை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புவிக்க ஜனாதிபதிக்கு நெருக்கமான சில தனியார் ஊடகங்கள் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய இந்த அரசியல் சூழ்ச்சி மேற்கொள்ள்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை தன்பிடியில் வைத்திருப்பதற்காகவே இந்த சூழ்ச்சித் திட்டத்தை மகிந்த ராஜபக்‌ஷ தீட்டியுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதம நீதியரசர் ஜனாதிபதியின் கைபொம்மையாகவே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தார். எனினும், நாட்டில் நீதித்துறை மீது மக்கள் நாளுக்கு நாள் நம்பிக…

    • 0 replies
    • 866 views
  8. 'இலங்கையின் கொலைக் களம்' எனும் ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்தமைக்காக செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இரு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. 'ஓர் உலக ஊடக விருது' விழாவில் (ஒன் வேர்ல்ட் மீடியா அவார்ட்) ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் சிறந்த ஆவணப்படம் ஆகிய விருதுகள் செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு அலுவலகம் வலியுறுத்தக் காரணமாக இருந்ததை கருத்திற்கொண்டே இவ்விரு விருதுகளும் செனல் 4ற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆவணப்படத்தை தொகுத்து வழங்கிய ஜோன் ஸ்னோ, 'தான் இதுவரையில் வெளிக்கொணர்ந்த செய்திக…

  9. நோர்வே தொழிற்கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான மையம், நோர்வே தமிழ் கற்கை மையம் ஆகிய அமைப்புக்களின் கூட்டிணைந்த ஏற்பாட்டில், 'இலங்கைத் தீவின் போருக்குப் பின்னரான சமகால நிலைமைகள்' பற்றிய கருத்தரங்கு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இம்மாதம் மாதம் 15ம் நாள் செவ்வாய்க்கிழமை [15.05.2012] நடைபெறுகிறது. பிற்பகல் 6 மணி முதல் 8 மணி வரை, நோர்வே நாடாளுமன்ற கேட்போர்கூடத்தில் [inngang Prinsens gt. v/ Halvorsens konditori] நடைபெறவுள்ள இக்கருத்தரங்கிற்கு தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உதவி சபாநாயகருமான Marit Nybakk தலைமை தாங்கி கருத்துரையும் வழங்கவுள்ளார். மேலும் இக் கருத்தரங்கில் நோர்வேயின் முன்னாள் அனைத்துலக அபிவிருத்தித்துறை அமைச்சரும், இலங்கைக்கான சமாதானத் தூதுவ…

  10. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்திப்பதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஒரு திட்டத்துடன் முன்வரவேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார். வொசிங்டனில் நேற்று நடத்திய நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கேள்வி - சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அடுத்தவாரம் இங்கு வரப்போகிறார். அவரது நிகழ்ச்சி நிரல் என்னவாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? எப்போது அவர்... நுலன்ட் - அவரது நிகழ்ச்சிநிரல் என்னவாக இருக்கப் போகிறது? அவரது நிகழ்ச்சி நிரல் என்னவென்று உங்களுக்கு அனுப்புகிறேன். கேள்வி - இல்லை. இராஜாங்கச்செயலரின் நிகழ்ச்சி நிரல…

  11. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக கடமையாற்றிய தமரா குணநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள கியூபாவுக்கான தூதுவர் பதவியை அவர் மறுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெனிசூலாவில் கூடிய விரைவில் திறக்கப்படவுள்ள இலங்கைத் தூதுவலாயத்தின் தூதுவராக தன்னை நியமிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்னமும் கருத்திற்கொள்ளப்படவில்லை http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/40750-2012-05-10-04-48-35.html

  12. யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் உடனடியாக செயற்படும் வண்ணம் தடலாடியாக இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட பக்ஸ் மூலம் அவரிற்கு தகவல் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே அவரது இடத்திற்கு தற்போதைய மட்டக்களப்பு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த இடமாற்றம் பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்ததாக கூறும் யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் அதனை தாம் எதிர்பார்த்திருந்ததேயென மேலும் தெரிவித்தார். யாழ்,குடாநாட்டிற்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகளை சந்திப்பது தொடர்பாக கடந்த சில தினங்…

    • 2 replies
    • 1.5k views
  13. கடந்த வருடம் வட மாகாணத்தில் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களில் யாழ்.மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக வட மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. இதேவேளை, வவுனியா மாவட்டம் முதல் நிலை வகிக்கின்றது என இந்தப் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மாவட்டத்தில் மொத்தம் 201 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதுடன், யாழ் மாவட்டத்தில் சிறுவர்கள் மீதான 66 பாலியல் துஷ்பிரயோகங்கள், 12 உடலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், 01 மனரீதியான துஷ்பிரயோகங்கள், 05 தற்கொலை முயற்சிகள், 01 தற்கொலை சம்பவம், 16 உதாசீனம், 25 சட்டத்துடன் முரண்பட்ட சம்பவங்கள், 13 தனித்துவிடப்பட்ட சம்பவங்கள், 01 சிறுவர் விற்பனை, 02 கடத்தல், 14 இளவயதுத் த…

  14. வடமராட்சியின் பொலிகண்டிப் பாலாவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளி ஒருவர் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். 38 வயதுடைய சிவலிங்கம் சுகந்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால மூத்த பெண்போராளியாக இருந்த இவர் 1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான இவர் இடுப்பின் கீழ் செயலிழந்த நிலையில் காணப்பட்டார். எனினும் 2009 ஆம் ஆண்டுவரை விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட இவர் மே 17ன் பின் படையினரால் கைது செய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் பொலிகண்டி பாலாவிப் பகுதியில் உள…

    • 49 replies
    • 5.1k views
  15. இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசு மேற்கொண்டது இனப்படுகொலையே எனும் குரல்கள் வலுத்துவரும் நிலையில், வன்னிப் போர்களத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 1 46 679 தமிழர்கள் நிலை என்பது பற்றி விளக்குமாறு, சிறிலங்கா மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது.2008ம் ஆண்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட சனத்தொகை புள்ளி விபரத்துக்கும், 2009ம் ஆண்டு வன்னிப் போரில் இருந்து வெளியேறியவர்களின் மக்கள் தொகை தொடர்பில், சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்துக்கும் இடையில் காணப்பட்ட இடைவெளி வித்தியாசத்தினை அடிப்படையாக வைத்து, 1 46 679 தமிழர்களின் நிலை என்ன என, மன்னார் மாவாட்ட வணக்கத்துக்குரிய இராஜப்பு …

  16. வடபகுதியில் 12,000 சிறார்கள் தமது பெற்றோர்களை இழந்துள்ளதாக வடமாகாண சபை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை சிறுவர் துஸ்பிரயோகத்தில் வவுனியா மாவட்டம் முதலிடத்தினையும் யாழ்ப்பாணம் இரண்டாம் இடத்தினையும் கொண்டிருக்கின்றது. வவுனியா மாவட்டத்தில் மொத்தம் 201 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதுடன், யாழ் மாவட்டத்தில் சிறுவர்கள் மீதான 66 பாலியல் துஷ்பிரயோகங்கள், 12 உடலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், 01 மனரீதியான துஷ்பிரயோகங்கள், 05 தற்கொலை முயற்சிகள், 01 தற்கொலை சம்பவம், 16 உதாசீனம், 25 சட்டத்துடன் முரண்பட்ட சம்பவங்கள், 13 தனித்துவிடப்பட்ட சம்பவங்கள், 01 சிறுவர் விற்பனை, 02 கடத்தல், 14 இளவயதுத் திருமணம் உட்பட 155 வன்முறைச் சம்பவங்கள் கடந்த வருடத்தில் நடைபெற்றுள்ள…

  17. இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் குறித்து ஆராய்ந்து முக்கியமானதொரு தீர்மானத்தை எடுக்கும் நோக்கில் வட்டமேசை மாநாடொன்றை இன்று புதுடில்லியில் அவசரமாக கூட்டுகின்றது இலங்கை வந்து சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு.ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வுகள் அணுகு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்கும் முனைப்பில் நடைபெறும் இந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் பங்குபற்றும் எனத் தெரியவருகின்றது. கொழும்பு வந்து சென்ற குழுவில் இடம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இலங்கை விஜயத்தில் அங்கம் வகிக்காத இதரக்கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களும் இந்த முக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு தமதுக்கருத்துக்களை முன்வை…

  18. இலங்கையில் சிவாலயங்கள் இடிக்கப்பட்டதைக் கண்டித்து வருகிற மே 18-ல் சென்னையில் உள்ள இலங்கை இணைத்தூதரகம் முன்பு சிவனடியார்கள் பங்கேற்கும் போராட்டம் நடைபெறவுள்ளது என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மசூதி இடித்ததற்கு குரல் கொடுத்த கட்சிகள் இது குறித்து எந்த கட்சிகளும் குரல் கொடுக்கவில்லை. எனவே சென்னை இலங்கை இணைத்தூதரகம் முன்பு வருகிற மே 18-ம் தேதி சிவனடியார்கள் பங்கேற்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர். http://www.seithy.co...&language=tamil

  19. தேச விடுதலைப் போரில் சாவுக்கு நாள் குறித்து வீரகாவியமாகும் உயிராயுதங்களான கரும்புலிகளின் சீருடைகளை உணவகங்களின் மேசைவிரிப்புக்களாகப் பயன்படுத்தி அவர்களின் ஈகங்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் சந்திப் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் உணவகம் ஒன்றில் உணவருந்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற மேசைகளுக்கு கரும்புலிகளின் சீருடைத் துணிகளை விரிப்புக்களாகப் பயன்படுத்துகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. போர் நிறைவு பெற்றதும் மாவீர்கள் நினைவிடங்கள், துயிலும் இல்லங்கள், நினைவுத்தூபிகள் உட்பட்ட அனைத்து நினைவு எச்சங்களையும் அழித்து வருகின்ற இராணுவம் தற்போது கரும்புலிகளின் சீருடைகளைப் பயன்ப…

    • 10 replies
    • 3.2k views
  20. ஐரோப்பாவில் பணியாற்றும் சிறிலங்காவின் துறைசார் இராஜதந்திரிகளுக்கும், அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற இராஜதந்திரிகளுக்கும் இடையில் நிலவும் போரை, தாமரா குணநாயகத்தின் கடிதம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தான் ஜெனிவாவில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவதை நிராகரிப்பதற்கான காரணங்களை விபரித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவர் தாமரா குணநாயகம் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியானது. இது வெளியே கசிந்ததானது ஐரோப்பாவில் பணியாற்றும், சிறிலங்காவின் துறைசார் இராஜதந்திரிகளுக்கும் அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற இராஜதந்திரிகளுக்கும் இடையிலான போரை வெளிச்சத்துக்குக் கொண்ட…

  21. இந்திய மாநில முதல்வர்களுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கடிதம் எழுதவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறிலங்கா அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விபரித்து, இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடிதம் எழுதியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ‘தி ஐலன்ட் நாளிதழ்‘ நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை மேற்கோள்காட்டியே இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இதனை நிராகரித்துள்ளது. எனினும், ‘தி ஐலன்ட்‘ நாளிதழின் செய்தி ஆசிரியரான சாமிந்ர பெர்னான்டோ, “இந்திய மாநில முதல்வர்கள…

  22. ரங்கிரி தம்புள்ள விகாரை பிரதம மதகுருவின் ஆணவமும் அட்டகாசமும்:- ரங்கிரி தம்புள்ள விகாரையின் பிரதம மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரோ அண்மையில் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற பள்ளிவாயல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் நின்று செயற்பட்டவர். குறித்த பள்ளிவாயல் விகாரையின் புனித பிரதேசத்தில் உள்ளடங்குவதாக கூறி அதை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்படும் கருத்தை முஸ்லிம்கள் நிராகரித்துள்ளனர். பற்றியெரியும் இந்த பிரச்சினை இன்னும் அரசினால் தீர்க்கப்படவில்லை. குறித்த தேரர் இவ்வாறான சர்ச்சைக்கு ஒன்றும் புதியவரல்ல, இதற்கு முன்னரும் நிர்வாக மற்றும் அரசியல் கட்டமைப்புகளுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார். பேட்டியின் முடிவின்போது நிருபர்…

    • 1 reply
    • 1.8k views
  23. மஹிந்த ராஜபக்ச ஒரு போதும் தீர்வுத்திட்ட ஒப்பந்தங்களில் தமிழ் கூட்டமைப்புடன் கைச்சாத்திடமாட்டார். ஏனென்றால், பெரும்பான்மை இன மக்களின் ஆதரவுகளை இழக்க நேரிடும் என்ற அச்சமே பிரதான காரணமாகும்.என்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் கூறுகையில், இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் என்பது முக்கியமானதொரு விடயமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நற்செய்தி யொன்றை நாட்டிற்கும் உலகிற்கும் வழங்கியுள்ளார். எனவே, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நிபந்தனையற்ற பேச்சுக்களை அரசாங்கம் கூட்டமைப்புடன் முன்னெடுப்பதே சிறந்தது என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி மஹ…

  24. கே. சஞ்சயன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும், அதனை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் வெளியாரின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்றும் அரசாங்கம் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. ஆனால் சர்வதேச அரசியல் சூழமைவுகள், அரசாங்கத்தின் இந்த இறுக்கமான போக்கிற்கு நெகிழ்ந்து கொடுக்கும் போலத் தெரியவில்லை. கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அரசாங்கத்துக்கு சாதகமானவையாகத் அமையவில்லை. குறிப்பாக இந்தமாதம் அரசுக்கு மற்றொரு நெருக்கடிமிக்க மாதமாகவே அமையப் போகிறது. முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து இந்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையப் போ…

  25. சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்களெனவும், திருகோணமலை பொது வைத்தியசாலை வளவிலுள்ள பிள்ளையார் கோவில் உடைப்பு விடயத்தில் நீதியான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று பாதுகாப்புச் செயலாளரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். திருகோணமலையில் கடந்தவாரம் திடீரென தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டமை மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது என இங்கு குறிப்பிட்டிருக்கும் சம்பந்தன், …

    • 6 replies
    • 960 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.