ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
ஐநா மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கெதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட் தீர்மானத்தை ஆதரிக்கக்கோரி அவுஸ்திரேலியா நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட மனு கடந்த 21ந்திகதி அவுஸ்திரேலியாப் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. 2550 பொது மக்களின் கையொப்பங்களுடன் அனுப்பப்பட்ட மனு அவுஸ்திரேலியாப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்பியால் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் (12நாட்களில்) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முழுமுயற்சியில் ஏனைய தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் 2550 பொது மக்களின் கையொப்பங்களைப் பெற்று கடந்த 15ந்திகதி கன்பராவில் உள்ள அவுஸ்திரேலியப் பாராளுமன்ற குழுவிடம் நியுசவுத்வேல்ஸ் மாநில நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளான …
-
- 9 replies
- 974 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012, 10:48 GMT ] [ நித்தியபாரதி ] முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. [சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கு…
-
- 1 reply
- 872 views
-
-
ஜெனீவா சோதனை இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அத்தீர்மானத்துக்கு எதிராக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று இன்று திங்கட்கிழமை முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜெனீவா சென்ற இலங்கை தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன், அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டோர் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். http://www.tamilmirr...6-10-41-04.html மேற்கு நாடுகளிலுள்ள தூதரங்களை மூ…
-
- 3 replies
- 911 views
-
-
இலங்கை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பில் இதுவரை காலமும் பின் பற்றிவந்த கொள்கையில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களைச் செய்வதற்கு இந்திய மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன. காங்கிரஸின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் இலங்கை அரசின் உயர் மட்டத்திற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்த பின்னர் இலங்கை அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரைச் சந்தித்து மிக நீண்டநேரம் பேச்சு நடத்தி இலங்கையின் கவலையை வெளியிட்டிருந்தார். அதேசமயம், தற்போதைய நிலைமைகள் குறித்து இந்திய மத்திய அரசின…
-
- 15 replies
- 1.8k views
-
-
பெருமளவிலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர்- நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்! Published on March 25, 2012-9:07 am · யுத்தத்தின் போது பெரும்பாலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். புலிகளை நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதி யுத்தத்தின் போது புலிகளும், இராணுவமும் பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டால் விடுதலைப்புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இரு தரப்பும் போர்க்குற்றங்களை புர…
-
- 13 replies
- 1.8k views
-
-
புலித்தேவனின் சகோதரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் யாழ்.மேல்நீதிமன்றத்தால் நிராகரிப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, சீவரெத்தினம் பாலதயாகரன் (புலிமாறன்) பயங்கரவாத தடுப்பு பிரிவு பெற்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் இன்று திங்கட்கிழமை நிராகரித்தார். புலிகளின் சமாதன செயலகப் பணிப்பாளர் புலித்தேவனின் சகோரதரரான பாலதயாகரன், கடந்த 2009 மே 17ஆம் திகதி முள்ளிவாக்காலில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் யாழ்.மேல் நீதிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவருக்கு எதிரானசான்றென பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு அளித்த குற்ற ஒப்புதல் வாக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
போர்க்குற்றங்கள் குறித்து அமெ.செனட்டில் அறிக்கை;ஸ் ரீபன் ராப் அடுத்த வாரம் சமர்ப்பிப்பார் இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற தாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய விரிவான அறிக்கை ஒன்று அடுத்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்படவுள்ளது. இலங்கை மீதான தனது பிடியை இறுக்கும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நட வடிக்கையாக இந்த அறிக்கை நாடாளுமன்றத்துக்கு வருகிறது. ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட அமெரிக்கா வின் தீர்மானம் நிறை வேற்றப்பட்டமையால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு அடங்குவற்கு முன் இந்த அறிக்கை வெளிவரவுள்ளது. இந்த விசாரணை அ…
-
- 1 reply
- 642 views
-
-
தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி"கள்! சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு. தமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக அரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. இப்படி உணர்வுப்…
-
- 0 replies
- 1k views
-
-
சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட காரணமாக ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகள், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுடனான சிறீலங்காவின் உறவுகளில் பாதிப்பு ஏற்படமாட்டாது' என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றன்கின் கூறினார். சிறீலங்காவுக்கு இந்த தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, முதலீட்டு தொடர்புகள் பாதிக்கப்படுவதற்கு காரணம் ஏதும் இருப்தாக எனக்கு தெரியவில்லை. இனிவரும் காலங்களிலும் சிறீலங்காவின் ஏற்றுமதிக்கான சந்தைகளாக இந்த நாடுகள் விளங்கும் என சிறீலங்கா ஆடைகள் ஏற்றுமதி சந்தையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பேசிய றன்சின் கூறினார். ஐக்கிய இராச்சியத்திற்கான 2011ஆம் ஆண்டு ஏற்றுமதி 1.2 பில்லியன் அமெரிக்க டொலராகவும் இறக்க…
-
- 0 replies
- 581 views
-
-
சிறிலங்கா முதல்முறையாக ஐ.நா அமைப்பு ஒன்றின் நுணுக்கப் பார்வைக்குள்- அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமே இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்றின் பத்தியில் கூறப்பட்டுள்ளது. “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் முடிந்து விட்டது. ஆனால் கொழும்பில் பெரும்பாலும் பேரணிகள் நடத்தப்படுகின்றன. அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்கு சிறிலங்காவுக்கு ஒரு ஆண்டுகால அவகாசம் உள்ளது. மக்களின் பெயரிடுதல் மற்றும் இழிவுபடுத்தல்களையும் தாண்டி ஒரு வலுவான மூலோபாயத்தை வகுக்க வேண…
-
- 1 reply
- 973 views
-
-
“ஜெனீவாத் தீர்மானம் செயலிழந்து போவதை சீனா உறுதிப்படுத்தும்’ “பாதுகாப்பு சபையை சென்றடையப் போவதில்லை’ இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் இந்தியா பக்கம் சார்ந்து வாக்களித்ததால் சீனாவின் பக்கம் கொழும்பு நெருங்கிச் செல்லக்கூடுமென இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் த வீக் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. குழம்பிய குட்டை என்ற தலைப்பில் த வீக் சஞ்சிகையில் கல்லோல் பட்டாச்சேர்ஜி கடந்த சனிக்கிழமை இது தொடர்பாக எழுதியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; கடந்த இரு வாரங்களாக பிரதமர் மன்மோகன் சிங்கினதும்இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினதும் அலுவலகங்கள் ஒன்றுடன் ஒன்று அதிகளவு தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தன. புதுடில்லிக்கு தனது நெருங்கிய உதவியாள…
-
- 1 reply
- 806 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளில் - ஏற்றுக்கொள்ளக் கூடிய பரிந்துரைகள் மட்டுமே அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளதுபரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டிய அவசியமும் கிடையாது. தேசிய அல்லது சர்வதேச ரீதியான அழுத்தங்களுக்கு அடிபணிந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் தயாரில்லை. ஆணைக்குழு பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனி…
-
- 2 replies
- 504 views
-
-
சர்வதேச ரீதியில் எத்தகைய அழுத்தங்கள் வந்த போதும் நாட்டின் இறைமையையும், சுயாதீனத்தையும் காட்டிக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு ஒருபோதும் இறைமையை விட்டுக் கொடுக்கப்போவதில்லை என அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ கூறியுள்ளார். தற்போதைய அரசு எல்லா நேரங்களிலும் டொலர்களைப் பார்க்கிலும் நாட்டின் இறைமையை கெளரவம் செய்ததாக கூறிய அமைச்சர், வெளிநாட்டு உதவியோ, ஒப்பந்தங்கள் காரணமாகவோ அரசின் அக்கொள்கை நிறுத்தப்பட மாட்டாதென்றும் தெரிவித்தார். சர்வதேச ரீதியிலும், உள்ளூரிலும் சவால்கள் வரும் போது அதனை எதிர்கொள்ளும் அரசுக்குள்ள மாபெரும் சக்தியாக அமைவது மக்கள் பேதமின்றி அரசுடன் இருப்பதென்று அமைச்சர் கூறினார். சுயாதீன தொலைக்காட்சிச் சேவையில் நேற்று, இன்று, நாளை என…
-
- 1 reply
- 479 views
-
-
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் எமது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில்தலையிடும் அதிகாரம் மனித உரிமை ஆணையாளருக்கு இல்லை என அமைச்சர் மஹிந்த மரசிங்க திட்டவட்டமாக தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் உடன்பாடு இன்றி மனித உரிமை ஆணையாளனால் தொழில்நுட்ப ஆலோசனை உள் ளிட்ட எந்த உதவியையும் எமக்கு வழங்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உமைப் ளூபரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தூதுக்குழுவின் தலைவராக அமைச்சர் சமரசிங்க செயற்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று நாடு திரும்பிய அமைச்சர் ஜெனிவா தொடர்பாக கருத்து வ…
-
- 0 replies
- 337 views
-
-
பிரசாலினி தன் புன்னைகை இழந்து போனது ஏனோ – குளோபல் தமிழ் செய்திகள் 25 மார்ச் 2012 பிரசாலினி 9 வயது நிறைந்த சின்னஞ் சிறு குழந்தை.க்கு பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று காலையும் வழமையான விடியல்கள் போலவே இனிமையாக மலர்ந்திருந்தது. அன்றுதான் தனது முடிவுக்கு பிள்ளையார் சுழி இடப்போகிறது என்பதை அந்தப் பாலகி அறிந்திருக்க மாட்டாள். அன்று காலை நித்திரை விட்டெழுந்த பிரசாலினி வயிறு நோவினால் முடியாமல் இருப்பதாக கூறினாள். இந்த வயிறு நோ அவளுக்கு கடந்த 6 மாதமாக இடையிடையே சாதாரணமான நோவுடன் இருந்து வந்தது. ஏற்கனவே இரு நாட்களாக காய்ச்சலும் சில சமயம் வாந்தியும் இருந்தது. கூடவே வயிறு நோவும் இருந்து வந்ததால் பெற்றோர் அவளை கொழும்பின் பிரபல வைத்தியசாலையி…
-
- 2 replies
- 1.2k views
-
-
சுவிஸில் உள்ள ஸ்ரீலங்கா தூதுவரும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா.பிரதிநிதியுமான தமரா குணநாயகம் சிங்களவர்களுக்கெதிரான துரோகி என்றும் அவர் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான சீ.ஐ.ஏவுக்கு பணியாற்றி வருகின்றாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இன்று வெளியான அரசுசார்பு திவய்ன சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சில் ஜெனிவா தூதராக பணியாற்றிவரும் தமரா குணநாயகம் தொடர்பாகத் தற்போது சிறிலங்கா புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள திவய்ன, இந்தப் தமிழ் பெண் புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்ட தினத்தன்று இரவு அரசசார்பற்ற அமைப்புகளின்…
-
- 24 replies
- 2.4k views
-
-
பிரேரணை நிறைவேறியிருந்தாலும் ௭மது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில் ஐ.நா. தலையிட முடியாது : அமைச்சர் சமரசிங்க திட்டவட்டம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ௭திராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் ௭மது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் மனித உரிமை ஆணையாளருக்கு இல்லை ௭ன்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனி த உரிமைகள் விவகாரங்கள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் உடன்பாடின்றி மனித உரிமை ஆணையாளரினால் தொழில்நுட்ப ஆலோசனை உள்ளிட்ட எந்த உதவியையும் எமக்கு வழங் முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜ…
-
- 4 replies
- 597 views
-
-
எல்லா பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது – சிறிலங்கா அரசு திட்டவட்டம் [ திங்கட்கிழமை, 26 மார்ச் 2012, 02:02 GMT ] [ தா.அருணாசலம் ] நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், அதனை முழுமையாக நடைமுறைப்ப்படுத்த முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, “எதிர்க்கட்சிகளின் பங்களிப்பில்லாமல் - இதுபற்றிய கருத்துக்கணிப்பை நடத்தாமல் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடி…
-
- 1 reply
- 977 views
-
-
'சமூக சிற்பிகள்' அமைப்பு பதிவேற்றிய கதைகள் - 01: இது மதகுரு இராசதுரை கூறும் கதை [ ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012, 10:48 GMT ] [ நித்தியபாரதி ] முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. [சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில்…
-
- 0 replies
- 548 views
-
-
கொல்லப்பட்ட பாலசந்திரனும் காப்பாற்றப்பட்ட றோகணவின் மகன் உவிந்துவும் 26 மார்ச் 2012 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் தேவ அபிரா: “ ஒரு நாகரீகமடைந்த தேசமாக, எதிர்காலச் சந்ததிக்காக, எதிர்காலத்தில் நிகழக்கூடிய இனக் கலவரங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய இன நல்லிணக்கம் அவசியமாகிறது. தமிழ் அரசியலைத் தனிமைப்படுத்திப் பார்க்காமல் தெற்கு அரசியலின் குருட்டுத்தனமானதும் இறுக்கமானதுமான அரசியல் காரணமாக தமிழ் அரசியல் எவ்வாறு மாற்றமடைந்து வந்துள்ளதென்பதைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.” - உவிந்து குருகுலசூரிய. “இங்கே கொள்கைகள் இருக்கின்றன இங்கே உண்மைகளும் இருக்கின்றன. கொள்கைகள் மாறுபடலாம் ஆனால் எப்படியிருப்பினும் உண்மைகள் மறுக்கப்பட…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜெனீவா நிகழ்வில் கலந்து கொண்ட என்னுடன் அரச பிரதிநிதிகள் மோசமாக நடந்து கொண்டனர் பிரகீத் எக்னலி கொடவின் மனைவி குற்றச்சாட்டு ஜெனீவாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் தான் தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து அரச பிரதிநிதிகள் தன்னுடன் மோசமாக நடந்து கொண்டதாக காணாமல் போன ஊடகவியலாளரான பிரகீத் எக்னலி கொடவின் மனைவியான காந்தியா எக்னலி கொட தெரிவித்துள்ளார். காணாமற் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட ஐரோப்பாவிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பின்னர் நேற்று நாடு திரும்பினார். நாடு திரும்பி அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். அதில் நான் ஜெனீவா சென்றிருந்தேன். 19 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற பிரத்தியேக…
-
- 1 reply
- 738 views
-
-
இன்று மலை 5 மணிக்கு தமிழகத்தில் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் PUCL ஏற்பாடு செய்யும் கருத்தரங்கு நடக்கிறது. அதில் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏ.சுமந்திரன் உரையற்றுகின்றார் . இதில்நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் பேராசிரியர் சரஸ்வதி அம்மா அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தென்னிலங்கை தொலைக்காட்சியொன்றிற்கு கருத்து தெரிவித்திருந்த சுமங்திரன் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.அத்துடன் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதத்திலான கருத்துக்களையும் தெரிவித்து வ…
-
- 5 replies
- 2.4k views
-
-
ஐ .நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பல படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்துள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டை சரியானதொரு பாதையில் வழிநடத்த அரசாங்கம் தவறியுள்ளதன் வெளிப்பாடுதான் இந்தத் தீர்மானம். அந்த உண்மையை புரிந்து கொள்ளும் நிலையில் அரசாங்கம் இருக்கிறதா என்பது சந்தேகம் தான். அமெரிக்கா இந்தளவுக்கு இலங்கையை எதிர்ப்பதற்கு நாம் என்ன தவறு செய்தோம் என்று தெரியவில்லை என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண கேள்வி எழுப்பியுள்ளார். இது அப்பாவித்தனமானதா அல்லது அவர் கண்ணை மூடிக் கொண்டிருப்பதாலா என்பது புரியவில்லை. முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போர் பெரும் அவலங்களோடு கழிந்து போனாலும், அதற்கடுத்த புனர்வாழ்வு, பொறுப்புக்கூறல், ம…
-
- 0 replies
- 906 views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, கொழும்பில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நிகழ்த்தவிருந்த உரையை எந்தக்காரணமும் கூறாமல் சிறிலங்கா அரசாங்கம் திடீரென கடைசிநேரத்தில் நிறுத்தியுள்ளது. தெற்காசியாவுக்கான அமெரிக்காவின உதவி வர்த்தகப் பிரதிநிதி மைக்கல் ஜே டிலானி வரும் 27ம் நாள் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், "தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் பொருளாதார அபிவிருத்தியின் பங்கு" என்ற தலைப்பில் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தவிருந்தார். ஆனால் திடீரென இறுதி நேரத்தல் அவ…
-
- 7 replies
- 1.3k views
-
-
பேருந்துகள் இன்றி வடபகுதி மக்கள் அவதி இலங்கையில் யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் நிறைவடைகின்ற போதிலும், வன்னிப்பிரதேசத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்னும் சீராகவில்லை என அரச ஊழியர்களும் பொதுமக்களும் கூறுகின்றார்கள். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த நிலைமை மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பேருந்துக்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக ஆசிரியர்கள் முறையிடுகின்றனர் கிளிநொச்சி மாவட்டத்தை ஊடறுத்து வடக்கு நோக்கிச் செல்கின்ற ஏ9 நெடுஞ்சாலையில் யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பு, கண்டி உட்பட தென்பகுதி மாவட்டங்களுக்கும் இடையில் பல பேருந்துகள் நீண்டதூர சேவையில் ஈடுபடுகின்றன. ஆயினும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொ…
-
- 1 reply
- 651 views
-