ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143362 topics in this forum
-
நன்றி: ஆனந்த விகடன் - 28 மார்ச் 2012 - பாரதி தம்பி சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திய கூட்டுக் கொலைகளின் கோர முகத்தை 'சேனல் 4’ வெளியிட்ட வீடியோ பதிவுகள் அம்பலப்படுத்தி உலகின் இதயத்தை அதிரவைத்திருக்கின்றன. இந்த நிலையில், நந்திக் கடலோரம் நடந்த ஈவிரக்கமற்ற இன அழிப்புக்கு, சுரேன் கார்த்திகேசு என்ற பத்திரிகையாளரும் ஒரு சாட்சியமாக விளங்குகிறார்... இலங்கையில் வெளியான 'ஈழ நாதம்’ பத்திரிகையின் நிருபரும் புகைப்படக்காரருமான இவர், ஏழு வருடங்கள் வன்னிப் பகுதியில் பத்திரிகையாளராக இருந்தவர். இனவாத யுத்தம் மேலும் மேலும் தமிழ் உயிர்களைப் பலிகொண்ட கொடூரங்களை, தொடர்ந்து செய்திகளாகவும் புகைப்படங்களாகவும் பதிவுசெய்தவர். 2009 ஏப்ரல் மாதத்தில் முள்ளி வாய்க்கால் இறுதி ய…
-
- 1 reply
- 1.6k views
-
-
குற்றச்சாட்டுகள் குறித்து காலவரையறைக்குட்பட்ட சுதந்திரமான விசாரணையைக் கோருகிறது இந்தியா [ வியாழக்கிழமை, 22 மார்ச் 2012, 00:08 GMT ] [ தா.அருணாசலம் ] நல்லிணக்க ஆணைக்குழுவினால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, காலவரையறைக்குட்பட்ட, சுதந்திரமான - நம்பகமான விசாரணப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி, விசாரிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கொழும்பு விசாரிக்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, நேற்று …
-
- 7 replies
- 1.7k views
-
-
2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளை திரிபுபடுத்தப்பட்டு சர்வதேச ரீதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி கூறியுள்ளார். சனல் 4 அலைவரிசையினால் பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவுகளானவை எல்.ரி.ரி.ஈ.யினால் வெளியிடப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட ஒளிப்பதிவுகள் என ஐ.ரி.என். தொலைக்காட்சியில் தயா மாஸ்டர் கூறினார். எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாரகனின் 12 வயதான மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 அலைவரிசையின் புதிய வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவது குறித்து தயா மாஸ்டர் கூறுகையில், எல்.ரி.ரி.ஈ. காவலர்களின் கடும் பாதுகாப்பில் பாலச்சந்திரன் இருந்ததாகவும் அவர் தப்பியோட முயற்சித்தபோது எல்.ரி.ரி.ஈ. காவலர்களால…
-
- 19 replies
- 1.8k views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்று விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சற்று முன்னர் தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான இந்தத் தீர்மானம், சிறிலங்கா நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மையான 24 நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்றுக் கொண்டுள்ளது. அதேவேளை, நேற்றுமாலை 9 நாடுகளின் ஆதரவை மட்டுமே கொண்டிருந்த சிறிலங்கா இன்று காலை 17 நாடுகளின் ஆதரவைப் பெற்ற நிலையில் இருப்பதாகவும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சீனா மேற்கொண்ட பரப்புரைகளின் விளைவாகவே சிறிலங்காவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக…
-
- 4 replies
- 1k views
-
-
போராட உரிமையுண்டு அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில் நீதிக்கு முன் வருவதற்குத் தயங்கி நிற்கும் சிறிலங்கா அரசாங்கம். அதிலிருந்து தப்புவதற்காக தமிழ்மக்களைப் பயன்படுத்தலாமென நினைக்கின்றது. ஆகவேதான் நீதிக்கெதிரான போராட்டங்களை அவர்கள் செய்து வருகின்றனர். அதற்காகத் தமிழரை மிரட்டி அழைக்கும் செயல் நாட்டில் நடக்கின்றது. தமிழ்மக்களை அழித்தவர்கள் தங்களைக் காப்பற்றத் தமிழரைத் துணைக்களைக்கின்றனர். இதனைப் புரிந்து கொள்ள வேண்டியபொறுப்பு தமிழ்மக்களுடையது. எங்கள் தாயகத்தில் தமிழ்மக்கள் தங்களின் உரிமைக்காக எந்தவொரு போராட்டத்தையும் செய்வதற்கான சூழ்நிலையில்லாமல் இருக்கின்றார்கள். இது உலகத்திற்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்திருக்கும் உண்மையாகும். தமிழ்மக்கள் தங்களின் உரிமைக்காக…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஜெனிவாவில் சிறிலங்கா அரசு நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் பௌத்த பிக்குகள் படுகொலைசெய்யப்பட்ட விவகாரத்தை முன்னுதாரணமாக வைத்து தமிழர்கள் மீது 1983 ஜீலைப் படுகொலைபோன்று ஒரு இனப்படுகொலையை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது கொழும்பு, கோட்டே ரஜமகா விகாரைக்குள் வைத்து இரண்டு பௌத்த பிக்குகள், வாகனம் ஒன்றில் வந்த குழுவினரால் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வண.பிற்றிகல ஜினசிறி தேரர், பொரலஸ்கமுவ குணரத்ன தேரர் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்களாவர். நேற்றிரவு 9.45 மணிக்கும், 10 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளை நிறக் கார் ஒன்றில் வந்தவர்களே பிக்குகளைத் தாக்கிக் கொ…
-
- 3 replies
- 3.3k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவினால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, காலவரையறைக்குட்பட்ட, சுதந்திரமான - நம்பகமான விசாரணப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி, விசாரிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கொழும்பு விசாரிக்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, நேற்று எழுத்துமூலம் அளித்துள்ள பதில் ஒன்றிலேயே இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் பிரனீத் கௌர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “சிறிலங்காவுக்கு எதிரான மனிதஉரிமை மீற…
-
- 0 replies
- 610 views
-
-
ஜெனிவாவில், சிறிலங்காவுக்கு எதிராக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தீரும் வரை வடபகுதியில், விழாக்களையோ பொது நிகழ்வுகளையோ நடத்துவதை தவிர்க்குமாறு வட மாகாண ஆளுநர் சந்திரசிறி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோப்பாய் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் இரு பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழாக்கள் ஆளுநரின் தலைமையில் இடம்பெறவிருந்தது. இந்த நிகழ்வுக்கென பாடசாலை நிர்வாகங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. இந் நிலையில் திடீரென இந்த அறிவித்தலை வட மாகாண ஆளுநர் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட பகுதியில் எதிர்வரும் 22ம் திகதி வரை எந்தவொரு கலை, கலாசார நிகழ்வுகளையும் நடாத்துவதை தவிர்க வேண்டும். எமது நாட்டின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஜெனிவாவில் இறுதித…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதா? தேவலோகத்தில் அவசர மாநாடு! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-20 09:12:33| யாழ்ப்பாணம்] ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அமெரிக்காவால் கொண்டு வரப்படும் இத் தீர்மானம் நிறைவேறக் கூடாது என்பதற்காக இலங்கை அரசு ஆர்ப்பாட்டங்களையும் பேரணி களையும் நடத்தி வருகின்றது. இதற்கு மேலாக, இறைவழிபாடும் நடைபெறுகின்றது. இலங்கை அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் வழிபாடு தொடர்பில் கடவுளர்கள் என்ன முடிபு எடுப்பார்கள். இப்படியயாரு கற்பனை நம் உள்ளத்தில் தோன்றியது. வன்னிப் போரின்போது யுத்தத்திற்குள் சிக் குப்பட்ட தமிழ் மக்களும் இறைவா...இறைவா... என்று வழிபாடாற்றினர். அதேவேளை முட்க…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா மீதான தீர்மானம் குறித்த இறுதி நேரப் பரபரப்புகள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்காவிற்கு வலுச் சேர்க்கும் முகமாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஜெனிவாவுக்கு நேரடியாக சென்று களத்தில் குதித்துள்ளார். ஹிலாரி தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு தீர்மானத்தை ஆதரிக்குமாறு கோரி ஏனைய நாட்டுப் பிரதிநிதிகளுடன் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது. தீர்மான வரைவின் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை அல்லது நாளைமறுதினம் காலை இடம்பெறும் என்று உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக இந்தியப் பிரதமர் அறிவித்ததன் பின்னர், வெளி விவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன் நேற்றுமுன்தினம் ஜெனிவாவிற்கு சென்று ச…
-
- 4 replies
- 2.2k views
-
-
ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி , இலங்கைத் தீவில் பதற்றமான சூழலை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள இனவாதிகளால், தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம் என்ற அச்சம் நிலை பரவியுள்ளதாக அறியமுகின்றது. குறிப்பாக கொழும்பில் உள்ள தமிழ் மக்கள் தேவையான உணவு மற்றும் அடிப்படைப் பொருட்களை வாங்கி சேமித்து வருகின்றனர். தேவை நிமிர்த்தம் கொழுப்புக்கு வந்த பல தமிழ் மக்கள் சொந்த இடங்களுக்கு விரைந்து திரும்பி வருவதாக அறியமுடிகின்றது. பல தமிழ் வர்த்தகர்கள் தங்களது கடைகளையோ நிறுவனங்களை பாதுகாப்பதற்குரிய முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளதாக அறியமுடிகின்றது. சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டுத் தூதர அதிகாரிகள், இது தொடர்பிலான தகவ…
-
- 5 replies
- 1.9k views
-
-
ஆர்.எஸ்.எஸ். அறிக்கை குறித்து இந்து இளைஞர் பேரவை தலைவர் யோகேஸ்வரன் கவலை தெரிவிப்பு அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது என பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவு இந்துமத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்தியா அரசாங்கத்தை வலியுறுத்துவதாக கூறும் செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், இலங்கை இந்து பேரவையின் உபதலைவரும், விஷ்வ ஹிந்து பரிசத்தின் அரசியல் பிரதிநிதியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவசரமாக தமது அறிக்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமைப்பீடத்திற்கு வெளியிட்டுள்ளார். அவ்வ…
-
- 3 replies
- 838 views
-
-
சர்வதேச அரங்கில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை இறுதிப்போரின் போது தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஊடகங்களில் புதிய ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து புகைப்படங்கள், விடியோக்கள் ஆகியவை மிகவும் வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் கடும் கண்டனத்துக்குரியவை. இலங்கையில் நடைபெறும் போரில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதையும், சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல் சட்ட ர…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 மார்ச், 2012 - 18:17 ஜிஎம்டி ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் அதிகாரபூர்வ நாளேடு ஆர்கனைசர் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று ஹிந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் இதழில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்றும், இதில் இந்தியா தயக்கம் காட்டினாலோ அல்லது நடுநிலை வகித்தாலோ, பின்னாளில் இந்தியா சிக்…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான பிரேரணையை ஒஸ்ரேலியா அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என ஒஸ்ரேலிய செனட்சபை இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இன்று கூடிய செனட்சபை மூன்று விடயங்களை கருத்தில் கொண்டுள்ளது. 2012 பிப்ரவரி 13ம் நாளன்று, அப்போதைய வெளியுறவு அமைச்சர் கெவின் ரட், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இணக்க ஆணையம் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் ஒரு ஊடக செய்தியை வெளியிட்டார். அதில்: 1. சமரசம் மற்றும் புனரமைப்பை முன்னெடுக்கும் ஆக்கபூர்வமான திட்டங்கள் சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ளது, குறிப்பாக வடக்கில் பாதுகாப்புப் படைகள் குறைக்கப்படுதல், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான சேவைகள், மற்றும் ஊடக சுதந்திரம…
-
- 2 replies
- 862 views
-
-
இலங்கை தமிழர்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து தாம் நன்கு உணர்ந்துள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். சோனியா காந்தி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். சகல அரசியல் கட்சிகளும் இணைந்து இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பது அவசியம் எனவும் அந்த கடிதத்தில் சோனியாh காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வெகுவிரைவில் காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கோடிட்டு காட்டியுள்ளார். இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக விரைவில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் ஒன்ற…
-
- 2 replies
- 1.3k views
-
-
| இலங்கை போர்குற்ற நாடு தான் என்று வாக்களிக்கும் வரை போராட்டம்: புதுக்கோட்டை எம்.எல்.ஏ புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் புளிச்சங்காடு கைகாட்டியில் அப்பகுதி தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஐ.நா அவையில் அமெரிக்கா கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.முத்துக்குமரன் தொடங்கி வைத்து பேசினார். முத்துக்குமரன் எம்.எல்.ஏ பேசியதாவது. தொடர்ந்து இந்திய அரசு தமிழர்களை வஞ்சித்தே வருகிறது. இப்போது…
-
- 1 reply
- 641 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கோராத வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரத்தினை ஏன் பெரிதாகக் கதைக்கிறீர்கள் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க கேள்வி எழுப்பியிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இச் சந்திப்பின் போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் ரணில் விக்கிரமசிங்கவிடம் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றனர். நாட்டில் இயல்பு நிலை ஏற்பட வேண்டுமாக இருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். அவ்…
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில், இந்தியா திருத்தங்களை செய்வதற்குத் தலையிடும் என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னதாக, அதில் இந்தியா திருத்தங்களை மேற்கொள்ளும் என்று சிறிலங்கா இராஜதந்திரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அதேவேளை, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்து குறித்தும் ஜெனிவா தீர்மானத்தில் உள்ளடக்க இந்தியா விரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையே ஐ.நா மனிதஉரிமைகள் பே…
-
- 8 replies
- 874 views
-
-
மணல் அகழ்வால் கடலுக்குச் சொந்தமாகும் மண்டைத்தீவு! (படங்கள்) மண்டைதீவு 7 ஆம் வட்டாரப் பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரையோரமாக இனந்தெரியாதோர் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவ்வாறு கண்மூடித்தனமான முறையில் நடைபெற்று வரும் மணல் அகழ்வால் மண்டைதீவுப் பகுதி எதிர்காலத்தில் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள மக்கள் ஏற்கனவே நீர் உவராதல் மற்றும் குடிநீர் பற்றாக்குறை என்பன ஆரம்பித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை தொடர் மணல் அகழ்வுகள் இடம்பெறும் பட்சத்தில் கடல் அரிப்புக்கள் ஏற்பட்டு எதிர்காலத்தில் மண்டைதீவு கடலுக்குள் போகக் கூடிய அபாய நிலை ஏற்படுவதற்கும் வாய்ப்பிருப்பதாகவும் சுட்டி…
-
- 7 replies
- 1.3k views
-
-
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முன் பிக்குகள் ஆர்ப்பாட்டம் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னால் பிக்குமார் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஜெனீவா, ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரிக்கப் போவதாக நேற்று முன்தினம், பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்ததையடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தை தேசிய சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37178
-
- 3 replies
- 854 views
-
-
2016ம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக பெருநகர வேக ரயில் இலங்கையில் முதன் முறையாக அதிவேக பெருநகர வேக ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரை இந்த பெருநகர வேக ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. மலேசியாவை மையமாகக் கொண்ட விமான எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் கம்பெனி லிமிடெட் நிறுவனம் இத்திட்டத்திற்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதற்காக முதலீட்டாளர்கள் மலேசியா, அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து வருவார்கள் என விமான எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் கம்பெனி லிமிடெட் நிறுவன தலைவர் பரிமலன் ராஜோ இசா மைக்கல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். …
-
- 3 replies
- 1k views
-
-
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் எதுவும் விதிக்கப்பட மாட்டாது என அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பதனை நோக்காகக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் நோக்கில் இந்தத் திர்மானம் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltam...IN/article.aspx
-
- 1 reply
- 562 views
-
-
முள்ளிவாய்க்கால் போல் அனைவரையும் கொல்ல காவல்துறை திட்டம்: உதயகுமார் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் ஆபரேஷன் போல் அனைவரையும் கொல்ல காவல்துறை திட்டமிட்டிருப்பதாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இடிந்தகரையில் உள்ள லூர்து மாதா ஆலயத்தில் 10 கிராம மக்களுடன் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் இன்று 3வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகள் கூட்டத்தை போல் எங்களை மத்திய, மாநில அரசுகள் பிடித்து வைத்துள்ளதாக கூறினார். இடிந்தகரை…
-
- 4 replies
- 1.4k views
-
-
வன்னி யுத்த நடவடிக்கைகளின் போது கிளஸ்ரர் ரக குண்டுகள் பயனபடுத்தப்பட்டமை தொடர்பான மற்றும் சில முக்கிய தடயங்களும் தற்போது சிக்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மனித நேய கண்ணி வெடியகற்றல் பணியினில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச அமைப்பொன்றின் பணியாளர்களிடையே இததடயம் சிக்கியிருப்பதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி நகரையண்டிய திருவையாறு பகுதியினில் வீசப்பட்டு வெடித்த நிலையினில் காணப்படும் கொத்து குண்டெனப்படும் கிளஸ்ரர் ரக குண்டுகளது எச்சங்களே மீ;ட்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனித நேய கண்ணி வெடியகற்றல் பணியினில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச அமைப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ள கொத்து குண்டின் தடயங்களை தமது அலுவலகத்தில் காட்சிக்கென உள்ளே வைத்துள்ளதாகவம் கூறப்படுகின்றது. இக்குண்டின…
-
- 1 reply
- 1.2k views
-