Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் ரமேஸ் படுகொலையின் புதிய ஆதாரத்தை The global mail வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதி விசாரணையின் பின் சிங்கள இனவெறி இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலைசெய்யப்பட்டதை Gordon weiss எழுதிய கட்டுரை புகைப்பட ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. அக்கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும் http://www.pooraayam...1-12-26-05.html

  2. யாழ்.கோப்பாய் பகுதியில் கிணறொன்றிலிருந்து சிறீலங்கா இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று வியாழக்கிழமை மீட்டுள்ளனர். கண்டியைச் சேர்ந்த சமந்திர கெஷ்டா பிரதீப் ஜெயசேகர என்ற 21 வயது சிப்பாயின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. தற்போது, சடலம் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடமையின் போது கிணற்றில் மீது ஏறி நின்ற இவர் தவறி வீழ்ந்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு படைகளின் யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். http://www.eeladhesa...lle-nachrichten

  3. ஜெனீவா தீர்மானம் இலங்கை அரசின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும்: ஹிலாரி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் 27 வருட யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் தெரிவித்தார். இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்பது மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்கண்…

  4. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் 27 வருட யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் தெரிவித்தார். இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்பது மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நிரந்த …

  5. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவிபிள்ளை (நவநீதம்பிள்ளை) இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை இரத்துச் செய்துவிட்டார் என்று அறிய வந்தது. அவரது இந்த முடிவு கொழும்பு ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கை, இறுதிப் போரின் போது நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறிவிட்டதன் காரணமாகவே நவநீதம்பிள்ளை தனது இலங்கைக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் தறுவாயில், மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் எடுத்துள்ள இந்த அதிரடியான தீர்மானத்தால் கொழும்பு அதிர்ச்சியடைந்துள்ளது…

  6. Started by BLUE BIRD,

    • 0 replies
    • 895 views
  7. பழைய காயங்கள் மீது உப்பிடுதல் அல்லது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்: ஓர் அறிக்கை [ வியாழக்கிழமை, 22 மார்ச் 2012, 08:10 GMT ] [ நித்தியபாரதி ] யுத்தத்தின் பின்னான சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மற்றும் மலை நாட்டுப் பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான பிரதேசங்களில் திட்டமிட்ட ரீதியில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், இந்நடவடிக்கையானது தற்போது அதிகரிக்கப்பட்டு, பரந்தளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக 'சமூக வடிவமைப்பாளர்கள்' அமைப்பால் [The Social Architects - TSA]* சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு, மலைநாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வின் பின் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சமூக வடிவமைப்பாளர்கள்' அமைப்பால் [The Social…

    • 0 replies
    • 1.1k views
  8. அமெரிக்கா முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழு ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் உரையாற்றிய பிரதிநிதி குறிப்பிட்டார். பான் கீ மூன் நியமித்த ஐநா நிபுணர் குழு இலங்கை குறித்து முழுமையான அறிக்கை வெளியிட்டதாகவும் இலங்கையில் நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முழுமையாக அறிக்கை வெளியிடவில்லை எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இருந்து வெளிநாடு சென்று ஐநாவுடன் இணைந்து செயற்படுபவர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அவ…

  9. ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 4 வாரங்களாக, உலகத் தமிழர்களின் எதிர்பார்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கியவிடயமாக மாறியிருந்தது. இந்நிலையில் இன்று ஐ.நா கூட்டத் தொடர் அமர்வில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அமெரிக்காவின் பிரேரணையினை 24 நாடுகள் ஆதரித்தும், 15 எதிர்த்தும் வாக்களித்துள்ளன.8 நாடுகள் வாக்கெடுப்ப்பில் பங்கெடுக்கவில்லை. அமெரிக்காவின் இந்தப் பிரேரணையினை தோற்கடிக்க சிறிலங்கா…

    • 4 replies
    • 1.9k views
  10. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், எவராவது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்ற பட்சத்தில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று மிரட்டுகின்ற துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் நேற்று ஒட்டப்பட்டு இருக்கின்றன. சேரன் படை என்கிற குழுவே இத்துண்டுப் பிரசுர அறிக்கையை வெளியிட்டு உள்ளது. யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் கலாசார விழுமியங்களை பின்பற்றி நடக்க வேண்டும், பெண்கள் பாரம்பரிய உடைகளையே அணிய வேண்டும் என்பதோடு உடலை வெளியில் காட்டுகின்றபடியான உடுப்புக்களை அணிகின்றமை கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. http://www.eeladhesa...lle-nachrichten

    • 12 replies
    • 3.7k views
  11. தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்து உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன். இவர் இது குறித்து முக்கியமாக தெரிவித்து இருப்பவை வருமாறு: புலிகளை தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்க முடியாது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி இந்நிலைப்பாட்டில் இருக்கவில்லை. புலிகள் பயங்கரவாத அமைப்பு ஒன்றை போல செயல்பட்டனர். இலங்கைக்குள் தனி நாடு ஒன்றை நிறுவ முயன்றனர். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளை தொடர்ந்து இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினர். இது சரியான செயல் ஆகாது. வன்முறைகளை கைவிடச் சொல்லி எழுத்துமூலம்கூட புலிகளிடம் கேட்டு இருந்தேன். பு…

    • 44 replies
    • 5.6k views
  12. நன்றி: ஆனந்த விகடன் - 28 மார்ச் 2012 - பாரதி தம்பி சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திய கூட்டுக் கொலைகளின் கோர முகத்தை 'சேனல் 4’ வெளியிட்ட வீடியோ பதிவுகள் அம்பலப்படுத்தி உலகின் இதயத்தை அதிரவைத்திருக்கின்றன. இந்த நிலையில், நந்திக் கடலோரம் நடந்த ஈவிரக்கமற்ற இன அழிப்புக்கு, சுரேன் கார்த்திகேசு என்ற பத்திரிகையாளரும் ஒரு சாட்சியமாக விளங்குகிறார்... இலங்கையில் வெளியான 'ஈழ நாதம்’ பத்திரிகையின் நிருபரும் புகைப்படக்காரருமான இவர், ஏழு வருடங்கள் வன்னிப் பகுதியில் பத்திரிகையாளராக இருந்தவர். இனவாத யுத்தம் மேலும் மேலும் தமிழ் உயிர்களைப் பலிகொண்ட கொடூரங்களை, தொடர்ந்து செய்திகளாகவும் புகைப்படங்களாகவும் பதிவுசெய்தவர். 2009 ஏப்ரல் மாதத்தில் முள்ளி வாய்க்கால் இறுதி ய…

    • 1 reply
    • 1.6k views
  13. குற்றச்சாட்டுகள் குறித்து காலவரையறைக்குட்பட்ட சுதந்திரமான விசாரணையைக் கோருகிறது இந்தியா [ வியாழக்கிழமை, 22 மார்ச் 2012, 00:08 GMT ] [ தா.அருணாசலம் ] நல்லிணக்க ஆணைக்குழுவினால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, காலவரையறைக்குட்பட்ட, சுதந்திரமான - நம்பகமான விசாரணப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி, விசாரிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கொழும்பு விசாரிக்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, நேற்று …

    • 7 replies
    • 1.7k views
  14. 2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளை திரிபுபடுத்தப்பட்டு சர்வதேச ரீதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி கூறியுள்ளார். சனல் 4 அலைவரிசையினால் பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவுகளானவை எல்.ரி.ரி.ஈ.யினால் வெளியிடப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட ஒளிப்பதிவுகள் என ஐ.ரி.என். தொலைக்காட்சியில் தயா மாஸ்டர் கூறினார். எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாரகனின் 12 வயதான மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 அலைவரிசையின் புதிய வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவது குறித்து தயா மாஸ்டர் கூறுகையில், எல்.ரி.ரி.ஈ. காவலர்களின் கடும் பாதுகாப்பில் பாலச்சந்திரன் இருந்ததாகவும் அவர் தப்பியோட முயற்சித்தபோது எல்.ரி.ரி.ஈ. காவலர்களால…

  15. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்று விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சற்று முன்னர் தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான இந்தத் தீர்மானம், சிறிலங்கா நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மையான 24 நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்றுக் கொண்டுள்ளது. அதேவேளை, நேற்றுமாலை 9 நாடுகளின் ஆதரவை மட்டுமே கொண்டிருந்த சிறிலங்கா இன்று காலை 17 நாடுகளின் ஆதரவைப் பெற்ற நிலையில் இருப்பதாகவும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சீனா மேற்கொண்ட பரப்புரைகளின் விளைவாகவே சிறிலங்காவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக…

  16. போராட உரிமையுண்டு அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில் நீதிக்கு முன் வருவதற்குத் தயங்கி நிற்கும் சிறிலங்கா அரசாங்கம். அதிலிருந்து தப்புவதற்காக தமிழ்மக்களைப் பயன்படுத்தலாமென நினைக்கின்றது. ஆகவேதான் நீதிக்கெதிரான போராட்டங்களை அவர்கள் செய்து வருகின்றனர். அதற்காகத் தமிழரை மிரட்டி அழைக்கும் செயல் நாட்டில் நடக்கின்றது. தமிழ்மக்களை அழித்தவர்கள் தங்களைக் காப்பற்றத் தமிழரைத் துணைக்களைக்கின்றனர். இதனைப் புரிந்து கொள்ள வேண்டியபொறுப்பு தமிழ்மக்களுடையது. எங்கள் தாயகத்தில் தமிழ்மக்கள் தங்களின் உரிமைக்காக எந்தவொரு போராட்டத்தையும் செய்வதற்கான சூழ்நிலையில்லாமல் இருக்கின்றார்கள். இது உலகத்திற்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்திருக்கும் உண்மையாகும். தமிழ்மக்கள் தங்களின் உரிமைக்காக…

    • 4 replies
    • 1.2k views
  17. ஜெனிவாவில் சிறிலங்கா அரசு நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் பௌத்த பிக்குகள் படுகொலைசெய்யப்பட்ட விவகாரத்தை முன்னுதாரணமாக வைத்து தமிழர்கள் மீது 1983 ஜீலைப் படுகொலைபோன்று ஒரு இனப்படுகொலையை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது கொழும்பு, கோட்டே ரஜமகா விகாரைக்குள் வைத்து இரண்டு பௌத்த பிக்குகள், வாகனம் ஒன்றில் வந்த குழுவினரால் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வண.பிற்றிகல ஜினசிறி தேரர், பொரலஸ்கமுவ குணரத்ன தேரர் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்களாவர். நேற்றிரவு 9.45 மணிக்கும், 10 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளை நிறக் கார் ஒன்றில் வந்தவர்களே பிக்குகளைத் தாக்கிக் கொ…

    • 3 replies
    • 3.3k views
  18. நல்லிணக்க ஆணைக்குழுவினால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, காலவரையறைக்குட்பட்ட, சுதந்திரமான - நம்பகமான விசாரணப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி, விசாரிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கொழும்பு விசாரிக்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, நேற்று எழுத்துமூலம் அளித்துள்ள பதில் ஒன்றிலேயே இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் பிரனீத் கௌர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “சிறிலங்காவுக்கு எதிரான மனிதஉரிமை மீற…

  19. ஜெனிவாவில், சிறிலங்காவுக்கு எதிராக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தீரும் வரை வடபகுதியில், விழாக்களையோ பொது நிகழ்வுகளையோ நடத்துவதை தவிர்க்குமாறு வட மாகாண ஆளுநர் சந்திரசிறி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோப்பாய் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் இரு பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழாக்கள் ஆளுநரின் தலைமையில் இடம்பெறவிருந்தது. இந்த நிகழ்வுக்கென பாடசாலை நிர்வாகங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. இந் நிலையில் திடீரென இந்த அறிவித்தலை வட மாகாண ஆளுநர் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட பகுதியில் எதிர்வரும் 22ம் திகதி வரை எந்தவொரு கலை, கலாசார நிகழ்வுகளையும் நடாத்துவதை தவிர்க வேண்டும். எமது நாட்டின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஜெனிவாவில் இறுதித…

    • 3 replies
    • 1.1k views
  20. பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதா? தேவலோகத்தில் அவசர மாநாடு! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-20 09:12:33| யாழ்ப்பாணம்] ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அமெரிக்காவால் கொண்டு வரப்படும் இத் தீர்மானம் நிறைவேறக் கூடாது என்பதற்காக இலங்கை அரசு ஆர்ப்பாட்டங்களையும் பேரணி களையும் நடத்தி வருகின்றது. இதற்கு மேலாக, இறைவழிபாடும் நடைபெறுகின்றது. இலங்கை அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் வழிபாடு தொடர்பில் கடவுளர்கள் என்ன முடிபு எடுப்பார்கள். இப்படியயாரு கற்பனை நம் உள்ளத்தில் தோன்றியது. வன்னிப் போரின்போது யுத்தத்திற்குள் சிக் குப்பட்ட தமிழ் மக்களும் இறைவா...இறைவா... என்று வழிபாடாற்றினர். அதேவேளை முட்க…

    • 7 replies
    • 1.6k views
  21. ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா மீதான தீர்மானம் குறித்த இறுதி நேரப் பரபரப்புகள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்காவிற்கு வலுச் சேர்க்கும் முகமாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஜெனிவாவுக்கு நேரடியாக சென்று களத்தில் குதித்துள்ளார். ஹிலாரி தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு தீர்மானத்தை ஆதரிக்குமாறு கோரி ஏனைய நாட்டுப் பிரதிநிதிகளுடன் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது. தீர்மான வரைவின் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை அல்லது நாளைமறுதினம் காலை இடம்பெறும் என்று உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக இந்தியப் பிரதமர் அறிவித்ததன் பின்னர், வெளி விவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன் நேற்றுமுன்தினம் ஜெனிவாவிற்கு சென்று ச…

    • 4 replies
    • 2.2k views
  22. ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி , இலங்கைத் தீவில் பதற்றமான சூழலை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள இனவாதிகளால், தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம் என்ற அச்சம் நிலை பரவியுள்ளதாக அறியமுகின்றது. குறிப்பாக கொழும்பில் உள்ள தமிழ் மக்கள் தேவையான உணவு மற்றும் அடிப்படைப் பொருட்களை வாங்கி சேமித்து வருகின்றனர். தேவை நிமிர்த்தம் கொழுப்புக்கு வந்த பல தமிழ் மக்கள் சொந்த இடங்களுக்கு விரைந்து திரும்பி வருவதாக அறியமுடிகின்றது. பல தமிழ் வர்த்தகர்கள் தங்களது கடைகளையோ நிறுவனங்களை பாதுகாப்பதற்குரிய முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளதாக அறியமுடிகின்றது. சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டுத் தூதர அதிகாரிகள், இது தொடர்பிலான தகவ…

    • 5 replies
    • 1.9k views
  23. ஆர்.எஸ்.எஸ். அறிக்கை குறித்து இந்து இளைஞர் பேரவை தலைவர் யோகேஸ்வரன் கவலை தெரிவிப்பு அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது என பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவு இந்துமத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்தியா அரசாங்கத்தை வலியுறுத்துவதாக கூறும் செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், இலங்கை இந்து பேரவையின் உபதலைவரும், விஷ்வ ஹிந்து பரிசத்தின் அரசியல் பிரதிநிதியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவசரமாக தமது அறிக்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமைப்பீடத்திற்கு வெளியிட்டுள்ளார். அவ்வ…

  24. சர்வதேச அரங்கில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை இறுதிப்போரின் போது தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஊடகங்களில் புதிய ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து புகைப்படங்கள், விடியோக்கள் ஆகியவை மிகவும் வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் கடும் கண்டனத்துக்குரியவை. இலங்கையில் நடைபெறும் போரில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதையும், சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல் சட்ட ர…

  25. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 மார்ச், 2012 - 18:17 ஜிஎம்டி ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் அதிகாரபூர்வ நாளேடு ஆர்கனைசர் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று ஹிந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் இதழில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்றும், இதில் இந்தியா தயக்கம் காட்டினாலோ அல்லது நடுநிலை வகித்தாலோ, பின்னாளில் இந்தியா சிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.