Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் சுமந்திரன் கேள்வி - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜெனிவாவிற்கு செல்வதில்லையென்று எடுத்துள்ள தீர்மானம் மற்றும் அதையடுத்து எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி கட்சியினருக்கு விளக்கமளிக்கும் கூட்டங்களை கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது. அதன் ஒர் அங்கமான யாழ் மாவட்டத்தை சேர்ந்த உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை இன்றைய தினம் நல்லூரிலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தினில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து உரையாடினர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கொழும்பிலிருந்து சென்ற சுமந்திரன் சிறப்புரை ஆற்றியிருந்தார். மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிறீதரன் உள்ளிட்டோர் கலந்து க…

  2. பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதேன்? நாம் தமிழர் கட்சி வினா தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளது கண்டனத்திற்குரியதாகும். இரண்டரை ஆண்டுக்காலப் போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இனவெறி அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அப்படிபட்ட தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கும்போது, ம…

  3. நல்ல விடயங்களை விமர்சிக்கும் மனோநிலை மாறாத வரைக்கும் எந்தவொரு பதிவினையும் போட விரும்பவில்லை. அனைவருக்கும் நன்றி.

  4. சென்னை இலங்கைத் துணைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த மார்க்சிஸ்ட் கம்னியூசிய கட்சியினர் கைது செய்யப்பட்டார்கள் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டார்கள். இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென கோரி, இலங்கைத் துணைத் தூதுரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அக்கட்சி அறிவித்திருந்தது. கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், மதுரவயல் தொகுதி சட்டசபை உறுப்பினர் பீமாராவ், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உட்பட 200 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களில் சிலர் இலங்கைத் துணைத் தூதரகத்தினுள் பிரவேசிக்க முற்பட்டபோது, அதனைக்…

  5. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தென்னாபிரிக்காவில் முக்கிய பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனித உரிமைகளுக்கான விஷேட தூதுவர் மகிந்த சமரசிங்க ஜப்பானுக்கான அவசரப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதில் அமெரிக்கா முனைப்பாகச் செயற்படும் நிலையில் அதற்கு எதிரான வியூகங்களை வகுக்கும் நோக்கத்துடனேயே இவ்விருவரும் வெளிநாட்டுப் பணயங்களை மேற்கொண்டிருப்பதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெனிவா கூட்டத் தொடரில் பங்குகொள்வதற்காகச் சென்றிருந்த அமைச்சர் பீரிஸ், அங்கிருந்து நேரடி…

  6. Started by Queen,

    All Tamil acitivist please send all your emails to following to defeta G L Peiries's attempt to brain wash the Botswana ! Also note that Botswana already aligned with West over Syrian issue! MINISTRY OF FOREIGN AFFAIRS AND INTERNATIONAL COOPERATION Email Address: mofaic-admin@lists.gov.bw ... PERMANENT MISSION OF THE REPUBLIC BOTSWANA TO THE UNITED NATIONS Email: botswana@un.int Office of the President http://www.gov.bw/en/Help--Support/Contact-us/?FromPageID=1655 The Botswana Centre for Human Rights admin.ditshwanelo@info.bw or landrights.ditshwanelo@micro.co.bw While Tigers and Lions are at Geneva war - Jackal is focusing on A…

  7. த.தே.கூ. பக்குவமாக கருமங்களை முன்னெடுக்கும்: சம்பந்தன் அமெரிக்கா, இந்தியா போன்ற முக்கியமான நாடுகளை உள்ளடக்கிய 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பக்குவமாக கையாளும் என இரா.சம்பந்தன் - தமிழ்மிரருக்கு கூறினார். இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஜெனிவா செல்வது தொடர்பில் என்ன தீர்மானத்தினை எடுத்தீர்கள் என்று கேட்டபோதே அவர் மேற்படி கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்... 'ஊடகங்கள் செய்திகளை சரியாக புரிந்து வெளியிடவேண்டும். அதனால்தான் எமது சந்திப்பு பற்றிய சிறிய ஊடக அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தயவுசெய்து அதனை மட்டும் பிரசுரித்தால் போதுமானதாகும். பிரச்சினைகளை இராஜ…

  8. ஜனாதிபதி தேர்தலின்போது மாளிகாவத்தை போதிராஜ விகாரையில் ஆயுதங்களை வைத்திருந்தாக குற்றம் சுமத்தப்பட்டு வண உவதென்ன சுமண தேரர் உட்பட பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமையால் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்தர்கள் மூவரை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இன்ஸ்பெக்டர் கொடிதுவக்கு, உப இன்ஸ்பெக்ஸ்டர் ரணசிங்க, உப இன்ஸ்பெக்ஸ்டர் ஹப்புஆரச்சி ஆகியோரின் பெயர்கள் அழைக்கப்பட்டபோது அவர்கள் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அதையடுத்து இம்; மூவரையும் கைது செய்யுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ உத்தரவிட்டார். http://www.saritham.com/?p=52949

  9. தப்பியோடிய புலிகளின் 200 வரையான தற்கொலை குண்டுதாரிகள் மக்கள் மத்தியில என்கிறது அரச சார்பு இணையம்:- போர் நடைபெற்ற போது, மறைந்து, தப்பியோடிய விடுதலைப்புலிகளின் சுமார் 200 தற்கொலை குண்டுதாரிகள் மக்கள் மத்தியில் பல்வேறு முகங்களில் சுற்றித்திரிவதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அரச சார்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்த நபர்கள் தம்மை, முஸ்லீம்கள் போன்றும் இந்து பக்தர்கள் போன்று அடையாளப்படுத்தி நடமாடி வருவதாகவும் அண்மையில் கைதுசெய்யப்பட்ட இவ்வாறான தற்கொலை குண்டுதாரிகள் சிலர், இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப்புலிகளின் சுமார் 100 பேர், சுவிஸர்லாந்து, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். …

  10. ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் இன்று முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது. சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அக்கட்சியின் மாநில தலைமை செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்துள்ளார். இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியலிலும் ஈடுப்பட்டுள்ளனர். மேலும், இந்த மறியல் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சியினரை பொலிஸார் கைது செய்ததாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்த போராட்ட குழுவினர், இலங்கை தமிழனத்தி…

  11. வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப ஜெனிவாவில் முடிபு எடுக்கப்படும் இந்திய அரசு தற்போது பின்பற்றிவரும் வெளியுறவு கொள்கைகளுக்கு ஏற்பவே ஜெனிவா விவகாரத்தில் முடிபெடுக்கும். இதுநாள்வரை இலங்கை விவகாரத்தில் எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றி வந்தது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் திவேதி தெரிவித்தார். இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் செய்திப் பிரிவின் தலைவருமான திவேதி இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் தொடர்பில் மத்திய அரசு எடுக்கும் முடிபுகளில் நாட்டில் உள்ள எந்ந அரசியல் கட்சிகளும் தலையிடுவதில்லை. விடுதலைப்புலிகளுடனான இறுதிக் கட்டப…

    • 2 replies
    • 681 views
  12. இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக இந்தியாவின் மும்பையில் வாழும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர் மீது போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா., குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா கூட இலங்கைக்கு எதிராக ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டு வரவிருக்கிறது. இதனை ஆதரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெ., தி.மு.க,தலைவர் கருணாநிதி மற்றும் வைகோ உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பையில் வாழும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கனோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் , தேடப்படும் குற்றவாளி என ஆர்பாட்டக்காரர்கள் கோ…

    • 1 reply
    • 726 views
  13. முக்கிய குறிப்புகள் இலங்கை: தலைநகரம்: ஸ்ரீ ஜயவர்தனபுர அமைவிடம்: வடக்காக 6 பாகை 54 கலை கிழக்கு 6°54’ – 6° 9’N 79°54’ – 79°9’E பெரிய நகரம்: கொழும்பு ஆட்சி மொழிகள்: சிங்களம், தமிழ் அரசு: சனநாயக சோசலிசக் குடியரசு சனாதிபதி: மேன்மை தங்கிய மகிந்த ராசபக்ஷ பிரதம மந்திரி: மாண்புமிகு தி.மு. ஜயரத்ன விடுதலை(சுதந்திரம்): பிரித்தானியாவிடமிருந்தூ:04.02.1948 பரப்பளவு: 65,610 கிமீ² / 25,332 ச்துரமைல் (நீர்-4,4%) மக்கள் தொகை: 2009 மதிப்பீடு 20,238,000 - July 2008 குடிமதிப்பு 21,324,791 நாணயம்: இலங்கை ரூபாய் (LKR) நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி இணையக் குறி: lk தொலைபேசி: +94 மின்னழுத்தம்: 230V அலையெண்: 50Hz புவியியல் வளம் இலங்கை இந்து சமுத்திரத்தில் இந்த…

  14. இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை பேரவை விடுத்த கோரிக்கையை இலங்கை முற்றாக நிராகரித்துள்ளது. இவ்வாறான கோரிக்கையை விடுக்க ஐ.நா மனித உரிமை பேரவைக்கு முடியாது என ஜெனிவாவுக்கான இலங்கையின் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். இலங்கையின் கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் விவாதம் ஒன்று அவசியம் என ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். எனினும் இவ்வாறான கோரிக்கை விடுக்க ஆணையாளருக்கு அதிகாரமில்லை என தமரா குணநாயகம் கூறியுள்ளார். முன்னர் இருந்த பேரவையின் இரண்டுப்பட்ட நிலைப்பாடுகளுக்கு தீர்வாகவே தற்போதை மனித உரிமை பேரவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ச…

  15. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறலுக்கு பொறுப்புக் கூறும் வகையில் சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் உரையாற்றிய மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிரதிநிதி இவ்வாறு வலியுறுத்தினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தி வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐநா கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். அதனால் இலங்கை மீது சர்வதேச விசாரணை, பிரேரணை தேவையில்லை என அவர் கூறியிருந்தார். இறுதிக் கட்ட யுத்தத்தில் முக்கிய பங்கு வகித்த ஜகத் ஜயசூரிய இராணுவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனித …

    • 2 replies
    • 942 views
  16. அமெரிக்கா ஐ.நா.வில் கொண்டுவருவது இலங்கையை காப்பாற்றும் பிரேரணை- இரா.துரைரத்தினம்! Published on February 29, 2012- அண்மைக்காலமாக ஊடகங்களில் முக்கியமாக தமிழ் ஊடகங்களில் பேசப்படும் பொருள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டுவரப்போகிறது, சிறிலங்கா பெரும் நெருக்கடியை சந்திக்க போகிறது என்பதுதான். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா அல்லது அமெரிக்காவின் நேசநாடு ஒன்று முன்வைக்க இருக்கும் பிரேரணை இலங்கைக்கு எதிரானதா? சார்பானதா? என்பதை விளங்கிக்கொள்ளாத பரிதாப நிலையில் தமிழ் ஊடகங்கள் இருக்கின்றனவா? அல்லது சிறிலங்காவின் பிரசாரத்திற்கு சாதகமாக செயற்படுகின்றவா என்பது தெரியவில்லை. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.…

    • 23 replies
    • 1.8k views
  17. ஐ.நா மனித உரிமைச் சபையிக் கூட்டத் தொடரின் இரண்டாவது வார அமர்வின் தொடக்க நாளான இன்று திங்கட்கிழமை, சிறிலங்கா தொடர்பில் இரண்டு உரைகள் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளதென, கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காப் பிரதிநிதியின் உரையும், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் உரையும், சிறிலங்கா தொடர்பிலான அவர்களது இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி நின்றதாக தெரிவித்துள்ளனர். காலை அமர்வின் போதுஎ சிரியா, வட கொரியா மற்றும் ஈரான் குறித்து கருத்துரைத்த அமெரிக்கப் பிரதிநிதி, சிறிலங்கா தொடர்பில் குறிப்பிடுகையில்... சிறிலங்கா அரசாங்கத்தின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக…

  18. சிறீலங்கா அரசு வாக்குறுதிகளை வழங்கிவிட்டது : கருணாரத்ன இந்தியா கேட்டுக்கொண்டதற்கு அமையவே கூட்டமைப்பு ஜெனீவா போகவில்லை என்று சென்ற வாரம் குறிப்பிட்டவர் விக்கிரமபாகு கருணாரத்ன. இப்போது ஜெனீவா சென்ற மிகிந்த சமரசிங்கா குழு முக்கிய அதிகாரங்களை தமிழருக்கு வழங்குவதாகக் கூறிவிட்டு வந்துவிட்டது. இதனடிப்படையிலேயே மற்றய விடயங்கள் நடக்கின்றன என்றுள்ளார். மேலும் மாவை சேனாதிராசா பேசும் போது அக புற காரணங்கள் என்று சுருட்டி விட்டுள்ளார். இதுவும் இந்தியாவின் வேண்டுதலால் வந்த விளைவே என்பது அவருடைய உரையில் வெளிப்படையாக தெரிகிறது. ஜே.வி.பி சோமவன்ச கூறும்போது அரசாங்கம் உள்நாட்டில் ஒரு நாடகமும் வெளி நாட்டில் இன்னொரு நாடகமும் நடாத்துவதாக கூறியுள்ளார். கூட்டிக் கழித்து பார்த்தால் அரை …

    • 2 replies
    • 1.1k views
  19. ஐ.நா சபையிடம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக நீதிக்கான நடைப்பயணம் மேற்கொண்ட மூவரும் இன்று முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களை சந்தித்த அவர்கள் தாம் நடந்து வந்த நோக்கத்தை கூறி, ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினைக் கையளித்தனர். இன்று பிற்பகல் 01:50 மணியளவில் ஜெனிவாவின் தொடரூந்து நிலையத்தில் இருந்து எழுச்சிப் பேரணி சிங்கள அரசின் இன அழிப்புக் குறித்த புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பாதாகைகள் ஏந்திய வண்ணம் ஐ.நாவை நோக்கிச் சென்றனர். தமீழிழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களை தாங்கிய வண்ணமும் எங்கள் தலைவன் பிரபாகரன், எங்களுடைய நாடு தமிழீழம் என்ற கோசங்கள் எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான தமிழ்…

  20. 53 இஸ்லாமிய நாடுகள் பேரவை இலங்கையை ஆதரிக்க தீர்மானம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நேற்றுத் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு 53 இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய மாநாட்டுப் பேரவை (ஓ.ஐ.சி) முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கென விசேட தீர்மானமொன்றை நிறைவேற்றி அத்தீர்மானத்தை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போதே இஸ்லாமிய மாநாட்டு பேரவை…

    • 12 replies
    • 1.8k views
  21. ஜெனிவா மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கப்படும் தீர்மானம், இலங்கை அரசுடனான பேச்சுக்களை பாதிக்காதென இரா சம்பந்தன் தெரிவித்தார். ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைச் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்துமென கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். ஜெனிவா விவகாரத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பக்குவமாக கையாள்கிறதென சம்பந்தன் கூறியதாக கொழும்பில் இன்று வெளியான சிலோன் ருடே என்ற ஆங்கில நாளேடு தெரிவிக்கிறது. வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு சம்பந்தன் வழங்கிய சிறப்பு செவ்வியின் விபரம் சிலோன் ருடே ஆங்க…

    • 2 replies
    • 938 views
  22. வடக்கில் 25 சிறார் கடந்த வருடம் கடத்தப்பட்டனர் என முறைப்பாடு; 16 சிறார்கள் மனநிலை பாதிப்பு வடமாகாணத்தில் கடந்த வருடம் 25 சிறார்கள் கடத்தப்பட்டுள்ளனர். 16 சிறார்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். 23 சிறார்கள் தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். வடமாகாண நன்னடத்தைச் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மட்டுமே இந்த எண்ணிக்கை என அதன் ஆணையாளர் ரி.விஸ்வரூபன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது : கடத்தப்பட்ட சிறார்களில் 20 பேரை "குறிப்பிட்ட சிலர்' கடத்தியிருப்பார்கள் என்று கடத்தப்பட்டவர்களின் உற வினர்கள் மற்றும் பிறரால் சந் தேகம் தெரிவிக்கும் வகை யில் அமைந்துள்ளன. ஏனைய 5 சிறார்களும் கடத்தப்பட்டிருக்கின்…

    • 0 replies
    • 467 views
  23. மனித உரிமை மேம்பாடு தொடர்பான ஆலோசனைகைள இலங்கை அரசாங்கம் சாதகமாக நோக்க வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட வேண்டுமென இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது. மனித உரிமை தொடர்பான கடப்பாடுகளை உறுப்பு நாடுகள் சரியான முறையில்பின்பற்ற வேண்டும் என்பதே பிரித்தானியாவின் உறுதியான நிலைப்பாடு என தூதரகப் பேச்சாளர் சாராஹ் மேன் தெரிவித்துள்ளார். மனித உரிமை நிலைமைகளில் மேம்பாடு ஏற்படுத்தப்பட வேண்டிய நாடுகளில்ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்வதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது தொடர்பில்வழங்கப்…

  24. கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாத எதிர்வாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன. யாழ்ப்பாண அரசின் தோற்றம் யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களில் ஒன்றான வையாபாடல் இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 என்று கூறுகிறது. இன்னொரு நூலான வைபவமாலை இவ்வரசு கி.பி. — யில் தொடங்கியதாகச் சொல்கிறது. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என…

    • 0 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.