Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க தேவையில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது மனித உரிமைகள் தொடர்பில் உள்நாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையாகும் இந்தநிலையில் இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை எனவும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார…

  2. யாழ். மாநகர சபையின் உறுப்பினரான சு.நிசாந்தன் சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். அவர் உறுப்பினர் பதவி வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணத்தால் அவர் சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக யாழ். மாநகர சபையின் தெரிவத்தாட்சி அலுவலரினால் யாழ். மாநகரசபை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனையடுத்து இன்று முதல் நிசாந்தன் சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிசாந்தன் ஈ.பி.டி.பி கட்சி சார்பில் மாநகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆயினும் அவர் அக்கட்சியின் கொள்கைக்கும் சபை நடவடிக்கைக்கும் எதிராகச் செயற்படுவதாகக் கூறி அக் கட்சியின் தலைமை அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலி…

  3. Boycott SL, TN campaign organizer Rajkumar went and met the officer incharge of Tamilnadu Civil Supply Corporation and gave the attached memo and successfully convinced the officer to order not to buy products from SL. Kudos to Rajkumar Palanisamy and friends for taking this action to remove the products made in SL. Thank you! Rajkumar's facebook page https://www.facebook...100000145796525 ----------- தோழர் ஒருவர் (படத்தில் உள்ளவர்) எனக்கு அலைபேசியில் அழைத்து , இலங்கை பொருட்கள் தமிழ்நாடு நுகர்வோர் வணிகக் கடையில் (TUCS ) விற்பனைக்கு உள்ளன என தகவல் கொடுத்தார் . அந்த பொருட்களையும் விலைக்கு வாங்கி என்னிடம் கொடுத்தார். உடனே நாம் களத்தில் இ…

  4. இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தீர்வு ஒன்றை முன்வைத்துள்ளார். த ஹிந்து பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, வாரத்தின் ஏழு நாட்களில், மூன்று நாட்கள் தமிழக மீனவர்களும், மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களும், இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கப்படுவர். ஒருநாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்படும். இந்த தினங்களில், இரண்டு நாட்டு மீனவர் களும் இருநாட்டு எல்லைகளையும் மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடமுடியும். இதற்கு இரண்டு அரசாங்கங்களும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் தமது திட்டத்தில் விளக்கமளித்துள்ளார். இதேவேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம், இன்…

  5. சர்வதேச விருதுகள் வென்ற நோர்வே நாட்டு திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான Beate Arnestad இலங்கையில் இருந்து உயிராபத்து காரணமாக வெளிநாடு சென்று – மறைந்து வாழ்கின்ற தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் குறித்து ஆவண திரைப்படம் ஒன்றை புதிதாக எடுத்து உள்ளார். இப்படத்துக்கு ‘Silenced Voices – Tales of Sri Lankan Journalists in Exile,’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஊடக அடக்குமுறையை இப்படம் வெளிப்படுத்துகின்றது. ஹிரு வார வெளியீட்டின் ஆசிரியராக இருந்த பசன அபேவர்தன, பி.பி.சியில் இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பான செய்தியாளராக இருந்த பிரான்சிஸ் ஹரிசன், நோர்வே நாட்டு ஊடகவியலாளர் ரொம் ரொடோய் ஆகியோர் இப்படத்தில் தோன்றி கருத்துக் கூறி உள்ளன…

    • 1 reply
    • 1.3k views
  6. ஹெய்டியில் இடம்பெற்ற சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு ஐ.நா உத்தரவு! ஹெய்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படையினர், சிறுவர்கள் மீது மேற்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை உத்தரவிட்டுள்ளது. ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இவ்விவகாரம் குறித்த அறிக்கை சமர்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த விசாரணைக்கான உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெய்டியில் ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்திருந்த சிறிலங்காவின் மூன்று அதிகாரிகள் உட்பட 114 படைத்தரப்பினர் மீது சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறு…

    • 2 replies
    • 1.1k views
  7. '13 பிளஸ்' எனப்படுவது செனட் சபைதான்! - இந்தியாவுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அறிவிப்பு!! சிறிலங்காவின் அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்துக்கு மேலாக (13+) என்று சொல்வது செனட் சபையைத் தான் என சிறிலங்கா அரசாங்கம் இன்று மீண்டும் தெரிவித்திருக்கின்றது. சிறிலங்கா அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று வியாழக்கிழமை உரையாற்றிய சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, '13 பிளஸ் எனக் கூறப்படுவது செனட் சபையாகும். இது தொடர்பாக இந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது' எனக் குறிப்பிட்டார். 13 பிளஸ் என்பது தொடர்பாக குழப்பான அறிக்கைகள் வந்து கொண்டிருப்பதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ப…

    • 2 replies
    • 1.2k views
  8. பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த இருதயநாதர் மேரி டிலக்சனா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அல்வாய் வடக்கு றோ.க.த.க. வில் கல்வி பயிலும் இந்த மாணவியின் சடலம் நேற்று இரவு அவரது வீட்டுக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்கோட்டை பழைய வேதக் கோயிலடிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இருந்தே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.மாணவி தன…

    • 2 replies
    • 1k views
  9. பண்டத்தரிப்பில் நேற்று இரு மனிதர்களின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன.சிறீலங்கா படையினரின் முன்னாள் மண் அணைக்கு அருகாக இருந்த கிணறு ஒன்றினுள் இவை காணப்பட்டன. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இளவாலை பண்டத்தரிப்பு பிரதான வீதியில் ரேஞ்ச் அடி என்ற இடத்தில் இருந்து இந்த இரு எலும்புக்கூடுகளும் இளவாலைப் காவல்துறையினர் மீட்டுள்ளார்கள். சில மாதங்களுக்குள் இறந்தவர்களுடைய எலும்பு எச்சங்களாக இவை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றபோதும், முழுமையான உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்பே அதனை உறுதிப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். கிணற்றில் நீர் வற்றி விட்டதால் அப்பகுதி விவசாயிகள் அதனைத் துப்புரவு செய்தனர். கிணற்றினுள் இறங்கியவர்கள் அதற்கு மனித மண்டையோடு…

  10. கிளிநொச்சி, முரசு மோட்டை, சேத்துக்கண்டி முருகன் கோவிலுக்கு முன்பாகவுள்ள இந்துக்குருக்கள் வீடு ஒன்றில் “பிஸ்ரலுடன்’ புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 09 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது: கத்தி, கைத்துப்பாக்கி (பிஸ்ரல்) என்பவற்றுடன் முகத்தை கறுத்தத் துணியால் மறைத்துக் கட்டிய முகமூடிக் கொள்ளையர்கள் குறித்த வீட்டுக்குள் நுழைந்தனர். வயது முதிர்ந்த தாய் மற்றும் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை தரும்படி அவர்கள் மிரட்டினர். பயந்துபோய் செய்வதறியாது நின்ற அவர்கள் தம்மிடமிருந்த 20 பவுண் நகை மற்றும் 3 ஆயிரம் ரூபா பணம் என்பவ…

  11. ஜெனீவாவில் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டாது என்று வோஷிங்ரனில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பாதிக்கப்பட்ட தமிழர்களே சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றைக் கேட்காத நிலையில் அத்தகைய விசாரணை ஒன்றுக்கு அமெரிக்கா உடனடியாக அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளில் பலரும் ஆலோசகர்களில் பலரும் ஆலோசனை கூறியிருக்கிறார்கள். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற மேற்கு நாடுகள் முயற்சிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அ…

    • 3 replies
    • 760 views
  12. சிறி லங்கா ஒரு குற்றவாளி நாடு! இதை நாங்கள் சொல்லவில்லை-ஐக்கிய நாட்டு சபையில் காரியதரசி திரு பான் கி மூன் அவர்கள் விசாரணை குழு ஒன்றை நியமித்து அதன் மூலம் சொன்னார், அமெரிக்க சொல்கிறது- கனடா சொல்கிறது- பிரிட்டின் சொல்கிறது- பிரான்ஸ் சொல்கிறது, பாதுகாப்பு சபையில் இருக்கும் மூன்று நாடுகள் சிறி லங்காவில் நடைபெற்ற இறுதிகட்ட போரில் நடந்த படுகொலைகள் பற்றி சர்வதேச விசாரணை குழு ஒன்று முலம் விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறது. அத்துடன் நிற்காமல் சர்வதேச ஊடகங்கள் கூறுகிறது, சர்வதேச மனித நேய அமைப்புகள் கூறுகிறது, சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கூறுகிறது. சிறி லங்கா அரசின் கற்று அறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறி இருக்கிறா…

  13. குடா நாட்டின் முன்னணி பாடசாலையான யாழ்.மத்திய கல்லூரி அதிபரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலர் முன்னிலையினில் அடிப்பேன் எனக்கூறி எச்சரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது கல்விச் சமூகத்திடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. எதிர் வரும் 6ம் திகதி யாழப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி தனது புதல்வரால் அங்கு கட்டி வழங்கப்பட்ட நீச்சல் தடாகத்தையும் திறந்து வைக்கவுள்ளார். கடந்த ஜந்து வருடஙகளுக்கு மேலாக ஆமைவேகத்தில் கட்டப்பட்டு வரும் நீச்சல் தடாக வேலைகளை விரைந்து முடிக்க ஜனாதிபதி நேரடி உத்தரவை பிறப்பித்துள்ள நிலையினில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உசாரடைந்துள்ளார். ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு பாடசாலை வளவினுள் அமைந்துள்ள பழைய கட்டிடங்களை உடைத்தெறிய அமைச்சர் டக்ளஸ்…

    • 2 replies
    • 1.5k views
  14. சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கைபடி உலகில் நாலாவது சிறந்த பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக இலங்கை விளங்குவ தாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். தற்போது உலகில் சிறந்த பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக சீனா விளங்குவதாகக் குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ அடுத்த வருடம் இரண்டாம் இடத்தை இலங்கை அடைய முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கையும், சீனாவும் தவிர்ந்த எல்லா நாடுகளதும் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான செய்தியாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது…

    • 3 replies
    • 943 views
  15. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு முதல்வரை சந்திக்கும் நாள் கிழக்கின் கரி நாளாக துக்கதினம் அனுஸ்ரிக்குமாறு கிழக்குப் பல்கலைக் கழக பழைய மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன்னல்கள் இடையுறுகள் மத்தியில் இணைந்த வட- கிழக்கில் அதி உச்ச ஆணையை பல அச்சுறுத்தல் ஆபத்து நிறைந்த சூழலிலும் கூட்டமைப்பிற்கு எமது மக்கள் வழங்கியிருந்தனர். அதிலும் குறிப்பாக கிழக்கு மண்ணில் தமிழர் பிரதிநிதித்துவம் குறைந்ததற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதன் தலைமையும் செய்த அட்டுளியங்களை யாரும் எளிதில் மறக…

  16. வடக்கு கிழக்கு மக்கள் காணி, காவல்துறை அதிகாரங்களை தருமாறு எப்போதும் கோரவில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மட்டுமே காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார். காணி இல்லாதவர்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்குவதுடன், காவல்துறையினரின் பாதுகாப்பையும் வழங்கி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கும் உத்தேசம கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கே காணிமற்றும் காவல்துறை அதிகாரங்கள் தேவைப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர் வடக்கு கிழக்கு மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கு …

  17. அன்புள்ள புலம்பெயர் வாழ் தமிழீழ உறவுகளே: சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 64ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடவிருக்கும் இந்த நாட்களில் ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர். இரத்தக்கறைபடிந்த நாட்களாகவும் தூக்கமின்றிய இரவுகளாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலகத்தமிழினமே உறவுகளின் அழுகுரலோடு கடந்து செல்லும் இந்நாட்களை நாம் வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தால் எங்கள் உறவுகளின் சமாதிகள் ஒன்றையும் கூட சிங்கள பேரினவாதம் விட்டுவைக்கப்போவதில்லை . நாம் அனைவரும் ஒரு முக்கியமான கால கட்டத்தில் எமது வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்க…

  18. தமிழ் நாட்டில் தான் கல்வி பயின்றாலும் தனது கணித பாட ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். thx http://newjaffna.com

  19. கலவரத்தால் பாதிக்கப்பட்ட 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவி தேவை. நேற்றைய தினம் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில் மிகுந்த சிரமத்துக்கு கைதிகள் உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான அவசர தேவைகளாக ஆடைகள் , பற்பசை , சவர்க்காரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை கைதிகள் வேண்டியுள்ளனர்.குடிதண்ணீர் முதற்கொண்டு அடிப்படை வசதிகள் அற்ற நிலமையில் சிரமப்படுகிறார்கள். எனினும் நிதியுதவி எதுவும் எம்மிடம் கையிருப்பில் இல்லாமையால் புலம்பெயர் உறவுகளிடமிருந்து அவசரமான இவ்வுதவியை வேண்டி நிற்கிறோம். நாளைய தினம்…

    • 14 replies
    • 1.2k views
  20. வடக்கின் கண்ணிவெடி பிரதேசங்கள் 6 சதவீதமாக குறைப்பு! வடக்கில் கண்ணிவெடி காணப்படும் மொத்த நிலப்பரப்பினை (2,061 Sq Km), கடந்த ஆண்டின் இறுதியில் ஆறு சதவீதமாக (126 Sq Km) குறைக்க முடிந்துள்ளதாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்துள்ளது. வட மகாணத்தின் மொத்த நிலப் பரப்பில் (8,290 Sq km) சுமார் 24 சதவீதத்திற்கும்மேலான நிலங்களில் (2,061 Sq km) கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டிருந்தன. இவற்றை அகற்றவென, இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவுடன் சேர்ந்து இரண்டு உள்நாட்டு நிறுவனங்களும், ஆறு வெளி நாட்டு நிறுவனங்களும் களத்தில் பணியாற்றி வருகின்றன. அத்துடன், அரசு கொள்வனவு செய்த 39 கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. …

  21. இலங்கையில் வாழ்க்கைச் செலவு கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம் இலங்கையில் ஆகக் கூடிய வாழ்க்கைச் செலவு கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக குடிசன மதிப்பு புள்ளிவிபரத் தினைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகள் காட்டுகின்றன. இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனிநபர் ஒருவர் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்தபட்ஷம் 3,307 ரூபாவினை செலவு செய்ய வேண்டி இருந்தது. எனினும், இது மாவட்டங்களைப் பொறுத்து வேறுபட்டதுடன், தனிநபர் வாழ்க்கைச் செலவு ஆகக் கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம் (ரூபா.3,555) காணப்படுவதனை புள்ளிவிபரத் தரவுகள் காட்டுகின்றன.(www.statistics.gov.lk/poverty/monthly_poverty/index.htm) இதற்கு, பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யா…

  22. முன்னாள் போராளி- மனைவி- தற்கொலையும் மர்மங்களும்-குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் வாழ்க்கை வெறுத்துவிட்டது அதனால் குறுணல் நஞ்சைக் குடித்து தற்கொலை செய்கிறோம் என்று குறிப்பிட்டு முன்னாள் போராளியும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணியில் வறுமை காரணம் அல்ல என கண்டறியப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, முள்ளியவளை என்ற முகவரியைச் சேர்ந்த 29 வயதான நிரஞ்சனும் 27 வயதான சங்கீதாவும் இவ்வாறு தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தமது மரணத்திற்கான காரணமாக வாழ்க்கை வெறுத்து விட்டதால் இந்த முடிவுக்கு வந்ததாக குறித்த முன்னாள் போராளியும் அவரது மனைவி சங்கீதாவும் தமது மரண சாசனத்தில் குறிப்பிட்டுள்ளனர். எதற்காக வ…

    • 18 replies
    • 2.4k views
  23. முழங்காவில் - முழங்காவிலில் உள்ள அரச மருத்துவமனையில் ஒரு சிங்கள இளைஞரே மருத்துவராக கடமையாற்றுகிறார். அங்கே தமிழ் மருத்துவர்கள் இல்லை. இருக்கின்ற மருத்துவருக்கு தமிழ் ஒழுங்காகத் தெரியாது. மக்களுக்கோ சிங்களம் சரியாக விளங்காது. இந்த நிலையில்தான் நோயாளிகளுக்கும் மருத்துவருக்கும் இடையில் உறவும் மருத்துவமும் நிகழ்கின்றன. அக்கராயன் - அக்கராயனில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவரே இல்லை. இதுதான் மூன்றாம் கட்ட யுத்தகாலத்தில் வன்னியில் இயங்கிய தலைமை மருத்துவமனை. கிளிநொச்சியில் இயங்கிய மாவட்ட வைத்தியசாலை இந்த மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டன. ஆனால், இப்போது இந்த மருத்துவமனை வளாகத்தில் மாடுகள் படுத்து உறங்குகின்றன. இந்த மருத்துவமனைக்கு ஒரு நிரந்தர மருத்துவ…

    • 5 replies
    • 706 views
  24. தென்மராட்சியின் மறவன்புலோ- தனங்களப்பு பகுதியில் கடந்த நவம்பர் மாதமளவில் காணாமல் போயிருந்த யுவதியொருவர் இரண்டு மாதங்களின் பின்னர் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார். 28 வயதுடைய சுபபிரமணியம் அற்புதமலர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் நவம்பர் 13ம் திகதியளவில் இவர்; வீட்டிலிருந்து வெளியே சென்ற வேளை காணாமல் போயிருந்ததாக குடும்பத்தவர்களால் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இக்காணாமல் போதல் தொடர்பில் அவர்கள் பொலிஸ் நிலையத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளையும் செய்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட அறுகுவெளி-கேரதீவு பகுதியில் வேட்டைக்கு சென்ற சிலர் கைவிடப்பட்ட இராணுவ மண் அணை ஒன்றினை அண்மித்த பகுதியில…

  25. அண்மையில் தமிழ் பேசும் புத்திசீவிகள் என்போர் (சிங்கள அரசு ஆதரவாளர்கள்.. மற்றும் அதன் தமிழ் கொலைக்குழு ஆதவாளர்கள்) வெளியிட்ட சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களை ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக தூண்டி விடும் அறிக்கை தற்போது செயல் வடிவம் எடுத்துள்ளது. இதன் கீழ் அண்மையில் முஸ்லீம் அரசியல்வாதி ஒருவரின் வழிகாட்டலின் கீழ் ஈழத்தின் வடக்கு மன்னாரில் தமிழ் மக்கள் சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களால் வீதி அபிவிருத்தி என்ற போர்வையில்.. வீடுகளை விட்டு வெளியேற பணிக்கப்பட்டனர். தற்போது ஈழத்தின் கிழக்கில் மட்டக்களப்பில் இருந்தும் தமிழ் மக்களை வெளியேற்ற... சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களின்.. நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற அடாவடித்தனங்கள் 1990 இலும் சிங்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.