Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வல்வெட்டித்துறையெங்கும் இன்று படைத்தரப்பு காட்டிய உச்சபட்ச கெடுபிடிகளால்; மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டனர் இலங்கை அரசின் கல்வி அமைச்சு தேசிய சத்துணவு வழங்கும் திட்டம் நிகழ்வினை பெரும் பிரச்சாரங்களுடன் இன்று வல்வெட்டித்துறையினில் நடாத்தியிருந்தது. நிகழ்விற்காக ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ மற்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனா ஆகியோர்; சென்றிருந்தனர். வழமையாக யாழ்ப்பாண நிகழ்ச்சிகள் எதனையும் தவற விடாத உள்ளுர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சந்திரசிறி ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். வல்வெட்டித்துறை சிவகுரு மகாவித்தியாலயம் இதற்கென தெரிவு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களது விஜயத்தை முன்னிட்டு க…

  2. நாட்டில் அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் இணைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி செய்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார். மக்களை விழிப்புணர்வடையச் செய்யும் முயற்சிகளுக்கு அரசாங்கம்,காவல்துறை மற்றும் இராணுவத்தைப் பயன்படுத்தி இடையூறு ஏற்படுத்தி வருவதாகக் குற்றம்சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடத்தல் மற்றும் கைதுகளுக்கு எதிரான ஒன்றிணைந்த அமைப்பு ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளைஇராணுவமும் காவல்துறையினரும் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். ஐந்து தடவைகள் யாழ்ப்பாணத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகக்குறிப்பிட்டுள்ளார். போராட்டங்களை தடு…

  3. ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் புறக்கணித்தது குறித்து, ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தலைவர்கள் ஏமாற்றம் வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 8ம் நாள் நடைபெற்ற இந்த விழாவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பி வைக்கவில்லை. உலகத் தமிழர் பேரவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்தப் புறக்கணிப்பை மேற்கொண்டது. இருந்த போதிலும் கடைசி நேரத்தில் தென்னாபிரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதுவர் செகான் ரத்னவேலை சிறிலங்கா அரசாங்கம் விழாவுக்கு அனுப்பி வைத்தது. இந்தவ…

  4. கொழும்பு: நடிகர் தனுஷ் 'சுத்தத் தமிழில்' எழுதிப் பாடி தரணியெங்கும் புற்றுநோய் போல பரவி விட்ட ஒய் திஸ் கொலை வெறிப் பாடலை மேற்கோள் காட்டி இலங்கை நாடாளுமன்றத்தில், இலங்கை ஆளும் கட்சி எம்.பி ஒருவர் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும், முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியையும் சாடிப் பேசியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் கலந்து கொண்டு அந்த நாட்டு ஆளும் கட்சி எம்.பியான அஸ்வர் என்பவர் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டுகாரர்களுக்கு கொலை வெறி பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் இன்று கொலை வெறி கொலை வெறி என பாடல்களில் கூட பாடுகின்றனர். இந்தக் கொலை வெறி பாடலுக்கு எமது யாழ்ப்பாண இளைஞன் பதிலடி கொடுத…

  5. 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார். அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் என்னென்ன விடயங்களைப் பகிர்வது என்பது பற்றித்தான் இனித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேசும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்றுமுன்தினம் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வை முன்வைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்திருந்தார். இக்கருத்துத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப…

  6. இலங்கை இராணுவம் வணிக நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை இராணுவம் தனியான வணிக நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். அத்தகைய நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கினாரென அவர் குறிப்பிட்டார். அத்தகைய அமைப்பொன்றை உருவாக்குவதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதெனவும், இராணுவத்தின் கீழான தனிப் பிரிவாக அந்த கம்பனி செயற்படுமென எதிர்பார்;ப்பதாகவும் ஜகத் ஜயசூரிய கூறினார். அத்தகைய நி…

    • 0 replies
    • 436 views
  7. 16.01.2012 இன்று மாலை 3.30 மணியளவில் வடமராட்சி இன்பர்சிட்டி கடல்பரப்பில் அதிசியம் ஒன்று நிகழ்ந்துள்ளது ஒரு மர்ம பொருள் ஒன்றில் இருந்து சிவப்பு நிறத்தில் புகை மண்டலமாக சில மணி நேரம் வரை வெளியே வந்தவண்ணம் இருந்தது . இதனைப்பார்த்து மக்கள் அனனவரும் ஒருவித அச்சத்தில் காணப்பட்டனர் . குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் படகில் சென்று அதனை மீட்டு வந்துள்ளனர் . இதோ அந்த மர்ம பொருள் . thx http://newjaffna.com

  8. காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி முல்லைத்தீவு பகுதி மக்களிடம் கப்பம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஜா-எல – மாபிம – மகேவிட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் குறித்த பெண் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலக தகவல்படி தெரியவருவதாவது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராம சேவையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் குறித்து தகவல் பெற்றுள்ளார். அதன் பின்னர் குறித்த உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு காணாமல் போன உறவினர்களை கண்டுபிடித்து…

  9. இன்றைய சிறிலங்கா அரசியலில் பிரதான பேசுபொருள்களாக இருக்கும் விடயங்களில் ஒன்று, தமிழ்தேசியக் கூட்டமைப்புடனான சிறிலங்கா அரசின் பேச்சுவார்த்தை. இலங்கைத்தீவில் தனி அடையாளங்களுடன் வாழ்ந்த இரு இனங்களில் ஒன்றான தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருக்கின்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் சிறிலங்காவின் அரசியல் தலைமைகளிடமிருந்து பல்வேறு வகையான காட்டமான கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஜனாதிபதி ராஜபக்ச தொடக்கம் அவரது அரசியல் சகபாடிகள் வரை தெரிவிக்கும் கருத்துக்கள், வழமையான சிங்களப் பேரினவாத சிந்தனையாகவும் சிங்கள மனோநிலையைக் கையாள்வதற்கான தந்திரோபாயமாகவும் பார்க்கப்ப…

  10. சிறீலங்கா அரசானது மனிதவுரிமை விவகாரங்களில் எதிர்வரும் காலங்களில் முன்னேற்றம் கண்டு, தமிழர்கள் ஒற்றுமையாக வாழ வழியேற்றபட்டால் அங்கு இடம்பெறவுள்ள மாநாட்டை கனடியப் பிரதமர் புறக்கணிப்பதைத் தவிர்க்கலாம் எனத் தெரியவருகிறது. அண்மையில் சிறீலங்காவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று வந்ததைத் தொடர்ந்து இந்த விடயம் தற்போது பெரிதாகப் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யதார்த்தம் யாதெனில் ஐம்பத்து நான்கு நாடுகளை உறுப்புரிமையாகக் கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கனடியப் பிரதமர் கலந்து கொள்ளாவிட்டால் அது சிறீலங்காவை விட கனடாவிற்கே அதிக பாதிப்பாக அமையும் என்பதை கருத்திற் கொண்டே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் காலணித்துவத்தின் கீழிருந்த இ…

  11. இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் செனற் சபை ஒன்று அமைக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாண சபைகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நிர்வாக இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செனற் சபை அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளை செனற் சபையில் உள்வாங்குவதன் மூலம் ஜனநாயகத்தை பேணிப் பாதுகாக்க முடியும் எனவும் பாராளுமன்றில் நாடு தொடர்பான அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்படும் வகையில் இந்த செனற் சபை உருவாக்கப்படவுள்ளத…

  12. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், புகழ்பெற்ற அணுசக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நாளை இலங்கை வரவுள்ளார். இலங்கை வரும் இவர் 21ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் மும்மொழி செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். நாளை மாலை இலங்கை வரும் அப்துல் கலாம், மும்மொழித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் அதேவேளை, அன்றையதினம் பண்டாரநாயக்க சர்வ தேச மாநாட்டு மண்டபத்தில் மாண வர்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் கருத்துரை வழங்கவுள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். இலங்கை வரும் புகழ்பெற்ற விஞ்ஞானியான அப்துல் கலாம், தொழில்நுட்பம், விஞ்ஞான உற்பத்தி, நவீன உற்பத்தி போன்றவற்றின் ஊடாக இந்தி…

    • 4 replies
    • 891 views
  13. அரசு தொடர்ந்தும் ஏமாற்றுமாக இருந்தால் தாயக மற்றும் புலம்பெயர் மக்களை அணிதிரட்டி போராடுவோம்: அரியநேத்திரன் இலங்கை அரசு தொடர்ந்து பேச்சுமூலம் எங்களை ஏமாற்றுமாகவிருந்தால் வடக்கு, கிழக்கு மக்களுடன் புலம்பெயர்ந்த மக்களையும் அணிதிரட்டி மாபெரும் அகிம்சை ரீதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை வடக்கு கல்விப் பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தில் நடந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக உதயன் செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு உரையாற்றிய அவர் …

  14. இந்திய அரசாங்கம் வெளிநாடுகளுக்கான உதவிகளில் இலங்கை அரசாங்கத்திற்கே அதிக உதவிகளை செய்துள்ளது மேலும் உதவிகளை வழங்குமென்று யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்தார்.யாழ்.பொது சன நூலகம் முன்பதாக அமைக்கப்பட்டிருந்த விசேட அரங்கினில் எஸ்.எம் கிருஸ்ணா உரையாற்றுகையிலேயே இத்தகவலை வெளியிட்டார். மேலும் அங்கு உரையாற்றுகையில் இந்திய வீட்டுத்திட்டத்திற்காக இந்திய அரசு 270 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கின்றோம். இந்திய அரசினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் சோனியா காந்தி அம்மையாரும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கூடிய ஆர்வம் காட்டி வருவத…

    • 10 replies
    • 897 views
  15. அரசு - கூட்டமைப்பு பேச்சில் மூன்றாம் தரப்பாக இந்தியா செயற்பட வேண்டும்: யாழ். ஆயர் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தராக இந்தியா செயற்பட வேண்டும் என யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயம் ஆண்டகை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ்பாணத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் கலந்துகொண்டார். இதன்போதே யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயம் இந்த வேண்டுகோள் அடங்கிய மகஜரொன்றை இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கை…

  16. இலங்கையிலிருந்து சீனாவை வெளியேற்றியே ஆகவேண்டும்!- இந்தியாவிற்கான முன்னாள் அமெரிக்க துணைத் தூதர் சீனாவுக்கொரு சிம்மன சொப்பனம்- அமெரிக்காவின் ஆசைக்கனவு – அடுத்த உலக வல்லரசாக இந்தியா ! இது 1990களில் இந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத்தூதராக சென்னையில் பணிபுரிந்த முன்னாள் இராஜதந்திரியும் இந்நாள் வர்த்தகருமாகிய வில்லியம் எச்.எவரி அவர்களினால் எழுதப்பட்டுள்ள நூலொன்றின் முகப்பு. இந்திய பதிப்பமொன்றின் ஊடே இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலில்… ‘இந்தியா தனது பாதுகாப்புச் செலவை அதிகரித்தாக வேண்டும்’ ‘இலங்கையிலிருந்து சீனாவை வெளியேற்றியே ஆகவேண்டும்’ ‘பனிப்போர்க்காலத்தில் சோவியத்யூனியன் பின்லாந்தைத் தன் காலுக்குக் கீழ் போட்டுக்கொண்டதுபோல் இந்தியாவும் இலங்கையை…

  17. அலரி மாளிகையில் தைப்பொங்கல் விழாவில் பங்கேற்றது தனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் பிற்பகல் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் அன்று மாலை அலரிகையில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் பங்கேற்றார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட எஸ்.எம்.கிருஸ்ணா, "சிறிலங்கா அதிபர் ஒரு நல்ல பண்பாளர் என்பதை நேற்று [திங்கள்] நடந்த ஒரு சம்பவம் மூலம் நான் புரிந்து கொண்டேன். நேற்றுக்காலையில் அலரி மாளிகையில் தைப்பொங்கல் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மாலையில் தான் நான் கொழும்பு வந்து சேருவேன் என்பதை அறிந்து …

    • 9 replies
    • 1.5k views
  18. வட தமிழீழத்தில் ஆளுமைய நிலைநிறுத்த முனையும் இந்தியா தமிழர் தாயக வடபுலத்தில் தனது ஆளுமையை நிலை நிறுத்த முனையும் இந்தியா, 900 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் ஒன்றினை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. யாழ்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரின் பயணத்தின் போதே, இதனை உத்தியோகபூர்வமாக இந்திய உயர் காரியாலயம் அறிவித்துள்ளது. http://naathamnews.com/2012/01/18/india-in-eelam/

  19. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள "நீர்க்காக தாக்குதல்" இராணுவப் பயிற்சி நடவடிக்கையில் பங்குபற்றுமாறு நான்கு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் சிறப்புப் படையணிகளைச் சேர்ந்த 68 பேர் இலங்கையின் இராணுவ கமாண்டோக்கள் மறறும் விசேட படைகளுடன் இணைந்து இப்பயிற்சிகளில் பங்குபற்றவுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் இராணுவ கமாண்டோக்கள் 1600 பேர் உட்பட முப்படைகளையும் சேர்ந்த 2500 படையினர் இதில் பங்குபற்றுவர். இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சி நடவடிக்கை 2010 ஆம் ஆண்டுமுதல் வருடாந்தம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. முன்னர் திருகோணமலையில் இப்பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் …

  20. மன்னார், வவுனியா மாவட்டங்களில் தற்போது இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகள் இடம் பெற்றுவருவதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற போது இந்த தகவலை அமைச்சர் தெரிவித்தார். அதேபோன்று, மேலும் பல தொழிற்சாலைகளை இந்த மாவட்டங்களில் ஸ்தாபிப்பது குறித்து முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். முல்லைத் தீவு மாவட்டத்திலும் பல கைத்தொழில் பேட்டைகளை ஏற்படுத்த நடவ…

  21. இந்திய லோக்சபா எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றுடன் விரைவில் இலங்கை வருவார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்துள்ளார். சுஸ்மா சுவராஜ் கடந்த வருடம் இலங்கை வரவிருந்த நிலையில் இந்திய அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக அவரது விஜயம் திட்டமிட்டபடி அமையவில்லை. எனினும் இந்திய மாநில சட்டமன்ற தேர்தல் திறைவுற்றதன் பின் சுஸ்மா சுவராஜ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இலங்கை வருவார் என கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் தமது தமிழ்நாட்டு விஜயத்தின் போது அதிக கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.saritham.com/?p=48042

  22. கூட்டமைப்புடன் அரசின் பேச்சுவார்த்தைகள் தொடருமா? இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுமா என்பது குறித்து கேள்விக் குறிகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இலங்கையில் இருக்கும் வேளையில், இம்மாதம் 17 ஆம் தேதி(செவ்வாய்கிழமை) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை. திட்டமிட்டபடி தமது தரப்பினர் கூட்டத்துக்கு வந்த போதிலும், அரசு தரப்பிலிருந்து யாரும் வரவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா சம்பந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார். அரசால் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெ…

  23. 13 வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வை ஏற்போம்! கிருஷ்ணாவுடனான சந்திப்பில் ரணில் உறுதி அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் அடிப்படையில் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பது தொடர்பாக சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது முக்கியமாக ஆராயப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்காவுக்கான நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று செவ்வாய்கிழமை மாலை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் …

  24. சிங்கள தேசத்துக்கு எதிரான தமிழர்களின் இராஜதந்திரப் போரின், முக்கிய சமர்களமாக எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரினை கருதுவோம். இக்கூட்டத் தொடரில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்ட உறுதியெடுப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. நா.த.அரசாங்கத்தின் போர்குற்றம்- மனித உரிமைகள் – மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் இன்று (18-01-2012) புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.. http://naathamnews.com/2012/01/18/tgte-hrc/

  25. முள்ளியவளை கணுக்கேணிப்பகுதியில் வறுமை காரணமாக கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கணுக்கேணி குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்களான கணவனும் மனைவியும் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.29 வயதுடைய சண்முகன் நிறஞ்சன் மற்றும் அவருடைய மனைவியான நிறஞ்சன் சங்கீதா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குடும்ப வறுமை நிலை காரணமாக இவர்கள் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.