ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று தமிழ்க் கூட்டமைப்பினர் கூறுகின்றனர். இணைவதால் கிழக்கு மாகாணத்திற்கு என்ன இலாபம் என்று அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு தொழில் முயற்சிப் பொருட்களும் தொழில் முயற்சிக்கான காசோலைகளும் வழங்கும் நிகழ்வு பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,வடக்கும் கிழக்கும் தனித் தனியாக இருப்பதால் இரண்டு மாகாணங்களுக்கும் இரண்டு முதலமைச்சர் வருவர். அவ்வாறு இல்லாமல் தமிழ் க…
-
- 4 replies
- 1k views
-
-
அமைதித் தீர்வு தொடர்பாக இந்தியா வெளியிட்டிருக்கும் கருத்துகளை இலங்கை அரசு முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும் ,இறுதிப் போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றிருக்குமானால் அது குறித்து விசாரணை நடத்த எப்போதுமே தயாராக இருப்பதாகவும் இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு: நியாயமான அரசியல் தீர்வொன்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை வழங்குவதில் எமது அரசு உறுதியாக இருக்கின்றது. எமது இந்த நிலைப்பாட்டை இந்தியாவும் மதிக்கின்றது. அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சு நடத்தி நாம் நிச்சயமாக…
-
- 2 replies
- 830 views
-
-
A Counterfeit Guerrilla: A tale of Lies by SoCalled Tamil Tigress Niromi de Soyza The objective of this research note is not only to uncover the truth or otherwise of the “memoir” by Niromi de Soyza (nom de guerre) titled Tamil Tigress: My story as a child soldier in Sri Lanka’s bloody civil war, but to go beyond and investigate the purpose/s of publication of her “personal story” and reason/s for hiding her real name and identity. This research note is based on the reading of the book under scrutiny in its entirety, promotional blurbs and reviews of the book by journalists in Australia, critical reviews of the book by two persons of Sri Lankan origin living in …
-
- 3 replies
- 1.9k views
-
-
அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து இலங்கையர்களுக்கு விசா வழங்கும் முறையை இந்தனேஷியா இலகுவாக்கவுள்ளதாக ஜகார்த்தா போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு விஸா வழங்குவதை இலகுவாக்க உள்ளதாக இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். 13 நாடுகள் கொண்ட சிவப்பு பட்டியலில் இலங்கையையும் இந்தனேஷியா அடக்கியிருந்தது. இந்த 13 நாட்டவர்களாலும் இந்தனேஷியாவில் சட்டம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படலாம் என இந்தனேஷியா கருதியது. எனினும், இலங்கையில் தற்போது பாதுகாப்பு மற்றும் பொருளாதார சூழல்களில் முன்னேற்றம் கண்டுள்ளதால் இலங்கையை சிவப்பு பட்டியலிலிருந்து நீக்க இந்தோனேஷியா முடிவு செய்துள்ளத…
-
- 0 replies
- 648 views
-
-
அநுராதபுரம் – நாச்சியாதீவுக்குளம் நிரம்பி அதன் 06 வான் கதவுகளும் திறக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியை வள்ளம் ஒன்றில் சுற்றிப் பார்வையிட்ட இலங்கை விமானப் படை ஒருவர் தவறுதலாக நீரில் வீழ்ந்து மூழ்கி மூன்று நாட்களுக்குப் பின்னர் (26) திங்கள் மாலை சடலமாக மீட்கப்பட்டு ள்ளது. விடுமுறை காலங்களில் பலர் நாச்சியாதீவு குளத்துப் பகுதிக்கு வந்து தமது பொழுதைக் கழிப்பது வழக்கம். இதேபோல் இராணுவ வீரர் வள்ளத்தில் இப்பகுதியைச் சுற்றிப் பார்வையிட்ட போது வள்ளம் கவிழ்ந்து நீரில் வீழ்ந்து காணாமல் போயிருந்தார். பின்னர் மீனவரின் வலையில் படை வீரரின் சடலம் சிக்கிய போது மீட்கப்பட்டது. http://www.saritham.com/?p=45555
-
- 0 replies
- 584 views
-
-
2012 ம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் காலடி எடுத்துவைக்க உலகம் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், ஈழத்தில் வாழும் தமிழர்களின் புத்தாண்டு பலகேள்விகளுடன் ஆரம்பிக்கப் போகின்றது. குறைந்தபட்ச அதிகாரங்கள்கூட மறுக்கப்பட்டதால் தோல்வியடைந்த பேச்சுவார்த்தை, சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதை மீண்டும் தெளிவாகப் பறைசாற்றியுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதிலுள்ள பரிந்துரைகளைக்கூட நிறைவேற்றமாட்டோம் என்ற சிறிலங்கா ஆட்சியாளர்களின் பிடிவாதம், எதிர்பார்ப்புக்களுக்கு உள்ளாகியுள்ள ஜ.நா மனித உரிமை சபையின் கூட்டம் போன்ற விடயங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள அதேவேளை, பலவீனமான நிலையில் தொடரும் தாயக மக்களின் வாழ்க்கைக்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை முன்ன…
-
- 0 replies
- 565 views
-
-
இலங்கை அரச பயங்கர வாதத்தினால் தமிழர் தாக பகுதிகள் ஆக்கிரமிக்க பட்டு அங்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளையும் பொதுமக்களையும் நச்சு குண்டின் மூலம் இறுதி முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து அழித்தொழித்த சிங்களம் .. அங்கு பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதிகளில் மக்களை வந்து தங்குமாறு கூறிய அதேவேளை உலக நாடுகளினால் தடை செய்ய பட்ட இராசாயன எறிகுண்டுகளை வீசி பல்லாயிரக்கன்கான மக்களை கொன்றழித்தது . இந்த இன அழிப்பு சிங்கள பேரினவாதத்தினால் இடம்பெற்ற இறுதி வைகாசி பதினேழாம் திகதி அந்த கள முனையில் சிங்கள அரசு வீசிய இரசாயன நச்சு குண்டு தாக்குதலில் சிக்கி உயிர் பிரியும் நிலையில் இருந்து அயல் நாடொன்றுக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று தற்போது புலம் பெயர் நாடொன்றுக்கு தப்பி வந்துள்ள பொது…
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் சென்றிருந்தபோது அங்கு தமக்கு பிறந்த குழந்தைகளுக்கு தாம் இப்போது மீண்டும் இலங்கை திரும்பிவிட்ட நிலையில் அக்குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்கும் விதமான இரண்டு நாள் நடமாடும் சேவை திருகோணமலையில் நடக்கிறது. இந்தியாவில் பிறந்த தமது குழந்தைகளுக்கு இலங்கை சான்றிதழ்களைப் பெறுவதில் தமிழகத்தில் இருந்து இலங்கை திரும்பிய மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வந்துள்ளனர். இவ்வாறு குடியுரிமை சான்றிதழைப் பெறமுடியாத நிலையில், தங்களது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதிலும் அல்லது அடையாள அட்டை போன்றவற்றைப் பெறுவதிலும் இவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர். இவ்வாறு நாடு திரும்பியோரில் 21 ஆயிரம் பேர் வடக்க…
-
- 0 replies
- 587 views
-
-
இலங்கையில் சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வெகு தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பலர் கருதுவதாக அவுஸ்திரேலிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாரியா வம்வாகினோ தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து சகல தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுகு தண்டனை வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். யுத்த வலயத்தில் புனரமைப்பு பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மாரியா தலைமையில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப…
-
- 0 replies
- 662 views
-
-
ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் கடிதம் சந்திரபோஸ் செல்வச்சந்திரன். 33வயது.27.11.2006 கைதுசெய்யப்பட்டு இன்று 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்தோடும் வலியோடும் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அணுவணுவாய் உயிரை அரிக்கிற நோயால் பீடிக்கப்பட்டு சிறைக்கம்பிகளின் பின்னால் வாழ்கிற இந்த மனிதனுக்கு இரக்கம் காட்ட யாருமேயில்லை. இறுதி யுத்தத்தில் செல்வச்சந்திரனின் குடும்பமும் அதிக இழப்புகளைத் தாங்கியிருக்கிறது. வாழப்போகும் தனது மீதி நாட்களில் தனக்காக எதனையும் எதிர்பார்க்காத செல்வச்சந்திரன் வலியிலிருந்து மீளத்தனக்கு மருத்துவம் கேட்கிறார். தனது குடும்பத்திற்கு ஒரு வரு…
-
- 2 replies
- 860 views
-
-
ஆசியாவில் உயர் ஆபத்தை கூடிய நிதிக் கட்டமைப்பை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. நிதி நிலைமைகளை கணிப்பிடும் Fitch Ratings பிட்ச் தரப்படுத்தல் இதனைத் தெரிவித்துள்ளது. பிட்ச் தரப்படுத்தலின் இந்த கருத்தை இலங்கையின் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். ஆனால் பொருளியலாளர்கள் மற்றும் பங்கு சந்தை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இந்த கருத்தை நிராகரித்துள்ளார். குறித்த அறிக்கையில் உயர் ஆபத்தை கொண்ட ஆசிய நாடுகளாக Fitch Ratings குறிப்பிட்டுள்ள இந்திய இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் உயர் உற்பத்திகளை வெளிப்படுத்தி வருவதாக கப்ரால் தமது வாதத்துக்கு ஆதரவாக சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ப…
-
- 0 replies
- 576 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு சர்வதேச அங்கீகாரம் கொடுக்கும் வகையில் இலங்கைக்கு வரவழைக்கப்படும் மாலைதீவு ஜனாதிபதி ! 2009 இல் வன்னியில் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பினை சர்வதேசத்தின் கண்களிலிருந்து மறைக்கும் முகமாகவும், போர்க்குற்றங்களுக்கான சர்வதேச அழுத்தத்தினைக் குறைக்கும் முகமாகவும் போர்க்குற்றவாளிகளான மகிந்த மற்றும் கோத்தாபாய ஆகியவர்களால் நியமிக்கப்பட்ட விசுவாசிகளின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது தெரிந்ததே. ஆனால் அரசு எதிர்பார்த்ததைப் போலல்லாமல் பல அமைப்புகளும், சில நாடுகளும் இந்த அறிக்கையின் நம்பகத்தன்மை பற்றிக் கேள்வியெழுப்பியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும், போர்க்குற்றங்களுக்கான தண்டனைகள் பற்றியும் கேள்வி எழுப்பியிருக்கின்றன…
-
- 0 replies
- 569 views
-
-
மனதில் கலைந்த போக முடியாத அலைகளாக கண்ணீர் நின்று நிரம்பி மோதும் நிமிடங்களுடன் நாங்கள் நித்தம் நித்தம் முட்டி மோதியே வாழ்க்கையின் இறிதிப்பாகத்தில் மன நோயின் பக்கத்தில் குடி கொண்ட பின்னும் முல்லைத்தீவில் நேற்றிரவு கடல்நீர் பெருக்கெடுத்து ஊர்மனைக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றிரவு 9 மணியளவில் முல்லைத்தீவை அண்டிய கடற்கரை பிரதேசத்தில் இருந்து கரையை அண்டிய பகுதிகளுக்கு திபு திபுவென கடல் நீர் திடீரென உட்புகத்தொடங்கியது. இதனால் ‘சுனாமி வந்துவிட்டது’ என மக்கள் அலறியடித்துக் கொண்டு கையில் அகப்பட்ட பொருள்களோடு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். கடற்கரையோரமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளும் இதன்போது உள்ளிழுத்து வரப்பட்டன. ஏறக்குறைய முழங்கால் அளவுக்கு உயரமான க…
-
- 0 replies
- 510 views
-
-
முல்லைத்தீவுக் கடற்கரைப்பகுதியில் இன்று இரவு 9 மணியளவில் திடீரெனக் கடல்பெருக்கெடுத்து ஊர்மனைகளுக்குள் புகுந்து கொண்டதால் மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இடம் பெயர்ந்து வருகின்றனர். அலம்பில், உடுப்புக்குளம், சிலாவத்தை, கள்ளப்பாடு,செம்மலை, முல்லைத்தீவு நகரம் என்பன் இந்த்க் கடற்பெருக்கால் பாதிப்புற்றுள்ளன.திபு திபுவென இன்று மாலை கரையை நோக்கி வந்த கடலைப் பார்த்து மக்கள் அச்சம் கொண்டனர். அதுவும் ஆழிப்பேரலை ஏற்பட்டு ஏழாம் ஆண்டு நிறைவுநாளில் இவ்வாறு கடல் பெருக்கெடுத்ததால் மீண்டும் சுனாமி ஏற்பட்டு விட்டதாகப் பயந்து கையில் அகப்பட பொருள்களுடன பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து சென்றனர். இதனால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இவ்வாறு உட்புகுந்த கடல்நீர் நீர் வற்றாமல் முழங்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தினை செவிமடுத்து, ஆக்கபூர்வமான வகையில் செயற்பட இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும். நாட்டில் நிரந்தர கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு எமது பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக உள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தானது ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய சகல தேவைகள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாக சுட்டிக்காட்டி நிற்கின்றது. இந்தியாவின் இத்தகைய நிலைப்பாடானது வரவேற்கத்தக்கதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப் பட…
-
- 1 reply
- 868 views
-
-
அமைச்சர் டக்ளஸிடம் அடிபணியுமாறு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கோரிக்கை:வலி.வடக்கு பிரதேச சபையில் பெரும் அமளி துமளி! அமைச்சர் டக்ளஸிடம் அடிபணிந்தால் சுடலைகளைப் புனரமைக்க முடியும் என ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தால் வலி.வடக்கு பிரதேச சபையில் இன்று வெள்ளிக்கிழமை பெரும் அமளி துமளி ஏற்பட்டது. இன்று காலையில் சபைக் கூட்டம் நடைபெற்றபோது, சென்ற கூட்டத்தின் போது, ஆளுந்தரப்பு உறுப்பினரான ஹரிகரன் என்பவர் கடந்த கூட்டத்தில் முன்வைத்த “உறுப்பினர்களின் சம்பளப் பணத்தில் வலி.வடக்கில் உள்ள சுடலைகளைப் புனரமைக்கலாம்” என்ற தீர்மானம் தொடர்பாக தமது எதிர்ப்பை எதிர்கட்சியினர் வெளியிட்டனர். …
-
- 0 replies
- 873 views
-
-
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய விவாகாரங்களுக்கான அமைச்சகம் இன்று ஞாயிற்றுக் கிழமை (25-12-2011 ) செய்திக் குறிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை வெளிவந்த, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சபை கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும், 407 பக்கங்களைக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நா.த.அரசாங்கம் விரிவாக ஆய்வு வருவதாக தெரிவித்துள…
-
- 6 replies
- 1k views
-
-
போர்க்குற்றங்களுக்கு பதிலளிக்கும் புதிய அறிக்கையை எதிர்பார்க்கின்றது அமெரிக்கா! நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓபிளேக், இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்ரெ…
-
- 0 replies
- 471 views
-
-
முல்லைத்தீவு நகரப்பகுதியிலும் மற்றும் தண்ணீரூற்று பகுதியிலும் இரண்டு இளைஞர்கள் வெள்ளைவானில் வந்தவர்களினால் கடத்திசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முள்ளியவளைப்பகுதியில் இளைஞர் ஒருவரை வெள்ளைவானில் வந்தவர்கள் கடத்திசென்றுள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவு தண்ணீரூற்று பகுதிகளில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் இளைஞர்களை குறிவைத்து அவர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்காப்படையின் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர்களின் காண்காணிப்பின் கீழ் செயற்படும் குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் தமிழ்இளைஞர்கள் முகவர்களாக செயற்பட்டு இவ்வாறான இளைஞர்களின் கடத்தலுக்கு உடந்தையாக காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்க…
-
- 0 replies
- 663 views
-
-
சீனாவின் உதவியில் கட்டப்பட்ட நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் போதியளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாததால், சிறிலங்கா அரசுக்குப் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா மின்சாரசபை அதிகாரிகள் கூறியுள்ளனர். 300 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நுரைச்சோலை அனல் மின்நிலையம் முழுமையாக இயங்கினால் நாளொன்றுக்கு ஆறு மில்லியன் அலகுகளுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் 2011ம் ஆண்டின் பெரும்பாலான காலத்தில் இந்த மின்நிலையம் பாதியளவிலேயே இயங்கியுள்ளது. இதனால் சிறிலங்கா அரசுக்கு மில்லியன் கணக்கிலான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளினால், இந்த மின்நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 1.1k views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறுவது பற்றிய முக்கியமான விவகாரங்கள் குறித்து சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளதாக - அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளில் ஒன்றான- “சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அனைத்துலக குழு“ (Minority Rights Group International) கண்டித்துள்ளது. சிறிலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளதை வரவேற்றுள்ள இந்த அமைப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த முக்கியமான சில விவகாரங்களில் அளித்துள்ள பரிந்துரைகளையும் வரவேற்றுள்ளது. மொழி, காணி உரிமைகள், மீள்குடியமர்வு, கட்டாயமாக காணாமற்போனவர்கள், பெண்களின் பாதுகாப்பு, முஸ்லிம்களின் இடம்பெயர்வு போன்ற விடயங்களி…
-
- 1 reply
- 723 views
-
-
படிப்பினைகள் ஆணைக்குழுவின் நல்லிணக்கத்துக்கான அறிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓபிளேக், இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்ரெனிஸும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறைபா…
-
- 2 replies
- 1.8k views
-
-
வட,கிழக்கு மாகாணத்துக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்க முடியாது என கூறும் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொண்டிருப்பதானது சர்வதேசத்தை ஏமாற்ற முனையும் நடவடிக்கையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தொடர்பில், விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளதன் அடிப்படையே வடகிழக்கு காணி, பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் அரசாங்கத்தில் உள்ள கெஹெலிய ரம்புக்வெல போன்ற அமைச்சர்க…
-
- 1 reply
- 1k views
-
-
அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டு தூதுவர்களைச் சந்தித்து விளக்கவுள்ளது. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வின் போது பொலிஸ் , காணி அதிகாரங்கள் வழங்க முடியாதென்றும் வடக்கு கிழக்கு இணைப்பினை மேற்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த போது பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படமட்டாதென தெரிவித்திருந்தார். இதேபோல் அமைச்சரவையின் பேச்சாளரான கெஹெலிய றம்புக்வெல பொலிஸ் அதிகாரம் குறித்து பேசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தை வீணடிப்ப…
-
- 1 reply
- 850 views
-
-
மஹிந்த இராஜபக்ஷவிற்கும் அவரது அரசிற்கும் புலிகள் பற்றி பேசாதுவிட்டால் ஆட்சியை கொண்டு நடத்த முடியாது என்பதனை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருப்பார்கள். இன்று புத்தாண்டு புரளியாக மஹிந்த அரசு ஒரு செய்தியினை வெளியிட்டிருந்தார்கள். அதாவது சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய பிரமுகர்கள் பதினான்கு பேரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியவரும் பலரைக் கொலை செய்தவருமான தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் உட்பட ஐவர் சிறிலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. கைது செய்யப்பட்ட போது புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் சயனைட் அருந்தினார் என்றும் என…
-
- 7 replies
- 1.7k views
-