Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவு ஆயுதங்களை வவுனியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ஆட்லறி குண்டுகள், கிளைமோர் குண்டுகள், புலிகளின் 10 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள், ரீ – 81 ரக மோட்டார் பியூஸ்கள் 116, கைக்குண்டுகள் 47, புலிகள் இயக்கத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதியவகை வெடிகுண்டுகள் 09, ஆர்.பீ.ஜீ. ரக குண்டுகள் மற்றும் 20 கிலோகிராம் நிறையுடைய ரீ.என்.ரீ ரக வெடிபொருட்கள் போன்றன இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸ் ரோந்துப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே மேற்படி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்…

  2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்தி அடிபணியச் செய்து ஒரு அரசியல் தீர்வைத் திணிப்பதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச முயல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கம் நாடு முழுவதையும் சிங்கள, பௌத்த, இராணுவமயமாக்குவதற்கு முயற்சிக்கின்றது. அச்சுறுத்தி அடிபணியச்செய்து தமிழ் மக்கள் விரும்பாத அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார். அவரின் அந்த திட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருபோதும் தலை வணங்காது. முழு நாட்டையும் ஆள வேண்டும் என்று …

  3. மில்லியன் கணக்கில் கையெழுத்திட்டு பராக் ஒபாமாவுக்கோ அல்லது வேறு எவருக்குமோ பொன்சேகா விடயம் பற்றி முறையிட்டாலும் இறுதி முடிவு என்னுடையதாகவே இருக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். அலரிமாளிகையில் நேற்று பத்திரிகையாசிரியர்களை சந்தித்து உரையாடும்போதே ஜனாதிபதி மஹிந்த மேற்படி தெரிவித்தார். முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக வெளிவந்த தகவல்கள் தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்க்கணடவாறு பதிலளித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவித்தள்ளதாவது: பொன்சேகாவின் விடுதலை தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளிவருகின்றன. இவ்விடயம் தொடர்பில் டிலான் அலஸ் மட்டும் என்னுடன் பேசவில்லை. பலர் பேசிவருகிறார்கள். ஆனாலும…

  4. கணவர் அடுத்த மாதம் விடுவிக்கப்படுவார் என்பது வதந்திகளே!-அனோமா பொன்சேகா. முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக ஜனாதிபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸூம் பேச்சு நடத்தியமை தொடர்பில், தாம் தமது கணவரிடம் பேசவுள்ளதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். தமது கணவர் அடுத்த மாதம் விடுவிக்கப்படுவார் என வதந்திகளே பரப்பப்பட்டுள்ளன அதில் உண்மையில்லை என்றும் இது தொடர்பில் எவரிடம் இருந்து எந்த தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அனோமா சுட்டிக்காட்டியுள்ளார். சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து கடந்த இரண்டு மாதங்களாக நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதாக வெளியான தகவல் …

  5. சீனாவின் காதல் சிக்கலில் தள்ளுமா? இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீடுகள் அதிகரிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று கூறியிருந்தார் இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய. இவர் இதைச் சொன்னது கொழும்பில் அல்ல, இந்தியாவில் அதுவும் டேராடூனில் உள்ள இந்தியா இராணுவத்தின் பயிற்சித் தலைமையகத்தில் தான் இதைக் கூறியுள்ளார். ஒரு வாரகால இந்தியப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, டேராடூனில் பயிற்சி பெற்று வெளியேறிய இந்தியப் படையினரின் அணிவகுப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னரே அவர் இவ்வாறு கூறியிருந்தார். இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீடுகள் பற்றிய, அவரது இந்தக் கருத்து இந்தியாவுக்கு திருப்தியைக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றா…

    • 9 replies
    • 1.7k views
  6. அரசுக்கும் - விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதலில் பொதுமக்களின் உயிரிழப்புக்காக, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிவரை அரசியல் ரீதியாகப் போராடும். தமிழ் மக்களை கூட்டமைப்பு ஒரு போதும் கைவிடமாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசுடன், கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சுக்கள் உட்பட பல விடயங்கள் குறித்து அவர் தமது செவ்வியின் போது விளக்கமாக விவரித்தார். அரசின் வறட்டு நியாயங்கள் நாட்டுக்கு உதவமாட்டாது என்றும், இவ்விதமான போக்கின் காரணமாகவே இலங்கை அரசு சர்வதேச ரீதியாகக் குற்றவாளிக்கூண்டில் நிற்கிறது என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.s…

  7. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு மாத்திரமல்லது சர்வதேசத்தினரால், சரத் பொன்சேக்காவுக்கு மன்னிப்பு வழங்க முடியாது எனவும் இலங்கை ஜனாதிபதி என்ற வகையில் தனக்கே அவருக்கு மன்னிப்பு வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற பத்திரிகை மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் தலைவர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்காவுக்கு மன்னிப்பு வழங்குமாறு பல்வேறு நபர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கொலைகார்கள், மோசடியாளர்கள் போன்றோரிடம் இருந்தும் இப்படியான மேன்முறையீடுகள் செய்யப்படுகின்றன. அது வழமையானது. சரத் பொன்சேக்கா தொடர்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டன. அது குறித்து என்னுடன் பேசியும் உள்ளனர். எனினும் இதற்…

  8. அதிகாரப் பரவலாக்கலின் கீழ் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்க முடியாது என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக முக்கியஸ்தர்களைச் சந்தித்த போதே தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் போக்கிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தனது கொள்கைகளை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறதென தெரிவித்த மஹிந்த, பேச்சுவார்த்தைகளுக்கு வந்துவிட்டு திடீரென அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் நோக்கில் கூட்டமைப்பு நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். தமிழ் தேசிய கூட்டமைப்பும், புலிகளின் ஆதரவாளர்களும் நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தாமல், சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அழுத்தங்களை கொண்டுவர வேண்டுமென்ற தீய எண்ணத்துடன்…

  9. அரசுடனான தீர்வுப் பேச்சுகளின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், விடுதலைப் புலிகளின் பாணியையே பின்பற்றுகின்றனர். தனித்தீர்மானம் எடுக்கமுடியாமல் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் சக்திகளால் அவர்கள் தடுமாறுகின்றனர். நாமும் பொறுமையாகப் பேசுகிறோம். எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.இவ்வாறு நேற்றுக் கருத்து வெளியிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்றுக்காலை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கருத்துகளை வெளியிட்டார் ஜனாதிபதி. அப்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு: இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கூட்டமைப்பு இடம் பெறவேண்டும் என்பது முக்கியமானது. இதற்கு உறுப்பினர்களின் பெயரை அன…

  10. நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் தீர்விற்கான பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அதிகாரப்பகிர்வின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கவும் போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் இனவாதியுமான சம்பிக்க ரணவக்கே தெரிவித்தார். கடந்த காலத்தில் இவர்கள் இந்தியாவுடன் இணைந்து இலங்கைத் தமிழர்களை அழித்தனர். தற்போது மேற்குலகத்துடன் இணைந்துகொண்டு எஞ்சியுள்ள தமிழர்களையும் அழிக்க முயற்சிக்கின்றனர் என குற்றஞ் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்கரணவக்க மேலும் கூறியிருப்பதாவது: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் உய…

  11. 1990ம் ஆண்டு மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற வேண்டும் என கற்றுக்கொண்ட மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பாக குறித்த பொலிஸாரின் உறவினர்கள் சிலர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அக்காலத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்த போது கல்முனை பொலிஸ் நிலையம் உட்பட சில பொலிஸ் நிலையங்கள் விடுதலைப் புலிகளினால் முற்றுகையிடப்பட்டன. இந்த முற்றுகையின் பின்னர் 500ற்கும் மேற்பட்ட பொலிஸார் பற்றி அதற்குப் பின்னர் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. அவர்களில் பலர் அம்பாறை…

  12. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த பேச்சு பிற்போடப்பட்டது. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே இன்று பிற்பகல் நடைபெறவிருந்த பேச்சு பிற்போடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற பேச்சின் தொடர்ச்சியாக இன்று தொடர்ந்து பேசுவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் வேறு ஒரு தினத்தில் பேச்சு இடம்பெறுமென அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா கூறியதாக மாவை சேனாதிராஜா எமது செய்தியாளரிடம் தெரிவித்தார். அடுத்த சுற்று பேச்சு எப்போது இடம்பெறும் என்பது குறித்து அரசாங்கம் இன்று மாலை அறிவிக்குமெனவும் மாவை சேனாதிராஜா கூறினார். http://thamilfm.com/...l.aspx?ID…

    • 0 replies
    • 635 views
  13. சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ள விவகாரம் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த அறிக்கைக்கு அனைத்துலக செய்தி முகவர் நிறுவனங்களும், ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அமெரிக்க, அவுஸ்ரேலிய, ஐரோப்பிய, இந்திய ஊடகங்கள் பலவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது குறித்த செய்திகளையும் ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளன. அத்துடன் உலகின் முன்னணி செய்தி …

    • 1 reply
    • 1.2k views
  14. அமெரிக்காவின் கருத்துக்கள் தவறானது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்து தவறானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்க்கும் பண்புகள் ஏனைய நாடுகளிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சகல குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்கும் வகையில் அமையவில்லை எனவும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் கருத்து பிழையானத…

  15. இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் அரசின் அக்கறையற்ற மனோபாவம் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக் கான அரசில் தீர்வு காண்பதற்கு மன்மோகன் சிங் அரசாங்கம் கைகொடுக்கும் என்று இலங்கைத் தமிழ் தலைமைகள் தரப்பினர் பலர் நம்பி நம்பியிருந்து நீண்டகாலம் கடந்து விட்டது. முடிவு இலவு காத்த கிளியின் கதையாகிவிட்டது. முன்பு 3 தசாப்தங்களாக தமிழ்த் தலைமைகள் நடத்திவந்த சாத்வீகப் போராட்டங்கள் விழலுக்கிறைத்த நீராகிப் போய்விட்டது. மற றும் தமிழர் சார்பாகக் குரல் கொடுத்துவந்த ஜாம்பவான்களாகக் கருதப்பட்டவர்களாகிய பழைய அல்லது பாரம்பரிய இடதுசாரிகள் 1960 களில் குத்துக் கரணமடித்து பேரினவாத ஆளும் வர்க்கங்களோடு சங்கமித்துவிட்டனர். அடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழர் சுயநிர்ணய உரிமை என்ற…

    • 0 replies
    • 423 views
  16. சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பொறுப்புக்கூறும் விடயத்தை அர்த்தபூர்வமாக - காத்திரமாfக வகைப்படுத்த தவறியுள்ளது. பல ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்திருந்தனர். இவர்கள் போரின் நேரடிச் சாட்சியங்களாக இருந்தவர்கள். நீதியையும் பொறுப்புக் கூறுதலையும் எதிர்பார்த்து உண்மையின் அடிப்படையில் தமது அனுபவ…

  17. தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்து, கிளிநொச்சியில் உள்ள கூட்டுறவு அமைப்பொன்றை கலைத்துவிட ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியினரும், ஆளுநரும் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன யுத்த காலத்தின் போது, பனை தென்னை வள அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக வடமாகாண பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி, மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களில் உள்ள பனை தென்னை வளக் கூட்டுறவு அமைப்புகள் இந்தப் பேரிணையத்தில் அங்கத்துவம் பெற்றிருந்தன. போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அங்கத்தவர்களின் நலனுக்காக குறித்த பேரிணையம் ஏராளமான இடர்களைச் சுமந்து, பணியாற்றி வந்தது. எனினும் புலிகளை ஞாபகப்படுத்தும் வகையில் , ‘பேரிணைய…

  18. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என பொதுநலவாய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் இலங்கை அரசாங்கம் குறித்த முழு அறிக்கையையும் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக அமுல்படுத்தப்படும் என்ற அரசாங்கத்தின் உத்தரவாதம் பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்…

  19. பொன்சேகா விடுதலை செய்யப்படுவாரா என்பது தெரியாது: அனோமா ஜனநாயக தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், சரத்பொன்சேகாவின் விடுதலைப்பற்றி நடந்த பேச்சுவார்த்தை பற்றி தனது கணவருடன் பேசவுள்ளதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இன்று கூறினார். முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அடுத்த மாதம் விடுதலை செய்யப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளபோதிலும் அவை வெறும் வதந்திகளே என பொன்சேகாவின் மனைவி அனோமா தெரிவித்தார். 'எனக்கு இது பற்றி யாரும் கூறவில்லை. இது அநேகமாக வதந்தியாகவே இருக்கும்' என அவர் கூறினர். முன்னாள் இராணுவத் தளபதியின் விடுதலையையிட்டு கடந்த இரண்டு மாதங்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜப…

    • 0 replies
    • 517 views
  20. தருஸ்மனின் அறிக்கையுடன் ஒப்பிடுகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மையுடையதாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,யுத்த சூனியப் பகுதிகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் இருந்தது. புலிகள் இந்த பிரதேசத்தை சரிவர பயன்படுத்தவில்லை புலிகள் பொது மக்கள் மீது ஆட்டிலறி தாக்குதல் நடத்தினர். வேறு யுத்த சூனிய பகுதிகள் உருவாக்கப்பட்டபோதும் புலிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனை நல்லிணக்க ஆணைக்குழு தெளிவாகக் கூறுகிறது. தருஸ்மன் அறிக்கை தவறானதாகும் தவறான வழிகாட்டலின் கீழே தருஸ்மன் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஆஸ் பத்திரி…

    • 3 replies
    • 526 views
  21. போர்க்குற்றங்களிற்கு எதிராக நட்டஈடு கோரி அமெரிக்காவின் வொசிங்ரன் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு எதிராக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சார்பில் பதில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் நாள் இந்த மனு வை சிறிலங்கா அதிபரின் சார்பில் Patton Boggs என்ற சட்ட அமைப்பு சமர்ப்பித்துள்ளது. முன்னதாக சிறிலங்கா அதிபர் அமெரிக்க நீதிமன்றத்தின் அழைப்பாணையை ஏற்க மறுத்திருந்தார். இதையடுத்து, வாதிகளான மனோகரன் மற்றும் ஏனையோரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நீதிமன்ற அழைப்பாணையை வெளியீடுகள் மூலமோ மாற்றுவழியிலோ வழங்குவதற்கு அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த அழைப்பாணை தமிழ்நெற் இணையத்தளம் மூ…

  22. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழ் ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தூக்கு தண்டனைக்கு எதிராக பொதுமக்களின் கருத்தை ஒருங்கிணைக்கும் வகையில், மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நூதன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 17ந் தேதி தமிழ் திரைப்பட துறையினர் இதனை தொடங்கி வைத்தனர். 3 பேரின் உயிரை காப்பாற்ற விரும்புபவர்கள் 92822 21212 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுக்கவும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், கவிஞர் தாமரை, டைரக்டர்கள் மணிவண்ணன், வெற்றி மாறன், சீனுராமசாமி, கவுதமன், ஆர்.கே.செல்வமணி, சமுத்திரக்கனி, தாமிரா பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தமிழ் தேசிய விடுதல…

  23. யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளின் போது 140 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து, இந்த ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டதாக ஸ்ரீ ஜயவர்த்னபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் கலாநிதி பிரசாந்த பந்துல மண்டாவல தெரிவித்தார். விஜித யுகத்தில் பாதுகாப்பு கோட்டைக்கு வெளியில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்ட உலகின் ஒரே ஒரு நகரம் யாழ்ப்பாணம் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு அமைக்கப்பட்ட அனைத்து கட்டடங்களும் பாதுகாப்பான முறையில் காணப்படுகின்றமை விசேட அம்சம் என கலாநிதி பிரசாந்த பந்துல மண்டாவல குறிப்பிட்டார். இதன்படி எதிர்வரும் காலத்தில் இந்த கட்டடத்தை பாதுகாக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் கைய…

    • 4 replies
    • 1.1k views
  24. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறோம்! ஊடகவியலாளர் மாநாட்டில் கஜேந்திரகுமார் கருத்து கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட முடியாததென்று சுட்டிக்காட்டியுள்ள, தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த அறிக்கையை அடியோடு நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளது. கட்சியின் உபதலைவர்களில் ஒருவரும், வெளிவிவகாரகுழு இணைப்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் 3 ஆம் குறுக்கு தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (19-12-2011) ஊடகவியலாளர் மாநாடு நடாத்தப்பட்டது. அம் மாநாட்டில் திருமதி பத்மினி சிதப்பரநாதன், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கல…

  25. 14 மாவட்டங்களை உள்ளடக்கி அதன் கரையோரப் பகுதிகளில் இன்று (20) சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 4.30 மணிவரை இந்த சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளன. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, திருக்கோணமலை, அம்பாறை, காலி முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், அம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்ட கரையோர பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளது. குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களை தெளிவூட்டும் வகையில் இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்த ஒத்திகை நடவட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.