ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
எமது அடிப்படைக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருந்து ஸ்திரத்தன்மையுடன் கூட்டமைப்பினர் அரசுடன் பேசவேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக நிதானத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்து கொள்ளாவிட்டால் மக்கள் அதனைப் புறக்கணிக்கத் தொடங்கிவிடுவார்கள். தமிழ் மக்களின் ஒற்றுமையும் சீர்குலைந்துவிடும். இவ்வாறு தெரிவித்துள்ளார் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். . கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவரவுள்ள ஒரு புறச்சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சை ஆரம்பித்திருக்கும் அரசு, இதற்கு அதீத முக்கியத்துவத்தையும் வழங்கிவருகிறது. ஆணைக்குழு அறிக்கையால் ஏற்படும் சர்வதேச…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிங்கள இனத்தவர் என்ற வகையில் நாம் எவ்வளவு மிலேச்சதனமானவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய காலம் உதயமாகியுள்ளதாகவும் இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த மனிதருக்கு இன்று நேரும் நிலைமைகள் இலங்கையர் என்ற வகையில் அதிருப்தி அளிக்கின்றது என்றும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் நான் வேதனைப்படுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக ஏகாதிபத்திய ஆட்சியை மேற்கொள்ள முயற்சித்தால் சதாம் ஹூசெய்ன் மற்றும் லிபிய தலைவருக்கு ஏற்பட…
-
- 4 replies
- 692 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ள போதிலும், 400 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையை அவர் முழுமையாக வெளியிடுவாரா என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று சந்தேகம் கிளப்பியுள்ளது. உணர்ச்சிபூர்வமான தகவல்கள் அடங்கிய பகுதிகளை நீக்கிவிட்டு அறிக்கையை அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அந்த வாரஇதழ் உயர்மட்ட வட்டாரங்களை ஆதாரம்காட்டி தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழில் வெளியான பத்தியின் சிலபகுதிகள். “காலியில் கடந்தவாரம் இடம்பெற்ற கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்ற வந்திருந்த அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் றொபேட் ஸ்கெர், சிறிலங…
-
- 1 reply
- 735 views
-
-
தமிழர், சிங்களவர் எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள் : ஜனாதிபதிக்கு ஆனந்தசங்கரி கடிதம் நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி இந்திய முறையிலான தீர்வே சிறுபான்மையினருக்கு, சமஷ்டிக்கு ஒரேயோரு மாற்றாக ஏற்புடையதாக இருக்கும், சமஷ்டி என்ற வார்த்தை சிலருக்கு பிடிக்காமல் போனாலும், அதுவே மிகச்சிறந்த தீர்வாக அமையும். ஒற்றையாட்சி என்ற வார்த்தையும் மற்றைய சாராருக்கு பிடிக்காத வார்த்தையே. நாடு பிளவுபடும் என்ற தப்பான கருத்துக் கொண்டவர்களுக்கு சில விளக்கங்களை நீங்கள் கொடுப்பீர்களேயானால் அவாகள் நிச்சயமாக சமஷடி முறையை ஏற்பார்கள் என உறுதியாக நம்புங்கள்' என ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷவுககு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்ப…
-
- 5 replies
- 1.4k views
-
-
அரசியல் தீர்வு குறித்த, அரசாங்கத்துடனான தமது பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிட்டார். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும், இழுப்பறியில் செல்வதால், பேச்சுவார்த்தை மீதான நம்பிக்கையினை மக்கள் இழந்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார். பேட்டியை கேட்க கேழே உள்ள குறியீட்டை அழுத்தவும்: http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=3177:2011-11-20-04-59-43&catid=1:latest-news&Itemid=18'>http://akkinik…
-
- 4 replies
- 850 views
-
-
இலங்கையின் உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வகிஸ்வர விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாக்கி தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை நியாயப்படுத்த முயல்வதாக கனடாவின் இணையத்தளம் ஒன்றில் தமிழர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம் இங்கே தரப்படுகிறது, இலங்கை இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் போர்க்குற்றங்களைச் செய்துள்ளதை உயர்ஸ்தானிகர் தனது கருத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார். இருந்த போதும் ஒரு கிளர்ச்சிக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்தினை பொதுமக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கு ஒரு சாட்டாகக் கொள்ளமுடியாது என அந்த இணையத்தளம் சுட்டிக் காட்டியி…
-
- 1 reply
- 712 views
-
-
சிறிலங்கா அதிபரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராஜதந்திரிகள், தாம் முக்கியமாக அறிக்கையின் பரிந்துரைகளை எதிர்பார்த்திருப்பதாகவும், மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படுவது அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வருத்தும் தெரிவிப்பது குறித்தும் இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்குவத…
-
- 0 replies
- 737 views
-
-
கனடாவில் ஒரேயொரு மாவீரர் நிகழ்வு; மக்களின் கோரிக்கைக்கு கிடைத்தவெற்றி! இரு மாவீரர் தின நிகழ்வுகளையும் மக்கள் பகிஸ்கரிக்கும் அபாயம் ஏற்பட்டதால் டொரொன்டோ புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் முயற்சியால் ஒரே நிகழ்வாக்கபட்டுள்ளது.இரு தரப்பினரையும் அழைத்து பேசிய அவ்வமைப்பு மாவிரர் நிகழ்வு ஈழத்தமிழரின் புனித நிகழ்வு என்பதை உறுதிப்படுத்தியதோடு இந்த நிகழ்வை ஒரே நிகழ்வாக நடத்துவதற்கு யாரும் குறுக்கிடமுடியாது என்பதை புரியவைத்ததோடு இரு தரப்பினரையும் பல விட்டுகொடுப்புகளை செய்யவைத்து ஒரே நிகழ்வாக்கபட்டுள்ளது.ஆகவே இந்த நிகழ்வு கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவம் என்ற அமைப்பினூடாக நடைபெறும் என்பதையும் பொதுவாக உருவாகும் கையாடல் பிரச்சனைக்கும் முடிவு எட்டபட்டுள்ளது. அதேவேளை டவுண்ஸ் வியூ பாக…
-
- 11 replies
- 1.5k views
-
-
திருவடிநிலை முதல் காங்கேன்துறை வரையான பெரும் கடற்பரப்பினை சீன நிறுவனத்திற்குதாரை வார்க்க முயற்சி:- 20 நவம்பர் 2011 வலிகாமத்தின் சுழிபுரம் திருவடிநிலை முதல் காங்கேன்துறை வரையான பெரும் கடற்பரப்பினை சீன சார்பு நிறுவனமொன்றிற்கு மின் உற்பத்திக்கென்ற பேரில் தாரை வார்க்க இலங்கை அரசு முற்பட்டுள்ளது. காற்றாலை மூலமான மின் உற்பத்தி மற்றும் சூரிய மின்கலங்கள் மூலமான மின் உற்பத்திக்கெனவே மலேசிய நிறுவனமான கேஎல்எஸ் எனெர்ஜி எனும் நிறுவனத்திற்கு தமிழ் மக்களுடைய இடங்களை இலங்கை அரசு தாரை வார்க்க முன் வந்துள்ளது. உயர் பாதுகாப்பு வலயமென கூறி; 1990 முதல் 1992 வரைவெளியேற்றப்பட்ட இப்பகுதி மக்கள் இன்று வரை மீள்குடியமர அனுமதிக்கப்படாத பகுதிகளாகவே உள்ளன. கண்ணிவெடி அபாயம் தொடர்வதால் மக்க…
-
- 1 reply
- 716 views
-
-
ஓ... அப்பிடியே சொல்லுறியள்?குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சாந்தபுரத்தான் 20 நவம்பர் 2011 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் மூலம் எவரேனும் யுத்தக் குற்றச் செயல்களிலோ அல்லது மனித உரிமை மீறல்களிலோ ஈடுபட்டதாக தெரிய வந்தால் அவர்களை நாங்கள் பாதுகாக்கப் போவதில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது என்ன கொடுமையப்பா. முழுக் கொலையளையும் குற்றங்களையும் செய்த இவரே தண்டனை வழங்கப் போறார் என்டு சொல்லுறார். இவரின்ட உண்மைய கண்டு பிடிக்கிற ஆணைக்குழு ஆர் ஆர கண்டு பிடிக்கப் போகுதாம். இவர முதலில கண்டு பிடிக்குமே? உலகத்தின்ட குற்றவாளிக் கூண்டிலில…
-
- 1 reply
- 733 views
-
-
ஒருவருக்கு இப்போது தண்டனை மற்றவர்களுக்கு தண்டனை ஒத்திவைப்பு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன் சேகாவுக்கு மூன்று வருட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள், சரத் பொன்சேகாவை குற்றவாளியாகக் கண்டுகொள்ள, ஒரு நீதிபதி சரத் பொன்சேகா குற்றவாளி அல்ல என்று தனது தீர்ப்பை வழங்கி னார். ஜனநாயகத்தின் அடிப்படையில் மூன்று நீதி பதிகளில் இரண்டு நீதிபதிகள் குற்றவாளியயன தீர்ப்பு வழங்கியதன் காரணமாக சரத்பொன்சேகாவுக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர் தலில் மகிந்த ராஜபக் அமோக வெற்றியீட்டினார். அவரின் பதவியேற்பு அவரின் 60 ஆவது பிறந்த நாளன்று இடம்பெற்றது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
சுவிஸ்நாட்டில் இருக்கும் தூரோகி கருணாவை கைது செய்க -மட்டு அம்பாறை மாவட்ட புத்தி ஜீவிகள். Sunday, November 20, 2011, 11:12 சர்வதேச உறவுகளுக்கு!இலங்கையுடைய மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக இருக்கின்ற தூரோகி வினாயகமூர்த்தி (கருணா) நேற்றைய தினம் அதாவது 17.11.2011 அன்று சுவிஸ்நாட்டை வந்தடைந்துள்ளார் ஜேர்மனி நாட்டிலிருந்து நேற்றைய தினம் வந்தடைந்த துரோகி கருணாவை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த சர்வதேச உறவுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தில் இருந்து காட்டிக்கொடுத்து தப்பி ஓடிய துரோகி கருணா ஐரேப்பாவின் லண்டன் நகரத்திலே போலிக் கடவுச்சீட்டுடன் அலைந்து திரிந்த இவர் சில மாதங்களுக்குபிற்ப்பாடு கைது செய்யப்பட்டு இலங…
-
- 1 reply
- 1.9k views
-
-
அது என்ன பிரபாகரன் செய்த மாபெரும் தவறு? சொல்கிறேன் கேளுங்கள்! அது வேறொன்றும் இல்லை! தமிழர்களுக்காகப் போராடினார் பாருங்கள்! ( அதுவும், உலகில் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை! எனவே, உலகில் மூத்த குடியாகிய, தமிழினத்துக்காக, ஒரு நாடு வேண்டும் என்பதற்காக, அவர் போராடினார் பாருங்கள்! ) அதுதான் அவர் செய்த மாபெரும் தவறு! இதனை சற்று விபரமாக சொல்கிறேன் கேளுங்கள்! இப்போ, ஒரு உதாரணத்துக்கு, இந்திய மத்திய அரசில் இருந்து பிரிந்து, தனித் தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக , தமிழகத்திலே ஒரு போராட்டம் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்! ஒரு உதாரணத்துக்காகத்தான் சொல்கிறேன்! யாரும் கோபிக்க வேண்டாம்! ஒரு ஆயுதம் தாங்கிய அமைப்பு, தமிழக இளைஞர்களைத் திரட்டி, படையணிகளை உருவாக்கி, இ…
-
- 4 replies
- 3k views
-
-
இலங்கையினால் மாலைதீவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட சார்க் நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டது இலங்கை அரசாங்கத்தினால் வடிவமைக்கப்பட்டு, மாலைதீவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட சார்க் நினைவுச்சின்னம், மசகு எண்ணெய் ஊற்றப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய சின்னத்தை குறிக்கும் இந்த சிங்கச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானிய நினைவுச்சின்னமொன்று உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டு, திருடப்பட்டதற்கு மறுநாள் இந்த சிங்கச் சிலை சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை உருவ வழிபாட்டு கலாசாரம் என எதிர்ப்பாளரக்ள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, இச்சிலைகளை சார்க் மாநாட்டுக்காக மாலைதீவுக்கு இறக்குமதி செய்ய அனுமதித்தகைம்காக மாலைதீவு சுங்கத் திணைக்களத்திற்கு எதிராக மலைதீவ…
-
- 4 replies
- 1.4k views
-
-
அடுத்த சில தினங்களில் வெளியிடப்பட உள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அறிக்கையில், பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பிய இலங்கையின் கொலைக்களம் விவரணப்படத்தில் காணப்படும் இலங்கை இராணுவத்தினரை கைதுசெய்து, சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு பரிந்துரை ஒன்று அடங்கியுள்ளதாக நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் உலக தமிழர் பேரவை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான கேர்ணல் ரமேஷிடம் விசாரணை நடத்தும் விடியோ படத்தில் உள்ள இராணுவத்தினரை அடையாளம் கண்டு, அவர்களையும் கைதுசெய்து, சட்டத்திற்கு முன் நிறுத்துமாறும் ஆணைக்குழு பரிந்துரை செய்ய உள்ளது. பாதுகாப்பு செயலாளர…
-
- 4 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு அருகில் இன்று மாலை 4.10மணியளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து தென்மேற்குப் பகுதியாக சுமார் 350 கிலோமீற்றர் தூரத்திலேயே இச் சுனாமி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவை நோக்கிய கடற்பரப்பிலேயே இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவி சரிதவியல், அளவையில் மற்றும் சுரங்கத் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி விஜயானந்த தெரிவித்துள்ளார். 4.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட மேற்படி பூகம்பத்தின் விளைவாக இலங்கைக்கு சுனாமி ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் தென்னிலங்கையின் பலப்பிட்டிப் பிரதேசத்தில் உணரப்பட்டுள்ளன. கொழும்புக்குத் தென்மேற்கே 350 கிலோமீற்றர் தொலை…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் இலங்கையில் தமது தொழில்களை நிறுவ விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய தூதுவர் நொபுஹிரோ ஹோபோ இதனைத் தெரிவித்துள்ளதாக த பிஸ்னஸ் ஒன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின், புவியியல் அமைப்பு, பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் போன்ற காரணங்களால், ஜப்பானிய முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது தொழிற்சாலைகளை நிறுவ விருப்பம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இலங்கை வர்த்தம் தொடர்பிலான கொள்கை குறித்து தெளிவுப் படுத்த வேண்டும் எனவும் நொபுஹிடோ ஹோபோ தெரிவித்துள்ளார். http://www.saritham.com/?p=41272
-
- 1 reply
- 867 views
-
-
தமிழ் மக்களின் வாழ்வில் முதன்மை பெற்ற மாதம் கார்த்திகை மாதம். எமது மாவீரரை, அவர்களின் புனிதமான தியாகங்களை நினைவு கூர்ந்து எழுச்சி கொண்டு எழும் மாதம் கார்த்திகை மாதம். எங்கள் மாவீரரின் கனவை நிவைவேற்றுவோம் என்று உறுதி எடுத்துக்கொள்ளும் மாதம் இக்கார்த்திகை மாதம். இக்கார்த்திகை மாதத்தில் மாவீரரை நினைவு கூறும் முகமாக மாவீரர் எழுச்சி வாரத்தின் மூன்றாவது நாளான வியாழக்கிழமை நேற்று university of toronto scarborough பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்வு ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நடைபெற்றது ரொறன்ரோ பல்கலைக்கழகம் இசுகாபுரோ வளாகத்தின் மீட்டிங் பிலேஸ் அரங்கத்தில் மிகவும் எழுச்சிகரமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் வேற்றினத்து மா…
-
- 1 reply
- 792 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான கால்நடை மேய்ச்சல் தரையில் சிங்களவர்கள் அத்துமீறி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்கள் புகார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் உள்ள நிலங்களை கால்நடை பராமரிப்புக்காக மேச்சல் தரையாக்க கடந்த 28.10.2011ம் திகதி அன்று கிரான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி பெரிய மாதவனை, வம்மிக்குளவெட்டை, மோழிவளை, அத்திக்கல்வட்டை, மயிலத்தமடு ஆகிய பகுதிகளுக்கு தற்போது கால்நடைகள் பிரதேச மக்களால் மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இங்கு மாதுறுஓயா பாலம் பெரிய மாதவனை எல்லைப்…
-
- 1 reply
- 972 views
-
-
காணிப்பதிவுகளால் புலம் பெயர் மக்களின் காணிகளை பறிக்க இயலாது சிறீலங்காவில் காணிப்பதிவு முறையானது புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் பாரிய பீதியை கிளப்பி விட்டுள்ளது. பலர் தமது காணிகளை காப்பாற்றுவதற்காக தற்போது சிறீலங்கா சென்றுள்ளார்கள். ஆனால் காணிகளை பதிவது உடமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று நேற்று டென்மார்க் வந்த சிறீலங்காவின் சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார். டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள தமிழர்களை சந்தித்து பேசியபோது இவர் மேற்கண்ட விளக்கத்தை தந்தார். காணி பதியும் சட்டமூலமானது போருக்கு பின்னர் இயற்றப்பட்ட புதிய சட்டமல்ல, அது கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இயற்றப்பட்ட சட்டமாகும். இப்போது போர் முடிவடைந்துள்ள காரணத்தால் ஒவ்வொரு காரியாதிகாரி பிர…
-
- 3 replies
- 1.3k views
-
-
வெள்ளைக் கொடி விவகார வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் அளிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு புதுக்கடை உயர்நீதிமன்ற வளாகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியோர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்போது சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களால் சிறைச்சாலை வான் வண்டி மற்றும் சிறைச்சாலை வாகனம் ஆகியன மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை வண்டியொன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் சிலர் தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://www.eelampres.../2011/11/42077/
-
- 0 replies
- 956 views
-
-
சிறிலங்கா கடற்படையை பலப்படுத்த இந்தியாவிடம் இருந்து இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை கொள்வனவு செய்யும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது. ஆனால் சிறிலங்காவுக்கு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வழங்குவது தொடர்பாக இந்தியா இன்னமும் உறுதியான எந்தப் பதிலையும் வழங்காமல் இழுத்தடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் நேற்று இந்திய ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்தியாவின் உதவியுடன் கடற்படையை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். “உலகின் பரபரப்பான கடற்பாதையைக் கொண்டுள்ள சிறிலங்கா, கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிக்க இந்தியாவின் உதவியுடன் சிறிலங்கா கடற…
-
- 4 replies
- 1.3k views
-
-
சில சக்திகள் சிறுவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தி நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தினர் உலகத் தரத்திலான சிறுவர் பாதகாப்பு சட்டங்கள் நாட்டில் காணப்படுவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளை விடவும் இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு சட்டங்கள் வலுவாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் நீதிமன்றங்களின் மூலம் சிறுவர்களை சிறந்தப் பிரஜைகளாக மாற்றக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். சில சக்திகள் சிறுவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தி நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/70311/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 956 views
-
-
சுவீகரிப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணக்கமானது: உயர் நீதிமன்றம் குறைந்த செயற்பாடுடைய நிறுவனங்கள் பயன்பாடு குறைந்த சொத்துக்களை சுவீகரிக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணக்கமானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் இதனால் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றம் அங்கீகரிப்பதன் இதை சட்டமூலத்தை சட்டமாக்க முடியும். இதற்கு மூன்றில்இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையில்லை. http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/30523-2011-11-08-08-08-47.html சுவீகரிப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு செயற்பாடு குறைந்த நிறுவனங்கள் பயன்பாடு குறைந்த சொத்துக்களுக்கு புத்துயிரளித்தல் சட்டமூலம் பிரதமர் டி.எம். ஜ…
-
- 9 replies
- 1.7k views
-
-
பல நூற்றாண்டுக் காலமான தமிழினத்தின் மீது அரசியல் ரீதியாகவும், ஆட்சிமையின் வலிமையிலினாலும் பூட்டப்பட்ட அடிமைத் தளையை உடைத்தெறிய மாபெரும் மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆயுதம் தாங்கி முன்னெடுத்து வெற்றிகண்டு சுதந்திரமான தமிழீழ தேசம் என்றொன்று உண்டு என்பதை உலக நாடுகளுக்குப் பறைசாற்றிய தமிழர் எழுச்சியின் தலைவர், தமிழ்த் தேசிய இனத்தின் முகமாகவும், முகவரியாகவும், அடையாளமாகவும், வீரமாகவும், உயிராகவும் திகழும் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ஆம் நாளையும், தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் இளமை, வாழ்க்கை, கனவு, உறவு என்றணைத்தையும் துறந்து, இன்னுயிர் ஈந்த தமிழின மாவீரர்களின் நினைவைப் போற்றும் நவம்பர் 27ஆம் நாளையும் உள்ளடக்கி நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வ…
-
- 0 replies
- 905 views
-