ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143342 topics in this forum
-
யாழ்.குடாநாட்டில், மேலும் இரண்டு பாரிய பதிய கடற்படை தளங்கள் அமைக்கும் முயற்சி யாழ்.குடாநாட்டினில் மேலும் இரண்டு பாரிய பதிய கடற்படை தளங்களை அமைக்க இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் மாதகல் மற்றும் கிளாலி பகுதிகளில் நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் கடற்படை தலைமை முழு வீச்சினில் செயற்பட்டுவருகின்றது. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த இப்பகுதிகள் அண்மையிலேயே பெரும் பிரச்சாரங்களுடன் மக்கள் மீளக்குடியமர விடுவிக்கப்பட்டிருந்தது. மாதகல் பகுதியினில் ஏற்கனவே பௌத்த விகாரைக்கென சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுடன் பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் நாற்பதிற்குமதிகமான ஏக்கர் நிலப்பரப்பு புதிதாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 692 views
-
-
மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது பாடசாலை மாணவர்கள் சிலரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகச் சொல்லப்படும் அப்பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதுடைய இந்த ஆசிரியர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். தனது பாடசாலையின் எட்டு மாணவர்களை இவர் கடுமையான முறையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ள விடயம் தற்போது வெளிவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இலங்கையின் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பாடசாலையில் கடந்த நான்கு வருடஙக்ளாக விளையாட்டுத் துறை ஆசிரியராக இவர் கடமையாற்றி வருகின்றார். அப்பாடசாலையில் எட்டாம் ஒன்பதாம் வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்களையே இவர…
-
- 0 replies
- 1.1k views
-
-
புதிய வைரசின் தாக்கம் கனடாவில்! (வாகனவோட்டிகள் பாதசாரிகள் கவனத்திற்கு) இவ்வைரசு நேரடியாக உட்காதில் உள்ள நிதானப்பகுதியை தாக்குகிறது.உட்காதில் நீர்மட்டம் போன்ற நீர்தொகுதான் எம்மை சம நிலையில் வைத்துள்ளது.இந்த நீர்பகுதி பாதிக்கபடுவதால் நாம் எமது சம நிலையை இழக்கின்றோம்.இப்படி பாதிக்கபடுபவர்கள் ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரையில் இத்தாக்கத்துக்கு ஆளாகலாம் இதற்கு (SERC 24 MG)(BETAHISTINE HCL)மருந்தின் மூலம் சிகிச்சை வழங்கபடுகிறது. ஆரம்ப அறிகுறிகள்:- தலை சுற்றுதல்,பக்கவாட்டாக நடத்தல்,கண் மங்கலாக தெரிதல்,குமட்டல்,சத்தி, நெஞ்சுபகுதியில் பிடிப்பு,ஒரு பொருளை பார்கும் போது இரண்டாக தெரிதல் அல்லது ஓடுதல் போலதெரிதல். இப்படியான தன்மை உடையவர்கள் உடனடியாக உங்கள் குடும்ப வைத்தியரை …
-
- 1 reply
- 1.5k views
-
-
பொதுநலவாய கனவு கலைந்தது ஏன்? அடுத்த பொதுநலவாய உச்சி மாநாட்டை 2013ம் ஆண்டில் நடத்தும் வாய்ப்பை அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நழுவ விடாமல் பாதுகாத்த இலங்கை, 2018இல் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை அம்பாந்தோட்டையில் நடத்தும் முயற்சியில் தோல்வி கண்டுள்ளது. சென்.கிட்ஸ் அன் நெவிஸ் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக, அனைத்துலக இணையத்தளம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அரசியல் வேறு, விளையாட்டு வேறு, இரண்டையும் ஒன்றாக கலக்கக் கூடாது என்று கூறியிருந்தார். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்று கணக்கிட முடியாது- எல்லாமே அரசியல் விளையாட்டுத் தான். இந்தப் போட்டியை அம்பாந்தோட்…
-
- 2 replies
- 1.1k views
-
-
துமிந்த சில்வா எம்.பி.யை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய் பிரிவிற்கு உத்தவிட்டுள்ளது. முல்லேரியா பிரதேசத்தில் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்யும்படி கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தவிட்டுள்ளார். http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/30903-2011-11-15-10-03-43.html
-
- 2 replies
- 961 views
-
-
மாவீரர் தினத்தை புலத்தில் விமர்சனத்துக்குள்ளாக்காதீர் ஆக்கம்: ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் இரண்டு மாவீரர் தினம் நடக்காது தடுக்கக் கூடிய மனிதர்கள் இன்றைய கால கட்டத்தில் நிச்சயம் புலம் பெயர்வாழ்வில் இருக்கிறார்கள், அவர்களால் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை நிச்சயம் தடுக்க முடியும். எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழ் தேசியம் சிதறடிக்கப்படாது, இலங்கை அரசு முள்ளிவாய்காலுக்கு அடுத்து புலம் பெயரில் ஓர் மாபெரும் வெற்றியை பெற நாம் துணை போனதாக சரித்திரம் இருக்கப்படாது என எண்ணும் ஒவ்வொரு பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டாளர்களால் இரண்டு மாவீரர் தினம் நடைபெறுவதை நிட்சயம் தடுத்து நிறுத்த முடியும். பொறுப்பு வாய்ந்தவர்களின் அறிக்கையினால் இதைத் தடுக்க முடியும். மாவீ…
-
- 7 replies
- 1.6k views
-
-
மீள்நல்லிணக்கம் சார்ந்த திட்டவட்டமான நகர்வுகள் அவசியம்: கொழும்புக்கு அமெரிக்கா மீண்டும் அழுத்தம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் மோசமான மனித உரிமை மீறல்களுக்குரிய பொறுப்புக்கூறுதலை உறுதிப்படுத்துமாறு சிறிலங்காவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைப் பாதுகாப்புச் செயலர் Robert M. Scher காலியில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கான முன்னேற்றகரமான செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து அமெரிக்கா தொடர்ச்சியாக எதிர்பார்க்கிறது என்பதை இம்முறை தனது …
-
- 1 reply
- 583 views
-
-
நோர்வே அறிக்கை குறித்து சிறிலங்கா அதிருப்தி! சிறிலங்காவின் இறைமைக்கு களங்கம் என அச்சம் விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமை தொடர்பாக நோர்வேயால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்கு இலங்கை அரசு அதிருப்தியை வெளியிடத் தீர்மானித்துள்ளது. இலங்கை அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு அரசும், புலிகள் இயக்கமும் பொறுப்பேற்கவேண்டுமெனக் கடந்த வாரம் நோர்வேயின் அரச சார்பற்ற அமைப்பு ஒன்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன், இது தொடர்பாக பல விமர்சனங்களையும் அது முன்வைத்திருந்தது. இந்நிலையில், மேற்படி விமர்சனங்கள் இறைமையுள்ள அரசு ஒன்றின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் களங்கத்தை ஏற்படுத்துமென அரசு கருதுவதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றுத் தெரிவித்…
-
- 0 replies
- 1.5k views
-
-
210 சிங்களவர்களை சொந்தச் செலவில் அழைத்து சுற்றிக்காட்டும் இந்தியா! தமிழா நீ என்ன இழிச்சவாயனா…!? சிறிலங்காவில் போரில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 210 சிங்களவர்களை இந்திய மத்திய அரசு இலவசமாக இன்பச் சுற்றுலாவிற்கு அழைத்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு வசதிகள் செய்யப்பட்ட ரெயிலில் இவர்களை ரகசியமாக அழைத்துச் செல்வதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வேதனைகள் துன்பங்கள் மறையாத நிலையில் தாய்த் தமிழக மக்களின் மனதில் காயத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 3ம் திகதி சென்னை வந்த 210 சிங்களவர்கள் எழும்பூர் கென்னட் ரோட்…
-
- 3 replies
- 1.8k views
-
-
டக்ளஸ் தேவானந்தா வழக்கை விசாரிக்க நீதிபதி சுதந்திரம் மறுப்பு சென்னை: சென்னையில் நடந்த சிறுவன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ராஜபக்சே ஜால்ரா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் மறுத்து விட்டார். இதையடுத்து இந்த வழக்கு வேறு பெஞ்ச்சுக்கு மாற்றப்படுகிறது. சென்னையில் டக்ளஸ் தேவானந்தா ஆரம்ப காலத்தில் தங்கியிருந்தபோது ஒரு சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வழக்கில் சிக்கினார். பின்னர் அவர் இலங்கைக்கு தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இதுவரை டக்ளஸ் ஆஜராகவில்லை. இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப…
-
- 2 replies
- 1.4k views
-
-
Nov 16, 2011 / பகுதி: செய்தி / வன்னியில் தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் பேருந்துடன் தனியார் பேருந்து மோதியது: படையினர் காட்டுமிராண்டித்தனம்! தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பேருந்துடன் மோதியது குற்றம் எனக் கூறி முல்லைத்தீவு தனியார் பேருந்துச் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த மக்கள் ஆகியோர் மீது படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. பரந்தன் சந்தியூடாக முல்லைத்தீவுக்கான தனியார் போக்குவரத்துச் சபை பேருந்து முல்லைத்தீவிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் வந்த பேருந்து தனியார் பேருந்துடன் பக்கவாட்டாக உராய்ந்து சென்றுள்ளது. இதன் பின்னர் விடயம் அறிந்து அங்கு வந்த படையினர், குறித்த தனியார் பேருந்தை வழிமறித்து பேருந்தின் சா…
-
- 0 replies
- 816 views
-
-
உள்நாட்டு பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இருதரப்பும் பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டும்:சியாம் சரண் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் சம்மந்தப்பட்ட இருதரப்பும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வைக் காணவேண்டும். ஏனைய நாடுகள் இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டாலும் தீர்வு காணமுடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சியாம் சரண் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 'இந்திய வெளியுறவுக் கொள்கையும் இலங்கையுடனான நட்புறவும்' என்ற கருப்பொருளில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நீண்டு கொண்டு செல்லும் இலங்கைத்தீவின் இன ரீதியிலான பிச்சினைக்கு சம்பந்தப்பட்ட இரு தரப்பின…
-
- 1 reply
- 1.1k views
-
-
லண்டன் செல்லவிருந்த மாணவரும் நண்பர்கள் இருவரும் கடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் கற்பதற்காக நாட்டைவிட்டுச் செல்லவிருந்த மாணவரும் ஏனைய க.பொ.த. உயர்தர மாணவர்கள் இருவரும் கடத்தப்பட்டு, கடற்படையினரால் தடுத்துவைத்துள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களை நீதிமன்றில் ஆஜராக்குமாறு கோரி அவர்களின் பெற்றோர்கள் தனித்தனியாக 3 ஆட்கொணர்வு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர். திருமதி சரோஜா நாகநாதன் தனது மகனை ரஜீவ் நாகநாதனையும் ஜி.விஸ்வநாதன் தனது மகன் பிரதீப்பையும் திருமதி காவேரி ராமலிங்கம் தனது மகன…
-
- 0 replies
- 810 views
-
-
மருத்துவர்கள் ஒருவருடைய நோயைக்குணப்படுத்துவதில் அக்கறை கொள்வதில்லை. பணம் கறப்பதே ஒரே நோக்கமாக உள்ளனர். மருத்துவர்கள் தங்களது வருவாயைப் பெருக்கிக்கொள்ள மருத்துவப் பரிசோதனை மையங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சி.டி. ஸ்கேன்இ எம்.ஆர்.ஐ. ஸ்கேன்இ எக்ஸ் ரேஇ சிறுநீர் பரிசோதனைஇ ரத்தப் பரிசோதனை என்று மருத்துவர்கள் தொட்டதெற்கெல்லாம் எழுதிக் கொடுக்கின்றனர். இதன் பின்னணியில் அந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மையங்கள் மருத்துவர்களுக்கு பரிந்துரைகளின் அடிப்படையில் விகிதாசாரமாக 'கமிஷன்' அளிப்பதான விவகாரம் இருந்து வருகிறது. இது தவிரஇ மருந்துக் கடைகள்இ பன்னாட்டு உள்நாட்டு மருந்து உற்பத்க்டி நிறுவனங்களும் தங்களது மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதற்கு பல்வேறு வகையி…
-
- 1 reply
- 972 views
-
-
குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் உடல் உறுப்புக்கள் மாயம்! Published on November 14, 2011-12:16 pm குவைத் நாட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிக் கொண்டிருந்த இலங்கை கலாவாவி – விஜிதபுர – புதிய புலியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் பெண் கடந்த மாதம் 31ம் திகதி திடீரென மரணமானார். இவருடைய சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்ட போது அவருடைய உடலில் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட அவயவங்கள் இல்லாது காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.தயாபாலவினால் கடந்த 11ம் திகதி பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது குவைத்திலேயே குறித்த பெண்ணின் உள் உறுப்புக்கள் அகற்றப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உள் உறுப்பு…
-
- 1 reply
- 897 views
-
-
http://thamilarasu.com/ தேசத்தின் விடுதலைக்காக தங்களது உன்னத உயிர்களைக் கொடுத்த மாவீரச் செல்வங்களான பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் - தேசிய ஊடகவியலாளர் இசைப்பிரியா - தளபதி கரிகாலன் உட்பட பல விடுதலை வீரர்களின் பெயர்களை பயன்படுத்தி ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வரும் பாரிஸ் ஈழநாடு பாலந்திரன் என்பவர் தற்போடு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயரில் அறிக்கை வெளியிட்டு வருவது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஈயூ தமிழ் எனும் இணையத்தில் மாவீரச் செல்வங்களின் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களைச் கொச்சைப்படுத்தி வரும் பாலசந்திரன் ரீஜீரீநியூஸ் எனும் இணையத்தளத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயர்களில் போலி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார். வி.உருத…
-
- 6 replies
- 2.6k views
-
-
அடிப்படை மனிதவுரிமை வழக்குத் தாக்கல் செய்ய 200€ தந்தால் போதும் 2009ம் ஆண்டு சரணடைந்த கந்தையா குணநாதன் என்ற முன்னாள் போராளி தனக்கான மனிதவுரிமை வழக்குத் தாக்கல் செய்வதற்கான உதவியினை வேண்டியுள்ளார். இவரது மனைவி நிர்மலாதேவி இறுதியுத்தத்தில் காயமடைந்து வலது கை முழுமையாகப் பாதிக்கப்பட்டவர். ஆயினும் தங்களது பெண் குழந்தைக்கு உணவைக் கொடுக்க தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய 2வீடுகளில் வீட்டுப்பணி வேலைகள் செய்து மிகுந்த சிரமத்தின் மத்தியில் வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள். கந்தையா குணநாதன் அவர்கள் கைப்பட எழுதிய கடிதம் வருமாறு:- அடிப்படை மனிதவுரிமை வழக்குத் தாக்கல் செய்ய கருணையுள்ளம் படைத்த உறவுகள் 30ஆயிரம் ரூபாவினை (அண்ணளவாக200€) வழங்கினால் அவருக்கான வழக்கி…
-
- 0 replies
- 974 views
-
-
கடந்த முப்பதாண்டு கால தமிழீழ விடுதலைப் போராட்டம் ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினையினை அனைத்துலக மயப்படுத்தியிருக்கும் சூழலில் ஈழத் தாயகத்தில் நடைபெறும் ஒவ்வொரு தமிழர் போராட்டங்களுக்கும் தற்போது அனைத்துலக பரிமாணம் உண்டு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்க இலங்கைத் தமிழ் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இக்கருத்தினை பிரதமர்.வி ருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 70களில் இருந்த நிலைமைகள் மாறிவிட்ட நிலையில் தற்போது ஈழத்தமிழர் தேசம் ஏறத்தாழ 1 மில்லியன் மக்கள் பலம்கொண்ட ஈழத் தமிழ் டயாஸ்பாறாவினையும் தனது அங்கமாகக் கொண்டுள்ளது. இதனால் தாயகத்தில் நடைபெறும் பேராட்டங்கள் அனைத்துலகமயப்ப…
-
- 1 reply
- 702 views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் இன்றிரவு (13) நடத்திய சுற்றி வளைப்பின் போது முற்றுகைக்கு உள்ளான விபசார விடுதி ஒன்றிலிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் நகரப் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இந்த விடுதி முற்றுகையிடப்பட்டது. இந்த விடுதி நீண்ட காலமாக விபச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தமையும் தெரிய வந்துள்ளது கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவதாக தெரியவருகின்றது. இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். விடுதி முகாமையாளர் ரஞ்சன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். http://akkinikkunchu.com/new/index.php
-
- 11 replies
- 2.1k views
-
-
அன்பார்ந்த கனடாவாழ் தமிழீழ மக்களே! எங்களுக்காய், தமிழீழ மண்ணுக்காய் தமிழீழத் தேசியத்துக்காய் தம் உயிர் ஈந்த மாவீரர்களின் வணக்க நிகழ்வான தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள், வழமை போல, தமிழ் தேசியச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் கனடியத் தமிழரின் கட்டமைப்புகளினால், நவம்பர் 27, 2011 அன்று, நான்கு நிகழ்வுகளாக ரொரன்ரோவிலும், மற்றும் மொன்றியலில் ஒரு நிகழ்வாகவும் இடம்பெறவுள்ளது. கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் (Canadian Tamils Rememberance Organization - CTRO), வழமை போல முன்னெடுக்கும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளானது கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT), தமிழ் இளையோர் அமைப்பு (TYO), கனடா தமிழ் மகளிர் அமைப்பு, கனடியத் தமிழர் விளையாட்டுத் துறை, தமிழர் கலை பண்பாட்டுக் க…
-
- 10 replies
- 1.8k views
-
-
“சர்வதேச சமூகம்' என்ற சொல்லாடல் இன்று அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இலங்கை அரசியலில், ஈழத்தமிழர்களின் அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச சமூகத்துக்கு விளக்குதல், சர்வதேச சமூகத்தின் தலையீடு, சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம், சர்வதேச சமூகத்தின் அழுத்தம், சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அல்லது ஆதரவு என்றவாறாக இந்தச் “சர்வதேசம்' என்பதைக் குறித்த செயற்பாடுகளையும் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் பெரும்பாலான இலங்கையர்கள் கொண்டிருக்கின்றனர். அதிலும் தமிழர்கள் இதில் முன்னணி வகிக்கின்றனர். ஆனால், சர்வதேச சமூகம் என்று சொல்லப்படுவதற்கு ஏற்பவோ அல்லது அப்படிக் கருதப்படுவதற்கேற்றவாறாகவோ, உலகிலுள்ள அத்தனை நாடுகளும் அத்தனை தரப்புகளும் ஒரு பிர…
-
- 0 replies
- 4.3k views
-
-
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் மீது யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு செல்வதற்காக சென்று கொண்டிருந்த சிங்களவர்களின் சுற்றுலாப் பேருந்து ஒன்று மோதியதில் பேருந்துகள் சேதம் அடைந்திருக்கின்றன. பரந்தன் சந்திப்பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. பேருந்துகள் மோதிக்கொண்டதை அடுத்து சிங்களவர்களின் பேருந்தில் இருந்து சிங்களவர்கள் அனைவரும் கீழே இறங்கி தனியார் பேருந்துச் சாரதியினை கடுமையாக திட்டியிருக்கின்றனர். அவ்வேளை அந்தப் பகுதியில் இருந்து ஓடிச் சென்ற இராணுவத்தினர் தமிழரான தனியார் பேருந்துச் சாரதி மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். தாக்குதலின் பின்னர் சாரதியை பேருந்தை எடுத்துச் …
-
- 1 reply
- 1.1k views
-
-
அன்றே மகிந்தராஜபக்ஷவை தண்டித்திருந்தால் இன்று இந்த அவலம் வந்திராது ஆழிப்பேரலை அனர்த்த காலத்தில் நடைபெற்ற ஹெல்பிங் அம்பாந்தோட்டை நிதி மோசடி வழக்கில் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால், அன்றே அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பார். இதில் கேள்விக்கே இடமில்லை. நான் எடுத்திருக்கும் தீர்மானங்களிலேயே தவறான ஒன்றாக “ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ வழக்கைக் கருதுகிறேன். நாட்டின் இந்தக் கேடுக்கு நான்தான் காரணம் என்று பலர் என்னிடம் நேரடியாகவே தெரிவிக்கின்றனர். இவ்வாறு பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா. நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தமக்கெதிராகச் சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குற…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார் கடற்படுக்கையில் கெய்ன் இந்தியா நிறுவனம் தோண்டிய இரண்டாவது எண்ணெய் கிணற்றிலும் இயற்கை எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலினை இலங்கை பெற்றோலிய வள செயலகம் அறிவித்துள்ளது. குறித்த இந்த கிணற்றிக்கு Barracuda 1/G1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 4700 மீற்றர் ஆழத்தில் எரிவாயுவுடன் மூன்று பெற்றொலியம் தாங்கி அமைப்புகளும், திரவ ஹைட்ரோகாபனும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதலாவதாக துளையிடப்பட்ட கிணற்றில் இருந்து 38 கி.மீ தொலைவிலேயே இந்தக் கிணறு துளையிடப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த இயற்கை எரிவாயு வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்யக் கூடியவையா என்பதை உறுதிப்படுத்த மேலும் துளையிட வேண்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதலாவது கிணற்றில் கண்டறியப்பட…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளை தப்பாக எடை போட்ட சர்வதேசம்! - றிச்சர்ட் ஆர்மிரேஜ் சிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் நடந்தேறிய சில சம்பவங்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்கச் செயலர் றிச்சர்ட் ஆர்மிரேஜ் வெளியிட்டுள்ளார். சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சியில் நோர்வேயின் பங்களிப்புத் தொடர்பான மீளாய்வு அறிக்கையை ஒஸ்லோவில் வெளியிடும் நிகழ்வில் பேசும் போதே ஆர்மிரேஜ் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அதிபராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கா, மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் காணப்பட்ட 'தனிப்பட்ட விரோதப் போக்கு', புலிகளின் தலைவர் பிரபாகரன் போதிய நுண்திறனற்றிருந்தமை, அவர் சிறந்த தீர்மானம் எடுக்க ம…
-
- 1 reply
- 1.1k views
-