ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
இலங்கைத் தீவில் பல திசை வாழ் தமிழ் இன மக்கள் மூன்று தசாப்தங்களாக பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து பல துயரங்களை அனுபவித்து ஈராண்டுகளுக்கு முன் ஜனாதிபதி அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் அத்துன்ப துயரங்களில் இருந்து மீட்சி பெற்று தற்போது சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழக் கிடைத்திருப்பதையிட்டு முதலில் கடவுளுக்கும் அடுத்து ஜனாதிபதிக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். முப்பது ஆண்டுகளாக இருள் சூழ்ந்த யுத்தத்தின் கொடூரத்திலிருந்து மீட்சி பெற்று நாம் தற்போது ஒளிமயமான ஒரு காலகட்டத்தை அடைந்துள்ளோம். எமக்கு உதயமாகியுள்ள ஒளிமயமான தீபாவளித் திருநாளாம் இந்நாள் இந்துக்களாகிய எமக்கு சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் கொண்டாடுவதற்கு கிடைத்திருப்பது நாம் பெற்ற விமோசனமாகும…
-
- 3 replies
- 1.4k views
-
-
வடக்கு கிழக்கைச் சேர்ந்த முக்கியமான சில சிவில் சமூகத் தலைவர்களால் திருமதி ஹிலரி கிளின்டனுக்கு தமிழர் பிரச்சனை தொடர்பாக 24.10.2011 அன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் உள்ளடக்கங்கள் சில வெளிவந்துள்ளன. 1. அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், தமிழர்களுக்கெதிராக இறுதி யுத்தத்திலும் அதற்கு முன்னரான யுத்தங்கள் பலவற்றின் போதிலும் இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள்; விட்டுக் கொடுக்கப்படக் கூடாது என அமெரிக்காவிடம் சிவில் சமூகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்குமாயின் போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேசம் விட்டுக் கொடுக்கலாம் என்றவாறாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கக…
-
- 1 reply
- 609 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்திமிக்க நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனக்கு மலர்மாலைகள் விழுவதைப் போன்று கற்களால்தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை தூதுவராலயம் மற்றும் அந்நாட்டில் இருக்கின்ற இலங்கை கலாசார அமைப்புகள் 7 இணைந்து ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் ஜனாதிபதி நேற்று மாலை கலந்து கொண்டார். இந்த சந்திப்பு மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழக வின்துரோப் கேட்போர் கூடத்தில் நடைபெற்…
-
- 5 replies
- 1.3k views
-
-
இன்று இரவு அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சி 10.30 மணிக்கு ABC LATELINE நிகழ்ச்சியில் சிறிலங்கா பற்றிய காணொளி வரவிருக்கிறது. கட்டாயம் பாருங்கள். அத்துடன் நாளை வரும் THE AGE பத்திரிகையையும் பாருங்கள்
-
- 21 replies
- 2k views
-
-
பொங்கு தமிழே! விடியல் கிட்டும் வரை பொங்கு தமிழே!: நோர்வே ஈழத்தமிழர் அவை ரொறன்ரோவில் நடக்கவிருக்கும் பொங்குதமிழ் நிகழ்வு சிறப்பாக நடந்தேறிட நோர்வே ஈழத்தமிழர் அவையும் நோர்வே வாழ் தமிழர்களும் கனடா நாட்டை நோக்கி எண்ண அலைகளை சிதறடிக்கவிட்டு வருகிற 29.10.11 ஆம் நாளிர்க்காய் காத்து நிற்கிறோம். தாயகம்! தேசியம்! தன்னாட்சி! என்ற முழக்கம் உலகமெங்கும் கேட்க வேண்டும். இவ்வுலகில் பிற இனம் போலத்தான் நாங்களும் என்று உணர மறுக்கும் கயவர் கூட்டம் தமிழரின் முழக்கத்தில் நாணி நிற்க வேண்டும். எம் இனம் யாருக்கும் எதிராய் நின்றதில்லை. யாரையும் அழித்ததில்லை. இன்றும் கூட யாருக்கும் எதிராய் நின்றதில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்!" என்ற எம்மை அழிக்க எத்தனை எத்தனை கரங்கள் ஒன்று சேர்ந்தன.…
-
- 0 replies
- 468 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் ஒரு கட்டத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பராமரிக்கும் விடுதி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலின் போது அதனைச் சுற்றி பல நிறங்களைக் கொண்ட பாதணிகள் சிதறுப்பட்டுக் காணப்பட்டதையும், காலையிழந்த பதின்ம வயதுப் பெண்ணொருவர் தனது பதுங்குகுழியை விட்டு வெளியே வர முடியாமல் தவித்ததுடன், அவரிற்கருகில் தேங்கியிருந்த மிக அழுக்கான நீரைத் தனக்குத் தருமாறு அந்தப் பெண் இரந்து கேட்டதையும் மீனா கிருஸ்ணமூர்த்தி தற்போதும் நினைவுகூருகிறார். சிறிலங்காப் படைகள் முன்னேறிக் கொண்டு வந்த நிலையில் இறந்து பிறந்திருந்த தனது சொந்தப்பிள்ளையைக் கூட அவர் புதைத்து விட்டு வரவேண்டியிருந்தது. அத்துடன் அங்கே எண்ணுக்கணக்கற்றவர்களின் உடலங்கள் சிதறிக…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையில் மோதல் நடை பெற்ற இறுதிக் காலகட்டத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து முழு அளவிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று ஆஸ்திரேலியா நேற்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. இலங்கைக்கு எதிராகச் சுமத்தப் பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டு மென்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் நிலையிலும், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டி ருக்கின்றது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டுக்கு முன்னோடியாக இடம்பெறும் வர்த்தக மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஜூல…
-
- 2 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலிய மத்திய அரசின் அனுமதியின்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்த நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் தலைவருக்கு எதிரான இவ்வாறான வழக்குகளை சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி தொடர முடியாது எனவும் அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய பேட்டியில் ஆஸி. பிரதமர் கூறியுள்ளார். அத்துடன் இந்த வழக்கு குறித்து சட்டமா அதிபருக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்த வழக்கு குறித்த எந்த ஆவணமும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குக் கிடைக்கவில்லை என ஆஸி சட்டமா அதிபர் திணைக்களமும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வழக்கு தொடர்பில் சட்ட…
-
- 14 replies
- 1.4k views
-
-
4 நாடுகளின் எம்.பிக்கள் குழு நாளை யாழ்ப்பாணம் வருகிறது பன்னாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் களைக் கொண்ட குழுவொன்று நாளை வியாழக்கிழமை யாழ்.மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். பிரிட்டன், இந்தியா, நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரை உள்ளடக்கிய குழுவினரே இங்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்களுக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோர்ஸ் பொல்ரஸ் தலைமைவகிப்பர். இந்தக் குழுவினர் நாளை காலை 10 மணியளவில் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். பின்னர் முற்பகல் 11 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். அதன்பின்பு சிவில் சமூகப் ப…
-
- 0 replies
- 868 views
-
-
புதன்கிழமை, 26 ஒக்ரோபர் 2011, 00:20 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த பத்து அதிகாரிகள் முல்லைத்தீவுக்கு செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதுரகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் பத்துப் பேரும் கண்ணிவெடிகளை அகற்றும் நிபுணர்கள் பாகிஸ்தான் தூதரகம் கூறியுள்ளது. இரு நட்புநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்தப் பயணம் அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேணல் சபீர் நிசார் தலைமையில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் பத்துப் பேரும்…
-
- 3 replies
- 891 views
-
-
லிபியாவில் இடம்பெற்ற நிகழ்வுகளின் மூலம் மக்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நடைபெறும் குடும்ப ஆட்சி மற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும், வாகனத் தொடரணிகளுக்கும் மக்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. பாதாள உலகக் குழுவினரின் நடவடிக்கைகளைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை. அநீதிக்கு எதிரான போராட்டத்தின் போது கட்சி பேதங்களைக் களைந்து அனைவரும் அணி திரள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ பரிசோதனைகளுக்காக சென்றிருந்த போதே மேற்க்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=51309&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 782 views
-
-
தாயகம் - தேசியம் - தன்னாட்சி உரிமை கோரி விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் உச்சம் கொண்டிருந்த வேளையில், வல்லாதிக்க சக்திகளின் பிடி ஈழத் தமிழர்களது கழுத்தைப் பிடித்து உலுக்கிய நிலையில் தமிழீழம் பொங்கு தமிழராய்ப் பொங்கி எழுந்தது. ஆயுதப் போராட்டத்திற்கு நிகராக, விடுதலைப் புலிகளது தாயகக் கனவுடன் தங்களை இணைத்துத் தீப்பிழம்பாக எரிந்த ஈழத் தமிழ் இளையோர் இதயங்களில் பொங்கியதே பொங்கு தமிழ். குறிப்பாகச் சொல்வதானால், இது தமிழீழ விடுதலைப் போரின் இன்னொரு வடிவம். விடுதலைப் புலிகளின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றிப் புகழ்ந்து தமிழீழ மாணவர்கள் மேடையில் எழுதிய புதிய புறநானூறு. ஆயுதம் ஏந்தாத தமிழர்களின் இன்னொரு சன்னதம். அது மீள உயிர்கொள்கின்றது. முள்ளிவாய்க்காலில்…
-
- 0 replies
- 729 views
-
-
பொதுநலவாய அமைப்பில் மனிதவுரிமைகள் ஆணையாளர் பதவி: சிறிலங்காவுடன் இணைந்து இந்தியாவும் எதிர்ப்பு! பொதுநலவாய அமைப்பின் பதினொரு உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு மற்றும் மனிதவுரிமைகளுக்கான ஆணையாளர் பதவியை உருவாக்குவது குறித்த ஆலோசனைக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாக The Times of India எனும் ஊடகம் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு ஸ்பெயினில் இடம்பெற்ற பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் இத்தகையதொரு பதவியை உருவாக்குவது தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமரின் தலைமையில் கானா, ஜமைக்கா, பாகிஸ்தான், உகண்டா, அவுஸ்திரேலியா, மொசாம்பிக், பிரித்தானியா, கயானா, கனடா, கரிபாதி ஆகிய பதினொரு உறுப்பு நாடுகளின் நிபுணர்கள் குழுவால் முன்வைக்கப்பட்டிருந…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு அடுத்த ஆறு மாதத்திற்குள் தீர்வு காணப்படும். அரசாங்கம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்காது. இது குறித்து கடுகளவேனும் தமிழ் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார். குடும்ப பிரச்சினைகளை வெளியிடங்களில் சொல்லித் திரிவது நாகரீகமான செயல் அல்ல, அதே போன்று தான் தேசிய பிரச்சினை விவகாரமாகும். உள்நாட்டில் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய விடயங்களை வெளிநாடுகளுக்குச் சென்று கூறுகின்றார்கள். இதனால் யாருக்கும் நன்மை ஏற்படப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் விசேட நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றத…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவை 2013 ஆம் ஆண்டு பொது நலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தினை நடத்த அனுமதிக்க கூடாது என அரச சார்பற்ற அமைப்புக்களின் கூட்டிணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்கள். . சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருகின்றது. அவர்களின் நடவடிக்கைகளில் இதுவரை மாற்றம் தெரியவில்லை ஆகவே 2013 ஆம் ஆண்டு பொது நலவாய தலைவர்களின் உச்சிமா நாட்டினை சிறிலங்காவில் நடத்த புறக்கணிக்க வேண்டும் என கேட்பதாக அந்த கடிதத்தில் கூறபப்ட்டுள்ளது. . இதில் கீழ் வரும் அரச சார்பற்ற அமைப்புக்கள் கையொப்பம் இட்டுள்ளன. . Yap Swee Seng, Executive Director, Asian Forum for Human Rights and Development (FORUM-ASIA) Wong Kai…
-
- 0 replies
- 778 views
-
-
சிறிலங்காவில் பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாடு நடத்தப்படக்கூடாதென அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் விடுத்துள்ள கோரிக்கைக்கு ஆதரவு கிடைத்தால் அதனை ஒத்திவைப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். அதே வேளை மனித உரிமை மீறல் விடயங்கள் கவலையளிக்கின்ற போதும் பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் அடுத்த மாநாடு இலங்கையில் இடம்பெறும் அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார். எனினும் மாநாட்டை நடத்தும் நாடே உறுப்பு நாடுகளுக்கு தனிப்பட்ட அழைப்பை விடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B…
-
- 0 replies
- 810 views
-
-
மன்னாரை அண்டிய கடற்படுகையில் காணப்படும் எரிவாயு வளத்தை வியட்நாமுக்கு விற்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் கெய்ன்ஸ் லங்கா இந்திய நிறுவனம் கடந்த ஓகஸ்ட் மாதம்முதல் அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பித்ததை அடுத்தே எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டது. மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வு மேற்கொள்வதற்கான பிரதேசம் எட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் இரு பகுதிகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மற்றொரு பகுதியில் ரஷ்யா எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிதாக உருவாகியுள்ள எரிவாயு வளம் பெறுதல் தொடர்பான ஒப்பந்தமொன்று அண்மையில் வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது இலங்க…
-
- 0 replies
- 651 views
-
-
இரவு கடையொன்றுள் புகுந்து எடுத்த பணத்தை மறுநாள் காலை நவீன சந்தை மேல்மாடியில் வைத்து எண்ணிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டான். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.இது பற்றி மேலும் தெரியவருவதாவது சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள தேநீர்க் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் திகதி இரவு நுழைந்த இந்தச் சிறுவன் அங்கிருந்து 13 ஆயிரம் ரூபா பணத்தையும் ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான கிற் காட்டுகளையும் எடுத்துச் சென்றுள்ளான். இந்தப் பணத்தை நேற்று முன்தினம் காலை சாவகச்சேரி நவீன சந்தை மேல்மாடியில் வைத்து எண்ணிக் கொண்டிருக்கையில் பொலிஸார் கைது செய்து பணத்தையும் கிற் காட்டுகளையும் மீட்டனர்.இந்தச் சிறுவனை நேற்று முன்தினம் பொலிஸார் ச…
-
- 0 replies
- 735 views
-
-
[ புதன்கிழமை, 26 ஒக்ரோபர் 2011, 01:24 GMT ] [ தா.அருணாசலம் ] கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்க எட்டு நாள் பயணமாக அவுஸ்ரேலியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டைச் சந்தித்துப் பேசியுள்ளார். இன்று அவர் அவுஸ்ரேலியப் பிரதமர் ஜுலியா கிலாட்டை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய சந்திப்பின் போது அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் இருதரப்பு விவகாரங்கள், அவுஸ்ரேலியாவுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளுதல், கொமன்வெல்த் மாநாடு, 2013இல் சிறிலங்காவில் நடத்தப்படவுள்ள கொமன்வெல்த் மாநாடு ஆகியன குறித்து கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 497 views
-
-
[ புதன்கிழமை, 26 ஒக்ரோபர் 2011, 02:12 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அதிபருக்கு எதிரான போர்க்குற்ற வழக்கை விசாரிக்க முடியாமல் தடுத்ததன் மூலம் அவுஸ்ரேலிய அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். அவுஸ்ரேலிய அரசின் இந்த முடிவு அவுஸ்ரேலிய தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ஏபிசி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலிய அரசின் முடிவு தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசின் பெண் பேச்சாளரான சாம்பரி, ஏபிசியிடம் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் திகதியை அறிவித்த நிலையில், அரசியல்வாதி ஒருவர் அதற்கு அனுமதி அளிக்க ம…
-
- 0 replies
- 646 views
-
-
இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அறிமுகம்! Published on October 26, 2011-4:47 am இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு 6 மாதங்கள் முதல் ஒரு வருட காலம்வரை காத்திருக்கத் தேவையில்லை எனவும் விரைவில் இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரங்களை 7 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சு நேற்று அறிவித்தது. வேரஹெரவிலுள்ள மோட்டார் போக்குவர்தது திணைக்களத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக தினமும் 1200 விண்ணப்பங்கள் கிடைப்பதாகவும் அவற்றில் 600 விண்ணப்பங்களே தினமும் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் போக்குவரத்து பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்க கூறினார். இனிமேல் சாரதி அனுமதிப்பத்திரங்கும் வழங்குவதற்கான செயன்முறைகள் இரு நாட்களில் பூர்த்திய…
-
- 0 replies
- 551 views
-
-
02.11.11 தொடர்கள் உலகில் மிக மோசமான துயரங்களைச் சந்தித்த இனங்கள் இரண்டு. ஒன்று யூத இனம்; இன்னொன்று தமிழினம். தாய் மண்ணில் வாழ வழியின்றி பூமிப் பந்து முழுவதும் தமிழரும் யூதரும் பரவிக் கிடக்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு சர்வதேச நாடுகளின் சமரசத்தால் யூதர்களின் தாய்மண் இஸ்ரேலாகப் பரிணமித்தது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாக இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர் தனிநாடு காண்பதை இதே சர்வதேச சமுதாயம் தடுக்க முயல்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு. இந்த இரட்டை அளவுகோல் அணுகுமுறைக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதுதான் காந்திதேசம் கண்டெடுத்த சமதர்மம். ஈழமண்ணில்…
-
- 0 replies
- 936 views
-
-
கூட்டமைப்பின் அமெரிக்க பிரயாணம் முதல் முறையாக ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு உத்தியோகபூர்வமாக உலகின் தனிப்பெரும் வல்லரசான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் அழைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக கொழும்பின் விருப்பத்தை மீறியும் புது டெல்லியின் இணக்கத்துடனும் தான் நடக்கின்றது என்பதை ஊகிக்கமுடியும். அதேவேளை அமெரிக்கா வரும் கூட்டமைப்பின் குழுவில் மூவர் கனடாவுக்கு வருகின்றனர். இவர்களை கௌரவிக்குமுகமாக இராப்போசன விருந்து வழங்கப்படுகின்றது (கலந்துகொள்ள விரும்புவர் நூறு டாலர் ஒருவர் செலுத்தவேண்டும்). இவை சம்பந்தமாக வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இவை பற்றி இரு கருத்துக்கேள்விகளை முன்வைக்கிறேன். நன்றி.
-
- 27 replies
- 2.8k views
-
-
Gillard to meet Sri Lankan president Prime Minister Julia Gillard will meet Sri Lanka's president on Wednesday night to discuss claims of human rights abuses in the country. Ms Gillard and Sri Lankan President Mahinda Rajapaksa are in Perth for the Commonwealth Heads Of Government meeting (CHOGM), but Mr Rajapaksa has been surrounded by controversy since his arrival in Australia. On Tuesday, a court action was filed by a Sri Lankan-born Australian man in Melbourne, accusing Mr Rajapaksa of war crimes, but federal Attorney-General Robert McClelland did not allow it to proceed. Ms Gillard has previously said the Australian government is concerned about war …
-
- 0 replies
- 568 views
-
-
New Sri Lanka war-crime evidence: judgesThe Australian arm of an international group of judges says it has damning new photographic evidence of war crimes by the Sri Lankan army. The president of the International Commission of Jurists' Australian chapter, John Dowd QC, announced on Wednesday that photographs had been mailed to him. They contained evidence of execution and degradation of female victims as the bloody fighting to came an end in 2009 and had been sent by an Australian union official two weeks ago, he said. Mr Dowd said he had sent the evidence to the Australian Federal Police (AFP). "(The evidence) deals with executions, it deals with suc…
-
- 0 replies
- 562 views
-