Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நுவரெலியாவில் விமானநிலையம் அமைக்க ஜனாதிபதி திட்டம் வீரகேசரி இணையம் 10/5/2011 12:18:26 PM நுவரெலியாவில் விமான நிலையம் ஒன்று அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்திலே அவர் இவ்வாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கை தற்போது அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. சுற்றுலாத்துறையில் மிகச் சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது. எனவே நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதனை நோக்கமாகக்கொண்டே விமான நிலையம் ஒன்று அமைப்பது தொடர்பாக அக்கறை செலுத்தப் படுவதாகவும் தெரிவித்தார். http://www.virakesari.lk/new…

  2. [ புதன்கிழமை, 05 ஒக்ரோபர் 2011, 01:19 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அண்மையில் நியுயோர்க் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹொஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என்று ஆங்கில இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஹொஸ்டன் மருத்துவமனையில் சிறிலங்கா அதிபர் சிகிச்சை பெறச் செல்வதற்கு அமெரிக்க அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்ததை அடுத்து, இதுதொடர்பாக அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முறையிட்டுள்ளார். அதற்கு, நியுயோர்க்கில் மட்டுமே சிறிலங்கா அதிபருக்கு இராஜதந்திரப் பாதுகா…

  3. [ புதன்கிழமை, 05 ஒக்ரோபர் 2011, 03:31 GMT ] [ கார்வண்ணன் ] பாகிஸ்தானிலும் சிறிலங்காவிலும் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளது தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்குச் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்சல் என்.ஏ.கே. பிறவுண் எச்சரித்துள்ளார். இந்தியாவுக்கு அயலில் உள்ள, சிறிலங்காவிலும் பாகிஸ்தான் வசம் உள்ள காஸ்மீரிலும் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், சிறிலங்கா அல்லது தென்கிழக்காசிய நாடுகளில் சீனாவின் தலையீடுகள்- இந்தியாவை அவதானமாக இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கையைக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே நிலைமைகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டிய நிலைய…

  4. எங்கள் அவயங்களைப் பறித்தவனின் கரங்களினால் நாங்கள் பரிசில் வாங்குவதை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது என்று கூறுகிறார் இரண்டு கண்களும் தெரியாத கைகள் இரண்டும் இல்லாத நவின் பாடசாலை மாணவி. நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.படைகளின் தலைமையகதத்தில் நடைபெற்ற கா.பொ சாதாரண மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. எங்களை வலுக்கட்டாயமான எமது பாடசாலை ஆசிரியர்கள் அழைத்து வந்துள்ளனர். நாங்கள் இரண்டு கண்களும் தெரியாது இரு கைகளையும் கொடிய யுத்ததினால் இழந்துள்ளோம். எங்களின் வாழ்க்கையை சூனியமாக்கியவனின் கைகளினால் பரிசில் வாங்குவதை நினைக்கும் போது கண்ணீர்தான் வருகிறது. தங்களின் உணர்வுகனை இந்த நவீன் பாடசாலை ஆசிரியர்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை. இராணுவத்தினரின் கௌரவிப்புக்கு …

  5. “நீதிக்கான நடைப்பயணம்” MANCHESTER இலிருந்து LONDON வரைக்கும் (சனிக்கிழமை,29-10-2011 இலிருந்து, திங்கட்கிழமை 07-11-2011 வரைக்கும்) என் இனிய ஈழத்தமிழ் உடன்பிறப்புக்களுக்கு, ஜெயசங்கர் முருகையா ஆகிய நான், இலங்கையில் எங்கள் மக்கள் பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களுக்காக, பிரித்தானிய மக்களிடமும் பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு மன்செஸ்டர் நகரிலிருந்து லண்டன் மாநகரம் வரைக்கும், எதிர்வரும் சனிக்கிழமை 29-10-11 ஆம் நாளிலிருந்து, திங்கட்கிழமை 07-11-11 ஆம் நாள் வரைக்கும் நடைப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளுவதற்கு திட்டமிட்டுள்ளேன். பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நான் முன்வைக்கின்ற என்னுடைய ஐந்து கோரிக்கைகள் ஆவன: 1) ஈழத்தமிழர்களின் மீதான…

  6. ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் குழுவினருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மாற்றுக் குழுத் தலைவரான குமார் குணரத்தினத்தின் அணியினருக்குமிடையில் நேற்று முன்தினமிரவு பத்தரமுல்லையில் மிக இரகசியமான இடமொன்றில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சரத் பொன்சேகாவின் வேண்டுகோளின் பேரில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது. மக்கள் விடுதலை முன்னணிக்குள் தற்போது எழுந்துள்ள முரண்பாடுகள் தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பினரையும் ஐக்கியப்படுத்தும் நோக்கில் இடம்பெற்றதாகத் கூறப்படும் இந்தச் சந்திப்புக் குறித்து அரசும் ஆளுங்கட்சியும் அதிருப்தியடைந்துள்ளன…

    • 0 replies
    • 1.1k views
  7. இடதுசாரி முன்னணியின் தலைவரும் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடுபவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு இன்று (04) கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எமது இணையம் அவரிடம் வினவிய போது, தான் கொம்பனித் தெருவிலுள்ள தனது அலுவலகத்திலிருந்து தெஹிவளைக்குச் செல்வதற்காக கொழும்பு நகர மண்டபம் வழியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன் ‘நீ புலிகளை விட மோசமானவன்’ என்று தூஷித்து விட்டுச் சென்றனர். இதனையடுத்து நான் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்குத் தெரிவித்துள்ளேன் என்றார். தெஹிவளையில் இடம்பெற்ற விக்கிரமபாகு கரு…

    • 0 replies
    • 848 views
  8. செவ்வாய்க்கிழமை, 04 ஒக்ரோபர் 2011, 00:30 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்படும் ஐவர் மீது ஹேக் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்போரின் சார்பில் முன்னிலையாகும் சட்டவாளர் தமது விளக்கத்தைக் கொடுக்க போதிய காலஅவகாசம் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான 200 பக்கங்கள் அடங்கிய தமது வாதத்தை சட்டவாளர் விக்ரர் கொபே, நேற்று நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தார். காலை தொடக்கம் மாலை 5 மணி வரை அவர் தனது 200 பக்கங்களில் அடங்கிய வாதத்தை முன்வைத்து உரையாற்றினார். ஆனாலும் நேரம் போதுமானதாக இல்லை என்பதால் மேலும் அரை ம…

  9. அண்மையில் அம்பாரை மகாஓய விசேட அதிரடிப்படையின் முகாமில் இடம்பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவின் கொலை மற்றும் அந்த முகாமிற்குப் பொறுப்பான ஜயதிலகவின் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் தொடர்பாக சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த விசெட அதிரடிப்படை அதிகாரியை கோத்தபாய இராஜபக்‌ஷவே கொழும்பில் இருந்து அம்பாரைக்கு இடமாற்றம் செய்துள்ளார். மட்டுமன்றி இந்த இடமாற்றத்தினை செய்யுமாறு கோத்தாவை கேட்டுக்கொண்டவர் குடு துமிந்த என்ற பாதாள உலக கோஷ்டியுடன் தொடர்புடைய கோத்தாவிற்கு நெருங்கிய நண்பராவர்.கொலையுண்ட விசேட அதிரடிப்படை அதிகாரிபாதாள உலக கோஷ்டியினை அடக்க முனைப்பாக இருந்தவர் என கூறபப்டுகின்றது. கொலைசெய்யபட்டவரின் உறவினர்ர் குறித்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை வெளியான…

  10. இலங்கை மருத்துவ சங்கத்தின் பதிவாளரான; டாக்டர் என்.ஜே. நோனிஸ் இனந்தெரியாத நபர்களால் இன்றிரவு ஏழு 7.00 மணியளவில் தாக்குதலுக்கு இலக்கானார் என வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்றிரவு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பலத்த காயமடைந்த நிலையில் அவர் தற்போது மொரட்டுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.tamilthai.com/?p=27797

  11. தென் இந்தியாவின் கேரள மாநிலத்திற்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்திய காவல்துறையினரும், புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக இணைந்து இந்தக் கண்காணிப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். கொச்சி விமான நிலையத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலை தீவு போன்ற நாடுகளிலிருந்து கேரள மாநிலத்திற்கு விஜயம் செய்யும் நபர்கள் வீசா காலம் முடிவடைந்ததன் பின்னரும் தங்கியிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை இணைத்துக் கொள்ளும் முக்கிய இடங்களில் ஒன்றாக மாலைதீவு மாறியுள்ளதாகவும், இலங…

  12. ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில்:-திஸ்ஸ கண்டிக்கு விமான நிலையம் ஒன்றை அமைத்து தருவதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நுவரெலியாவுக்கும் விமான நிலையம் ஒன்றை நிர்மாணித்து தருவதாக தேர்தல் வாக்குறுதியொன்றை அளித்துள்ளார். நுவரெலியா மாவட்ட மக்களின் பொருளாதார நலன் கருதி இந்த அபிவிருத்தி பணியை மேற்கொள்ள உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதனை தவிர நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். நுவரெலிய மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். தான் உறுதியளித்தது போல பயங்கரவாதத்தை தோற்கடித்து, நாட்;டில் அபிவிருத்தியை ஏற்…

  13. புலம்பெயர் நாடுகளின் இயங்கும் தமிழ்ப்பள்ளிகளையும் விடுதலைப்புலிகள் முத்திரை குத்தி அதற்கு இடர்களைக்கொடுக்க சிங்கள அரசாங்கம் முயற்சி செய்கின்றது இதற்கு அந்தந்த நாடுகளும் முண்டுகொடுக்கும் நிலையில் உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான முன்னணிஅமையமொன்று வார இறுதி நாட்கள் பள்ளிகளை நடத்தி வருவதாகநெதர்லாந்து பொலிஸாரை மேற்கோள் காட்டி நெதர்லாந்து ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இவ்வருட ஆரம்பத்தில் தெரியவந்ததாகதெரிவிக்கப்படுகிறது. இது நெதர்லாந்து பொலிசாரின் மடைமைத்தனமா அல்லது ஊடகங்களின் கண்மூடித்தனமா என தெரியவில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடந்த இரு தசாப்தங்களாக தமிழ்ப்பள்ளிகள் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அம்ஸ்டேர்டம் (Amsterdam), …

  14. சக பாடசாலை மாணவியை பாடசாலையிலிருந்து விலக்கக்கோரி மாணவர்கள் பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று இன்று வசாவிளானில் இடம்பெற்றுள்ளது. வசாவிளான மத்திய மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களே இவ்வாறு பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் குதித்திருந்தனர். குறித்த மாணவியை உயர்தர வகுப்பினில் கல்வி கற்க பாடசாலை அதிபர் மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து குறித்த மாணவி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தினில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பாக இடம்பெற்ற விசாரணைகளை அடுத்து குறித்த மாணவியை உயர்தர வகுப்பினில் கல்வி கற்க அனுமதிக்கமாறு பாடசாலை அதிபருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகம் உத்தரவிட்ட…

  15. அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் சில இடைக்காலத் தீர்வுகளைக்கூட ஏற்கவேண்டி வராலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்காக நோர்வேக்கு விஜயம் செய்துள்ள அவர் தற்போதைய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படவேண்டும் எனவும், பேச்சுவார்த்தையில் உடனடியாகத் தீர்வு கிடைக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கக்கூடிய காரியம் இல்லை என்பதால் சில இடைக்காலத் தீர்வுகளைக்கூட ஏற்கவேண்டி வராலம் என…

  16. மஹிந்தவிற்கு சர்வதேச அழுத்தங்கள் மற்றும் பொருளாதார மந்தங்களினால் ஏற்பட்ட அழுத்தம், அனைத்துலக உதவி வழங்கும் நாடுகளின் நெருக்கடிகளால் காஸ் (செல்வாக்கு அல்லது சக்தி) சிறிது சிறிதாக குறைந்து செல்கின்றது. தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தினை ஒடுக்கிவிட்டேன் என எத்தனை நாளைக்குத்தான் அரசியல் வண்டியை ஓட்டுவது. ஆதலால் அபிவிருத்தி என்ற பெயரில் கடன்களை மீற்றர் வட்டிக்கு எடுத்து துறைமுகம், வீதி, விமான ஓடுபாதை என கட்டிக்கொண்டு இருந்தார். ஆனால் இந்த அபிவிருத்தி எல்லாம் கடன் கொடுப்பவர்களிற்கான வியாபார நல வசதிகளை கொடுக்க கூடிய திட்டமே தவிர அது உள் நாட்டில் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களாக அல்ல என்பதனை அதிகரித்து செல்லும் அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றமே கோடிட்டுக்கா…

    • 2 replies
    • 978 views
  17. விக்கிரமபாகு:- அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் புரட்சி பற்றி லியோன் ரொக்சி தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஜனநாயக புரட்சி முதலில் இடம்பெற வேண்டும் என்பது லியோன் ரொக்சியின் கருதாகும். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முதலாளித்துவ தலைவர்களால் முழுமையான ஜனநாயக செயற்பாட்டை நிலை நிறுத்த முடியாது என்பதால் அதைத் தொழிலாளர்களே நிறைவேற்ற வேண்டும் என லியோன் ரொக்சி குறிப்பிட்டுள்ளார். இந்த நாடுகளின் முதலாளித்துவ தலைவர்கள் சமூகத்தை மேல் நோக்கி கொண்டு செல்லாமல் பின் நோக்கியே கொண்டு செல்வார்கள் என்பதால் முழுமையான ஜனநாயக தேவைப்பாடுகளை ஒரு போதும் இவர்களால் நிறைவேற்ற முடியாது என லியோன் ரொக்சி கூறியிருந்தார். இலங்கை வரலாற்றை பார்க்கி…

    • 1 reply
    • 2.8k views
  18. யாழ் பல்கலைக்கழகத்திற்கு இம்முறை அதிகளவு வெளிமாட்டங்களைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது யாழ்.பல்கலைக்கழக வரவாற்றில் என்றும் இல்லாத ஒரு சிங்கள மயமாக்கல் நடவடிக்கை என யாழ்.கல்விச் சமூகம் கருதுகிறது இவர்களுக்கான கற்கைநெறி ஆரம்ப நாளான நேற்று திங்கள் கிழமை இவர்கள் தமது குடும்பத்தினருடன் வாகனங்களில் பல்கலைக்கழக வாசலில் குழுமியிருந்ததைக் காண முடிந்தது. இம்முறை மருத்துவ பீடத்திற்கு 100 சிங்கள மாணவர்களும் விஞ்ஞான பீடத்துக்கு 160 தென்பகுதி சிங்கள மாணவர்களும் தெரிவாகியுள்ளனர். இதில், பௌதீக விஞ்ஞானத் துறைக்கு 100 சிங்கள மாணவர்களும், உயிரியல் விஞ்ஞானத்துறைக்கு 60 சிங்கள மாணவர்களும் அனுமதி பெற்றிருப்பதாக யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ள…

  19. [ செவ்வாய்க்கிழமை, 04 ஒக்ரோபர் 2011, 01:46 GMT ] [ கார்வண்ணன் ] இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் எதிர்வரும் சனிக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எதிர்வரும் 8ம் நாள் கொழும்பு செல்லும் அவர், மறுநாள் நிலைமைகளை அவதானிப்பதுடன், இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, புனர்வாழ்வுத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இந்திய சந்தித்துப் பேசுவதற்கு வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் திட்டமிட்டுள்ளார். ரஞ்ச…

  20. 16 வயதில் தந்தையாகும் மாணவன்! அதிர்ச்சியில் உறையும் யாழ்.சமூகம்!! Tuesday, October 4, 2011, 0:46 இலங்கை அரசாங்கத்தால் திருமண வயதெல்லையை 15 வயதாகக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தும் காரணம் எதுவுமின்றி அதனை அரசு செய்யாது விட்டு விட்டது. ஆனால் யாழ்ப்பாணத்து இளைஞர், யுவதிகள் அரசாங்கம் கொண்டு வரும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்திக் காட்டி அதிலும் வெற்றியும் கண்டுள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவனால் பெண்ணொருவர் கர்ப்பவதியாகியுள்ளார். இச் சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வாபுரம் பகுதியில் 17 வயதுப் பெண் ஒருவர் 16 வயதுப் பாடசாலை மாணவன் ஒருவனால் கர்ப்பம் தரித்துள்ளார். 8 மாதக் கர்ப்பிணியாகவு…

  21. மாவீரர் நினைவு நாளைக்கு குழப்பும் சிங்கள கை கூலிகளின் முகமூடி கிழிப்பு. Tuesday, October 4, 2011, 10:23 கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகளைத் திருத்தி எதிர்வரும் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமைபோல் எக்சல் மண்டபத்தில் (EXCEL) நடைபெறவுள்ளது.-தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட கசப்பான பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகளைத் திருத்தி வெளிப்படைத் தன்மையுடன் இவ்வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 ற்கான செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. இச் செயற்குழுவின் ஊடாக ஆரம்பக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு அடுத…

  22. யாழ் குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகளில் பல மில்லியன் நிதி, மோசடி அம்பலம்! Tuesday, October 4, 2011, 10:30 யாழ்.குடாநாட்டினில் மீண்டும் குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதில் இடம்பெற்றதாக கூறப்படும் பல மில்லியன் நிதி மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது. குடிசன மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு வழங்கவென ஒதுக்கப்பட்ட பல மில்லியன் நிதியே கையாடல் செய்யப்பட்டமை அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே மூன்று தடவைகள் குடிசன மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் இவற்றினில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திருப்தி கொண்டிருக்கவில்லை. இதையடுத்து மீண்டும் குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குடிசன மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுத…

  23. 'அரசியல்வாதி, குண்டர் எல்லாம் நானே' : ஒருவரை கன்னத்தில் அறைந்து மேர்வின் பேச்சு வீரகேசரி இணையம் 10/4/2011 11:01:16 AM 'அரசியல்வாதி, அமைச்சர், குண்டர் எல்லாமே நான்தான். அளவுக்கு மிஞ்சிப் பேசினால் கன்னத்தில் அறைந்துவிடுவேன்..." என்று பேசிக்கொண்டே களனி பிரதேசவாசியொருவரை கன்னத்தில் அறைந்துள்ளார் பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா. களனியிலுள்ள தர்மலோக பாடசாலைக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் பாடசாலையில் உள்ள ஒருவரை அழைத்துப் பேசியுள்ளார். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 'சேர் இங்கு நடக்கும் சில அநீதியான செயற்பாடுகள் குறித்து நான் உங்களிடம் அறிவிக்க வேண்டும். உங்களிடம் அறிவிப்பதற்கு பல முறை முயற…

  24. வெளிநாடுகளில் உள்ளோரும் வாக்காளர்களாகப் பதியலாம் news வெளிநாடுகளில் வாழ்பவர்கள் இங்கு தம்மை வாக்காளர்களாகப் பதிய விரும்பினால் தமது உறவினர்கள் ஊடாக கிராம சேவையாளர்களிடமோ அல்லது தேர்தல் திணைக்களத்திடமோ விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதி தெரிவித்தார். தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையின்படி வெளிநாட்டில் உள்ளவர்களும் தம்மை வாக்காளர்களாகப் பதிய முடியும்.குடும்பமாக வெளிநாட்டில் இருப்பவர்கள் தமது உறவினர்கள் ஊடாக இங்கே தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்யலாம். இதற்கான விசேட விண்ணப்பப் படிவங்கள் கிராம சேவையாளரிடம் வழங்கப்பட்டுள்ளன.இந்த விண்ணப்பத்தில் வெளிநாட்டில் உள்ளவர்களது பெயர்களைப் ப…

  25. மகிந்தாவுக்கு மீண்டும் அழைப்பாணை நேற்று ( செப்டெம்பர் மாதம், திகதி 30) இலங்கை உட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஊடகங்களுக்கு ஊடாக அழைப்பாணை மகிந்தவுக்கு அமெரிக்க சட்டத்தரணி புரூஸ் பெயின் விடுத்துள்ளார். அதேநேரம் அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த பிடியாணையை ஏற்றுக்கொள்ள கேட்டும் தாக்கல் செய்தார். அதாவது நேரடியாக பிடியாணையை கொடுக்க முயன்றும் அவரை சுற்றி நின்ற பாதுகாவலர்கள் ஏற்க மறுத்ததால் தாம் இலங்கை-உலக ஊடகங்கள் மூலம் இந்த ஆணையை அவரிடம் சேர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார். இதை நீதிமன்றம் ஏற்கும் என நம்பிக்கையும் தெரிவித்தார். Mr. President “You Have Been Served” On Friday September 30, a thirty page long complaint detailing charges against President Rajapak…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.