ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு வணக்க நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 24.09.11 @ 10.30am 3 Bridge Junior School Gales Drive, RH10 1PD 25.09.11 @ 7pm Community Center Cobden Street Nottingham NG17 7DN 25.09.11 @ 7pm 299-303 Ley Street Ilford Essex IG1 4BN 26.09.11 @ 5pm Downsban Church Hall Stable Yard Donsbarn milton keynes MK14 7RZ 26.09.11 @ 6pm Tamil Welfare Association Leicester 308 Melton Road Leicester LE4 7SL 26.09.11 @ 6pm 66a London Road Mitcham SW17 9HP 26.09.11 @ 6pm St Paul Church Community Hall 346 Foleshill Road Cov…
-
- 0 replies
- 542 views
-
-
சோமாலியா கொடூரம்: 7,50,000 குழந்தைகள் மரணத்தின் பிடியில்... சோமாலியாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக 750,000 பேர் வரை எதிர்வரும் மாதங்களில் உயிரிழக்க நேரிடலாமென ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது. கிழக்கு ஆபிரிக்காவில் 60 வருடங்களாக ஏற்பட்ட பஞ்சம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர். அல் ஷபாப் என்னும் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள தென் சோமாலியா உட்பட சோமாலியாவில் ஆறு இடங்கள் பஞ்சம் நிலவும் வலயங்களாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியிலுள்ள சுமார் 12 மில்லியன் மக்களுக்கு உணவு தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. சோமாலியாவில் மொத்தமாக 4 மில்லியன் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் 750,000 ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
சனிக்கிழமை , செப்டம்பர் 24, 2011 1500 முன்னாள் போராளிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வவுனியா கலாசார மண்டபத்தில் வைத்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்படும் எஞ்சிய முன்னாள் விடுதலைப்புலிச்சந்தேக நபர்களின் தொகை 1200 ஆகக் குறைவடையும் எனவும் புனர்வாழ்வு செயலகம் அறிவித்துள்ளது.. தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இயங்கி வரும் 7 புனர்வாழ்வுமையங்களில் புனர்வாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதுடன் இந்த மையங்கள் விரைவில் ஐந்தாகக் குறைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.. வன்னி இறுதிப் போரின் போது பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த 11,664 விடுதலைப் புலிகள் உறுப்பினர்களில் இதுவரை புனர்வாழ்வு …
-
- 0 replies
- 874 views
-
-
இந்திய பிரதமருடன் ஜனாதிபதி மகிந்த சந்திப்பு வீரகேசரி இணையம் 9/24/2011 10:44:59 AM ஐக்கிய நாடுகள் சபையின் 66 ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஐ சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் அரசியல் நிலைவரம் மற்றும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களுடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. _ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33965
-
- 0 replies
- 548 views
-
-
Uploaded with ImageShack.us Tamils from across Europe demonstrated at the UN's European headquarters on Monday, calling for a probe into alleged war crimes committed by Sri Lanka at the end of the country's 2009 civil war. According to local police, around 1,000 protesters gathered in Geneva's iconic Place des Nations, to urge the Human Rights Council to investigate the killing of tens of thousands of civilians by Sri Lankan forces in the final push of the country's brutal war against separatist Tamils. "We want an international independent investigation" into the war crimes allegations, Kandiah Rajamanoharan, who had travelled from London to Geneva for th…
-
- 0 replies
- 668 views
-
-
150 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்துவதை நிறுத்துமாறு அவசர கோரிக்கை : 23 செப்டம்பர் 2011 தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் : இன்றுள்ள சூழ்நிலையில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 150 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை எதிர்வரும் 28ஆம் திகதி தனிப்பட்ட விமானத்தில் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை மீளாய்வு செய்யுமாறு தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போர் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இலங்கையின் ஆட்சியாளர்களால் அப்பாவித் தமிழ் மக்களுடைய மனித உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டு வருகின்றது என்பதனை முழ…
-
- 2 replies
- 823 views
-
-
[ சனிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2011, 00:17 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு பாரபட்சமாக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சிறிலங்கா அதிபர், சிறிலங்காவைப் பாதித்த பிரச்சினைகளுக்கு அனைத்துலக சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில் தீர்வுகளை வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஐ.பொதுச்சபையின் 66 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று உரையாற்றியுள்ளார். இந்த உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அபிவிருத்தி அடைந்து வரும் உலகிலுள்ள சிறிய நாடுகளைப் பாதுகாப்பதற்கு மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதே அவசியமா…
-
- 0 replies
- 557 views
-
-
[Friday, 2011-09-23 23:46:28] ஐநா பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையில் நிலவும் பிரச்சனைகளுக்கு சர்வதேச ரீதியில் தீர்வு தேடுவது என்பது சாத்தியமற்ற விடயம் என்று கூறியுள்ளார். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கிலிருந்து கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தை அணுகக்கூடாது என்றும் நியுயோர்க்கில் ஐநா பொதுச்சபையின் 66வது அமர்வில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தொலை தூரத்திலுள்ள நாடுகளிலிருக்கும் நண்பர்கள், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வரலாற்றின் புதிய தருணத்தில் தாங்கள் சந்தித்திருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின்…
-
- 0 replies
- 902 views
-
-
லங்கா பத்திரிகையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ஊழியரும் கைது! Published on September 23, 2011-5:15 pm மக்கள் விடுதலை முன்னணி சார்பான லங்கா பத்திரிகையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வெனுர ஹேரத் மற்றும் ஊழியர் ஜனக்க மஹேந்திர ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லங்கா பத்திரிகையின் காரியாலயத்துக்குள் நேற்று மாலை நுழைந்த ஒரு குழுவினர், அங்கிருந்த முக்கிய ஆவணங்களையும் கார் ஒன்றினையும் எடுத்துச் சென்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. நேற்று மாலை பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்த மாற்றுக் குழு அணியினரே இவற்றினை எடுத்துச் சென்ற…
-
- 0 replies
- 766 views
-
-
கொக்கிளாயில் பிள்ளையாருக்கு பதிலாகப் புத்தர்! Wednesday, September 21, 2011, 9:42 முல்லைத்தீவு கொக்கிளாய்ப் பகுதியில் பொது மற்றும் தனியார் காணிகளை உள்ளடக்கி பௌத்த விகாரை ஒன்று கட்டுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கொக்கிளாய் மருத்துவமனைக் காணியின் ஒரு பகுதி கொக்கிளாய் உபதபாலகக் காணியின் ஒரு பகுதி மற்றும் தனியார் ஒருவரது காணி என்பவற்றை இணைத்து இந்த விகாரை அமைக்கப்படவுள்ளது.ஏற்கனவே பிரசித்தமான அரசடிப்பிள்ளையார் ஆலயம் இந்தப் பகுதியிலிருந்து அழிக்கப்பட்டு அவ்விடத்திலேயே விகாரை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளார்.விகாரை அமைப்பதற்கான கட…
-
- 8 replies
- 860 views
-
-
ஐநா நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் நியமித்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் பொதுநலவாய அமைப்பு நாடுகள் கூட்டத்தொடரில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பொதுநலவாய அமைப்பு நாடுகள் கடந்த இரண்டு வருடங்களாக அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல துறை அதிகாரி லின் பெஸ்கோ மற்றும் செயல…
-
- 1 reply
- 912 views
-
-
[Friday, 2011-09-23 11:10:21] நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு பௌத்த பிக்குகளின் அசீர்வாதம் ஆதரவும் உந்து சக்தியாக அமைந்தது என பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், முப்படையினருக்கும் பௌத்த பிக்குகள் மாபெரும் பலத்தை வழங்கினர். பௌத்த பிக்குகளின் ஆசீவாதமின்றி போரை வென்றிருக்க முடியாது. பயாகல சிறிமுனிவத்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பல்வேறு நெருக்கடியான நிலைமைகளின் போது பௌத்த பிக்குகளின் ஒத்துழைப்பு கிட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=50130&category=TamilNews&lang…
-
- 2 replies
- 747 views
-
-
விடுதலை ஆவாரா டக்ளஸ் தேவானந்தா?-குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன் 23 செப்டம்பர் 2011 இந்திய அரசின் ஆதரவோடு போராளிக்குழுக்கள் இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் நடந்த கொலை வழக்கு இது. சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா அதே பகுதியைச் சார்ந்த திருநாவுக்கரவு என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். கொலை வழக்காக பதியப்பட்ட இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாகக் சேர்க்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்தது நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தது சென்னை போலீஸ். இந்த வழக்குக்கு இன்னமும் 6-வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்காக நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்குக் தப்பிச் சென்றார் …
-
- 4 replies
- 1.8k views
-
-
[ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 06:09 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவின் வடக்கில் உள்ள விவசாய நிலங்கள், காடுகள் மற்றும் கிராமங்களைச் சூழப் புதைக்கப்பட்ட அரை மில்லியனுக்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு போருக்குப் பிந்திய சிறிலங்காவிற்கு இன்னொரு பத்தாண்டு காலம் தேவை என நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவொன்றின் தலைவர் தெரிவித்துள்ளார். கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறிலங்காவில் இடம்பெற்று, பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படவும் காயப்படவும் காரணமான உள்நாட்டுப் போரானது தமிழ்ப்புலிகள் சிறிலங்கா இராணுவப் படைகளால் தோற்கடிக்கப்பட்டு மூன்றாவது ஆண்டில் சிறிலங்காவானது உள்ளது. யுத்தத்தின் போது தமது இட…
-
- 1 reply
- 455 views
-
-
பேருந்துக்காக தவிக்கும் கனடிய தமிழர்கள் போதிய கால அவகாசம் இருந்தும் கடைசி நேரபதிவுக்காக காத்திருந்த தமிழர்கள்.தற்போது பதிவுகளுக்காக நேற்றுமுதல் முண்டியடிக்க தொடங்கினார்கள்.இங்கு இன்னும் உல்லாசபயணிகளின் வருகை தொடர்வதாலும் பேருந்துகளை திடீரென வாடகைக்கு பெறுவதில் சிக்கல் நிலை தொடருகிறது.ஆனால் பலர் சொந்த வாகனங்களில் பயணிக்கிறார்கள். நியூ ஜோர்க் நகரைபொறுத்தவரை வாகனதரிப்பிடமும் போக்குவரத்து நெரிசலும் பாரிய பிரச்சனையாகவிருக்கும்.எப்படியோ பொங்கு தமிழ் வெற்றி பெறவேண்டும்
-
- 7 replies
- 1.7k views
-
-
20 வருடங்களாக இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற சிறிலங்கா அகதி ஒருவரை நாடு கடத்துமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை புதுடில்லி நகர நீதிபதி நிராகரித்துள்ளார். துன்புறுத்தலுக்கு இலக்காகக்கூடிய நபராக இவர் மாறுவதற்கு இடமளிக்க முடியாதென, நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் திருவள்ளூர் அகதி முகாமில் தங்கியிருந்த சந்திரகுமார் என்பவர், போலி ஆவணங்களுடன் இத்தாலி நாட்டுக்கு தப்பிச்செல்ல முற்பட்டபோது, இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இதன் பின்னர், சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசியல் அமைப்பின் 21 ஆம் சரத்தின் பிரகாரம் பிரஜைகள் அ…
-
- 0 replies
- 565 views
-
-
[Friday, 2011-09-23 11:36:58] செனல்4 ஆவணப்படத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன்னமும் பார்வையிடவில்லை என குறிப்பிடப்படுகிறது. சர்சைக்குரிய செனல்4 ஊடகத்தின் ஆவணப்படத்தை பான் கீ மூன் இன்னமும் பார்வையிடவில்லை என அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகாரச் செயலாளர் லியாம் பெஸ்கோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பெஸ்கோவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். சில வேளைகளில் ஜனாதிபதி மஹி…
-
- 0 replies
- 743 views
-
-
[Friday, 2011-09-23 11:27:14] நியூ யோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் இன்றைய நாள்( செப் 23) முக்கிய வரலாற்று நாளாக அமையுமென நம்பப்படுகின்றது. பலஸ்தின தலைவர் முகமெட் அப்பாஸ் அவர்கள் பலஸ்தின தனிநாட்டு பிரகடனத்தை ஐ.நா பொதுச்சபையில் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்த இருக்கின்றார். பலஸ்தினியர்களின் நீணட சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான நாளாக இன்று வெள்ளிக்கிழமை அமையவிருக்கின்ற நிலையில், சுதந்திர தமிழீழத்துக்கான தங்களது விடுதலை அவாவை, பொங்குதமிழ் பிரகடனமாக ஈழத் தமிழர்களும் ஐ.நாவுக்கு முன்னால் வெளிப்படுத்தவுள்ளனர். ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினை அம்பலப்படுத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை தோல்வியைச் சந்தித்துள்ளதாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கடந்த ஒரு ஆண்டு செயற்பாடுகள் தொடர்பாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இன்று 69 பக்க அறிக்கை ஒன்றை ஜெனிவாவில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2010 ஜுலை தொடக்கம் 2011ஜுன் வரையிலான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. சில நாடுகள் விடயத்தில் ஐ.நா மனிதஉரிமை பேரவையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைந்த போதும், முக்கியமான மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, பஹ்ரெய்ன் ஆகிய நாடுகள் விடயத்தில் நடவடிக்கை எடு…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
[ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 08:18 GMT ] [ கார்வண்ணன் ] இந்திய - சிறிலங்கா கடற்படைகளின் ஆறு நாள் கூட்டுப் போர்ப்பயிற்சி நான்காவது நாளான இன்றுடன் திடீரென நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றுடன் இந்தப் போர்ப்பயிற்சி முடிவுக்கு வரவிருப்பதாக சிறிலங்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சண்டேரைம்ஸ் ஒன்லைன் தகவல் வெளியிட்டுள்ளது. திருகோணமலையில் துறைமுக, கடல்சார், மற்றும் கடற்கொள்ளை முறியடிப்பு சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடுவது குறித்து இருநாட்டுக் கடற்படைகளும் இணைந்து கடந்த 19ம் நாள் தொடக்கம் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இருநாடுகளினது கடற்படைகளையும் சேர்ந்த 16 போர்க்கப்பல்கள் மற்றும் படகுகள் இந்தப…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் 66ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் சென்றுள்ள போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்தார். அரச தலைவர்களுக்காக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரமொன்று நியூயோர் நகரில் அமைந்துள்ள ஐ.நா.தலைமையகத்தில் நேற்று இரவு இடம்பெற்றது. இதன் போது சில நிமிடங்கள் பராக் ஒபாமா மஹிந்தரிடம் குசலம் விசாரித்துள்ளார். மூலம்
-
- 0 replies
- 1.5k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2011, 00:07 GMT ] [ கார்வண்ணன் ] மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிற்சர்லாந்தில் போர்க்குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், தமது நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவர் மீது குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், மருத்துவமனைகள், மற்றும் வழிபாட்டு மையங்கள் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிட்டவர் என்ற அடிப்படையில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சமத்தப்பட்டுள்ளன. தீங்குகளுக்கு எதிரான சுவிஸ் அமைப்பும், அச்சுறுத்தல்களுக்குள்ளான மக்களின் சமூகம் என்ற அமைப்…
-
- 1 reply
- 696 views
-
-
[ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 06:32 GMT ] [ கனடா செய்தியாளர் ] ஜெனீவா நகரில் ஐ.நா மனித உரிமை மையத்துக்கு முன்னால் ஐரோப்பிய தமிழ் உறவுகள் அணிதிரண்டது போல் அமெரிக்கா நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் பொங்குதமிழர் அணிதிரள வட அமெரிக்க தமிழர்கள் தயாராகி வருகின்றார்கள். செப்ரெம்பர் 23 வெள்ளிக்கிழமை, நியூ யோர்க் ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் பொங்குதமிழல் பெருநிகழ்வு இடம்பெறவுள்ளது. ஐ.நா சபையின் வருடாந்த கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ள சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'தமிழினபடுகொலை முகத்தை' உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கில் பொங்குதமிழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் எழுர்ச்சியின் குறியீடா…
-
- 1 reply
- 803 views
-
-
யாழ். மாவட்டத்திலுள்ள 29 ஆயிரம் விதவைகள், அங்க வீனமடைந்த ஐயாயிரத்து 500 பேர் மற்றும் முன்னாள் போராளிகள் ஆகியோருக்கான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு உதவிசெய்யுமாறு, ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இடம்பெற்ற மீள் குடிமர்வும் அபிவிருத்தியும் என்னும் தலைப்பிலான மாநாட்டில் தாம் வேண்டுகோள் விடுத்ததாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடர் காலை அமர்வாக நவநீதம்பிள்ளை தலை மையில் இடம்பெற்றது. இதில் நான் கலந்துகொள்ளவில்லை. மாலையில் மீள்குடியமர்வும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாட்டிலேயே பங்குபற்றினேன். இதில் சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. …
-
- 1 reply
- 1.6k views
-