ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் இந்த ஆண்டுக்கான கூட்டம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நியூயோர்க் பகுதியில் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் 130 நாடுகளின் தலைவர் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான கூட்டம் கடந்த 13 ஆம் திகதியே ஆரம்பமாகி விட்டாலும், கூட்டத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சிகளான உலகத் தலைவர்களின் உரைகள், பொது விவாதம் போன்றவை இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 130 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 220 வாகன அணி வகுப்புகளின் பாதுகாப்பை முன்னிட்டு, உளவுத்துறை மற்றும் வெளியுறவுத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதுடன் நியூயோர்க் இரட்டை கோபுரத் தகர்ப்பின் 10ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில…
-
- 0 replies
- 563 views
-
-
மஹிந்தவுடனான இரகசிய சந்திப்பு! தகவல்களை கசியவிட்டார் சம்பந்தர்!! Published on September 20, 2011-9:40 am அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அரசு அமைக்குமாக இருந்தால், அதில் பங்கெடுப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சாதகமாகப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது என்று கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு மீண்டும் சென்றமை, தெரிவுக்குழுவிற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதற்கான முனைப்புக்காட்டி வருகின்றமை தொடர்பில் ஊடகங்களில் எழுந்துள்ள எதிர்ப்பலைகளை அடுத்து கொழும்பில் உள்ள ஊடகத்தினைத் தொடர்பு கொண்ட கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜப…
-
- 2 replies
- 1.3k views
-
-
Sep 20, 2011 / பகுதி: செய்தி / தமிழர்களிற்கு தனிநாடு கிடைப்பதை ஆதரிக்கிறேன்! - கனடிய கொன்சவேட்டிவ் கட்சி பா.உறுப்பினர் கனடாவின் மனித உரிமைகளிற்கான மையம் சிறீலங்கா இனப்பிரச்சினை தொடர்பாக வாட்டர்லூ நகரில் நடத்த மாநாட்டில் மண்டபம் நிறைந்த பேராளர்கள் கலந்து கொண்டதுடன் அனைத்துக் கட்சிக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பேச்சாளர்களும் கலந்து கொண்டனர். இம் மாநாட்டில் சிறப்புரையாற்றிய கிச்சினர் மத்திய தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபன் வூட்வோர்த், இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைப்பதை ஆதரிக்கிறேன் எனத் தெரிவித்தார். அத்துடன், சிறீலங்கா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டுமென்பதையும் ஐ.நா. சபையினால் போர்க் குற்றவிசாரணை எடுக்கப்பட வேண்டும் என்பதையும…
-
- 1 reply
- 588 views
-
-
http://www.yarl.com/files/110920_kirupaharan.mp3
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜேர்மன் மற்றும் சுவிஸ் நாடுகளால் துரத்தப்பட்ட சிறிலங்காவின் ஜெர்மனிக்கான முன்நாள் தூதர் மேஜர் ஜெனெரல் ஜகத் டயஸ் தற்போது வேலையற்று இருக்கின்றார். இனி வெளி நாடுகளில் இராஜ தந்திர பதவிகளுக்கு இவர் லாயக்கல்ல என பீரிஸ் கூறிவிட்டார். காரணம் நிலுவையில் உள்ள போர்க்குற்ற வழக்கே ஆகும். . ஆகவே தனக்கு முன்பு இருந்த இராணுவ பொறுப்பினை தரவேண்டும் என்றும் கூடவே அடுத்த இராணுவத்தளபதி பொறுப்பிற்கு தான் பொருத்தமானவர் என்றும் அதனை மஹிந்த இராஜபக்ஷவே முடிவு எடுக்கவேண்டும் என்றும் தனது விருப்பத்தினை வெளியிட்டுள்ளார் ஜகத் டயஸ். . தான் பதவியில் இருக்கும் காலங்களில் யுத்தக் குற்றச் செயல் விவகாரங்கள் தொடர்பில் சுவிற்ஸர்லாந்து அரச அதிகாரிகள் தம்மிடம் எந்தவித கேள்வியும் எழுப்பவில்லை என்றும் க…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிகா சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு பராக் ஒபாமாவின் ஏற்பாட்டில் இரவு விருந்துபசாரம்! [sunday, 2011-09-18 20:44:47] இலங்கையின் வெளிவிவகார துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகள் பொது சபையின் 66 வது அமர்வில் பங்கேற்பதற்காக இன்று நியூயார்க்கிற்கு சென்றடைந்துள்ளார். அவர் நேற்று மாலை கொழும்பில் இருந்து நியூயார்க் பயணமானதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், உள்ளிட்ட தூதுக்குழுவினர் எதிர்வரும் பொது சபை அமர்வில் பங்கேற்கவுள்ளனர். இதன்படி, ஜனாதிபதி எதிர்வரும் 22 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை அமர்பில் உரைநிகழ்த்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவர் ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கீ மூனையு…
-
- 5 replies
- 1.3k views
-
-
20 செப்டம்பர் 2011 http://youtu.be/W-dQC8qodaM தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஓர் தேசத்துரோகி என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார கடுமையாக சாடியுள்ளார். சம்பந்தன் இறக்கும் முன் தமது கனவினை நனவாக்கிகொள்ள முயற்சிப்பதாகவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்;ப்பதற்காக அவர்களின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்குரிய அதிகாரத்தை அந்தந்த பிரேதசபைகளுக்கு வழங்குவதும், அவர்களக்கான மொழி உரிமையினை வழங்குவதுமாகும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். இன்றைய செய்தியாளர் மாநாட்டின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்து ஊடகவிய…
-
- 3 replies
- 905 views
-
-
http://www.yarl.com/files/110920_eye_surgery_patients_interview.mp3
-
- 0 replies
- 686 views
-
-
http://www.yarl.com/files/110920_special_report_eye_operation.mp3
-
- 0 replies
- 530 views
-
-
http://www.yarl.com/files/110920_ponghuthamil_report.mp3
-
- 0 replies
- 546 views
-
-
ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மட்டுமல்ல, இக்கொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் செயல்பாட்டிலும் பல மர்ம முடிச்சுகள் காணப்படுகின்றன. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுக்கு உண்மையான கவலை இருக்கவே இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. எப்படியாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தினரையும், அந்த இயக்கத்தின் இலட்சியத்துக்காக தமிழின உணர்வோடு செயல்பட முன் வந்த தமிழின இளைஞர்களையும் தண்டித்தாக வேண்டும் என்ற ‘ஒற்றைப் பார்வை’யோடு, காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய முடியாமல், அது தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்கவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தனது அ…
-
- 0 replies
- 1.8k views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. தமிழ்நா…
-
- 0 replies
- 807 views
-
-
செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 03:59 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவை கொமன்வெல்த் அமைப்பில் இருந்து இடைநிறுத்தக் கோரும் போராட்டம் ஒன்றை அவுஸ்ரேலியாவின் கிறீன் கட்சி வட்ட மேசை மாநாடு ஒன்றுடன் இன்று ஆரம்பிக்கவுள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படும் வரை சிறிலங்காவை கொமன்வெல்த் அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று கிறின் கட்சி கோரியுள்ளது. இன்று நடைபெறவுள்ள வட்டமேசை மாநாட்டில், மனிதஉரிமை செயற்பாட்டார்கள் ,நீதியாளர்கள் போன்றோர் அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கான ஆதரவைத் திரட்டுவது குறித்து கலந்துரையாடவுள்ளனர். தாம் மேற்கொள்ளும் பரப்புரைகளின் மூலம் சிறிலங்க…
-
- 2 replies
- 648 views
-
-
'உடைக்கப்பட்ட சியாரம் உரிய இடத்தில் மீண்டும் அமைக்கப்படும்' அனுராதபுரம் பிரதேசத்தில் உடைக்கப்பட்ட சியாரத்தை மீண்டும் உரிய இடத்தில் அமைத்து தருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையிலான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளுக்கும் என்.எம்.அமீன் தலைமையிலான முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா பிரதிநிதிகளுக்கும் இடையில் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஏற்பாட்டிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது பாதுகாப்பு செயலாளர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார். அநுராதபுரம் குருணாகல் வீதியிலுள்ள அநுராதபுரம் பழைய நகரத்தில் அமைந்திருந்த மிக பழமை வாய்ந்த முஸ்லிம் ஸியாரம் கடந்த வாரம் உடைக்கப்ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த ஆண்டு அரசு முறை பயணமாக அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக்கோரி சிறை கைதிகள் உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் வக்கீல் புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ’’சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்ற வாலிபர் 1986-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் கைதான டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். இவர் மீதான வழக்கு சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் 1994-ல் டக்ளசுக்கு எதிர…
-
- 7 replies
- 1.2k views
-
-
அடேல் பாலசிங்கமும், ருத்திரகுமாரனும் புலிகளின் வன்முறைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும்! - சிறிலங்கா வலியுறுத்தல்!! வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் முப்பதாண்டு கால வன்முறைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்திடம் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித்த ஹொகன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த பிரதிநிதிகளை நியூயோர்க்கில் சந்தித்த போதே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். இதன்போது, வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதி கட்ட வன்முறைகள் தொடர்பிலேயே மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் கரிசன…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜெருசலத்தை தலைநகராகக் கொண்டு பலஸ்தீன இராச்சியம் உருவாக்கப்படுவதற்கு பூரண ஆதரவளிக்கப்படுமாம்! பலஸ்தீனர்கள் மீது திடீர் பரிவுகாட்டும் ஜீ.எல்.பீரிஸ். [Tuesday, 2011-08-09 11:02:30] UN மனித உரிமைப் பேரவையில் தனி நாடாக அங்கீகரிக்குமாறு பலஸ்தீனம், ஐக்கிய நாடுகள் அமைப்பில் கோரிக்கை விடுக்கவுள்ளது. பலஸ்தீனம் ஓர் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக் கொள்வதற்கு பலஸ்தீனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் தனி நாடாக அங்கீகரிக்குமாறு பலஸ…
-
- 7 replies
- 1.1k views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சு வார்த்தை விபரங்களை வெளியிடுவதில்லை என இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒப்பமிட்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறிலங்கா அரசின் சூழ்ச்சி நடவடிக்கை என்றும் இந்த சதிவலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வீழ்ந்துள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழர் அரசியல் வட்டாரங்கள் விசனம் தெரிவித்துள்ளன. செப்ரெம்பர் 2ஆம் திகதி சிறிலங்கா அதிபருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்தே நேற்று பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட்ட…
-
- 79 replies
- 4.1k views
-
-
கனடியத் தமிழ் கொன்சவேட்டிவ் ஆதரவாளர்கள் கனடாவின் ஆளும் கட்சியான கொன்ச வேட்டிவ் கட்சியிடம் இலங்கை விவகாரம் தொடர்பான கனடாவின் தெளிவான கொள்கை மற்றும் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு விடுத்த வேண்டுகோள்கள் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அநேகமாக கனடியப் பிரதமர் அலுவலகம் அல்லது வெளிவிவகார அமைச்சு இலங்கை விவகாரம் தொடர்பான கனடிய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கையொன்றை அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக கனடிய வெளிவிவகார அமைச்சின் தென்னாசியப் பிரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு உத்தியோகபூர்வமாக அழைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள இவ்வேளையில் அவர்கள் கனடாவிற்கு வருவதற்கு முன்பா…
-
- 3 replies
- 720 views
-
-
நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் கடன் வழங்குவதனை சர்வதேச நாணய நிதியம் ஒத்தி வைத்துள்ளது 20 செப்டம்பர் 2011 நிபந்தனைகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாத காரணத்தினால் கடன் வழங்குவதனை சர்வதேச நாணய நிதியம் ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அரசாங்க நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்கி வருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலைமைகளை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் கட்டம் கட்டமாக கடனுதவிகளை வழங்கி வருகின்றது. ஒன்தாம் கட்ட கடனுதவியை வழங்குவது குறித்த மதிப்பீடுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மேற்கொள்வதில்லை என நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. 2.9 பில…
-
- 1 reply
- 1k views
-
-
டென்மாக்கில் Struer நகரில் உள்ள ஒரு திரையரங்கில் பல தேசியங்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. தமிழீழத் தேசியக்கொடியும் அங்கே பறக்கவிடப்படவேண்டும் என நகரத்தில் வாழும் சில தமிழீழப்பற்றாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பொழுது தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. முதலில் அங்கே பறக்க விடப்பட்டிருந்த சிங்கக்கொடி இனம் தெரியாதவர்களினால் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://youtu.be/voNh53NtQN4 http://www.eeladhesa...ndex.php?option
-
- 1 reply
- 1.2k views
-
-
விளக்க மறியல்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேக நபர்களில் ஒரு தொகுதியினர் நேற்று மெகஸின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையோரும் இரண்டொரு தினங்களில் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படவுள்ளனர் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு விளக்கமறியல்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களான 240 பேரிலேயே 100 பேர் நேற்று மெகஸின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் தற்போது மெகஸின் சிறையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 138 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சிங்களக் கைதிகளால் தமிழ்க் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்தே பாதுகாப்பின் நிமித்தமாக இவர்கள்…
-
- 0 replies
- 736 views
-
-
தென்பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தில் சி4 ரக வெடிமருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மொனராகலையிலிருந்து சென்ற குறித்த பேரூந்தில் சீ4 ரக வெடிகுண்டு காணப்பட்டதை அடுத்து பஸ்சின் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். . மொனராகலை சோதனைச் சாவடியில் பஸ் சோதனை செய்யப்பட்ட போது சாரதியின் ஆசனத்துக்கு அருகேயிருந்து 615 கிராம் எடை கொண்ட சீ4 ரக வெடி பொருள் மீட்கப்பட்டதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். . கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான இரு சிங்களவர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன் நிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூலம்
-
- 1 reply
- 796 views
-
-
ஐ.நா. வின் தலைவர்களிற்கான அமர்வு நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் போது கனடியப் பிரதமரான ஸ்டீபன் ஹாப்பரைச் சந்திக்க இலங்கை அரசாங்கம் இராஜதந்திர நடைமுறைகளினூடாக முயன்று வருவதாக இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறிப்பாக ஐ.நா. அமர்வின் போது இடம்பெறவுள்ள நாடுகளின் தலைவர்களின் இராப்போசன விருந்துபசாரம் அல்லது ஒன்றுகூடல் சந்திப்பின் போது கனடியப் பிரதமரைச் சந்திக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்துள்ள போதும் அது சாத்தியப்படாது என்றே தெரிய வருகிறது. இது போன்றதொரு விருப்பம் கடந்த முறை நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா. சபை அமர்வு நிகழ்விலும் இலங்கை தரப்பால் கனடாவிற்குத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அதனை கனட…
-
- 0 replies
- 504 views
-
-
மே...மே...மேர்வின்...மே மே...மேர்வின்...மே...மே [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-09-20 10:10:11| யாழ்ப்பாணம்] தமிழ் மொழியின் சிறப்பும் சுவையும் மிகவும் அருமையானவை.மிருகங்கள், பறவைகளின் ஒலிகளுக்குக் கூடப் பெயர் சூட்டி அவற்றின் தன்மைக்கு மதிப்புக் கொடுத்த மொழி உலகில் தமிழ் மொழியாக மட்டுமே இருக்க முடியும். சிங்கம் கர்ச்சிக்கும், யானை பிளிறும், மயில் அகவும், குயில் கூவும், ஆடு கத்தும், மாடு கதறும் இப்படி மிருகங்கள், பறவைகளின் ஒலிக்குப் பெயர் சூட்டிய தமிழ்மொழி; ஆறறிவு படைத்த மனிதனின் ஒலி குறித்து வெவ்வேறு சொற்பதங்களை சூட்டி மனித உணர்வுகளை சொல்லூடாக வெளிப்படுத்தியது. புன்சிரிப்பு, எக்காளம், அழுகை, குளறல், கத்தல், கதறல், விம்மல், வெதும்பல் இப்படி ஒலிக்கு மட்டுமன்றி உ…
-
- 2 replies
- 1.6k views
-