ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
இலங்கை அரசியலின் கடந்த வார முக்கிய நிகழ்வுகளின் கண்ணோட்டம் :- 19 செப்டம்பர் 2011 பிரதியாக்கம்: ஏ.எச். சித்தீக் காரியப்பர் தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கின் கடந்த வார இலங்கை விஜயம் இலங்கை அரசியலில் புயலைக் கிளப்பியிருந்தது. ஏலவே திட்டமிட்டிருந்த அவரது விஜயமானது அமெரிக்காவில் வீசிய புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் இடம்பெற்றது. ரொபர்ட் ஓ பிளேக் இலங்கை வந்ததும் இங்கும் அவர் பலத்த அரசியலில் புயலை ஏற்படுத்திச் சென்றுவிட்டார். விசேடமாக, அவரது யாழ் விஜயமானது அவருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்ததுடன் அங்கு அவர் அரச அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. யாழ். அர…
-
- 1 reply
- 488 views
-
-
இந்தியாவையும், அமெரிக்காவையும் நம்புவதால் தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை – விக்கிரமபாகு! Published on September 19, 2011-9:50 am இந்தியாவையும், அமெரிக்காவையும் நம்புவதால் தமிழ் மக்களுக்கு எந்தவித விமோசனமும் கிடைக்கப் போவதில்லை; அதுதான் உண்மையும் கூட என்று தெரிவித்திருக்கிறார் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன. இதேவேளை, தமிழர் பிரச்சினைகளைப் பயன்படுத்தி தனது நாட்டுக்கு ஆதாயம் தேட முனைபவர்களின் மாயைக்குள் தமிழ்த் தலைமைகள் சிக்கிவிடக்கூடாது என்று எச்சரிக்கிறார் ஜனநாயக சோஷலிசக் கட்சியின் தலைவர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய. தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற…
-
- 1 reply
- 493 views
-
-
[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 08:07 GMT ] [ நித்தியபாரதி ] விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிற்கும் வெளியேயும் நாளொன்றிற்கு சராசரி 63 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் யுத்தம் தீவிரமடைந்திருந்த போது அங்கு கொல்லப்பட்ட மக்களின் சராசரி எண்ணிக்கையானது மாதாந்தம் அதிகரித்துக் கொண்டு சென்றதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தனது நாட்டின் இராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தது. 07.04.2009 அன்றய தினம் ஐ.நாவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் ஜனவரி 20 தொடக்கம் ஏப்ரல் 06 வரை 4164 தமிழ…
-
- 0 replies
- 608 views
-
-
[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 00:27 GMT ] [ கார்வண்ணன் ] மேஜர் ஜெனரல் ஜெகத் டயசை பதில்தூதுவராக ஏற்றுக்கொள்ள சுவிஸ் மறுப்பு மேஜர் ஜெனரல் ஜெகத் டயசை பதில் தூதுவராக ஏற்றுக்கொள்ள சுவிற்சர்லாந்து அரசாங்கம் மறுத்து விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, வத்திக்கான் ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் தூதுவர் ரி.பி.மடுவெகெதரவின் பதவிக்காலம் கடந்த ஜுன் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் பேர்லினில் உள்ள சிறிலங்காவின் பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் ஜெகத் டயசிடம் பதில் தூதுவருக்குரிய பொறுப்புகளை ஒப்படைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரை பதில் தூதுவராக ஏற்றுக் க…
-
- 0 replies
- 545 views
-
-
[Monday, 2011-09-19 10:41:58] தமிழ்ப் பெண்களைக் கேவலப்படுத்தி தமிழர்கள் வாழும் பிரதேசங்களை உல்லாச புரியாக்க முனைகிறது இலங்கை இராணுவம். போரினால் சிதைந்து போயுள்ள வடபகுதியையும், அவல நிலையில் வாழும் தமிழ் மக்களையும் காட்சிப் பொருளாக்கி இங்கே தென்பகுதிச் சிங்களவர்களை அழைத்து வந்து கண்காட்சி நடத்துகின்றது அரசு என்று சாடுகின்றார் மாவை சேனாதிராசா. நேற்று முன்தினம் நாவாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றிய மாவை சேனாதிராசா மேலும் கூறியதாவது; கிறீஸ்பூதம் என்று ஒன்று கிடையாது. இந்த இராணுவத்தினர் தான் கிறீஸ் பூதங்களாக நடமாடுகின்றனர். இவர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பெண்களின் மீதே குறிவைத்து சேட்டைகளில் ஈடுபட முனைகின்றனர். இ…
-
- 0 replies
- 683 views
-
-
மரணதண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினா கடல் மணலில் சிற்பம் வரையும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திரைத்துறையிலிருந்து நடிகர் சத்யராச் மற்றும் பல தமிழுணர்வாளர்கள் திரண்டிருந்தனர். [show as slideshow] http://www.periyarthalam.com/2011/09/18/stop-hanging-sand-art/
-
- 1 reply
- 863 views
-
-
சிறிலங்கா வருமாறு இந்திய எதிர்க்கட்சி தலைவர்களை சிங்கள அரசு அழைத்துக்கொண்டே இருந்தது. ஆனால் இந்திய எதிர்க்கட்சிகளின் மக்களவைத்தலைவர் சுஷ்மா அவர்களோ தான் சிறிலங்கா இப்போதைக்கு செல்லப்போவதில்லை என கூறி வந்தார். . இதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சிகளின் தலைவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை சந்தித்து சிறிலங்காவின் நிலைப்பாடுகளை தெளிவு படுத்தியதே. ஆனால் சிங்கள அரசாங்கம் சுமா விடுமா? ஒருவாறு புகுந்து விளையாடி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி அவர்களை சிறிலங்காவிற்கு அழைத்து அல்வாக் கொடுத்து அனுப்பியுள்ளது. . முரளி மனோகர் ஜோஷி கொழும்பிற்கு இருநாள் திடீர் விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்திருந்ததாகவும் அவர் சிறிலங்கா பிரதமரைச் சந்தித்துவிட்டு பின்…
-
- 0 replies
- 2k views
-
-
சிறிலங்காவின் போர்க்குற்றத்தினை விசாரிக்க அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்ள போதியளவு அழுத்தத்தினை மேற்கொள்ளவில்லை என்று பிரித்தானிய வெளியுறவுக்குழு விமர்சனம் செய்துள்ளது. பிரித்தானியா எப்போதுமே சிறிலங்கா தொடர்பில் இழுத்தடிக்கும் வேலைகளையே செய்துவருகின்றது. இல்லையேல் நடு நிலமை என்கின்ற பேரில் மாறி மாறி அறிக்கைகளை விடுவார்கள். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளி வந்ததில் இருந்து பிரித்தானியா இதுவரை சில அறிக்கைகளை வெளியிட்டு உள்ளனர். ஆனால் அந்த அறிக்கைகளின் தாக்கத்தினை குறைக்கும் பொருட்டு பிரித்தானிய வெளியுறவு செயலக அதிகாரிகள் சிறிலங்காவிற்கு சார்பாக அல்லது அவர்களின் பிரச்சாரங்களுக்கு வலுச்சேர்க்கும் அறிக்கைகளை விடுவார்கள். . ஆனால் இவர்களின் நடவடிக்கையினை த…
-
- 0 replies
- 884 views
-
-
மூத்த ஊடகவியலாளர் தம்பு விவேகாராசா காலமானார்! (படம்) Published on September 18, 2011-5:40 am வவுனியா ஊடகவியலாளர் தம்பு விவேகராசா சனிக்கிழமை நள்ளிரவு அளவில் காலமானார். தினகரன் பத்திரிகையில் நீண்டகாலமாக வவுனியா பிரதேச நிருபராக இவர் பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 55. இரத்த அழுத்த நோய் காரணமாக திடீரென சுகவீனமடைந்து, கடந்த ஒரு வார காலமாக வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இவர் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். ஏஎவ்பி, சண்டே டைம்ஸ், தமிழ் மிரர், தினக்குரல் உள்ளிட்ட பலஊடகங்களுக்கும் இவர் இறக்கும் வரையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.saritham.com/?p=34794
-
- 8 replies
- 1.2k views
- 1 follower
-
-
78 நாட்டு பிரஜைகளுக்கு இணையம் ஊடாக வீசா - ஒன் அரைவல் வீசா ரத்து:- 19 செப்டம்பர் 2011 பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் தீர்மானம் 78 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இணையம் ஊடாக வீசா வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 28ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான வீசா விண்ணப்பங்களை இணையம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் குறித்த நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஒன் அரைவல் வீசா முறைமை ரத்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது. மாலைதீவு மற்றும…
-
- 1 reply
- 1.2k views
-
-
பேச்சுவார்த்தைப் பொறிக்குள் கூட்டமைப்பு சிக்கிக்கொள்ளக் கூடாது என கூறும் புத்திஜீவிகள் யார்? – சுமந்திரன்! Published on September 19, 2011-6:44 am தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது தமிழ் மக்களின் சார்பில் முழுமையான ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என தமிழ் மக்களின் சார்பில் புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர் என வீரகேசரி வாரஇதழ் தனது முதலாம் பக்கத்தில் தலையங்கமாக செய்தி வெளியிட்டிருந்தது. இனி வருங்காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அங்கிகாரத்தை…
-
- 0 replies
- 782 views
-
-
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேர்தவர்கள் தொடர்பான வழக்கு இன்று! Published on September 15, 2011-3:39 am தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய ஐந்து பேர் தொடர்பிலான வழக்கு ஒன்று, இன்றைய தினம் நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது. த ரேடியோ நெதர்லாந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில், நெதர்லாந்தில் நடைபெற்று வந்த தமிழர்களின் கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை காவற்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர். ஒப்பரேசன் கொனிக் என இந்த முன்னெடுப்புக்கு பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக…
-
- 2 replies
- 1k views
-
-
ஸ்ரீமத் அநாகரிக்க தர்மபாலவின் 147வது ஜனன தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பாரதிய ஜனதா கட்சியின், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி முரளி மனோஹர் ஜோசி இலங்கைக்கு வருகைத் தந்துளள்ளார். இந்திய மக்கள் கணக்காய்வாளர் குழுவின் தலைவரான ஜோசி சிரேஷ்ட அரசியல் தலைவர்களுல் ஒருவராவார்.இலங்கையின் தேசிய தலைவர்களுல் ஒருவரான ஸ்ரீமத் அநாகரிக்க தர்மபாலவின் 147வது ஜனன தினவைவத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை மகாபோதி சங்கத்தின் அழைப்பை ஏற்று அவர் இலங்கை வந்துள்ளார். நேற்று முன்தினம் முரளி மனோகர் ஜோஷி கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனை சந்தித்து உரையாடியதுடன் இலங்கையில் எட்டப்படும் நியாயமானதோர் அரசியல் தீர்வுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க தமது கட்ச…
-
- 0 replies
- 640 views
-
-
சிக்கிமுக்கு உதவி செய்ய தயார் : மம்தா சிக்கிமை மையமாகக்கொண்டு ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவு ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 6.11 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்தால் சிக்கிம் தலைவநகர் காங்டாக் பேரவை கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது. காங்டாக் நகரில் பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். பல்வேறு இடங்களில் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை பெய்த் வருவதால் மீட்புபணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிக்குமுக்கு மீட்பு பணிகளில் உதவி செய்யவிருப்பதாக மம்தா பானர்ஜி …
-
- 1 reply
- 785 views
-
-
யாழ் கோட்டையில் ஒல்லாந்து நாட்டின் நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் மகிந்தவின் மாளிகை ! யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகளின்படி, தமிழர் தாயகத்தின் மீதான தனது ராணுவ ஆக்கிரமிப்பின் அடையாளமாக பழைய கோட்டைப் பகுதியில் ஒல்லாந்து நாட்டின் உதவித்திட்டத்தைப் பயன்படுத்தி தனது உல்லாச மாளிகை ஒன்றினை மகிந்த கட்டிவருவதாகத் தெரியவருகிறது. 100 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த மீளமைப்புத் திட்டமானது "சுற்றுலா அபிவிருத்தி" என்கிற போர்வையில் நடத்தப்பட்டு வருவதுடன் இச்செலவின் 60 வீதத்தை ஒல்லாந்து நாட்டும் மீதியை மகிந்தவும் செலவிடவுள்ளார்கள். ஐரோப்பிய ஆக்கிரமிப்பின் சின்னங்களை புணரமைப்புச் செய்யும் ஒல்லாந்து நாட்டின் விருப்பமானது இனவழிப்புப் போர் முடிந்த கைய்யுடன் சிங்கள அரச…
-
- 1 reply
- 978 views
-
-
பொங்கும் தமிழராய் பொங்கி எழுந்து பேரணிகளில் பங்கெடுத்திடுவோம்! தமிழீழ பிரதமர் வி.ருத்ரகுமாரன் [ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 08:34.10 AM EST] இவ்வாரம் இரண்டு 'பொங்குதமிழ்' மக்கள் எழுச்சி நிகழ்வுகள் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்றன. முதலாவது பொங்குதமிழ் பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை, 19.01.2011 அன்று ஜெனிவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை தலைமைப் பணிமனை நோக்கி இடம்பெறுகிறது. இப் பேரணியில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களோடு ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் இணைந்து கொள்கின்றனர். இரண்டாவது பொங்குதமிழ் - விடுதலையின் உயிர் மூச்சுப் பேரணியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை, 23.09.2011 அன்று நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் அவையின் தலைமை…
-
- 5 replies
- 1.1k views
-
-
குடிவரவுச் சட்டங்களை மீறிய இலங்கையர் குழுவொன்று அமெரிக்காவில் கைதாகியுள்ளது குடிவரவு சட்டங்களை மீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் மத்திய அமெரிக்காவின் Belize City க்குள் பிரவேசித்த இலங்கையர் குழு ஒன்றை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது நேற்று முன்தினம் 11 பேரைக்கொண்ட இந்த இலங்கையர் குழுவினர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, தாம் திரைப்படம் ஒன்றின் படபிடிப்புக்காக வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். Belize நகரின் கடலுக்கு அடியில் உள்ள blue hole என்ற குகை தொடர்பான படப்பிடிப்பை நடத்துவதற்காகவே தாம் வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இவர்கள் ஒருவழிப்பயணத்துக்கான விமான அனுமதி சீட்டை மாத்திரமே கொண்டிருப்பதால், அமெரிக்கா அல்…
-
- 0 replies
- 556 views
-
-
பான் கீ மூனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படவுள்ளது? 18 செப்டம்பர் 2011 ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுச் செயலாளர் பான் கீ மூன், அடிப்படை இராஜதந்திர வரைறமுறைகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எழுத்து மூல முறைப்பாடு ஒன்றை முன்வைக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை எந்தவிதமான முன் அறிவித்தலும் இன்றி திடீரென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பான் கீ மூன் மற்றும் நவநீதம் பிள்ளை ஆகியோருக்கு எதிர்ப்பை வெளியிடும் கடி…
-
- 2 replies
- 879 views
- 1 follower
-
-
18 செப்டம்பர் 2011 இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது. யுத்த வலயத்திலும் அதற்கு வெளியேயும் உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்தத் தகவலை அனுப்பி வைத்துள்ளது. 2009 ஜனவரி 20ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 06ம் திகதி வரையில் 4164 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஒ பிளக் ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் 10000த்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எவ்வாறெனினும், நம்பகமான தரவு மூலங்களின் ஊடாக கிடைக்கப் பெ…
-
- 0 replies
- 584 views
-
-
பூதங்கள் இடம்மாறலாம்…… கிறீஸ் பூதங்களின் அட்டகாசம் இன்னமும் குறைவடையவில்லை. சட்டத்தை கையிலெடுத்தால் தண்டிக்கப்படுவரென அரசு கூறுகிறது. அதேவேளை, பாதிக்கப்படும் பெண்களுக்கு எவ்வாறு உதவி செய்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டுமென சிலர் ஆலோசனை வழங்குகின்றார்கள். தற்போது இந்தப் பூத விவகாரம், 18 ஆவது மனித உரிமைகள் பேரவையிலும் எதிரொலித்துள்ளது. மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்ற விவகாரத்தோடு பூதங்களும் இணைந்து விட்டன. அது மட்டுமின்றி நிபுணர் குழு அறிக்கை என்கிற பூதம், மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு இலங்கை அரசை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இந்த முறை தப்பிப் பிழைத்தாலும் வருகிற வருடம் மார்ச் மாதம் வரை, இப்பூதம் இலங்கை ஆட்சியாளர்களை துரத்தியபடியே இர…
-
- 2 replies
- 1k views
-
-
யாழில் 'சுதந்திர ஊடகக் குரல்' எனும் ஊடக அமைப்பு அங்குரார்ப்பணம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உயிரோட்டமாக குரல் கொடுப்பதற்காகவும் ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுகின்ற வன்முறைகளை எதிர்த்து ஜனநாயக முறையில் நடவடிக்கை எடுப்பதற்காக யாழில் சுதந்திர ஊடகக் குரல் எனும் ஊடக அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்த ஊடக அமைப்பு ஆரம்பிப்பதற்கான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அமைப்பிற்கான நிர்வாக தெரிவு இடம்பெற்று அமைப்பின் யாப்பும் வெளியிடப்பட்டது. சுதந்திர ஊடகக் குரல் அமைப்பின் தலைவராக இரா.புத்திரசிகாமணி, உப தலைவராக அருட்தந்தை ஏ. றொஷன் அடிகளார், செயலாளராக திலிப் அழுதன், உப ச…
-
- 1 reply
- 778 views
-
-
தலைமறைவுப் போராளி தலை நிமிர்வான் நாளை-அவன் விடியலையே மீட்காமல் விடியாது எங்கள் காலை பொங்குதமிழ் 2011 வெல்வது உறுதி இசைத்தட்டில் வரலாறு சொல்லும் பாடல்களும் அவை உருவாக்கம் பெற்ற விதமும் இணைப்பு. http://youtu.be/fA3sVfu32lM http://youtu.be/-F1F1HapyIo http://youtu.be/5vfG3bG1WEU http://youtu.be/ApBOI6ZdLA8 http://youtu.be/_kkIQ6muFTE http://youtu.be/D82GUvbpIN8 http://youtu.be/RSyMCTZ5sac http://www.eeladhesam.com/index.php?option
-
- 0 replies
- 2.1k views
-
-
இந்திய கடற்படையினர் கலந்துக்கொள்ளும் விசேட போர் பயிற்சிகள் இன்று 18 செப்டம்பர் 2011 திருகோணமலை கடற்பரப்பில் ஆரம்பம் : இந்திய கடற்படையினர் கலந்துக்கொள்ளும் விசேட போர் பயிற்சிகள் இன்று திருகோணமலை கடற்பரப்பில் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகிறது. சிலிநெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த கடற்படையின் போர் பயிற்சிகள் 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளன. இந்த போர் பயிற்சியானது இலங்கையின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் பாரியளவிலான போர் பயிற்சி என இந்திய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர், டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு சொந்தமான 4 கப்பல்கள் இந்த போர் பயிற்சியில் பயன்படுத்தப்பட உள்ளன.இலங்கையுடன் ராஜதந…
-
- 0 replies
- 498 views
- 1 follower
-
-
முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு கொடுக்க இருந்த ஆடு மாடுகளை மேர்வின் அடாத்தாக கடத்திக்கொண்டு சென்றார். இதனைப்பொலிசார் வேடிக்கைபார்த்துக்கொண்டு இருந்தனர். அதன் பின்னர் பத்திரகாளி அம்மன் சாபம் இட்டாலும் என்பதற்காக புத்த பகவானிடம் போய் முறையிட்ட மேர்வினின் ஆட்கள் இப்போ புத்தருக்கு 1500 போதி பூசை செய்கின்றார்களாம். . இது குறித்து தெரியவருவதாவது; . மேர்வின் சில்வாவுக்கு ஆசிர்வாதம் கோரி நாடு முழுவதும் 1500 போதி பூஜைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர் அவரது அடியாட்கள். முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெறவிருந்த மிருக பலிபூஜையை தடுப்பதற்கு அமைச்சர் மேர்வின் சில்வா தலையிட்டதால் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய சாபங்களை நீக்குவதற்காக இத்தகைய போதி பூஜைகளுக்…
-
- 1 reply
- 934 views
-
-
[sunday, 2011-09-18 11:06:47] இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் அரசுக்குத் தொடர் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுவரும் நிலையில் அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த இணங்கியமை தமிழ் மக்களுக்குச் செய்த துரோகம் என்று குற்றஞ்சாட்டி உள்ளார் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ். நகரில் நேற்றையதினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் தாயகம் என்பவற்றைக் கூறித்தான் கூட்டமைப்பினர் வாக்குகளைப் பெற்றனர். அதன் பின்னர் இப்போது அரசுடன் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண இணங்குவது என்பது துரோகம…
-
- 1 reply
- 512 views
-