ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று(04) ஆரம்பமாகிறது. இம்முறை பரீட்சையில் 346,976 பேர் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 281,445 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் ஆவர். உயர்தர பரீட்சையை முன்னிட்டு, நாடு முழுவதும் 2298 பரீட்சை மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். இன்று ஆரம்பமாகவுள்ள பரீட்சை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மழையுடன் கூடிய வானிலையால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் இணைந்து வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளன. அதற்கமைய வெலிகந்த, அரலகங்வில மற்றும் திம்புலாகல கல்வி வலயங்களைச் சேர்…
-
- 3 replies
- 566 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பாதுகாப்பு உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல்! (இனியபாரதி) (03) இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிறி என்று அழைக்கப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பார்வையாளர்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துள்ளதுடன் ஒருவரை தாக்கவும் முயன்றுள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் போதனாமருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் தனது தாயாரினை கண் சத்திர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். அவர் வீட்டுக்கு வந்து உணவு எடுத்துக் கொண்டு சென்று தாயாருக்கு வழங்கியுள்ளார். இதன்போது அங்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அந்த பெண்ணுடன் அநாகரிகம…
-
- 2 replies
- 469 views
-
-
04 JAN, 2024 | 05:37 PM மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரமாக உள்ள வியாபார நிலையங்களை இன்று வியாழக்கிழமை (4) மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதன்போது 7 வியாபார நிலையங்களில் மனித பாவனைக்கு உதவாத கெரட், கருவா, வாழைப்பழம், தோடம்பழம், இனிப்புப் பண்டமான பூந்தி போன்ற பெருமளவிலான பொருட்களை கைப்பற்றியதாகவும், அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் த.மிதுன்ராஜ் தெரிவித்தார். மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலைமையிலான குழுவினரால் இன்று காலை 10 மணியளவில் முன்னெடுக்கப…
-
- 1 reply
- 418 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கை கடற்படையினரால் கடந்த ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 343 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய 715 கிலோ ஹெரோயின், 3711 கிலோ கேரள கஞ்சா, 50 கிலோ உள்நாட்டு கஞ்சா, 140 கிலோ அஷீஸ், 11 கிலோ ஐஸ் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு 92 572 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 18 உள்நாட்டு மீன்பிடி படகுகளுடன் 187 சந்தேக நபர்களும், ஈரான் படகுடன் 5 ஈரான் பிரஜைகளும், பாக்கிஸ்தான் பிரஜைகள் மூவரும், இரு இந்திய படகுகளுடன் 6 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்…
-
- 0 replies
- 326 views
-
-
Published By: DIGITAL DESK 3 04 JAN, 2024 | 03:09 PM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2024ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத்குமார தெரிவித்தார். இதன்படி, இதுவரை மருத்துவ உதவி வழங்கப்படாத நோய்கள் கண்டறியப்பட்டு, அந்த நோய்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
04 JAN, 2024 | 01:03 PM சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் உள்ள புகையிரத கடவை காவலர்கள் இன்று (04) முதல் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதியின் வடக்குக்கான விஜயத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று 4ஆம் திகதி காலை 6 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ள புகையிரத கடவை காவலர்கள் சங்கத்தின் தலைவர், அந்த நேரத்தில் பயணிகளை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான அறிவித்தலை முல்லைத்தீவு ஊடக மையத்தில் நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளிப்படுத்திய புகையிரத …
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 04 JAN, 2024 | 03:27 PM மரக்கறிகள் மீதான வரியினை குறைக்குமாறு கோரி வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வியாபாரிகள் இன்று வியாழக்கிழமை (04) பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பிரதேச சபையினால் சந்தையானது ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் எடுக்கும் குத்தகைதாரருக்கு வியாபாரிகள் 4 வீத வரி செலுத்த வேண்டும் என்ற விடயம் ஏற்கனவே அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பிரதேச சபையும் சந்தையை குத்தகைதாரருக்கு வழங்கியது. இந்நிலையில் குறித்த வரி பிரச்சினை ஏற்பட்டதனால் குத்தகைதாரர், வலி.மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் குறித்த பகுதிக்க…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
யாழில் கரையொதுங்கிய மர்மப் பொருளால் பரபரப்பு! யாழ் உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே மர்மப் பொருளொன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பொருளில் Asia 2 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஏதாவது கப்பலில் இருந்து குறித்த பொருள் தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென பொலிஸாரினால் சந்தேகிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக உடுத்துறை, வேம்படி,நாகர்கோவில், ஆகிய பகுதிகளில் பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 686 views
-
-
யாழில். தொடரும் காணி மோசடிகள் – ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணையில்! adminJanuary 4, 2024 யாழ்ப்பாணத்தில், கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணை பெற்றுள்ளனர். அதேவேளை மேலும் சில நொத்தாரிசுகள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு, தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல சட்டத்தரணியும் , நொத்தாரிசுமானவரை ஐந்து இலட்ச ரூபாய் சரீர பிணையில், யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்று முன் பிணை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில்…
-
- 3 replies
- 739 views
-
-
04 JAN, 2024 | 11:19 AM இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு 474 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த பல வருடங்களாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 439 என்றளவில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 375 யானைகள் உயிரிழந்தன. இந்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உருவாகும் மோதல்கள் காரணமாகவே ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் திமுது சந்தருவான் சேனாதீர இது தொடர்பில் கூறுகையில், சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியைப் பார்க்கும்போது, அதிகளவிலான யானைகள் இறப்பு பதிவாகியுள்ளது. …
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 03 JAN, 2024 | 03:46 PM 2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நேர அட்டவணையில் சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரிய மொழி புதிய பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதால் உயர்தரப் பரீட்சை நேர அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும் பரீட்சை அனுமதி அட்டையில் திருத்தப்பட்ட நேர அட்டவணை குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து பரீட்சார்த்திகளும் முன்னதாக வழங்கிய பரீட்சை நேர அட்டவணையைப் …
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 03 JAN, 2024 | 04:32 PM வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை இட்டபோது அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்றைய தினம் நீதிமன்றத்தில் காதலர்கள் இருவரும் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் அவர்க…
-
- 0 replies
- 405 views
- 1 follower
-
-
(ஆதவன்) கனடாவில் குடியுரிமைபெற்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வயோதிபர், கனடாவிலிருந்து தாயகத்துக்குத் திரும்பியிருந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். கனடா, மொன்றியேலைச் சேர்ந்தவரும், தற்போது வல்வெட்டித்துறை ரேவடியில் வசித்து வந்தவருமான வேலுப்பிள்ளைநந்தகுமார் (வயது-60) என்பவரே உயிரிழந்தவராவார். வாய் மற்றும் மூக்கில் இருந்து நுரை வெளியேறிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 29ஆம் திகதி சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்ட அவர் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் (01) திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். வல்வெட்டித்துறையில் இருந்து புலம்பெயர்ந்து கடந்த 40 வருடங்களாக அவர் கனடாவில் வசித்து வருகின்றார். க…
-
-
- 78 replies
- 6.4k views
-
-
(புதியவன்) யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி 8 பேருக்கு எதிராகத் தடை உத்தரவு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கில் பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக நாளை யாழ்ப்பாணம் வருகின்றார். யாழில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தங்கியிருக்கும் அவர், வடக்கின் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டத்தைத் தடுக்கும் வகையில் 8 பேருக்கு…
-
- 5 replies
- 674 views
-
-
இந்த வழக்கு நேற்று (02) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் காணப்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் தோற்ற அடிப்படையில் இது மனித ஆட்கொலை என நீதிபதி தெரிவித்தார். மேலும், இரண்டாவது சாட்சி ஐந்து பொலிஸார் சித்திரவதை செய்ததாக தெரிவித்த நிலையில் மேலதிக சந்தேகநபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணைப் பொறுப்பதிகாரிக…
-
- 2 replies
- 439 views
-
-
(நா.தனுஜா) இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்துக்கு எதிராக நாட்டிலுள்ள ரோஹிங்கிய அகதிகள் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அவ்வலுவலகத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுத்தனர். அதுமாத்திரமன்றி பிறிதொரு நாட்டில் தமக்குரிய நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுமாறும், இதுவரை காலமும் தமக்கு வழங்கப்பட்டுவந்த மாதாந்தக் கொடுப்பனவை நிறுத்தவேண்டாம் எனவும் வலியுறுத்தி அவர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர். மியன்மாரில் 2017 ஆம் ஆண்டளவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் மற்றும் 'முஸ்லிம் சிறுபான்மையினருக்க…
-
- 1 reply
- 620 views
-
-
பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளை கிளிநொச்சியில் புதைக்க நடவடிக்கை! கிளிநொச்சி வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளை உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – குப்பிளானில் உள்ள களஞ்சியசாலையில் பழுதடைந்த உருளைகிழங்கு விதைகளை பொதி செய்து வாகனத்தில் ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது. பொலித்தீன் பையில் பாதுகாப்பாக அகற்றி விவசாய நிலங்கள், நிலத்தடிநீர் மற்றும் குடியிருப்புக்களை பாதிக்காத வகையில் புதைக்கப்படவுள்ளது. விவசாய திணைக்களத்தின் கண்காணிப்பில் மூன்று அடி ஆழத்திற்கு கீழே பாதுகாப்பு முறைமைகளை கையாண்டு சில தினங்களுக்குள் பழுதான உருளைக்கிழங்கு விதை…
-
- 0 replies
- 281 views
-
-
திருகோணமலை தமிழ் மாணவர்கள் படுகொலை : நினைவேந்தல் முன்னெடுப்பு! திருகோணமலை நகரில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. உள்நாட்டு போர் உச்சமடைந்திருந்தவேளை இடம்பெற்றிருந்த இந்த சம்பமானது மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஒன்று என உள் நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ந்தும் பேசப்படுகின்றது. சர்வதேச மன்னிப்பு சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசு மீது வன்மையான கண்டனத்தை அவ்வேளை வெளியிட்டிருந்தனர். திருகோணமலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்களான இவர்கள், பாடசாலை கல்வியை முடித்த பின்னர் பல்கலைக…
-
- 1 reply
- 260 views
-
-
யாழ் பொலிஸாரின் நடவடிக்கைகளில் சந்தேகம் : அமைச்சர் டக்ளஸ்! யாழ். மாவட்டத்தில் போதைபொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸாரின் நடவடிக்கைகள் கந்தேகத்தினை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். காணொளி ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல இரத்நாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்விடயத்தினைச் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “போதைப் பொருள்பாவனைக்கு எதிராக யாழ் மாவட்டத்தில் பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் அதிருப்தியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துகின்றது. சில சந்தர்ப்பங்களில் போதைப் பொருள…
-
- 6 replies
- 971 views
-
-
பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர்கள் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் புதிய ஆண்டில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இதில் தமிழர் தரப்பு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பற்றிப்பேசி அதில் இணக்கம் காண்பவரை ஆதரிப்பது, தமிழ்த் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது, தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பது என்று மூன்று விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. இதில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர…
-
- 6 replies
- 443 views
-
-
2023 ஆம் ஆண்டு 14,66,556 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். இந்த ஆண்டு சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளை நாட்டுக்கு சுமார் 719,978 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தந்திருந்தனர். எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார விநியோகம் துண்டிப்பு மற்றும் சமூக கட்டமைப்பின் அமைதியின்மை ஆகிய காரணிகளால் சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்ததாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிடுகிறது. 2023 ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை …
-
- 0 replies
- 170 views
-
-
பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டின் பின்னர் படிப்படியாக குறைவடையும். எனவே கடந்த ஆண்டைப் போன்று இவ்வாண்டும் மக்கள் அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கேட்டுக் கொண்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த கோரிக்கையை முன்வைத்த அவர், மேலும் குறிப்பிடுகையில், 2023 மூன்றாம் காலாண்டிலிருந்து பொருளாதார வளர்ச்சி வேகமானது நேர்மறையாகியுள்ளது. அதற்கமைய 2022இல் மறை பெறுமானத்துக்கு வீழ்ச்சியடைந்த பொருளாதார வளர்ச்சி வேகம் 2023இல் …
-
- 0 replies
- 340 views
-
-
Published By: RAJEEBAN 01 JAN, 2024 | 02:46 PM ஒருவருட காலத்திற்கு சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் தனது துறைமுகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்போவதில்லை என இலங்கை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் துறைமுகத்திற்குள்ளும் விசேட பொருளாதார வலயத்திற்குள்ளும் சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் நுழைவதற்கு அனுமதிவழங்கப்போவதில்லை என கொழும்பு புதுடில்லியிடம் தெரிவித்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக இந்தியாவிற்கு இலங்கை தகவலை தெரிவித்துள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என இந்தி…
-
- 1 reply
- 423 views
- 1 follower
-
-
இந்து மதத்துக்கும் அரசமைப்பில் முன்னுரிமை யாழ். வரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க முடிவு பல்லாயிரம் ஆண்டுகாலமாக வரலாறு கொண்ட இலங்கையின் இந்து சமயத்துக்கு அரசமைப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள் ளிட்ட சில கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்க இந்து அமைப்புகள் தீர்மானித்துள்ளன. இந்து அமைப்புகளின் ஏற்பாட்டில் வட மாகாணத்தில் சைவ அமைப்புகள் எதிர் நோக்கும் சமயரீதியான பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நல்லை ஆதீன திருஞானசம்பந்தர் மண்டபத்தில் சிவசேனை அமைப்பின் தலைவர் மற வன்புலவு சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்றது. இந்து அமைப்புகளின் கோரிக்கைகள் இதன்போது அடையாளம் காணப்பட்டு அவை அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதியின் யாழ…
-
- 0 replies
- 453 views
-
-
“வடக்கில் 90 வீதமான குற்ற செயலை கட்டுப்படுத்திவிட்டோம்” "06 மாதங்களுக்குள் போதை பொருளையும் ஒழிப்போம்" adminJanuary 1, 2024 வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் காவற்துறை மா அதிபர் மஹிந்த குணரத்ன தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜூன் மாத காலப்பகுதிக்குள் வடக்கில் போதைப்பொருள் ஒழிக்கப்படும். போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் நுகர்வு ஆகியவற்றில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையால் வ…
-
- 0 replies
- 485 views
-