Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தோழர்களே ! நம் அண்ணன்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 அண்ணன்மார்களுக்கும் தூக்கு உறுதி படுத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம். தூக்கு உறுதி செய்யப்பட்டு உள்துறை செயலகம் பரிந்துறை செய்திருக்கிறது.இனி முகனுளில் பல வெற்று விவாதங்களை விட்டு உறுதியாக இந்த அரசுகள் தூக்கு தண்டையை ரத்து செய்யும் அளவிற்க்கு அனைத்து துறை சார்ந்த தமிழர்களை போராட வீதிக்கு வரவும் அடுத்த கட்ட போராட்டங்களை நடத்த இணைய தளத்தில் உள்ளவர்கள் தயவு செய்து எல்லோர் இடத்திலும் பேசுங்கள் ,இவர்களை காக்க தவறினால் நாமும் இந்தியன் என்கிற பயங்கிறவாதிகளே….. இங்கே சென்று கையெழுத்திடுங்கள். http://www.change.or...ent-perarivalan OVERVIEW The background: ============ O…

    • 8 replies
    • 1.7k views
  2. ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை இன்னமும் பதிலளிக்கவில்லை 14 ஆகஸ்ட் 2011 நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இன்னமும் உத்தியோகபூர்வமாக பதிலளிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் முழுமையான பதில் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் விரைவில் அவ்வாறான ஓர் பதில் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நிபுணா குழு …

    • 3 replies
    • 416 views
  3. ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 14, 2011 பழைய இரும்புகளுடன் தென்னிலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்த எட்டு லொறிகளை ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்துப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஒரு லொறியில் வெடிபொருட்கள் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். யாழ்.குடாவிலும் வன்னிப் பிரதேசத்திலுமிருந்தே இந்த இரும்புகள் பெறப்பட்டுள்ளன. இதேவேளை, காங்கேசன்துறை துறைமுகக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களின் இரும்புகளும் இதில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை அகற்றும் பணிகளை இந்திய அரசு பொறுப்பேற்று அந்த வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் குறிப்பிட்ட கப்பல்களிலிருந்து அகற்றப்பட்ட இந்த இரும்புகள் எவ்வித அனுமதிப்பத்திரம் இன்றி தென்ன…

    • 0 replies
    • 847 views
  4. கிழக்கு மாகாணத்தில் காவல்துறையினரின் விடுமுறை ரத்து 13 ஆகஸ்ட் 2011 கிழக்கு மாகாணத்தில் காவல்துறை உத்தியோகத்தர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சகல காவல் நிலையங்களுக்கும் காவல்துறை தலைமையகம் இந்த விசேட அறிவிப்பினை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலைமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ் பேய் அச்சம் காரணமாக கிழக்கில் காவல்துறையினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், அவசர நிலைமைகளுக்கு இந்த விடுமுறை ரத்து உத்தரவு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltam...IN/article.aspx

  5. சனல்4 காணொளியை உலக நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவிடுவதால் அதற்க்கான பதில் அறிக்கையை அவசர அவசரமாக 50 நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது சிறிலங்கா. [Saturday, 2011-08-13 20:55:49] சனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையஜனை 50 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயர்ஸ்தானிகராலயங்கள், தூதுவராலயங்கள் மற்றும் கொன்சோல் காரியாலயங்கள் உள்ள நாடுகளில் இந்த அறிக்கை அல்லது வீடியோ காட்சிகளை பார்வையிட முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. சனல்4 காணொளிக்கான பதில் காணொளி அண்மையில் தாய்லாந்…

  6. ஐ.தே.க தலைமைத்துவ பிரச்சினை மேலும் உக்கிரம் Posted by சங்கீதா on 14/08/2011 in செய்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பிரச்சினை நாளுக்கு நாள் மேலும் உக்கிரமடைந்து செல்கின்றது. எதிர்வரும் வாரத்திற்குள் உரிய தீர்வு எடுக்கப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என சஜித் தரப்பினர், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவித்துள்ளனர். கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைவாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். கட்சியையும் கட்சி ஆதரவாளர்களையும் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு கடுமையான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கூட்டம…

  7. ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 14, 2011 திருகோணமலை,மூதூரிலுள்ள கடற்படை முகாம் மீது பொதுமக்கள் இன்று காலையில் நடத்திய தாக்குதல் காரணமாகக் கடற்படை முகாமுக்குச் சேதமேற்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறீஸ் பூதம் ஒன்று குறிப்பிட்ட கடற்படை முகாமுக்குள் நுழைவதனை அவதானித்த பொதுமக்கள் கடற்படை முகாமைச் சூழ்ந்து கொண்டு சரமாரித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் முகாமுக்குச் சொந்தமான நீர்த்தாங்கி ஒன்றும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. . நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள்; கொண்டு வருவதற்கு அங்கு விரைந்த பொலிஸார் முயற்சித்த போதும் அவர்கள் மீதும் பொதுமக்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன் காரணமாக பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார் என்றும் பொலி…

  8. வடக்கு மருத்துவ மனைகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன – ICRC 14 ஆகஸ்ட் 2011 யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு மருத்துவ மனைகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல் தடவையாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. வடக்கின் மருத்துவ மனைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சில நோயாளிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. சுகாதார சேவை ஆபத்தை எதிர்நோக்குகின்றது என்ற தலைப்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அண்மையில் வெளியிட்ட அறி;க்கையில் இந்த விடயங்கள் குறிப்…

  9. 90 வீதமான சட்டவிரோத ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்படவில்லை 14 ஆகஸ்ட் 2011 90 வீதமான சட்டவிரோத ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் ஆயுதங்கள் மீள ஒப்படைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுமன்னிப்புக் காலத்தில் மிகவும் சொற்பளவிலான ஆயுதங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத ஆயுதங்களை மீட்கும் நோக்கில் புலனாய்வுப் பிரிவினர் விசேட தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்துள்ளனர். கருணா, பிள்ளையான், ஈ.பி.டி.பி மற்றும் ஈரோஸ் போன்ற குழு…

  10. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து சர்வதேச ரீதியிலான விசாரணைகள்? 14 ஆகஸ்ட் 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து சர்வதேச ரீதியிலான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு மற்றும் சட்டபூர்வமான செயற்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி திரட்டல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிற…

  11. மூன்று தமிழர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே மூவரின் மரண தண்டனையை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும் சென்னையில் 17.08.2011 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் சென்னை, 17.08.2011. இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும அப்பாவித் தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார். இராசீவ் கொலை வழக்கிற்கு தடாச் சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும், அதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கொண்டு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. காவல் அதிகாரியிடம் …

    • 0 replies
    • 545 views
  12. பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே வணக்கம்: தூக்குக் கொட்டடியிலிருந்து நான் கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப் பட்ட நீதி பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே, வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவால் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள்முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன். தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனித நேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் …

    • 0 replies
    • 875 views
  13. இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் இந்த அரசு தமிழ் மக்களையும் உலகையும் ஏமாற்றுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரமிக்க சகோதரரான் கோத்தபாய தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவை இல்லை என்கிறார். மற்றொரு சகோதரரான பஸில் ராஜபக்ஷவோ, பேச்சு மூலம் தீர்வு எட்டப்படும் என்கிறார். இவர்களில் எவரின் பக்கம் தான் இருக்கிறார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு, குறிப்பாகத் தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அண்மையில் பேட்டி அளித்திருந்த பாது…

    • 0 replies
    • 639 views
  14. இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி சாத்தான் வேதம் ஓதுவதா? ஜெயலலிதா அரசு சட்டமன்ற தீர்மானம் பற்றி கலைஞர் விளக்கம் இலங்கை தமிழர் போராட்டத்துக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளின் போராட்டத்துக்கு எதிராகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஜெயலலிதா, இப்போது இலங்கை தமிழர்களுக்காக பரிந்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். திமுக தலைவர் கலைஞர் (12.08.2011) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஒரு தீர்மானம் ஒன்றின் மீது பேசிய ஜெயலலிதா, முந்தைய திமுக ஆட்சியில் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டமன்ற பேரவையில…

  15. நீதி, பொறுப்புக்கூறும் தன்மை நிரந்தரத் தீர்வுக்கு அவசியம் - பிரித்தானிய தமிழர் பேரவை நீதி மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை என்பவை வறுமை மற்றும் போலியான அபிவிருத்தி என்னும் பெயரில் விட்டுக் கொடுக்கப்படவோ அல்லது பதிலீடு செய்யப்படவோ முடியாதவை. பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் புனர்வாழ்வு ஆகிய இரண்டும் இலங்கையில் ஒரு நிரந்தரத் தீர்வுக்கு அவசியமாகும் என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. சமகால அரசியல் நிலமைகளை விளக்கி பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை: நீதி மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை என்பவை வறுமை மற்றும் போலியான அபிவிருத்தி என்னும் பெயரில் விட்டுக் கொடுக்கப்படவோ அல்லது பதிலீடு செய்யப்படவோ முடியாதவை. பொறுப்புக்கூறும் தன்மை மற்ற…

    • 0 replies
    • 325 views
  16. மீண்டும் வலம் வரும் மாயமான், நாடாளுமன்றத் தெரிவுக்குழு -இதயச்சந்திரன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கலாநிதி பட்டமளித்துள்ளது பீஜிங்கிலுள்ள பல்கலைக்கழகம். போர்க்குற்ற விசாரணை தொடர்பாக சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் போது, இவ்வகையான பட்டமளிப்பு விழாக்கள், புதிய பிம்பங்களைக் கட்டமைத்து மனிதாபிமான முகங்களை உருவாக்கி விடுமென சிலர் கற்பிதம் கொள்கிறார்கள். பொருண்மியப் பலம் பொருந்திய நட்பு வட்டத்துள் தாம் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதன் ஊடாக அழுத்தங்களைத் தணிக்கலாம் என்கிற கனவிலும் வாழலாம். இருப்பினும் பிராந்திய ஆதிக்கப் போட்டியில் முட்டி மோதும் வல்லரசாளர்கள், பொய்யான பிம்மங்களையிட்டு சிரத்தை கொள்வதில்லை. 'கலாநிதி' மஹிந்த ராஜபக்ஷ குழுவினரின் சீனப் …

    • 0 replies
    • 319 views
  17. அழுத்தங்கள் அதிகரித்தால் ஐ. நா. கூட்டத்தில் கஸ்ரோவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இறுதி ஆயுதத்தை பாவிப்போம்! புலிகளுக்கு உதவியவாகளுக்கு சிறிலங்கா அரசு எச்சரிக்கை. [saturday, 2011-08-13 12:23:34] வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் சில மேற்கத்தைய நாடுகளின் இரகசியங்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தம்மீது தற்போது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் பல மேற்கத்தைய நாடுகள் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அயுதங்களையும் தொழில்நுட்ப…

  18. இலங்கையின் மீது போர் தொடுப்போம்! ஆயுதங்களின்றிப் புறப்படுங்கள் படகுகளில்!நாடாளுமன்றம் முன்பாக உறுமிய பாரதீய ஜனதாக் கட்சி. [saturday, 2011-08-13 11:25:24] இலங்கை மீது ஆயுதங்கள் இன்றி ஒரு தாக்குதல் தொடுப்போம் என்று இந்திய நாடாளுமன்றம் முன்பாக உறுமி இருக்கிறது பாரதீய ஜனதாக் கட்சி. அதன் முக்கிய தலைவரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்தவருமான யஸ்வந்த் சின்ஹா நேற்று இதனைத் தெரிவித்தார். "இந்தியர்கள் எல்லோரும் உறுதியாக ஈழத் தமிழர்களை ஆதரிக்கின்றோம் என்பதை உலகுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்'' என்றார் அவர். மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் புதுடில்லியில் இந்திய நாடாளுமன்…

  19. ‘டாக்டர்’ பட்டம் என்ன விலை (தறு)தலைவா? மாட்சிமை தங்கிய, மேதகு, மாண்புமிகு , ‘கலாநிதி’ மகிந்த ராஜபக்ஸ என்றுதான் இனி அழைக்க வேண்டும். மகிந்தருக்கு அண்மையில் கடிதம் எழுதிய எம்.பீ. சுமந்திரனும் இதைக் கவனிக்க வேண்டுகிறோம். ‘கலாநிதி’ என்று விளிக்காத கடிதங்களை ,குப்பையில் போடுமாறு மகிந்தர் கட்டளையிட்டு இருப்பதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் தூங்கும்போதும் அந்தத் தொப்பியோடு படுப்பதாக துணைவியார் கவலைப்படுகிறார். ரஷ்யாவும் சீனாவும் ‘கலாநிதி’ பட்டத்தைக் கொடுத்து விட்டார்கள். அடுத்ததாக நம்ம காந்தி தேசம்தான். ‘பிளீஸ் சிட் டவுன்’ என்று அ.தி.மு.க எம்பீக்களை அதட்டிய ”சபாநாயகி’ மீரா குமாரோ,அல்லது முருகன்,பேரறிவாளன், சாந்தன் போன்றோரின் கருண…

  20. நாட்டின் பல பாகங்களில் நிலவும் பதற்ற நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பு – விஜித ஹேரத் 13 ஆகஸ்ட் 2011 நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வரும் பதற்ற நிலைமைக்கு அசராங்கமே பொறுப்பு சொல்ல வேண்டுமென ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கிறிஸ் பேய் பிரச்சினை நாடு முழுவதிலும் காணப்படுவதாகவும் இதற்கு அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மஹியங்கனை, கண்டி, கந்தளாய், ஹட்டன் மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் கிறிஸ் பேய் அச்சம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். மக்களின் சமாதானத்தையும் அமைதியையும் சீர்கு…

  21. மூன்று இளம் தமிழர்களின் உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் – ஜெயலலிதாவிடம் வைகோ வேண்டுகோள்! Saturday, August 13, 2011, 20:46 சிறீலங்கா சாந்தன், முருகன் எனும் இம்மூவரும், ‘திருபெரும்புதுhர் கொலைச்சம்பவத்தில், குற்றவாளிகள் அல்ல என்பதுதான் உண்மை’ ஆகும் எனவே அவர்களை விடுதலை செய்யநடவடிக்கை எடுங்கள் என்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இருபது ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடி வதங்கி, வாழ்வின் அற்புதமான வாலிபப் பருவத்தைத் துன்ப இருளில் பறிகொடுத்து விட்ட, மூன்று தமிழ் இளைஞர்களின் உயிரை முடிக்க, அவர்களுக்குத் துhக்குத்தண்டனையை இந்திய அரசு உறுதிப…

  22. மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கிறீஸ் மனிதர்கள்: பின்ணணியில் மகிந்தரின் இராணுவம்? (video&Photo in) Saturday, August 13, 2011, 10:23 சிறீலங்கா, முதன்மைச்செய்திகள் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்தியுள்ள கிறீஸ் மனிதன் என்று கூறப்படுவோரின் செயற்பாடுகள் அதிகரிக்கும் நிலையில் இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இராணுவத்தினரினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படுகின்றதா என்றே சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளது. மலையகத்தில் ஆரம்பித்து தற்போது கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கிறீஸ் மனிதன் என்று கூறப்படுவோரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இத்தனைக்கும் அரசாங்கம் ஆக்க பூர்வமான செயற்பாடுகள் எதனையும் செய…

  23. தமிழ்வாணியை இழிவுபடுத்தும்படியான கோத்தாவின் கூற்றுக்கு கண்டனம் 2009 யுத்தகாலப்பகுதியில் தமிழர்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின், நேரில் கண்ட சாட்சியமாக விளங்கும் செல்வி தமிழ்வாணியைஇழிவுபடுத்தும் நோக்கிலான, சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கூற்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டித்துள்ளது. சிறிலங்கா படைகளினால் பெண்கள் பாலியல்வன்மத்துக்கு உள்ளாக்கப்பட்டதாயின், தமிழ்வாணி எவ்வாறு எவ்வித பாதிப்புக்களும் இன்றி, இலங்கையைவிட்டுச் தப்பிச் சென்றார் எனும் கேள்வியை முன்னிறுத்தி, பாதுகாப்பு செயலர் கோத்தாபய அவர்கள் இந்திய தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்திருந்தார். பாதுகாப்பு செயலரின் இக்கருத்து குறித்து, நா.த.அரசா…

  24. இந்திய அமைதிப்படையின் படுகொலைகள் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை? - கேள்வி எழுப்புகிறார் கோமின் தயாசிறி [ சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2011, 11:05 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்று சிறிலங்கா மீது தாக்குதல் தொடுத்துள்ளவர்கள் இந்திய அமைதிப்படைகளால் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஏன் வாய் திறப்பதில்லை என்று சிங்களத் தேசியவாதியும் சட்டநிபுணருமான கோமின் தயாசிறி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் பொதுமக்கள் இந்திய அமைதிப்படையாலும் சிறிலங்காப் படையிராலும் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகின்ற நிலையில், சிறிலங்காப் படையினரை பொறுப்புக் கூறுமாறு வலியுறுத்துபவர்கள் இந்திய அமைதிப்படை குறித்து பேசுவதில்லை என்றும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.