ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143323 topics in this forum
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி சர்வதேச ரீதியில் போராட்டம்! - விக்கிரமபாகு கருணாரட்ன அறிவிப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதைக் கண்டித்தும், தமிழ் மக்களுக்கு உடனடியாக அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பத்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த 4ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது…
-
- 1 reply
- 581 views
-
-
இந்தியாவோ ஐரோப்பிய நாடுகளோ எமக்கு உத்தரவிடமுடியாது! மஹிந்தவுக்கு ஆலோசனை கூறும் குணதாச அமரசேகர. [Monday, 2011-08-08 08:47:11] நாட்டின் பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொள்வோம். இந்தியாவோ ஐரோப்பிய நாடுகளோ எமக்கு உத்தரவிடமுடியாதென இனிமேலாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்மென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார். அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நிபந்தனை விதித்துள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை விதித்ததன் பின்னணியில் இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளுமே உள்ளன. அவர்களின் நிகழ்ச்சி ந…
-
- 2 replies
- 721 views
-
-
இலங்கையில் வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு தீர்மானம்! [Monday, 2011-08-08 11:06:07] இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு,கிழக்குப் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் ஆயுதப்போராட்டம் முடிவக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு ஒன்றை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு உருப்படியான ந…
-
- 1 reply
- 798 views
-
-
தமிழனுக்கு அநீதி ஏற்பட்டால் பாஜக வேடிக்கை பார்க்காது - பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு தமிழனுக்கு அநீதி ஏற்பட்டால் பாஜக வேடிக்கை பார்க்காது என அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டுத் தரக் கோரி, ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை பாஜக சார்பில் கடல் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்குத் தலைமை வகித்து, அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த மத்திய காங்கிரஸ் அரசும், அதற்குத் துணைபோன திமுக அரசால் இன்று தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். கச்சத்தீவில் பாதுகாப்பாக மீன் பிடிக்கும் உரிமை வேண்டி நானும், சுப.நாகராஜன் உள்ளிட…
-
- 0 replies
- 718 views
-
-
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை மகாநாட்டில் சிறிலங்கா அரசின் போர்க்குற்ற விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என மனித உரிமைப் பேரவை பேச்சாளரான ரவினா ஷம்டாசினி தெரிவித்துள்ளார். . இருப்பினும் இந்த அமர்வின் போது மனித உரிமைகள் விவகாரம் குறித்த விவாதங்களில் போது சிறிலங்காவின் விடயங்களைத் தொட்டுச் செல்ல முடியுமெனவும் அவர் கூறியுள்ளார். . இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அல்லது பாதுகாப்புச் சபையின் இசைவுக்கு ஏற்ப மட்டுமே சிறிலங்கா அரசின் போர்க் குற்றம் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Eelanatham UN Secretary General Ba…
-
- 2 replies
- 750 views
-
-
இலங்கை யாத்திரிகர்களுக்கு சென்னை பொலிஸார் தடை? இலங்கையிலிருந்து செல்லும் யாத்திரிகர்களுக்கு சென்னை ஹோட்டல்களில் தங்குவதற்கு இடமளிக்கக் கூடாது என்று சென்னை பொலிஸார் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சென்னையில் உள்ள பௌத்த மஹா போதி சங்கத்திற்கு செல்லவிருந்த இலங்கை யாத்திரிகர்கள் பலர் தமது பயணத்தை கைவிட வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர். பொலிஸார் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்து மஹா போதி சங்க யாத்திரிகர்களுக்கு வட சென்னையி்ல உள்ள சில ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் இடம் கொடு்கக மறுக்கின்றன என்று சென்னை மஹாபோதி சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை இறுதி முதல் தொடங்கும் மஹாபோதி யாத்திரைக் காலத்தில் இலங்கையில் இருந்து பல யாத்திரிகர்கள் சென்னைக்கு…
-
- 2 replies
- 1.7k views
-
-
தெற்கிற்கு விற்பனை செய்யக் கூடிய ஓர் தீர்வுத் திட்டமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு முன்வைக்க வேண்டும் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார் ரட்னசிறி விக்கிரம நாயக்க. . தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு தயார், பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படல்வேண்டும் என்பதில் எவ்விதமான கருத்துவேறுபாடுகளும் இல்லை. எனினும் 24 மணிநேரத்திற்குள் தீர்வை வழங்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய தேசிய பிரச்சினையாக இதனை நோக்க வேண்டும். பொறுமையுடன் அனைத்து தரப்பினரும் செயற்படுவதன் மூலம் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வினை எட்ட முடியும் என்றா…
-
- 1 reply
- 557 views
-
-
thx http://newjaffna.com
-
- 0 replies
- 504 views
-
-
எப்படி? எதிர்வரும் (9th April 2011) 2011 ஆம் ஆண்டிற்கான அவுஸ்திரெலியா சனத்தொகை கணக்கெடுப்பில் தரப்படுகின்ற படிவத்தில் அல்லது இணையத்தில் வினா 16 இற்கும் வினா 18 இற்கும் “TAMIL” என்று பதில் அளிப்பதன் மூலம்
-
- 4 replies
- 762 views
-
-
சுவாசப்பை ஒன்று கிடையாது. தலையில் மட்டும் 45 தையல் கள். நடக்கவே முடியாத நிலைமை. எழுத்தால் எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஒரு த ன்னம்பிக்கை நூல் எழுத்தாளருக்குத்தான் இந்த நிலைமை. சென்னை ஆழ்வார்திருநகரில் வசிக்கும் சண்முகம் பிரபல எழுத்தாளர் இல்லை. ஆனால் தடைகளை மீறி முன்னேறப் போராடும் பலரைப் பற்றி பத்திரிகைகளில் எழுதி, அவர்களுக்கு உதவிகள் பெற்றுத் தந்திருக்கிறார். அவர்களைப் பற்றி புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சத்தமில்லாத இந்த சாதனையாளரின் வாழ்க்கை இப்போது சோதனையில். “எனக்கு சொந்த ஊர் யாழ்ப்பாணம். ஒரு நாளிதழில் நிருபரா இருந்தேன். 1983-ல் இலங்கையில் இனக்கலவரம் தொடங்கிச்சு. கண்ணில் பட்ட தமிழர்க¬ ளயெல்லாம் சிங்கள ராணுவம் இழுத்துட்டுப் போய் கண்மூடித்தனமா அடிச்ச…
-
- 0 replies
- 939 views
-
-
தமிழீழ மண்ணின் ஊர்ப் பெயர்கள் & தெருப் பெயர்கள் & வணிக நிலையப் பெயர்கள் அனைத்தும் பிரபாகரன் காலத்தில் தனித் தமிழ்ப் பெயர்களாய் தகதகத்தன. இன்று -தமிழீழத்தின் அனைத்து தமிழ்ப் பள்ளிக் கூடங்களுக்கும் மீண்டும் சிங்கள ஆசிரியர்கள் அனுப்பப்படுவதாக சினமூட்டும் செய்திகள் வெளிவருகின்றன. தமிழீழத் தேசிய இனத்தின் முதன்மை உயிர்க் கூறான தாய் மொழியாம் தமிழ்மொழி,சிங்கள இனவெறி அரசால் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு பொருள் இன்னொரு பொருளோடு நெருக்கமாக இயையும் போதில் - கல்லோடு கல் உரசுதல் -வெப்பக் கருத்தும் ஒளிக் கருத்தும் தோன்றுகின்றன என்றும் - ‘இலங்குதல்’ என்னும் ஒளி குறித்த தமிழ்ச் சொல் இப்படித்தான் தோன்றிற்று என்றும் மொழி இயலாளர்கள் சொல்கிறார்கள். …
-
- 0 replies
- 1k views
-
-
வடபகுதியில் சுவாசித்த இடமெல்லாம் சிங்கள வாசம்! இந்திய ஊடகவியலாளர் கட்டுரை!! இலங்கையின் வடபகுதியில் தாங்கள் சுவாசித்த இடமெல்லாம் சிங்கள வாசம் வீசியதாகவும், அப்பகுதி திட்டமிட்டு சிங்கள, பௌத்த மயமாக்கப்பட்டு வருவதாகவும் சென்னையை தளமாகக் கொண்டியங்கும் The Weekend Leader எனும் இணையத் தளத்தில் அதன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். வடபகுதியில் உள்ள தமிழர் தாயக் பிரதேசங்களுக்கு ஊடாகப் பயணம் செய்பவர்கள் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள் என இந்த இணையத் தளத்தில் அதன் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த இந்த இணையத் தளத்தில் அவர் எழுதிய செய்திக் கட்டுரையில், தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசமாகவும், அம்மக்களின் கலாசார…
-
- 6 replies
- 1k views
-
-
மாலைதீவுடன் இலங்கை ஒப்பந்தம் இலங்கை புதிய கடல் மார்க்க உடன்படிக்கையொன்ற மாலைதீவுடன் செய்துகொண்டுள்ளது. இலங்கை மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்கு தொழிலுக்குச் செல்வதற்கு வசதியாக மாலைதீவு கடற்பரப்பூடாக பயணிப்பதற்கு அனுமதியளிக்கும் விதத்தில் இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறைக்கான துணை அமைச்சர் நியோமால் பெரேரா பிபிசிக்குத் தெரிவித்தார். வழமையில் மாலைதீவு கடற்பரப்பை தவிர்த்து, அந்நாட்டு எல்லையைச் சுற்றிக் கடந்து இந்தியாவுக்கு மேற்காக சென்றே அரபிக்கடலை அடைய வேண்டியிருப்பதால், இலங்கை மீனவர்கள் எரிபொருள் செலவு, காலவிரயம் மற்றும் இயற்கை ஆபத்துக்கள் என பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் இனிமேல், மீனவர்கள்…
-
- 1 reply
- 717 views
-
-
தமிழ் ஈழ ஆதரவு என்கிற பெயரால் தமிழ் ஈழத்துக்கு எதிரான நிலையை உருவாக்கிவிட்டார்கள்: திருமா தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். திருமாவளவன் பேசியதாவது: பாமக தலைமையிலே தமிழீழ ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக உருவாக வேண்டும் என்பது 2009ல் நான் சொன்னேன். வேண்டுகோளாகத்தான் வைத்தேன். திருமாவளவன் ஏன் திமுக கூட்டணியில் இருக்கிறார். பதவி வெறி. பதவி ஆசை. காழ்ப்புணர்ச்சி. ஆதரவைக் கூட எப்படி சிதைக்க வேண்டுமோ அந்த வல்லமை தமிழனிடம் மட்டும்தான் இருக்கு. இவன் ஒன்னும் அங்க …
-
- 3 replies
- 986 views
-
-
என்னை சந்தித்த ஈழத் தம்பி, எங்கே குத்தினால் என்ன நெல்லு அரியாக வேண்டும் அவ்வளவுதானே..: திருமா பேச்சு தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். திருமாவளவன் பேசியதாவது: தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள். அதிமுகவில் ஒரு கோடி பேர் உறுப்பினர்கள் என்று சொல்லப்படுகிறது. திமுகவில் அதைப்போலவே ஒரு கோடி பேர் உறுப்பினர்கள் என்று சொல்லப்படுகிறது. ஏறத்தாழ இரண்டு கோடி பேர் அமைதி. ஈழம் தொடர்பாக வாய் திறக்க முடியாது. பேச முடியாது. புலிகளை ஆதரிக்க முடியாது. தமிழ் ஈழம்தான் தீர்வு என்று களம் இறங்கி போரா…
-
- 2 replies
- 961 views
-
-
தொழில் வாய்ப்புக்கள் மறுக்கப்படும் நிலையில் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவதாக அரசு கூறும் முன்னாள் போராளிகள் தமக்கான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொள்ள மறைமுகமாக தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வன்னியை சேர்ந்த கணிசமான முன்னாள் போராளிகள் மனித நேய கண்ணிவெடியகற்றல் பணிகளில் தம்மை இணைத்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் மனித நேய கண்ணி வெடியகற்றல் அமைப்புகளது தலைமைகளுக்கு முன்னாள் போராளிகளை இணைத்துக்கொள்ள வேண்டாமென மறைமுக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இது பற்றி கருத்துக் கூற அத்தலைமைகள் பின்னடித்து வருகின்றன. அ9 வீதியோரம் மாங்குளம், கிளிநொச்சி, பரந்தனென பல நகரங்…
-
- 0 replies
- 461 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சிறிலங்காவுக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னராகவே ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே புதுடில்லி அரசின் விருப்பம் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. . இதன் காரணமாக சிறிலங்கா அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா கேட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் சுமூகமாகத் தொடர்வதற்கான ராஜதந்திர முயற்சிகளிலும் தற்போது இந்திய அரசு இறங்கியுள்ளது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் விரைவில் புதுடில்லி சென்று முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர். எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன. . இது இவ்வாறிருக்க, சிறிலங்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
இருண்ட வீட்டுக்குள் கறுப்பு பூனையை தேட முடியாது என்பதை சம்பந்தன் உணர வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தமிழ் மக்கள் சார்பாக உண்மையை பேசவேண்டும் என்பதற்காக தமது பக்கம் வருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் என்னையும் அழைத்திருப்பது வேடிக்கையானதொரு கூற்றாகும். இது இருண்ட வீட்டிற்குள் இருந்து கொண்டு கறுப்பு பூனையை தேடிக் கண்டுபிடிக்க என்னையும் வருமாறு கேட்பது போல் இருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எது உண்மை?... சங்கிலியன் சிலையை உடைத்து புத்தர் சிலை நிறுவப்போகின்றார்கள் என்று நீங்கள் கூறியது உண்மையா? அல்லது, இடிந்து சிதைந்து போன சங்கிலியன் சில…
-
- 9 replies
- 1.3k views
-
-
வேளாங்கன்னியில் சிங்களவர்கள் தங்கியிருந்த விடுதி முற்றுகை. Saturday, August 6, 2011, 19:26இந்தியா, சிறீலங்கா வேளாங்கன்னியில் சிங்களவர்கள் தங்கியிருந்த விடுதி முற்றுகை .. நூறுக்கும் மேற்பட்டோர் சிங்களவர்கள் தமிழ் நாட்டில் இருந்து விரட்டி அடிப்பு, தமிழ் உணர்வாளர்கள் விரட்டி அடித்துள்ளனர். என்று எமது தமிழ்த்தாய் இணையத்திற்கு செய்தி கிடைத்துள்ளது இருபினும் எனும் உறுதி படுத்த முடியவில்லை … இதே போல் 03.08.2011 அன்று சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் வரை நின்ற சில சிங்களவரை தமிழ் உணர்வாளர்கள் விரட்டி அடித்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் எதிரொலியாக தலயாத்திரையை மேற்கொண்டிருந்த சிங்களவர்கள் பலரும் நாடு திரும்பத் தொடங்கியுள்ளனர். அது தொடர்பான செய்தி : சென்னைய…
-
- 8 replies
- 851 views
-
-
Aug 7, 2011 / பகுதி: செய்தி / கட்டுநாயக்காவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். கராட்டி, டைகொண்டோ, தாய்லாந்து பொக்சின் போன்ற துறைகளில் தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற கட்டுநாயக்க சுமிந்த என்றழைக்கப்படும் சுமிந்த நதிசான் என்பவரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாதோர் அவர்மீது ஏழு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது. http://www.pathivu.com/news/17860/57//d,article_full.aspx
-
- 2 replies
- 1k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தை ஜெனிவாவில் இறுக்கிப் பிடிக்க அமெரிக்கா திட்டம்! - சண்டே ரைம்ஸ் கட்டுரை!! ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் எனும் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 18வது கூட்டத் தொடரில் விவாதிக்க விரும்புவதாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா அறிவித்திருந்த போதிலும், அது குறித்து கொழும்பு இதுவரை எ…
-
- 3 replies
- 745 views
-
-
அரசு-கூட்டமைப்பு நடத்திய பேச்சுக்கள் சர்வதேச அழுத்தத்தைக் குறைக்கும் ஒத்தணம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-08-07 16:12:27| யாழ்ப்பாணம்] அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்கள் ஒருபோதும் நம்பியிருக்கவில்லை. முன்னைய ஆட்சியாளர்கள் முதல் இன்றைய அரசுவரை தாம் எவ்வாறு ஏமாற்றப்பட்டனர் என்பதை தமிழ் மக்கள் நன்குணர்ந்துள்ளனர். அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒற்றுமையுடன் இயங்காததையும் மக்கள் நன்கு தெரிந்துகொண்டுள்ளனர். இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி சர்வதேச அழுத்தங்களுக்கு ஒத்தணம் கொடுப்பத…
-
- 1 reply
- 637 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு விசேட பிரதிநிதி இலங்கையின் உள்நாட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகத்துடன் நேரடியாக செயற்படுவதற்காக இந்தியா விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளது. மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த நியமனத்தை பெறும் இந்திய பிரதிநிதி நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் இருந்து செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படாமையை அடுத்தே இந்த முடிவை இந்தியா எடுத்துள்ளது. இதேவேளை, பிரதான வெளிநாடுகளான அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன, இலங்கை அரசாங்கம்…
-
- 1 reply
- 938 views
-
-
ஆக 7, 2011 : முல்லைத்தீவு கொக்குளாய் கருநாட்டுக்கேணிப்பகுதியில் அண்மையில் மீள்குடியேறிய இளைஞன்ஒருவன் சிறீலங்காப்படையினரால் தாக்கப்பட்டு முள்ளியவளைமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று கருநாட்டுக்கேணிப்பகுதியில் தற்போது மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்குள்ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு சென்ற சிறீலங்காப்படையினர் கூடிநின்ற மக்களை அடித்துவிரட்டியுள்ளார்கள்.குறிப்பிட்டஇளைஞனை படையினர் பிடித்துசென்று கடுமையான முறையில்தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.அதன்பின்னர் வீட்டிற்கு வந்தஇளைஞன் வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் முள்ளியவளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் 22 அகவையுடைய மார்கண்டு ஜெயானந்தன் என்ற இளைஞனே படையின…
-
- 0 replies
- 619 views
-
-
சிறிலங்கா வரகாப்பொல, தும்மலசூரிய பிரதேசத்தில் ஜப்பானிய தூதுவர் காரியாலயத்தின் அதிகாரிகள் பயணித்த வாகனம் ஒன்று சிறிலங்கா இராணுவ ட்ரக் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் தூதரக வாகன சாரதி பலியானர். அதில் பயணம் செய்தவர்களான ஜப்பானிய பிரஜைகள் ஐவர் படுகாயமடைந்து வரகாப்பொல மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இரண்டு வாகனங்களும் ஒன்றுடனொன்று மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள கால்வாய் ஒன்றில் பாய்ந்துள்ளன என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விபரித்தனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.pathivu.com/news/17863/57/5/d,article_full.aspx
-
- 0 replies
- 645 views
-