ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
Published By: DIGITAL DESK 2 29 DEC, 2023 | 12:26 PM வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் (27) குறித்த தந்தை மதுபோதையில் வீட்டிற்கு வந்து சிறுமியின் தலையில் கைப்பேசியால் தாக்கியுள்ளார். இது குறித்து அயலவர்கள் கிராம சேவகர் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தினர். இந்நிலையில், நேற்றையதினம் குறித்த வீட்டிற்கு வந்த உத்தியோகத்தர்கள் தாயாரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். தந்தையார் வேலைக்கு சென்றதன் காரணமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தாய், தந்தை இருவரையும் சங்கானை பிரதேச செய…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 29 DEC, 2023 | 10:15 AM டெங்கு நோய் நிலைமையை கட்டுப்படுத்த மேலதிகமாக அயல் மாவட்டங்களிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், டெங்குவை காவும் நுளம்புகள் வீரியம் மிக்க நுளம்புகளாக உள்ளதாக பூச்சியியல் ஆய்வு சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 267 views
- 1 follower
-
-
29 DEC, 2023 | 09:30 AM மாலைதீவு அருகே வெள்ளிக்கிழமை (29) காலை இந்தியப் பெருங்கடலில் 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பு இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) குறிப்பிட்டுள்ளது. முதலாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிச்டர் அளவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஏந்பட்ட நிலநடுக்கங்கள் 5.2, 5.8 மற்றும் 5.0 ஆக பதிவாகியுள்ளன. இரண்டாவது மற்றும் நான்காவது நிலநடுக்கங்கள் (ரிக்டர் அளவு 5.2 மற்றும் 5.0) 10 கிலோ மீற்றர் ஆழத்திலும், மூன்றாவது நிலநடுக்கம் (5.8 ரிக்டர் அளவு) 7.7 கிலோ மீற்றர் ஆழத்திலும…
-
- 0 replies
- 436 views
- 1 follower
-
-
பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் பாதகம் நிகழக்கூடாது: ஜீவன் தொண்டமானுக்கு அவசர கடிதம் பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் விவசாயிகளது நலனுக்கு எதுவித பாதகமும் நிகழக்கூடாது என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இவ்விடயம் குறித்து நீர் வழங்கல் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இன்றைய தினம்(28) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு போகும் செயற்றிட்டம் ஆரம்பிக்கவுள்ளதை வரவேற்கின்றோம். ஆனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளது நலனுக்…
-
- 2 replies
- 741 views
-
-
அமைச்சர் செய்ய சொன்னார் ; நான் செய்தேன்- இம்யுனோகுளோபலின் விநியோகஸ்தர் நீதிமன்றில் தெரிவித்தார் 28 DEC, 2023 | 02:43 PM தரம் குறைந்த இம்யுனோகுளோபலின் விவகாரத்தில் தொடர்புபட்ட நிறுவனத்தின் உரிமையாளரான பிரதான சந்தேகநபரின் சட்டத்தரணி தனது கட்சிக்காரர் முன்னாள் சுகாதார அமைச்சரின் உத்தரவை பின்பற்றினார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார் நான் செய்தேன் என தனது கட்சிக்காரர் தெரிவித்தார் என சட்டத்தரணிகுறிப்பிட்டுள்ளார். மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் சட்டத்தரணி ஜாலியசமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். ஒரு மில்லியன் ரூபாய் பொதுபணத்தில் இடம்பெற்ற இந்த மோசடி குறித்து முன்னாள் சுகா…
-
- 1 reply
- 363 views
- 1 follower
-
-
25 DEC, 2023 | 12:11 PM இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ரூபாய் பணம் யாழ்ப்பாணத்தில் இணைய மோசடியாளர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவை சேர்ந்த இருவர் 30 இலட்சம் மற்றும் 16 இலட்ச ரூபாயை இழந்த நிலையில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது, இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட முடியும் என ஆசை வார்த்தைகளுடனான சமூக வலைத்தளங்கள் ஊடாக மோசடிக்காரர்கள் விளம்பரம் செய்கின்றனர். அதனை நம்பி அந்த இணைப்பின் ஊடாக உட்செல்வோருக்கு முதலில் சிறு தொகை பணத்தினை அவர்கள் சொல்லும் கணக்குக்கு இணையம் (online) ஊடாக பணத்தினை செலுத்த…
-
- 1 reply
- 402 views
- 1 follower
-
-
இயன்றவரை முகக்கவசங்களை அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவகத்தின் நிபுணரான டாக்டர் சிந்தன பெரேரா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்த்துள்ளார். வெளிநாட்டுப் பயணங்களின் போது நோய் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காய்ச்சல் மற்றும் சளி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருவதாகக் கூறும் நிபுணர் டாக்டர் ரோஹித முத்துகல புதிய கொவிட் திரிபு வைரஸ் பரவுவது எதிர்காலத்தில் உறுதியாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https:…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 DEC, 2023 | 02:40 PM (லியோ நிரோஷ தர்ஷன்) நல்லிணக்க செயல்முறைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சுரேன் சுரேந்திரன் குழுவினர் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். அத்துடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், சிவில் சமூகத்தினைரையும் சந்திக்க உள்ளனர். இதன் பிரகாரம் தேசிய சமாதான பேரவையுடனான சந்திப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை வடக்குக்கு …
-
- 131 replies
- 11.7k views
- 2 followers
-
-
27 DEC, 2023 | 09:25 PM (நா.தனுஜா) உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட விரும்புபவர்கள் நாடலாம் எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பில் பல வருடகாலமாக பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிடப்பட்டுவருவதுடன், குறிப்பாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்கும்போது 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும். இல்லாவிடின் அச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தராதரங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டும்' என ஐரோப்பிய ஒன்றியம் …
-
- 1 reply
- 330 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்! தேர்தல் குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது அல்லது தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரைக் களமிறக்குவதா? அல்லது ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதா? என்பது தொடர்பில் எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை. அத்தோடு தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவு எடுப்போம் எனவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலோ அதன் வேட்பாளர் தொடர்பிலோ நாம் அவசரப்படமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்…
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், எமது மலையக மக்களுக்கான அங்கீகாரம் என்பது, இன்றைய சூழ்நிலையில் மாபெரும் தேவையாகவே காணப்படுகின்றது. இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆலோசனையின் பேரிலும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அவர்களின் ஏற்பாட்டிலும், நம் மலையக மக்களைக் கௌரவிக்கும் வகையில், இந்திய தபால்துறை அமைச்சினூடாக முத்திரையொன்று வெளியிடப்பட்டு, இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். புதுடில்லியில், இம்மாதம் 30ஆம் திக…
-
- 0 replies
- 359 views
-
-
27 DEC, 2023 | 09:21 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரச சேவையில் இருந்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரச ஊழியர்களுக்கு இருக்கும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான துறைசார் மேற்பார்வை குழுவின் பிரேரணைக்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என அரச மாகாண அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் அமில பண்டார தெரிவித்தார். அரச ஊழியர்களுக்கு ஒருவருடத்துக்கு இருந்துவரும் விடுமுறை நாட்களை குறைப்பதற்கு துறைசார் மேற்பார்வை குழு முன்வைத்திருக்கும் பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரச சேவையில் இருந்துவர…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 04:40 PM கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்யும்போது, குறித்த தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசியா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதன் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார். குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு, IMEI என டைப் செய்து இடைவெளி விட்டு, 15 இலக்க IMEI எண்ணை டைப் செய்து அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க ஏதேனும் கைத்தொலைபேசி மூலம் 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் எனவும் அவர் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/172570
-
- 3 replies
- 419 views
- 1 follower
-
-
கொவிட் 19 வைரஸின் ஜே.என் 1 உப வகை தொடர்பில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை விரைவாக பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார். நாட்டுக்குள் நுழைந்திருப்பதாக தெரிவிக்கப்படும் கொவிட் வைரஸின் புதிய வகை தொடர்பாக சுகாதார துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் வைரஸ் தொற்றின் புதிய வகை தொற்றான ஜே.என் 1நாட்டுக்குள் நுழைந்திருப்பதாக நம்புகிறோம். அதனால் விமான நிலையத்தில் இது தொடர்பாக அறிவுறுத்தும் நடவடிக்கை மற்றும் பரிசோதனை நடவடிக்கையை விரிவுப…
-
- 0 replies
- 158 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 12:15 PM அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை பெறுவதோ எமது எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரண்டாவது நாளாக ஆரம்பமான "கிரிந்திவெல மகிழ்ச்சியான குடும்பம்" கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கிரிந்திவெல மகிழ்ச்சியான குடும்பக் கல்விக் கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி கிரிந…
-
- 3 replies
- 378 views
- 1 follower
-
-
மயிலத்தமடுவின் குரூரமான சிங்களக் குடியேற்ற வரலாறு
-
- 1 reply
- 632 views
-
-
Published By: RAJEEBAN 27 DEC, 2023 | 04:44 PM வெளிநாட்டு கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்த இந்தியாவின் கரிசனைகளை இலங்கை செவிமடுக்கவேண்டும் என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரஅமைச்சர் எம்ஜே அக்பர் தெரிவித்துள்ளார். இந்தியாவும் சீனாவும் உண்மையில் இன்னமும் இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளன, எல்லைதகராறு தீர்க்கப்படாததால் இதற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆகவே நாங்கள் விசேட கரிசனைகளை கொண்டுள்ளோம் என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். உங்களிற்கு தெரியும் இவை சுற்றுலா ஆடம்பர கப்பல்கள் இல்லை. இவை சீன கப்பல்கள் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் மின்னணு சாதனங்களிற்கு…
-
- 1 reply
- 222 views
- 1 follower
-
-
பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் அதிக இரைச்சல் காரணமாக வானொலி ஒலிபரப்புக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பேருந்துகளில் அதிக சத்தம் எழுப்புவதால் பயணிகள் அவதிப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, பேருந்துகளால் ஏற்படும் ஒலி மாசுபாட்டை குறைக்க மத்திய சுற்றுச்சூழல் ஆணையமும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் இணைந்து எதிர்காலத்தில் ஒழுங்குமுறை திட்டத்தை தயாரிக்கும் என குறிப்பிட்டுள்ளார். சட்ட நடவடிக்கை அதிக சத்தம் கொண்ட பேரூந்துகளில் உள்ள வானொலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திறன் போக்குவரத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்…
-
- 1 reply
- 240 views
- 1 follower
-
-
Published By: VISHNU 27 DEC, 2023 | 09:15 PM தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். எனவே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்காமல், அதனைப் பகிஷ்கரிப்பதொன்றே தமிழ்மக்களுக்கு இருக்கின்ற தெரிவு எனவும், அதனையே தாம் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் புதன்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அ…
-
- 3 replies
- 431 views
- 1 follower
-
-
பராமரிப்பில்லாத ஆரியகுளம்! இனியபாரதி) யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை நாம் புனரமைத்து கொடுத்தோம். ஆனால் யாழ் மாநகர சபை அதனை பராமரிப்பதாக தெரியவில்லை என தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரன் கவலை வெளியிட்டார். தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரனின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கலந்துரையாடல் மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை யாழ் மாநகர சபை சிறப்பாக பராமரித்தால் இன்னமும் பல குளங்களை புனரமைக்க தயாராக உள்ளேன். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பார்க்கும்போது சிறப்பாக பராமரிப்பா…
-
- 12 replies
- 1k views
-
-
Published By: DIGITAL DESK 3 28 NOV, 2023 | 02:31 PM விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படங்கள் பொறித்த சட்டை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார். கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். …
-
- 1 reply
- 610 views
- 1 follower
-
-
10 DEC, 2023 | 11:03 AM நாடு முழுவதும் நேற்று (09) மாலை திடீரென மின் துண்டிக்கப்பட்டதற்கு, கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்புக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மின்சக்தி அமைச்சும் இலங்கை மின்சார சபையும் இரு வேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த கூறியுள்ளார். நேற்று மாலை 5.15 மணியளவில் நாடு முழுவதும் திடீரென மின் துண்டிக்கப்பட்டு, பல பிரதேசங்களில் இரவு 11.30 மணியளவிலும், வேறு சில இடங்களில் நேரம் தாமதமாகவும் மீண்டும் மின் விநியோகிக்கப்பட்டு, நிலைமை இயல்புக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/1713…
-
- 5 replies
- 674 views
- 1 follower
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி! மணி யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது. ஆசிரியர் சேவையில் இருந்து அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் புள்ளியிடல் முறை மூலம் வழங்கப்பட்ட நியமனத்தை எதிர்ப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோருக்கும் மகஜரின் பிரதி கையளிக்கப்பட்டது. மகஜரில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு, 4 வருட தாமதத்தின் பின்…
-
- 2 replies
- 342 views
-
-
சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன் மீது தாக்குதல் அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் நேற்று 14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞனை பிடித்து தாக்கிய பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கிண்ணியா சூரங்கள் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய மாணவி ஒருவரை நெடுத்தீவு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் காதலித்து, திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றபோது சிறுமியின் பெற்றோர்கள் இளைஞனை தாக்கிய நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த இளைஞர் சிறுமியை குருநாகல் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குறித்த இளைஞரையும் சிறுமியையும் விசாரணை செய்தபோது சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்…
-
- 0 replies
- 278 views
-
-
வெற்றி மகுடம் சூடிய கில்மிசாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து! இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட சரிகமபா லிட்டடில் சாம்ப் போட்டியில் வெற்றி மகுடம் சூடிய கில்மிசா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் “Zee Tamil” தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய சரி கம பா “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய இலங்கையின் கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 14 வயதுடைய கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன், இலங்கைப் பெண் ஒருவர் இந்திய தொலைக்காட்சி பாடல் போட்ட…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-