Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாளை மகிந்தருக்கு ஆதரவாக வாக்குக் கேட்டு கிளிநொச்சியில் தென்னிந்தியப்பாடகர்கள்! Tuesday, July 19, 2011, 22:56இந்தியா, சிறீலங்கா வடக்கில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அரசாங்கம் விடுத்த அழைப்பினை ஏற்று தென்னிந்திய திரை இசைப் பாடகர்கள் மூவர் இலங்கை வந்திருக்கின்றமை வன்னி மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையினைத் தோற்றுவித்திருக்கின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் குறிப்பாக யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்று அதனை சர்வதேசத்திற்குக் காட்டவேண்டும் என்ற முனைப்பில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவும், 24 அமைச்சர்களும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களில் தீவிர பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக கிளிநொச்சியில்…

  2. புதன்கிழமை, 20 யூலை 2011, 02:15.02 AM GMT ] இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ஐரோப்பியாவின் அல்லது ஏனைய நாடுகளின் ஆலோசனைகளை பெற தாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று உள்ளுராட்சி தோ்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட அவர், இலங்கையின் இனப்பிரச்சினையை சமாதானமான முறையில் தீர்க்க முடியும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் தம்மிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படுவதாகவும், இந்தநிலையில் தமிழ் இளைஞர்கள் நாளுக்கு நாள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பதாகவும் ஜனாதிபதி கூறினார். இலங்கையில் தமிழர்கள் கஸ்டப்படுவதாக கூறி போராட்டம் நடத்தும் மேற்கத…

  3. டக்ளஸும் கருணாவும் அமைச்சர்கள் அல்லர் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தவின் சேவகர்களே!; யாழ்ப்பாணத்தில் சிறிதுங்க ஜயசூரிய Wednesday, July 20, 2011, 9:21 சிறீலங்கா டக்ளஸும், கருணாவும் அமைச்சர்கள் அல்லர். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசின் ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷவின் சேவகர்கள் எனக் குறிப்பிட்டார் ஐக்கிய சோசலிஸக் கட்சியின் செயலாளர் நாயகம் சிறிதுங்க ஜயசூரிய. நேற்றுமுன்தினம் யாழ். நகரில் பஸ்தியன் ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் ஐக்கிய சோசலிசக் கட்சி போட்டியிடுகிறது. இந்தக் கட்சியின் வேட்பாளர்களான எஸ்.நகுலராசா, கா.சிவரஞ்சன், சி.கந்தசாமி சகிதம் பிரசன்ன மாகியிருந்த சிறிதுங்க ஜயசூரிய மேலும் தெ…

  4. இலங்கையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்கள் நடைபெற கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது. [Wednesday, 2011-07-20 11:31:06] சிறிலங்காவில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சித் தேர்தல்களில் உங்களின் உறவினர்களையும் நண்பர்களையும் வாக்களிக்குமாறு கோருமாறு கனடியத் தமிழர்கள் அனைவரையும் கனடியத் தமிழர் பேரவை வேண்டுகின்றது. எதிர்வரும் ஜுலை மாதம் 23ம் திகதி சிறிலங்காவில் 65 உள்ளுர் அரசாங்கத் தேர்தல் மாவட்டங்களில் வாக்கெடுப்பு நடைபெற ள்ளது. இது நீதியானதாகவும் சுதந்திரமானதாகவும் அமைய வேண்டியது அவசியமானதாகவும் உள்ளது. மிரட்டல்கள் வன்முறை மற்றும் மோசடிகள் மூலம் தமிழர்களின் ஜனநாயக வாக்குரிமை பாரிய நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை …

  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி மட்டுமே எமது இருப்பையும் எம்மவர் உரிமையையும் காக்கவல்லது! [Wednesday, 2011-07-20 11:54:51] ஜூலை 23 ம் திகதி நடக்கவிருக்கும் 26 சபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி எமது திடமான முடிவையும், திடகாத்திரமான பதிலையும் எமக்கு உதவ முயலும் உலகுக்கும், எமது நலன் கருதி அயராது உழைக்கும் உலகத் தமிழருக்கும் பறைசாற்றும் விதத்தில் அமைய வேண்டும். ஆண்ட இனம் ஆட்சியை இழந்த வேளை, உண்ண உணவின்றி உறங்க இடமின்றி சொந்த நாட்டிலே அனாதைகளாக்கப்பட்ட போது, தமிழன் உயிருக்குப் பாதுகாப்பே இல்லாத நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைபுக்கு தலைமை ஏற்று துணிவோடு தமிழ்மக்களது உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் போராடி வரும் தலைவர் இரா. ச…

  6. மனிதாபிமானம்: பிரிட்டனில் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இலங்கைத் தமிழர்! [ பிரசுரித்த திகதி : 2011-07-20 05:29:40 AM GMT ] பிரிட்டனில் ரயிலில் வைத்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்து உள்ளார் இலங்கைத் தமிழர் ஒருவர். இவரின் பெயர் வி. எஸ். வாசன். வயது - 64. ஐந்து பிள்ளைகளின் தந்தை. மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் அரசியல் தஞ்சம் பெற்று லண்டனில் வாழ்ந்து வருகின்றார். இவரது பிள்ளைகளில் இருவர் 1996 ஆம் ஆண்டு எத்தியோப்பிய விமானம் ஒன்று கோமரோஸ் தீவில் விபத்தில் சிக்கியபோது இறந்து விட்டனர். வாசன் மிகுந்த பிரயாசைக்காரர். நேர்மையானவர். அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். இதனால் இவர் மீது அபிமானமும், மரியாதையும் மிகுந்த கூட்டம் ஒன்று லண்டனில் உள்ளது. ஓய்வூதியர். பல்லினங்களைச் சே…

  7. புதன்கிழமை, யூலை 20, 2011 எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தும் வகையில் வட மாகாணத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை உயரதிகாரிகள் இருவர் தலைமையிலான 60 பேர் கொண்ட விசேட பொலிஸ் அதிரடிப்படை அணி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. . பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே இந்தப் படையணியை பொலிஸ்மா அதிபர் வட மாகாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். . பிரதிப் பொலிஸ்மா அதிபர்களான சாலிந்த மற்றும் அபேன்சு ஆகியோரே இந்தப் படையணிக்குத் தலைமை தாங்குகின்றனர். . வடமாகாணத்தில் அரசுக்குப் பாதமாகக் காணப்படும் வாக்குச் சாவடிகளுக்கு எந்த நிமிடமும் செல்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமென்றும் அவர்களுக்கு …

    • 0 replies
    • 745 views
  8. புதன்கிழமை, யூலை 20, 2011 பிரித்தானிய, செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணக் காணொளியில் காணப்படும் மூன்று படை வீரர்களை சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. . மிகவும் இரகசியமான முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்தச் சிப்பாய்கள் மூவரும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, வன்னியில் சிறிலங்கா இராணுவத்தின் 582 ஆவது கமாண்டோ பிரிவில் கடமையாற்றியவர்கள் எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. . குறிப்பிட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’ காணொளியில் காணப்படும் சில காட்சிகள் 2009 ஆண்டு ஏப்ரல் 4 ஆம் 5 ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பிலும் மே மாதம் 16 ஆம் 17 ஆம் திகதிகளில்…

    • 0 replies
    • 605 views
  9. தன்கிழமை, யூலை 20, 2011 இராணுவத் தலைமை அலுவலகத்துக்குச் சொந்தமான இடத்தை விற்பனை செய்ததன் மூலம் ஆயிரம் கோடி ரூபாவை தரகுப் பணமாக (கமிஷன்) சிலர் பெற்றுக் கொண்டுள்ளனர் என சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். . சிகிச்சை பெறுவதற்காக நேற்று (19) தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். . மேலும், தரகுப் பணம் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இப்போது வெலிக்கடைச் சிறைச்சாலைக் காணியை விற்கப் போகிறார்கள். இது மட்டுமின்றி, கொழும்பு மீன் சந்தை, ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள்,காலிமுகத் திடல் என அனைத்தையும் விற்கப் போகிறார்கள். இவ்வாறு அனைத்தையும் விற்று 4000 மில்லியன் ரூபா தரகுப் பணமாகப் பெறுவதே இவர்…

    • 0 replies
    • 367 views
  10. Wednesday, 20 July 2011 02:42 யாழ். தமிழ் மாணவர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது ! இனப்படுகொலைக்கு மனிதாபிமான நடவடிக்கை என பெயரிட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை அழித்த மகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையில் போட்டியிடும் போர்க்குற்றவாளிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது என்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையோடு தமது பலத்தை வெளிப்படுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் தமிழ் மாணவர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமையை பறித்து தமிழ் மக்களை அழித்த சிங்கள பேரினவாத கட்சிக்கும் அவர்களுக்கு துணைபோகும் ஒட்டுக்குழுக்களுக்கும் ஏன் வாக்களிக்க கூடாது என தமிழ் மாணவர் பேரவை பட்ட…

  11. [ செவ்வாய்க்கிழமை, 19 யூலை 2011, 05:55.00 PM GMT ] இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் கடினமாகிக்கொண்டிருப்பதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளதுதமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து இரண்டு வருடங்களாகியும் இலங்கையின் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நல்லிணக்கததுக்கான நடவடிக்கைகளில் தாமதம் காட்டிவருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு குற்றம் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் மீண்டும் முறுகல் நிலை தோன்றி வருகிறது. வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்மக்களுக்கான உரிய தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் பாரிய துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். …

    • 1 reply
    • 305 views
  12. [ புதன்கிழமை, 20 யூலை 2011, 02:20.29 AM GMT ] புதிதாக நியமனம் பெற்ற ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுப்நாய் நான்டி வடபகுதிக்கு பயணம் செய்துள்ளார்.அவர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் புதிய இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வவுனியாவுக்கு சென்று மெனிக்பாம் அகதிகள் முகாமை பார்வையிட்ட பின்னர் மீள்குடியேற்றம் தொடர்பிலும் ஆராய்ந்தார். இதன்போது கருத்துரைத்த அவர் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அறிவதும் அவர்களின் வாழ்வாதார நிலைமைகளை பார்வையிடுவதுமே தமது பயணத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். http://www.tamilwin.co…

  13. உலக உணவுத் திட்டம் நிதித் தட்டுப்பாட்டை எதிர்நோக்குகின்றது : 20 ஜூலை 2011 உலக உணவுத் திட்டத்தின் இலங்கைப் பணிப்பாளர் அன்டன் கான் தெரிவித்துள்ளார். உலக உணவுத் திட்டம் நிதித் தட்டுப்பாட்டை எதிர்நோக்குகின்றது : உலக உணவுத் திட்டம் நிதித் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. வடக்கில் இடம்பெயர்ந்த மற்றும் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்குவதற்கு போதியளவு நிதி உதவிகள் கிடைக்கப் பெறவில்லை என உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டுக்காக திட்டமிட்ட உதவிகளை முழுமைப் படுத்துவதற்கு இன்னமும் 40 வீதமான நிதி ஒதுக்கீடுகள் அவசியப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதி வரையில் யுத்தத்தினால் …

  14. பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவு: யாழ்., கிளிநொச்சியில் பிரசார நடவடிக்கைகள் தீவிரம் _ வீரகேசரி இணையம் 7/20/2011 11:24:18 AM Share ஒத்திவைக்கப்பட்ட 65 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறவிருக்கின்ற 19 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுபெறுவதனால் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் குடாநாட்டிலும் கிளிநொச்சியிலும் சூறாவளி பிரசாரத்தில் குதித்த…

  15. குடாநாட்டில் அவசரமாக வீதிகளை புனரமைக்க மேலதிக தொழிலாளர் ;10 வாகனங்களில் தார்க் கலவை வந்தது news யாழ். மாவட்டத்தில் தற்போது அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் வீதிப் புனரமைப்புப் பணிகளுக்கென வெளி மாவட்டங்களில் இருந்து மேலதிக தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். வவுனியா, மன்னார் மாவட்டங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களே இவ்வாறு இங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.யாழ். மாவட்டத்தில் நீண்ட காலமாகச் சேதமடைந்திருந்த வீதிகளைத் தார்க் கலவை போட்டுச் சீரமைக்கும் பணிகள் அவசர அவசரமாக படுவேகமாக நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் 23 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.படுவேகமாக நடைபெற்ற…

  16. புதன்கிழமை, 20, ஜூலை 2011 (9:25 IST) ஹிலாரி கிளிண்டன் சந்திப்பின் போது ஈழத் தமிழர் துயரத்தை ஜெ. எடுத்துக் கூறவேண்டும்: சீமான் ஹிலாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர்களின் துயரத்தை, முதல் அமைச்சர் ஜெயலலிதா எடுத்து கூறவேண்டும் என்று சீமான் கூறியுள்ளார் இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிற்கு 3 நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் இன்று (புதன் கிழமை) சென்னைக்கு வரவுள்ளார் என்றும் அப்போது அவர் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பார் என்றும் செய்தி வந்துள்ளது. ஹிலாரி கிளிண்டனின் வருகையும், தமிழக முதல் அமைச்சருடன் சந்திப்பும் ஈழத் தமிழினத்தின் துயரை நேரடியாக நன…

  17. கப்பலில் இறந்த உக்ரேன் பிரஜையின் சடலம் கொழும்பில்! Published on July 20, 2011-3:36 am சிங்கப்பூரில் இருந்து நைஜீரியா நோக்கிச் சென்று கொண்டிருந்த கப்பலில் மரணமடைந்த உக்ரேன் நாட்டு பிரஜையின் சடலத்தை உக்ரேனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக காலி துறைமுக பொலிஸ் தெரிவித்தது. மேற்படி, கப்பலில் பணிபுரிந்த பிரதான பொறியியலாளரே இறந்துள்ளார். இவரது மரண விசாரணை கராபிடிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மருத்துவ அதிகாரி பகிரங்க தீர்வொன்றை வழங்கியுள்ளார். இந்தப் பொறியியலாளர் கடந்த 15ஆம் திகதி இறந்துள்ளதோடு கப்பலின் இலங்கைப் பிரதிநிதி இது குறித்து காலி துறைமுக பொலிசாருக்கு அறிவித்தி ருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை காலி துற…

  18. கிளிநொச்சி வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை! Published on July 20, 2011-3:58 am கிளிநொச்சியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். அம்மாவட்டத்தில் 60 சதவீதமான வாக்காளர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தகாலத்தில் தேசிய அடையாள அட்டைகளை இழந்த இம்மக்களுக்கு சில தினங்களில் தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. மீளக்குடியேறிய மக்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட …

  19. ஆசிரியை மீது பெட்ரலை ஊற்றி எரியூட்டிய இராணுவச் சிப்பாய் கைது : 20 ஜூலை 2011 ராணுவ சிப்பாய் ஆசிரியையின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு .. ஆசிரியை மீது பெட்ரலை ஊற்றி எரியூட்டிய இராணுவச் சிப்பாய் கைது : ஹப்புத்தளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவர் மீது பெட்ரலை ஊற்றி எரியூட்டிய இராணுவச் சிப்பாய் ஒருவர் ஹப்புத்தளை காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் கடும் தீகாயங்களுக்கு உள்ளான ஆசிரியை தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான இராணுவ சிப்பாய் ஆசிரியையின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு எடுத்திருந்தாகவும் அவர் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, ஆசிரியையுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட…

  20. சுமார் 40 பஸ்கள் மகிந்தரின் பிரசாரத் தேவைகளுக்காக மக்கள் நடு வீதியில் ..? Wednesday, July 20, 2011, 9:20 சிறீலங்கா இங்கே காணப்படும் காட்சி யாழ். பஸ் நிலை யம் தான். இந்தப் படம் நேற்று பிற்பகல் வேளை பிடிக்கப்பட்டது.போக்குவரத்துச் சபையினர் நேற்று திடீர் வேலை நிறுத்தம் என்று நினைத்து விட்டீர்கள் போலும்: இல்லை; இல்லை.பஸ்கள் எல்லாம் ஆளும் கட்சியின் பிரசாரப் பணிக்காக எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. பொதுமக்களைத் திரட்டிப் பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்றிச் செல்லவே இந்த ஏற்பாடு. இதனால் பயணிகள் மணித்தியாலக் கணக்கில் பஸ் நிலையத்தில் தவம் கிடக்க நேரிட்டது. இதேவேளை, யாழ். பஸ் நிலையத்தில் இருந்து வடமராட்சிக் கான சேவை முற்பகல் 11 மணிக்குப் பின்னர் இடம்பெறவில்லை என்றும…

  21. இலவசங்களை நம்பி வந்தோர் ஏமாற்றம் திட்டித் தீர்த்தனர் அரச அதிகாரிகளை! Wednesday, July 20, 2011, 9:24 சிறீலங்கா உதவிப் பொருள்களும் இலவசங்களும் வழங்கப்படும் என்று தெரிவித்து ஜனாதிபதியின் பிரசாரக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்ட தமிழ் மக்கள் எதுவும் வழங்கப்படாது ஏமாற்றப்பட்டனர்.இதனால் கோபமடைந்த அவர்கள் தம்மை அழைத்த அதிகாரிகளைத் திட்டித்தீர்த்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரண்டாவது பிரசாரக் கூட்டம் நேற்று கோப்பாயில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.ஜனாதிபதி கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு ஒவ்வொரு சமுர்த்தி அலுவலரும் கிராம அலுவலரும் ஆள்களைத் திரட்டி அனுப்ப வேண்டும்.என்று பாரம்பரிய கைத் தொழ…

  22. அரசும் படையினரும் எத்தகைய தடைகளை ஏற்படுத்தினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோத்லில் இருந்து விலகாது [Tuesday, 2011-07-19 18:14:14] அரசும் படையினரும் எத்தகைய தடைகளை ஏற்படுத்தினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடும்; ஒருபோதும் விலகாது என்று தெரிவித்தார் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். அரசு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்தால் தேர்தலில் இருந்து கூட்டமைப்பு விலகிவிடும் என்று வல்வெட்டித்துறை நகரசபைக்கான கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அது குறித்துத் கூறிய சுரேஷ் பிரேமச்சந்திரன் எத்தகைய நிலையிலும் தேர்தலில் இருந்து விலகுவ…

  23. Started by akootha,

    India's Sri Lanka Problem by SADANAND DHUME (Wall Street Journal) To be taken seriously as a major power, India must show that it has influence in its own backyard.. When Secretary of State Hillary Clinton visits Chennai today, both United States and Indian officials will be eager to emphasize the robust commercial and people-to-people ties that increasingly bind America to one of India's most dynamic regions. The consulate in Chennai issues more skilled temporary worker visas than any other U.S. outpost in the world. Tamil Nadu, the state of which Chennai is the capital, houses a flourishing Ford Motor factory, and is regarded as one of India's most business-frie…

    • 0 replies
    • 562 views
  24. இலங்கை அரசு மீது ஐசிஜி கடும் விமர்சனம் பிரஸ்ஸல்சில் இருந்து இயங்கும் இண்டர்னேஷனல் க்ரைஸிஸ் குரூப் என்ற சர்வதேச நெருக்கடிகள் குறித்த அமைப்பு இலங்கை அரசின் மூர்க்கத்தனம் மற்றும் கருத்து மாறுபடுபவர்களை சகித்துக்கொள்ளாத தன்மை காரணமாக அங்கு மீண்டும் மோதல் எழக்கூடிய அபாயம் இருப்பதாகக் கூறுகிறது. இலங்கை அரசு தமிழ்ப் புலிகளை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தோற்கடித்ததிலிருந்து,சிறுபான்மை தமிழர்களின் குறைகளை அங்கீகரிக்கவோ அல்லது தீர்க்கவோ தவறிவிட்டது என்று அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ஒரு புதிய அறிக்கையில் கூறியிருக்கிறது. இலங்கையில் போர் முடிந்துள்ளதன் பின்னணியில் அங்கு பல விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச நெருக்கடிகள் பற்றி ஆராயும் குழுவான ஐசிஜி ச…

    • 3 replies
    • 519 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.