ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 18 ஜூலை 2011 கூறுகிறார் மகிந்த இனப்பிரச்சினை பற்றி ஒன்றுக்கொன்று முரணாகக் கதைப்பவர்களது குழந்தைகளும் மனைவிமாரும் வெளிநாடுகளிலேயே இருக்கின்றார்கள். அவர்கள் தமது அரசியல் நலனுக்காகவே வேறுபாடுகளை உருவாக்க முற்படுகிறார்களென குற்றஞ்சாட்டியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இன்று யாழ்ப்பாணத்திற்காக விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சென்றிருந்த அவர் வேலணையில் தனது பிரச்சாரக் கூட்டத்தினை ஆரம்பித்திருந்தார். இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் அவர் தீவக மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். கடந்த தேர்தல்களில்; தீவக மக்களே அரசிற்கு கூடிய ஆதரவு அளித்ததாகத் தெரிவித்த அவர் இந்த வகையிலேயே வடக்கிற்கான பிரச்சார நடவடிக்கைகளில் முதலாவது பிர…
-
- 5 replies
- 990 views
-
-
தமிழர்களுக்காக குரல் கொடுத்துவரும் அனைத்து தரப்பினரையும் கேட்டு கொள்கிறோம்: பொங்கியெழும் மக்கள் படையணி பொங்கியெழும் மக்கள் படையணி, தமிழீழம். 20-07-2011 அன்பான தமிழ் பேசும் மக்களே! இக் காலத்திற்கு பொருத்தமானதும் அவசியமானதுமான செய்தி ஒன்றை வெளியிடுகிறோம். தற்போதைய சூழ்நிலையில் சிறிலங்கா அரசினை பொறிக்குள் சிக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைவரதும் கவனத்திட்குமாக இத் தகவலை வெளியிடுகிறோம். அண்மைகாலமாக சிங்கள அரசின் முகத்திரைகள் கலைந்து வரும் நிலையில் அதனை திசை திருப்பவும் தடுப்பதற்கும் தமிழ் மக்களிடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கவும் பல்வேறு பொறிமுறைகளை பயன்படுத்திவருகிறது. போர் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவும் அதற்கு ஏற்றதுமான ராஜதந்திர நகர்வு…
-
- 1 reply
- 996 views
-
-
வடக்கில் வெல்லப்போவது யார், அரசா தமிழ்த்தேசிய கூட்டமைப்பா? – செ.சிறிதரன்! Published on July 19, 2011-4:17 am இருபத்து மூன்றாம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான வாக்களிப்புக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலைமையில் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன. தேர்தல் பிரசாரங்களின்போது, எதிரணியினரைத் திட்டித் தீர்ப்பதும், வாக்குறுதிகளை அள்ளி வீசுவதுமே வழமையான நடவடிக்கைகளாகும். ஆனால் வடக்கில் இம்முறை அன்பளிப்புகளை வழங்குவது, விருந்தோம்புவது, நிவாரணப் பொதிகளை வழங்குவது, சேலைகள், வேட்டிகளை வழங்குவது போன்ற புதிய நடவடிக்கைகளை குறிப்பாக அரச சார்பு கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். …
-
- 3 replies
- 412 views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள 'நாய்கள்' தமிழ் உணர்வு மிக்கவை: அவை அரசும் அமைச்சர்களும் போடும் எலும்புத் துண்டுகளைக் கூட கௌவிச் செல்வதில்லை [Tuesday, 2011-07-19 09:00:07] நாய் நன்றி உள்ள மிருகம் அதிலும் சிறப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நாய்கள் தமிழ் உணர்வு மிக்கவை. காரணம் அரசாங்கம் அதன் அமைச்சர்களும் போடுகின்ற எலும்புத் துண்டுகளைக் கூட கௌவிச் செல்வதில்லை. இதன் காரணமாக இன்று நாய்களின் தலைகளை வெட்டி இனவெறியை காண்பிக்கும் அளவுக்கு யாழ்ப்பாணத்தில் நாய்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உற…
-
- 1 reply
- 674 views
-
-
காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா கூட்டணி வைக்கக்கூடாது: சீமான் பதிந்தவர்: ஈழப்பிரியா ஞாயிறு, 17 ஜூலை, 2011 நாம் தமிழர் கட்சியின் சார்பில் முல்லை பெரியாறு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை அருகே நடந்தது. பேராசிரியர் தீரன், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், சாகுல்அமீது, கலைக் கோட்டுதயம், வக்கீல் தடாசந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். நாம்தமிழர் கட்சி இயக்க தலைவர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சீமான், ‘’முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குக்கிற்கு எனது முதல் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். உயிரை இழக்கலாம், ஆனால் உரிமையை இழக்க கூடாது என்ற முழக்கத்தோடு இந்த முல்லை பெரியாறு உரிமை மீட்பு போராட்டத்தை தொடங்கி …
-
- 6 replies
- 830 views
-
-
பெற்றுக் கொண்டுள்ள சுதந்திரத்தை பாதுகாத்து நாட்டினை கட்டியெழுப்ப ஒன்றினணயுமாறு வடபகுதி தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு [Monday, 2011-07-18 21:57:10] பெற்றுக் கொண்டுள்ள சுதந்திரத்தை பாதுகாத்து, நாட்டினை கட்டியெழுப்புவதற்கு ஒன்றினையுமாறு ஜனாதிபதி வட பகுதி மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.வடக்கின் வசந்தத்தின் மூலம் அப்பகுதி மக்களினதும், சிறுவர்களினதும் எதிர் காலம் வளம் பெறும் எனவும் அப்பகுதி அபிவிருத்தி அடையும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். யாழ்ப்பானம், ஊர்காவற்றுரை முச்சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இந்தக்கருத்துக்களை வெளியிட்டார். வடக்கின் அபிவிருத்திக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கமட வழங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டா…
-
- 14 replies
- 1.1k views
-
-
சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. . அவ்வாறு அவர் இணைந்து கொள்ளும் பட்சத்தில் அவருக்குக் கட்சியில் பிரதித் தலைவர் பதவியை வழங்கவும் ஐ.தே.க தீர்மானித்துள்ளது. . சரத் பொன்சேகாவை கடந்த வாரம் சிறையில் சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க, தனது கட்சியின் இந்தத் தீர்மானம் தொடர்பில் அவருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். . இதேவேளை, கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளராக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவை நிறுத்துவது எனவும் தீர்மானிக்கபட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது. …
-
- 0 replies
- 586 views
-
-
கிளி நொச்சி இரணைமடு விமானத்தளம் இன்று சிங்களப்டையினரால் திறக்கப்பட்டது. உள்ளூராட்சி தேர்தல் வாண வேடிக்கையாக இந்த திறப்பு இடம்பெற்றது. சிங்களப்படையினரின் வை 8 ரக விமானமே இன்று தரையிறக்கப்பட்டது. கிளி நொச்சி விமானத்தளம் விடுதலைப்புலிகளால் கட்டமைக்கப்பட்டு அவர்களின் தேவைக்காக பாவிக்கப்பட்டது. பின்னர் சிங்கள இராணுவம் கிளி நொச்சியினை ஆக்கிரமித்த பின்னர் இது கைவிடபப்ட்டு இருந்தது. ஆனால் யுத்தம் முடிந்த காலப்பகுதியில் இந்திய இராணுவம் சிறிலங்கா அரசுக்கு தொடர்ந்தும் உதவி செய்வதற்காகவும் இந்திய புலனாய்வாளர்கள் இரகசியமாக வந்து போகும் இடமாகவும் இந்த விமானத்தளம் பாவிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. Bookmark/Search this post with: ஈழ நாதம்
-
- 0 replies
- 593 views
-
-
யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடத்தவுள்ளது : 19 ஜூலை 2011 யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடாத்தத் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது இரண்டு குழுக்கள் கண்காணிப்பு பணிகளுக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பல எதிர்க்கட்சிகள் முறைப்பாடு செய்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முறைப்பாடுகளை கவனத்திற் கொண்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தத் தீர்மானித்ததாக மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல்களை பிரச்சார நோக்கில் அரசாங்கம் வடக்கில் அ…
-
- 0 replies
- 383 views
-
-
ஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்தத பன்னாட்டு விசாரணையின் அவசியத்தை அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அவர்களைச் சந்திக்கும்போது தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். ஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் இந்தியாவிற்கு 3 நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் நாளை (புதன் கிழமை) சென்னைக்கு வரவுள்ளார் என்றும் அப்போது அவர் தமிழக முதல்வரைச் சந்திப்பார் என்றும் செய்தி வந்துள்ள…
-
- 0 replies
- 395 views
-
-
சர்வதேசத்திற்குப் பூச்சாண்டி காட்டி தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை மறைப்பதற்கு அரசு முயற்சி [Tuesday, 2011-07-19 11:15:18] முழு அமைச்சர்களும் கோடி கோடியாக அரச பணத்தை செலவு செய்து தமிழ் மக்களை அடிபணிய வைக்கமுடியும் என எண்ணி வடக்கில் தற்போது செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசங்களை தமிழ் மக்களே ஆட்சி செய்யும் என்பதை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் உணரவைக்க நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்…
-
- 0 replies
- 503 views
-
-
சிறிலங்கா அரசுக்கு இடைவிடா நெருக்கடியை ஏற்படுத்தும் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் ! அமெரிக்க கொங்கிரஸ் மண்டபத்தில் திரையிடப்பட்டது. [Tuesday, 2011-07-19 09:11:40] சிறிலங்கா அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கடும் நெருக்கடியைக் தோற்றுவித்துவரும் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைகளம் ஆவணப்படம், அமெரிக்க கொங்கிரஸ் Capitol Hill மண்டபத்தில் திரையிடப்பட்டது. Human Rights Watch, Amnesty International-USA, the International Crisis Group, and Open Society Foundations ஆகிய சர்வதேச அமைப்புக்களின் கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அமெரிக்க அரசியல் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டளர்கள், அரசியல் அறிவியல்பீட பல்கலைக் கழக மாணவர்களோடு உள்ள…
-
- 0 replies
- 457 views
-
-
சிறிலங்கா விவகாரம் குறித்து ஹிலாரி பேசுவதைத் தடுக்க இந்தியா முயற்சி? – இந்திய ஊடகம் குற்றச்சாட்டு [ செவ்வாய்க்கிழமை, 19 யூலை 2011, 01:44 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக பேசுவதை தடுக்க இந்தியா முயற்சிப்பதாக இந்தியாவின் ஆங்கில இணைய ஊடகம் ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. இரண்டுநாள் பயணமாக நேற்றிரவு புதுடெல்லியை சென்றடைந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் இன்று இந்தியப் பிரதமருடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார். நேற்றிரவு 8.40 மணியளவில் சிறப்பு விமானம் ஒன்றில் புதுடெல்லியை அடைந்த ஹிலாரியுடன் 25 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்றும் வந்துள்ளது. …
-
- 0 replies
- 601 views
-
-
கிளிநொச்சியில் 60 வீத வாக்காளரிடம் அடையாளஅட்டை இல்லை - மாவட்ட அரசஅதிபர் அதிர்ச்சித் தகவல் [ செவ்வாய்க்கிழமை, 19 யூலை 2011, 00:19 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தமது அடையாளத்தை நிரூபிப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்கள் பெரும்பாலானோரிடம் தேசிய அடையாளஅட்டை இல்லை என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் 61,217 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள போதும், அவர்களில் 60 வீதமானவர்களிடம் தேசிய அடையாளஅட்டை இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இவர்களில் பலர் தமது சொந்த இடங்களை விட்டு வந்து குடியேறியவர்கள் என்றும், ஏனையோர் பலமுறை இடம்பெயர்ந்ததால் தமது அடையாள ஆவணங்களை த…
-
- 0 replies
- 258 views
-
-
அவசர அவசரமாக வீடுகள் அமைக்கும் படையினர் யாழ். மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமையாகக் கொண்ட 100 குடும்பங்களுக்கு அவசர அவசரமாக வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணியில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10 நாள்களில் நூறு வீடுகள் என்ற திட்டத்தின் கீழ் படையினர் இந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். யாழ். மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமையான குடும்பங்களைத் தெரிவு செய்து மனிதாபிமான அடிப்படையில் இராணுவத்தினர் இந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வீடும் சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதி கொண்டதாக இந்த வீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. வீட்டுத்திட்டப் …
-
- 0 replies
- 714 views
-
-
சங்கிலிய மன்னனுக்குப் பதிலாக கே.பியா? ரணில் கேள்வி 7/18/2011 10:21:00 PM வீரகேசரி இணையம் யாழ்ப்பாணம் மீது உண்மையான அக்கறை அரசுக்குக் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சங்கிலிய மன்னனின் சிலையை அகற்றி கே.பியின் சிலையை வைப்பதற்கு முயற்சியா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். போர்த்துக்கேயர்களுக்கு எதிராக போர் புரிந்த மன்னர்கள் பலர் இருந்தனர். அவர்களுள் யாழ்ப்பாணத்து இராச்சியத்தின் கடைசி மன்னனான சங்கிலியன் மிக முக்கியமானவர். எமது நாட்டுக்காக போர்த்த…
-
- 2 replies
- 564 views
-
-
அமிர்தலிங்கத்திற்கு நிகழ்வு நடத்தியது தமிழரசுக்கட்சி! பிரதம விருந்தினராக ஒட்டுக்குழு வரதராஜப்பெருமாள்! Wednesday, July 13, 2011, 21:30சிறீலங்கா கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட துரோகி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கான சிரார்த்த தினத்தினை தமிழரசுக்கட்சி தனது அலுவலகத்தில் இன்று அனுஷ்டித்தது. நிகழ்விற்கு ஒட்டுக்குழு ஈபிஆர்எல்எப் நாபா அணியின் செயலாளர் நாயகம் ஒட்டுக்குழு வரதராஜப்பெருமாள் முக்கிய உறுப்பினராக அழைக்கப்பட்டிருக்கின்றார். யாழ்.மார்டின் வீதியில் இன்று நடைபெற்ற இந் நிகழ்விற்கு தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் குலநாயகம் தலைமை தாங்க கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, கட்சி முக்கியஸ்தர்கள் சி.வி.கே.சிவஞானம், சிற்றம்பலம் உட்பட்டவர்கள் பங்குகொண்டிருந்ததாக தெரி…
-
- 142 replies
- 6.6k views
-
-
இலங்கையருடன் சென்று கொண்டிருந்த மேலுமொரு சரக்குக் கப்பல் சோமாலிய கொள்ளையர்களால் கடத்தப்பட்டது [Monday, 2011-07-18 20:41:32] இலங்கையா் ஒருவருடன் சென்று கொண்டிருந்த மேலும் ஒரு சரக்குக் கப்பல் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்ட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனை சோமாலியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. எம்.வி. ஜுபா எக்ஸ்எக்ஸ் எனும் இக்கப்பல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டதாகவும் அதில் 16 ஊழியர்கள் இருந்ததாகவும்� ஐரோப்பிய ஒன்றிய கடற்படை தெரிவித்துள்ளது. இவர்களில் ஒரு இலங்கையர், 5 இந்தியர்கள், பங்களாதேஷ் நாட்டவர்கள் மூவர், சோமாலியர்கள் நால்வர், கென்யா, சூடான், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 597 views
-
-
பன்னிரண்டுகோடி மக்களுக்கு ஒரு தலைவர் அது எங்கள் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்தான்! ஒரு கர்நாடகத் தமிழனின் உணர்வுப் பகிர்வு Posted by: on Jul 18, 2011 இவற்றுக்கும் அப்பால் இவர் ஒரு திரைப்பட இயக்குநரும்கூட. (கர்நாடக) மாநில விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது படம், தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக புறமொதுக்கப்பட்டதை ஜீனியர் விகடன் இதழ்கூட பதிவு செய்திருந்தது. அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் ஈழத் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு எதிரான கர்நாடகத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பதிவு செய்வதற்காக வந்திருந்தார். சிறீலங்காவின் இனவெறியன் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி கர்நாடகாவைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்த…
-
- 0 replies
- 705 views
-
-
யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடத்தவுள்ளது : 19 ஜூலை 2011 யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடத்தவுள்ளது : யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடாத்தத் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது இரண்டு குழுக்கள் கண்காணிப்பு பணிகளுக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பல எதிர்க்கட்சிகள் முறைப்பாடு செய்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முறைப்பாடுகளை கவனத்திற் கொண்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தத் தீர்மானித்ததாக மனித உ…
-
- 0 replies
- 299 views
-
-
மஹிந்தவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் தீர்மானம்! Tuesday, July 19, 2011, 0:49இந்தியா, உலகம் ஐ.நா. நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கையின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில் பெங்களூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநாட்டிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.டில்லியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மாநாட்டை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார். ஐ.நா. நிபுணர் குழுவின் முதல்கட்ட அறிக்கையின்படி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்க வேண்…
-
- 1 reply
- 585 views
-
-
இலங்கை விவகாரத்தில் இனியும் இந்தியா அமைதி காக்கக்கூடாது – சுவாமி அக்னிவேஷ்! பிரசுரித்தவர்: NILAA July 18, 2011 இலங்கையில் போர்க்குற்றம் நடந்திருப்பதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே இலங்கை விவகாரத்தில் இனியும் இந்தியா அமைதி காக்கக்கூடாது. மனித உரிமை ஆர்வலர்கள் இந்திய ஊடகங்கள் அமைதியை கலைத்து மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் – என்று சுவாமி அக்னிவேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறார் என்றும் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக டில்லியில் விரைவில் பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தப்படும் என்றும் சுவாமி அக்னிவேஷ் தெரிவித்தார். கர்நாடக தமிழ் மக்கள் இயக்…
-
- 3 replies
- 793 views
-
-
சுன்னாகம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தின்போது குழப்பம் விளைவித்த பொலிசார். 18 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுன்னாகம் நகர்ப் பகுதியில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியையும் கழற்றிவித்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி. ஒலி பெருக்கி நிறுத்தப்பட்ட பின்னரும் 5 நிமிடங்கள் தனது உரையை தொடர்ந்த பின்பே நிறுத்தினார். நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மக்கள் அனைவரது உரையும் முடிந்த பின்னரே கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கதாகும் வலி தெற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவிலை அண்மித்த பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போதே பொலிசார் இந்தச் செயற்பாட்டைச் செய்துள்ளனர். வலி தெற்கு பிரதேச சபை…
-
- 2 replies
- 476 views
-
-
யாழ்ப்பாணத்தில் பிரதேச செயலாளர் ஒருவரை செருப்பால் அடிப்பேன் என அமைச்சர் எச்சரித்தார்? 18 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்: குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர்களால் என்றுமில்லாதவாறு அரச அதிகாரிகள் நெருக்குவாரங்களையும் அவலங்களையும் சந்திப்பதாக குற்றச்சாட்டுக்களும் சீற்றங்களும் எழத்தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு தனது தனிப்பட்ட விஜயம் தொடர்பாக சென்றிருந்த முஸ்லீம் அமைச்சர் ஒருவர் பிரதேச செயலாளர் ஒருவரை செருப்பால் அடிப்பேன் எனக் எச்சரித்தாக அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த தனது குடும்ப அங்கத்தவரை பார்வையிடுவதற்காக மன்னாரில் அண்மையில் சர்ச்சைகளை ஏற்படுத்திய குறித்த அமைச்ச…
-
- 2 replies
- 790 views
-
-
CNN தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்யுமா? அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அரச நிர்வாகக் கட்டிடத்தொகுதியில் சென்ற வாரம் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை அமெரிக்க செனட்சபை உறுப்பினர்களும் மனித உரிமை காப்பக முக்கியஸ்தர்களும் அரசின் படமாளிகையில் பார்த்தனர். அமெரிக்க அரசு இந்த படத்திற்குக் கொடுத்த பகிரங்க அங்கீகாரமாக இந்த நிகழ்ச்சி இடம் பெறுவதாக AFP செய்திச் சேவை குறிப்பிடுகிறது. அதிபர் ஓபாமாவின் ஆளும் ஜனநாயகக் கட்சியின் செனட் சபை உறுப்பினர்கள் படக்காட்சியை ஒழுங்கு செய்தனர். சிஎன்என், பொக்ஸ் நியூஸ் போன்ற இணையங்களில் இலங்கையின் கொலைக்களம் பொதுமக்கள் பார்வைக்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளது. வீடியோச் செய்திகளை வெளியிடும் யூரியூப் (You Tube) இண…
-
- 1 reply
- 1.4k views
-