ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143314 topics in this forum
-
Friday, July 1, 2011, 15:26சிறீலங்கா, முதன்மைச்செய்திகள் யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்திருக்கும் இராணுவம் மற்றும் கடற்படை அண்மையில் தொடர்ச்சியாக நடத்திய கூட்டு இராணுவப் பயிற்சிகள் மூலம் யாழில் உள்ள மக்களை தொடர்ந்தும் ஒரு யுத்தப் பீதிக்குள் வைத்திருக்க முயல்வதாக அங்குள்ள சிவில் சமூக அமைப்புக்கள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.. இந்த வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெற்ற தீவிர கூட்டு இராணுவப் பயிற்சிகளால் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகள் எங்கும் பலத்த அதிர்வலைகளை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது… வடமராட்சி கிழக்கின் நாகர்கோவில் பிரதேசங்கள், வலிகாமத்தின் மாதகல் கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் காது கிழியக் கேட்கும் குண்டுச் சத்தங்களால் மக்கள் தங…
-
- 0 replies
- 603 views
-
-
[Friday, 2011-07-01 17:06:02] தங்காலை பிரதேச சபைத் தலைவர் பயணம் செய்த வாகனத்தின்மீது இனந்தெரியாத நபர்களால் இன்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வீதாரன்தெனிய பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.seithy.com/breifNews.php?newsID=45773&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 482 views
-
-
[Friday, 2011-07-01 17:23:11] சிறிலங்காவில் வெள்ளை வான் கடத்தல்காரர்களால் கடத்திச் செல்லப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக தகவல்களை அறியத்தரவேண்டும் எனக் கோரி நூற்றுக்கணக்கான மக்கள் நேற்றயதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடத்திச் செல்லப்பட்ட மற்றும் ,புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற நிலையில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த தமது பிள்ளகைள் தொடர்பாகவோ அல்லது கணவன்மார் தொடர்பாகவோ இதுவரை தமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். திருகோணமலைத் துறைமுக நகரில் கடமையில் ஈடுபட்டுள்ள சிறிலங்காக் கடற்படையினர் எனத் தம்மை அடையாளம் காட்டிய சிலர் பிரதாபன், ஜெகரூபன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு ஆண் பிள்ளைகளையும் 2008ல் …
-
- 0 replies
- 282 views
-
-
[Friday, 2011-07-01 12:54:28] வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஜே.வி.பிகட்சி வலியுறுத்தியுள்ளது. வடக்கு கிழக்கில் இன்னமும் முழுமையாக சிவில் நிர்வாகம்ஏற்படுத்தப்படவில்லை எனவும் இராணுவத்தினரே நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும் ஜே.வி.பிநாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். போர் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தொடர்ந்தும்வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டிருப்பது மக்களின் இயல்புவாழ்க்கைக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தினரின் நடவடிக்கைகளினால் பிரதேசத்தில் மீண்டும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கில் தாக்கு…
-
- 0 replies
- 303 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 01 யூலை 2011, 00:43 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] புலம்பெயர்வோர் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கான புதிய புலனாய்வுப் பிரிவு ஒன்றையும், தொலைந்து போன கடவுச்சீட்டுகள் பற்றிய புள்ளிவிபரங்களை இணையம் மூலம் கோவைப்படுத்துவதற்கான பிரிவு ஒன்றையும் உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி, மீளவும் தீவிரவாதம் தலைதூக்குவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் திட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த இரு பிரிவுகளும் இந்த ஆண்டு இறுதியில் உருவாக்கப்படவுள்ளன. அனைத்துலக காவல்துறையிடம் இருந்து புலம்பெயர்ந்து செல்லும் சிறிலங்காவைச் சேர்ந்தவ…
-
- 4 replies
- 716 views
-
-
நில ஆக்கிரமிப்பினை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது தமிழர்தேசம்? - இதயச்சந்திரன் ஜூலை 1, 2011 சிந்தனைக் கூடம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தினால் ‘மாஞ்சோலை’ மாதாந்த ஒன்று கூடலொன்று, சென்ற வாரம் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தேறியது. ‘இந்திய உதவியும், அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கு பயன்தருமா?’ என்கிற தலைப்பில் நடைபெற்ற ஆய்வில், அபிவிருத்தி என்கிற போர்வையில், குடாநாட்டு வளங்கள் சுரண்டப்படுவது குறித்து உரையாடப்பட்டுள்ளது. இராணுவக் கெடுபிடிகளின் மத்தியிலும், இவ்வாறான ஆய்வரங்குகள் நிகழ்த்தப்படுவது ஆச்சரியமாகவிருக்கிறது. சூழலியல் பற்றியதான விழிப்புணர்வுகள், மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதோடு, நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான தெளிவூடல்களும் முன்வைக்கப்பட வேண்டும். தமிழர…
-
- 0 replies
- 338 views
-
-
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை? 01 ஜூலை 2011 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிளளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டுமெனவும், அவ்வாறு தவறும்பட்சத்தில் சர்வதேச நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டுமென உறுப்பு நாடுகள் அதிகம் எதிர்பார்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இதன் மூலம் விசாரணைகள் குறித்து கவனம் செலுத்தப்பட மாட்டாது என அர்த்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட உள்நாட்டு விசாரணைகள் எது…
-
- 4 replies
- 847 views
-
-
Jul 1, 2011 / பகுதி: செய்தி / மன்னாரில் மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்! மன்னார் மாவட்டத்தின் மடுப் பகுதியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினை மேற்கொள்ள மக்கள் வங்கி திட்டமிட்டுள்ளது. மக்கள் வங்கிக் கிராமம் என்ற பெயரில் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. வங்கியின் 50ஆவது பொன்விழாவை முன்னிட்டே இந்த வீடுகள் வங்கி உத்தியோகத்தர் களின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுவருவதாக மக்கள் வங்கியின் யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் எஸ். பத்மநாதன் தெரிவித்துள்ளார். ; அங்கு குடியமர்த்தப்படுகின்ற சிங்களவர்கள் தமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களையும் அப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்வர் என்றும் இதனால் தமிழர் நிலங…
-
- 0 replies
- 441 views
-
-
தென் தமிழீழ பெண்கள் விபச்சாரத்திற்காக தென்பகுதிக்கு… Friday, July 1, 2011, 13:39 சிறீலங்கா தென் தமிழீழ மாவட்டங்களில் உள்ள இளம் தமிழ் பெண்களை தென்பகுதிக்கு ஆடைத் தொழிற்சாலைகளில் பணிகள் எடுத்து தருவதாகவும், வெளி நாட்டு வேலைவாய்ப்புக்கள் என்றும் ஏமாற்றி தென் பகுதிக்கு அழைத்து செல்கின்றனர். பின்னர் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடச்செய்கின்றனர். இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் முன் நாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திர நேரு சந்திர காந்தன். யுத்தத்தின் பின்னர; தமிழ் யுவதிகளை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர; சந்திரநேரு சந்திரகாந்தன் விடுத்துள்ளார;. அவ்வறிக்கையில் த…
-
- 0 replies
- 699 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டு நிறுவனங்களில் நம்பிக்கை வைத்து, ஈழத் தமிழருடன் இணைந்து உலகத் தமிழர்களும் சர்வதேச செயற்பாட்டாளர்களும் மிக நீண்டகாலமாக ஐ.நா மனித உரிமைக்கான தலைமைச் செயலகத்தை கொண்ட ஜெனீவாவிற்குச் சென்று அங்கு ஐ. நா. மனித உரிமைச் செயற்பாடுகளில் கலந்து வருகின்றனர். ஈழத்தமிழர்களின் சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் உரிமைகள் மிக நீண்ட காலமாக இலங்கைத்தீவில் பெரும்பான்மையின ஆட்சியாளர்களினால் மறுக்கப்பட்டு வருவதோடு, இவற்றை வேண்டிநிற்கும் தமிழீழ மக்களை பூண்டோடு அழிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் 1983ஆம் ஆண்டு இலங்கைத் தீவு முழுவதிலும் தமிழ் மக்கள் மீது இலங்கை ஆட்சியாளனால் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்தே, தமிழீழச் செயற்…
-
- 1 reply
- 737 views
-
-
தம்பியின் தம்பி சீமானே! சிறையிலடைத்தும் சிதையாத சீமானை சிறுக்கியை வைத்து சிதைக்கப் பார்கிறது!! ஒரு சின்னக் கூட்டம் இங்கே…….. முடியாது.. முடியாது… ஒரு போதும் முடியாது, இவர்களின் எண்ணம் கனவிலும் நடவாது. இச்செய்தி கேள்வியுற்ற மறுநொடியே எள்ளி நகையாடினர் உலகத் தமிழர்கள்! சீமானைப் பார்த்தல்ல…. சிறுக்கியின் பின்னால் ஒழிந்து நிற்கும் கோழைகளைப் பார்த்து… சிங்களத்தின் சமர்மேகம் வன்னியெங்கும் சூழ்ந்திருக்க.. இந்தியத்தின் கடற்படை எட்டப்பன் வேலை பார்க்க… அன்று அலையடிக்கும் கடல் நடுவே வெறும் சீமானாக புலித்தம்பிகள் துணை கொண்டே புறப்பட்டான் !! புலித் தலைவனின் அழைப்பை ஏற்று. நொடிக்கு ஒருமுறை குண்டு மழை! ஐந்து நிமிடத்திற்கு ஓரிடம் ! - என யுத்…
-
- 1 reply
- 1.5k views
-
-
நாட்டு நடப்பு (யாழ்ப்பாணம்) -இரா.சி 01 ஜூலை 2011 தீவுப் பகுதியில் மக்கள் மீள் குடியேறாமைக்கான காரணம் போக்குவரத்து குறைபாடே இன்று(01.06.2011) நாட்டில் பிரபலம் மிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றம் இடம்பெறுகிறது. 14ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த் திருவிழாவும், 16ஆம் திகதி சனிக்கிழமை இரவு தெப்பத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. தீவுப்பகுதியை கடலூடாக இணைக்கின்ற ஒரே ஒரு தாம்போதி வீதியான பண்ணை-வேலணை வீதி பிரயாணத்திற்கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. பண்ணை, வேலணை தாம்போதி பாதையில் பாரிய பாலம் ஒன்றும், நீர் ஓட்டத்திற்கான பல குழாய்களும் வீதியூடாக அமைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருடங்களிற்கு மேலா…
-
- 0 replies
- 386 views
-
-
இரகசிய தகவலையடுத்து அமெரிக்க பொலீசார் தேடுதல்!வீசா இன்றி மறைந்திருந்த இலங்கையர்கள் டெக்ஸாஸ் மாநிலத்தில் கைது. [Friday, 2011-07-01 11:06:08] அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையொன்றின் போது இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான வீசா அனுமதியின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டிலேயே பிரஸ்தாப இலங்கையர்கள் அமெரிக்க குடிவரவுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான டெக்ஸாஸ் மாநிலத்தின் ஒதுக்குப்புறமான வீடொன்றில் மறைவாகத் தங்கியிருந்த நிலையிலேயே அவர்கள் குடிவரவுப் பிரிவினரிடம் சிக்கிக் கொண்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. குடிவரவுப் பிரிவின…
-
- 0 replies
- 493 views
-
-
கொழும்பு மெகஸின் சிறைச்சாலையிலிருந்து யாழ். சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி தப்பியோட்டம் [Thursday, 2011-06-30 22:55:55] யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி இன்று வியாழக்கிழமை காலை தப்பியோடியுள்ளதாக யாழ். சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நான்கு வருடமாக கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க கைதி ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். இவர் இன்றைய தினம் வயிற்று வலி காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறைக்காவலர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த இவர் திடீரென யாழ். போதனா வைத்தியசாலையின் பின் மதிலில…
-
- 0 replies
- 361 views
-
-
யாழ். வருகின்றனர் பஸில், டிலான் news பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகிறார். அன்று பிற்பகல் 3 மணிக்கு கோயில் வீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைப்பார். வேறுபல நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்க விருக்கிறார். அதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேராவும் அன்று யாழ்ப்பாணம் வருகின்றார்.கொரிய நாட்டுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வகுப்பை அமைச்சர் ஆரம்பித்து வைப்பார். 01 ஜுலை 2011, வெள்ளி 8:05 மு.ப http://onlineuthayan.com/News_More.php?id=50176384201132779
-
- 0 replies
- 495 views
-
-
ரணில் விக்ரமசிங்கவிற்கும் பான் கீ மூனுக்கும் இடையில் சந்திப்பு : 01 ஜூலை 2011 எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் வாரத்தில் நியூயோர்க்கில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூலை மாதம் 5ம் திகதி இந்த சந்திப்பு நடைபெறும் என இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க செனட்டர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளை சந்திக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் வி…
-
- 0 replies
- 288 views
-
-
ஐநா பிரதிநதி ஹைன்ஸ் உடனான நேர்காணல் - தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- 30 ஜூன் 2011 'போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்குச் சமாந்தரமாகச் சர்வதேச விசாரணை ஒன்றும் முன்னெடுக்கப்படல் வேண்டும்.' ஐநா பிரதிநதி ஹைன்ஸ் உடனான நேர்காணல் - தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் தன்னிச்சையான நியாயத்துக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பிலான ஐநாவின் விசேட பிரதிநிதி கிறிஸ்ரோபர் ஹைன்ஸ் சனல் 4இன் ஆவணப்படம் பயன்படுத்தியுள்ள காட்சிப் பதிவுகள் பார்வையாளர்களைப் பல்வேறு அனுமானங்களுக்கும் இழுத்துச் சென்றுள்ளது. உதாரணமாகப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை எடுத்துக் கொண்டால், அங்கு காட்டப்படும…
-
- 1 reply
- 403 views
-
-
India enters into ‘Army-to-Army’ talks with Sri Lanka [TamilNet, Thursday, 30 June 2011, 14:17 GMT] India initiates its first Army-to-Army talk with Sri Lanka, which is viewed as a significant bilateral military collaboration between the two establishments. During the current three-day talks, the two Armies will chalk out the programmes to be undertaken over the next one year, Times of India reported Thursday. At present, India has such military-to-military level cordiality only with nine other countries, the US, UK, Israel, France, Japan, Australia, Malaysia, Bangladesh and Singapore. New Delhi timing the special official recognition and confirming participation with…
-
- 5 replies
- 622 views
-
-
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’ஜெயலலிதா கூறுவதுபோல் மக்களவைக்கு இடைத்தேர்தல் வராது. திமுக & காங்கிரஸ் உறவு பலவீனமாக இல்லை. இந்தியாவின் வெளியுறவு கொள்கையை மாற்றாத வரை இலங்கை தமிழர் பிரச்னை தீராது. இது சர்வதேச சிக்கல் என்பதால் அமெரிக்கா, பிரிட்டனுடன் இணைந்து இந்தியா, ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள், ராஜபக்சேவை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முயல்கின்றனர். அவர்களது நடவடிக்கைக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் சார்பில் வரும் 2&ம் தேதி முதல் 10 லட்சம் கையெழுத்து வாங்கும் இயக்கம் தொடங்கப்படுகிறது’’ என்று கூறினார். http…
-
- 3 replies
- 593 views
-
-
இலங்கைக்கு சர்வதேச அழுத்தங்கள் வரும் எந்தவொரு வேளையிலும் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக வியட்நாம் அறிவித்துள்ளது. இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து வியட்நாம் அவதானித்து வருவதாக இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டொன் சின் டா தெரிவித்துள்ளார். பிரதமர் டி.மு.ஜயரட்னவை இன்று மாலை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தபோதே வியட்நாம் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். வியட்நாம் வர்த்தகர்கள் பல துறைகளில் இலங்கையில் முதலீடு செய்யக் காத்திருப்பதாக வியட்நாம் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வியட்நாமிற்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. http://www.eeladhesam.com/inde…
-
- 3 replies
- 944 views
-
-
The UN’s human rights chief yesterday warned Sri Lanka not to take too long in probing war crimes allegations, saying failure to carry out a credible inquiry could lead to international action. “There is now a high level of expectations expressed by member states that Sri Lanka should seriously inquire into these allegations” of prisoner executions and assaults, said Navi Pillay, UN High Commissioner for Human Rights. “But this should not be an open-ended process,” she stressed, noting that a previous Sri Lankan internal inquiry “failed to complete its task, never published its report and never led to a single prosecution.” “If that should be the case again, there i…
-
- 1 reply
- 790 views
-
-
இலங்கைக்கு சர்வதேசம் என்றைக்குமே தலையிடிதான் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான மூன்று தசாப்த காலப் போர் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்துள்ளன. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் இலங்கைக்கு என்றைக்குமே பிரச்சினை இருக்கப் போகிறது என்று இலங்கை அரசு நம்புகிறது. இதனால்தான் சர்வதேச புலி ஆதரவாளர்களின் வலையமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக் கையில் மும்முரமாக இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. சர்வதேச விடுதலைப்புலிகளின் வலையமைப்பைச் சிதைப்பதற்கு முன்னாள் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை துருப்புச் சீட்டாக இலங்கை அரசு பயன்படுத்தி வருகிறது. வடக்கு, கிழக்குப் புனரமைப்பு அப…
-
- 1 reply
- 831 views
-
-
Thursday, June 30, 2011, 21:27சிறீலங்கா இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட தற்போது தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் போராளிகளை இராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்து அந்த காணொளிகளை போர்க் குற்ற ஆதாரங்களாப் பயன்படுத்தவதற்கு தமிழர்களுக்கு விற்பனை செய்வதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவத்தினர் , தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் போராளிகளை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று காட்டுப் பகுதிகளில் வைத்து அவர்களை சுட்டு கொலைசெய்து வீடியோ எடுத்து அவற்றினை இலங்கை அரசு செய்த போர்குற்ற நடவடிக்கை எனக்கூறி தமிழர்களிற்கு பல லட்சம் ரூபா பணத்திற்கு விலை பேசி விற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவல்கள் இராணுவத்தரப்பு வட்டாரங்களில் இருந்தே எமக்கு கசிந்…
-
- 3 replies
- 1.1k views
-
-
[Thursday, 2011-06-30 20:55:43] தமிழர்கள் தேவையற்ற அதிகாரங்களைக் கோராமல் சிங்களவர்களுடன் இணைந்து வாழப் பழக வேண்டும் என்று சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணையில் சமூகமளிப்பதற்காக நேற்று நீதிமன்றத்துக்கு வந்து திரும்பிச் செல்லும் வழியில் ஊடகவியலாளர்களிடம் ஓரிரண்டு வார்த்தைகள் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கில் வாழும் தமிழர்கள் அனாவசியமான அதிகாரங்களைக் கோராமல், இந்தியாவில் இருக்கும் அதிகாரப் பரவலாக்கல் மாதிரியை முன்னுதாரணமாகக் கொண்டு அதிகாரத்தை வழங்குமாறு கோராமல் சிங்களவர்களுடன் இணைந்து வாழத் தீர்மானிக்க வேண்டும். தென்னிலங்கை சிங்களவர்களும் வடக்கி…
-
- 4 replies
- 896 views
-
-
தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணி பிரித்தானியாவில் விளையாடி கொண்டு இருக்கும்வேளை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் முன்னெடுத்து செல்லப்படும் புறக்கணிப்பு போராட்டம் தனது இறுதி புறக்கணிப்பு போராட்டத்தை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்திற்கு முன்பாக நடத்தவுள்ளனர். ஜூலை 03 ஆம் திகதி காலை 10:00 மணிமுதல் மாலை 06:00 மணி வரை இடம்பெறும். கடந்த செவ்வாய்க்கிழமை தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு பிரித்தானிய தமிழ் இளையோர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற சிங்களவர்கள் இளையோர்கள் மீது எச்சில் துப்பி, தகாத வார்த்தைப் பிரயோகங்களால் திட்டியதுடன், தமிழீழ தேசிக் கொடியை அகற்ற வேண்டும் என பிரித்தானிய காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்…
-
- 1 reply
- 694 views
-