ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
இலங்கை இந்திய இராணுவத்தினருக்கு இடையில் பேச்சுவார்த்தை 30 ஜூன் 2011 முதல் தடவையாக இலங்கை இந்திய இராணுவத்தினருக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவத் தரப்பினருக்கு இடையில் முதல் தடவையாக இவ்வாறான ஓர் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது. இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது. பயிற்சி நடவடிக்கைகள், கூட்டு நடவடிக்கைகள் போன்றன குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாட்கள் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையின் சார்பில் இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் எச்.சீ.பீ. குணதிலக்க தலைமையிலான குழுவினரும், இந்தியாவின் சார்பில் …
-
- 0 replies
- 596 views
-
-
நாகர்கோவிலில் நேற்று இரவு குண்டுச் சத்தம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு தொடர்ச்சியாகக் குண்டுச் சத்தங்கள் கேட்டதாகத் தென்மராட்சிக் கரையோரப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். நேற்று இரவு 8 மணிமுதல் சுமார் 10 நிமிடங்களுக்கு இந்தக் குண்டுச் சத்தங்கள் நீடித்ததாகவும், குண்டுச் சத்தங்களின் பின்னர் அந்தப் பகுதியில் இருந்து வானத்தை நோக்கி வெளிச்சக் குண்டுகளும் ஏவப்பட்டதாகவும் இதனால் தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.முதலில் குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் பின்னர் ஏவப்பட்ட வெளிச்சக் குண்டுகளால் தென்மராட்சி கரையோரப் பிரதேசம் பிரகாசமாகக் காணப்பட்டதாகவும் வரணி வாசி ஒருவர் உதயனுக்குத் தெரிவித்தார்.இது…
-
- 0 replies
- 345 views
-
-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நூலில் வடக்கு ஊர்ப் பெயர்களில் தமிழ்க்கொலை! news பொருளாதார அபிவிருத்தி அமைச் சால் வெளியிடப்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பான நூலில் வடபகுதியின் சில பிரதேச செயலர் பிரிவுகளின் பெயர்கள் கண்மூடித்தனமாக கொலை செய்யப்பட்டுள்ளன. அந்த நூலில் காணப்படும் பெயர்களை வாசிக்க தலையே வெடித்துவிடும்.பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2010 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையும் தொலைநோக்கும் என்ற அபிவிருத்தியின் முன்னோடி நூலில் காணப்படும் வரைபடங்களிலேயே இந்த படுபாதகத் தமிழ்க் கொலைகள் இடம் பெற்றுள்ளன. இதோ அந்த பிரதேச செயலகப் பிரிவுகளின் விவரம் வருமாறு: சங்கநாய் (சங்கானை), சந்திரிப்பாய் (சண்டிலிப்பாய்), கந்தாவல (கண்டா வளை), பச்சில (பச்சிலைப்பள்ளி), நந்தான …
-
- 0 replies
- 299 views
-
-
உதயன் செய்தியாளர் தாக்கப்பட்டார் news கிளிநொச்சி ஊரியான் பிரதேசத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி மாவட்ட செய்தியாளர் ஒருவர் நேற்றுத் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட செய்தியாளர் கிளிநொச்சிப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.ஊரியான் பிரதேசத்தில் செயற்பட்டுவரும் கமக்கார அமைப்பினது மோசடிகள் குறித்து மக்கள் மேற்கொண்ட முறைப்பாடுகள் தொடர்பான கலந்து ரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலுக்கு உதயன் கிளிநெச்சி மாவட்டச் செய்தியாளரும் சென்றிருந்தார். அங்கு கமக்கார அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உதயன் பத்திரிகையைக் கடுமையாக விமர்சித்ததுடன் செய்தியாள ருடன் வாக்குவா தத்தில் ஈடுபட் ட…
-
- 0 replies
- 433 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் இன்று (29) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை இரு தரப்பிலிருந்தும் அறிந்து கொள்ள முடியாத நிலை ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டது. விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுடன் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்த போதும் அது கைகூடவில்லை. அவர்களது கைத்தொலைபேசிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ' இவ்வாறான முக்கிய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தியா சென்றுள்ளமையும் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா நேற்றைய பேச்சுவார்த்தை…
-
- 2 replies
- 591 views
-
-
தமிழ் ஈழம் வாங்கித் தருவேன் என்று நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சொன்னவர் ஜெயலலிதா. இப்போது அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தால், அவரை உண்மையில் புரட்சித்தலைவி என்று ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார். வழக்கறிஞர்கள் மாநாடு என்று கூடி வில்லங்கமான பல விஷயங்களை பந்திவைத்துக் கலைந்து உள்ளது ம.தி.மு.க. நடத்திய திருச்சி மாநாடு! ஜுன் 25-ம் தேதி திருச்சி – ஹோட்டல் ஃபெமினா கலையரங்கத்தில் நடந்த மாநாட்டில், விவாதத்துக்கு உரிய பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடந்தது. விடுதலைப் புலிகளின் மீதான தடை’ என்ற தலைப்பில் பேசிய பாசறை பாபு, எந்தக் கூட்டணியில் இருந்தாலும், நேற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்தேன்! இன்றும் ஆதரிக்கிறேன்! நாளையும் ஆதரிப்பேன்! என்று சொல்லும் கொள்கை மாறாதவர் தலைவர் வைகோ…
-
- 3 replies
- 636 views
-
-
Posted by இரும்பொறை on 29/06/2011 யாழ்ப்பாணம் தற்போது படையினரின் படைஆட்சியின்கீழ் பல்வேறுபட்டஆழுகையில் தமிழினவீரியத்தை இழந்து நிக்கின்றது. வடபகுதியில் தமிழ்மக்கள் வாழ்இடங்களில் படைச்செறிவினை அதிகரித்த சிங்கள அரசு தமிழ்மக்களின் சுதந்திர உரிமையினை பறித்து படைஆட்சியினை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றார்கள் ஊடகங்கள் ஊமையாய் போன நிலையில் தமிழ்மக்களின் அரசியல் உரிமைபற்றி கதைகூறமுடியாமல் சிங்கள அரசின் அலுவகங்களின் பிரச்சனைகளை தலைப்பிட்டு செய்தி வெளியிடும் வேளை சிங்கள அரசுடன் சேர்ந்தியங்கும் தாங்களை முதன்மையாளர்கள் என்று காட்டிக்கொள்ளும் சில இணையத் தளங்கள் சிங்கள கோட்டைக்குள் இருந்துகொண்டு பன்னாட்டு தமிழ்மக்களை கவரும் ஈழத்து செய்திகளை கோர்த்து மலை இடுகின்றார்கள் தமிழ்மக்களுக்…
-
- 2 replies
- 550 views
-
-
கே.பி. தங்கக் கூண்டில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதி. வெளிநாடுகளிலுள்ள புலிகளின் நிதியை அவர் எப்படி வெளிக்கொணர முடியும். அப்படி அவர் அந்த நிதியை இலங்கைக்குக் கொண்டு வந்தால் ராஜபக்ஷவின் குடும்பத்துக்கே அது போய்ச் சேரும். தமிழ் மக்களுக்கு சிறு தொகையே சென்றடையும். இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதியைக் கைப்பற்றி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு வழங்க நடவடிக்கை எடுப்பேன் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயு தக் கொள்வனவாளரும், அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவருமான கே.பி. என்ற ழைக்கப்படும் குமரன் பத்மநா…
-
- 2 replies
- 604 views
-
-
செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011 09:07 | ஓரு பேப்பரின் 142 வது இதழில் 'ஒரு வருட நிறைவுகாணும் நாடு கடந்த அரசின் மீதான ஓர் பார்வை' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்... தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்களின் பின்னாலும் ஆயிரக்கணக்கில் அவர்களுக்கென வாக்களித்த மக்கள், இருப்பதை மறுத்துவிட முடியாது என குறிப்பிட்டிருந்தேன். அப்போது, நா.க. அரசாங்கமானது, தனிமனிதன் ஒருவருக்கு அதிகப்படியானதும், அளவிற்கு மீறியதுமான சக்தியை கொடுக்குமானால் அது ஜனநாயகத்தின் உயிர்ப்பை பாதிக்கும் எனக் காரணங்காட்டி அதனை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட உறுப்பினர்களில் கணிசமான தொகையினர் மறுத்தமை பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். யாப்பில் மாற்றம் வேண்டி நின்ற மேற்படி உறுப்பினர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்…
-
- 5 replies
- 1.1k views
-
-
28 ஜூன் 2011 சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க.. நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும் அரசியல் தீர்வை வழங்க தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது, ஊடக நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அடுத்த வருடம் கட்டாயமாக வட மாகாண தேர்தல் நடத்தப்படும் என கூறினார். அதேவேளை பொதுச் சேவை கட்டமைப்பின் கீழ் இரண்டு லட்சம் ரூபா ஊதியம் வழங்க முடியாது என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு ஊதிய அதிகரிப்பை வழங்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்…
-
- 9 replies
- 684 views
-
-
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-29 14:26:41| யாழ்ப்பாணம்] பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம். தீராத கோபம் யாருக்கென்ன இலாபம். இது சினிமாப் பாடல் வரி. இதனுள் இருக்கக் கூடிய தத்துவம் அற்புதமானது. பகையை மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர் எப்போதுமே நிம்மதியாக இருக்க முடியாது. நிம்மதியற்ற மனநிலை துன்பம் தருவதாகும். இதன் காரணமாகவே பகைகொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் என்று கவிஞர் மொழிகின்றார். இத்தகைய மனநிலைக்கு ஒரு உதாரணம் தருக என்று யாரேனும் கேட்டால் இலங்கை அரசு என்று கூறமுடியும். இலங்கை அரசு என்பது சமகாலத்து அரசை மட்டும் குறித்து நிற்காது. மாறாக, இலங்கையில் காலத்துக்கு காலம் ஆட்சியில் இருந்த அத்தனை அரசுகளையும் குறிப்பதாகும்.…
-
- 0 replies
- 2.6k views
-
-
வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் அனைத்தையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மதுராந்தகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் தமிழர்கள் மீது ராஜபக்சே அரசு நடத்திய தாக்குதலுக்கு, பதிலடியாக இலங்கையுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் அனைத்தையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும். தமிழர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல் சம்பவங்கள் நீடித்து வருகிறது. இதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். உலகல் பல நாடுகள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டபோதும், 7 கோடி தமிழர்கள் குடிமக்களாக இருக்கக் கூடிய இந்திய நாட்டின் அரசு ஒப்புக்குக் கூட போரை நிறுத்தச் சொல்லவில்லை. தமிழின படுகொலைக்கு துணை போ…
-
- 0 replies
- 335 views
-
-
Posted by இரும்பொறை on 29/06/2011 ஆளுங்கட்சியின் அடாவடித்தனத்துக்குப் பதிலளிக்கும் வகையிலான துணிச்சலான பதில் நடவடிக்கையொன்றை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 01ம் திகதி மேற்கொள்ளவுள்ளது. துணிச்சல் இருந்தால் காலி மாவட்டத்தினுள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்திக்காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆளுங்கட்சியின் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அடிதடியில் மோ்வின் சில்வாவுக்கு இணையானவருமான நிசாந்த முத்துஹெட்டிகம சவால் விடுத்திருந்தார். அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 01ம் திகதி காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேசத்தில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதனையடுத்து தற்ப…
-
- 0 replies
- 520 views
-
-
இலங்கையுடன் நேர்மையான உறவுகளைப் பேணு விரும்புவதாக பிரித்தானியா அறிவிப்பு 29 ஜூன் 2011 இலங்கையுடன் நேர்மையான உறவுகளைப் பேணு விரும்புவதாக பிரித்தானியா அறிவிப்பு இலங்கையுடன் நேர்மையான உறவுகளைப் பேணுவதற்கு விரும்புவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏதேனும் அபிவிருத்தியை எட்ட வேண்டுமென தென் ஆசிய நாடுகளுக்கான பிரி;த்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் புருட் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து பிரித்தானியா உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். செனல்4 ஊடக ஆவணப்படம் மற்றும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு…
-
- 2 replies
- 588 views
-
-
தப்பியோடி வந்த தமிழ் மக்களைப் புலிகள்தான் சுட்டுக் கொன்றனராம்: ஆளில்லா விமானம் தத்ரூபமாக படம் பிடித்துள்ளது என்கிறார் ஜனாதிபதி மஹிந்த [Wednesday, 2011-06-29 08:53:08] இறுதிக்கட்ட யுத்தம் முல்லைத் தீவில் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது நாம் ஆகாயத் திற்கு அனுப்பிய விமானியில்லாத தன்னிச்சையில் இயங்கும் விமானம் அரசாங்கத்தரப்புக்கு தப்பியோடி வரும் மக்களை எல்.ரி.ரி.ஈயினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யும் உண்மைக் காட்சிகளை தத்ரூபமாக படமெடுத்துள்ளது என தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்த வீடியோ காட்சிகளை இலங்கையில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளை அழைத்து, அவர்கள் முன்னிலையில் அந்தக் காட்சிகளை பார்த்தேன் என்று கூறியுள்ளார். இதிலிருந்து வெளிநாட்டு அரசாங்கங்கள் எ…
-
- 3 replies
- 889 views
-
-
Jun 12, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இன அழிப்புக்காக குறிவைக்கப்படும் தமிழ்ப் பெண்கள் – பொஸ்னியாவின் நிலையே வடக்கில் பொஸ்னியாவில் இடம்பெற்ற போரின் போது ஒரு இனத்தின் அடையாளங்களையும், அவர்களின் தாயகத்தையும் சிதைப்பதற்கு பெண்களைத் தான் அரச படையினர் குறிவைத்து அவர்களின் கலாச்சாரத்தை அழித்தனர். அதேபோன்ற ஒரு நடவடிக்கையையே சிறீலங்கா அரசு வடக்கில் மேற்கொண்டு வருகின்றது என கோல்டன் அமைதி ஆதரவுக் குழுவின் ஊடகத்திற்கு எழுதிய பத்தியில் போல் நியூமான் தெரிவித்துள்ளார். அதன் தமிழ் வடிவம் வருமாறு: தமிழ் பெண்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் வன்முறைகளை அனைத்துலக சமூகம் கவனத்தில் எடுக்காதபோதும், பொதுமக்களை குறிப்பாக பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சிறீலங்கா அரசு…
-
- 1 reply
- 690 views
-
-
புலிகளின் பணத்தை யார் வைத்திருக்கின்றார்கள் என்பது பற்றிய தகவல்கள் தெரியும் - குமரன் பத்மநாதன் : 27 ஜூன் 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரியளவு பணத்தை யார் வைத்திருக்கின்றார் என்பது பற்றிய தகவல்கள் தமக்குத் தெரியும் என புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் இந்தப் பணம் எங்கு பேணப்படுகின்றது என்பது பற்றியும் தாம் அறிந்து வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பாரியளவு பணம் யாரிடம் இருக்கின்றது என்பது தமக்கு தெரியும் என்ற போதிலும் பணத்தைக் கண்டு பிடிப்பது சுலபமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். …
-
- 3 replies
- 709 views
-
-
[Wednesday, 2011-06-29 14:36:44] இலங்கைப் பிரச்சினைகளில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. அதில் அவசரம் காட்ட முடியாது. பொறுமையுடன்தான் எதையும் அணுக வேண்டியுள்ளது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும், பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் ஆகிய நமது அண்டை நாடுகளுடனும் அவ்வாறான போக்கினை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை ராகுல் காந்தி பிரதமராக எந்த தடையும், சிக்கலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=45653&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 354 views
-
-
வவுனியா நிருபர் புதன்கிழமை, யூன் 29, 2011 அண்மையில் இரஷ்யாவிற்கு கண்காட்சி ஒன்றிற்காக மஹிந்த பரிவாரம் சென்றது. மஹிந்த உட்பட அனைவரும் இரஷ்ய அரசாங்கத்தின் விருந்தினராக செல்வதாக வெளிக்காட்டிக்கொண்டது. ஆனால் குறித்த கண்காட்சிக்கு இரஷ்யா உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லை என்றும் மஹிந்த உட்பட அனைவரும் தலைக்கு 3000 டொலர்கள் கட்டி அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்டே சென்றதாக கூறப்படுகின்றது. இதன்படி குறித்த கண்காட்சி நிறுவனம் இவர்களை தனி நபர் விருந்தாளிகள் போலவே நடாத்தியது. அத்துடம் மஹிந்த மேற்கொண்ட சந்திப்புக்களும் கண்காட்சியில் கலந்துகொண்டோர்கள் கலந்து கொண்ட தே நீர் விருந்திலேயே நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் சிங்கள ஊடகங்களோ மஹிந்த இரஷ்யா, சீனா அதிபர்களின் அழைப்பின் பேரில் கலந்…
-
- 5 replies
- 781 views
-
-
[Wednesday, 2011-06-29 12:46:41] இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா தங்களை நிர்பந்திக்கவில்லை என்று அதிபர் ராஜபக்ச கூறியுள்ளது இந்தியாவின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்துகிறது என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை: இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அரசுக் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு எந்த நிர்பந்தத்தையும் தங்களுக்கு அளிக்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச கொழும்புவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னால் கொழும்பு சென்ற சிங்சங்கர் மேனன், அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், பா…
-
- 2 replies
- 837 views
-
-
நாடு முழுவதிலும் மொழிப் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன 29 ஜூன் 2011 இலங்கையில் தேசிய மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என கனடா .. நாடு முழுவதிலும் மொழிப் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன நாடு முழுவதிலும் மொழிப் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த மொழிப் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன. 25000 அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு மொழிப் பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்ப…
-
- 2 replies
- 441 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சனநாயகச் செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்து, மக்களுக்களோடு கலந்துரையாடும் வகையிலான, மக்கள் தொடர்வு மையமொன்று, தமிழர் விளையாட்டு விழாவில் அமையவுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் யூலை 3ம் நாள் ஞாயிற்றுக்கிழமை, Parc Départemental de le Cournuve – Dugny / Le Bourget எனும் இடத்தில் இடம்பெறும் தமிழர் விளையாட்டு விழாவிலேயே இதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழீழ தேசிய அட்டைகளுக்குரிய பதிவுகள் செய்யப்படவுள்ளதோடு, பிரான்சில் அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகள் விவகாரங்களுக்கான மனிதாபிமான மையமும் மக்கள் தொடர்பு மையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப…
-
- 1 reply
- 495 views
-
-
[Wednesday, 2011-06-29 10:24:54] தேசிய பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரப் பகிர்வு இடம்பெறக் கூடாது. வடக்கு கிழக்கிற்கு ஏனைய மாகாண சபைகளுக்குள்ள நிர்வாக முறையையும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுமே வழங்க வேண்டும். மேலதிகமாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமேயானால் அதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் அநாவசியமான தீர்வுத் திட்டங்களை தேசிய அரசியலுக்குள் உட்புகுத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. இன்று தமிழர்கள் எவ் விதமான பிரச்சினையும் இன்றி இலங்கையில் வாழ்கின்றார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக ஜாதிக…
-
- 3 replies
- 325 views
-
-
புதன்கிழமை, 29 ஜூன் 2011 08:53 | இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று பாரிய சத்தத்துடன் யாழ். குடா கடல் வான்பரப்பை சுற்றி இன்று புதன்கிழமை காலை 8.33 மணியளவில் பறந்து நோட்டமிட்டுள்ளது. இந்த விமானம் பறந்து நோட்டமிடுவதை யாழ். குடாநாட்டின் கரையோரப்பகுதி மக்கள் அச்சத்துடன் அவதானித்தனர். யாழ். குடா கடல் வான்பரப்பை சுற்றி பறந்து நோட்டமிட்ட இந்த விமானம் பின்னர் அப்பகுதியிலிருந்து மறைந்து சென்றுள்ளது. http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id
-
- 4 replies
- 1.4k views
-
-
Wednesday, June 29, 2011, 12:19சிறீலங்கா சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்றை நாளை கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நடத்த நாம் இலங்கையர் அமைப்பு தீர் மானித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண தெரிவித்தவை வருமாறு சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு வெளியிடும் மாறுபட்ட தகவல்கள், அவர்கள் விடுதலை செய்ய கால தாமதித்தல் மற்றும் அவசர காலச் சட்டத்தை நீக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ப…
-
- 1 reply
- 496 views
-