ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
மனிதவுரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க பொருத்தமான பொறிமுறை அவசியம்! கொழும்புக்கு Friday Forum அழுத்தம்!! சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் வகையில் வன்னிப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு Friday Forum எனும் அமைப்பு கொழும்புக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக பி.பி.சி சிங்கள செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காத் தூதுவராகப் பதவி வகித்த ஒருவரின் தலைமையின் கீழ் பல்லின புத்திஜீவிகளை உள்ளடக்கியுள்ள இவ்வமைப்பு, தமிழ் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடையாகவுள்ள அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாதச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என இவ்வமைப்பு …
-
- 1 reply
- 415 views
-
-
கோத்தபாயவின் ஊழல்களை உறுதிப்படுத்திய பொன்சேகா! வெள்ளி, 27 மே 2011 16:37 பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ நான்காம் ஈழப்போரைக் காரணமாக வைத்து ஊழல்களை மேற்கொண்டுள்ளார் என்பதை முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலான வழக்கில் வாக்குமூலமளிக்கும்போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு அமைச்சகம் மிகப்பெரும் ஊழல்களை மேற்கொண்டிருந்தது. நான் இராணுவத்தளபதியாக இருந்தபோதும் எனது அனுமதிகளைப் பெறாது அவர்கள் இந்த கொள்வனவுகளை மேற்கொண்டிருந்தனர். பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ஸவுக்கு அதில் அதிக தொடர்புகள் உண்டு. பி.எம்.டபிள்யூ ரகத்தை சேர்ந…
-
- 0 replies
- 478 views
-
-
May 27, 2011 இந்தியா, பாகிஸ்தான் உட்பட 85க்கும் அதிகமான ஜனநாயக நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல் சுதந்திரம் இலங் கையில் செல்லாக்காசாகியுள்ளது. பாராளுமன்றத்தில் பொது மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட ஜனநாயக விரோத சர்வதிகார ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவால் அரசாங்கத்துக்கு தலைவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜனநாயக விழுமியங்களாக கருதப்படும் தகவல் சுதந்திரம் தொடர்பாக ஐ.தே.க முன் வைத்த தனிநபர் திருத்தச் சட்டமூல யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது ஜனநாயக விரோத ஆட்சியை அரசு வெளிப்படுத்தியுள்ளது என்றும் அக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத அரசியில் போராட்டம் தமிழர் பகுதிகளில் இருந்து முற்றாக துடைத்தழிக்கபட்ட நிலையில் தற்போது வட்டக்கின் பொருளாதாரம் பல்கி பருகி உள்ளது . தென் இலங்கையில் இருந்து வடக்கு நோக்கி தினமும் அத்தியாவசிய பொருட்கள் அதிகமாக செல்கின்றன .அத்துடன் மின்சாரம் .போக்குவரத்து . தொலைபேசிகள் .போன்றவற்றினால் மக்கள் பெரும் பயன் பெறுகின்றன . இதனால் பெரும் இலாபம் கிடைத்துள்ளன . அத்துடன் தொழில் நிறுவனங்கள் அங்கு அமைய பெற்றுள்ளதால் பலாயிரம் மக்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதுடன் தன்னிறைவு பொருளாதாரத்தில் அவை மிளிர்கின்றன. விவசாயம் பல ஏக்கர் நிலபரப்பில் நடைபெறுகின்றன .இதனால் மேலும் அந்த பகுதி அபிவிருத்தி அடைந்து வருவதுடன் பொருளாதார நிலையில் மேம்பட்டு வருவதாக மக…
-
- 1 reply
- 950 views
-
-
2011 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மன்னிப்புச் சபையின் விருது சனல் 4 தொலைக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை சனல் 4 தொலைக்காட்சி 3ஆவது தடவையும் வென்றுள்ளது. இலங்கை குறித்த விவரணத்தை வெளியிட்டமையின் காரணமாகவே சர்வதேச மன்னிப்புச் சபையானது இந்த விருதை சனல் 4 க்கு வழங்கி யுள்ளதாக தெவிக்கப்படுகிறது . இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடை பெற்ற கொடுமைகளை வெளிப்படுத்தியமை பின்னர் வெளியிட்ட காணொளிகள் உண்மையானவை என நிரூபித்துள்ளமை என்பன இந்த விருது கிடைக்க மேலும் காரணிகளாக அமைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபை தெவித்துள்ளது. தென்சூடான், கொங்கோ நாடுகள் பற்றிய உண்மைத் தகவல்களையும் சனல் 4 வெளி யிட்டமைக்கு பாராட்டுத் தெவிக்கப்பட்டது. ஜொனத்தன் மில்லர், நிவினிமப் ரோ, சாராகோப…
-
- 4 replies
- 882 views
-
-
ஐ.நா செயலர் பான் கி-மூனால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை அமெரிக்கா, பிரித்தானியா போன்று அவுஸ்திரேலியாவும் வரவேற்க வேண்டும் என, அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி டெனிஸ் ஜென்சன் (Dennis Jensen) கோரிக்கை விடுத்திருக்கின்றார். ரக்னி (Tangney) தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரால் இவர், தனது தொகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்றத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் ஆற்றிய உரையின் சுருக்கம்: இலங்கையில் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த போர் பற்றி ஐ.;நா செயலர் பான் கி-மூனால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது பற்றி எனது தொக…
-
- 1 reply
- 691 views
-
-
Friday, May 27, 2011, 13:42சிறீலங்கா19 viewsAdd a comment கிளிநொச்சியில் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த ஜே.வி.பி. அங்கத்தவர்கள் 7 பேர் நேற்றிரவு இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. அக்கட்சியின் வடக்கிற்கான அமைப்பாளர் ஒருவர் கைதானவர்களில் அடங்குகிறார்.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், சரத் பொன்சேகாவை விடுதலை செய்தல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகளை ஜே.வி.பி. அங்கத்தவர்கள் ஒட்டிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது source:tamilthai.
-
- 1 reply
- 830 views
-
-
இலங்கையில் இறுதி யுத்தம் நடை பெற்று கொண்டிருந்த போது தமிழர்களை அழிக்க இலங்கை பவுத்த பேரினவாத சிங்கள அரசு ஒரு செகண்டுக்கு நாலாயிரம் ரூபாய்களை செலவழித்துள்ளது என லக்ஷ்மன் யப்பா அபெய்வர்டென .தெரிவித்துள்ளார் . இலங்கையில் பட்டினியால் பல்லாயிரம் மக்கள் தவிக்கையில் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்த சிங்கள அரசுகள் மக்கள் வரிப்பணத்தினையும் உலக நாடுகளிடம் இலங்கையை அடகுவைத்து தமிழர்களை அழித்தொழித்துள்ளது குறிப்பிடத்தக்கது . Short URL: http://www.ethirinews.com/?p=7429
-
- 0 replies
- 628 views
-
-
Published on May 27, 2011-11:36 am · No Comments கிளிநொச்சியில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் 7பேரும் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் ஜே.வி.பி உறுப்பினர்கள் 7பேர் நேற்றிரவு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவர் ஜே.வி.பியின் வடமாகாண அமைப்பாளர் என்றும் ஏனையவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை அரசாங்கம் அரசியல் கட்சிகளுக்கு சுதந்திரமாக இயங்க இடமளிப்பதில்லை என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை இரத்து செய், தமிழ் அரசியல் கை…
-
- 0 replies
- 668 views
-
-
Friday, May 27, 2011, 12:54சிறீலங்கா45 views1 comment ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சே அவரது கடமை சம்பந்தமாக செய்திகள் ஒளிபரப்பப்படும் போது உரிய பிரசாரம் வழங்கப்படுவதில்லை எனக் கூறி, அண்மையில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சரத் கொங்காகேவிடம் தொலைபேசி மூலம் கடுமையாக குற்றஞ்சுமத்தியுள்ளார் இவற்றுக்கு யார் ஆலோசனை வழங்குகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்களும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும். அவரது சின்ன விடயம் என்றாலும் மணிக் கணக்கில் அதனை ஒளிபரப்புகிறீர்கள். எனது செய்தியை வெட்டுகிறீர்கள். இவ்வாறு செய்யும் அவர்களுக்கு நல்லது நடக்காது. சாபம் ஏற்படும் என ஜனாதிபதியின் பாரியார் தொலைபேசியில் தொடர்ந்து குறை கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த கொங்க…
-
- 3 replies
- 1.3k views
-
-
முள்ளி வாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு கூச்சலின் மத்தியில் யாழ் மாநகரசபையில் அஞ்சலி முள்ளி வாய்க்காலில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு கூச்சல்கள் குழப்பங்கள் மத்தியில் இன்று மாநகரசபையின் எதிர்க்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணி, ஈ.பி.டி.பி.யின் மாநகரசபை உறுப்பினர்கள் உயிரிழந்த மக்களுக்கான அஞ்சலி செலுத்துவதை குழப்பும் வகையில் மேசைகளில் தட்டியும், விடுதலைப் புலிகளை நையாண்டி பண்ணியும், கூக்குரலிட்டவண்ணம் இருந்தனர். இதே நேரம் மாநகர முதல்வர் ஜேகேஸ்வரி பற்குணராஜா கூட்டம் முடிந்ததாகக் கூறி வெளிநடப்புச் செய்துள்ளார். மாநகரசபை நண்பகலுக்குப் பின்னர் ஆரம்பமானபோது 3. 30 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினரான பரம்சோதி ம…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
[Friday, 2011-05-27 05:11:40] தோஷம் கழித்தல் என்கிற போர்வையில் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த இந்தியப் பூசரி ஒருவர் இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். இவருக்கு வயது 32. இறக்குவானையில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று இருந்தார். மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மாந்திரிக வேலைகளுக்காக வருபவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் அறவிட்டு வந்துள்ளார். இவரைச் சந்திக்கின்றமைக்கு பல இடங்களில் இருந்தும் பெண்கள் வந்து உள்ளார்கள். தோசம் இருக்கின்றது, கழிக்க வேண்டும் என பெண்களிடம் கூறுவார். தனியாக பூசை அறைக்குள் அழைத்துச் செல்வார். நிர்வாணமாக்கி எழுமிச்சம் பழத்தை வெட்டி தோஷம் கழிப்பார். பின்னர் வல்லுறவ…
-
- 0 replies
- 1.5k views
-
-
நாங்களே எங்கள் சொந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம்! காலிமுகத் திடலில் முழங்கிய மஹிந்தர் வெள்ளி, 27 மே 2011 11:06 சர்வதேசத்தைப் பயன்படுத்தி ஒரு சில பிரிவினைவாத குழுக்கள் முன்னெடுத்துவரும் அழுத்தங்கள் சாத்தியமாகப்போவதில்லை. இலங்கை தனது உள்நாட்டு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காலிமுகத்திடலில் இன்று நடைபெற்றுவரும் யுத்த வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையில் பிரிவினைகளை ஏற்படுத்த தொடர்ந்தும் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன…
-
- 1 reply
- 713 views
-
-
வெள்ளி, 27 மே 2011 08:09 இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல ஆயிரம் பொதுமக்களை அழித்த இராணுவத்தினரின் போர்க்கருத்தரங்கில் தென்கொரியா பங்கேற்கக்கூடாது என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ‘ஜுங்அங் டெய்லி‘ என்ற தென்கொரிய ஊடகத்திற்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பல ஆயிரம் பொதுமக்களை அழித்தமை, வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல் நடத்தியமை, சர்வதேச உதவி நிறுவனங்கள், கண்காணிப்புக்குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டமை போன்ற மனிதஉரிமை மீறல்களை இலங்கை மேற்கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மனிதஉரிமைமீறல் மேற்கொண்ட இராணுவத்தின் போர்க்கருத்தரங்கை ஏனைய நாடுகளுடன் இணைந…
-
- 0 replies
- 641 views
-
-
தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/04/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27/05/ 2011. கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் ஊடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் சதிமுயற்சிகளை முறியடிப்போம். 2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம். எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம். கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப…
-
- 0 replies
- 681 views
-
-
Published on May 27, 2011-7:20 am · No Comments பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச செய்துள்ளதாக தற்போது தெரியவந்திருக்கும் 62 கோடி ரூபா மோசடி மூன்றாம் ஈழ யுத்தத்தில் நடந்த பாரியளவிலான நிதி மோசடி என மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி லங்காநியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது. இது இலங்கை இராணுவ வரலாற்றில் நடந்த மிகப்பெரிய மோசடி என வர்ணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் மோசடியானது 80 மில்லிமீற்றர் எறிகணைத் தொகையை ஏற்றிய கப்பல் ஒன்றுக்கு 100 கோடி ரூபா செலுத்தி சிம்பாப்வே நாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட போது விடுதலைப் புலிகள் அந்தக் கப்பலைக் கடத்துவதற்கான சூழ்ச்சியை உள்ளிருந்து செய்த மோசடியே மிகப் பெரிய மோச…
-
- 0 replies
- 377 views
-
-
Published on May 27, 2011-7:41 am · No Comments பிரிவினைவாத குழுக்கள் கேட்பதை கொடுக்க நாங்கள் தயார் இல்லை என சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற யுத்த வெற்றிவிழாவில் பேசுகையில் தெரிவித்தார். சர்வதேசத்தை பயன்படுத்தி இந்த பிரிவினைவாத குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் சாத்தியமாக போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுக்கு உள்ள பிரச்சினை உள்வீட்டு பிரச்சினை என்றும் அதை நாமே தீர்த்து வைப்போம் வெளியார் தலையிடுவதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் மகிந்த ராசபக்ச தெரிவித்தார். பழையகாலங்களை பெருப்பித்து மக்கள் மத்தியில் கலவரங்களை ஏற்படுத்த சில கட்சிகள் முயற்சிப்பதாகவும் அதற்கு ஒருபோதும் இடம…
-
- 0 replies
- 346 views
-
-
மடுவில் பெருந்தொகையான மரங்கள் கொள்ளை- பின்னணியில் பாதுகாப்பு அமைச்சு! Published on May 23, 2011-3:10 pm · No Comments மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயத்தை சுற்றியுள்ள 400 ஏக்கர் வரையான காணியில் பாரிய மர மோசடி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராசபக்சவின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மர மோசடியில் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவும் அவரின் ஆட்களும் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். காட்டு வளம் மிக்க இப்பிரதேசம் தற்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு 12 இயந்திரங்களினால் மரங்கள் வெட்டப்படுகின்றன. பின்னர் அவற்றை அமைச்சரின் ஆட்கள் ட்ராக்டர்களில் ஏற்றி மத்திய மாகாணம், மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு கொண்டு செல்கின்றனர். மடு தேவால…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
அன்பார்ந்த எங்கள் தமிழீழ மக்களே !! நான் உங்களிடம் சில துரோகிகளால் மறைக்கப்பட்டுவரும் சில முக்கியமான விடயங்களை பற்றி சொல்லுவதற்காக இந்த இரத்தம் தோய்ந்த வரலாற்றின் சிதறிய மனதை உங்களுக்கு தருகின்றேன் இதனை நான் உங்களுக்கு சொல்லுவதால் எனக்கு எந்தவித தனிப்பட்ட இலாபங்களும் இல்லை.நீங்கள் இன்னும் ஏமாளிகளாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காகவே உங்களுக்கு சகோதரன் கவிஞர் இராஜேந்திரகுமார் மூலமாக உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன் .இராஜேந்திரகுமார் கருத்தாடு களம் தொடர்ந்து பார்த்துவருகின்றேன்.நிச்சயம் எந்த ஒளிவு மறைவின்றி நான் அனுப்பியதை உங்கள் முன் பிரசுரிப்பார் என்ற நன்பிக்கையில் அனுப்பி வைக்கின்றேன். அதற்கு முன் நான் யார் என்பதை பாதுகாப்புகாரணமாக சுருக்கமாக சொல்லுகிறேன்!!! ந…
-
- 14 replies
- 2.9k views
-
-
அதிகரிக்கும் விசர்நாய் கடியினை தடுப்பதற்காக தெரு நாய்கள் புகலிடம் ஒன்றை அமைக்கவுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. 2005ம் ஆண்டு தொடக்கம் தெரு நாய்கள் கொல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் வருடம் ஒன்றுக்கு விசர்நாய் கடி மருத்துவத்துக்காக 5 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆகையால் தெருநாய் புகலிடம் ஒன்றை அமைப்பதன் மூலம் பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் முதலாவது திறந்த வெளிப்புகலிடம் அநுராதபுரத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இலங்கையில் சுமார் 2.3 மில்லியன் தெருநாய்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாளொன்றுக்க…
-
- 0 replies
- 282 views
-
-
Published on May 26, 2011-6:23 pm · No Comments மட்டக்களப்பு வாழைச்சேனை முறுத்தானை இன்று இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பொண்டுகள்சேனை, பூலாக்காட்டைச் சேர்ந்த தியாகராசா குகன் (வயது 26) என்ற குடும்பஸ்தரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். முறுத்தானையில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து தனது வயலுக்கு சென்றபோது அங்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூட்டு நடாத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவரை அக்கிராமமக்கள் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த கறுப்பு மு…
-
- 1 reply
- 640 views
-
-
உலகை ஏமாற்ற அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடு நம்பிக்கை தன்மை இல்லை என சர்வதேசம் கூறி வரும் நிலையில் மஹிந்த அரசு புதிய குழுவொன்றினை அமைக்கவுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதிகளைக்கொண்டு அமைக்கப்படும் இந்த குழு பக்க சார்பற்ற ரீதியில் அனைத்து மனித உரிமை மீறல்களையும் விசாரிக்குமாம்.ஏற்கனவே கிடப்பில் இருக்கும் மனித உரிமை ஆணைக்குழுவை தூசுதட்டி அதற்கு புதிய ஆளணியை நியமித்து அனைத்துலக சமூகத்தை ஏமாற்ற முனைகின்றது சிங்களம். போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற அனைத்துலக அழுத்தத்தினை தணிக்க மஹிந்த இராஜபக்ஷவின் மற்றுமொரு நாடகமே இதுவாகும். நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடு உரிமை மீறல்களை விசாரிக்க அதிகாரம் இல்லாமையால் புதிய குழு அமைக்கப்படுகின்ரது என அர…
-
- 0 replies
- 294 views
-
-
போஸ்னியா போர்க் குற்றவாளி கைது; இலங்கையும் சிக்குமா? போஸ்னியா, வியாழன், 26 மே 2011( 19:41 IST ) சேபியர்களுக்கு எதிரான போரின்போது 8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போஸ்னியர்களைக் கொலைசெய்து, போர் குற்றம் புரிந்த ட்ட்கோ மிலாடிஜ் என்னும் இராணுவத் தளபதி தற்போது கைதாகியுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல், இவர் மீது இன அழிப்புக் குற்றமும், போர் குற்றங்களும் சுமத்தப்பட்டது. 20 ஆண்டுகளாக புலம்பெயர் போஸ்னியர்கள் இவரைக் கைது செய்யவேண்டும் என அழுத்ததைக் கொடுத்து வந்தனர். மெதுவாக ஐரோப்பிய ஒன்றியமும், பின்னர் ஏனைய நாடுகளும் செபனீசியாவில் இழைக்கப்பட்ட கொடுமைகளை ஏற்றுக்கொண்டது.பல நாடுகளில் கடந்த 20 வருடமாக இவர் தேடப்பட்டு வந்தார்.அமெரிக்கா தனது புலனாய்வைப் பயன்படுத்தி இவரைத் …
-
- 1 reply
- 789 views
-
-
May 28, 2011 / பகுதி: செய்தி / பிரித்தானியா தமிழ் இளையோரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சிறிலங்கா புறக்கணிப்புப்போராட்டம் தற்போது பிர்pத்தானியாவில் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராகவும் முன்னெடுக்கபட்டுவருகிறது. எதிர்வரும் சனிக்கிழமை போராட்டம் நடைபெறும் இடம் 11am 28-05-11# Swalec Stadium Glamorgan Cricket Cardiff CF119XR தொடர்புகட்கு Tel: 07539 444 824 கடந்த 14-05-11 அன்று நடைபெபெற்ற போராட்டத்திற்கு பிரித்தானியா ஆங்கில ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து செய்திகளை பிரசுரித்தது குறிப்பிடத்தக்கது. பதிவு.
-
- 2 replies
- 904 views
-
-
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட யுத்த வெற்றி விழாக் கொண்டாட்ட பிரதான நிகழ்வு கொழும்பு காலிமுகத்திடலில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. மழைக்கு மத்தியில் இடம்பெற்று வரும் இந்த வெற்றி விழாக் கொண்டாட்ட த்திற்கான சிறீலங்கா படையினர் அணிவகுப்பு மரியாதையினை மேஜர் நந்தன உடவத்த தலைமையில் 8,200 முப்படையினர், பொலிஸார், பொலிஸ் அதிரடிப்படையினர் கலந்து சிறப்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மகிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தார், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அவரது கட்சி உறுப்பினர்கள், பிரதமர், சபாநாயகர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், அமைச்சர்கள்…
-
- 0 replies
- 813 views
-