Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை நீக்கம்! பாதிப்பு குறித்து இலங்கையில் மாறுபட்ட கருத்துக்கள் [ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 04:12.41 PM GMT ] இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை விலக்கிக் கொள்ளப்பட்டு சுமார் எட்டு மாதங்களை கடந்துள்ள நிலையில், அதன் பாதிப்பு எந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், அத்துறையில் ஈடுபட்டுள்ளபவர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வரும் வரிச்சலுகை சுமார் 1200 பொருட்களை உள்ளடக்கியது. இந்த ஜி.எஸ்.பி. வரிச்சலுகை என்பது 2003 ம் ஆண்டு அமுலாக்கத்துக்கான ஒரு திட்டத்துடன் வழங்கப்பட்டது. பின்னர் சுனாமி தாக்குதல் …

    • 1 reply
    • 937 views
  2. மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சன்னார் கிராமத்தில் முஸ்ஸிம் மக்களின் 3000 ஏக்கர் காணியில் இராணுவத்தின் பயிற்சி முகாம்-! ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 21:38 மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராமத்தில் உள்ள முஸ்ஸிம் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பயிற்சி முகாமினை அமைத்து வருவதோடு தற்போது அருகாமையிலுள்ள காணிகளையும் இராணுவத்தினர் கைப்பற்றி வருகின்றனர். குறித்த கிராமத்தில் உள்ள முஸ்ஸிம் மக்களின் பூர்வீக காணிகளான சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவத்தின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டு வருகின்றது. அங்கு இராணுவத்தினருக்கான சகல விதமான பயிற்சிகளும் வழங்கும் வகையில் குறித்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனா…

  3. யாழ். மாநகர முதல்வரின் மற்றொரு மோசடி அம்பலம்; பதவி இழந்த உறுப்பினருக்குச் சம்பளம் செல்கிறது பிரசுரித்தவர்: Sukkran May 22, 2011Add a comment யாழ். மாநகரசபையில் இடம்பெற்ற மற்றொரு மோசடி அம்பலமாகி உள்ளது.கடந்த 5 மாதங்களாகச் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு சட்டத்துக்குப் புறம்பாக மாதாந்த அலவன்ஸ் தொடர்ச்சியாக அனுப்பி வைக்கப்பட்டு வருவதைக் கணக்காய்வுத்திணைக்களம் கண்டறிந்துள்ளது. மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவின் பணிப்புரையின் பேரிலேயே, கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கொமர்ஷல் வங்கிக் கிளைக் கணக்கு இலக்கம் ஒன்றுக்குப் பணம் அனுப்பப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்…

  4. யாழில் முன்னாள் பெண் போராளி சடலமாக மீட்பு! ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 22:48 முன்னாள் பெண் போராளி ஒருவர் மர்மமான முறையில் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவான் ஈவினை கிழக்கைச் சேர்ந்த ரி.லாவண்யா (21 வயது) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் உடலில் சில சந்தேகத்துக்கிடமான தடயங்கள் காணப்படுவதால் உடல் பரிசோதனை யாழ் வைத்தியசாலையில் நடைபெறுகிறது. அண்மைக் காலமாக யாழ். மாவட்டத்தில் தற்கொலைகளும், தற்கொலை போன்று மர்மமான முறையில் சடலங்களும் மீட்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். source:tamilenn.

  5. ஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம்: ஐ.நா. பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி [ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 11:27.40 AM GMT ] ஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அல்லது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஆகிய கிளை அமைப்புக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம் ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி சுட்டிக்காட்டியுள்…

  6. வடிவேலுவைவிட விஜயகாந் நல்லவராங்கோ? படம் பாருங்கோ..

    • 2 replies
    • 1.4k views
  7. மாகாண முதலமைச்சர்கள் எட்டுப்பேரும் நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்திக்கின்றனர்! Published on May 22, 2011-6:49 pm · No Comments வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் எதிர்வரும் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து மாகாண சபைகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்வார்த்தைகளை நடத்த உள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இச்சந்திப்பு இடம்பெற உள்ளது. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் இவ்வேளையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசிய…

  8. வன்னி தமிழர்களை விதைத்த பூமி Posted by: on May 22, 2011 வீரம் விளைந்த வன்னி மண்ணில் வலிகள் சுமந்த அந்த நாட்களை, அந்த ஒவ்வொரு மணித் துளிகளையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. வெள்ளையரிடம் அடிபணிய மறுத்த பண்டாரவன்னியன் காக்கை வன்னியனின் காட்டிக் கொடுப்பினால் வெள்ளையரால் தேற்கடிக்கப்பட்டதுதான் வன்னிராச்சியம் என்கின்றது வரலாறு. தங்களிடம் அடிபணிய மறுத்த தமிழர் சேனையை உலக நாடுகளின் ஆதரவோடும், ஒத்துழைப்போடும், காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களின் துணையோடும் வெற்றிகொண்டதாக சிங்களம் மமதையில் துள்ளுகின்றது. இந்த வெற்றியைப் பெறுவதற்காக சிங்களம் அரங்கேற்றிய கொடூரம், மனித இனம் என்றுமே சந்தித்திருக்காதது. அந்த அவலங்களின் கதையினை உங்களிடம் சொல்லவும் என்னிடம் சொற்கள் இல்லை…

  9. தமிழ் மாணவர்களை இராணுவ முகாமிற்கு கொண்டு செல்வது பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் – ஜே.வி.பி! Published on May 22, 2011-4:07 pm · No Comments பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியின் மூலம் தமிழ் மாணவர்களை இராணுவ முகாமுக்கு கொண்டு செல்வது சமூகத்தில் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என ஜே.வி.பி எச்சரிக்கின்றது. இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் சுயமாக சிந்திக்கும் சமுதாயத்தினரை தமது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு திட்டமாகவே இது அமைந்துள்ளதாகவும் எனவே பெற்றோர் தமது பிள்ளைகளை இந்த பயிற்சிக்கு அனுப்பகூடாது என பத்தரமுல்லையில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க வேண்டுகோள்விடுத்தார். பல்கலைக்க…

  10. ஆந்திராவில் 26 இலங்கை மீனவர்கள் கைது இந்திய கடலோர காவல் படையினர் இந்திய கடல் பகுதியில் கப்பலில் ரோந்து சென்றனர். அப்போது இந்திய கடல் பகுதியான காக்கிநாடா கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் படகில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். உடனடியாக கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்த 26 இலங்கை மீனவர்களை பிடித்தனர். பின்னர் கடலோர காவல் படையினர் பிடிபட்ட மீனவர்களை மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாகப்பட்டினம் கோர்ட்டில் இலங்கை மீனவர்களை திங்கட்கிழமை ஆஜர்படுத்துகிறார்கள். நக்கீரன்.

  11. தனிப்பட்ட பிரச்சினைகள், தனி நபரின் செயற்பாட்டு எல்லைகளுக்கு அப்பால் ஒரு போராளி அல்லது இயக்கம் இன்ற நிலைப்பாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டால் அல்லது விசாரனைக்கு உட்பட்டால் அது நடக்கவேண்டும் அல்லது நடந்திருக்க வேண்டும் என திட்டமிட்டால் போல் ஊடகங்கள் செய்திகளைப்போடுவது வழக்கமாகி விட்டது. இந்த ஊடக ஜாம்பவான்களின் ( பெயரளவில்) கதைகள் பொலிஸ் விசாரணைகளை விட மோசமாகத்தான் இருக்கும். . நெடியவன் கைது செய்யப்பட்டுள்ளார். வீடு சுற்றி வளைக்கப்பட்டது என்றெல்லாம் சில ஊடகங்கள் எழுத அதனை சில இணையங்கள், தமிழில் பத்திபத்தியாக எழுத அதனைப்பார்த்து பொதுமக்கள் கருத்துக்கூறி தமக்குள்ளேயே வாக்குவாதப்பட இப்படி கடந்த மூன்று நாளாக சிலருக்கு நல்ல இணைய தீனிகள் கிடைத்தன. . சரி நெடியவன் என்ற போர…

  12. Sunday, May 22nd, 2011 | Posted by பல்லவன் போர்ச்சூழலிருந்து மீண்ட சிறுவர்களை அச்சுறுத்தும் சிறீலங்காப்படையினர் இன்று காலை 9.00மணியளவில் சிறுவர் கழக தொண்டு நிறுவனம் எற்பாடு செய்திருன்த சுற்றுலா நிகழ்வு காட்டுவளவு வல்வெட்டித்துறையில் ஆரம்பமான வேளை சிங்கள சிப்பாய்கள் குறுக்கிட்டு நிறுத்தினர். பின்னர் சிறீலங்கா இராணுவ அதிகாரிகளும் விசாரணை செய்தார்கள். பிற்பாடு தங்களுக்கு ஏன் அழைப்பு தரவில்லையென கேட்டு மிரட்டியுள்ளனர். சிங்களப்படையினரின் மிரட்டலால் 100க்கு மேற்பட்ட சிறுவர்கள் பயத்தால் அஞ்சி நடுங்கினர். இத்தகவல் அரசியல் பிரமுகர்கள் புலனாய்வாளர்கள்; வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சிறீலங்கா இரணுவ அடக்கு முறை உலகம் அறிந்த விடயம். சிங்கள இரணுவம…

  13. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னர், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதை உணரக் கூடியதாகவுள்ளது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை போர்க் குற்றவாளி என்று குறிப்பிட்ட தமிழக தல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்புமளவிற்கு இறங்கி வந்துள்ளது இலங்கை அரசு. ஐ.நா. சபை மற்றும் மேற்குலகின் மீது மிகவும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வந்த ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் மன நிலையில் இவ்வகையானதொரு அதிரடி மாற்றம் ஏன் ஏற்பட்டது? என்கிற கேள்வி எழாமலில்லை. அதாவது, சட்ட சபைத் தேர்தலில் வென்றவுடன் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் செல்வி ஜெயலலிதா வெளியிட்ட இலங்கை குறித்தான செய்தி, இந்திய மத்திய அரசிற்கு பெரும் இராஜதந்திர நெருக்கடியைத் தோற்றுவித்…

    • 5 replies
    • 1k views
  14. ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 12:19 | அமெரிக்காவின் புலனாய்வு நடவடிக்கைகள் சிறீலங்காவில் ஆரம்பம்? கைத்துப்பாக்கியின் பாகங்களுடன் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இரு அமெரிக்கர்களும் சிறீலங்காவில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கான புலனாய்வாளர்களாக இருக்கலாம் என சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த புதன்கிழமை (18) கட்டுநாயக்கா அனைத்துலக வானூர்தி நிலையத்தில் வைத்து அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் பயணப்பையில் கைத்துப்பாக்கியின் பாகங்கள் காணப்பட்டதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கப்பல் மூலம் காலி துறைமுகத்தை வந்தடைந்த அவர்கள் பின்னர் கட்டார் ஏயர்வேஸ் விமானம் மூலம் டோகா செ…

  15. ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 11:41 | வாகனத்திலிருந்து தவறி விழுந்து கடற்படை சிப்பாய் பலி கடற்படையினரின் வாகனத்திலிருந்து தவறி விழுந்த கடற்படை சிப்பாய்ரொருவர் வாகனத்தின் சக்கரத்தில் அகப்பட்டு ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். டி.எம்.திவாகர (வயது 23) என்பவரே வாகனத்தின் சில்லில் அகப்பட்டு பலியானவர் ஆவார். மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்திலுள்ள கஜிவத்த பிரதான வீதியில இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் கடற்படை உயரதிகாரியிடம் சடலத்தை பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். source: eeladhesam.

  16. RELATED NEWS • German court convicts then frees Nazi guard Demjanjuk Thu, May 12 2011 • Earthquake rocks Spanish town killing 10 people Wed, May 11 2011 • Earthquake fever hits Rome as some fear "the big one" Wed, May 11 2011 • Egypt religious strife kills 12, challenges government Sun, May 8 2011 • House Republicans back away on Medicare overhaul Thu, May 5 2011 Thu May 19, 2011 7:19pm EDT * "It is going to happen," US Christian broadcaster says * Says true believers to go to heaven, others left behind (Adds comments from "Left Behind" author and atheists) By Gabrielle Saveri SAN FRANCISCO, May 19 (Reuters) - The U.S. evangelical Chris…

  17. ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 11:55 | யாழில் யுவதிகள் தூக்கில் தொங்கும் படலம் தொடர்கின்றது - மீண்டும் ஒரு யுவதி மரணம் யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன், ஈவினை பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் லவண்யா (வயது 21) என்பவரின் சடலமே நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் எவரும் இல்லாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் மேற்படி யுவதி காணப்பட்டதாகவும் இது தொடர்பில் உறவினர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி யுவதி, தந்தை மற்றும் இரு சகோதரர்களுடன் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. source: eeladhesa…

  18. அரசதரப்புடன் கடைசியாக நடந்த பேச்சுகளுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்ட கருத்தில் “இனிமேல் பேச்சுகள் கடினமாகவே இருக்கும்““ என்று கூறியிருந்தார். அவர் எதற்காக அப்படிக் கூறினார் என்பதை இரண்டொரு நாட்களில் புரிந்து கொள்ள முடிந்தது. பேச்சுகள் தொடர்பாக இனிமேல் இரு தரப்பும் கருத்து எதையும் வெளியிடுவதில்லை என்று கூறியே கடைசியாக நடந்த சந்திப்புக்குச் சென்றிருந்தனர். ஆனால் பேச்சு நடந்த அன்றே அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல செனெட் சபை அமைப்பது பற்றிய தகவலை வெளியிட்டிருந்தார். அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுக்குள் நுழைந்து கொண்டிருக்கும் சமயத்தில் அரசதரப்பு அவசரமாக இப்போது செனெட் சபை பற…

    • 3 replies
    • 933 views
  19. “வன்னியின் தற்போதைய நிலவரங்கள் எப்பிடியிருக்கின்றன' என்று கேட்டார் புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழுகின்ற நண்பர் ஒருவர். வன்னியில் நடைபெற்ற (இறுதிப்) போர் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ள சந்தர்ப்பத்தில் நண்பருடைய இந்தக் கேள்வி முக்கியத்துவத்துக்குயது. முதலில் நண்பருடைய கேள்வி பல தொனிகளையுடையது என்பதைக் கவனிக்க வேண்டும். காணொளியை காண....... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1839:2011-05-22-08-07-45&catid=1:latest-news&Itemid=18 1. போர்க்கால வன்னிக்கும் தற்போதைய வன்னிக்குமிடையில் என்ன வித்தியாசம்? என்பது. 2. முள்ளிவாய்க்கால் அவலம் என்று சொல்லப்படுகின்ற போர்க்கால அவலங்கள் காயங…

    • 1 reply
    • 925 views
  20. சாத்தான்கள் ஓதும் வேதத்தால் தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை - வி. தேவராஜ் சிங்களத் தலைமைகள் தமிழ்த் தலைமைகளின் விரல்களால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் கண்களையே குத்திக் குருடாக்கிய பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. பயங்கரவாதச் தடைச் சட்டத்தைத் தயாரித்த ஜே.ஆர். ஜயவர்தன தமிழ் புத்திஜீவிகளை கொண்டு அங்கீகரிக்க வைத்து தமிழ் அரசியல் தலைமைகளின் ஆசீர்வாதத்துடன் நாடாளுமன்றத்தில் அரங்கேற்றி வெற்றி கண்டார். மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டது போன்று பாவனை காட்டி தமது அரசியல் நலன்களுக்காக பேசாமடந்தயாய் இருந்த தமிழ்த் தலைமைத்துவங்களால் தமிழினம் பட்ட இன்னல்கள் பல. தமிழ்த் தேசிய போராட்டத்தையே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் பயங்கரவாத முத்திரை குத்தி அடக்கி ஒடுக்க …

    • 0 replies
    • 688 views
  21. யாழ் மாநகர சபையின் உறுப்பினர் கே.எஸ்.விந்தன் கனகரத்தினம் அவர்களுடைய வீட்டிற்கு முன்பு இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவினர் கடந்த 17 ஆம் திகதி .. யாழ் மாநகர சபையின் உறுப்பினர் கே.எஸ்.விந்தன் கனகரத்தினம் அவர்களுடைய வீட்டிற்கு முன்பு இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவினர் மூன்று பேர் கடந்த 17 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் விந்தன் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள விந்தனை புலனாய்வுத்துறையினர் விசாரணை செய்வது அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் உயிர் ஆபத்தினை ஏற்படுத்தும் என் அவர் அஞ்சுகின்றார். …

  22. 2009ம் ஆண்டு பரமேஸ்வரன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த வேளையில் அவர் மக்டொனால்ஸ் பேர்கரைச் சாப்பிட்டார் என அவர் மீது குற்றஞ்சுமத்தியது பிரித்தானியாவில் உள்ள 2 பிரபல நாழிதழ்கள்(Sun, Daily Mail). அதனை எதிர்த்து அவர் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் வெற்றியும் பெற்றார். இதனை பி.பி.சி தொலைக்காட்சி ஆவணப்படமாக நேற்று இரவு 10.30 க்கு தெலைக்காட்சியில் ஒளிபரப்பியது. அதே நேரத்தில்இணையத்தளத்திலும் பகிரப்பட்டிருந்தது. எனினும் அவை 24 மணி நேரத்தினுள் அகற்றப்பட்டு விட்டன. ( வழமையாக 24 மணி நேரத்தின் பின்னரே நிகழ்ச்சிகள் அகற்றப்படும்) அகற்றப்பட்ட அக் காணொளிகளின் தொகுப்பு

  23. நல்லிணக்க முனைப்புக்களில் அரசாங்கம் கூடுதல் சிரத்தை காட்டவில்லை – ஆனந்தசங்கரி : 22 மே 2011 செனட் சபையின் மூலம் எவ்வித தீர்வும் கிடைக்காது .. நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் அரசாங்கம் கூடுதல் சிரத்தை காட்டவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமொன்றுக்கு அறிவித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள் தற்போது சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சகல இடங்களிலும், சகல சந்திகளிலும் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட…

  24. May 23, 2011 / பகுதி: செய்தி / அவசரகாலச்சட்டத்தை நீக்க சிறீலங்கா அரசு திட்டம்? சிறீலங்காவில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டத்தை நீக்குவதன் மூலம் அனைத்துலக மட்டத்தில் நற்பெயரை ஏற்படுத்தலாம் என சிறீலங்கா அரசு சிந்தித்து வருவதாக சிறீலங்கா அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அவசரகாலச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் சிறீலங்கா அரசு சிந்தித்து வருகின்றது. அதனை நீக்குவதன் மூலம் அனைத்துலகமட்டத்தில் எழுந்துள்ள அழுத்தங்களை குறைக்கமுடியும் என சிறீலங்காவின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தை தொட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.